வியாழன், 30 ஏப்ரல், 2020

ஸ்தாபித்தல் அடிச்சொல் எது?

இப்போது நீங்கள் எங்கு வாழ்கிறீர்கள்? அல்லது இருக்கின்றீர்கள்? அந்த இடத்தில் நீங்கள் உங்களையும் உங்கள் நடவடிக்கைகளையும் நன்றாகவே நிறுவிக்கொண்டிருப்பீர்கள். நிரந்தரவாழ்நராக இல்லாவிட்டாலும்கூட, தற்காலிகமாக ஓரளவு நிறுவிக்கொண்டுதான் அங்கு இருக்கின்றீர்கள். நீங்கள் உங்களை நிலைப்படுத்திக்கொள்வதென்பது இடத்துக்கும் காலத்துக்கும் நடவடிக்கைகளுக்கும் ஏற்ப வேறுபடுமென்பது சொல்லாமலே புரியக்கூடியதாகும்.

அந்த இடத்திலிருந்து நீங்கள் இன்னோர் இடத்துக்குச் செல்வதானால், நீங்கள் உங்களை ஆங்கு மறுநிறுவுதல் செய்துகொள்ளவேண்டும். வேறுவிதமாகச் சொல்வதானால், தாவிச் சென்ற புதிய இடத்தில் உங்களை நீங்கள் தாவித்துக்கொள்ள வேண்டும்.

தாவுதல் என்ற சொல்லிலிருந்து தாவித்தல் என்பதும்,  அதிலிருந்து தாபித்தல் என்பதும் தோன்றின..  வகரம் பகரமாய்த் திரியும்.  இந்த ப-வ திரிபென்பது தமிழில் மட்டுமின்றிப் பிற மொழிகளிலும் காணப்படுவதாகும். தாவிய நிலையில் எங்கு பறந்துவிட்டாலும் கூட ஓரிடத்தில் இறங்கிக் காலூன்றவே வேண்டும்.  அந்தக் காலூன்றுதலையும் உள்ளடக்கித்தான் தாபித்தல் - ஸ்தாபித்தல் என்று மொழியில் சொல் ஏற்பட்டுள்ளது.

தாவுதல் என்பது வன்மையுடன் தாவுதலையும்,  மென்மையாகத் தாவுதலையும் முயன்று தாவுதலையும்  முயற்சி வெளியில் அறியப்படாமல் தாவுதலையும் -  ஆக பலவகைத் தாவுதல்களையும் குறிக்கும் என்பதை அறிக.   ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு ஓர் உறுப்பினர் தாண்டும் போது அந்தத் தாவுதலில் வன்மை தென்படுவதில்லை. மாறாக மென்மையும் தந்திரமும் காணப்படலாம்.  ஆகவே தாவுதல் என்னும்போதும் தாபித்தல் என்னும் காலையும் எப்போதும்  வன்மை இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அதை இப்போது மாற்றிக்கொள்ளுங்கள்.

தா என்பது அடிச்சொல். அது பெயர்ச்சிக் கருத்தை அடிப்படையாக உடையது ஆகும். பெயர்ச்சி என்றால் ஓரிடத்திலிருந்து இன்லொரு தலத்துக்கு மாறுதல். அது கண்காண் பொருளாகவும் இருக்கலாம். காணாப் பொருளாகவும் இருக்கலாம்.  அன்பைத் தா என்றால், அன்பு திடப்பொருளில்லை, இருப்பினும் மக்கள் அப்படியும் சொல்லை வழங்குகிறார்கள். பறப்பது என்ற சொல்லும், இவ்வாறு மனவுணர்வைக் குறிக்கக்கூடும்.  "கற்பனையில் பறந்துவிட்டாய்"  என்றால், கற்பனை என்பதும் திடப்பொருளன்று,  பறப்பது என்பதும் நடப்பதன்று. நாம் பேசும் எந்த மொழியும் இத்தகு  வன்மை - மென்மை, காட்சியுண்மை, காட்சியின்மை என்னும் எதையும் வெளிக்கொணர வல்லது ஆகும். இதில் பேசுவோனே ஊர்தி செலுத்துவோன் ஆவன்.

இப்போது பெயர்ச்சிக் கருத்து மேலும் வளர்கிறது.  தா என்பதினின்றே ----

தா -  தாண்டு;
தா - தாவு

என்று தமிழ்ச்சொற்கள் அமைவுறல் காணலாம்.  தாவுமுன் ஓரிடத்தில் நின்றுகொண்டுதான் இருப்பான்.  அவனும் தன்னைத்:

தான்

என்றுதான் கூறுகிறான்.

தா என்பது (கொடு)  குறுகித் தரு என்று ஆகிறது.  தருதல் என்ற வினை அங்கு உருவாகிறது.  குகையிலும் காட்டிலும் வாழ்ந்த பண்டைக் கால மனிதன், முதலில்

தா என்றானா?  தரு  என்றானா? தார் என்றானா?  எதுவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

தரு > தரை  ( தரு+ ஐ)  :  பல வளங்களையும் பலன் களையும் தருவதாகிய மண்.

தரு > தரு. (பொருள்விரி).  பழம், காய், இலை என இன்ன பிறவும் தருவதான மரம்.

தரு > தார் >  தார்+ அணி =  தாரணி.   எல்லாம் தரும் அழகுடைய இப்பூமி.

தரு + அணி = தரணி.

இந்த வினைச்சொற்களைக் கவனியுங்கள்:

அதைத் தா.
அதைத் தரு-கிறார்.
அதைத் தாரார்.

ஒருவன் வேடம் தரித்தால், அவன் ஒரு காட்சியைத் தருகிறான்.  அவன் வேடதாரி.   தரு> தரி > தாரி.

எடையை அறியத் தருவது  தரு+ ஆசு = தாராசு.  ஆசு என்றால் ஆக்கம், பற்றிக்கொள்ளத் தருவது.

அறிக மகிழ்க.

 


நஹி என்ற இந்திச் சொல்.

இந்தி முதலிய மொழிகளில் இல்லை என்பதை  நஹி  என்று சொல்வது குழந்தைகளும்  அறிந்த ஒன்றாகும்.

ஒன்று  நைந்து போமாயின் பெரிதும் அஃது  இல்லை யாகிவிட்டது என்றே கொள்ள வேண்டும்.  நைதல் எனற்பால பதத்திலிருந்தே இது முகி ழ் த் து ள் ளதென்பது உள்ளங்கை நெல்லிக்கனி  ஆகும்.

சில ஆண்டுகளின் முன் யாம் வெளிப்படுத்தியதே  இது.

தெக்காணி மொழியினின்று  இந்தி வந்த தென்றாரும் உள்ளனர்.   தெற்காணி ஆவது  தென் + கண் + இ.  கண் > காணி.  காண் என்பதும் கண் என்று
குறுகியவாறு   காண்க.  கண் = 1.இடம் 2. விழி.. இங்கு அஃது இடப்பொருளதாம்.

இது ஆங்கிலத்தில் நே நோ என்றெல்லாம் வரும்.  ஐரோப்பிய மொழிகளிலும் இடம்கண்டு புகுந்து வீட்டுச்சொல்லாகிவிட்டது,

[ இது கைப்பேசியிலிருந்து இடப்பட்டது,  ஆனால் ஒழுங்காக எழுத இயலவில்லை, தமிழ்ப்  பேசிமென்பொருள் இன்னும் பண்படவில்லை.  வந்த என்பது வன் த { வன் த்ஹ )  என்று வருகிறது.  இவ்வாறே பல மாறுகோள்கள்.  தன்திருத்த அறிவுறுத்துகள் ( auto correct prompts ) பேசியில் முழுமை பெறக் காலம் ஆகலாம்.  சில பதிவிறக்கம் செய்யப்பட்ட பயன்தரவிகள்  (apps)  இடைமறிப்புகள் விளைத்திருக்கலாம்.   அப்புறம் மடிக்கணினியைப் பயன்படுத்தவேண்டியதாயிற்று.  படித்து மகிழ்க.]

மறுபார்வை பின்.

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

உபன்னியாசம்

உபந்நியாசம் என்பது ஓர் அழகிய சொல். இதை வேறுசொல்லால் உணர்த்த வேண்டின் " உரை "  அல்லது சொற்பொழிவு என்று சொல்லலாம்.

உரை என்னும் இதன் பொருளை மூன்று சிறு சொற்களால் திறனுடன் வேய்ந்துள்ளனர், இதில்  மையச் சொல் "பன்னுதல்"  (பன்னு) என்பதாகும்.

பன்னுதல் என்றால் திரும்பத் திரும்பச் சொல்லுதல்.  இதன் அடிச்சொல் பல் > பல என்பதாகும்.

பல் > பன் > பன்னு(தல்). பன்னு என்பதில் இறுதி உகரம் சாரியை. தல் என்பது தொழிற்பெயர் விகுதி.  சொல்லை மிகுத்துக்காட்டுவது விகுதி.  மிகுதி> விகுதி. மகர வகரப் போலி.

உ-பன்னு என்பதன் முன் நிற்பது உகரச் சுட்டு.  உகரச் சுட்டு தமிழில் எண்ணிறந்த சொற்களில் வரும்.  உன் என்ற சொல்லில் முன் இருப்பது உ என்ற சுட்டு  ஆகும்.  உத்தரவு என்பதிலும் உ+ தரவு என்று உகரமே முன் நிற்கிறது. முன்னுள்ள மேலாளன் தருவது உ தரவு  ஆகும். உத்தரவு என்பதில் தகர ஒற்று (த்)  சந்தி.

உ பன்னி, அதாவது ஒரு கூட்டத்தின் முன் நின்று சொல்லி,  ஆயது  ஆயம்.  ஆய + அம்.  ஆய > ஆச. ய >ச. திரிபு.உ பன்னி + ஆய + அம்.  உபன்னியாசம்.  ஆய என்பது ஆச என்று வருவது யகர சகரப் போலி.  
Aya (ஆய )may appear like a participial form but such has been used in Pali and other languages. Here it has induced a better effect. Using a root word in explanation may not bring forth the under

standing.


வேறு எ-டு:   நீர் பாய அன் அம் > நீர்ப்பாசனம் என்பதுபோல்.   வாயல் > வாசல் என்பதுபோல்.  வாயில்,  ஆனால் வாயல் என்ற சொல் அமைந்திலது.

உ பன்னு இயை ஆய  அம் எனினுமாம்.  உபன்னியாயம்.உபன்னியாசம்.

வாழ்க நலமுடன்.

Some changes made 30.4.2020

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

தமிழைப் பாடிக்கொண்டு வீட்டிலிருப்பீர்

நேயர்கள் யாரும் நிறைவாக வாழ்வீரே
ஆய நலமெல்லாம்  வாவெனில் ===ஏயவரும்
நோயென் றெதுவுமே பாயாது வீட்டினில்
தாய்த்தமிழ் போற்றியிருப் பீர்,

தமிழைப் போற்றிப் பாடிக்கொண்டு வீட்டிலிருந்துவிடின்
மகுடமுகி கொரனா வரமாட்டாது. மனத் திட்பத்துடன் இருங்கள்.

யாரும்‌  -  யாவரும்,
ஆ ய -  ப ய னுடைய.  ஆக்கம்தரும்
  

மரம் சாய்த்தலும் சாதித்தலும்

சாதித்தல் என்பது சாய்த்தல் அடிப்படையில் மரம்வெட்டும் பழங்குடியினரிடம் வழங்கித் தமிழேறிய சொல் என்பதை யாம் முன்னர் சிலமுறை வெளியிட்டுள்ளோம். பிற குடியினருக்கு மரவேலை இல்லை. தச்சர் என்போர் வெட்டிக் கொணர்ந்த மரத்தைச் சரிசெய்வோர் ஆவர்.

இயலாத ஒன்றைச் செய்து முடித்திடலாம் என்று போய் அதில் தோல்வி கண்டவனை " போனாயே, சாய்க்க முடியவில்லையோ?" என்று கேட்பதை நீங்கள் கூர்ந்து கவனித்திருக்கலாம்.

சாய்த்தல் > சாய்தித்தல் > சாதித்தல்.  இங்கு யகர ஒற்று கெட்டுச் சொல் அமைந்தது.

இவ்வாறு யகர ஒற்று மறைந்த இன்னொரு சொல்:

வாய்> வாய்த்தி > வாத்தி.  (வாய்ப்பாடம் சொல்பவன் அல்லது ஆசிரியன்).. ஆர் விகுதி இணைப்பது பணிவு காட்டுதற்கு.

இதை விரித்தெழுதிய இடுகை, வெளியிட்டுள்ளேம்.

ஆங்கிலத்தில் "கோர்ஸ்" என்ற சொல் கடலில் கலம் செலுத்துவோர் வழங்கிய (nautical term) சொல்.  அதுபோல் இது மரம் சாய்த்தோர் வழங்கிய சொல். பிற்காலத்தில் பொதுவழக்கில் வந்து விட்டது.

இதுவும் காண்க.

ஒற்று மறைந்த சொற்கள்)

https://sivamaalaa.blogspot.com/2019/08/blog-post_29.html 

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

ஆத்திகம் ஒரு மறு‌ நோக்கு

ஆத்திகம் என்னும் சொல்லை இன்று மறுநோக்கினுக்கு உட்படுத்துவோம்.

முன் வெளியிட்ட இடுகையில் ஆசு திகம் என்னும் இருசொற்களால் இக்கூட்டுச் சொல் ஆக்கப் பெற்றதென்று கூறியதில் மாற்றமொன்றில்லை.
ஆனாலும் ஆசு என்பதன் அடிச்சொல் ஆக்கம் குறிக்கும் "ஆதல்" என்ற வினைச்சொல்லே
.
ஆசு என்னும் தொழிற்பெயரைப் பயன்படுத்திச்‌ சொற்புனவைக் காட்டாமல்,  ஆ என்னும் வினையைக் காட்டினும் விளைவு ஒன்றேயாகும். ஆத்திகம் என்றே உருக்கொள்ளும். உலகின்கணுள்ள பல்வேறு ஆக்கங்களில் பற்றுக்கோடும் ஒன்றாதலின் அவ்வாறு சொல்வனைதலும் ஏற்புடைத்தே ஆகும். ஈண்டு இறைப்பற்றையே நாம்  பற்றுக் கோடு என்று முன்கொணர்தலின் சொல்லின் மையக் கருத்து அதுவே‌ என்பதனைக் கவனத்தினின்றும் குறுக்கிவிடலாகாது.

திகம் என்பது   திகைதல் என்ற சொல்லினின்று வருகிறது.  திகைதலாவது தீர்மானப்படுதல். உறுதிப்பட்டு நிலைத்தல்.  " விலை திகைந்தது" என்ற வாக்கியத்திற் காண்க.  திகை+ அம் = திகம் என்பதில் ஐ மறைந்தது (கெட்டது என்பர் இலக்கணியர்).  (திக்) + அம் = திகம் ஆகும்.

ஆஸ்தி = சொத்து.    ஆஸ்திகம் (ஆத்திகம்) என்பது ஆஸ்தி  என்பதிலிருந்து வந்ததென்பது பொருந்தவில்லை.

சொத்துச்சேர்ப்பதும் ஆக்குவதே.  ஆஸ்தியுடையான் ஆக்கம் உடையான் என்பதறிக.   ஆக்கு > ஆக்குதி > ஆ(க்கு)தி >  ஆ(ஸ்)தி   என்ற சொற்புனைவே அது.

மற்ற சொற்கள்: திகம் என்னும் ஈறு அறிக.

திகு > திக்கு ( திசை).
திகை > திசை.  க- ச போலி.  இதுவும் திசை என்னும் பொருள்.
திகு > திகழ் > திகழ்தல் ( ஒளிவீசுதல்)
திகு + அள் = திங்கள்  ( நிலா).  ஓளிவீசுவதான நிலா.  மெலித்தல் விகாரம்.
திகு > திகிரி  ( சூரியன் , ஒளிவீச்சு)  பல்பொருட் சொல்,
திகு > திகை > திகைதி  ( நாள் தீர்மானித்தது),  திகைதி> திகதி > தேதி.
திகு> திகை > திகைத்தல் (  திசையைத் தேடுதல்,  ஆகவே  மயங்குதல்).

திகு என்ற அடிச்சொல் பல்வேறு நுண் பொருட் சாயல்களைத் தன்னுட் கொண்டது.  இவற்றுள் ஒளி என்ற பொருட் சாயலை மேற்கொண்டு திகு + அம் = திகம் எனினும்  " ஆக்கத்தின் ஒளி"  (தரும் வழி ) என்று பொருளுரைக்கினும் அதுவும் ஏற்புடை த்து என்று வாதிடுதல் கூடும்.  இதேபோல் திகு = திசை என்று கொள்ளினும் "ஆக்கமுடைய மார்க்கம்" என்ற பொருள் தந்து   நலமே காணக் கிட்டுவ தாகும்.  ஆகவே பொருள் மலிந்த
ஈரடிச் சொற்களை ஈண்டு நாம் எதிர்கொள்கின்றோம் என்பதை மனத்      துக்கண்     நிறுத்தவே இஃது ஒரு பல் பிறப்பிச் சொல் என்பது தெளிவு பெறும்.


நாளடைவில் சொற்கள் பொருள்விரிவடைவது இயல்பு.  காரணங்கள் உளவாக, பொருள்விரியும்.  எ-டு: திகழ்வது சூரியன்;  சூரியன் வட்டம், ஆகவே வட்டமென்பது பெறுபொருள். (derived meaning).

இதுவும் காண்க.

ஆத்திகம் http://sivamaalaa.blogspot.com/2016/03/blog-post_28.html

தட்டச்சுப் பிறழ்வுகள் காணின் சரிசெய்யப்பெறும்.
You may also help by pointing out. 

திருத்தங்கள்: பெறும் என்பது பேறும் என்று பிறழ்ந்தது --
திருத்தம் செய்தோம்.  29122020




.

வியாழன், 23 ஏப்ரல், 2020

ஜென்மாவும் சென்மமும்

ஆங்கில அறிவோ தமிழறிவோ கூட இல்லாத படிக்காதவர்களை அண்டி, அவர்கள் எப்படிப் பேசுகிறார்கள் என்பதைக் குறிப்பெடுத்துக்கொள்வது  ஆய்வுக்கு உதவும். ஆனால் இப்போது கல்வியறிவு ஓரளவு பரவிவிட்டதாலும் ஓரமைம்பது நூறாண்டுகளின் முன் இவர்கள் எப்படிப் பேசினார்கள், என்பதைத் தொகுத்துவைக்க யாரும் முன்வரவில்லை என்பதாலும் இவை இப்போது மறைந்துவிட்டன என்றுதான் கூறவேண்டும். இவ்வாறான தொகுப்புகள் கிட்டவில்லை.. சில குறிப்புகள் கிட்டலாம்.

உரையாடல்களும் நகருக்கு நகர் வேறுபடுவனவாய் உள்ளன.

சிங்கப்பூரில் பண்டிருந்த தமிழர்கள், சில் மலாய்ச் சொற்களை மொழிபெயர்த்த விதம் வியக்கத் தக்கதாய் உள்ளது.  இவற்றைப் பாருங்கள்:

மலாய்                                                 மொழிபெயர்ப்பு.
போத்தோங்க்    பாசிர்                    மண்ணுமலை  (மண்வெட்டு மலை )
ஜபாத்தான் மேரா                            சிவப் பாலம் (  சிவப்பு என்பதில் பு விடுபாடு,)
கம்போங் கப்பூர்                               சுண்ணாம்புக்  கம்பம்
கொலம் ஆயர்                                   தண்ணீர்க் கம்பம்
புக்கிட் தீமா                                          ஈயமலை 
சுங்ஙாய் காலாங்                              செங்கமாரி ஆறு
கண்டங் கிருபா                                  மாட்டுக் கம்பம்

கம்பம் என்பது  சிற்றுர்  (பொருள்) .  கம்போங் என்பது மலாய். மேல்  இவற்றில் சில நேரடி மொழிபெயர்ப்பாய் இல்லை.

இதிலிருந்து பண்டைத் தமிழர்கள் பெரும்பாலும் சொற்களைக் கடன்வாங்கிப்  பேசுகிறவர்கள் அல்லர் எனலாமா? ஆங்கில அறிவு மேம்பட்ட காலை இது மாறிவிட்டது.

பிறவி என்று பொருள்படும் ஜன்மம் என்பதற்குச்  சிற்றூரார் சென்மம் என்றுதான் சொன்னார்கள் என்று தெரிகிறது.  செல்+ ம் + அம் =  சென்மம், சென்றுவிடுவது,  அழிந்துவிடுவது என்பதாம்,  ஜன்ம என்பது பிறப்பையும் சென்மம் என்பது முடிவையும் காட்டின. இவை இருவேறு சொற்கள் என்பது தெளிவு, ஆனால் அவை ஈடாய் வழங்கின.

செல்லுதல் நடைபெறுவது:  1. உயிரானது கருவினுள் செல்லுதலும் அதை உயிர்ப்பித்தலும்;   2.  பின்னர் உயிர்த்த கரு வளர, அது முற்றிக் குழந்தை ஆகி, கருவினின்று வெளியுலகிற்குச் செல்லுதல்,  இது இரண்டாவது செல்லுதல்,  3. முதுமையில் உடலினின்று பிரிந்து அகண்ட வெளியில் செல்லுதல். இதைத்தான் சாவு, மரணம் என்று சொல்கிறோம்   4. மறுபிறவி உளதாக, இன்னொரு கருவினுள் புகுந்து உயிர்த்தல்.

இவ்வாறு ஒவ்வொரு கட்டமும் ஒரு "செல்"  ஆகிறது.  இந்தச் செல்களில் கருவிலிருந்து குழந்தையாகி வெளியுலகிறகுள் புகுதலின்பின் அவ்வுடலை விட்டு ஏகுதல் ஏற்பட ஒரு சென்மம் ஆகிறது. ஆதலின் சென்மம் என்று சிற்றூரான் சொல்வது சரியானது என்று உணர்க. 

தட்டச்சு பிறழ்வு பின் கவனம்பெறும்.


புதன், 22 ஏப்ரல், 2020

மாயனார் குயவன் - மண்ணுபாண்டம் (பொருள்).

இதை எப்படி விளக்குவது?

மாயன்  குயவன் எனின் விளக்குவதில் கடினமிருக்காது.  மாயன் என்பதும் ஆண்பால் ஒருமை.  குயவன் என்பதும் ஆண்பால் ஒருமை.

ஆனால் பாடலில் மாயனார் குயவன் என்றன்றோ வருகிறது?  ஆர் என்ற பணிவுப்பன்மை விகுதியும் இணைந்திருப்பதால், வியப்பு காரணமாக வந்த வழுவமைதி என்று இலக்கணம் கூறலாம்.  இதனினும் சிறந்த விளக்கத்திற்கு வர இயலுமா என்று பார்ப்போம்.

ஒரு வழி:

1.  மாயன்  ஆர்குயவன் என்று பிரிக்கலாம்.  உலகனைத்திலும் பல மாயங்களை உள்வைத்து இயக்கிக்கொண்டிருப்பதால்  இறைவன் மாயன் என்பது பொருத்தமே.  படைப்புத் தொழிலைச் செவ்வனே செய்திருப்பதால்
இறைவன் இயல்பாக எங்கும் காணப்படும் குயவன் அல்லன்  "ஆர் குயவன் ". நிறைவு பொருந்தித் திகழும் வேறுவகைக் குயவன்.  மனிதக் குயவனிலும் வேறுபட்டு நிற்பவன்.

இவ்வாறு விளக்கலாம். இதில் ஆர் என்பது விகுதியாகக் காணப்படாமல் தனிச்சொல்லாக இயல்கின்றது.

இறைவன் மேலான குயவன் எனினும் அவன் தந்த தேகம்  தேய்ந்தழிதலை உடையது.  மண்ணுபாண்டம் உடைந்து இறுதியில் மண்ணாகவே உதிர்ந்துவிடுதலைப் போலவே  தேகமும் தேய்ந்தொழிகிறது.
எனவே தேகம் என்பதும் தமிழ்ச்சொல்லே.  மிக்கப் பொருத்தமாக அமைந்த சொல்லென்பதை பன்முறை கூறியுள்ளோம்.

2 இன்னொரு வழி:

மாயன் என்பது மாயம் என்ற சொல், அதில் வரும் அன் என்பது ஆண்பால் விகுதியன்று என்பது இன்னொரு விளக்கம்.

அறம் -  அறன்;
மறம் -  மறன்.
திறம் - திறன்.
அகம்  - அகன்

மகரனகர ஒற்றுப் போலி.

இவைபோல்  மாயன் என்றிருந்தாலும் அது மாயம் தான் என்று முடிக்க.

மாயனார் குயவன் என்பது மாயம் ஆர் குயவன்.
பல மாயவேலைகள் செய்யும் குயவன் என்பதாம்.

கண்ணிற் படாது காரியங்களாற்றுபவர் எனற்பொருட்டு என்றும் கூறுப.
ஐந்தொழிலில் மறைத்தலும் ஒன்று.

3 மற்றொன்று:

மயம் என்பது மகிழ்வு முதலிய குறிக்கும்  பல்பொருளொரு சொல். இது எதுகை நோக்கி மாயம் என்று திரிந்தது என்று கொள்வதும் கூடும்.  ஆகவே மயனார் என்பதே மாயனார் என்று நீண்டுவந்தது எனினும் ஒக்கும். இவ்வாறு கண்டு பொருளுரைத்துக்கொ:ள்க.

காயமாவது, காய்ந்து அழிந்துவிடுவது.  மனிதன் இயற்றும் தீமைகளே அவனைக் காய்ந்து அழிக்கின்றன என்க.

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

இஃது வள்ளுவனார் வாய்மொழி.  அறம் காய்ந்து கொல்லற்குக் குறியாதலின் காயம் எனினுமது.

உரையாசிரியர்கள் தம்முள் வேறுபடுதல் உலக நடப்பில் உள்ளதுதான். குறளுரையில் மணக்குடவர், காளிங்கர், பரிமேலழகர்,  எல்லோரும் ஆங்காங்கு  வேறுபட்டுள்ளனர். (பேதம்).

பேதமாவது, உரையிற் பெயர்ந்து வேறு கூறுதல்.

இவ்வாறு பொருள் கூறாமல் " மாயனார் குயவன் "   வியப்பு, பணிவு காரணமாக வந்த ஒருமை பன்மை மயக்க வழுவமைதி எனலும் ஆகும்.

பாடிய சித்தர் அருகிலிருந்தால் கேட்டுவிடலாம். இல்லையே.
பொருந்துமாறு காணின் அறிந்துகொண்டு செல்க.


காயமே இது பொய்யடா,
காற்றடைந்த பையடா
மாயனார் குயவன் செய்த
மண்ணுபாண்டம் ஓட்டா.

அங்கம் என்ற சொல்   காற்று அடங்கியது;   அடங்கு+ அம் = அடங்கம், இடைக்குறைந்து அங்கமாயிற்று,  அது தமிழ் என்று கொள்க.  அன்றி, உள்ளுறுப்புகள் அடங்கியதான உடம்பு எனினும் அமைவதே. இவ்விரண்டாவதையே இங்குள்ள இடுகையில் கூறியுள்ளோம்.

சொல்லமைப்பும் பொருளமைப்பும் ஒன்றுக்கு மேற்பட்டவாறு கூறுதல் கூடுமென்பது இயல்பு ஆகும்.


குறிப்புகள்:

தேகம் :  https://sivamaalaa.blogspot.com/2014/07/blog-post_3.html

தட்டச்சுப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்பெறும்.


செவ்வாய், 21 ஏப்ரல், 2020

பத்திரம் - பற்றி நிற்க வேண்டிய ஓலை.

பத்திரம் என்பது பலபொருளொரு சொல் ஆகும்.

உலகின் பொருள்கள் பல உருவின.  சில சப்பட்டை அல்லது பட்டையாக இருக்கும்.   பட்டை, பட்டயம் என்பவை பட்டை வடிவினவாய் இருத்தலால் வந்த பெயர்.

இலையும் பட்டைவடிவில்தான் உள்ளது.  பத்திரம் என்பது இலை.  பட்டைவடிவம் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இலை என்பது கொடியை அல்லது மரக்கிளையைப் பற்றிக்கொண்டு இருக்கிறது.  அதற்கு இந்தப் பற்றைத் தருவது காம்பு என்பது அறிந்ததே.

கொடியானது இலையைத் தருகிறது.  அதனால்  இலை+ தா > இலைதா > இலதா என்றொரு சொல் அமையலாயிற்று.  இது தன் தலையெழுதிழந்து லதா ஆகிவிட்டது.  இலதா :  இலைதருவது கொடி என்பது இதன் அமைப்பு.ப்பொருள்.

இனி மரக்கிளையைப் பற்றி நிற்பதை விளக்குவோம்.

பற்று + இரு + அம் =  பத்து + இரு+ அம் =  பத்திரமாகிறது.

மரக்கிளையைப் பற்றிக்கொண்டு இருப்பதனால் பத்திரம்.

0"ற்று" என்பது த்து என்று திரிந்தது பல சொற்களில். பழைய இடுகைகள் காண்க.

அத்தியாயம் என்ற சொல்லும் இவ்வாறு   அற்று என்ற சொல் அத்து என்று மாறி அமைந்தது தான்.

சிற்றன்னை > சித்தன்னை> சித்தி என்ற திரிபும் காண்க.

அத்தியாயம் என்பது முடிந்து இன்னொரு அத்தியாயம் தொடங்கும்.  அது அற்று இயைகிறது.   அற்று + இயை + அம் = அத்தியையம் > அத்தியாயம். இதில் ஐகாரம் குறுக்குற்றது.  ஐகாரக் குறுக்கம் கவிதையில் வருவது. சொல்லாக்கத்திலும் வந்து உதவியுள்ளது. இயை > இயா. ஐகாரம் குறுகிப் பின் நீண்டுள்ளது. சுருங்கக் கூறின் இயையம் > இயாயம் ஆனது.  தமிழ்சொற்களைக் கொண்டே இதை யாத்துள்ளனர்.

ஒப்பந்தப் பத்திரத்தில் கைச்சாத்து இடுகிறவர்களும் அதைப் பற்றி நிற்கவேண்டியவர்களே. அவ்வகையிலும் இது பொருத்தமாகவே உள்ளது:  பத்திரம்

அறிக மகிழ்க.

தட்டச்சுப் பிறழ்வு பின் திருத்தம்.

திங்கள், 20 ஏப்ரல், 2020

வற்சிறம் என்ற அழிந்த சொல்.


வஜ்ஜிரம் என்ற சொல் தோற்றம் அறிவோம்.   வஜ்ஜிர தந்தி, வஜ்ஜிர வேலென்று வரும்.

பழைய இடுகையிற்போல விரிக்காமல் சுருக்கமாகக் கூறுவோம்.  "பலசொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற சிலசொல்லத் தேற்றா தவர்" என்பார் வள்ளுவனார்.

வல் =  வலிமை.
சிற =   சிறந்த, மிகுந்த.
அம் = அமைந்தது என்பது.  அல்லது விகுதி எனினும் அமையும்.

வல்சிற அம் =  வற்சிறம்.

சிற > சிறப்பு.
சிற > சிறவு

இவை இப்போது வழங்குவன ஆகும்.  சிற என்ற அடிச்சொல்லி லிருந்து வருவன ஆகும்.

சிறம் என்ற சொல் மொழியில் அழிவுண்டது. அல்லது வழக்கிறந்தது.
பல தமிழ் நூல்கள் வைத்திருக்க இயலாமையாலும்,  பூச்சியரிப்பு முதலியவை யாலும்,  காக்கப்படாமல் ஒழிந்தன. தமிழ்நூல்களை நீரில் அமிழ்த்துவதும் நெருப்பில் இடுவதும் வாடிக்கையான நிகழ்வுகள்,  வைத்திருக்க இடமில்லை ஆயிற்று.

சிற + அம் = சிறம் என்பதில் ஏற்புக்கியலாத தொன்றில்லை.

வற்சிறம் என்ற சொல் பின் வஜ்ஜிரமென்று அயலிற் றிரிந்தது.
திரிபு உலவுகளிலிருந்து மூலம் அறிவது எளிதே ஆகும்.

வற்சிறம் > வச்சிரம்.  இது சில நூல்களில் உள்ளது. றகரத்தை ரகரம் மேற்கொண்டது காண்க. பொருள் : வலிமைச்சிறப்பு.


----------------------------------------------------------------------------------
 குறிப்பு:
 இடுகை ஒன்றிருந்தது, வேண்டின் இயற்றிக்கொள் என்று கூறுகிறது இந்த வலைப்பூவின் பதிவுமெல்லி.

(வஜ்ஜிரம் என்ற சொல் தோற்றத்தைக் கூறும்  இடுகையொன்று இருந்தது. அது இப்போது இல்லை.  அந்தப் பழைய இடுகை இங்கிருந்துதான் எழுதப்பெற்றது. கள்ள மென்பொருளால் அழிவுண்டது.)

மூலம் பழைய வளைவட்டில் (floppy disc)  உள்ளது.  பார்த்து எழுதத் தேவையில்லை. கடைக்குக் கொண்டுபோய் மீட்கக் காசு செலவாகும்.   ஆதலால் சுருங்கக் கூறியுள்ளேம்.

வியாழன், 16 ஏப்ரல், 2020

நூதனம்

நூதனம் என்ற சொல்லைப் பார்ப்போம்.

உகரச் சொற்களிற் சில நுகரத் தொடக்கமாகத் திரியும்.   இதற்கு எளிதான உதாரணம் உங்கள்  > நுங்கள் என்பதாகும். இதனைப் போலி என்னும் திரிபு வகை என்னலாம்.

உகரச் சுட்டடிச் சொல்: உங்கள் என்பது,  முன்னிலைக் கருத்தை உடையது. இதில் திரிந்த நுங்கள் என்பதும் அக்கருத்தைத் தழுவியதே ஆகும்.  இதன் முன் வடிவுகளாகிய உம் >  நும் என்பவும் அன்னவே.

ஒரு காலத்தில் நூல் என்பது புதுமைப் பொருள். பஞ்சிலிருந்து நூற்க அறிந்தகாலை அது பெரும்புதுமை.  நூதனம்.   நூல் > நூ( ல் )  > நூ +து + அன் + அம். இனி வேறொரு வழியில்:

ஊ, ஊன் என்பன முன்னிருத்தல் காட்டும் சொற்கள்.  சுட்டு.

ஊ >  உ ( உகரச்சுட்டு)  முதனிலை  குறுக்கம். பொருள் மாற்றமில்லை.

ஊ > ( ஊ + து + அன் + அம் ) > (  நூ + து + அன் + அம் )

பொருள்களை முன் வந்தவை, பின் வந்தவை,  பின் வந்து புதுமையானவை என்று பகுத்துக்கொண்டால் நூதனமானவை அல்லது புதுமையானவை முன்னிருந்து வியப்பினையும் விளைத்துக்கொண்டிருக்கும்.

இதிலிருந்து வியப்புக்குரிய புதுவரவே நூதனம் என்பதை அறிய ஆறறிவு போதும்.

கொம்பில் நுனியே முன்னிற்பது  அதுவே இறுதியில் வந்தது.மாற்றுச்சொலவு வேண்டின்  அடியிலிருந்து புதிதாக வெளிவந்ததே நுனி

அதிலிருந்து:

நுன் > நுனி.
நுன் >   நூ + து + அன் + அம்.
முகிழ்த்துப் புதுமையாய் முன்னிருப்பது.

நுன் > நு (கடைக்குறை)
நு > நூ  ( முதனிலைத் திரிபு, நீட்சி )

நுவலுதல் என்ற வினைச்சொல் புதுமையாய் அல்லது புதிதாய் ஒன்றை முன் வைப்பது,  வாய்வழியாக. இதுவும் தொடர்புடைய உருவாக்கமே.

ஊது என்பது உள்ளிருந்து ( தொண்டையிலிருந்து ) வாய்வழி வெளிக்கொண்ர்தல். இக்கருத்து பின் விரியும்.   ஊது > நூ(து) எனக்காண்க.

மனிதன் எள்ளை அறிந்து அதைப் பயிராக்கியது முதுபழங்காலத்தில்.  அப்போது அது ஒரு புதுமையாய் இருந்தது.  ஆபரணம் செய்ய அறிந்து அதை அணிந்தகாலம் அவன் புதுமையே கண்டான்.  யானையைக் கண்டபோதும் புதுமைதான். இந்தப் புதுமைப் பொருள்கட்கு ப் பொதுச்சொல்லாய் " நூ " என்று சொன்னான். இசைபாட அறிந்தபோதும் அதற்கு ஒருவினைச் சொல்லைப் படைத்து நூக்குதல் என்றான் என்பதும் அறிக. புதிதாக சமைக்க அறிந்தபோது ( தீயைக் கண்டுபிடித்துச் சில காலம் சென்றிருக்கவேண்டும் )  அவிப்பதை நூத்தல் என்று சொன்னான்.  நூர்த்தல் என்பதும் ஒன்றைப் புதிதாகச் செய்தல்.

முதலில் நூலெழுதியவனும் நூற்க அறிந்தவனும் இவனே.   இவை எல்லாம் மனித இனத்தால் கொண்டாடப்பட்ட கண்டுபிடிப்புகள்.  அவனிடம் பல கண்டுபிடிப்புகள். அவை எல்லாம் இன்று பழங்கதைகள் ஆய்விட்டன.

யாதென அயிர்க்காமல் வாதிடல் விட்டு நூதனம்  அறிக.


அச்சுப்பிறழ்வுகள் திருத்தம் பின்னில்.

புதன், 15 ஏப்ரல், 2020

கடிகாரம் அதன் உள்பொதிந்த காலவிரைவுக் கருத்து.

கடு என்பது ஒரு தமிழ் அடிச்சொல்.  அது அடு என்பதனுடன் மிக நெருங்கிய சொல்லென்பதை நீங்கள் சிந்தித்ததுண்டா? ஒன்றன்பின் ஒன்றாக நெருக்கி அடுக்கப்பட்ட எதுவும்  அந்த அடுக்கிய நிலையில் இருந்து நழுவாமல் நிற்குமானால் அது "கடு "  ஆகிவிடுகிறது. அதாவது தன் நெகிழ்தன்மை, நழுவலின்மை  அது கடு  ஆகின்றது.     இதை

அடு >  கடு

என்று குறிப்போம். அடு ( அடுத்துவரல்) என்பதிலிருந்த நெகிழ்தன்மை கடு என்பதிலில்லை.  கடு கடுமை ஆகும். கடுமையுடைய பொருள்களைத் தொகுத்துக் கூறி அவற்றின் தன்மை விளக்குவிக்க வேண்டின்,  அதனைக் "கடு+ இனம்" என்று உருவாக்கிக் "கடினம்" என்கின்றோம். கடினப்படுதல் என்றால்  கடுமை என்று வகைப்படுத்தப்படும் தன்மை உடையதாதல்  என்று விரிக்கலாம்.

இவ்வாறே  மெல்லவோ இயல்பான நிலையிலோ அடுத்தலை -  அதாவது அடுத்துச் செல்லுதலை விடுத்துச் சற்று முயன்று விரைந்து அருகிற் சென்றால் அது  கடுகுதல் ஆகின்றது.  கடுகுதல் எனற்பாலது   முயன்று விரைதலைக் குறிக்கும்.   எப்படியும் கடுகுதலில் ஒரு சிறிய கடின முயற்சியாவது இருக்கவேண்டும்.   அதுவே கடுகுதல்:   இதிலிருக்கின்ற உள்ளுறைவு கடின முயற்சியுடன் கூடிய விரைவான முற்செலவு  ஆகும்.

இப்படி வினைச்சொல்லான கடுகுதல் என்பது, பெயரானால் கடுகு என்ற தாளிக்கப்பயன்படும் விதையைக் குறிக்கும். இப்போது கிடைக்கும் கடுகுகளில் காரம் எதுவும் தென்படவில்லை. அதை எண்ணெயில் இட்டுச் சூடாகி வெடிக்கையில் ஏற்படுவதைத்தான் " கடுகு சிறுத்தாலும் காரம் போகாது" என்றனர்போலும்.  நீங்கள் கடுகுபற்றி அறிந்தவராய் இருக்கலாம். இந்தப் பழமொழியை விளக்குவீராக. கடுகில் வெண்கடுகும் உண்டு. மனிதருள் வெண்டோலர் இருத்தலே போல். கடுகு சிறுத்தல் பருத்தல் அறியோம். யாம் அதனைக் கொஞ்சமே வாங்கி விரைவில் முடித்தலின்! கடுகுமணி அணிதற்கு அதனைச் சென்று வாங்கி வந்தாலே இயலும்.

ஏன் இப்படிக் கூறுகிறேம் என்றால்,  காரம் என்ற சொல்லோ கரு என்பதனடிப் பிறந்தது.  கொஞ்சம் கருகலானால்தான் காரம் என்ற சொற்பொருட்குப்  பொருந்தும்.  அப்போதுதான் வாசனை மிகுதல் உண்டாகும்.

கரு + கு = கருகு > கருகுதல்.
கரு + அம் = காரம்.  கரு என்பது அகரமுன் கார் ஆனது. இது ஒரு என்பது உயிர்முன் ஓ என்று நீண்டு (ஓர்) ஆவதுபோலுமே.

காரம் என்ற சொல்லமைந்த இளநாட்களில் கருகலால் கிளம்பிய மணத்துடன் கலந்த காற்றினை எண்ணியே செயல்பட்டனர் எனினும் இந் நுண்பொருள் பின்னர் (பிறபதங்களிற் போலவே)  இழக்கப்பட்டு,   காரம் என்பது கருகலாலன்றிப் பிற முறைகளில் எழுந்த கடுமையான மணத்தையும்  குறித்துப் பொதுமை அடைந்தது என்பது உண்மையாகும்.

ஆனால் கடிகாரம் என்பதில் என்ன காரம் உள்ளது,  கூறுக. கடிகாரம்.  அது காரத்துடன் கடிப்பதுமில்லை. கடிமணம் போலுமோர் பதமோ காண்போமே!
கடி என்பது விரைவு, புதுமை ஆகியனவுமாகும்,     அம்பு கடிவிடுதல் என்றால் வேகமாக அது விடுதலென்பது.[சங்கத்துச் சொற்றொடர்]

 வேகமாகச் சென்று முடிந்து  விடுவனதம்மில் , மணிநேரம் என்பது முன்மை வாய்ந்தது ஆகும். போயின் வாராதது நேரம் என்பது.  நாழிகை என்றும் இஃது பொருள்படும்.  நாம் எதிலேனும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற காலை, அது போவது தெரிவதில்லை. நாம் அறியாமல் அது சென்று மறைவதனால், அதன் விரைவு வியத்தற்குரியது ஆகும்.

அறியாது அடைவு கொள்வதால்

கடி ( விரைவு) +  கு ( சேர்வு அல்லது அடைவு) + ஆரம்

ஆனது.  ஆதலின் பண்பின் காரணமாய் இப்பெயர் அமைகின்றது.


விரைந்தோடுவதென்னும் பொருளில் கடுகு+  ஆரம் = கடுகாரம் > கடிகாரம் எனினும் அதுவே.  ஈற்று  உகரம் இகரமாகும்.  கடு> கடி.  மூலம் கடுவென்பதே.

கடி என்பது கூர்மைப் பொருளும் உடையது. மற்றும் முகூர்த்தம் என்று அர்த்தமும்  தரும்.  கடிகை என்பது நேரம் அமைய மங்கலம் பாடுதலையும் சுட்டுவது.

கடு, கடி, கடுகு(தல்),  என்பவை தொன்றுதொட்டு  நேரகாலத்துடன் தொடர்பு பட்டவை என்பதை ஊன்றிப் பற்றிக்கொள்க. முகூர்த்தம், மங்கலப்பாடல் முதலியவை அவற்றோரன்ன வானவை. விரைவு என்பது செயலிற் காலக்குறுக்கமன்றி வேறில்லையாதலின் வேறு விரித்தல் வேண்டாமை உணர்க.

ஆர்தல் - அணிதல், பொருந்துதல்.

ஆரம்  =  அணி, பொருந்துபொருள்.

காலவிரைவு காட்டும் பொறி,  கடிகு ஆரம் >  கடிகாரம் ஆயிற்று.

கடு - கு எனற்பாலது  காலவிரைவு அல்லது காலச்செலவு குறித்தாலும்  இதில் காலம் என்பது தொக்கது. நாற்காலி என்பது சொல்லமைப்புப் பற்றி நாலுகால் உள்ள நாய் பூனை உட்பட அனைத்தையும் குறித்தல் கூடுமெனினும்  அது வழக்கில் இருக்கை என்றே பொருடருதலின், காரண இடுகுறி ஆனது போலவே கடிகாரமென்பதும் காரண இடுகுறி என்று உணர்க. எனினும் கடு>கடி என்பதிற் பிறந்த சொற்கள் பல கால நேரப் பொருண்மை உடையனவாய் இருத்தலின்,  இஃது காரண இடுகுறியே ஆயினும் நாற்காலி என்பதினும் சற்று மேனிலைப்பட்டு நிற்றலை உணர்ந்து இறும்பூது எய்தவேண்டும்.

இது பின் அயலிலும் சென்று கொடிநாட்டிய சொல்.

இப்போது காலக்கருவி குறிக்கும் சொற்கள் பல இருப்பினும் இது முந்து ஆக்கம் ஆயிற்று என்றுணர்க.

கடிகை = நாழிகை:  

கடிகை+ ஆரம் > கடிகாரம்,  கை என்றவீற்றில் ஐ கெட்டது, ககர ஒற்றில் ஆகரமேறிற்று.  கடிகை என்பதிற் கை விகுதி,  கு அன்றி க் என்று குன்றி ஆ என்னும் வரு விகுதி முதலுடன் இணைப்புற்றது.  ஆரமென்பது வட்டு வளையமென்று போதருதலின், நாழிகைவட்டில் என்று கொள்ளவும் தக்கசொல் இது.  அவ்வட்டில் கழிந்து மணிப்பொறி வாழ்வினுட் புக்க காலத்து அஃது மணிப்பொறி குறித்து புதிதுபுகுந்ததையும் உணர்த்திற்று. இவ்வாறு இதனை விளக்கினும் ஏற்புடைத்தே  ஆம். மரப்பட்டை குறித்த சீரை என்ற சொல் இன்று நூலாலும் நெகிழியாலும் ஆனவற்றையும் குறித்தல்போலும் இதுவாகும்.

அறிவீர், மகிழ்வீர். மகுடமுகி என்னும் கொரனாவினின்றும் தப்புதற்குரிய அனைத்து வழிகளையும் விடாது பற்றித் தொடர்க.  நீடுவாழ்க.

தட்டச்சுப் பிறழ்வுகள் பின் கவனம்பெறும்.

 





திங்கள், 13 ஏப்ரல், 2020

சொர்க்கமும் ஆத்மாவும் ஆன்மாவும் சொரூபமும்

சொரூபம் என்ற சொல்லை இப்போது அறிந்துகொள்வோம்.

அதற்குமுன் சொருகுதல் என்பதன் பொருளைப் பார்த்துக்கொள்ளுதல் நல்லது.

முந்தானையைச் சொருகிக்கொள், மேல்சட்டையைக் கால்சட்டைக்குள் சொருகி இடைவாரைப் போடு, கண்கள் உறக்கத்தில் சொருகும் வேளையில்
வானொலியைத் திறக்காதே என்றெல்லாம் இச்சொல் வழக்கில் வருதலைக் கண்டிருக்கலாம். சொருகுதலாவது உட்செலுத்தி மாட்டிவிடுதலைக் குறிக்கிறது. முந்தானை காற்றில் பறக்கக் கூடாது என்று கூறுகையில் அது மாட்டி இறுக்கமானால் அல்லது முறையாகச் சொருகப் பட்டால் பறக்காது என்பது பொருள்.

செருகுதல் என்ற சொல்லும் உள்ளது. வயிற்றுச் செருகல் ஒருபுறமிருக்க, இது நுழைதல், நுழைத்தல், கண்சொருகுதல் என்ற பலநிலைகளை உட்படுத்தும் சொல்லாகும்.

எகர ஒகரப் போலிச்சொற்களில் செருகுதலும் சொருகுதலும் அடங்கும். இதனால்தான் பேச்சுத் தமிழில் எழும்பு என்பதை ஒழும்பு என்றும் சிலர் சொல்கின்றனர். ஒரு கூட்டத்தாருக்கு இன்னொரு கூட்டத்தார் பேச்சு வேறுபாடு வியப்பாக இருக்கலாம். ஆய்வாளருக்கு இது பெரிதன்று. மக்கள் பல்வேறு காரணங்களால் பிரிந்துவாழ்ந்த நிலையில் வேறுபாடுகளே இல்லையென்றால் அதுதான் எமக்கு வியப்பாக இருக்கும். இப்போது தொலைத்தொடர்பு மிக்கிருப்பதால் இவற்றை அறிந்து நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறோம்.

இப்போது சொருக்கம் என்பதை ஆய்வோம். சொருகுதல் என்பதும் ஓரிடத்தைல் உள்ளதை இன்னோரிடத்தில் உள்நுழைத்தல் என்பதே. இஃது மேலே கூறினோம். எடுத்துக்காட்டுக்குக் காற்றிலாடும் முந்தானை. இதைச் சொருகுவதென்றால் எடுத்து சேலைக்கட்டின் இன்னோரிடத்தில் ஆடாமல் பிடிப்பாக நுழைத்தலே. சொருக்கமென்பது என்ன? இறந்தபின் அலையும் ஆன்மாவை / ஆத்துமாவை மேலே நாமறியாத வானில் எங்கோ சொருகி வைப்பதே ஆகும். சொருகு+ அம் = சொருக்கம். இதுபின் எழுத்துக்கூட்டலில் சொர்க்கம் என்று திருத்தமாக்குதலாக எழுதப்பெற்றது. சொல் ஆக்கப்பட்டு வழக்கில் உலவியகாலை, சொருக்க மென்பது ஒலியழகின்மையினால் சொர்க்கம் என்றாயது எனினுமது. ஒலியழகுக்காக இவ்வாறு திருந்தியமைந்தவை பல. சொருகுதலென்ற பழங்கருத்து ஒரு தடை எண்ணத்தை உருவாக்கியதால் சொர்க்கமென்று அது  மேம்பாடு கண்டது. இதனைச் சொன்னாகரிகம் எனினுமாம்.

உடலின் அகத்து, அதாவது உள்ளில், உடலினும் பெரிதான ஆன்மா அல்லது ஆத்துமா அமர்ந்திருந்தது. அகம்> அகத்து: உள்ளில். மா- பெரிது, எதனினும் பெரிதென்றார்க்கு அஃது உடலினும் பெரிது என்றலே விடை. எனவே அகத்து + மா = அகத்துமா > ஆத்துமா > ஆத்மா. இவ்வடிவங்களில் இறுதி வடிவமே சுருங்கிநின்றமையில் ஏற்புடைத்தென்று கொள்ளப்பட்டதில் வியப்பு ஒன்றுமில்லை. ஆத்துமாவோ உடலினும் மிக்க விரிவானது என்ற கருத்து எழுந்தது. என்வே சிலர் அகல்+ மா = அகன்மா > ஆன்மா என்றனர். அகன்றதும் பெரிதுமானது. இறைவனாகிய பேராத்துமா அல்லது பேராத்மாவினைப்போன்ற சிற்றாத்துமா மனித உடற்கண் இருப்பதாய் உணரப்பட்டது.

அகத்துமா என்றது ஆத்மா ஆனதுபோலும் திருந்தியதாய் எண்ணப்பட்ட வடிவமே சொருக்கமென்ற சொருகிடமாகிய சொர்க்கமும். சமயம் பற்றிய கருத்தாக்கங்கள் மேன்மை பெறவே, சொருகுதல் முதலிய கரட்டு எண்ணங்கள் விலக்கப்பட்டன. Crudeness in the formative thoughts became refined as matters of thought progressed.

ஆன்மா என்பதில் ஆன் என்பது பசுவென்னும் ஆனைக் குறிக்கும் என்று விளக்கினோரும் உளர்.

நாம் முதலின் விளக்க எடுத்துக்கொண்டது சொரூபமே. ஒன்றன் உருவம் என்பது இன்னொன்றில் சொருகப்பெறுவது அல்லது இணைந்தியல்வதுதான் சொரூபம். இஃது உண்மையில் சொருகு உருவம்தான். இங்கு உருவம் என்ற சொல் வரினும் அருவம் என்பதும் அதில் அடங்கும். சொருகு உருவம், சொருகு அருவம் என விரித்தறியத் தக்கது இது.

உருவம் > ரூவம் > ரூபம். அல்லது அருவம் > அரூபம்
சொருகு + ரூவம் > சொரூவம் > சொரூபம்.
இது பகவொட்டுச் சொல். அறிந்து மகிழ்க.

தொடர்புடைய மற்ற இடுகைகள்:

https://sivamaalaa.blogspot.com/2019/08/blog-post_20.html 

(தாமம்,  தாமான் ). அகத்து மா > ஆதமா இன்னொரு விளக்கம்.
ஆத்மா ஓர் இருபிறப்பி. 

 
தட்டச்சுப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்பெறும்


ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

நோய் மகுடமுகியிலிருந்து காத்துக்கொள்ளுங்கள்.

நாளது காறும் நலமுடன்  வாழ்கவே
வாளது போலும் நமைவீழ்த்தி  ----- மீளரிய
காரிருட்குள் தள்ளுங்கொ   ரோனா மகுடமுகி
வாரா வழிகாண் கடன்.

வாசகர் யாவரும் வாழ்வீர் வளமாக
நாசமிழை நோய்கள் நீங்கிட ---- மோசமறக்
கைகளின் தூய்மை கவசமே வாய்மூக்கில் 
மெய்யுறப்  பேணல் கடன்.

நாளது -  எதிர்காலம்
காறும் -   வரை
மீளரிய -  மீட்சியில்லாத
கடன் - கடமை

நசித்தல்:   நசி + அம் =  நாசம், முதனிலை நீண்ட தொழிற்பெயர்.
மோசம்:
மொய் + அம் = மோயம் > மோசம். ( ஈ முதலியவை மொய்த்தது.
ய ச போலி)  தூய்மை அற்றது, கெட்டது.

க்ஷமித்தலும் அமிழ்த்தலும் ( சமித்தல் )

அமிழ்த்தல்.

மனத்தை வருத் துகின்ற எதையும்‌  குளிர்ந்த  நீருக்குள் போட்டு  அமிழ்த் திவிட  வேண் டும்.  சூடேறிவிட்ட உள்ளத்தைக் குளிர்விக்க வேண்டும்.
அடுத்தது   -   வருத்தம் மேலெழக்கூடாது.  அப்போ து தான்   எதையும் பொறுத்தல்  முற்றுப்பொறும். இவ்வாறு நினைத்தனர் முன்னாளில்.

மன்னிப்பைக் குறிக்கும் பல்வேறு கருத்துக்களும் மொழியில் மனிதன் தன் அன்றாட வாழ்க்கையில் திடப்பொருள்களைக் கையாளும் அவனறிந்த வகைகளிலிருந்தே மேலெழுந்து கண்காணாத மனவுணர்ச்சிகளை உணர்த்த முன் வந்தன என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்.

பொறுத்தல்  என்பது, ஒரு பளுவான பொருளைச் சுமந்து  செல்லுதலையே குறித்தது. பண்டைத் தமிழர் " சிவிகையைப் பொறுத்தல்"  -  அதாவது பல்லக்கைத் தூக்கிச் செல்லுதல் என்றனர்.  ஒரு கடினமான மனவுணர்வினையும் அவ்வாறே திடப்பொருள்போல் பாவித்து,   " பொறுத்தருள்" என்றனர்.

வேண்டாத பொருளை நீருக்குள் அமிழ்த்தி அப்புறப் படுத்துதலும் அன்னதே ஆகும்.

அமிழ்த்தல் >  அமித்தல் >  க்ஷமித்தல் ( ஒரு குற்றம் அல்லது தெற்றினை மன்னித்தல்.

அகரத் தொடக்கத்துச் சொற்கள் சகரத் தொடக்கமாவது:

அமணர் >  சமணர்

என்பதனால்  அறிந்துகொள்க.  இவ்வாறு திரிந்த சொற்கள் பல.  இன்னொன்று அடுதல் ( சமைத்தல் )  >  (சடுதல் ) >  சடு + இ=   சட்டி.

திரிந்து பொருள் மாறாதது போலி.  சில நுண்பொருள் மாற்றம் அடைவன.

இருவருக்கிடையில் மனம் வேறுபாடுமாறு நடக்கும் நிகழ்வினால் நட்புறவு வீழ்ச்சி அடையும்.  அந்த உறவினை மீண்டும் எழுமாறு செய்தலே மன்னித்தல்.

மன்னுதல் =  நிலைபெறுதல்.

மன்னும் இமயமலை எங்கள் மலையே.
மன்னுலகம்
மன்னுயிர்.

மன்னன் -  நிலைத்த தொடர்குடியிலிருந்து  ஆட்சி ஏற்றிருப்பவன்.

மன்னித்தல் ( அதாவது மன்னுவித்தல் ) -  மீண்டும் நிலைபெறச் செய்தல்.
மன்னித்தல் - நிலைபெறச் செய்தல்.

மன்னு -  தன்வினை

(மன்னு>)  மன்னி > மன்னுவி  இவை  பிறவினைகள்.

மன் -  மன்னுதல்  வினைச்சொல்.

மன்னு + இ   இதில் உடம்படு மெய் வரவில்லை.


மன்னு + வ் + இ.   இதில் வ் என்பது வகர உடம்படு மெய்.

அசைஇ, நிறீஇ  முதலிய பழங்கால வினைகளிலும்  இ வருதல் கண்டுகொள்க.

di-perchaya-i   என்று மலாய் மொழியிலும்கூட இவ்வாறு வரல் உணர்க.

க்ஷமித்தல் என்பது தமிழில் வழங்கவில்லை.

சமித்தல் உளது.

சமித்தல்-  சகித்தல்  ம- க போலி எனினுமாம்.
தம் > சம் ஒன்றுசேர்தல் உட்பொருள் எனினுமாகும்.,  சம் . சமி.  சம் > சமை.
சமனித்தல் > சமித்தல் திரிபு எனினுமாம்.சமனித்தல் > சமானித்தல்.

சமித்தல் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளில் விளக்குறும் சொல்.
 

அறிக மகிழ்க.

தட்டச்சுப் பிறழ்வுகள் பின் சரிசெய்யப்பெறும்.



வெள்ளி, 10 ஏப்ரல், 2020

பகீரதன் முயற்சியின் நடைமுறைப் பொருத்தங்கள்

பகீரதன் என்பவன் கங்கையை  வானிலிருந்து பூமிக்குக் கொண்டுவந்தான்.
மக்கள் யாவரும் போதுமான நீர்பெற்று மகிழ்ச்சியாய் வாழவேண்டுமென்பதே நோக்கம்.மக்கள்பால் அவன் கொண்ட பரிவே அதற்குக் காரணம்.

இவன் ஒரு  பார்த்திபன்.  பாரிலே மிக்கத் திட்பம் உடையமன்னன்.

பார் + திட்பம்  >  பார் + திட்பன்
இது இடைக்குறைந்து டகர ஒற்று (ட்) மறைந்துவிட்டால்
இதுவே பார்த்திபன் ஆகிவிடுகிறது.  த் என்பது புணர்ச்சியில் விளைந்தது.

திட்பம் :  மனவுறுதி. செயலில் விடாமுயற்சியும் கெ ட் டி த் தன்மை யும்.


எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்

என்பதும் உண்மையே ஆகுமன்றோ?

யாரைப் பார்த்திபன் எனல் வேண்டு மெனின்  பாரில் திட்பம் உடையனாகி
எண்ணிய எண்ணியாங்கு எய்தும் திண்ணியனையே.

உண்மையில் " பகிரதன் "  ஒரு பகிர் + அது + அன். அவன் முயன்று முடித்த ஒன்றை மக்களுக்குப் பகிர்ந்து அளித்தான்.

இனிப் "பகீரதன்" என்பது:

பகு+ ஈர் + அது + அன் >  பகுத்து, மக்களை ஈர்த்து, அது ( அவன் பெற்றதை),  அன்:  அளித்தவன்.  இது ஒரு காரணப்பெயர். இதன் காரணங்கள் தமிழ் மொழியிற்றான் அமைந்து கிடக்கின்றன.

இது  அது  அல்லது   து என்னும் இடைநிலை பெற்று அமைந்த சொற்கள் பல.
எ-டு:
கணி + து + அம் = கணிதம்
பரு + அது + அம் = பருவதம் (மலை).
சுர + ஒண்( மை  ) + இது  + அம் = சுரோணிதம்.
"ஊறு சுரோணிதம் மீது கலந்து"
----- பட்டினத்தார்

வினைச்சொற்கள்: கணித்தல், பருத்தல்,
சுரத்தல்

சிலர் பகீரதன் அல்லது‌ பகிரதன்
என்று ஒருவன் இருந்ததில்லை என்று
நினைக்கலாம்.. அவன்      இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன. சொல்லை ஆய்வது தான் எம் வேலை.
இருந்தானா இல்லையா என்பதன்று.

Dear reader:   This post has been hacked by mischief makers.
We have partly restored it.
Some errors resulting from their intrusion have been rectified.
Dear intruder ,  if you do not like the contents please give your reasons or give your own etymology
in the comments column. It is OK for us.
Thank you intruder.

வியாழன், 9 ஏப்ரல், 2020

இமை நிமையாகி நிமிடம்

மணிநேரத்தை அளக்க வேறு கருவிகளில்லாமையால் மனிதன் பல்வேறு முறைகளில் முற்பட்டு அலுத்துவிட்ட நிலையில் கடிகாரத்தைக் கண்டுபிடித்தான்.  அதன்பின் அவனுக்கு காலச்செலவு அறியும் கட்டம் நீங்கியது.  கட்டமாவது கடினநிலை. ( கடு+ அம் = கட்டம் ).

கருவியற்ற நிலையில் அவன் தன் உறுப்புகளை வைத்தே எதையும் அளந்தான்.  ஒரு பொருள் நான்கு  அடி தள்ளி இருக்கிறதென்றால்  அதை நான்கு அடியென்றே சொன்னான்.  முழங்கை அளவினை முழம் என்றே சொன்னான்.

அவன்றன் கை நீள்வதும் முடங்குவதும் ( அதாவது மடங்குவதும் ) உடையதாய் இருந்தது. இது வசதி தந்தபடியால், முடங்கும் கையை  முழம் கை > முழங்கை என்றான்.  

முடு > முடுக்கு  ( > மடக்கு)  [  மேற்செலவின்மை]
முடு >   > முடம்   ;
முடம் >  முழம்.

தொடர்புகளை ஆய்க:   விழு> < விடு.;   பாடு > பாடை> பாழை  (< பாஷை).
பேசு > பேசை > பாசை (  < பாஷை).

இவற்றைப் பின்னொருகால் விளக்குவோம்.

கைகால்களைக் கொண்டு அளவிட அறிந்தவன்,  கண்ணைக் கொண்டும் அளந்தான்.    கண் இமைக்கும் பொழுதைக் கணமென்றான். ( கணம் >  க்ஷணம்). கண்ணால் அளந்த நேரம் என்பதை க்ஷண என்பது மறைவு செய்கிறது.  இதுபோலும் தடைக்கருத்துகளில் மகிழத் தலைப்பட்டான்.

கண்ணை மட்டுமோ கண்ணின் இமையையும் அவன் விடவில்லை.  இமைப்பொழுது என்றான்.  இமை இட்டு நேரத்தை அளந்து மகிழ்ந்தான்.
இறைவனைப் பாடுகையில் இமைப்போதும் நினை நீங்கேன் என்றான்.

இமைப்பது தொடர்ந்து நடைபெறுவதுதான்,  ஆனால் நிற்பதும் மூடுவதும் உடையது  அது.  இமைத்தல் என்பது சிறப்பாகக் கண் மூடுதலைக் குறிப்பதாக அறிந்தான்,  நின்றும் மூடியும் நின்றும் மூடியும் நடைபெற்றதனால்,

நில் + இமை >  நி(ல்)  + { இ} மை >  நிமை என்றசொல்  உருவானது.

இதைச் சுருக்கமாக,  நிமைத்தல் என்றான்.   இமை> நிமை என்று குறித்தான்,

புருவநிமிரவிரு கண வாள் நிமைக்க (திருப்புகழ். 497). என்பது எடுத்துக்காட்டு.

அன்றியும்  பிறழ்பிரிப்பாகவும் கருத இடமுண்டு.   கண் + இமை > கண்ணிமை > நிமை எனக்காண்க.  ( 00ணிமை).  இது இருபிறப்பி எனலாம்.

இமைத்தல் > நிமைத்தல்.  இமைத்தல் =  நிமைத்தல்.

இமைத்தலாவது  இமை இடுதல். இமை இடுதாலவது நிமை இடுதல்.  எனவே
நிமை + இடு + அம் =  நிமிடம் ஆனது. (  ஆக்கக்குறுக்கம்:  நிம் + இட் + அம்).
இடைவடிவங்களைப் புணரியலில் காட்டுவதில்லை. கருவுருக்கள் இவை,

நிமிடம் நிமிஷம் ஆனது மெருகு.

நிமை> நிமையம் என்பது நிமிடத்திற்கு மாற்றுப்புனைவு ஆகும்,

தட்டச்சு மறுபார்வை பின்.
நேரம் கிட்டுமாயின் கவின்பாடு,


மகுடமுகி ( கொரனாவைரஸ்)

வீட்டை நீங்கிச் சேறலின்றேல்
நோய்கள் தூரமே
கூட்டம் கூடிப் போதலின்றேல்
தொல்லை தீருமே.


சேறல் == செல்லுதல்,.  வழிநடை போதல்

வீட்டுப்பேச்சுக்கு  " வீட்டை விட்டுப் போகாவிட்டால் நோய்கள்
தூரமே, கூட்டம் கூடி ஆட்டம் வேண்டாம், தொல்லை தீருமே"
என்று மாற்றிக்கொள்ளலாம். செய்தி அதுவே.

புதன், 8 ஏப்ரல், 2020

அபத்தம்

இனி அபத்தம் என்ற சொல்லினை அறிந்துகொள்வோம்.

இதிலிருப்பவை இரண்டு உள்ளீட்டுச் சொற்கள்.

அவி + அற்று என்னும் இரண்டையும் மனத்தில் இருத்திக்கொள்ளுங்கள்.

இந்த அபத்தமென்னும் திரிசொல் அதன் முந்துவடிவத்தில் அவத்தம் என்று இருந்தது.  வகர பகரப் போலியைப் பின்பற்றி  இது பிற்காலத்தில் அபத்தம் என்று திரிந்துவிட்டது.  வகரம் பகரமாவதை  > 1. வகு > பகு 2. வசந்த > பசந்த் முதலிய வற்றால் அறியலாம். பகர வகரப் போலிகள் இந்திய மொழிகள் மட்டுமின்றிப் பிறமொழிகட்கிடையும் காணக்கூடியவை.   ( Not language-specific).  இத்திரிபு பல இடுகைகளிற் சுட்டிக்காட்டப் பெற்றுள்ளது.

அவியாகி அற்றுப்போவது அவத்தம்.  அற்று என்ற செந்தமிழ் வடிவம் பேச்சுமொழியில் அத்து என்று வரும்.

அன்றியும் சொல்லமைப்பில் இது காணக்கிட்டுவதே ஆகும்.   பல்+ து > பற்று > பத்து என்ற எண்ணுப்பெயர் காண்க.   ஒன்பதின்பின் எண்ணிக்கை பலவாகிவிட்டதென்று நினைத்த தமிழன்,  பல் (பல) + து ( ஆனது)( ஆயின)
என்ற சொல்லை உண்டாக்கிக்கொண்டான்.  ஆயிரம் என்ற சொல்லின் அமைப்பையும் கண்டுணர்க.  பல்+ து = பற்று > பத்து .  ஒருபஃது, இருபஃது என்ற சங்ககாலச் சொல்வடிவங்களையும் நினைத்துக்கொள்க.  இன்னும் தொற்று > தொத்து, சிற்றம்பலம் > சித்தம்பலம் முதலியவும் அறிக.  உறவு அத்துப்போய்விட்டது என்ற சிற்றூர்ப் பேச்சும் உணர்க.

அவத்தம் > அபத்தம்.

இதன் பொருள் பயனற்றுவிட்டது என்பதே.  இதன் ஏனைப்  பொருள்விரிகள் யாவும் இம்மூலக் கருத்தினின்று பெறப்பட்டன.  ஏற்புடையவாறு பொருளுரைத்துக்கொள்க.

SATYAM SHIVAM SUNDARAM - Saritha Rahman Singing Lata Mangeshkar song

ஐக்கியம் சொல் காட்டும் தமிழர் பண்பாடு

இன்று ஐக்கியம் என்ற சொல்லை அறிந்துகொள்வோம்.

இந்தச் சொல்லுக்குரிய விளக்கத்தினை அறிந்துகொண்டபின்பு இந்தச் சொல்லைப் படைத்தளித்தவன் ஒரு சுட்டடிச் சொற்புனைவு நிபுணனாக
இருந்திருக்கவேண்டும்  என்பதை நீங்கள் உணரத் தலைப்படுவீர்கள் என்பது எமது துணிபாகும் என்பதை ஈண்டு எடுத்துக்கூறுவோம்.

ஐக்கியம் என்பதில் இருப்பவை.

அ  -    அங்கு,

இ -     இங்கு

கு  -     சேர்விடம் குறிக்கும் பழஞ்சொல்.  அவனுக்கு, இவனுக்கு, மதுரைக்கு,
             தில்லிக்கு,   மலைக்கு என்ற எல்லாச் சொற்களிலும் கு என்பது சென்று                சேருமிடம் குறித்து நிற்கிறது.

இ -       இங்கு

அம் =   அமைவு குறிக்கும் விகுதி.

இவற்றை ஒன்றாக இணைக்க,


அயிக்கியம் என்பது கிடைக்கிறது.

அயிக்கியம் என்பதை ஐக்கியம் என்றெழுத ஓர் எழுத்துக் குறைந்து சொல்லின்
நீட்டம் குறைகிறது.


அதாவது அங்கு  பிரிந்து நின்றவர்களும்  இங்கு பிரிந்து நின்றவர்களும்
இங்கு அமைந்து விட்டால் அதுதானே ஐக்கியம். பிரிவினர் இங்கு ( அதாவது
உங்கள் முன்பே)  அமைந்துவிட்டால்  அதுவே ஐக்கியமன்றி வேறென்ன...?
இங்கிருப்போர் யாவரும் அவ் வொன்றுபடுதலைக் கண்ணால் கண்டு இறும்பூது எய்திடுவீர்கள் அல்லீரோ?  கண்கூடாக அது இங்கேயே நடக்கிறது என்றே இச்சொல்  உங்கட்குத் தெரிவிக்கிறது.

ஐக்கியம் என்பது சுட்டடியில் வளர்ந்த சொல்.   அ  இ உ என்பன முதன்மைச் சுட்டுகள்.

இது பெரும்பாலும் இந்த வீட்டு ஆண்பிள்ளை அந்த வீட்டுப் பெண்ணிடம் தஞ்சம் புகுந்து அம்மாவை மறந்து அங்கேயே கிடந்தால், சிற்றூரார்  "  அவன்
அங்கேபோய் ஐக்கியமாகிவிட்டான்" என்று ஏளனமாகச் சொல்வதற்குப் பயன்படுத்திய பதமாகும்.  ஐக்கியம் இங்கும் நடந்து முற்றுப்பெறலாம்; அங்கும் முற்றுப்பெறலாம், வீரமாகச் சண்டை  போட்டுக்கொண்டு இருந்த ஊரின் இரு சாரார்,  " இங்கு" வந்து ஐக்கியமாவதும் சிலரால் ஏளனத்துக்கு உள்ளாக்கப்படுவதே.  சண்டைக்காரன் காலில் விழுதல் என்பார்கள். சாதிக்காரன் காலில் விழாமல் சண்டைக்காரன் காலில் விழு என்பதையும் காண்க.  பெரிய பேச்சுப் பேசினானே, என்ன கிழித்தான் என்றும் ஏளனம் செய்வது வழக்கம்.  யாம் புள்ளிவிவரம் எடுக்கவில்லை என்றாலும் அதிகமாகச் சண்டையிட்டுக் கட்சி கட்டும் இயல்பு தமிழனிடமே அதிகம் என்று துணிவோம். இன்றும் போராட்டம் தமிழ்நாட்டில்தான் அதிகம், இது புள்ளிவிவரப்படி.  ஐக்கியம் என்ற சொல்லுக்கு அர்த்தமே தமிழிலிருந்து தான் உலகு பெற்றுக்கொள்ளவேண்டும்.

அதனாலன்றோ வெள்ளைக்காரனின் சட்டதிட்டங்கள் போல் தமிழனால் அமைக்கமுடியாமல் போயிற்று!  இன்னும் சொல்வது தேவையில்லை.

தட்டச்சுத் திருத்தங்கள் பின்.
Please read with caution. There are hacking software which can
misrepresent or create errors in the final product which reaches you
after we have posted. 


செவ்வாய், 7 ஏப்ரல், 2020

கொன்றொழிக்கும் கொரனா நட்பு.

ஆவீதி சென்றறி யார்க்குநற் பால்கொடாது
நாய்வீதி யில்பிறரை நண்ணாது கண்டீரோ
கோவீது நுண்மியோ கொல்நட்புக் கொள்ளுமே
தாய்வீடே  ஆமிவ் வுடல்.


பொருள்:

கொட்டிலில் நிற்கும் பசு வீதிக்குச் சென்று முன்பின்
அறியாதவருக்குத் தன்மடியைத் தடவவிட்டுப் பால்
கொடுப்பதில்லை.  வீதியில் நிற்கும் நாய் அறியாதவரிடம்
செல்லாது. இவற்றுக்கெல்லாம் அறிமுகம் தேவை.

கோவீது ( கோவிட்19 என்னும் ) கிருமியோ கொன்றுவிடும்
நட்புக் கொள்கிறது.  அறிமுகம் தேவையில்லை.  மனிதனின்
அல்லது மற்ற உயிரின் உடலைத் தன் தாய்வீடு போல்
ஆக்கிக்கொண்டு பெற்றுப் பெருக்கம் அடைந்துவிடுகிறது.
இக் கிருமி யார் எது என்று பாராமல் ஒட்டிக்கொள்வது
ஆகும். ஒட்டியபின் ஒட்டிய இடத்தில் அழிவு ஏற்படுத்துவதால்
அது கொல்நட்பு என்போம்.

இது இன்னிசை வெண்பா.  இதில் கண்டீரோ என்ற சொல்லை
எடுத்துவிட்டு " நோய்தரும்" என்ற சீரைப் புகுத்தினால் அது
நேரிசை வெண்பா ஆகிவிடும்.

நோய் வராமல் தனிமைப் படுத்திக்கொள்ளுங்கள்.
நலமே நடக்கட்டும். உலகு பழைய நன்னிலைக்கு
மேவுக. நெருங்கிச் செல்வதைத் தவிர்க்கவும்.

நண்ணுதல்  -  அடுத்துச் சென்று ஒட்டுதல்.
நுண்மி  (வைரஸ் பாக்டீரியா முதலிய நுண்மங்கள்.)
 

ஆட்டா மாவு

ஆட்டாமாவு என்ற பதத்தினை அறிவோம்.

ஒலியில் எந்தப் பொருளும் இல்லை.  ஒலி அல்லது ஒலிகள் இணைந்த சொல்லுக்குப் பேசுவோர்தாம் பொருளைத் தருகின்றனர்.  மா என்ற சொல்லுக்கு ஒவ்வொரு மொழியிலும் ஒரு பொருளிருக்கலாம். சில வேளைகளில் ஒரே பொருளில் இருவேறு மொழிகளில் சொல்லிருக்கலாம்.  எடுத்துக்காட்டு மா என்பது.  தமிழில் மா என்ற பல்பொருளொரு சொல்லுக்கு குதிரையென்பதும் ஒரு பொருள்.  அதே சொல் சீன மொழியிலும் அதே பொருளில் உள்ளது.  இஃதொரு தொடர்பற்ற உடனிகழ்வாகவும் இருக்கலாம். அல்லது இருவேறு மொழிகளுக்கிடையில் முன் தொடர்பு இருந்திருமிருக்கலாம்.  யாது என்று ஆய்ந்தாலே புலப்படும்.  நீ என்ற சொல்லும் அன்னது.  மொழியைப் பேசுவோர் என்போர் பண்டுதொட்டு இன்றுகாறும் அதனைப் பேசிவரும் வரலாறு உடையோர்.

இனி மாவுக்கு வருவோம்.   மாவு என்பது  அரிசி முதலானவற்றை ஆட்டுக்கல்லில் இட்டு ஆட்டி அரைத்து எடுக்கப்படுவது. இப்போது மின் அரைப்பான் உள்ளது. எங்கள் வீட்டில் இன்னும் ஓர் ஆட்டுக்கல் பயன்பாடு இன்றி உள்ளது.

ஆனால் உமியிட்டு அரைத்த கோதுமை மாவினைத் தமிழர்கள் அறிந்தபோது அல்லது அவர்களிடம் அது கொணரப்பட்ட போது,  அது முன்னரே அரைக்கப்பட்டு இருந்ததால்  அதை ஆட்டுக்கல்லிலில் இட்டு ஆட்டவேண்டியதில்லையாயிற்று.   ஆட்டிய தோசை அல்லது இட்டிலி மாவு வேறிருக்க, இதனைத் -   திறமையுடன் - ஆட்டாத மாவு என்றனர் தமிழர்.

இதுவே அந்த மாவிற்கு இன்று நிலைத்த பெயராயிற்று.  ஆட்டா என்ற எதிர்மறைப் பெயரெச்சம் தனிச்சொல் ஆகிவிட்டது.  "யாவர்க்கும்" என்ற பொருள்படும் இலத்தீன் சொல் : "omnibus",  இன்று பஸ் என்று குறுகிப் பேருந்து என்னும் வண்டியைக் குறிக்கவில்லையா? சொல் நூலில் இவ்வாறு வருவது ஒன்றும் புதுமையன்று.  கல் குலுக்கு என்ற வாக்கியத் தமிழ், இன்று ஒரு கணிதக்கலைச் சொல்லாகி  "கல்குலஸ்" என்ற வடிவம் பெறுகிறது. மொழிகளில் சொற்கள் திரிந்தன -- பலவாறு.

சமத்கிருதத்தில் ஆட்டா/ அட்டா என்பது சோற்றைக் குறிக்கும்.  மாவைக் குறிக்கவில்லை.  அடுதல் - சமைத்தல்.   அடு+ ஆ =  அட்டா> ஆட்டா.  அடு+பு > அடுப்பு.  அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது என்ற பழம்பாடல் காண்க.
அட்டா என்பதில் ஆ தொழிற்பெயர் விகுதி.    நில் > நிலா எனல்போல். இச்சொல் மாவின் பெயரன்று.


மறுபார்வை பின்பு

ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

அகிலம் இன்னொரு விளக்கம்.

அகிலம் என்ற சொல்லுக்கு இன்னொரு பொருளும் உரைக்கலாம். ஒரு சொல் முடிபு ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் தோன்றியிருக்கலாம் அல்லது தோன்றியதாக அறிஞர்கள் விளக்குவதற்கான உள்வசதிகளைக் கொண்டிருக்கலாம்,

அ+கு+ இல் + அம்.


அ  என்பது அவ்விடம் என்னும் சுட்டு.

கு  என்பது சேர்விடம்.

மனிதன் அகிலத்திலன்றி வேறிடம் இல்லாதவன்,

இல்  -  இல்லம், இருப்பிடம்


அம்  -  அமைவு குறிக்கும் விகுதி.

எனவே இருப்பிடமாகு இவ்வுலகம்.


இதை இன்னொரு முறையிலும் விளக்கலாம்:

http://sivamaalaa.blogspot.com/2015/02/blog-post_11.html.


அங்கிருப்பது உலகம்தான்.   அகு இல் அம்
இங்கிருப்பதும் உலகம்தான்.  இ (உல) கம் > இகம்.
உலகம்  அங்கும் இங்கும் ஐக்கியமானது.   அ+ இ+ கு + இயம்.  அயிக்கியம் > ஐக்கியம்.

இச்சொற்கள் எளிய அமைப்புகள் தாம்,

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

சாதுரியம்.

சாதுரியம் என்ற சொல் அறிவோம்.

முதலில் அறிய வேண்டியது சதசத சொத்சொத என்ற  ஒரு வகை " இரட்டைக் கிளவிகள்". கிளவி என்றால் சொல்.  கிளத்தல் - சொல்லுதல்.

சத சத என்பதும் சொதசொத என்பதும் கெட்டியில்லாத பொருளைக் குறிக்கிறது.

இந்த இடத்தில் மண் சொத சொத என்றிருக்கிறது என்பர்.  திண்மையற்ற நிலை.

சத சத என்பதும் அதுதான்.

கெட்டியில்லாத எந்தக் கலவையும் தரையில் எறிந்தால்  சத் அல்லது சொத் என்ற ஒலியுடன் விழும்.  தெறிக்கும்.  மண்ணும் நீரும் கலந்திருப்பதும் கலவைதான்.


இவ் வொலிக்குறிப்புகளிலிருந்து தோன்றிய சில சொற்கள்:

சதி  -    மென்மையானவள்;  பெண்.

சதியுடன் பதிந்து வாழ்பவன் பதி.   இதிலிருந்து சதிபதி.

சதி<> சது.

சது > சதுப்பு.   (சதுப்பு நிலம்)  மெதுமண் நிலம்.

சது >  சதை.   எலும்புபோலன்றி மென்மையானதாகிய தசை.

சொத >  சொதி :   மென்மையான தேங்காய்ப்பால் கலந்த உண்ணும் குழம்பு.

சது  >  சாது.  மென்மையான ஆள்.   ஆண்டி.

சது >  சத்து:  உள்ளடங்கிய மென்மையான  உறைவு.


மென்மாந்தனாகிய ஒரு சாதுவுக்கு உரிய தன்மையைத்தான் சாதுரியம் என்பர்.

சாது + உரி + அம் =  சாதுரியம்.

மென்முறையில் ஒன்றைச் சாதித்துக்கொள்பவன் சாதுரியமுடையவன்.வேறு விளக்கங்களும் இச்சொல்லுக்கு உள. அவற்றைப் பின்னொரு முறை காண்போமே.


குறிப்பு:

சாதுரியம் என்பதில்  (  சாது + உரி(ய) + அம் )=  என்னும் சொல்லமைப்பில் வலி மிகாது  அதாவது வல்லெழுத்துத் தோன்றாது,  இதற்கு  உதாரணம்:  முடிகுடி என்ற சொல்.  முடிமன்னர்குடி என்பது இதன்பொருள்.  குறுமன்னர் குலம் என்பது  குறுமுடிகுடி என்று வலிமிகுதலின்றியே வரும்.  அன்றியும் சொல்லமைப்புக்கு வாக்கிய இலக்கணம் உரியதன்று.



தட்டச்சுத் திருத்தம் பின்.




நோய்கள் பரவினாலும் தமிழ்ப்பற்று.

நோயணுக்கள் விஞ்சி  நுழைவரும் எவ்விடத்தும்
பாயடைவு கூட்டும்‌  மகுடமுகி ---- தூயரையும்

விட்டுவைத்தல் இல்லையே வேறிருந்து   காக்கதனை
குட்டறிந்  திந்நாள்  குலவாமல்  ----- மட்டுறுத்திப்


பட்டறிவா   ளர்வாழ்வார்  பாட்டும்  தமிழுமே
எட்டுவதால் மேன்மையே என்றென்றும்   -------ஒட்டியிங்கு

வந்தே மகிழ்கின்றார்  வாழ்க தமிழன்பர்
தந்தேம் இடுகைகள்  இங்கு.


பொருள்

நுழைவரும் எவ்விடத்தும் --  புகுவதற்கு இயலாத
எந்த இடத்திலும்.  (நுழைவு அரும்)

பாயடைவு -  பாய்ந்து சென்று அடைந்துகொள்ளுதல்.

மகுடமுகி  -  கொரனாவைரஸ்.  (கோவிட் 19)


காக்கதனை -  தன்னைக் காத்துக்கொள்க.


குட்டறிந்து  -   மறைதிறவுகளை அறிந்து

குலவாமல் -  நெருங்கிப் பழகாமல்.

பட்டறிவாளர்  -   அனுபவசாலிகள்

எட்டுவதால் -  (வருவோரைச் ) சென்று சேர்வதால்;

தந்தேம்  -  தந்தோம்

நோய்ப்பரவலால் பல இன்னல்களை அடைந்தாலும்
பாட்டுக்காகவும் தமிழுக்காகவும் அன்பர்கள் வந்தே மகிழ்கின்றனர்
என்பது கருத்து.  வாழ்க தமிழ்


புதன், 1 ஏப்ரல், 2020

தேகமென்றாலே அது பழுதுதான்.

வயப்படு வயதும்
அகப்படு அகவையும்


உலகம் வயதாகிக் கொண்டு வருகின்றது.  வயது என்ற துகரவிகுதிச் சொல்லை  ஆய்ந்து  சில முறை வெளியிட்டுள்ளோம்.  இதற்குமுன் வெளியிட்டது இன்னுமுள்ளது. நாமெல்லாம் காலத்தின் வயப்பட்டுக் கிடந்து மூப்பு அடைவதனால்  " வயம் > வய > வயது"  என்பது எவ்வளவு பொருத்தமான அமைப்பு.

வயது என்ற கால ஓட்டத்தைப் பற்றி நாமெதுவும் செய்ய முடிவதில்லை. ஊட்டச் சத்து, உயிர்ச் சத்து என்று இருக்கும் எதைத் தின்றாலும் காலம் ஓடிக்கொண்டு நம்மையும் அதில் இழுத்துக்கொண்டு தான்  சென்றுவிடுகிறது.
கால ஓட்டத்தில் நாம் அகப்பட்டுக் கிடக்கிறோம்.  அதனால் " அகவை " என்ற இன்னொரு சொல்லும் நம்மிடம் உலவுகின்றது..

வயப்பட்டதனால்  அது வயது.
அகப்பட்டுக் கிடப்பதனால் அது அகவை. இதை மேலும் அறிய:



தேகமும் திரேகமும்


குழந்தையாய் இருந்து இளமை பெற்ற ஒருத்தி  முழுவளர்ச்சி அடைந்தபின்,  அவள் உடல் தேய்ந்து இல்லாமை அடைகிறது.   அதற்குத்   தேய் >  தேய் + கு+ அம் =  தேய்கம்,  >  தேகம்,   திரை(தல் )  > திரை  +  ஏகு + அம் >  திரேகம்,  என்று சொற்கள் வருதல்,  பொருத்தமே.  ஆன்மா  இவ்வுடலை உடுத்துக்கொண்டு உள்ளது.  அதனால் உடல்.    இது பிடிக்கவில்லையென்றால்,  உள்ளுறுப்புகள் இவ்வுடலை உடுத்துக்கொண்டுள்ளன எனினும் அமையும். இறையிருப்புக் கொள்கையருக்கும் இறைமறுப்புக் கொள்கையருக்கும் பொருந்துமாறு உடல் என்ற சொல் அமைந்திருக்கிறது. எக்கொள்கையரையும்  இணைத்துச்செல்லும் இனிமைத் தமிழின் ஏற்றம்தான் என்னே என்போம்


சரீரம்:

 உடல் என்பது திடப்பொருள் ஆனாலும் அதன் பாதி நீர்கலந்து உள்ளதே. ஆகவே உடலின் சரிபாதி ஈரம் என்னலாம்   நீர் குன்றிவிட்டால் மருத்துவமனைகளில் உடலுக்குக் குழாய்கள் மூலமாக நீரூட்டுகிறார்கள் மருத்துவர்கள்.  Dehydratiion   தொல்லைதருமே.  சரி + ஈரம் உடையதுதான் இவ்வுடல்.  ஈரம் சரியாகவும் இருக்கவேண்டும்.  இவ்வுடலைச் சரி+ ஈரம் = சரீரம் என்றதும் எத்துணைப் பொருத்தமடி தோழி!.

சற்று விரிவாக ஈண்டு  காண்பீர்.



தேகமும் பழுதும்:


பழுது என்ற சொல்லும்  உடல் நாளடைவில் பழுதடைவதை உடையதென்பதை விளக்குகிறது.  இச்சொல்லுக்கு நிகண்டுகளிலும் அகரவரிசைகளிலும் காணப்படும் பொருள்விளக்கம் காண்க.  தேகம் (தேய் + கு+ அம்) என்னும் யகர ஒற்று இடைக்குறைச்சொல்லும்  பழுது என்ற சொல்லும் தமிழர் யாக்கை நிலையாமையை ஒர் வாணாட்கோட்பாடாக வைத்திருந்தனர் என்பதை உறுதிசெய்கின்றது.   இலக்கியத்தும் கண்டுமகிழ்க.


தட்டச்சுத் திருத்தம் பின்


 [இன்று மகுடமுகி என்னும் கொரனா நோய்நுண்மி  யாண்டும் பரவிவிட்டது. இன்று ஒரு துக்க நிகழ்வுக்கும் வீட்டிலுள்ளோர் சென்றுவந்தனர்.  எமக்கு மீண்டும் அதுபற்றிய சொல்லமைப்புகள் நினைவுக்கு வந்துவிட்டன. அதனால் இவ்வரைவு.  இதில் பழுதே புதிது.]