வெள்ளி, 30 அக்டோபர், 2020

யானைக்குட்டி

 இரண்டு வயது  யானைக்குட்டி

புரண்டு விழுந்து  சண்டைபோடும்

பிறந்த தாயும்  தந்தை யென்றும்

சுரந்த அன்பு  காணவில்லை.


அன்னை வந்து  அணைத்த போதும்

அஞ்சுதலில் முட்டும் கோபம்

பின்னை வந்து மனிதர் பாலும்

பீடையாகிப் போனதாமோ!


பிள்ளைகள் அம்மாவுடன் சண்டையிடுதல், இந்த யானைக்

குட்டி அதன் தாயுடன் சண்டையிட்டது போன்றது.  விலங்குக் குணம்

மானிடன் அடைந்துவிட்டானோ என்பது இந்த வரிகள்

எழுப்பும் கேள்வியாகும்.


பிறந்த -  தான் பிள்ளையாய்ப் பிறந்த

அஞ்ச்சுதல் இல் -   அச்சமில்லாமல்

சுரந்த -  பிள்ளையிடம் ஏற்பட்ட

மனிதர்பாலும் -  மனிதரிடத்தும்

பீடை - நோய்.

மணிமேகலைக் காப்பியம்: அட்சயபாத்திரம்.

 ஒன்றைப் பிறருக்கு -  அது வேண்டியோருக்கு -  அளிப்பது ஓர் அருள், ஓர் அன்பு. இதை "அளி" என்று இலக்கியங்கள் புகழும்.  இது குழைவையும் குறிக்கும்.  " அளிந்த ஓர் கனி " என்பது திருவாசகம். இரக்கமும் குறிப்பது ஆகும்.

அட்சயப் பாத்திரத்திலிருந்து மணிமேகலை அள்ளி அள்ளி மக்களுக்கு வழங்குகிறாள். எல்லோருக்கும் அமுதளித்து இரக்கம் காட்டுகின்றாள்.  இப்பாத்திரம் அள்ள அள்ளக் குறையாதது.

அட்சயப் பாத்திரம் என்பதில் அட்சய என்ற சொல்லை அறிவோம்.

அளிச்செயல் பாத்திரம்

அச்செய பாத்திரம்

இங்கு  ளி என்ற எழுத்துக் குறைவுண்டது.  லகர ஒற்றிறுதியும் கெட்டது.

இந்த நிலையில் இது அட்சய என்று மாறி அமைந்தது. இஃது ஓர் ஒலிநயமூட்டுத்

திருத்தம்.

இந்தத் திரிபுகளையும் கவனித்துக்கொள்ளுங்கள்:

இடுக்கண் > இடுக்கட்டு > இக்கட்டு.  (டு இழப்பு)

சகக்களத்தி >  சக்களத்தி.  ( க இழப்பு)

பகுக்குடுக்கை >  பக்குடுக்கை  (கு இழப்பு)

சறுக்கரம் >  சக்கரம் ( று இழப்பு)

மக + கள் = மக்கள்.

இச்சொல் ( அட்சய ) ஒரு பலபிறப்பிச் சொல்.  

அருட்செயல் >  அட்செய  > அட்சய என்றுமாகும். ரு, ல் இழப்பு.

மற்றோர் மாற்று விளக்கம்:

அட்சய பாத்திரம் http://sivamaalaa.blogspot.sg/2016/01/blog-post_29.html



வியாழன், 29 அக்டோபர், 2020

சனாதன தருமம்.

 சனாதன தர்மம் என்பது " இந்து மதம்" என்பதன் ஒரு பெயர். இதனை மதம் என்பதை விட ஓர் வாழ்நெறி என்றுதான் கூறவேண்டும். இந்திய உச்ச நீதி மன்றமும் தன் தீர்ப்பொன்றில் இவ்வாறே கூறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இதையே தீர்ப்பின்பின் கூறினார்.  இதுவே உண்மையுமாகும்.

இது இஸ்லாமிய கிறித்துவ மதங்களைப்போல் ஒருவரால் அமைக்கப்பட்டதன்று.

ஒரே மதநூலை அடிப்படையாய்க் கொண்டதுமன்று.

கருத்துகளும் கடைப்பிடிக்கும் விதிகளும் இடங்கட்கேற்ப சற்று மாறுபடுதலும் இவ்வாழ்நெறிக்கு இருக்கலாம். எடுத்துக்காட்டாக திருமணங்களில் தாலிகட்டுதல் ஒரு மதச்சடங்கோ இல்லையோ, அது தென்னாட்டில் உள்ளது; வட இந்தியாவில் இல்லை. பூசை முறைகள் தென்மாநிலங்களில் ஒரு விதமாகவும் வடமாநிலங்களில் வேறு விதமாகவும் இருக்கலாம். விளக்கங்களும் வேறுபடலாம்.

சனாதன என்பதை மட்டும் இங்குக் காண்போம்.

ஒரு குறிப்பிட்ட கூட்டத்தார் தமக்குள் கொள்வனை கொடுப்பனை மூலம் தொடர்புடையவர்களாய் இருக்கும் நிலையில், ஒரு கோவிலை அமைத்துக்கொள்கிறார்கள். அவர்களில் ஒருவரே அதில் பூசாரியாய் இருக்கிறார். கோவிலில் மூல தேவதை பகவதி அம்மன் என்று வைத்துக்கொள்வோம். அத் தேவதையே அங்கு பெரிதாய் அமைந்துவிடுகிறது.  மற்ற  தேவர்களின் சிலைகளும் சிற்றளவினவாய் அமைக்கப்படுகின்றன. பெருவிழாக் காலங்களில் ஒரு பிராமணப் பூசாரியை (போற்றியை) வரவழைப்பதுண்டு. மற்றவேளைகளில் உள்ளூரில் எப்போதும் பார்ப்பவரே காரியங்களைப் பார்ப்பார்.

இங்கு நடப்பவை எல்லாம் விருப்பப்பட்டு அவர்களே ஆற்றிக்கொள்ளும் கடமைகள் தாம்.  தன்னால் ஆனவற்றைத் தான் செய்து வழிபாடுகள் நடைபெறுகின்றன.

தன்  ஆ தன   (தன்னால் ஆன தன்  செயல்கள்).

தனாதன 

இதில் தன் என்பது சன் என்று த- ச திரிபு விதிப்படி திரிகிறது.

தன்  ஆ தன >  சனாதன.

தன்னால் ஆன தன் பொருட்களாய் வைத்து :  அதாவது,  மாலை போடுதல், பூக்களைக் சொரிதல், சந்தனம் குங்குமம் வைத்தல், திருநீறு வைத்தல், பால் வைத்தல், நீர்வைத்தல்  சர்க்கரைப் பொங்கல் வைத்தல் என்று விரும்பியன வைத்து வழிபடுவர்.

தன என்றால் தன்னுடையவை.   அ (தன என்பதில் )  பன்மை.  தனது என்பதில் து ஒருமை.

சமஸ்கிருதத்தில் தன் என்பது சன் ஆனதுதவிர மற்றவை மாற்றமில்லை.

த என்பது ச ஆவது ஒரு மோனைத் திரிபு. பல சொற்களில் காட்டப்பட்டுள்ளது. பழைய இடுகைகள் காண்க.  ஓர் எ-டு:

தன்-கு > தங்கு > சங்கு > சங்கம் 

புலவர்கள் தங்கி, அரசன் தந்த சோற்றையும் குழம்பையும் உண்டுவிட்டு,  கிடைப்பவற்றைப் பெற்றுக்கொண்டு, கன்னா பின்னா என்று கவியைப் பாடி அதனாலும் பரிசில் பெற்றுக்கொண்டு கூடியிருப்பது சங்கம்.  தங்கு என்பதில் வந்த சொல்.  தான் > தன்,  கு என்பது சேர்விடம் குறிக்கும் உருபு இங்கு சொல்லாக்கத்தில் வந்தது.

இந்து மதத்தில் தன்னைத் தான் அறியவேண்டும், இறைவனை அதிலிருந்து கண்டுபிடி என்று சொல்வார்கள்.  பூசை (பூ +செய்: ) என்பது ஒரு கருவிபோன்றதே. உள்ளம் பெருங்கோயில் என்றார் மாமூலர்.  தானே அறிக என்பது இந்துமதம்.

தன் ஆ தன > சனாதன என்பது சரியான பொருத்தமாய் உள்ளது.

பின் வந்து பார்த்துப்

பிழைகள் இருந்தால் திருத்துவோம். 

நன்றி. 


Sanātana Dharma (Devanagariसनातन धर्म, meaning "eternal dharma", or "eternal order")[1] is an alternative name for Hinduism used in Hindi alongside the more common Hindu Dharm (हिन्दू धर्म).[2][3]

Long time ago Even Buddhism or Jainism were thought to be within the fold.

முகக்கவசம் அணிந்து

தொலைவு கடைப்பிடித்து,

தூய்மை போற்றி

நோயினின்று காத்துக்கொள்ளுங்கள்.






செவ்வாய், 27 அக்டோபர், 2020

சன்னிதானம்

 கோவிலில் உள்ள தெய்வச்சிலைக்குக்  கால் கை தலை எல்லாம் இருக்கின்றனவே, சிலவற்றுக்கு இரண்டுக்கு மேற்பட்ட கைகள் இருக்கின்றனவே  இது எவ்வாறு என்று கேட்போருண்டு. கோவிலென்பதே ஒரு மனிதனுக்குத் தலை, உடம்பு, என்றெல்லாம் இருப்பதுபோலவே வடிவமைக்கப்பட்டதே ஆகும். அங்கிருக்கும் தெய்வச் சிலையும் மனிதனைப் பின்பற்றியே அமைக்கப்பட்டதே ஆகும். கைகள் இரண்டுக்கு மேல் இருத்தலானது சில கருத்துகளை எடுத்துச்சொல்ல அமைக்கப்பட்டனவே ஆமென்க.  நான்கு திசைகள் உள்ளன.  இதைச் சித்திரத்தாலோ சிற்பத்தினாலோ  எடுத்துச் சொல்வதென்றால் கைகளையோ தலைகளையோ அமைத்துச் சொல்லலாம். இவ்வாறு சிந்தித்துத்தான் சிலைகளை அமைத்தனர்.சிலைகள் மனிதனால் அமைக்கப்பட்டவை;  அவை கருத்துகளை வெளிக்கொணர்கின்றன. 

இவற்றைத் திருமூல நாயனாரின் பாடல்கள்  (திருமந்திரம் ) வாயிலாக அறிந்துகொள்ளலாம். இங்கு சன்னிதானம் என்ற சொல்லை அறிந்துகொள்வோம்.

கோவிலும் மனிதன் உடலமைப்பைப் போன்றது.  கோவிலுள் புகுதல் மேற்கொள்கின்றபோது தன்னில் தான் புகுதல் செய்கின்றோம்.  கோவிற் சிலையும் தான் போலவே அமைக்கப்பட்டுள்ளது.  ஆகவே தன்னில் தான் புகுதல் செய்கின்றோம். இவ்வாறு  புகவே தன்னைத் தானறிந்து இறைவனைக் கண்டுபிடிக்கலாம். 

தன்னில் என்பது கடைக்குறைந்து ( அல்லது தொகுந்து ) சன்னி என்று வரும்.  தகரத்துக்குச் சகரம் போலி.  அதாவது த என்பது ச ஆக மாறும்.  ல் என்ற இறுதிமெய் கெடும் அல்லது ஒழியும்.  ஆகவே தன்னில் > சன்னி.

அடுத்த சொல் தான் என்பது.  இது திரியவில்லை.  அமைதல் என்ற பொருள் உடைய அம் விகுதி பெறும். அப்போது தானம் என்று வரும். இரண்டையும் கூட்ட.

தன்னில் தான் அமைதல் >   தன்னி + தான் + அம் >  சன்னிதானம் ஆயிற்று.

இது வெறும் எழுத்துப்போலிகளாலும் எழுத்துக் குறைவுகளாலும் ஆன பதமே.

பொருள் பதிந்தது பதம். பதி (தல்) > ( இகரம் கெட்டு)  பத்+ அம் = பதம்.   த் + அ = த.

தன்னில் திரு >  சன்னி(ல்) + தி (ரு) >  சன்னிதி என்றுமாகும். பொருள் அதுவே

இங்கு தி என்பது விகுதி.  அது விகுதியாகவும் வந்து திரு என்பதையும் குறிப்பால் உணர்த்தியது,

இந்தத் திரிபுகட்கு இதை நினைவில் கொள்ளுங்கள்:  அப்பன் > அத்தன் > அச்சன். எழுத்துகள் மாறினும்  பொருள் அதுவே/

கோவிலில் தன்னைப் போல அமைந்த சிலையின்முன் தான் அமையும் இடமே சன்னிதானம், இறைவன் திருமுன்.


தட்டச்சுப் பிறழ்வுகள் பின்னர் கவனம்பெறும்


வயோதிகர் இன்னொரு முடிபு

 வயோதிகன் என்ற சொல்லை நாம் இங்கு முன் விளக்கியுள்ளோம்.  அதனை நீங்கள் முன் வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கின்றோம். இன்னும் இல்லை என்றால் இப்போதும் அது இங்கு கிட்டுவதால் வாசித்துக்கொள்ளுங்கள். 

வாசிப்பதற்கு இங்குச் சொடுக்கவும்:

வயோதிகன்  https://sivamaalaa.blogspot.com/2016/06/blog-post_29.html

அகவை அதிகம் எட்டிவிட்டவர்கள் சிலர், தம்மால் முடியவில்லை என்றும் தமக்கு வயது ஆகிவிட்டதென்றும் சொல்லி,  கொஞ்சம் உழைப்பு தேவைப்படும் வேலைகளிலிருந்து விலகிக்கொள்வர் என்பதும் உண்மைதான். அகவை கூடிவிட்டால் பலவித உபாதைகள் அல்லது உடலியலாமை ஏற்பட்டுவிடுகின்றன.

தம் வயதை அடிக்கடி " கூடிவிட்டது, கூடிவிட்டது" என்று துன்புற்றுக்கொண்டிருப்பவர்களே வயோதிகர் என்று சுட்டப்பட்டனர் என்று ஒரு கருத்தும் உள்ளது. இவர்கள் பெண்டிர் என்றும் பின்னர் அது ஆண்களைக் குறிக்க மாறியது என்பதும் கருத்து.

வயது + ஓதி + கன்னியர் - "வயோதிகன்"  என்பதாக மருவி வயோதிகன் என்று , குறுகிப் பெண்பாலிலிருந்து ஆண்பாலானது என்பதும் ஒன்று.

உபாத்தியாய என்ற சொல்லும் முதலில் பெண்களில் இலக்கண  ஆசிரியத் தொழிலரைக் குறித்த சொல் என்றும் கூறுவதுண்டு.


 

திங்கள், 26 அக்டோபர், 2020

பார்வதி

 

 [அப்போதுதான் சிறுசிறு சொற்களையும் குறுகிற வாக்கியங்களையும் ஒலித்துத் தன் எண்ணங்களையும் அடுத்து நின்றவனிடம் அறிவிக்கக் கற்றுக்கொண்டிருந்த தொல்பழங்காலம் அது.  " அந்தப் பொருள் எங்கே" என்று கேட்ட அடுத்தவனுக்கு அவன் "தோ" என்று கூவி அறிவித்தான். நீ தேடிக்கொண்டிருப்பது இங்கேதான் இருக்கிறது பார் --  என்ற விடையும் அந்தத் தோவிலேயே அடங்கியிருந்தது. த், ( இது ) , துதூ, தே என்றெல்லாம் ஒலித்து அவன் தன் கருத்தை அறிவித்தான். மொழி என்பதே ஒரு கருத்தறிவிப்புக் கலைதான். அது ஒரு கால் சீய்ப்பிலிருந்து ஒரு பெரிய எழுத்துக்கலையே தோன்றி வளர்ந்துள்ளது போன்றதே.]


ஒலிகள் போலுமே எழுத்துக்களும் வளர்ந்தன .காலை ஓரிடத்து அதன் பெருவிரல் பட நாட்டி, பின்னோக்கிக் மணலில் இழுத்தால் ஒரு கோடு உண்டாகிவிடுகிறது. இது இழுத்து உண்டானது. இதிலிருந்துதான் எழுத்து என்ற சொல் உண்டானதென்று கூறுவர். இதை நல்லபடி பலுக்க அறியாதவர் இழு என்பதற்குப் பதிலாக இலு என்றனர். இலு பின் இலக்கு என்று வளர்ந்தது. இலு + கு = இலுக்கு.> இலக்கு. பின்னர் இலக்கு > இலக்கித்தல். இதன் பொருளும் எழுதுதல் என்பதே. எழுது > எழுத்து ; இழு> இலு > இலக்கு என்பவெல்லாம் தமிழில் உருவான சொற்களே. அவற்றின் தொடர்பு இவ்விளக்கத்தில் தெளிவாகிறது.


தொல்பழங்காலத்து மனிதன், த் என்ற மெய்யொலிப்பினால் இது பொருள் என்பதை அறிவித்தனன், இப்பொருள் என்முன் உள்ளது எனல் அறிவிக்க விழைந்து து+ = து என்றான். இங்கு உ என்பது என்முன் உள்ளது என்ற கருத்தே ஆகும். உ என்பது சீனமொழியில்கூட முன் உள்ளது என்றே பொருள்தருகிறது. இங்குதான் உள்ளது என்பதைக் குறிக்க, + து = இது என்றான். இதுவென்பது இ, உ என்ற இரண்டு சுட்டு எழுத்துக்களும் உருவிலான பொருள்குறித்த த் என்ற மெய்யும் ஒலியும் கலந்த ஒரு சொல்லே ஆகும்.. அப்பொருள் அங்கிருக்கிறது என்பதை அறிவிக்க, + து = அது என்றான். இந்தச் சொல்லில் அ ( அங்கு), ( இங்கு), த் ( பொருள்) என்ற மூன்று கருத்துக்கள் அடங்கி உள்ளன. த் என்பது உருவுடைப் பொருள் குறித்தது என்பது முன் விளக்கப்பட்டது . எழுத்துக்கலை வளர்ந்தது போலவே ஒலிக்கலையும் படிப்படியாக வளர்ந்த பரிமாணம் கண்டது. பரிந்து மாணுதல் என்பதுதான் பரிமாணம். பரிதலாவது வெளிப்படுதல். மாணுதல் என்பது அது பொருளால் உருவால் சிறத்தலாம். காற்றுப் பரிகிறது என்றால் காற்று வெளிப்படுகிறது என்பதே. மாண்> மாணுதல், மாண் > மாண்பு என்ற வழக்குகள் அறிக.

அது, இது உது என்பனவும் த் து முதலியவும் சொல்லமைப்பின் மிகப்பெரிய உயரிய தாக்கத்தை விளைத்துள்ளன. இவை அடிப்படைச் சொற்களாகும் என்பதறிக.


பர் என்பது ஓர் அடிச்சொல். பருத்தல் என்பது முன்னுள்ள இடம்வரை சென்று நிற்பதைக் குறித்தல், இதன் காரணம் பர் + உ என்ற இரு கருத்துக்கள் அச்சொல்லில் அடங்கி இருப்பதே. பர (பரத்தல் ) என்ற சொல்லில் இங்கிருந்து அங்குவரை சென்று நீளல் என்பதைக் குறிப்பாகத் தெரிவிக்கிறது. பர் என்ற அடிச்சொல்லும் அ ( அங்கு) என்ற செல்லுதல்- சேர்தல் குறிக்கும் சொல்லும் கலந்துள்ளன. பர்+ = பரி (பரிதல் ) என்பதில் வெளிப்பட்டு இங்கு அல்லது இவ்வெல்லையுடன் நின்றுவிடுதல் என்பது குறிக்கப்படுகிறது. பர் என்பது வேறன்று,  ப, பல், பர் என்பன தொடர்புடைய கருத்தினடிகள். பலகை என்ற சொல்லை எடுத்துக்கொண்டால் பல், , கை என்ற சொல்-இயை கருத்துகள் உள்ளன. பல் என்பது பொருளின் நீட்சிக் கருத்து. அங்குவரை என்பதைச் சொல்ல அ வந்தது. கை என்பது கு+. கு என்பது சேர்விட எல்லையையும் ஐ என்பது அவ்விடத்து முற்றுப்பெறுதலையும் குறிக்கிறது. ஐ என்பது முடிபு காட்டுதலின் விகுதியுமாகும். Something flat and extending and ending there என்ற பொருள் தெளிவாய் உள்ளது. இது ஒரு கோட்டியல் விரிவு என்பது தெளிவு. (linear extension). , பல், பர் என்ற அடிச்சொற்களை மீண்டும் கவனித்து இக்கருத்துக்களை நன்கு உணர்ந்துகொள்ளலாம். லகரம் ரகரமாய்த் திரியும். ஆகவே பர் -பல் தொடர்பு காண்க. ப என்பது பல் அல்லது பர் அல்லது இரண்டன் கடைக்குறை ஆகும். பை என்ற சொல்லிலும் இவ்வாறு உறைபொருள் காணலாம். - பட்டைவடிவிலானது; ஐ அல்லது அய்: அங்கு சென்று அல்லது நீண்டுசெல்லாமல் முற்றுறுதல். வேறுபொருள் புகுத்தினாலன்றி பட்டைவடிவில் மிக நீண்டு  செல்லுதல் இல்லாத ஒரு பொருள்.


பரு என்ற அடிச்சொல் அது என்னும் இடைநிலை பெற்று அம் என்று விகுதியும் பெற்று முடியும், அதுவே பரு+அது+ அம் = பருவதம் என்னும் சொல். இது மலையைக் குறிக்கும். சொல்லமைப்புப் பொருள், பருத்ததென்பதே மலையென்னும் சொல்லுக்கும் பார்ப்பதற்கு மலைக்க வைப்பது, ஆகவே பரியது என்பதே பொருளாகும். இவ்வடிச்சொல் ( பரு ) பார் என்றும் திரியும். இவ்வாறு: பருவதம் > (பருவதி ) > பார்வதி என்று. வ்+ அது என்பன வதி என்று திரிதல் காண்க. பர என்ற சொல்லும் பார் என்றே திரியும். இது பரத்தற் கருத்துடைய சொல் இவ்வாறு இரண்டும் பார் என்ற வடிவினையே தம் திரிபில் கொள்ளினும், இம்மயக்கினால் தெளிவு தொலைந்துவிடாத தன்மையைத் தமிழ்மொழி பெற்றுள்ளது.


பரு> பார் > பார்வதி,

பர > பார் > பாரி ( வள்ளல் பாரி, உலகிதன்பால் பரந்த அன்பும் அருளும் உடையோன் என்பது பொருள்)


என்றவாறு அறிக.


, , உ என்னும் சுட்டுகள் சொல்லின் தொடக்கத்தில் வந்து சொல்லமையும். சொல்லின் இறுதியில் நின்றும் சொல்லமையும்.


பர > பரத்தல். பர என்ற அடியில் அகரம் இறுதியில் நின்று சொல்லமைந்தது காண்க.

ஆழி : இச்சொல்லின் இறுதியில் இகரம் ( சுட்டு) நின்று சொல் அமைந்ததும் காண்க.


இனி இது என்பது இடைநிலையாய் நின்று அமைந்த சொல்:


கணித்தல் - வினைச்சொல்;

கணி + இது + அம் = கணிதம். இங்கு ஓர் இகரமும் ஓர் உகரமும் கெட்டு ( மறைந்து) சொல்லமைந்தவாறு கண்டுகொள்க.

கணி + + கு = கணக்கு. அங்கு இங்கு என்பதில் வந்த அதே குகரம், உருபாகவும் வருவதுடைய அதே குகரம் இங்கு விகுதியாய் வந்தது. அகரச் சுட்டு இங்கு இடைநிலையாய் வந்தது

கணக்கு என்ற சொல்லில் இடைநிலை, கணிதம் எனற்பாலது நோக்க வேறு ஆயிற்று..


அறியவே, தொல்பழங்காலத்துச் சொற்களின் இயைவுகளை அறிந்து விளக்கம் கொள்க.


மெய்ப்பு: பின்,

மெய்ப்புக்கு முன் வாசிப்போர் தட்டச்சுப் பிறழ்வுகளைத்

திருத்தி வாசித்துக்கொள்க. பின்னூட்டமும் இடலாம். நன்றி.

அழிந்துவிட்ட இடுகையின் மீட்டுருவாக்கம் இது.




சனி, 24 அக்டோபர், 2020

விமரிசை

வில் என்பதன் அடிக்கருத்து யாதெனின் அஃது நீங்குதல் என்பதே.இதனால்தான் வில் என்னும் கருவியைக் குறிக்கும் சொல்லும் அப்பெயர் பெற்றது. வில் என்ற அடிச்சொல்லே வில் என்ற முழுச்சொல்லாகவும் வந்து கருவிக்குப் பெயரானது.

விற்றல் அல்லது ஒரு பொருளை விலைக்குப் பிறனிடத்துப் போக்குதல் என்பதும் நீங்குதற் கருத்தே.  விற்போனை நீங்கிப் பொருள் வாங்குவோனிடத்துச் செல்கிறது.

வில் > வில்+தல் > விற்றல்.  (விலைக்குக் கொடுத்தல்.)

வில் > வில்+ ஐ > விலை.  (  பொருள் பிறன்பால் நீங்குதற்குப் பெறுவோனிடத்து நீக்குவோன் பெறும் பணம் அல்லது ஈட்டுத் தொகை)

வில் > விற்பு ( பு விகுதி )  > விற்பு+ அன் + ஐ =  விற்பனை.  இதில் பு, அன் என இரண்டு இடைநிலைகளாக வந்தன.  ஐ என்பதே சொல்லின் இறுதிநிலை அல்லது விகுதி. ஏனை இரண்டும் ஈண்டு சொல்லை முடிக்கவில்லையாதலின் அவற்றை விகுதிகள் என்பதினும் இடைநிலைகள் என்பதே பொருத்தமானது. இவண் ஐ எனற்பாலதை விகுதி மேல் விகுதி மேல் விகுதி எனினும் அதுவும் இச்சொல்லை உணர்ந்துகொள்ள வருமொரு விளக்கமென ஏற்றல் தகுதியானதே.. பானை செய்யும்போது அதை வனைந்து பயன்பாட்டுக்கு விடுதலே பணிமுடிவு ஆகும். ஏனைப் பெயர்களெல்லாம் சொல்லமைப்பை உணர்விக்கும் கருவிகளே.  ஆதலின் அடிப்படை உணர்ந்தார்க்குப் பெயர் என்பது ஒரு பொருட்டன்று. ஆயினும் ஒவ்வொரு கலையிலும் அறிவியலிலும் ஒன்றைத் துல்லியமாக அறிந்துகொள்ளுதல் இன்றியமையாதது ஆகும்.   

வீங்குதல் என்பதிலும் நீங்குதல் கருத்து உள்ளது. ஒரு சுவருக்கும் இன்னொரு சுவருக்கும் இடைவெளி பெரிதாகும்போது நீங்கி எழுந்த சுவரே இடைவெளியை உண்டாக்குகிறது. இடைவெளியில் காற்றோ நீரோ வீக்கத்திற்குக் காரணமாகலாம். ஆனால் நீக்கம் ஏற்பட்டுவிட்டதென்று உணர்க. இங்கு சுவரென்றது சதைச் சுவர், தோற்சுவர் என்று அறிக.

வீங்கு என்பதில் கு என்பது வினையாக்க விகுதி.  மூழ்கு என்பதில் கு  போலவேயாம். வீ என்பதே அடிச்சொல்.  இதை உணரவே,  வி,  என்பதும் வில் என்பதும் அடிச்சொற்களே என்றும் அறியவேண்டும்.  இவற்றைப் பெருள்தொடர்பு பட்ட அடிவடிவங்கள் என்றும் உணர்க.  விலகு என்ற சொல்லிலும் வி என்பதே அடிச்சொல். இதனை வில் அடிச்சொல் எனினும் அதுவேயாகும். விலகு என்னுங்கால்  வில் அடியென்பது விளக்கத்திற்கு எளிதானதாய் இருக்கும்.  வில்+அ + கு என்று காட்டி, விலகு என்று சொல்லமைப்பைக் காட்டிவிடலாம்.  அடிப்படை வேறுபாடு ஒன்றுமில்லை. விளக்க எளிமையே அது. இன்றேல் வி + கு என்று நிறுத்தி இடையில் வரும் ல் என்ற ஒலிக்கு விளக்கத்தினை வருவித்துரைக்கவேண்டும். எனினும் வி என்பது மூலமென்றும் வில் என்பதன் அதன் வளர்ச்சி என்று ஏற்புழிக் கூறினும் அடிப்படை வேறுபாடு ஒன்றுமில்லை. இது மொழிக்கு மொழி வேறுபடும். தமிழில் வி, வீ என்றும் ஆங்கிலமொழியில் அதே பொருளில் வீர் அல்லது வியர் என்றும் (veer)  என்றும் வருகிறது பார்த்தீர்களா.  பொருள் அணுக்கம், ஒலி அணுக்கம் இரண்டுமிருக்கிநன்றனவே!. இப்படி உலக மொழிகளை ஒப்பாய்வு செய்கையில் எந்த எந்த வடிவங்கள் விளக்க எளிமை தருவன என்று தெரிவுசெய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். மக என்பது தமிழுக்கு நல்ல அடிவடிவம்;  Mac  என்பது ஆங்கிலத்துக்கு நல்ல அடிவடிவம் ( MacDonald - son of Donald). ஒரே மொழிக்குள்ளும் அடிவடிவங்கள் மாறிமாறிக் காணப்படும். சீனமொழிக்கு தா என்பது நல்ல அடிச்சொல்; தமிழுக்கு தாக்கு என்பது நல்ல வினையடிச்சொல்.  வி, வீ, வில், விய், விய எல்லாம் தொடர்பின.  விய > வியனுலகு என்னும்போது, ஓர் எல்லை இன்னோர் எல்லையினின்றும் நீங்கி அதன்பின் விரிந்து சென்ற காரணத்தினால் விரிவு உண்டாகிறது.  எமக்கு அவற்றின் ஒற்றுமை மகிழ்விக்கிறது. உங்கட்கு அவற்றுள் வேற்றுமை உறுத்தலாம். ஒவ்வொருவருக்கும் உண்மையறிவு வேறுபடும்.  நுண்ணிய நூல்பல கற்பினும் தம் உண்மையறிவே மிகுமன்றோ?

விர்> விய் > விய > வியா > வியாபி > வியாபித்தல்.  எல்லையினின்று எல்லை விலகுதலே நீங்குதல், விரிதல் எல்லாம்.

விர் > விரி.

வி > விம் > விம்மு > விம்முதல். எல்லை விரிவும் பெருக்கமும்.

வி > விம்மு > ...

விம் + மரு(வு) > விம்மரு+ இயை > விம்மரிசை > விமரிசை.

விம்முதல் என்பது நீங்கி விரிதல். 

மருவுதல் என்பது நெருக்கமாகுதல்.

இயைதல் எனல் ஒன்றுபடுதல்

ஒரு விழா விமரிசையாக நடைபெற்றது என்றால் கூடியிருப்போர் விரிந்து பெருகி, நெருங்கி மருவி மனமோ பிறவற்றாலோ இயைந்து அவ்விழா நடைபெற்றது என்று பொருள். சொல்லில்தான் என்னே அழகு. இயை என்பதும் இசை என்பதும் ஒன்றே.  ய - ச திரிபு.

நீங்களே விரித்து அறிந்துகொள்ளுங்கள்.


எழுத்துத் திருத்தம் பின்பு.

வெள்ளி, 23 அக்டோபர், 2020

விமல - சிறந்த மலர்.

 இப்போது தமிழ்மொழியானது பொருளுரை பகர்வதில் எவ்வாறு சிறப்புடைக் கருவியாகிறது என்பதைச் சிந்தித்து உணர்வோம். இதனைச் சில எடுத்துக்காட்டுகளின் மூலமே விளக்கமுடியும். 

மனிதன் இப்புவியில் வாழுங்காலம் வரை எதனாலும் மாசுபட்டுவிடாமல் எதுவந்து தன்னைப் புடைத்து இறுக்கியபோதும் அதிற்பட்டுத் திறமிழந்து மாய்ந்து விடாமல் தப்பிப் பிழைக்கும் தந்திரம் அறிந்து வாழவேண்டும். அவனை நோக்கி வருவன வெல்லாம் வெள்ளித் தட்டில் கவருமாறு வைக்கப்பட்டு வருவதில்லை. நடந்து போகும்போது வழியில் உள்ள மேடுபள்ளங்களுக்கு ஓர் அளவில்லை. தப்பவேண்டும் இடறாமல் தாண்டவேண்டும்.  எதிர்வரும் தடையானது தூண்போலும் இருக்கலாம். நெளிந்தோடும் நதிபோலும் இருக்கலாம். தப்புதல் தந்திரம் (தம்/தன்) திறம்).1  தப்புவதற்கு மனிதர் அறிந்த வழிகளிலொன்று தவம் மேற்கொள்வது.  அதாவது மனவலிமையால், உள்வலிமையையும் வெளிவலிமையையும் கொண்டு தப்புவதே தவம்.2  தப்பு> ( இதை இடைக்குறைத்து ) தபு >  ( இதை வினைச்சொல் ஆக்கினால்) > தபு(தல்) > ( இந்த தபு(வுடன் அம் என்ற தொழிற்பெயர் விகுதி இணைத்தால்)   தபு+ அம் > தபம்,  (பகரம் வகரமாகும் திரிபை அச்சொல்லினுள் உய்த்தால் அது ) > தவம் ஆகிறது.

இதற்கு அறிஞர் ஓர் எடுத்துக்காட்டு உரைப்பதுண்டு.  அவ்வுதாரணம்,  தாமரை மலர்.  தண்ணீருக்கு மேலிருந்துகொள்ளும்,  அதில் மூழ்குவதில்லை. தண்ணீர் அதன்மேல் துளிகளாய்க் குதித்தேறி விழுந்தாலும் தானே வழிந்தோடிவிடும். " தாமரை மேல்,  தண்ணீர்த்துளி போல், தாரணி வாழ்வினில் மேன்மை கொள்" என்று கூறுவர்.

தாமரை தண்ணீரில் அதன்  மட்டத்திற்குத் தாழ்ந்திருக்கிறது.    (தா).   

தண்ணீரை மருவிக்கொண்டும் நிற்கிறது.    ( மரு  ).

மருவுதல் என்றால் மிகுந்த நெருக்கமுடன் இருத்தல்.   (  மரு > மருவு > மருவுதல்).

இந்த இலக்கிலிருந்து தாமரை என்ற சொல் எழுந்தது.

தா+ மரு + ஐ.

அ என்பது அங்கு என்று பொருள்படும் சுட்டுச்சொல்.

அங்கு அதற்குமேல் செல்லாமையைக் குறிக்க ஏற்பட்ட நிறுத்தமே யகர ஒற்று.

அ + ய் = ஐ ஆனது.  இவ்வாறு ஒரு எழுத்துமுற்று வைக்கப்பட்டு, ஐ விகுதியாய் நின்றது.   மிகுந்து நிற்பதே விகுதி.  மிகுதி > விகுதி.  மி-வி திரிபு. இன்னோர் எடுத்துக்காட்டு:  மிஞ்சு > விஞ்சு.  ஐ விகுதியின் திறத்தை இவ்வாறு உணர்ந்துகொள்ளலாம்.

தாமரை என்ற சொல்லும் மேற்சொன்ன கருத்தையே உள்ளடக்கி அணிபெறுகிறது.

தாமரைக்கு இன்னொரு சொல் கண்டனர். அதன் கருத்தும் மேற்சொன்னவாறே சென்றது. அச்சொல்தான் கழுமலர் என்பது.  தண்ணீரால் அடிக்கடி கழுவப்படும் மலர்தான் கழுமலர்.  இதனை அழகுறுத்த, சில எழுத்துக்களைக் குறைத்தனர்.   கழுமலர் >  கமல ஆனது.   ழுகரமும் ரகர ஒற்றும் வெட்டுண்டு,  இடைக்குறையும் கடைக்குறையும் ஒருசேர நின்றமை காண்க.  இதை விகுதியேற்றி அழகுசெய்து  " கமல + அம்"  >  கமலம் என்றனர். இச்சொல்லைப் பலரும் ஏற்றுக்கொண்டனர். இவ்வாறு எழுத்துக்களைச் சிரைத்துத் தள்ளுவது சிலருக்குப் பிடிக்காமல் இருந்திருக்கலாம். அவர்களை மனநிறைவுறுத்த வேறுவழிகளைக் கையாண்டனர்.

விழுமிய மலரே விழுமலர்.  விழுமிய என்றால் சிறந்த என்று பொருள்.  இது:

விழு+ மலர் >  வி + மல >  விமலம் ஆயிற்று. இச்சொல்லும் நன்கு உலாக்கொண்டது.  மலர்  அழகியது.  விமலம் என்பது  சிறந்த அழகு என்ற பொருட்பெறுமானம் உற்றது. இறைவன் விமலன் என்று சுட்டப்பெற்றான். 

தாமே புழக்கத்தால் திரிந்த சொற்களும் புலவர்களால் விரைவுறுத்தித் திரிக்கப்பட்ட சொற்களும் என இத்தகு சொற்கள் இருவகையான திரிசொற்களாயின. கழுமலர் என்பது இயற்சொல்.  கமலம் என்பது திரிசொல்.

இவ்வாறே அறிக மகிழ்க.


குறிப்புகள்

1 தன்+திறம் >  தந்திரம். சொல்லாக்கப் புணர்வில் தன்றிறம் என்னாமல் தந்திரம் என்றே வரும்.   எ-டு:  முன்+தி >  முந்தி.  தம் திறம் > தந்திரம் எனினும் ஆகும். இது அறிஞர் பிறர் சுட்டியதே.

2 மனவலிமை, உள்வலிமையை இயக்கவும் தேவைப்படுகிறது. வெளிவலிமையை இயக்கவும் தேவைப்படுகிறது.  உள்வலிமை என்பதில் உடல்வலிமை ஒரு பகுதி; மனவலிமையே  இன்னொரு பகுதியாகவும் உள்ளது. மற்றவெல்லாம் வெளிவலிமை. அதைத் துணைக்கழைக்கவும் தன் மனவலிமை தேவைப்படுகிறது.


மெய்ப்பு - பின்னர்




செவ்வாய், 20 அக்டோபர், 2020

சாம்பவர், சாம்பவ மூர்த்தி

பவம் - சொல் தோற்றம்.

தலைப்புச் சொற்களை ஆய்வு செய்யுமுன், பவம் என்ற சொல்லைப் பொருளறிந்து கொள்வோம். இது பரவு என்னும் வினையில் திரிந்தமைந்த சொல்லே என்று கொள்ளவேண்டும்.

இதிலுள்ள ரகரம் இடைக்குறைந்தால் பவு என்றும் அதில் அம் இணைந்தால் பவம் என்றுமாகும். பரவுதல் என்ற செயலின் பல்வேறு வகைகளுள் ஒன்றான பிறப்பினாலும் உயிர்கள் எங்கும் பரவும் என்பது தெளிவு. ஆகவே பிறப்பு என்று  கூறப்படும் பொருளதான பவம் என்பது,  "பரவம்" என்றே முன் னிருந்திருக்கிறது என்பதை இஃது உறுதி செய்கிறது

பிறவிப் பவம்

பவத்திறம் (பவத்திரம்) என்று மணிமேகலைக் காப்பியம் கூறும்  ---"வீணே பிறந்து உலகிற் பரவிப் பல்வகைத் துன்புறுதலுக்கும் ஆளாதலை" க் குறிக்க எழுந்த --- பொருத்தமான பதமாகவே இஃது உள்ளதென்பதும் மறு உறுதி ஆகிறது . பிறவிப் பவம் என்பதும் நோக்குக. பவநோய் தணிக, மாயை அகல்க என்ற கூவுதலும் இதை நல்லபடி விளக்கும்.

உலகப் பவம்

இவ்வாறு பிறப்பினால் வீணாக மனிதர்கள் பரவியது உலகம் ஆகிறது. இதனால் பவமென்பதற்கு உலகம் என்ற பொருளும் உண்டாகி நம்மைத் தெளிவிக்கிறது. உலகில் மக்களிருத்தல் அவர்கள் இதை விட்டு நீங்கி ( இறந்து ) பேரின்ப வாழ்வெனும் மேலுலக வாழ்வினை அடைதற்கு என்பதனால், மேலும் அவர்களின் பவம் (பரவம், பரவுதல் ) அதே உண்மையையே வெளிப்படுத்துகிறது என்பதனால், பவம் என்பதற்கு உண்மை, பேரின்பவாழ்வு என்ற பொருளடைவுகளும் உண்டாகின்றன

பவம் -  உண்மை

நிகழ்வு என்பது நோக்கினையும் அஃதை அடைதலையும் உணர்த்தும் ஒரு வித ஆகுபெயர்போல் ஆகிவிடுகிறது. இதைச் சொல்லாகுபெயரினுள் அடக்கிவிடலாம். "ஒன்றின் பெயரால் அதற்கியை பிறிது " (நன்னூல்). பிறப்பும் பின் இறப்பும் பேரின்பத்திற்கு ஆகிவருதல்பிறப்பு பல என்பதனால் இடையில் இறப்பு குறிப்பிடவேண்டாமை காண்க

காலப் பரவல் -  பவம்

கரணங்கள் கணியநூலில் ( சோதிடத்தில்) பதினொன்று , இதுவும் காலப் பரவலும் அதனின் உட்பகுப்பும் ஆகும். எனவே இது பரவம் > பவம் என்பதை மீண்டும் திறப்படுத்தும்.


பவம், பரை என்பவற்றில் பரவுதல் கருத்து

பர என்ற வினைச்சொல்லினின்று தோன்றிய வேறு சொற்கள், பரவை, பரமன், பரையன் (பறையன் அதன் பின்வடிவம்) என்பன. பரையன் என்பது பர+ஐயன், பரை+அன் என்றும் இருவழிகளில் பிரியும். பறை(தல்) என்ற வினைச்சொல் பரவுதல் என்ற சொல்லினின்றும் கருத்தினின்றும் தோன்றியதே. பறைதலாவது, சொல் வழியாக கருத்தைப் பரவச் செய்தல். இதுவும் பரவுதற் கருத்தே. உண்மையறிய, பவம் என்பது pavam என்றே பலுக்கப்படுதல் வேண்டும். Bhavam அன்று.

அடிப்படைக் கருத்து: பரவுதல் என்பதே. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி. பரையர் என்ற சொல், நால்வகை நிலங்களுள்ளும் அடங்காமை பற்றி எழுந்ததொரு பெயர். சாதி அல்லது தொழிலால் எழுந்த பெயரன்று.    தமிழர் வகுத்த நானிலங்களிலும் பரந்து வாழ்ந்தமையே பரையர் என்னும் சொல் எழக்காரணமாயிற்று. நால் வகை நிலமே தமிழ் இலக்கியத்திலும் " உலகம்" என்று அறியப்பட்டது. மேற்கூறிய பவம் - உலகம் என்ற விளக்கத்தினை மறக்கலாகாது.  ஒருவரை " நானிலம் போற்றும் நாவலர்" என்று சொன்னால் இலக்கிய நெறியில் அது உலகம் போற்றும் நாவலர் என்றே பொருள்படும். பாலையையும் சேர்த்துக்கொண்டால், ஐந்நிலம் ஆகினும், இதன் பொருள் மாறாது

நானிலமே உலகம். இவ்வாறு பல நிலங்களிலும் பரவி இருந்த இவர்கள் பூசாரிகளாகவும் ஐயர்களாகவும் இருந்துள்ளனர். ஆதலின் பர ஐயன்> பரையன் > பறையன் என்று எழுத்துத் திரிபுச் சொல் அமைந்துள்ளது. செய்தி அறிவிப்பதும் பரவுதல் > பரப்புதலே. அதைப்பரப்பப் பயன்படுத்திய இசைக்கருவி பரை என்றே குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும். அதைப் பறை என்று எழுத்துவேறுபாட்டினைப் பெரிதும் கருதாமல் எழுதினர் என்று கருதற்குரியது.

ஒரு பறவை பறப்பதும் இடம்விட்டு இடம்சென்று பரவுதலே ஆகும். இவ்வாறு பரவுதல் "பறத்தல்" என்று சொல் ஏற்பட்டு அது பறவை என்றும் அறியப்பட்டமையின் பற - பர என்றுவரும் வேறுபாடு கருதுவதற்குரிய ஒரு பெரிய வேறுபாடு அன்று. அடிப்படைக் கருத்து பரவுதலே ஆகும். இவ்வேறுபாட்டுக்கு வெவ்வேறு எழுத்துகளை வரையறுத்தது பரவை (கடல்), பறவை (பறக்கும் உயிரி) என்று அறிந்துகொள்ள உதவியதே அன்றி அடிப்படைப் பரவுதல், பரப்புதல், பரந்திருத்தல் கருத்துகளில் மாற்றம் எதையும் ஏற்படுத்திவிடவில்லை

அத்வைதப் பறையன் என்பவர்கள் இருந்தமையின் இவர்கள் கடவுட் கொள்கைகள் தொடர்பான சிந்தனைகளில் மிகுதியாய் ஈடுபட்டிருந்தமை அறிகிறோம். இவர்களில் ஒரு பிரிவினர் பிரம்ம சூத்திரம் ஒதியுள்ளனர். சாவைப் பற்றி பெரிதும் சிந்தித்துச் சாத்திறம் இவர்கள் உண்டாக்கினர். அதுவே பின் சாத்திரம் சாஸ்திரம் என்று திரிபுற்றது

இராமாயணம் பாடிய - "தேவபாடையின் இக்கதை செய்தவர் மூவரானவர் தம்முளும் முந்திய நாவினாராகிய" வால்மீகியாரும் இக்குமுகம் சார்ந்தவரே. இவர் பெரும் சங்கதக் கவியும் முதல் அம்மொழிக் கவியுமாவார். இதை யாம் பன்முறை சுட்டிக்காட்டியுள்ளோம். சங்கத மொழிக்கு இலக்கணம் பாடிய பாணினியும் ஒரு பாணக் குல ஆசானே ஆவான், அதற்கு அவன் பெயர் சான்று ஆகும். பாண் > பாணினி ( பாண்+இன் +). பாரதம் பாடிய வியாசர் மீனவர் ஆகவே, பரையருள்ளும் உட்பிரிவு மீனவர்கள் இருந்துள்ளனர்

வந்தார் போனார் இருந்தார் என்பவற்றில் வரும் ஆர் விகுதியிற் றோன்றிய ஆரியன் என்ற சொல்லும் ஐரோப்பியச் சொல் அன்று. ஆர்தல் நிறைதல்  ---வினைச்சொல். எந்தமொழியில் வினைச்சொல் உள்ளதோ அதுவே அச்சொல்லுக்கு உரிய மொழி. இதை வகுத்துச் சொன்னவர்கள் மேலை ஆய்வாளர்களே. யாம் சொல்லவில்லை. இவர்களுக்கு உள்ள டி.என்.ஏ என்னும் இரத்தத் தொடர்புகளும் நோக்கத்தக்கவை.

சாகும் - சாம் இடைக்குறை அல்லது தொகுத்தல்.

சாதல் என்பது மக்களிடைப் பரவலாக நடக்கும் ஒரு துன்ப நிகழ்வே. ஆனால் சின்னாட்களில் அவர்கள் அதை மறந்துவிட்டு முன்போல் நடந்துகொள்வர். எப்போதும் சாவு முதலிய துன்பங்களில் தொடர்புகொண்டு அதனில் மனமும் செயலும் பரவி நின்றோர் " சாம் பவர்" ஆயினர் எனலும் ஒன்று. சாம் என்பது சாகும் என்பதன் இடைக்குறை. " தான் சாம் துயரம் தரும்" என்ற தொடரைக் காண்க. சாம் என்று இங்கு குறுகி நிற்பது சாகும் என்ற எச்ச வினையே எனலும் ஆகும். இவர்களே சாத்திறம் அறிந்து சாத்திரம் உண்டாக்கினர், அது சாஸ்திரம் ஆயிற்று. இதை (சாத்திறம் > சாத்திரம் என்பது) முன்னோர் இடுகையில் குறிப்பிட்டுள்ளேம். ஆயினும் சாம் என்பது சாம்பவர் என்ற கூட்டுச்சொல்லில் பொருளையைபு உடையதாய் வரவில்லை.

சாத்திரம் இடைக்குறைந்து சாம் ஆதல்

சாம்பவர் என்பதில் சாம் என்ற முன்பாகம் சாத்திரம் என்பதன் இடைக்குறையாம் தகுதி இலக்கணத்தில் உள்ளது.. சாத்திரம் என்பதே சாவினைப் பற்றிய அறிவின் தொகையேயாம். எனவே சாகும் சாம் என்று சொல்வதினும் சாத்திரம் > சாம் எனல் மேலும் பொருந்துவதாகிறது. சாம்பவர் = சாத்திரம் பரப்பியோர்.

சாம்+பவ(ம்)+அர் =  சாம்பவர்.


மூர்த்தி என்ற சொல்

சாக்காடுகளில் தோன்றி ஞானம் தரும் மூர்த்தியே சாம் பவ மூர்த்தி ஆகிறார்.

மூர்த்தி - தோன்றியவர். முகிழ்த்தல் - தோன்றுதல். முகிழ்த்தி > மூர்த்தி.

இச்சொல்லில் முதலாக முகு என்பது மூ என்று திரிந்தது.

அடுத்து இழ் என்ற இரண்டாம் சொற்பாகம் இர் என்று திரிந்தது.

முகு + இழ் = முகிழ். முகு (முன்னுக்கு). இழ் என்பது இர் ( இருத்தல்) தான். இகரச் சுட்டு விகுதி.

இதுபோல் திரிந்த இன்னொரு சொல்:

சூழ் > சூர். (சூழ்தல் > சூர்த்தல் ). தகரம் இரட்டிப்பது : 1 புணர்ச்சி. 2 ஒலி நயம்.

சூர் > சூறாவளி. ( சூழ்ந்துவீசும் வளி). வளி = காற்று.

முடிவுரை

(1)

இங்கு பவ என்ற பரவற்கருத்து வந்தது பெரும்பான்மை பற்றி. எல்லாச் சாக்காடுகளிலும் பரந்து நிற்பவர் எனற்பொருட்டு பவ என்று வந்தது என்றும் கருதலாம்.

பவ என்ற சொல் வந்த இன்னொரு பெயர் சரவணபவன்

சரவணபவன் என்பதில் பவன் - பரவிநிற்போன். பரமன், பரம்பொருள் கடவுள் என்பது பொருளாகிறது. சரவணப் பொய்கையில் விளையாடி நிற்போன்.  விளையாடி நிற்றல் என்பது பரவி ( வியாபித்து ) இருப்போன் எனற்பாலதே.

பவித்திரம் என்பதிலும் பரவற்கருத்து உள்ளது.  பவித்திரம் என்பது பரவி நிற்கும் திறம். பரவி - பவி. திறம் - திரம். உணரவைக்க இவ்வாறு விளக்குவது எளிது. தூய்மை என்பது அதில் பெறுபொருள் அல்லது அடைவு. கடவுள் எவ்வாறு நிற்பினும் செயல்படினும் தூய்மை என்பது மாறாப்பண்பு.

(2)

சாம்: சாத்திரம் இடைக்குறை. "த்திர" வீழ்ந்தது.

பவம் : பரவம், ரகரம் இடைக்குறை.

சாம்பவர்  குறைச்சொற்களின் ஒரு கோவைச்சொல்.

பரையர்  என்றாலும்  பறையர் என்றாலும் நான்கு நிலங்களிலும்  பரந்து வாழ்ந்த , பரந்து பல்தொழில் புரிந்த, பலசொல்லும் (அறிவிப்புகளும் ) பரவச்செய்த கூட்டத்தினரானவர்கள் என்பதே உண்மை. இச்சொல்லை ஆய்ந்த ஐரோப்பியர்களும் பறை வாசித்தலினால் இப்பெயர் வரவில்லை என்றே கூறினர். பறை என்ற வாத்தியம் எல்லா நிலங்களிலும் வாசிக்கப்படுவதாயிற்று என்றாலும் ஒரு சிறு தொகையினர் ஆங்காங்கு தொழிலாக  அதைச்செய்து பிழைத்தனர் என்பதே சரி. 

(எடுத்துக்காட்டு:  [ மாறாக ]  இடையர் என்போர் முல்லை நிலங்களில் வாழ்ந்தோர்.  )

சமஸ்கிருத முதல் கவியும் இப் (பரையர்தம்) கூட்டத்தில் வந்தவரே. பெருமுனிவர்.

தமிழர்களில் ஒரு சிலர் மிருதங்கம் /  தவில் வாசிக்கிறார்கள் என்பதால் எல்லோரும் தவில்வாசிப்போர் என்பது அறியாமையே. அதற்குப் பயிற்சி உடையோரே வாசித்தல் இயலும்.

இதற்கு வேறு விளக்கங்களும் சொல்லப்படும். ஆயினும் மெய்ப்பொருள் காண்பதறிவு.

--------------------------------------------------------

தட்டச்சுப்பிறழ்வு - பின்னர் சரிபார்க்கப்படும்.

இதில் முதற் பத்தியில் சில பதிவுக்ள்  மறைந்துவிட்டன.

அப்பத்தி மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது

குறிப்புகள்:

Religion is based on or arises from fear. (Lord Russel ) Read his philosophy.

The word "Sasthiram" from சா ( சாஸ்திரம். சாத்திரம், சாத்திறம்) supports this theory. Death, Infirmity and Old Age cause this fear. The Life of Buddha proves it. 

Also consider the terminology: " God-fearing". 

God punishes the wicked. 

பவம்¹ pavam n bhava 1 Birth origin பிறப்பு பின் பவத்திறமறுகெனப் பாவை நோற்ற காதை மணி 30 2 Earthly life உலக வாழ்க்கை சரியாப் பிறவிப் பவந்தரும் திவ் இரா மாநுச 94 3 World உலகம் பேரின்ப வீட்டுப் பவம் சிவப் பிர வெங்கைக்க 75 4 Astrol A division of time one of eleven karaṇam q v கரணம் பதினொன்றனுள் ஒன்று 5 Existence உண்மை கொள்பவத்தின் வீடென் சி போ 8 2 வெண்பா 2  

Tamil Lexicon

பவம், பரவுதல், ---  தொடர்வருதலும் அடங்கும்.


-------------------------------------------------------------------------------

---என்பவை அறிந்து மகிழ்க.


பார்வையிடப்பட்டது:  17092021 1219


திங்கள், 19 அக்டோபர், 2020

இராணுவம் தமிழ்

 "இராணுவம்"  - சொல்லினாக்கம் அறிவோம்.

ராணுவம் என்பது இகரம் இயைத்து இராணுவம் என்றும் எழுதப்பெறும் என்றாலும் அது தமிழில் ரகர வரிசையில் சொல் தொடங்கலாகாது என்பதற்காகவே ஆகும். எனவே ராணுவமென்பது தமிழ் என்று காணாது முடிப்பாரும் உளர்.

பல ரகர வருக்கத்துச் சொற்கள் தமிழில் தலையிழந்தவை.  அரங்கசாமி என்பது ரங்கசாமி என வருதல் போலுமே அது.  ஆற்றிடை நிலத்து அமைந்துள்ள கோயில் ஓர் அரங்கில் அமைந்துள்ளது போல்வதே ஆதலின்,  அரங்கசாமி என அத்தெய்வம் பெயர்பெற்றது.  ராணுவம் என்ற சொல் தமிழில் பேச்சு வழக்கில் உள்ளதே.  இதுபோது தாளிகைகளிலும் பயன்பாடு காண்கிறது.

ஓர் அரணினுள் தங்கவைக்கப்பட்டுப் போருக்கு அணியமாய்1 உள்ள படையைக் குறிப்பதே ராணுவமென்பது.  இப்போது அரண் அல்லது கோட்டைக்குளில்லாமல் வேறிடங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள படைகளும் இராணுவம் என்றே சொல்லப்படுகிறது.

அரண் > அரணுவம் > ராணுவமென்பதே இச்சொல்லின் பிறப்பு ஆகும். அர் என்பதே இதன் அடிச்சொல்.   அர் > அரண்;  அர் > அரசன்;  அர்> அரசி எனக்காண்க. இதனை விளக்கும் இடுகைகளைக் கீழே தந்துள்ளேம்.

அரணில் தங்காமல் ஒரு படுதாப் பந்தலில் தங்கினாலும் இற்றை நாளில் ஒரு படையணி  -   ராணுவமே.  இச்சொல் பொதுப்பொருண்மை அடைந்துவிட்டது.

அரணம் என்ற இன்னொரு சொல்லும் காவல், கவசம் என்னும் பொருளது. கோட்டை, மதில் என்பவும் பொருள்.

அரண் உவப்பது படையணிகளையே.  ஆதலின் அரண் + உவ + அம் = அரணுவம் என்பது படையணிகளைக் குறிக்கும். ராணுவம் என்பது தலையிழந்த  திரிபு. ராணுவம் என்பது படை நிறுவாகம் என்றும் பொருதரும்.

அரண்+ உ + அம் = அரணுவம் என்று முடிப்பினும், உகரம் இடைநிலை என்று கொள்ளினும் இழுக்கில்லை.

தமிழில் நிகண்டுகள் முதலியன பல சொற்களைப் பாதுகாத்து வைத்துள்ளன. தமிழில் நூல்கள் பல போற்றுவாரற்று ஒழிந்தன.  அவற்றில் நம்மை வந்தடையாத சொற்கள் பல இருந்திருக்கக்கூடும்.  அரணுவம் என்ற சொல்லும் அத்தகைத்தாகும்.

அரணி = ராணி என்பதும் கருதுக.

அரசன் வாழ்மனை அரண்மனை எனப்படுதலும் காண்க.  அரமனை என்ற பேச்சுவழக்குச் சொல் அர் -  அர என்ற அடிச்சொல்லுடன் இணைந்துநிற்றலின் சொல்லியலில் ஒரு போற்றற்குரிய வடிவம் எனின் மிகையாகாது.. அரண் என்ற சொல்லும்  அர் + அண் என்று இணைந்து,  அரசு நடாத்துவோர் அண்மி வாழும் இடம் என்று பொருண்மை பெறுதலும் கண்டுகொள்க.

அர் >  அர > அரசு.

அர் > அரசு >  அரசன்

அர் > அரசு > அரசி

அர் > அரை > அரையர்.   ( அர் + ஐ + அர் ). அரசுத் தலைவர்.  ஐ = தலைமை.

ஐ விகுதி எனலும் இழுக்கிலது.

அரை > ராய் ( தலையிழந்த அயல்வடிவம்).

ராஜ் ( அயல்வடிவம்)  ரெக்ஸ் - இலத்தீன் திரிபு)

ரெஜினா -  அரசி. ( அயல்வடிவம்.)

அரள், அரட்டு, மூல முழுவடிவங்கள். 

சில தமிழ்ச்சொற்கள் தமிழில் வழக்கிழந்து இனமொழிகளில் வழங்கி வீடுதிரும்பி அறியப்படுதலும் உண்டு. இவ்வாறு அயல் எட்டிய சொற்கள் பெரும்பாலும் திரிந்துவிடுதல் இயல்பு.  ஆய்வின்மூலம் இவற்றை அறிந்துகொள்ளுதல் இயல்வதே என்றறிக. 

குறிப்புகள்:

நிறுவாகம் : நிறுவப்பெற்ற ஆட்சியமைப்பு.  (  நிருவாகம் என்பது சரியன்று).

அரசன் முதலிய சொற்கள்: https://sivamaalaa.blogspot.com/2020/09/blog-post_10.html

மற்றும் https://sivamaalaa.blogspot.com/2020/06/blog-post_11.html

1  அணியமாய் -  தயாராய்

அர் > அரமன் > ராமன்.

அர =  ஆளும்;  மன் > மன்னன் என்றலும் நுணுக்கமாய் அணுகத் தக்க வடிவமே.

இர் > இர் ஆம் மன் : இருள் நிறத்து மன்னன். ( நீல நிறத்து மன்னன் ).  ஆகும்> ஆம்.


தட்டச்சுப் பிழைகள் பின் திருத்தம் பெறும்.

சில திருத்தங்கள்  20.10.2020


 


ஞாயிறு, 18 அக்டோபர், 2020

சீர்கரித்தல் சீகரித்தல்

 கரித்தல் என்ற இறுதியாய் முடியும் பல சொற்கள் உள்ளன. இவ்வாறு முடியும் சொற்களில் ~கரித்தல் என்பது ஓர் துணைவினையாய் முடிவதாகும். 1* இதைக் கொஞ்சம் விவரிக்கலாம் ( "விரி- வரிக்கலாம்").

உப்புக் கரித்தல் -  இங்கு கரித்தல் என்பது துணைவினையன்று.  பொருண்முடிபு காட்டுவதால்.

சேகரித்தல் -  இதில் கரித்தல் என்பது ஒரு துணைவினை.  கரித்தல் என்பது " வர" என்று பொருள்படும்.  "கரித்தல்" எனற்பாலது,   ஆதலின் ஒரு துணைவினை.

சேகரித்தல் என்பதில் சே என்பது சேர் என்பதன் கடைக்குறை.

அருகுதல் என்பது குறைதல் என்னும் பொருள் உடையது.  இன்று செப்புக்காசுகள் அருகியே உலகில் வழக்கத்தில் உள்ளன.  இவ்வாக்கியத்தில் அருகி என்பது மிகக்குறைந்து என்ற பொருளைத் தரும்.

அரு என்ற உரிச்சொல்,  அருகு(தல்),  அரி(த்தல்)  என்று வினைச்சொற்களாகும்.

அருகுதல் என்பதில் போல,  அரித்தல் என்பதிலும்  குறைதல் என்பதே அடிப்படைப் பொருள்.  ஏனெனில் நீங்கள் ஓர் ஆற்றங்கரையில் உட்கார்ந்துகொண்டு, எதிரில் நீரில் உள்ள செடிகொடிகளை  அரித்தெடுக்கும்போது,  கைக்கெட்டிய தூரம் வரை உள்ள அவற்றை உங்களுக்கு வேண்டிய அளவு அருகில் (கிட்டக்)  கொண்டுவந்துகொள்கிறீர்கள்.

அப்படிக் கொணர்ந்து அவற்றை எடுத்துக்கொள்கிறீர்கள். இதனைக் காண்பவர், கொடிகளை அரித்து எடுத்தார் என்பர். விரலால் எடுத்திருக்கலாம். அல்லது ஓர் இரும்பு வரட்டியால் எடுத்துமிருக்கலாம். ஒரு முனைவளை குச்சியால் எடுத்து இருக்கலாம்.  எப்படியோ காரியம் ஆயிற்று.

மீண்டும் சொல்வது  அரு > அரி > அரித்தல் ( அருகிற் கொணர்தல்) என்பதே.

எனவே, சேகரித்தல் என்பது சேர்+ கு+ அரித்தல் >  சேகரித்தல் ஆகி உருவான சொல்.

கு என்பது சொல்லாக்க இடைநிலை. சேர்தலிடம் குறிக்கும்.

சீர்கரித்தல் என்பது சீர்மிகும்படியாகவும் வருமாறும்  தன்னிடத்து அடைவுகொள்ளுதல்.  

சீர்கரித்தல் > சீகரித்தல் > ( ஸ்ரீகரித்தல்) [ என்றும் வழங்கும்].

தமிழில் அருகியும் ஏனை இனமொழிகளில் மிக்கும் வழங்கும். 


குறிப்புகள்

1*    ~கரித்தல் என்று முடியும்  சொற்கள் சில:

அலங்கரித்தல் 

கொக்கரித்தல்

சங்கரித்தல்

அபகரித்தல்

பரிகரித்தல்


கடைக்குறை:

சீர் > சீ.  சீர் + தனம்.  > சீதனம்.  சீர்> ஸ்ரீ.  ஸ்ரீதனம்.

சீர் கொண்டுவந்தால் உடன்பிறப்பு.  (சகோதரி.)  பழமொழி.


இவற்றுள்  அறிந்தன பின்னூட்டமிட்டுப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

சீகரித்தல் -    சில அகராதிகளில் இது கிட்டுவதன்று.

மெய்ப்பு ( பின்னர்.)





புதன், 14 அக்டோபர், 2020

கண்ணும் கடைக்கணித்தலும்.

 ஒவ்வொரு சொல்லையும் தனித்தனியாக எதிர்கொண்டு  தேடிப்பிடித்து அறிந்துகொள்ளலாம். ஆனால் இவ்வாறு செல்வதாயின், அதிக முயற்சியும் காலமும் தேவைப்படும்.  குறைந்த கால அளவில் மிகுந்த எண்ணிக்கையிலான சொற்களை உணர்தல் விழைந்தால்,  சொற்களின் அமைப்புகளையும் மூலங்களையும் அறிந்துகொள்வது பெரிதும் உதவும் என்று ஆசிரியன்மார் சொல்வர். எடுத்துக்காட்டாக, பூ என்ற சொல்லுக்கு உள்ள பொருள்களில் தோன்றுதல்( உண்டாதல் )  என்பதும் ஒன்றாம்.

இவ்வுலகம் உண்டான ஒன்று என்று மக்கள் நினைத்தனர். ஆகையால் உலகிற்கு ஏற்பட்ட பெயர்கள் சிலவற்றில் இப்பொருளைக் கண்டு மகிழலாம்.

பூமி. -- "பூத்த இவ்வுலகம்." --   தோன்றிய இவ்வுலகம்.   இச்சொல்லை வாக்கிய வடிவில் தருவதானால்,  பூத்திருக்கும்  இது என்ற கருத்துதான்   --- சுருங்கி  பூ-ம்-இ என்று என்று அமைந்தது.  பூம் = பூத்திருக்கும்   > பூ~ம்.  இ - இது.

இப்புவியும் அழகியது.  ஓர் பூவனம்.  தோன்றிய வனம்.  இது சுருங்கிப் புவனம் ஆனது.

பூ இ - பூத்த இது >  பூவி ( முதல் சுருங்கி )  புவி,  அதே பொருள்.


இவ்வாறே கண் என்ற சொல்லினின்று அமைந்த சொற்கள் பல.  பழங்கால மனிதன் கண்ணால் கவனமாக எண்ணித்தான் கணிக்க அறிந்துகொண்டான்.

ஆகையால் கண் என்ற சொல்லினின்று கணித்தல் என்ற சொல்லும் வந்தது.

கண் > கணக்கு

கண் > கணிதம்.

கண் > கணி

கண் > கணியன் ( சோதிடன்)

கண்ணை மூடிக்கொண்டும் கணிக்கலாமே என்பீர். எனினும் அஃது இயல்பன்று.

இவ்வாறு அறிக.

மேலும் அறிய:  https://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_9.html

குணமென்னும் சொல்:   https://sivamaalaa.blogspot.com/2019/07/blog-post_18.html

நம் குறைகளைச் சொல்லி இறைவனிடம் / இறைவியிடம் கண்கலங்கினால்

நம்மைக் கடைக்கண்ணால் சிறிது பார்த்து அவ் இறை அருளுமாம்.  இதற்கு

கடைக்கணித்தல் என்ற சொல் உருவானது. கடைக்கண்ணால் நோக்கி அருளுதல்.

அறிவீர். மகிழ்வீர்.


தட்டச்சு பிறழ்வுகள் பின் கவனிக்கப்படும்.

மெய்ப்பு:  15.10.2020.




ஞாயிறு, 11 அக்டோபர், 2020

சீணித்தல்

 நன்றாக வளர்ந்துவந்துகொண்டிருந்த ஒரு குழந்தைக்கு,  அதன் வளர்ச்சி நிற்கவோ குறையவோ செய்யுமாயின் அது சீணித்துப் போய்விட்டதென்பார்கள். ஊர்ப்புறங்களில் "வசக்கெட்டு"ப் போய்விட்டது என்று சொல்வதுமுண்டு. இச்சொல்  (சீணித்தல் ) இவ்வாறு உருவாயிற்று:

நிற்றல் >  நித்தல். என்றாகும்.  -ற்ற என்பது -த்த என்று மாறுவது பெருவழக்கான திரிபு. ஓர் எடுத்துக்காட்டு:-

சிற்றம்பலம்

சித்தம்பரம்  லகரமும் ரகரமாய் மாறிற்று.

இச்சொல் இடைக்குறைந்து:

சிதம்பரம் ஆனது.1


இச்சொல்லின் உருவாக்கத்தை வேறுவிதமாகக் கூறுவோருமுண்டு. ஆயினும்

இதுவே சரியான சொல்லமைப்பு ஆகும்,


நித்தல் என்பது இவ்வாறமைய,3

சீர் + நித்தல் >   சீணித்தல்.

சீர்நித்தல் > சீணித்தல் >  க்ஷீணித்தல். என்றாம்.


இன்னோர் எடுத்துக்காட்டு:

சீர்த்தேவி >  சீதேவி > ஸ்ரீதேவி.

சீர் என்றது சீ என்றானது கடைக்குறை.

வாருங்கள் <  வார் + உம்+ கள் >  வா(  )+(  ) ம் + க(ள்) > வாங்க.

வார் > வா.  சீர் > சீ.

வாராய், நீ வாராய்.  வரு+ ஆய் என்பது வாராய்  ஆகும்.

வாரீர் வாரீர். என்பதும் காண்க.

 எடுத்துக்காட்டுகள் சில தரப்படும். இன்னும் வேண்டின் நம் இடுகைகள் பலவும் வாசித்துக் குறிப்புகளும் கொண்டு போதிக்கவும்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

சீர்+வனைதல் > சீவனை > சீவனம் > ஜீவனம்.2

வனைதல் : செய்தல், அலங்கரித்தல்  என்பது.

வாழ்நாளைச் சீராக்கிக் கொள்ளுதல்.

சீர் நிற்றலே சீணித்தல் என்றாயிற்று அறிக, மகிழ்க.


குறிப்புகள்

1  பேராசிரியர் இரா.பி. சேதுப்பிள்ளை. பிறரும் கூறியுள்ளனர்.  எமது

ஆய்வும் இம்முடிவினதே.

2  உயிர் > யிர் > ஜீ.  > ஜீவன், ஜீவன.  இலங்கை ஞானப்பிரகாச அடிகளார்.

3 வற்றல் > வத்தல்.  வத்தச்சி என்ற பேச்சு வழக்கும் காண்க.

தொற்றல் > தொத்தல். ( தொற்றிக்கொண்டு நடப்பவன்).

உடற்குறை உடையோர்க்கு முன் காலங்களில் யாரும் அவ்வளவு இரக்கம்

காட்டுவதில்லை என்று அறிகிறோம்.


தட்டச்சுப்பிழைத் திருத்தம் பின்

வியாழன், 8 அக்டோபர், 2020

புட்பக விமானம்.

 புள் என்பது பறவை என்று பொருள்படும்.

புள் போல  மூக்கு, வால், பக்கங்கள் அமைவுண்ட ஒரு விமானம்தான்

புள் + பகம் + விமானம் >  புட்பக விமானம்.

பகம் எனின் பகுதி(கள்).

விழுமிய அளவுகளை உடைய ஊர்தி விமானம்.

விழு+ மானம் = விமானம் ( இங்கு ழு குறைந்தது).

விழுமிய = சிறந்த.

மானுதல் - ஒத்தல்

மானு + அம் = மானம்.  அளவு.

மானம் வரின், மானம் உடையவன் என்ற தொடர்களில்,

மானம் ஒரு பெருமை குறித்தது. சமுகத்தில் போற்றப்படும் அளவுடன்

தானும் அளவொத்து இருப்பதே மானம். அடிப்படைப் பொருள் அளவு என்பதே.

புஷ்பத்தினால் செய்யப்பெற்ற வானூர்தி பறக்காது. மலர்கள் அலங்காரம் ஆகலாம்.

புதன், 7 அக்டோபர், 2020

தூரமும் தொலைவும்

 முன் காலங்களில் தொலைவைக் கணக்கிட சில வழிகள் இருந்தன.  ஆனால் தொலைந்து போய்விட்ட ஒரு பொருள் எட்டாத தூரத்துக்குச் சென்றுவிட்டதாக எண்ணி அது தொலைவை அடைந்துவிட்டது என்றனர். ஆகவே தொலைவு என்ற சொல்லுக்கு  "தூரம்" என்ற பொருள் ஏற்பட்டது. பண்டை மனிதன் இவ்வாறு உணர்ந்துகொண்டது ஒரு வகையில் அவன் சிந்தனைத் திறனைக் காட்டுகிறது. ஒரு நாய்க்கு அதன் இயமானன் ( எஜமானன்)  தொலைவிற்போய்விடின் ஊளையிட்டுக் கேட்டுவந்திடுவான் என்று நம்பிக்கொண்டிருக்கும்.

தொலைவைக் கணிக்க முற்பட்டுவிட மாட்டாது

ஒருவன் துரத்தப்பட்டு தொலைவிற் சென்றுவிட்டால் துரத்தியவனுக்கும் துரத்தப்பட்டவனுக்கும் உள்ள இடைவெளி தூரம் எனப்பட்டது. தூரம் அல்லது தொலைவு என்பதை இப்படியும் அறிந்துகொண்டனர். துர > துரத்து.  துர + அம் = தூரம். முதனிலை நீண்டு விகுதிபெற்ற தொழிற்பெயர். இல்லற வாழ்வு வேண்டாமென்று ஒருவன் தானே தொலைவிற் சென்றுவிட்டால்,  அதுவும் துறவு என்றே சொல்லப்பட்டது. இவ்வாறு கூறவே.  துர> தூரம்,  துற > துறவு என்பனவற்றின் தொடர்பு இவற்றிலிருந்து தெளிவாகிறது.

துருவு என்ற வினைச்சொல்லும் ஒருபுறம் தொடங்கி மறுபுறம் துளைத்துச் செல்லுதலைக் குறிக்கும்.

துள் > துளை. ( ஐ )

துள் > துருவு.   துள்> துர.

இவற்றுள் உள்ள உறவினை ஆய்ந்து தெளிந்துகொள்ளுங்கள்.


தட்டச்சுப் பிறழ்வுகள் பின்.


திங்கள், 5 அக்டோபர், 2020

சாதி, தொழில் சில கற்பனை உதாரணங்கள். நெல்லர், கடலையர்.

சாதி (ஜாதி)களை வகுத்தவர்கள் அரசர்களா பூசாரிகளா என்பது ஒரு கேள்வி. இது அவ்வந் நிலப்பகுதிகளில் இருந்த நிலைமைகட்கு ஏற்ப, அரசனாகவோ அல்லது பூசாரிகளாகவோ இருக்கலாம். கோயிலுக்கு வழங்குவதற்காக ஒரு கூட்டத்தார் எப்போதும் கடலை என்னும் கூலத்தையே கொணர்ந்து கொடுத்துக்கொண்டிருந்தனர். பூசாரியும் அதைப் பெற்றுக்கொண்டார். அம்மனுக்கும் அதை ஆக்கிப் படைத்துத் தாமும் தம் குடும்பத்தினரும் வீட்டிலும் ஆக்கி உண்டு மகிழ்ந்தார். வந்து பணிந்த பிறருக்கும் வழங்கினார். நாளடைவில் இவர்கள் கடலை கொடுத்தோர் என்பதனால் "கடலையர்" என்று குறிக்கப்பட்டனர். இப்படிக் குறிப்பது ஒரு சுட்டும் வசதிக்காகத்தான் என்றாலும் அது ஒரு சார்பினரைக் குறிக்க வழங்கும் சொல்லாகிவிட்டது. இதற்குக் காரணம், நெல் க ொடுத்தோரிடமிருந்து இவர்களைப் பிரித்துச் சுட்ட ஒரு தேவை இருந்ததுதான். இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு ஒரே மாதிரி நிகழ்வுகள் அமைந்துவிடின், கடலையர் என்பது ஒரு சாதியாகிவிடும். தொடங்கிய தொழிலானது, பிறப்பினோடு ஒட்டிக்கொண்டு பிறப்பின் அடிப்படை உடையதாக மாறிவிடும். இவர்கள் என்ன சார்பினர் எனின், "கடலையர்" சார்பினர் என்றாகிவிடும். சார்பு - சார்பினர்; சார்பு (பு விகுதி) > சார்தி ( தி விகுதி). இது இடைக்குறைந்து சாதி ஆகிவிடும். ரகர ஒற்றுக்கள் ( ர் ) மறைதல் பெருவரவு. எம் இடுகைகளைப் படிக்கும்போது குறித்துக்கொள்ளுங்கள். ஏற்றுக்கொள்வதா அல்லது கூடாதா என்பதை முடிவில் செய்துகொள்ளுங்கள். பிற்காலத்தினர் இந்தக் கடலையர் பிறப்பினால் அவ்வாறு ஆனார்கள் என்று எண்ணுவது இயல்பான ஒரு விளைவுதான். சொல்லும் கடலையர் > கலையர் என்றோ, கடலையர் > கடயர் என்றோ, கடலையர்> கயர் > கயரி என்றோ வந்து தொலையும். இலத்தீன் மொழியாயின் கயருஸ் என்று திரிந்திருக்கும். சீனமொழியாயின் "கைருங்" என்றிருக்கும். மலாய் மொழியில் கய்ராங் என்பது ( சீமாங் போல ) தோன்றக்கூடும். அவனவன் வாய்க்கிசைய வருமாயினும் சில விதிகள் மேல் எடுபடலாம். நெல் கொடுத்தோர் நெல்லர் என்று பெயர் பெறுவது இயல்பு. எப்படியும் இதெல்லாம் காலப்போக்கில் திரியும். நாக்கு என்னும் உறுப்பும் உதடுகளும் காரணம். பூசாரிக்குப் பதில் கடலை அரசன் அல்லது அவனது அதிகாரிகளிடம் இறுக்கப்பெற்றிருப்பின், இதெலாம் அரசு தொடர்பான நிகழ்வுகளும் விளைவுகளாகவும் ஏற்பட்டிருக்கும். நெல்லர் உயர்வும் கடலையர் தாழ்வும் எப்படி வந்திருக்கும்? நெல்லுக்கு அதிக விலை அரசு க ொடுத்தால் நாளடைவில் உயர்வு தாழ்வு ஏற்படும். சில நாடுகளில் உயர்வு தாழ்வு ஏற்படவில்லை. இது மக்களையும் மனப்பாங்கையும் பொறுத்ததாகும். கடலை கொடுத்தோர் தங்கள் சாதிப்பெயரை கடலை + அர் என்று பிரித்தறிதலின்றி, கடல் + ஐயர் என்று பிரித்து, கடலாடு பிரபுக்கள்1 என்று கூறி, மேனிலை கூர்தல் கூடும். எவையாயினும் எளிமையாகுவதில்லை. நெல்லர் கடலையர் என்ற சொற்கள் புனையப்படவில்லை என்று தெரிகிறது. அதனால் இல்லாத சொற்களைக் கொண்டு உணர்விக்க இவ்விடுகை முனைந்துள் ளது. நெல்லரி என்ற சொல் உள்ளது. நெல்லரி தொழுவர் என்ற தொடர் புறநானூற்றில் (209) வந்துள்ளது. நெல்லரி - கைப்பிடி நெல்கதிர். நெல் உழவு தொடர்பான சொற்கள் பல வழக்கிழந்து வருகின்றன. இற்றை நாளில் இவற்றைக் காப்பதும் கடினமே. முயற்சி செய்க. திருத்தம் பின்னர். குறிப்பு: 1. பெரு > பெருமை; பெரு > பெருபு > பிரபு ( திரிசொல் ). ஆகுபெயராய் பெருமை உடையவரை (ஆளைக்) குறிக்கும். edits and paragrahing have been lost. (error) after posting.