புதன், 30 நவம்பர், 2016

Love words in Tamil

மோகம் என்ற சொல்லின் அடி.  மோத்தல் அல்லது மோந்து பார்த்தல்
என்பதில் அடங்கியுள்ளதென்பது ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் இங்கும் பிற இடங்களிலும் விளக்கப்பட்டது. இப்  பொருட் காரணம் என்னவென்றால், இயற்கையில் விலங்குகள் மோந்துபார்த்தே இணைசேர்கின்றன என்பதுதான்.  மனிதன் நாகரிகம் அடைந்து, மோப்பத்தினால் தன் துணையை அடையும்  இயற்கை நிலையிலிருந்து வெகுதூரம் வந்திருக்கலாம்.  இருப்பினும் அவன் மொழியில் உள்ள‌ சொற்கள் அவனைக் காட்டிக்கொடுத்துவிடுகின்றன,

இது உண்மையா என்று நீங்கள் ஐயுறலாம்.  பழங்காலத்தில் மனிதன்
மரப்பட்டையை இடுப்பில் அணிந்து மானத்தைக் காத்துக்கொண்டான்,
அது சீரை எனப்பட்டது.  பின் துணி நெய்யக் கற்றுக்கொண்டு ஆடைகள்
அணிந்த காலத்தில் சீரை என்ற சொல் சீலை, சேலை என்றெல்ல்லாம்  மாறிவிட்டாலும் அவன் மொழி அவன் முன் நிலையைக் காட்டிவிடுகிறது. ரகர லகரப் பரிமாற்றமுடைய சொல் திரிபுகள்.

காமம் காதல் என்பன காத்தல் அல்லது காவல் வழங்குதலை முன் காலத்தில் குறித்தன.  ஒருவன் தன்னையும் தன் குடும்ப உறுப்பினரையும் காக்கும் கடமையையே மேற்கொண்டான். இதற்கு மாறாக அவன் பிற குடும்பத்தில் பிறந்த ஒரு மனிதப் பிறவியைக் காக்க‌ முனைவது   பெரும்பாலும்  அவன் காதல் வயப்படும்போதுதான். தான் விரும்பிய ஒரு பெண்ணை   (அல்லது ஆணை )ப்  பிறனுக்கு விட்டுக்கொடுக்காமல் காவல் செய்கின்றான்( ள் )..
மொழியில் காதல் காமம் என்பனவெல்லாம் காவல் குறிக்கும் கா என்பதிலேயே அமைகின்றன. இச்சொற்களில் காவல் பொருள் மறைந்து பிற்காலத்தில் உடல் உணர்ச்சி, மன உணர்ச்சி பற்றிய "பொருள் நிறங்கள்"  ஏற்பட்டன.  ஆனால் காப்பது காதலியை என்ற காவற்பொருளை முழுவதும் மறைத்துவிட முடிவதில்லை.

பிரேமை என்ற சொல்லோ நேரடியாகவே இதைத் தெரிவிக்கிறது.
பிற = இன்னொரு குடும்பத்தின் பிற பெண்ணை அல்லது ஆணை , ஏமை =  காத்து மேற்கொள்வது என்பது தெளிவாம். ஏம், ஏமம் : காத்தல்.  பிற என்பது ற > ர என்றானது.   பிரேமை ஆனது.


செவ்வாய், 29 நவம்பர், 2016

நிஷ்டை

நிட்டை என்ற சொல்லின் அமைப்பைப் பற்றிச் சற்று சிந்திப்போம்.

நீள் என்ற சொல் நீளுதல் என்று வினைவடிவம் கொள்ளும்.
நீள் > நீடு என்றும் மாறி நீடுதல், என்று தன்வினையாகவும்
நீட்டுதல், நீட்டித்தல் என்று பிறவினையாகவும் வரும்,

ஞானும் நீயுமாக ~  ஞானியாக ~  இறையும் தானுமாக நெடு
நேரம் அமர்ந்து மனம் நிலைநாட்டி இருப்போன் தானிருக்கும்
நேரத்தை நீட்டிக் கொள்கிறான். அவன் நினைப்பது என்ன
என்பது அவன்மட்டும் அறிந்தது.  அவனைப் பார்ப்பவர்கள்
அறிவது ஒரு புற்றுக்குப் பக்கத்தில் ஆடாது அசையாது
கண்மூடி அமர்ந்திருப்பது.  இவற்றிலும் அவன் இருக்கும்
நெடு நேரமே கவனிப்போர் அறிந்துகொள்வது.  ஆகவே
அவன் நிட்டையில் இருக்கிறான் என்றனர்.

நீடு > நீடை > நிட்டை அல்லது நீடு > நிடு >
நிட்டை ஆகும்.  நீ என்ற‌ முதலெழுத்து நி என்று
குறுகியது.@   நீட்டு > நீட்டை > நிட்டை  எனினுமாம்
தன்வினையில் தோன்றியதாகக் காட்டினும்  பிறவினையில்
தோன்றியதாகக் காட்டினும் மூலம்  ஒன்றே.  கால் கைகளை
ஒடுக்கினாலும்  நேரத்தை நீட்டிக்கொண்டு  அமர்ந்திருப்பது.   
மக்கள் கவனத்தை ஈர்த்தது    அதுவே. நேரச் செலவு .

இங்கு இங்ஙனம் குறுகல் விரிவாக ஆராயப்பட்டுள்ளது,
சாவு >  சாவம் > சவம் என்று குறுகினாற் போல.
முன் இடுகைகள் காண்க.

கடு அம் கட்டம் கஷ்டமானது போல நிட்டை நிஷ்டை
ஆகி இந்தோ ஐரோப்பிய ஒப்பனை அழகு பெற்றது
உணர்க,

=================================================

@கூடு  :>   குடி    ( கூடி  வாழும் மக்கள் )  (  குறுக்கம் )
@கூடு   >   குடு  >  குடும்பு  >  குடும்பம் ,
குடும்பி   இதுவும்  குறுக்கம் .

will edit

ல் > று இரண்டு எடுத்துக்காட்டுகள்

தொடர்ந்து லகர மெய்யீறு கொண்டு முடியும் சொற்கள், றுகரத்தில்
முடிவதை மேலெடுத்துச் செல்வோம். முன் இடுகையில் இரண்டு
உதாரணங்கள் தரப்பட்டிருந்தன.

http://sivamaalaa.blogspot.com/2016/11/blog-post_44.html

அல் என்பது அன்மை அல்லது அல்லாமை குறிக்கும். இந்த அடியிலிருந்து, அன்று, அல்ல, அல்லது, அல்லன், அல்லை, அல்லள் , அல்லாய், அல்லோம், அல்லோன் என்றெல்லாம் பல‌ வடிவங்கள் தோன்றி மிளிர்கின்றன. இவைகளில் ஒவ்வொன்றையும் ஒரு சொல்லாகக் கருதி தமிழ்மொழி முழுவதுமுள்ள சொற்களை அப்படியே எண்ணினால் சொற்களின் தொகை பெருத்துவிடும். அதனால் என்ன?

அல் என்பது அறு என்று வரும். இது நல் > நறு போலவேதான். முன் இடுகையின் விளக்கம் காண்க.

அல்லாதது  அற்றது என்பவை சொல்லாக்கத்தில் ஒன்றுக்கொன்று
கருத்திலும் சொற்றிரிபிலும் உறவுகொண்டவை. அற்றது அல்லாதது
ஆகும்.  அல்+து =  அற்று.   அல் > அறு >அறுதல்.   அல்லாதது
ஆதல். வெட்டி வீசப்படுவது அல்லாதது,  அறுபட்டது. மறுக்கப்பட்டது.

இல் என்று லகர மெய்யீற்றில் முடிந்த சொல், இறு என்றும் திரியும். இறு ‍~  முடி;  இறுதல் ~ முடிதல்.  மெய்யீற்றில் முடிந்த என்னாமல் மெய்யீற்றில் இற்ற என்றும் சொல்லலாம். தூர் இற்றுப் போய்விட்டது
என்று கேள்விப்பட்டதுண்டா?  இறு >  இற்று என்று எச்சமாதல் அறிக.

இந்த வடிவங்கள் வாக்கியங்களில் கையாளப்படுத்லைக் கண்டு
பல்வேறு பொருட் பரிமாணங்களையும் உணர்க. பரிதல்: புறப்படுதல்;
மாணுதல் ‍ சிறத்தல்.  பரி+ மாண் + அம் ‍:  வெளிப்பாடு சிறத்தல்
என்று பொருள்.

தலைப்பு :    ல்  > று   இரண்டு  எடுத்துக்காட்டுகள் 

திங்கள், 28 நவம்பர், 2016

லகர மெய்யீறு றுகர மாகும்

பல தமிழ்ச் சொற்கள் லகர மெய்யில் முடிகின்றன.  மிக்க எளிதான‌
எடுத்துக்காட்டு:  நல் ~ நறு என்பதாகும்.  நல் (  நல்மணம் ‍~ நறுமணம்.

நல்மணம்  :   நறுமணம்.
மணம் =   மணம் (இருசொற்களிலும்),
ஆகையால்  நல் =  நறு.

இனி இன்னொரு சொல்:

பல் : பறு

நறு என்று ஒரு சொல் இருப்பதுபோல், பறு என்ற சொல் இல்லை.
ஆனால் இருந்திருக்க வேண்டும்.

பறு >  பற்று.  றகர இரட்டிப்பு.
பறு > பறி. இகர விகுதி பெற்று ஒரு சொல்லாய் அமைந்தது.
பறு > பாறு > பாறை. பற்றி இறுகியது.
பாறு :  பாறுபடுதல்.

இப்போது  பல் என்பதன் பொருள் விளங்குகிறது;

ஈறுகளைப் பற்றிக்கொண்டிருப்பது பல்.
அதுமட்டுமன்று, ப என்று தொடங்கும் சொற்கள் பல, பட்டையாகவும்
உள்ளதைக் குறிக்கும்.

பல்லி : சுவரைப் பற்றிக்கொண்டிருப்பது. சுவர் பட்டையானது.

புல் > புல்லுதல் : பொருந்துதல்.

புல் > பல். புல் என்பது மூலம்

will edit

.



 






ரூபாய்மாற்றிப்பின்

(உ )ரூபாய்மாற்    றிப்பின்     (உ )ருசியும் உணவுமென‌
ஆபாயும் வேகத்தில் ஆட்களும் ====  நேர்பாய
நாடெங்கும் பேரமளி நாடாளு மன்றிலுமே
பாடென்று பாடேன் கிளி.

ஞாயிறு, 27 நவம்பர், 2016

தள் தாள் தளபதி. தாளம் இராவணன்

தாள் என்ற சொல்லுக்குப் பல பொருளுண்டு. எனவே வாக்கியத்தில் அது
எப்படிப் பயன்பாடு காண்கிறது என்பதை யறிந்து என்ன பொருள் என்று
தெரிந்துகொள்ளுதல் வேண்டும்.  "தாள் பணிந்தேன்" என்று பாடலில்
வந்தால், கடுதாசியைப் பணிந்தேன் என்ற பொருள் கொள்ள வாய்ப்பு இல்லை.


பூண்டுத் தோலையும் கூடத் தாள் என்னலாம். வளரும்போதே ஒன்றிலிருந்து தனியாக வெளிப்பட்டு நீண்டு  அதை மூடிக்கொண்டிருப்பது தாள் என்றும் சொல்லப்படும். சோளத்திலும் தாள் மூடிக்கொண்டிருக்கும். வாழைக்குலையிலிருந்து தனியாகி அதை மூடிக்கொண்டிருப்பது தாள் ஆகும்.

சொல் : தள்ளுதல் .
தள் (அடிச்சொல்).   > தள்ளு.  (உகரச் சாரியை).
தள்ளுதல் ‍ :  தள் என்பதினின்று தோன்றிய வினைச்சொல்.   தல்: விகுதி.
தள் > தள்ளல்.  ( அல் விகுதி).

தள் > தாள். ( ஓர் இடத்தினின்றும்  தள்ளப்படுவது.  என்றால் வெளிப்பட்டு நீண்டு வளர்ந்தது என்று பொருள் ).

தொடையினின்று நீண்டு சென்று இறுதியில் வெளித்தள்ளியது  தாள்.
தள்> தாள்.  கணுக்காலுக்குக் கீழுள்ள உறுப்பு,

தள் > தள்ளை:  தாய்.  வளர்ச்சி பெற்ற கருவை வெளித்தள்ளும் தாய்.
வெளித்தள்ளுதலே இதில் மூலக்கருத்து.

தள் > தாள் > தாளம்.

உடலில் ஏற்பட்டு உணரப்படும்  இசையசைவு, கால் (தாள்) மூலமோ. கைகள் மூலமோ வெளித்தள்ளப்படுகின்றது.  அளவசைவுக்கு ஏற்ப கையோ காலோ மற்றொரு பொருளில் மோதித்  தாளம் உண்டாகிறது.  மோதுதல் here means coming in contact. Not necessarily a violent contact or collision. Please note to understand.
தாள்கள் தரையில் மோதுவதும் விரல்கள் மதங்கத்தின்மேல்  (மிருதங்கம்) மோதுவதும் தாளம் என்ப்படுகிறது.

மோதுதலே தட்டுதல்.

தள் + து = தட்டு > தட்டுதல்.  இது தள் என்பதில் தோன்றிய இன்னொரு வினைச்சொல். தள் என்பது வினையும் பெயரும் ஆகும். ஆனால் கால நீட்டத்தினால் (தொன்மையினால்)  அது இன்று தன்
வினைச் செய்கையையும் பெயர்ச் செய்கையையும் (functions ) வெளிப்படுத்தவில்லை.

யாப்பியலில் வரும் தளை என்பதும் தள் என்பதன் விரிவுப்பொருளே. இதைப் பின் காண்போம் .

யாம் சொல்ல விழைந்தது தளம் என்ற சொல்.

தள் > தளம்.  (அம் விகுதி).
தள் > தாள் > தாள்+ அம் = தளம். ( தா  என்ற முதல் எழுத்து  "த "  என்று குறிலானது .)

இரு வழிகளிலும் இதை விளக்கலாம். தள் என்ற அடிச்சொல்லுக்கே சென்று அம் விகுதி சேர்த்துத் தளம் என்பதை அறியலாம். சாவு+அம் = சவம் என்று குறுகியதுபோல், தாள்> தள்  = தள் + அம் > தளம் என்றும்
காணலாம். பல சொற்கள், அதிலும் அடிச்சொற்கள், தேவைக்கேற்ப‌
குறுகுதலும் நீளலும் இயல்பு ஆகும்.

ஒரு பெரும்படை தளம் அமைத்துக்கொள்கிறது. பல தளங்களையும்
அமைத்துக்கொள்கிறது. இது / இவை, படை அமைப்பின் வெளித்தள்ளுதல்கள், அல்லது வெளிப்பாடுகள். படையின் வளர்ச்சி காலில் வெளிப்பட்ட தாள் போன்ற வெளிப்பாடு.   மிக்கப் பொருத்தமான சொல். இதைவிடப் பொருத்தமான ஒன்றை இப்போது நீங்கள் அமைத்துப் பார்த்து வெற்றிகண்டால், அது சரியில்லை என்று சொல்லும் தகுதி உங்களுக்கு உண்டாகிவிடலாம்.  தாள் என்பது  base (பேஸ்) என்பதால், தளம் பேஸ் ஆகிவிடுவது கன பொருத்தம் .பேஸ்   base =  அடியாகும்.

தளத்தில் பதிந்துகொண்டு, பொதிந்துகொண்டு, உள்ளிருந்துகொண்டு,
நடவடிக்கைகளைச் செலுத்துபவன் தளபதி.  அவன் செலுத்திய அதிகாரச் செயல்களின் தாக்கத்தால், பதி என்பதற்கு அதிகாரப் பொருளடைவு உண்டாயிற்று என்று அறிக.

ஒரு படைத்தளம் ஒரு பெருங் கட்டிடக்  கோவை  (building complex location) யாகவும் இருக்கலாம் .  கூடாரங்களாகவும் இருக்கலாம்;  திறந்த வெளியாகவும் இருக்கலாம்.  படை மறவர் அங்கிருப்பது கொண்டே அது தளம் ஆகிறது.

பத்துத் தளங்கள் கொண்ட படைப்  பெரியோன் இராவணன்.  தளம்  தலம்  ஆகி தலம்  தலையாகி  கற்பனைவாதி  அதைப்  பத்துத்தலை இராவணன்  ஆக்கிவிட்டான்.

இராவணன் பற்றுதல் -  பெண் பற்றுதல் உடைய தலை (மண்டை) உடையவன் பற்று > பத்து.   பத்துத் தலை  என்று  இரு பொருள்..

பற்றுதல் > பற்றுதலை > பத்துதலை (பேச்சுவழக்கு) > பத்துத்தலை (திரிபு)> பத்துத்  தலை (பிறழ்பிரிப்பு).

அதாவது பற்றுதலை என்பது பத்துத் தலை ஆகிவிட்டது.

பற்றுதலை என்பது   விடுதலை என்பதுபோன்ற சொல்.  இறுதி தலை என்பது தல் + ஐ.  இரண்டும் விகுதிகள்.  தலை என்ற உறுப்பு அன்று.


தளபதி > தள்பதி > தள்பத்  (பின்னவை வெளித்திரிபுகள் )

LAST EDITED ON 9 OCT 2017.









சனி, 26 நவம்பர், 2016

வழிப்பறிக் கீழ்மகன் உலவுகிறான்

வழிப்பறிக் கீழ்மகன் உலவுகிறான்
மடியில் விலைப்பொருள் சுமைவிலக்கி
உழைப்பினில் கைவரு பொன்னணிகள்
ஒன்றையும் உடன்கொடு நடைத‌விர்ப்பாய்
விழிப்புடன் ஜொகுர்நகர் க‌டந்துசெல்வாய்
இழப்புகள் இலாத பிழைப்புறுவாய்
அழைப்புடன் நிற்பவன் எவனவனோ
அவன்நாம் கலங்கிடும் கள்வனல்லோ 


தொழில்தனைச் செய்பெறும் ஊதியத்தில்
தோல்வியில் லாதொரு தூய்மையிலே
எழில்பெற இப்புவி வாழ்கவெனும்
ஏற்புறு கொள்கையும் வீழ்படுமோ
விழிதரும் ஒளியினி ஒழிவுறுமோ
வீண்மகார் பல்கிடும் உலகிதிலே
கழிநிலைச் செய்கையர் பொழுதிதுவோ
கண்கெடு நடபடி விழுதிடுமோ

வெள்ளி, 25 நவம்பர், 2016

நடு ( நடுதல் ) நட ( நடத்தல்)

 நடு ( நடுதல் )  நட ( நடத்தல்).

மரம் நடுதல், செடி நடுதல், நாற்று நடுதல். இச் சொல்வழக்குகளிலெல்லாம் நடுதல் என்பது மண்ணில் ஊன்றுதல் என்று
பொருள் தருகிறது. நட்டபின் செடி முதலியவை அங்கிருந்து அசைவதில்லை. அப்படியே வளர்கின்றன அல்லது வளராது அழிகின்றன.

மனிதன் மற்றும் விலங்குகள் காலைத் தரையில் ஊன்றி நிற்பதும் நடுதல்
போன்றதே.  வேறுபாடு யாதென்றால், காலை மண்ணில் புதைப்பதில்லை.  நட்டு இருக்கும் இடத்திலிருந்து மனிதன், விலங்குகள் அசைகின்றன.
இப்படி அசைகின்ற நிலைக்கு நடு என்ற சொல் போதவில்லை, அல்லது
அசைவுக் கருத்தைத் தெளிவாகக் காட்டவில்லை.


ஆகவே நட்ட ( நின்ற) இடத்திலிருந்து அப்பால் அசைவைக் குறிக்க‌
நட என்ற சொல் பிறந்தது.   இது நடு_+ அ, காலை நடு, நட்டு அங்கு
போ. ஆகவே நட ஆயிற்று.

நடு என்ற சொல்லினின்று நட என்பதைப் பிறப்பிக்க, அ என்ற சுட்டு
சென்று இணைந்து பயன்பட்டது காணலாம். இயங்கு என்பதில் இ (இங்கு) +  அ (அங்கு)  + கு (வினையாக விகுதி).= இயங்கு ,இதுபோலவே   நடு + அ (அங்கு) >  நட ஆனது.


எனினும் நடிப்பவன் ஓரிடத்திலிருந்து நடிக்கும்போது இன்னொரு திசை
நோக்கிச் செல்லாமல், குறிப்பிட்ட இடத்தினுள்ளேயே அவன் வேலையைச் செய்கிறான். அவனைப் பார்ப்பவர்கள் (இரசிப்போர்) எங்கு
இருந்து அவனைக் காண்கிறார்களோ, அவன் அங்கேயே தன் அசைவுகளைக் காட்டவேண்டுமே. தெருவில் நடித்துக்கொண்டிருந்தால்
வயலுக்கு ஓடிவிட முடியுமா என்ன? அவன் நிலை ஒரு கட்டுறுத்திய‌
நிலை.  எனவே, நடு ( காலூன்றிய நிலையில் )  + இ (இங்கேயே) = நடி (செய்வது செய்) என்று சொல் அமைந்தது காண்க.  இ என்பது ஒரு
சுட்டுச் சொல் தான்.(பொருள் ஏற்படும்போது ஓர் எழுத்தும் சொல்லாகிவிடும்.)

இதன்மூலம் நடி என்பது நடு + இ என்று இணைப்பில் பிறந்த சொல் என்பதை நன்குணரலாம்.

சந்திப்போம் .



வியாழன், 24 நவம்பர், 2016

வாண்டாய் இருக்கையில்

வாண்டாய்  இருக்கையில் வண்டிச் செலவாசை
தூண்டா  நிலையிலும் துள்ளிக் குதித்தோடி
வேண்டாத வீணனுடன் வேறுபடா தோடியே
மாண்டாட் கிரங்கு மனம் .

(இது  மகிழுந்தில் பயணிக்கும் ஆசையினால் முன்பின் அறியாதவன்
 அழைக்க அவனுடன் சென்று  ;அவனால் கற்பழித்துக் கொல்லப்பட்ட ஒரு சிறுமியின் துன்பக்கதை. உலகம் பொல்லாதது.  இப்படி எத்தனை நிகழ்வுகளோ)

வேண்டாத வீணனுடன் வேறுபடா தோடியே:

ஒவ்வொரு சீரிலும் நெடிலில் தொடங்கும்படி தொடுத்ததனால் இது நெடில் வண்ணம். தொல்காப்பியர் காலத்தில் வண்ணங்கள் இருபது. "வண்ணம்  தானே நாலைந்தென்ப "  என்பார்   அவர். பிற்காலத்தில் இவை பெருகின.


நாடறிந்த யமனிவனை.....

பொசுக்கென்று போனதுயிர் என்று சொல்வாய்;
போனதற்கோர் காரணமும் கண்டு சொல்வாய்;
கொசுக்கடியோ கேட்டறியத்  தப்பொன் றில்லை;
கூடிவரும் இமைகளுக்குக்  கேடே  செய்ய
விசுக்கென்று பறந்துவந்து விங்ஙீ   என்று
விரைந்தொலியோ டகல்கின்ற கூர்த்த பல்லன்
நசுக்கடியாய் இயலாதே கொல்வ தற்கும்
நாடறிந்த யமனிவனைக் கட்டுள் வையே.

புதன், 23 நவம்பர், 2016

நல்லறி வுடையோர் வறுமை

வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியொடு
கொடிநுடங்கு மிசைய தேரினர் எனாஅக்,
கடல்கண் டன்ன ஒண்படைத் தானையொடு
மலைமாறு மலைக்குங் களிற்றினர் எனாஅ,
உரும்உடன் றன்ன உட்குவரு முரசமொடு
செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ,
மண்கெழு தானை, ஒண்பூண் வேந்தர்
வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே;
எம்மால் வியக்கப் படூஉ மோரே,
இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த
குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு,
புன்புல வரகின் சொன்றியொடு, பெறூஉம்,
சீறூர் மன்னர் ஆயினும், எம்வயின்
பாடறிந்து ஒழுகும் பண்பி னோரே;
மிகப்பேர் எவ்வம் உறினும், எனைத்தும் 
உணர்ச்சி யில்லோர் உடைமை யுள்ளேம்;  
நல்லறி வுடையோர் நல்குரவு
உள்ளுதும், பெரும! யாம், உவந்து நனி பெரிதே!

புறநானூறு 197, கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்  பாடியது து:(   சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனை), : பாடாண்திணை, : பரிசில் கடாநிலைத்துறை

பாடலின் பொருளைப் புரிந்துகொள்வோம்.

இவுளியொடு  ~ குதிரைகளுடன்;
வளி நடந்தன்ன வாஅய்ச் செலல்  - வீசும் கற்றினைப் போல் விரைந்து வழிச் செல்லுகின்ற;
கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅ    ~    கொடிகள்  மேலே ஆடிப் பறக்கும்  தேருடைய அரசர்கள்  என்றாலும்;
கடல் கண்டன்ன ஒண் படைத் தானையொடு  கடலைப் போன்ற தோற்றம் தருகின்ற ஒளி வீசும் படைக்கருவிகளையுடைய்  படையுடன்;
மலைமாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ -   மலையை எதிர்க்கும் மலைபோன்ற  யானைகளை உடையோர் என்றாலும்; 
உரும் உடன்றன்ன உட்குவரு முரசமொடு        ` யாரும் அஞ்சுகின்ற இடிபோலும் போரிடும் பேரொலியைக் கிளப்புகின்ற  முரசுகளுடன்;  (உரும் ~ எண்ணத் தோன்றுகிற )
செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ  ~  படைத்திறன் காட்டும் வெற்றியுடையார்   என்றாலும்; 
மண் கெழு தானை ஒண் பூண் வேந்தர் வெண் குடைச் செல்வம் வியத்தலோ இலமே  ~     மண்ணாள்கின்ற படையுடைய அணிகள் பூட்டிய முடியரசரர்களின் வெண்கொற்றக் குடை காட்டும் செல்வச் செழிப்பினைக் கண்ணுற்று மலைத்து நிற்றலோ அது நம்மிடம் இல்லையே!
எம்மால் வியக்கப் படூஉ மோரே  -  அப்படியானால் யாங்கள் யாரைக் கண்டுதான் அசந்துபோவோம் என்று கேட்கிறீர்களா?   அது: 
 எம் வயின் பாடறிந்து ஒழுகும் பண்பினோரே  ~  எங்கள் வாழ்வின் உறுபவைகளை அறிந்து ஏற்றபடி எங்களைப் போற்றிக்கொள்ளும்  பெற்றியுடையாரையே யாங்கள் கண்டு மலைத்துப் போற்றி உயர்த்தி எண்ணி நிற்போம்;    அவர்கள்: -
இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த குறு நறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்று அடகு  ~ முள் அகற்றாது விடப்பட்ட  பின் தோட்டத்தில் செம்மறி ஆடு மேய்ந்து  மிஞ்சிக் கிடக்கும் வளமான  பறித்த இலைகள் ;
புன்புல வரகின் சொன்றியொடு பெறூஉம்  - புன்செய் நிலத்து வரகு  உணவோடு  கிட்டுகின்ற
சீறூர் மன்னர் ஆயினும்  -  ஒரு சிற்றூரின் ஆட்சியாளர் ஆனாலும்;
மிகப் பேர் எவ்வம் உறினும் எனைத்தும் உணர்ச்சியில்லோர் உடைமை உள்ளேம்  -  எத்துணை துன்பம் வந்தாலும் எம் பால் பற்றுணர்ச்சி இல்லாதவரின் பொருளை எண்ணிப்போகமாட்டோம்

நல்லறி வுடையோர் நல்குரவு உள்ளுதும், பெரும! யாம், உவந்து நனி பெரிதே!  ~  இதனை, பெரும யாம்  நல்லறிவு உடையோர் நல்குரவு நனி பெரிதே! உவந்து உள்ளுதும் ,என்று மாற்றிக்கொள்க.


பரிசில் = மன்னன் புலவர்க்கு அளிக்கும் கொடை.  அது கிட்டாத நிலையைப் பாடியதனால் பரிசில் கடாநிலை. கொடை மன்னனைக் கடந்து புலவர் கைக்கு வரவேண்டும்.  அது அங்ஙனம் கடந்து வாராத நிலையே  பரிசில் கடாநிலை என்னும் புறப்பொருள் துறை ஆகும்..
blocked by error ,messages.  will return after repair.

A stanza from Puram on pulavar vaRumai.

வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியொடு
கொடிநுடங்கு மிசைய தேரினர் எனாஅக்,
கடல்கண் டன்ன ஒண்படைத் தானையொடு
மலைமாறு மலைக்குங் களிற்றினர் எனாஅ,
உரும்உடன் றன்ன உட்குவரு முரசமொடு
செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ,
மண்கெழு தானை, ஒண்பூண் வேந்தர்
வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே;
எம்மால் வியக்கப் படூஉ மோரே,
இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த
குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு,
புன்புல வரகின் சொன்றியொடு, பெறூஉம்,
சீறூர் மன்னர் ஆயினும், எம்வயின்
பாடறிந்து ஒழுகும் பண்பி னோரே;
மிகப்பேர் எவ்வம் உறினும், எனைத்தும்வறுமை 
உணர்ச்சி யில்லோர் உடைமை யுள்ளேம்;
நல்லறி வுடையோர் நல்குரவு
உள்ளுதும், பெரும! யாம், உவந்து நனி பெரிதே!

புறநானூறு 197,  கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்  பாடியது.
திணை: பாடாண், துறை: பரிசில் கடாநிலை

 சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனைப்  பாடியது

 

இவுளியொடு  ~ குதிரைகளுடன்;
வளி நடந்தன்ன வாஅய்ச் செலல்  - வீசும் கற்றினைப் போல் விரைந்து வழிச் செல்லுகின்ற;
கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅ    ~    கொடிகள்  மேலே ஆடிப் பறக்கும்  தேருடைய அரசர்கள்  என்றாலும்;
கடல் கண்டன்ன ஒண் படைத் தானையொடு  கடலைப் போன்ற தோற்றம் தருகின்ற ஒளி வீசும் படைக்கருவிகளையுடைய் படையுடன்;
மலைமாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ -   மலையை எதிர்க்கும் மலைபோன்ற  யானைகளை உடையோர் என்றாலும்; 
உரும் உடன்றன்ன உட்குவரு முரசமொடு        ` யாரும் அஞ்சுகின்ற இடிபோலும் போரிடும் பேரொலியைக் கிளப்புகின்ற  முரசுகளுடன்;  (உரும் ~ எண்ணத் தோன்றுகிற )
செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ  ~  படைத்திறன் காட்டும் வெற்றியுடையார்   என்றாலும்; 
மண் கெழு தானை ஒண் பூண் வேந்தர் வெண் குடைச் செல்வம் வியத்தலோ இலமே  ~     மண்ணாள்கின்ற படையுடைய அணிகள் பூட்டிய முடியரசரர்களின் வெண்கொற்றக் குடை காட்டும் செல்வச் செழிப்பினைக் கண்ணுற்று மலைத்து நிற்றலோ அது நம்மிடம் இல்லையே!
எம்மால் வியக்கப் படூஉ மோரே  -  அப்படியானால் யாங்கள் யாரைக் கண்டுதான் அசந்துபோவோம் என்று கேட்கிறீர்களா?   அது: 
 எம் வயின் பாடறிந்து ஒழுகும் பண்பினோரே  ~  எங்கள் வாழ்வின் உறுபவைகளை அறிந்து ஏற்றபடி எங்களைப் போற்றிக்கொள்ளும்  பெற்றியுடையாரையே யாங்கள் கண்டு மலைத்துப் போற்றி உயர்த்தி எண்ணி நிற்போம்;    அவர்கள்: -
இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த குறு நறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்று அடகு  ~ முள் அகற்றாது விடப்பட்ட  பின் தோட்டத்தில் செம்மறி ஆடு மேய்ந்து  மிஞ்சிக் கிடக்கும் வளமான  பறித்த இலைகள் ;
புன்புல வரகின் சொன்றியொடு பெறூஉம்  - புன்செய் நிலத்து வரகு  உணவோடு  கிட்டுகின்ற
சீறூர் மன்னர் ஆயினும்  -  ஒரு சிற்றூரின் ஆட்சியாளர் ஆனாலும்;
மிகப் பேர் எவ்வம் உறினும் எனைத்தும் உணர்ச்சியில்லோர் உடைமை உள்ளேம்  -  எத்துணை துன்பம் வந்தாலும் எம் பால் பற்றுணர்ச்சி இல்லாதவரின் பொருளை எண்ணிப்போகமாட்டோம்.
blocked by error ,messages.  will return after repair.

ஞாயிறு, 20 நவம்பர், 2016

நடப்பு , நிற்பு நிபுணத்துவம்

சில வேளைகளில்  சில காரியங்கள் நடக்கின்றன.  வேறு சில  வேளைகளில் அக்காரியங்கள் நிற்கின்றன. காரியங்கள் நடக்குங்கால் அவற்றை நடப்புகள்  என்கிறோம்.  அவை நிற்குங்கால் அவற்றை நிலை ,நிலைமை என்று குறிக்கிறோம்.  நாய், பூனை  மனிதன் ஏனை விலங்குகள் நடத்தலும் நிற்றலும் போல் காரியங்களும் நடக்கவும் நிற்கவும் செய்கின்றன . நடக்குங்கால்  நிற்குங்கால் என்று எழுதும்போதே காரியங்களுக்கும் கால் முளைத்து விட்டனவோ என்று எண்ணத்தோன்றுகிறது. (  கால் =  காலம் )  .ஆனால் எல்லா மொழிகளிலும் இதுபோன்ற சொற் பயன்பாடுகளும்  சொல்லாக்கங்களும் உள்ளன.  Situation  என்ற சொல்லைக் கேட்கும்போது காரியங்கள் உட்காருவதும் உண்டுபோலும்  என்று எண்ணத்  தோன்றுகிறதா ?   ஆனால் situare என்ற இலத்தீன்  சொல்  ஓரிடத்தில்  வைத்தல் , இடுதல் என்ற பொருளில்  situation என்ற சொல்லைப் பிறப்பித்தது.  Status என்பது  நிற்பது  stare  என்பதிலிருந்து வருவதால் அதை நிலை , நிலைமை என்று மொழி பெயர்த்தால் சொல் அமைப்புப்படி சரியாக இருக்கும் என்றாலும்  பொருந்துவதாகவும்  இருக்கவேண்டும். . Legal standing, standing in society  ஆகிய வழக்குகளிலிருந்து  என்ன உணர்கிறோம்.?

மலாய் மொழியில் நிலைமையைக் குறிக்க keadadaan என்பது வழங்குகிறது.ada
என்பது  இரு(த்தல்)  என்று பொருள்படும்.  keadadaan இருப்பு  என்பது சொல்லமைப்புப் பொருள் எனினும் அதை நிலை என்றே கூறவேண்டும்.
நிலைமை என்பதைக் குறிக்க பல சொற்களைச்  சீன  மொழி கையாளுகிறது. அவற்றுள்  இருக்கை  seat  场所 [chǎngsuǒ] {noun} என்பதும் ஒன்றாகும்.

நடப்பும்  நிலையும் தொடர்பு உள்ளவை.  இளைஞன்  ஒருவன் உவதி (யுவதி)(உவப்புத்  தருபவள் )  ஒருத்தியைக்  காதலிக்கும்போது  அது நடப்பு. காதல் மாறாமல் இருந்தால் அது நிலை அல்லது நிலைமை ஆகிவிடுகிறது.   மேலும் ஒரு மாற்றம் அடையாமல் காதல் நிற்கிறது.  நட  > நடப்பு.   நில் > நிலை.  நிலை + மை = நிலைமை.   நிலமை என்று பேச்சில் வந்தாலும் அதைப்  பிழை என்பார் தமிழாசிரியர்.  கவிதையில் ஏற்ற இடத்தில் எதுகை நோக்கி ஐகாரக் குறுக்கமாகக் கையாளலாம் என்றாலும் அது கவிஞன்  தீர்மானிப்பது.

நடப்பு, நிலை ,நிலைமை  என்பவற்றை  நடப்பு , நிற்பு  என்றும் சொல்லலாம்.
ஆனால் நிலை, நிலைமை  என்பவற்றை நிற்பு  எனல்  பேச்சு வழக்கில் இல்லை.  என்றாலும்  நிலை என்பது நிற்பு  என்பதே ஆகும்.

இனி நிபுணன் என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.    நிற்பு  எனற்பாலது
நிபு  என்று இடைக்குறைந்து இயலும்.   நிபு உணர்ந்தவரே  நிபுணர்.
நிபு + உணர் .  நிலை உணர்ந்தோர்.   உணர்வு குறித்த இச்சொல் அவ்வுணர்வு உடையோனைக்  குறித்தல்  ஆகுபெயர்.  நிபுணர் என்பதே  அர்  என்று முடிந்ததனால் அதன்மேல் இன்னோர்  -அர்  புணர்த்தப் படவில்லை.  அர்  இன்றியே  அர்  உள்ளதுபோல் இயன்று பணிவுப் பன்மைபோல்  பேச்சில்
வழங்கியது.

அதுபின்  நிபுண என்று செதுக்கப் பட்டு,  நிபுணன், நிபுணர்  என்று ஒருமை பன்மையாய்  இயன்றமை  உணர்க. நிற்பு  உணர்ந்தோனே நிபுணன்  ஆவான்.  நிபுண + அத்து + அம்  =  நிபுணத்துவம்.

 செந்தமிழ் இயற்கை கெடாமல் வரவேண்டின் நிற்புணர்நன் > நிபுணர்நன் என்று வந்திருக்கலாம்.  அப்படி வந்தாலும்  நாளடைவில்  ர், ந  என்ற அடர்வுகள்  தொலைந்து  நிபுணன் என்றே  திரிந்திருக்கும் .ர் , ந   தங்கி  ஆகப்போவது ஒன்றுமில்லை. சொல்லொழுக்குத் தடையே மிஞ்சும் .

சிலர்  நி + புண்  என்று பிரித்து,  பொருள் கூறுவர் . எனின்  புண் என்பது புண்ணியம் என்பதன் பகுதி.. மேலும் புண் எனற்பாலது  புள் என்பதன் திரிபு. புள்ளியம்  என்பதே புண்ணியம் என்று திரிந்தது. Something that is capable of
good points. இதிலும் நி  என்பது நில்  என்பதன் கடைக்குறைதான் . ஒரு நிபுணனுக்குப் புள்ளி கொடுப்பான் அவனினும் பெரியவன்  ஆதல்வேண்டும்.
சிலர் இதை விரும்பலாம் . எனினும் புண்ணியத்திற்குப் புள்ளி கொடுப்பான்
இறைவன் . நிபுணனுக்கு ?
புள்ளி கொடுப்போனே நிபுணன் ! பெறுவோன்  அல்லன் எனல் கூடும் .

நிபுணர் பலராதலும் உலகில் உண்டு.
  







சனி, 19 நவம்பர், 2016

செல் > ஜென்

நாமிருக்கும் இப் பூமியில் பிறந்தவுடன் இறந்துவிட்டால்  எடுத்த சென்மத்துக்கு ஒரு பொருளில்லாமல் போகிறது. நிறை அகவையுடன் வாழ்ந்து இருந்தாலே அது ஒரு சென்மம் என்று  சிறப்பிக்கப் படும். ஆகவே
இது ஒரு பயணம்  ஒரு செலவு  ஆகும். இறுதியில்  சென்றுவிடுகிறோம் .

ஆகவே  செல்லும் அம் > செல்லுமம் >  செல்மம்  >  சென்மம்  ஆகும்.

சென்மங்கள்  மாறி மாறி  வரும். இது இந்து மதத்தின் கொள்கை .நம்பாதவர் என்றால்  அவர் இறப்பில் முடிந்துபோகிறார்  அல்லது அப்படி நினைக்கிறார்.
ஒரு சென்மம் முடிந்து மறு  சென்மம் தொடங்குமுன்  அம்மாவின் கருப்பத் துள்    சென்று உயிர் புக்கு நிற்கிறது. புக்கு  =  புகுந்து .. கருவினுள் செல்வதாலும்  அது சென்மம்  ஆகிறது.

ஆகவே  ஆதிக்கருத்து  செல் என்பதே  ஆகும்.

செல் என்பதே  செ  > ஜ (ஜா ) என்று  ஏனை மொழிகளில் திரிந்தது.

இந்தோ ஐரோப்பியத்தில்  ஜென்  என்றே  இச்சொல் ஒலிக்கிறது

செல் >  ஜென் .   லகர னகரப்  போலி.

எல்லா வகையிலும் பொருத்தமான அடிச்சொல்  செல் என்பதே.

சினை  என்ற சொல்லும்  ஆய்விற்குரியது ஆகும் .

மாமாதா

அம்மா + அம்மா  +  ஆத்தா
இதில் இறுதியில் உள்ள பாகத்தை மட்டும் அதாவது வால்களை மட்டும் எடுத்துக்கொள்ளவும்
மா + மா + தா
= மாமாதா.
இதைச் சுருக்கவும்
மம்தா

சொல்லமைப்பு: மகத்தான

மகன் என்ற சொல்லைப் பிரித்தால் மக+ அன் = மகன்  என்று அறியலாம்.  இச்சொல்லில் மக என்பதே பகுதி.  அன் என்பது
இறுதிநிலை அல்லது விகுதி. விகுதி என்ற சொல் மிகுதி என்பதன்
திரிபு ஆகும். ம‍~வ போலி. மக என்பதே சொல். அது  மிகுந்து  ( விகுதி பெற்று நீண்டு ) மகன்,மகள், மக்கள், மகார்,  என்றெல்லாம் வந்தன.

விகுதி என்பது விகுருதி அல்லது விக்ருதி என்ற  அயற் சொல்லுடன் ஓலியொப்புமை  உள்ளதாகும். அச்சொல் மாற்றம் என்று பொருட்படும் .

ஆனால் விகுதி  சேர்வதால் பகுதி  வேறொரு சொல் ஆவதில்லை. இவ்விகுதியும்  பகுதியில் தோன்றுவதில்லை. பொருள் வேறு பட்டது கா3ட்ட
இணைக்கப் படுவதே.  மகன் என்பதில் வரும்  ஆண் பால்  அன்   அகற்றப் பட்டுப்  பெண்பால் காட்ட  அள் புணர்த்தப் படுகிறது.     பகுதி  மக  என்பதுதான்.

மேலும் மகவு, மகவான் (பிள்ளைகுட்டிக் காரன் ) மகவாட்டி  (பிள்ளை குட்டிக் காரி ), மகப்பேறு,  மகம்> மிருகம்,  மகவின்கோள்,    முதலிய சொற்களுமுள.

மக என்பது அங்குதான் உள்ளது. மகள் எனப் பெண்ணை உணர்த்துகையில்  அள் என்ற விகுதி இணைந்து சொல் வேறுபடுகிறது. அள் என்பது அவள் என்பதன் சுருக்கமாகக் கருதினும் பிழையில்லை. குகைமாந்தர் காலத்தில் அ = அந்த என்றும் ள் = பெண் என்றும் பொருள்பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் மொழியை நாம் அறிய வாய்ப்பில்லை. அ = அந்த;  வ்= உடம்படுமெய். அ= அந்த.(இரண்டாவது முறையாகச் சுட்டுச் சொல் வந்தது). ள் ‍= பெண்.
அ+ வ்+ அ+ ள் = அவள். சுட்டு இருமுறை வருவது தேவை இல்லை என்று குகைக்குப் போய் அந்த முந்தியல் மாந்தனிடம் சொல்லுங்கள்.
இலக்கணம் வந்தது பண்பாடு அடைந்தபின்.

இராசராச சோழனின் ஆட்சியின் பிற்பகுதியில் அவன் மகன் இராசேந்திர சோழன் படைநடாத்தினான். மகனும் தானுமாய்ப் போர்க்களங்களில் வெற்றியை ஈட்டினர். அதனால் அவன் மகத்தான மன்னன் ஆனான். மக  எனின் மகன்; தான = தான் பிறவும் உடையோன். இதில் பிற ஆவன படைகள். இது மகத்தான = பெரிய என்ற பொருளையும் தழுவி நின்றது
காண்க.

மோடி தானும் தம் அமைச்சர்களும் ( அவர் வழிகாட்டுதலில் நடக்கும் அமைச்சர்கள் )  இணைந்து செயல்படுதலால் மகத்தான என்ற வரணனைக்குப் பொருத்தமானவராகிறார். அமைச்சர்கள் மக போன்றோரே.


வெள்ளி, 18 நவம்பர், 2016

மகத்தான அரசியல் வீரர் மோடி

மோடி என்பவர்.  இந்தியாவின் தலைமை அமைச்சர்.  ஆனால் நான் இந்தியாவில் இல்லை.  ஆனால் அவர் செய்வது என்னையும் பாதித்துவிட்டது. நான் வைத்திருந்த ரூபாய் நோட்டுகள்  செல்லாமல் போய்விட்டன. முறைப்படி பார்த்தால்  எனக்கு அவர்மேல் கோபம் வந்திருக்க வேண்டும்.  அப்படி இருக்க அவரை மகத்தான வீரர் என்று நான் புகழ்வேனா ?

பாக்கிஸ்தானி டம்  பழைய இந்திய ரூபாய் நோட்டுகள் மட்டும் 500 கோடி உள்ளன என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.   இவை எல்லாம் நல்ல நோட்டுகள் என்று நாம் நினைக்க முடியாது.  அதேசமயம் அவர்கள்
அச்சடித்து வைத்திருக்கும் கள்ள நோட்டுகள் எவ்வளவு என்று முன்வந்த
செய்திகள் கூறின.  எல்லாம் கோடிக்கணக்கில் இருக்கலாம் ,  எல்லாம் பொய்யாகவும் இருக்கலாம்.  பொய்யென்று வைத்துக்கொள்ளுங்கள்.  இந்த  மோடி அறிவிப்புக்குப் பின்  இந்திய பாக்கிஸ்தான் எல்லையில் அமைதி நிலவுகிறது. கடுமையாக ஓடிக்கொண்டிருந்த துப்பாக்கிகளும் சுடும் இயந்திரங்களும் ஓய்ந்துவிட்டன . எதனால் ஓய்ந்தன ? வேறு காரணம் ஏதும்
இல்லாத  அல்லது கூற  முடியாத  போது   தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளே உற்ற காரணமாக இருக்கலாம்.  எல்லாப் புகழும் மோடிக்கே போய்ச்  சேர்கிறது .  இனிப் புதிதாக நடவடிக்கைகளைப்  பாக்கிஸ்தான்  தொடங்கினாலே உண்டு.  அதுவரை போர் ஓய்வைத்  தருகிறது  இது.

அணுவாயுதப் போர்வரை  போகும்படி விரிந்துவிடக் கூடிய  தாய்ப் போருக்கு  ஒரு நிறுத்தம் தந்த மோடி மகத்தான வீரர்.

இனி மகத்தான என்ற சொல்லை ஆய்ந்து அது இங்கு  பொருத்தமா என்று பார்ப்போம்.. அதாவது  தற்குறிக் காரணங்களைக் கைவிட்டு விடாமலே இந்த  ஆய்வினை மேற்கொள்வோம் .

Read also:

http://www.fakingnews.firstpost.com/world/pak-used-100-usd-to-print-a-fake-500-rupee-indian-note-musharraf-172   Gen Musharaff.



https://www.google.com.sg/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=3&cad=rja&uact=8&ved=0ahUKEwjFwaCusLXQAhUGNY8KHRlYCKAQFggpMAI&url=https%3A%2F%2Fwww.quora.com%2FCan-Pakistan-still-print-Indian-currency-after-the-scraping-of-old-currency-notes&usg=AFQjCNGadr85LKYgqrctBNBAzGYNsXUqJQ&sig2=itd2BjvZrXOry3288z9AZg

https://www.google.com.sg/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=2&cad=rja&uact=8&ved=0ahUKEwjFwaCusLXQAhUGNY8KHRlYCKAQFggiMAE&url=http%3A%2F%2Feconomictimes.indiatimes.com%2Fnews%2Fdefence%2Ffake-currency-worth-rs-167-crore-seized-by-government-in-five-years-pakistan-a-big-contributor-to-it%2Farticleshow%2F55355933.cms&usg=AFQjCNEbW8JdKn93T4zc3mbnDZm5OFv91g&sig2=adVxcFlW9NCHYgKD_3ttIg


will  review and edit

ஆசீர்வாதம்

ஆசீர்வாதம் என்ற சொல்லின் தென்றமிழ்ப் பிறப்பை முன் யாம் விவரித்த‌துண்டு.  ஆனாலும் இங்குக் கிடைக்கவில்லை.\

ஆகூழ் போகூழ், மற்றும் ஆகாயம் முதலிய சொற்களிற் போல  ஆ= ஆதல் என்ற முன்னொட்டுப்பெற்ற  சொல் இதுவாகும்.  ஆசீர் என்பது
சீராவது என்று பொருள்தரும்.

வாயில் தோன்றி விரிவது வாதம் ஆகும்.  பின் எழுத்திலும் வாதங்கள் வந்தன. ஆனால்  வாதம் என்று இச்சொல்லின் விதந்து சு ட்டப் படுவது  இருவருக்கு அல்லது அதனின் மேற்பட்ட ந(ண் )பருக்கிடையில் ஏற்படும் சொல்லாடல்  அன்று.   தம் வாயினின்று அல்லது பிறர் வாயினின்று புறப்படும் "சீர்  ஆகுக"  என்னும் வாய்மொழியையே குறிப்பது இது.   ஆ - சீர் - வா- தம்  என்று இயைந்து வந்திருப்பது காண்க. வழக்கில் பொருள் விரியும். 

ஆசீர் என்பது தமிழ் வழக்கே ஆகும். தோன்றியதும் தமிழரிடத்தே.







வியாழன், 17 நவம்பர், 2016

மோகம்

மோகம்  என்பது முன்னர் விரிவாக ஆய்வு செய்யப்பட்ட சொல்லே.
ஆனால் அதற்குரிய பழைய இடுகைகள் இங்குக் கிடைக்கவில்லை.
அவை அழிக்கப்பட்டுள்ளன.


நினைவிலிருந்து மீட்டு எழுதுகிறோம்.

விலங்குகள் மோப்பம் பிடித்தே பாலியல் அணுக்கம் கொள்கின்றன.
யாரும் போய்த் தெரிவிக்காமலே உணர்ந்து நெருங்குகின்றன. ஆகையால்
மோகம் என்ற சொல் மோத்தல் என்ற மோ விலிருந்து பிறந்தது.

மோ+கு+ அம் =  மோகம்.  இங்கு கு என்பது சொல்லாக்க  இடைநிலை.  மோப்பம் என்பதில் மோ+பு+அம் ‍= மோப்பம் என்று பு இடைநிலை ஆனது போல.  இதில் பு இடைநிலை என்னாமல் "விகுதி"   ',இன்னொரு 'விகுதி " என்றும் சொல்லலாம்.

மோகித்தல் என்பதில்  இகரம் இறுதியில் நின்று வினையானது. மோ +கு+ இ = மோகி.   இடை  நின்ற கு=  க் +உ.  .  இதிலுள்ள உகரம்  கெட்டது .  மோ +க் +இ = மோகி .ஆயிற்று.

மோகப் பற்று :  இது பின் மோகபத்  ஆனது.





புதன், 16 நவம்பர், 2016

நாணயச் செல்லொழிப்பு நடவடிக்கைகள்


நாணயச் செல்லொழிப்பு   demonetization .

வெளி நாடொன்றிலிருந்து அச்சடிக்கப்பட்டு இந்தியாவிற்குள் புகுத்தப்பெறும் கள்ளக் காசுத்தாள்கள், ஆண்டுக்கு 70 கோடிக்கு
மேலிருக்கும் என்று வல்லுநர் கூறுகின்றனர். இது தீவிரவாத நடவடிக்கைகட்கும் பிற அரசியல் நடவடிக்கைகட்கும் கூடப் பயன்படுத்தப் படுகின்றன என்று கூறுகிறார்கள்.


இந்திய நாட்டுக்குள் புகும் இந்த காசு, ஏழைகள் பணம்படைத்தோர் என்று வேறுபாடின்றி யாவர் கைகளிலும் தவழ்கின்றன.

இவற்றில் சில தோற்றுருக்களை ( டினோமினேஷன்)  செல்லாதவை
ஆக்கியது மோடி அரசின் திறமைதான்.


ஆயிரம் நூறைந்து நூறென்ப
அடிக்கடி புழங்கிவரு நாணயங்கள்
நோயினைப் போல்முளைத்த தீவிரர்கள்
நோட்டமிட நுழைந்தழிக்கச் சுட்டெரிக்க‌
நேயரைப்  போல்நடித்தும் ஊடுருவி
நெடும்பயன் பெற்றுப்போர் வெற்றிபெற‌
ஓய்விலா தச்சடித்து வெளியிட்டார்
உழலுமோர் இந்தியர்க்குள் புகுத்திவிட்டார்.


கலந்துறை காசுப்பொய் உருக்களையே
கட்சிகள் கலைத்துறையார் நாட்டினரும்
விரைந்தணைத் தவராகப் பயன்படுத்தி
வேண்டிய நலம்பலவும் கொண்டனரோ
விளங்குதல் இலரதனில் வீழ்ந்தனரோ
வினைவகை அறிந்திலாத சூழ்நிலையே
நிலங்கவர் நினைப்புடைய தீவிரர்க்கு
நேர்விடுத் தவர்பாணம்  மோடியவர்.

எளிதலாப் பெரும்போரே தலையமைச்சர்
ஈடுற‌  லானாரே என்றுசொல்வோம்!
ஒளிவிலா வெளிப்படையில் திட்டமிட்டால்
ஒருதுளி  கரும்பணத்தில் கைவாராதே!
நெளிசுளி வெல்லாமும் நெட்டுணர்ந்தார்
நின்றவ ரோடுழைக்கக் காசகத்தார்
அளியரே  இயலாமல் தவித்திடவும்
அவண்பணம் எடுப்பார்தத் தளிப்பவரே

எதுயாது நிகழ்ந்துருவே எட்டினாலும்
இதுநிகர் நடவடிக்கை துணிச்சலாகும்;
மெதுவாய்ச் சிந்தித்துத் திட்டமிட்டு
மேற்செல  உரிதருணம் அன்றிதுவே.
புதிதாய் முதன்முதலில் இதுசெய்தார்
புனிதர் மோடியிவர் வாழ்கவாழ்க.
விதியாய் நாமுறுமோர் தீவிரமே
வீழ்ந்திட எவ்விலையும் நல்விலையே.

(அறு  சீர்  கழிநெடிலடி  ஆசிரிய விருத்தம் .  ஈரசை ~  மூவசை - மூவசை  என்று  வரத்  தொடுத்தது,  சிலவிடத்தில் அசைகள்  மிக்குவர விடப்பட்டது.
ஒருபோன்மை  monotony தவிர்த்தல் நோக்கமாகும் .)










திங்கள், 14 நவம்பர், 2016

ஊழல் உளை

ஊழல் உளைக்குள் ஆழப் பதிந்தன‌
உழலும் நாடுகள் உலகிற் பலவாம்
ஆழப் பதிந்தபின் வீழலும் அழிவும்
ஈழைப் படுதலும் இயல்பே ஆகும்;
மீண்டு மேல்வர ஈண்டி முயல்வன‌
ஈண்டு பலவே; இரும்பெரு வேர்விரல்
நோண்டிப் பெயர்த்தல் நொய்ம்மைப் பயனே;
முயலும் காலையும் முட்டுக் கட்டைகள்
அயலும் உள்ளும் மிகலே இயல்பே;
முயலும் நல்லரை நிலைபெயர்த் தெறிதல்
இயலும் எல்லா நாட்டிலும் காணீர்;
எனினும் ஊழற்கு இயையார்
நனிநின்று தாங்குதல் நானிலம் போற்றுமே.


உளை  -  சேறு .
பதிந்தன - பதிந்து.  (முற்றெச்சம்)
ஈழை  -  இழிவு .
ஈண்டி  -  மிகவும் 
இரும்பெரு  -  மிகப் பெரிய .
மிகலே  -  அதிகம் ஆகுதலே
நல்லரை -  நல்லவரை .

சனி, 12 நவம்பர், 2016

கமல், கமலா.



நீரால் தான் இருக்கும் காலத்தில் கழுவித் தூய்மையாகத் தன்னை  வைத்துக்கொள்ளும் மலர் கழுநீர்மலர்.   சிவப்பானது
செங்கழுநீர்மலர். இடையில் சில எழுத்துக்களை நீக்கிவிட்டால்
செங் ~ க ~ மல  (செங்கமல)  ஆகிவிடுகிறது.  இது ஒரு சொற்சுருக்கம்.  நாளடைவில் தனிச்சொல்லாக ஏற்றம்பெற்று
உலாவரலாயிற்று. பல ஆண்டுகட்குமுன் யாம் இதை எழுதியிருந்தோம்.
அது இங்கு உள்ளதா என்று தெரியவில்லை. தமிழில் சுருக்கச் சொற்கள்
பல. இதுவும் அவற்றுள் ஒன்று. தெரியாதவன் இது தமிழ் அன்று என்று
வாதாடுவான்.

கழுநீர்மலர் >  கழுமலர் > கமல.
கமல > கமலம் > கமலா.
கமல > கமல்.
கமலி > கமலினி.

எப்படியும் மாறும். -  மனித மூளை  வளத்திற்  கேற்ப ,

செந்தமிழில் சொற்களை வெட்டி ஒட்டிக் கட்டிப் பயன்படுத்தும்
முறைகளை ஆதிநாளில் ஆசிரியர்கள்  மறுத்தனர். செந்தமிழ்
இயற்கை சிவணிய நிலத்தினரான அவர்கள் கவனமாய் இருந்தனர்

இப்போது ஏனோ ‍ தமிழ் வாத்தியார்களுக்குக் குமுகத்தில் எடுபடா
நிலை நிலவுகின்றது. அவர்கள் மறுத்தவை, அக்கரை சென்று திரும்பி வந்து அவர்களை மருட்டுவது வேடிக்கைதான்.

அவர்கள் சொற்கள் பிறரிடம் சென்று ஒளிர்கின்றன.


ஒளஷதம் அவிடதம்


ஒளடதம் என்ற சொல் முன் இங்கு விளக்கப்பட்டு, அணிசெய்துகொண்டிருந்தது.  ஆனால் இப்போது அது கிடைக்கவில்லை.

2014 நவம்பர் மாதம் இடுகைகள் பல மூன்றாம் நபர்களால் அழிக்கப்பட்டன.
இவற்றுள் ஒளடதம் என்பதுமொன்று.

இது அவி என்பதிலிருந்து புனையப்பெற்ற சொல்.  அவி+இடு+அது+அம்
என்று இச்சொல் பிளவுறும். வேர் முதலியவற்றை நீரிலிட்டு அவித்து அதிலிருந்து கிடைக்கும் சாறே அவிடதம் ஆம்.  அவி > ஒள.  ட= ஷ.
இது மிக்க எளிமையான ஆக்கமே ஆகும்.

அவி > ஒள > அவு .   அவுடதம்  என்றும் எழுதுவர் .

இதனை யாரும் மறு  வெளியீடு செய்ததாகத் தகவல் இல்லை.

வெள்ளி, 11 நவம்பர், 2016

வந்தே மாதரம்!!

வாழ்த்து  (வாழ்த்துதல் ) என்ற சொல் வழுத்து என்றும் வரும். ஒரு கவிதை எழுதும்போது முதலடி முதற்சீர் எழுத்து என்று தொடங்கினால்
அடுத்த அடியை வழுத்து என்று தொடங்கிக்கொள்ள இது நல்ல வசதியே
ஆகும்.  ஆனால் எழுத்து என்பது பெயர்ச்சொல்; வழுத்து என்பது
வினைச்சொல்; எனின், முதனிலைத் தொழிற் பெயர்ச்சொல்லாகவும்
ஆளப்படுதல் கூடும்.

வழுத்து என்பது வல்லோசைச் சொல். இதை மென்மையாக்க, வழுந்து
என்று மாற்றிக்கொள்வர்.  செம்மை + தமிழ் = செம்+ தமிழ் = செந்தமிழ்
என்றுதான் வரும். செ  என்றாலே சிவப்பு, செம்மை என்று பொருள்.  நேரானது என்றும் பொருள்.  அதாவது கடுந்திரிபுகள் அற்றது என்று
அர்த்தம்.  செ+ தமிழ் = செத்தமிழ் என்று வருதல் இல்லை. வரின்
அது இன்னா ஓசை பயந்ததாய்விடும்.  ஏற்ற இடங்களில் த்து என்று
வரின் ந்து என்று மாற்றம் செய்யப்படுதல் மொழிமரபு.  மெலித்தல்  விகாரம்..
ஒலியை  மென்மைப்  படுத்துதல்.

இப்போது மீண்டும் வழுத்து என்பதற்கு வருவோம்.  இதை மெலித்தால்
வழுந்து என்று வரும். வழுந்து என்ற மெலிப்பைக் காண இயலவில்லை. இது வசதியாகப் போய்விட்டது.

வழுந்து என்பதைத் தமிழுக்குரிய ழு‍~வை  எடுத்துவிட்டால் வந்து ஆகிறது.  இது  இடைக்குறை .

வந்து > வந்தே.....

வந்தித்தல் = புகழ்தல்  வாழ்த்துதல்.

வந்தி + அனை =  வந்தனை.  ( அன்+ ஐ)

வந்தே மாதரம்!!
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை.......

வந்தனை  வந்தித்தல் என்பன தமிழ் வழக்கில் உள்ளவை.  ஆனால்  வந்தே என்பது  வாழ்த்தினைக் குறிக்கையில்  வட இந்திய வழக்கு  ஆகும். இவற்றுக்கெல்லாம்  மூலமாவது  வாழ் என்னும் வினைச்சொல்லே ஆகும் .

எச்சத்திலிருந்தும்  ஒரு சொல் பிறக்கலாம் என்பது சில அறிஞர்  கருத்து.  எ - டு :  ஆண்டு >  ஆண்டவர் . அல்லது:  ஆண்ட >  ஆண்டவர் .
இதைப்  பின்பற்றினால்  வாழ்ந்து >   வாந்து >  வந்து > வந்தே .
வினை எச்சங்கள் பிற மொழிகளில் ஒரு முன்மை இடத்தினவாய் உள . 




திகதி: தேதி.

தேதி என்பது திகைந்த நாள் என்று பொருள்படுவதாகும்.  அல்லது
திகைந்தது.

இது பற்றிய விளக்கம் இங்குக் காணலாம்.
திகைதல்  =   determine.
Dates are days determined by humans.

https://sivamaalaa.blogspot.sg/2011/10/tamil-word-for-date-thethi_11.html


திகை >  திகைதி .    தி : விகுதி .
திகைதி  >  திகதி:  (ஐகாரக் குறுக்கம்)
திகதி  >  தேதி.   பகுதி  > பாதி  போன்ற திரிபு.

வியாழன், 10 நவம்பர், 2016

Trump: திருத்தி வாசிப்பார்

எந்த மதமிருந்   தாலும்  ‍‍‍=== மக்கள்
இணைந்து செயல்பட வேண்டும்!
சொந்த மதமகத்  துள்ளே  === வீட்டில்
சோராது செல்லதன் பின்னே.

திரம்பும் அதிபராய் வந்தார் ‍‍=== முன்
தேராச் சிலபல சொன்னார்.
உரம்பெற உட்கார்ந்த பின்போ ‍=== நாடு
உய்யத் திருத்திவா சிப்பார்.



பொருள் :

அகத்துள்ளே :   மனத்தினுள் .
சோராது:   இடையீடின்றி. 
திரம்பு  -  அதிபர் திறம்ப்
உய்ய -   முன்னேற. 

யோகம்

தன்பாலிருந்து பிறர்பால் அனுப்பினாலும் தபால். தன்பால் என்பதில்  ன்  
ஒற்றை (மெய்  எழுத்து ) எடுத்துவிட்டால் தபால்.
பிறர்பாலிருந்து தன்பால் வந்தாலும் தபால். இங்கும் அதுவே. அதே!
தான் இல்லாவிட்டால் தபால் இல்லை.

தன்பால் என்பதைத் தபால் என்று சுருக்கியவன் அறிஞன். அவன்
யாரென்று தெரியவில்லை.

இந்த முறையைக் கையாண்டு பல சொற்கள் படைக்கலாம்.

இப்போது ஓங்குதலைக் கவனிப்போம்.  ஓங்கு என்றால் அதிகமாவது, மிகுவது.

மிகுவது பணமாகவோ, வீடுவாசல்களாகவோ இருக்கலாம்.

ஓங்கு என்பதில் ங் எடுபட்டால்  ஓகு.(இலக்கணத்தில் இடைக்குறை.)
ஓகு என்பதில் அம் சேர்த்தால் ஓகம்.(ஓங்குதல், மிகுதல்)
உயிர் முதலான சொல் யகர வருக்க முதலாக வரும்.  ஆனை> யானை.
அதுபோல்,  ஓகம் > யோகம். ( பணம், பொருள் ஓங்கிய நிலை).
உங்களுக்கும் ஒரு யோகம் வருகிறது.

இச்சொல் ஓகம் என்பதிலிருந்து வந்தது என்பதை மறைத்துவிட்டால்
அப்புறம் யோக் என்பதிலிருந்து வந்தது என்று கதை சொல்பவனே
அறிஞர்க்குத்  தலைவன் .





முண்டாசு உறுமாலை உறுமால்

முண்டாசு

முண்டாசு என்ற சொல்லை ஆய்ந்து யாம் எழுதியவை வெளியாரால்
அழிக்கப்பட்டுவிட்டன. அதைக் கண்டுபிடிக்க இயலவில்லை.

இப்படி அழிப்பவர்கள், அதனையோ பிறவற்றையோ தமிழெனக் காட்டுதலை விரும்பாதவராகவும் இருக்கலாம். மூலத்தை அழித்துவிட்டு
தமவாக்கிக்கொள்ள எண்ணிய கள்ள ஆய்வாளராகவுமிருக்கலாம். நிற்க.
கடவுச் சொல்லைக் கூடத் திருடக் கூடிய திறவோர் இவராவர்.

அது கிடக்கட்டும். இப்போது முண்டாசு என்னும் சொல் ஆய்வோம்.

முண்டு =  துண்டு. துணி. மலையாளத்தில் இது வழங்குகிறது.
ஆசு :  பற்றிக்கொள்தல். இங்கு அணிந்திருத்தல்.

ஆகவே: துண்டு அணிதல். தலையிலணிதலைக் குறிக்கிறது.

உறுமாலை என்ற சொல்லும் உளது.

உறு:  அணிதல்.( தலையில்) பொருத்துதல்.

மாலை: மாலைபோல் சுற்றப்படுவது.  கழுத்தில் அணிவதுபோல் தலையில் சுற்றுதல்.

இது மால் என்றும் கடைக்குறைந்து வரும்.  "உறுமால்"

இங்கு மாலை:  ஒப்பீட்டு அமைப்பு.

இதுவே முன் எழுதியதன் சுருக்கம்.

சுமையடை , சுமையடி, சும்மாடு  என்பனவும்  காண்க.   தலையில் வைக்கப் படும்  சுமை அழுத்தாமல்  தலையில் சுற்றப்படும்  அடைத்துணி .

சும்மை  >சுமை   இடைக்குறையாகக் கருதலாம் .  சுமத்தல் : வினைச்சொல்.

சும்மை  > சும்மையா(க)  > சும்மா(க)  >  சும்மா.

சுமையாக ,  வீணாக ,   பணம் இல்லாமல்.




புதன், 9 நவம்பர், 2016

அயல்திசை மக்கள்

அயல்திசை மக்கள்  வந்தார்
அதிகமாய் அமர்ந்து கொண்டார்
மறலியை வழியில் வேலை
மாதொழில் வளம்க வர்ந்தார்
எனலொரு மனந்தி ரிந்த
எழுச்சியில் திறம்பு கூவிக்
கனல்பெறத் தேர்தல் வென்றார்
காரிகை இலரி வீழ்ந்தார்.


தன் நிலம் தன் தன் வீடு
தன் தொழில் இவற்றைப் பேணும்
பின் படைக் கொள்கை மேவிப்
பேரம ரிக்கர்  செல்ல;
பன்முகத் தொழில்வ ளர்த்துப்
பார்பரி மாறிக் கொள்ளும்
பண்புறு ஞாலக் கூட்டுப்
பாழ்படும் வருங்கா லத்தே.

அயலுறு திறம்ப ழிக்கும்
அகலுறு அமெரிக் காவில்
பெயல்வரப் பயிர்கள் நாணிப்
பேணுமோ  தம்மைத் தாமே?
கயல்தமைக் கடல்க ழித்தே
அயலென்று வெறுக்க லாமோ?
உயல்பெற உகக்கும் ஞாலம்
தொழில்துறைத் திறப்ப கிர்வே!






மறலியை வழி  -  முன்னைக் கொள்கைகளை மறுத்தலோடு இயைபுடைய வழிகள்  right leaning policies  contrary to those established before.
பின்படை    - retrogressive.
பெயல் = மழை
உயல் -  பிழைப்பு முன்னேற்றம்

திறம்பு:   இற்றை அதிபர் டொனால்டு டிரம்ப்.
இலரி :  ஹிலரி கிளின்டன்.
திறப்  பகிர்வு  -  share of talents

திங்கள், 7 நவம்பர், 2016

வெ வேறு; வே வேறு

ஒரு சொல் "வெ" என்னுமெழுத்தில் தொடங்குகிறது. இன்னொன்று
"வே" என்று நெடிலில் தொடங்குகிறது.  வெ என்பது வேறு, வே என்று
நெடிலில் சொல்வது வேறு.  அதற்கும் இதற்கும் தொடர்பில்லை!!

இப்படி நம் வாத்தியார் சொல்லிக்கொடுப்பார், அதுவும் உங்கள் ஒன்றாம்
வகுப்பில். ஐம்பது ஆனாலும் அறுபது ஆனாலும் பலரும் இந்தப் பாடத்தை
மறக்கமாட்டார்கள். இவர்கள் நல்ல மாணவர்கள். வாத்தியார் சொன்னபடியே எதையும் உணர்ந்துகொள்பவர்கள். இவர்கள் கூட்டத்தில்
நீங்களும் இருக்கலாம்.

நீங்கள் சொல்வீர்.  வெ வேறு; வே வேறு.

எந்தக் காலத்திலும் இவை ஒன்றாக மாட்டா.

அலசி ஆய்ந்து உங்கள் கருத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

ஆவல் ஆவா. அவா

பல மொழிகளில் குறில் நெடில் என்பன இல்லை. அவை அங்ஙனம்
உணரப்படவில்லையே தவிர, பேசுகையில் குறில் நெடில் ஓசைகள் இயல்பாகப் பலுக்கப்படுகின்றன. மாய், தாய், லோங் என்று நெடில்
முதலாக வரும், சிலவற்றில் குறில் தனியாகக் குறிக்கப்படுவதில்லை.
எனினும் பேசுகையில் குறில் நெடில் இருக்கும்.

நெடில் குறிலாகிய சொற்களை முன் இடுகையில் கண்டோம்.  அறிந்து
இன்புற்றிருப்பீர்கள் என்பது எம் துணிபு ஆகும்.


இனி ஆவல், அவா என்பனவற்றைக் கவனிப்போம். இவ்விரண்டும் ஒருபொருளன என்பது நீங்கள் அறிந்ததே/

இதன் வினைச்சொல்  ஆவு என்பதாகும்,  இப் பகுதி இதுகால தனியாக‌
வழங்கவில்லை. நீ தொலைக்காட்சி பார்க்க  ஆவுகிறாயா என்று யாரும்
பேசுவதைச் செவிமடுத்ததில்லை. இப்படி ஒரு காலத்தில் தமிழர் பேசினர்
என்று தீர்மானிப்பதில் தடையேதுமில்லை.

ஆவு + அல் = ஆவல் ஆகிறது. ஆவலென்பது இன்னும் வழக்கில் உள்ளது.
ஆவினான், ஆவுகின்றான், ஆவுவான் என்பன காணக்கிடைத்தில. இவற்றை நாம் எழுத்திலும் பேச்சிலும் மறந்தோம். அதனால் இல்லை. ஆவுதல்  நிகண்டுகளில் மாத்திரம் உள

சொல்லிறுதியில் வரும் விகுதிகளில்  ஆ என்பதும் ஒன்று.

நில் >  நிலா.
உல் > உலா.
கல் > கலா ( கற்றல்).
பல் > பலா  ( பல சுளைகள் உடைய பழம் ).

விழை >  விழா.
புழை > புழா. (மலையாளம்)
 கடு >  கடா.
துல் > துலா.

இங்ஙனம் வினை பெயர்ச் சொற்களிலும்  ஆ விகுதி வரும்.

சொல்லிறுதியில் வரும் விகுதிகளில்  ஆ என்பதும் ஒன்று.


ஆவு + அல் =  ஆவல்.
ஆவு + தல் =  ஆவுதல்.
ஆவு + ஆ =  ஆவா.  இது பின் அவா என்று குறுக அழகுபெறும்.

ஆ விகுதி பெற்றுக் குறுகியதே  அவா என்று முடிக்க.

சில ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் விளக்கம்பெற மொழியில் வசதிகள்
இருப்பினும், இவ்வாறு முடித்தல் போதுமானது.





ஞாயிறு, 6 நவம்பர், 2016

நெடில் முதலான .......... குறில் முதலாகி

நெடில் முதலான சில சொற்கள் விகுதி ஏற்றபின்  குறில் முதலாகி
விடுகின்றன. அப்படிச் சில சொற்களை நாம் முன்பு கண்டோம்.  அந்த‌
விதியை மீண்டும் நினைவு கூர்ந்து அவ்வறிவைத் திறப்படுத்திக்
கொள்வோம்.

சாவு என்பது வினைச்சொல். இதனோடு அம் விகுதி வந்திணைந்தால்
சாவு+ அம் =  சவம் என்றாகிறது. அது இறந்த உடலைக் குறிக்கிறது.

தாவு என்பது வினைச்சொல். தாவுதல்.  இதனோடு விகுதி சேருமாயின்
தாவு+ அளை =  தவளை ஆகிறது.  தாவளை என்னாது தவளை என்றே
வரும்.  அளை என்பது கலக்குதல் என்றும் பொருள்படும்.  தாவிச் சேற்றினைக் கலக்கும் தவளைக்கு இது ஏற்ற விகுதியாகிறது.

வாய்ப்பக்கம் கூம்பியும் அடி சற்று அகலமாகவும் இருப்பது குவளை,
கூ+ வளை = குவளை ஆயிற்று.  கூ > கூம்பு. குவளையின்  உரு இப்போது மாறி யுள்ளது.

இதேபோல்  கூம்பு + அம் =  கும்பம் ஆனது.  கூ> கு ஆனது.

கூடி வாழ்வதே குடும்பம்,   கூடு+ பு + அம் =  குடும்பம். கூடு என்பது
குடு ஆகி, மகர ஒற்று புணர்ச்சியில் தோன்றி, பு விகுதிக்கு முன்னின்று
இன்னோசை தந்தது.  விரு+பு ‍> விரும்பு போல. வினையிலும் பெயரிலும் இன்னோசை விளைக்க இது தோன்றும். இது பரவலாகக்
காணப்படுவதாகும்.  கொடு+ பு = கொடும்பு போல.  இங்ஙனம் பலவாகும்.

Hilary or Trump?

மாயிரு ஞால மீதில்
மாகடல் இரண்ட  ணைக்கும்
தாயொடு தந்தை போலும்
தன்னிகர் இலாத நாடே
சாயிலா அரசு வல்ல‌
சாதனை அமெரிக் காவில்
தோயுற மக்கள் கொள்ளும்
துலையிலாத் தேர்தல் கண்டீர்.

பெண்மணி ஒருவேட் பாளர்
பீடுடைச் செல்வர் மற்றார்
தண்ணுறு பொழிவு செய்து
தகவினை முகந்த ணிந்தார்;
ஒண்பெறு மிகுதி வாக்கில்
ஓங்கிட நிற்பார்  யாரோ?
பெண்மிகை பெற்றால் ஞாலம்
பெருமிதம் மிளிரும் அன்றே!




சனி, 5 நவம்பர், 2016

அரிதாரம் பூச்சு

இன்று "அரிதாரம்"  என்ற சொல்லினை ஆய்வு செய்வோம்.  இந்தச் சொல்லிலிருந்து ஒரு வரலாற்று உண்மை வெளிப்படக்கூடும்.
சீரை என்ற சொல்லிலிருந்து  சேலை வந்தமை நீங்கள் அறிந்திருந்தால்
இதுவும் அதுபோன்ற ஒரு பின்னணி கொண்ட சொல் என்பதை அறிந்து
மகிழலாம்,

அரி என்பது அரிசி.  இதில் சி என்பது விகுதி.  அரி என்பதே பகுதியாகும்,
பழங்காலத்தில் நடித்தவர்கள் அரிசி மாவினை முகத்தில் பூசிக்கொண்டனர். இது முகத்தைப் பார்க்கும் மக்கட்கு விளக்கமாகக் காட்டுவதற்குப் பயன்பட்டது. நாளடைவில் மருந்துச் சரக்குகள் சேர்த்து அரிதாரம் செய்யப்பட்டு மேற்பூச்சாகப் பயன்பட்டது.  இந்தப் புதுமைக் காலத்தில் இன்னும் நல்ல பூச்சுக்கள் பயன்படுத்தப் படுகின்றன. தாரம் என்பது  தருதல் எனற்பொருட்டு.  தரு+ அம் ‍=  தாரம்.  தருதலாவது
இங்குப் பூசுதல் என்று பொருள் தரும்.

வெள்ளை  மஞ்சள்  நிற மக்களும் பூச்சுகள் பயன்படுத்தியே நாடக மேடையில்
தோன்றுகின்றனர்.  இயற்கை நிறம் நாடகங்களுக்குப் போதுமானவை  அல்ல .

ஒப்பனை  (மேக் அப் ) இப்போது  மிகப் பெரிய  கலை யாகிவிட்டது.  அரிதாரம் என்ற சொல்  இப்போது பெரிதும்  வழக்கில் இருப்பதாகத் தெரியவில்லை .





 ‍

மாநில மேல் மீண்டு வந்தீர்

மக்கள் நலமே கருதி ===  இந்த
மாநில மேல் மீண்டு  வந்தீர் ‍‍‍=== மருத்துவர்
தக்க சிகிச்சைகள் செய்தார் ‍‍===  இங்குத்
தமிழர் உலகினர் போற்ற. (மக்கள் )

வியாழன், 3 நவம்பர், 2016


உல் பல பொருளுடைய ஒரு மூலச்சொல்

உல் என்பது பல பொருள்களை உடைய ஓர் மூலம்.

உல் >  உரு:  (  உல்: தோன்றுதல்.)    உரு >  உருத்தல் .
உல் >  உலவு   (உல்: தோன்றிச் அங்குமிங்கும் பெயர்தல்.)
உல் >  உரு > உருள். ( உல்: சுற்றுதல்.)
உல் >  உலகு. (  உல்: சுற்றுவது; இயங்குவது; உருண்டை.)
உல் > உலக்கை. சுற்றாக உள்ள தடி.  ( உல் : நெட்டாகவும் சுற்றாகவும் இருப்பது.)
உல் > உரி. உரிதல்.   தோன்றிய இடத்திலிருந்து அல்லது பொருளிலிருந்து வேறாதல். ( உல்: வேறாதல்.)
உல் > உன்.  ( தோன்றி முன்னிலையாவது).
உல் > உறு > உறுதல் > உறுத்தல். உல் : தோன்றியதுணர்தல், உண்டாக்குதல்.
உல் >  உரு > உரை:  வாயில் தோன்றிச் செவிக்குச் செல்வது,   ( உல் : புறப் பாட்டுக் கருத்து, )  உரை>  உரைத்தல் ,

இங்ஙனம் உல் பல பொருளுடைய ஒரு மூலச்சொல். இது மிக விரிந்த‌
மூலமாதலால் ஒரு சில உணர்த்தப்பட்டது,
இதனை அறிஞர் விரித்துரைத்துள்ளனர் என்பதறிக.

சொற்கள்  விகுதி பெற்றும் நீண்டும்  நீண்டு  விகுதி பெற்றும் விகாரம்  அடைந்தும் மருவியும் பலவாறு வேறுபட்டும் மொழி  வளம் அடைந்தது.
இதை ஒரே இடுகையில் உணர்த்தல் கடினம்.  அறியத்  தொடர்க .

will edit. some inherent problem.  If  not readable please highlight to read.

உறுப்பத்தி உற்பத்தி

https://sivamaalaa.blogspot.sg/2013/11/blog-post_20.html


உற்பத்தி என்ற சொல்லை முன்னர் ஆய்வு செய்துள்ளோம்.

அது மேற்குறித்த இடுகையில் இன்னும் இங்கு உள்ளது.

இப்போது இன்னும் சற்று விரிவாகச் சிந்தித்து அறியலாம்.

படிப்பறிவு இல்லாதவர்கள் பெரும்பாலும் சிற்றூர்களில் வாழ்வோர் உலுப்பத்தி அல்லது உறுப்பத்தி என்பர். பெரும்பாலான வழக்குச் சொற்களுக்கு இவர்களே உற்பத்தியாளர் எனலாம்.  இவர்கள் பேச்சினை
ஆய்வதற்குச் சில முயற்சிகள் நடைபெற்றனவாகத் தெரிகிறது. எனினும்
இவ் ஆய்வுகள் முழுமை அடைந்துவிட்டனவாக  யாம் நினைக்கவில்லை.

உல் என்ற அடிச்சொல்லிலிருந்து உறு என்பது தோன்றியது.  உல் என்ற அடியே பின் உள் என்றும் திரிந்தது. இவையெல்லாம்  தொடர்பு உடைய‌
கருத்துக்கள். இவற்றைப் பின் ஓர் இடுகையில் விளக்குவோம்.

உல் > உலு > உலுப்பத்தி.  (பேச்சு வழக்கு).
உல் > உள் > உட்பத்தி , திரிந்து : உத்பத்தி.
உல் > உறு > உறுத்தல்.

உறுத்தல் எனின் உண்டாக்குதல்; ஏற்படுத்துதல்.

தெளிவுறுத்தல்.
அறிவுறுத்தல்

என்னும் வழக்குகளில், உறுத்தல் : உண்டாக்குதல், ஏற்படுத்தல்.

இனி, உல் > உறு >  உறுப்பற்றி.>உறுப்பத்தி.

இவையெல்லாம் உல் என்ற அடியினின்று தோன்றிப் பல்வேறு வகைகளில்
வெளிப்பாடு காணினும்,  உண்மையில் ஒன்றேயாம்.இந்த வெளிப்பாடுகளில்
ஒருமை காண்டல் ஆய்வறிவு உடையார்க்கு எளிதேயாகும்.

உலுப்பத்தி உறுப்பத்தி என்பன கொச்சை என நினைத்து,  உற்பத்தி என்று
திருத்திக்கொண்டனர். அதுபின் பிறமொழிகளிலும் தாவி வழக்குப்பெற்றது.
உட்பத்தி >  உத்பத்தி > உற்பத்தி எனினும் அதேயாம். மூலம் உல் தான்.

எழுத்துக்கும் செய்யுட்கும் மூலம் பேச்சே ஆகும்.சரசுவதி பேச்சாயி என‌
சங்ககாலத்தில் வழக்குப் பெற்றதும் மிகப் பொருத்தமே.








புதன், 2 நவம்பர், 2016

சிங்கப்பூர்த் தீ .

பத்தி  கொளுத்தினால்
      பறறேன்  எனும்   தீயே !
பட்டறையில் எப்படிப் பற்றினாய் ?
கெட்ட  குறு

நேரம்     இடனொடு
நேர் பொருளும்  காரணமோ ?
சோர்ந்த நட்  சத்தி ரமோ  தான் .

இது  சிங்கப்பூரில் நடந்த ஒரு நிகழ்வு பற்றிய  கவி .  எப்படிப் பற்றிற்று?
இதை வாசித்து அறியலாமே .


http://www.channelnewsasia.com/news/singapore/fire-engulfs-sungei-kadut-warehouse-7-rescued/3254108.html
.



செவ்வாய், 1 நவம்பர், 2016

அமோகம் என்ற சொல்லை

எமது  கட்சித் தொண்டர்களுக்கு ஊர்மக்கள் அமோக வரவேற்பை அளித்தார்கள் என்றார் ஒருவர். நாம் கடுமையான இலக்கணங்களை
இக்காலத்தில் கைக்கொள்வதில்லை.  எமது  என்பதில்  அது என்பது
அஃறிணை ஒருமை. தொண்டர்கள் உயர்திணைப் பன்மை.  ஆகவே சங்க கால இலக்கணப்படி, பிழை ஆகிறது. எம் தொண்டர்கள் என்றுதான்
சொல்லவேண்டும்.

ஆனால் நாம் சொல்லவந்தது அதுவன்று. அமோகம் என்ற  சொல்லை
ஆய்வு செய்ய உங்களை அழைக்கவே இங்கு வந்தோம்

மோகம் என்பது  விருப்பம், காதல், மோகப் பற்று >  மொகபத் . நீ தி  X  அநீதி  என்று  அமைந்துள்ள எதிர்ச் சொல்லை நோக்கினால்,  அமோகம் என்பது
விருப்பமின்மை   என்று அன்றோ பொருள்தர  வேண்டும் ?

அப்படியானால்  அமோக வரவேற்பு என்பது விருப்பமில்லா வரவேற்பு  எனலாமா? அதை எப்படித்தான் விளக்குவது?

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

பதிலைப் பிறகு சொல்கிறோம்.