திங்கள், 7 ஏப்ரல், 2014

இந்தியத் தேர்தல்.

கோடிபல  மக்கள்விழை குரல்கொடுக்கும் தேர்தல்,
கோணலற நெறிப்படுத்தும் ஆணையம் ஆள்  தேர்தல் !
மோடி இரு காந்திகளும் மோதுகின்ற தேர்தல்
முன்போலும் கட்சிபல முயன்றயர்த்தும் தேர்தல்
ஓடியாடி உழைப்பர் தொண்டர்   ஊர்மலிந்த தேர்தல்
ஒற்றுமைக்கோ  ஒத்துவராப்  பற்றுறுத்தும் தேர்தல்
கூடியணி      சேர்ந்தரசு  கொண்டிலங்கத் தேர்தல்
நாடும்வழி நானிலத்தார் காணவிழைந்தாரே !

விழை குரல்  = வாக்குகள் .  ஆணையம் - தேர்தல் ஆணையம்.

கருத்துகள் இல்லை: