புதன், 30 நவம்பர், 2022

கு, கூ. குடு, குவ, குவி முதலான அடிச்சொற்கள் விளக்கம்.

 கு என்ற ஒலிக்கு மிகப் பழங்காலத் தமிழில்  " கூடியிருத்தல்",  "சேர்ந்து(வாழ்தல்)"   "ஒன்றாகவளர்தல்"   என்றிவ்வாறான பொருண்மைகள் அடிப்படையாக இருந்தன என்பதை இற்றை நாள் ஆய்வுகள் தெரிவித்தல் தெளிவு.  இப் பொருண்மை தெரித்தலில்,  குறிலுக்கும் நெடிலுக்கும் வேறுபாடுகள் இல. கூடு என்பதும் இணைந்திருத்தல்  குறிக்கின்றது.  குடு  ( குடும்பம்,  குடி)    என்பதும் அவ்வாறே இணைந்திருத்தலைத்தான் குறிக்கின்றது. கூடு என்பது குருவிகள் கூடிவாழ் இடத்தினைக் குறிக்கிறது என்பதையும்,  மனிதன் செய்துவைத்த கூண்டு என்பது இவ்வடிச்சுவடுகள் பற்றியமைந்த சொல் என்பதையும் அறிய எறிபடை  அறிவியலைத் தெரிந்திருக்க வேண்டியதில்லை. அதனால்தான் சொற்கலை* ( சொல்லின் கலை அல்லது கல்வி )  நமக்கு நுகர்பொருளாயும்  பரிமாணம் அடைந்துள்ளது.  

குவி(தல்).  குவவு(தல்), 

குவிந்த வேர்வகை,  குவா என்று  ஆவிறுதி பெற்றமைந்ததுடன்,  கூவை என்றும் நெடின்முதலாயும் அமைந்தது காண்க.   குவி > குவா,  இது  கல் > கலா என்பதுபோலும்,  காண்க.

குவிந்ததுபோலும் ஒரு சிப்பி,  குவாட்டி என்னும் பெயரினதாயிற்று.

குவியுருவினதாய பாக்கு,  குவாகம் ( குவி+ அகம்).

குவளை -  குவியுருவக் கடுக்கன்.

குவளை - குவியுருவின் மலர். 

குவளை மாலை யணிந்தார்,  வேளாண்மக்கள்,  எட்டியணிந்தார் செட்டிகள் போலுமேயாகுவர்.

இனிக் கூடி யிருக்கும் , வாழும் ஊர் குவலிடம் எனப்பட்டது.

நாம் வாழும் ஊர் . நம் ஊர்.   அப்பால் உளளது உலகம்.   அப்பால் என்பதை "அ" என்ற சேய்மைச் சுட்டு உணர்விக்கும். 

குவ >  குவல் >  குவல்+ அ+ அம் (விகுதி) >  குவல+ய்+ அம் > குவலயம்.

குவ> குவல்  ( குவ+ அல் )  - அல்:  சொல் இடைநிலை.

ய்  -  யகர உடம்படு மெய்.

அம் -  அமைந்தது குறிக்கும் இறுதிநிலை ( விகுதி).

குவலிடம் -  குவிந்து வாழும் ஊர்.

குவலயம் -   சூழ் உலகு..

குறிப்புகள்

பரிந்து மாணுதலே பரிமாணம்.  பரிதலாவது உள்ளிருந்து புறம்வருதல் (  சிறந்து விரிதல்.பின் மாணுறுதல் ).  இச்சொல் எழுத்து முறைமாற்று அமைப்பில் விசிறி > சிவிறி என்றமைதல் போல்,  பரிணாமம் என்று மாகும். இன்னோர் எ-டு:   மருதநிலம்சூழ் நகரம்:    மருதை > மதுரை.  இதைப் பண்டை மக்கள் மருதை என்றே அழைப்பினும்,  மதுரை என்று சொன்னது கல்வியுடையார் செய்த திரிபு என்று முடிக்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்னர்.

எழுத்துப் பிழைகள்  - பின்னூட்டமிட்டு உதவுக.

திருத்தம்: சொற்கலைதான், " சொற்களை"  அன்று. கற்கப்படுவது எதுவென்றாலும் அது கலை. கல்( கற்பது என்பதன் வினைச்சொல்) > கலை.


சடிதி, மற்றும் சடுதி, ஜல்தி

 அடு >  அடுத்தல் என்பதன் வினை எச்சம்  அடுத்து என்பது.

அடுத்து நடைபெறும் நடனக் காட்சி என்ற தொடரில்  அடுத்து என்பது நடைபெறும் என்பதற்கு அடைவாக வந்தபடியால் அஃது வினை எச்சம் ஆகும்.

ஒன்றற்கு அடுத்து இன்னொன்று நிகழுமானால் அது விரைவாக நடைபெறுதலைக் குறிப்பதனால்,  அது விரைவு குறித்தது.  ஆகவே அடுத்தது விரைவுமாகும்.

இதிலிருந்து,   அடு>  சடு >  சடு+ இது + இ >  சடிதி என்ற சொல் பிறந்தது.  இடையீடு இன்றி அடுத்து வருதலை உடையது எனவே, விரைவு ஆகும்.

சடு என்பது தி விகுதி பெற்று சடுதி என்றுமாகி விரைவு குறிக்கும்,

இவ்வாறு திரிந்த இன்னொரு சொல்:  பீடு மன் > பீடுமன் > பீமன் ( வீமன்).  பீடுடைய மன்னன். 


சடுதி அல்லது சடிதி என்பது ஜல்தி என்று திரிந்து விரைவு குறித்தது. சடுதி அல்லது சடிதி என்பது மூலச்சொல் ஆகும்.  அடுத்து நிகழ்தலால் கால தாமதம் இன்றி நடைபெறுதல் குறித்தது.

காலம் தாழ்த்தாமல் ஒன்று நிறைவேறினால்,  காலம் தாழ்த்தி மதிப்புறவில்லை என்று பொருள். ஆகவே,  தாழ்+ மதி >  தாமதி என்பது காலம்தாழ்வுறுத்தலைக் குறித்தது.  தாழ் என்ற சொல்லில் ழகர ஒற்று கெட்டது.

தாழ் + கோல் > தாழ்க்கோல்> தாக்கோல்.   கதவில் தாழ ( கீழ்ப்பகுதியில் உள்ள) கோல்.

இங்கும் ழகர ஒற்றுக் கெட்டது. 

தாழ்க்கோல் என்பது தாட்கோல் என்றும் திரியும். தாட்பாட்கட்டை என்றும் வரும்.  தாட்பாள் என்றும் வந்துள்ளது.

தாழ்க்கோல் என்பது தாழக்கோல் என்றுமாகும்.

இக்கோலைச் செறிக்கும் வாய் மூட்டுவாய் எனப்படும்.

கதவிற் சேர்ந்தபடி ஒரு மூட்டும் கதவுப்பலகைக்கும் மூட்டுக்கும் இடையில் ஒரு செறிவாயும் இருப்பதால்,  மூட்டுவாய் ஆயிற்று.

தாழ்ப்பாள் உ

ள்விழும் இரும்புக்கூடு "முளையாணி"  ஆகும்.

கதவை முடுக்கி இருத்தும் ஆரம்  ( வளைவு)  ஆதலால் அது முடுக்காரம் என்று அமைந்து  பின் முக்காரம் என்றும் ஆனது.

இனிச் சதி என்பதைக் காண்போம்.

அடுத்திருந்து செய்வதே சதி.

அடு > சடு >  சடுதி >  ( இடைக்குறைந்து )  > சதி.   ( அடுத்துக்கெடுத்தல்).

சதி > சதித்தல் ( வினையாக்கம்).

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


சனி, 26 நவம்பர், 2022

திருட்டுப் போனால் என்செய்வது?பூசைக்குரிய நகை!

( இது ஒரு பழைய நிகழ்ச்சியைக் கூறும் வரிகள்) 


கோவி   லென்பது பொதுவிடம் --- அங்கேயும்

கோணல் புத்தியர் வருவதுண்டு!

ஆவி  போயினும் பிறர்பொருள் --- ஏலா

அன்பர்  தாமுமே  வருகின்றனர்.

திருடர் இயல்பு:

நீட்டும் கைக்கெது கிடைகுதோ  ---  எண்ணம்

நீங்கா முன்னதை எடுத்திடுவர்

பாட்டின் நல்லொலி திரும்புமுன் ---  எடுத்துப்

பக்கெனப் பைக்குள்  போட்டிடுவர்.

நகைகள்

அம்மன் போட்டிட  அணிசெய  ---   பற்றர்

ஆழ்ந்தும்  எண்ணியே  வாங்கினவே!

எம்மின் கண்களை மறைத்தவர்  --- திருடர்

கொண்டு   சென்றிடில் செய்வதென்னே?


போனவை போனவையே  ஆகட்டும் நீநெஞ்சே

ஆனவைக்கு  நீமகிழ்  ஆவன --- ஈனுபயன்

நீயறிந்து  மேற்கொள்வாய்  ஆயம்மை தானறிவாள்

ஓயாத தொண்டுசெய் வா.



 

பல நகைகளில் எது தொலைந்தது என்று இப்போது தெரியவில்லை. இருந்தாலும் இதுவும் அங்குகொண்டுவரப்பட்டவைகளில் ஒன்று.


கோணல் புத்தியர் -   நேர்மையற்ற செயல்பாடுகளில் ஈடுபடுவோர்.

ஆவிபோயினும்  - உயிர் இழக்க நேர்ந்தாலும்

ஏலா - கொடுத்தாலும் ஏற்க மறுக்கும்

எண்ணம் நீங்கா முன் -  திருடத் தீர்மானித்து,  வசதி இல்ல்லாமல் அதை

மாற்றிக் கொள்ளுமுன்.

பாட்டின் நல்லொலி :  பாடிக் கொண்டிருப்பவர்கள் நிறுத்திவிட்டால்

மற்றவர்கள் பார்க்கக்கூடும்,  அதன் முன்பே திருடிவிடுதலைக் குறிக்கிறது.

ஆழ்ந்தும் எண்ணியே -  நல்லபடி யோசித்து.

ஈனுபயன் -  பிறப்பிக்கும் பயன்.

ஆய் அம்மை -  துர்க்கை அம்மன்.


அறிக மகிழ்க

மெய்ப்பு   பின்னர்



புதன், 23 நவம்பர், 2022

உங்களின் போட்டியாளன்யார்? சொல்: சடுத்தம்.

 நீங்கள் வாழுமிடத்திலிருந்து  ஆயிரம் கல்தொலைவில் உங்களை அறியாத ஒருவன் வாழ்கிறான்.  அவனுக்கும் உங்களுக்கும் தொடர்பில்லை.  அவன் உங்கள் எதிரியாக ஆகிவிடமுடியாது. உங்களுடன் கூடித் திரிபவன் தான் உங்களுக்கு எதிரியாக வருவதற்கு மிக்கப் பொருத்தமான இயல்புகளை எல்லாம் வெளிக்காட்டி, நாளடைவில் முழு எதிரியாக மாறத் தக்கவன்.

அடுத்திருக்கும் நண்பனே  உங்கள் எதிரி.  அதற்கான கால நேரம் வந்துவிட்டால் கணவனும் எதிரியாவான்; மனைவியும் எதிரியாவாள்.

ஔவைப் பாட்டி என்ன சொன்னாள் என்பது உங்களுக்குத் தெரியும்.

" உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா;

உடன்பிறந்தே கொல்லும் வியாதி ----- உடன்பிறவா

மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும்

அம்மருந்து போல்வாரு முண்டு"

என்றது பாட்டியின் மூதுரை.  

உறவும் பகையாகிவிடும்; நட்பும் நஞ்சாகிவிடுவதுண்டு.   ஆகவே எதையும் ஒருகை நீட்டத்துக்கு எட்டவிருந்து கையாளுதல் எப்போதும் நல்லது.

இந்தக் கருத்து, சொல்லமைப்பிலும் இடம் பிடித்துள்ளது.

"அகலாது அணுகாது தீக்காய்க " என்கின்றார் தேவர்தம் திருக்குறளில்.  அது நண்பனுக்கும் பொருந்தும். 

இதையே தெரிவிக்கிறது சொல்லாய்வு.   

போட்டி பகைமையாகவும் மாறும்.   சடுத்தம்  என்பது அடுத்தியலும் போட்டி.

அடு (த்தல்) >  சடு >  சடுத்து + அம் >  சடுத்தம் ஆகிறது.

ஒரு காலத்தில் இச்சொல்வழங்கி  நல்ல வேளையாக இன்னும் நிகண்டுகளில் உள்ளது.  நம் நற்பேறுதான்.

நான் அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று வீரம் பேசுவதும் சடுத்தம் பேசுதல் எனப்படும்.

இந்தியாவுக்கு அடுத்தது பாகிஸ்தான்.  அதற்கடுத்தது ஆஃப்கானிஸ்தான்.

உக்ரேன் ரஷ்யாவினின்று பிரிந்தது.  அடுத்துள்ளது.

இவையெல்லாம் பிறப்புக்கணிப்புகளின்படி தொடர்வது.

அடு > சடு என்பது உங்களுக்குத் தெரிந்த அகரச் சகரத் திரிபு.   அமணர் > சமணர் என்பது போலும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்




சத்துரு என்பது தமிழ்த் திரிபுச் சொல்.

 இன்று சத்துரு என்ற சொல்லைச் சிந்தித்து அறிந்திடுவோம்.

நட்புடன் நம்முடன் இருப்பவனை நாம் நண்பன் என்கிறோம்.  ஆனால் சத்துருவுடன் நட்பு என்பதோ இல்லை.  நட்பு அற்றொழிந்த நிலையில்தான்  சத்துரு இருக்கிறான் என்பது இச்சொல்லுக்குப் போதுமான சொல்லமைப்பு விளக்கமாகும்.

நட்பு அற்று ஒழிந்த நில்லையில் எதிர்ப்பு மனப்பான்மை உருவெடுத்துவிடுகிறது.

அகரத் தொடக்கத்துச் சொற்கள் சகரத் தொடக்கமாகத் திரியும். பலசொற்களை முன் இடுகைகளில் காட்டியுள்ளோம்.  ஒன்று இவண் நினைவுபடுத்திக் கொள்வோம்.  

அமண் >  சமண் > சமணர்.

இன்னொன்று வேண்டுமானால்,  அடு> சடு> சட்டி  ( சடு+ இ).

அடு என்பது அடுப்பில்வைத்துச் சூடேற்றுவது.

இனியும் ஒன்று:  அடர்-  அடை > சடை.  இது ஜடை என்று உருக்கொள்ளும்.

அடர்-  அடை முதலிய ஒரு மூலத்தில் தோன்றியவை.  அடிச்சொல்  அடு என்பது.

அடர்முடி > ஜடாமுடி. 

நட்பு அற்று உருவெடுப்பவன் :  அற்று உரு>  அற்றுரு>  அத்துரு>  சத்துரு.

இப்போது இதன் தமிழ்மூலம் நல்லபடி புரிந்துகொள்ளும் நிலைக்கு உங்களைக் கொண்டுசெல்கிறது.

இன்னொரு சொல்:  சகி என்பது.  ( தோழி).

அகம் >  அகி > சகி.

தலைவியுடன் அகத்தில் தங்கிப் பார்த்துக் கொள்பவள்:  சகி.

அகக் களத்தி >  சகக்களத்தி > சக்களத்தி.   அ - ச.

இயற்சொற்களுக்கு அடுத்து திரிசொற்களைக் கூறினார்  தொல்காப்பிய முனிவர்.  காரணம் என்ன?   திரிசொற்கள் இயற்சொற்களுக்கு  அடுத்துக் கூடுதலாக இருந்தமைதான்.

இன்று யாம் கணக்கெடுக்கவில்லை. திரிசொற்கள் பெருகி, இனமொழிகளும் தோன்றிவிட்ட படியால், திரிசொற்களே மிகுதி. 

எடுத்துக்காட்டு:  

வரு  ஓ >  ( பரு ஓ) > பாரோ    (  வருவாய், வாராய்).

இன்று, அற்று ( நட்பு அற்று) உருவெடுப்பவனே சத்துரு என்றறிக.

இந்த மாதிரித் திரிபுகளெல்லாம் இலக்கணங்களில் காட்டப்பெறா.

( மா = அளவு. திரி =  திரிக்கப்பெற்றது.   மாதிரி - அளவாகத் திரிக்கப்பட்டது.).

சத்துரு:  பிற வகையில் திரிந்ததாகவும் கொள்ளும்  இச்சொல் ஒரு பல்பிறப்பி.

"சத்துராதிப்பயல்" என்பது சிற்றூர்வழக்கு. சத்துரு என்பது சோதிடர்களுக்குப் பிடித்தமானது  ஆகும்.  சத்துரு தொல்லை என்பர்

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.



வெள்ளி, 18 நவம்பர், 2022

காரணம், காரணி சொல் புரிதல்.

 கரு என்பது ஒரு பெண்ணின் உள்ளிருப்பது. அதை வெளித்தெரியும் பிற அறிகுறிகளால் தெரிந்துகொள்கிறோம்.

கருமேகத்தில் உள்ளிருக்கும் நீர் நமக்குக் கண்ணுக்குத் தெரியவில்லை. அதிலிருந்து மழைபொழிவதால்,  நாம் நீரிருப்பதை  அடையாளம் கண்டுகொள்கிறோம்.

கரு >  கருது > கருதுதல்.

கருவுற்ற மானிடப் பிறவியும்  கருக்கொண்ட மேகமும் நம் முன்னறிவினால் அறிந்துகொள்ளப்படுவன போலுமே,  கருதுதல் என்பது மனவுணர்வினால் நடைபெறுகிறது.  கருது ( வினைச்சொல்) > கருத்து ( பெயர்ச்சொல்) noun formed from a verb.

ஒரு நிகழ்வுக்கான காரணம் காரணி எல்லாம் இத்தன்மையவாம்.

கரு என்பதிலிருந்து காரணம், காரணி என்ற சொற்கள், தமிழில் அருமையாக அமைந்தவை.  வெளியில் தெரிவன அல்ல.  சுழியனுக்குள் பாசிப்பருப்பும் சர்க்கரையும் போல.  மேலுள்ள மாவுத்தோலை நீக்க,  இனிய உள்ளிருப்பு நாவில் பட்டு இனிமை தருகிறது.

கருது என்ற வினையமைப்பை உணர்ந்து யாம்  இன்புற்றோம்.

தமிழ் என்ற சொல்லுக்கே 100 பொருள் சொன்னார் பெரும்புலவர் கிருபானந்த வாரியார்.  என்னே சொற்களின் இனிமை.

கருத்தினை அண்மி  ( நெருங்கி அணைந்து)  நிற்பன காரணம், காரணி எல்லாம்.

கரு +அண் + அம் >  கார் + அண் + அ,ம்>  காரணம்.

கருமேகங்கள் சூழ்ந்து மழைபெய் காலமே கார்காலம்.

கார்மழை  -  இவ்வழக்குகள் தெளிக.

காரணங்கள் உடன் தெரிவதில்லை.  சிந்திக்கத் தெரிவன---- கண்களுக்கு,  கருத்தும் மனத்துக்கு.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்.

போரும் மனிதனும்

 போரொன்று வருவதற்குக் காரணிகள் பலவே

போரில்லா உலகெனலோ  ஓர்கனவாம் உண்மை!


வெற்றியதும் தோல்வியதும் கோள்களினோர் தரவே

பற்றிலன்நான் என்பவனைப் பரிந்தணைத்தல் வேண்டா.


பிறர்தருதல் இன்றிவரும் பிணிநலமென் றெல்லாம்

இறைகருணை என்பார்க்கோ  ஒருதுன்பம் இலதே.


செல்வரைக்கும் பற்றிலராய்  இங்கிருப்பார் தமக்குச்

சொல்வதற்குத் துயரமிலை   சூழ்ந்திருவாழ் மனமே.


உரை:-

காரணி -   ( இதன் அடிச்சொல்:  கரு.  இதிலிருந்து வருவது: கருது-தல்..  இதனால் இது உண்டானது என்று கருதுதலே காரணம், காரணி எல்லாம்.

கரு > கார் + அணம் > காரணம்;  கார் + அணி >  காரணி.

கருதும் எதையும் அண்மி நிற்பது காரணி.  )

இந்த அடிச்சொல்: கரு, --  கருப்பு என்றும் பொருள் உள்ளது.

ஓர் தரவு - ஒரு தரவு. கவிதையில் ஓர் தரவு என்றும் வரும்.

இதற்கான அனுமதி தொல்காப்பியனார் வழங்கியுள்ளார்.

பரிந்தணைத்தல் -  இரக்கமுற்று அரவணைத்தல்

தரவு -  விளைவு.  தரப்படுவது.

பிறர் தருதல் - "மற்றவர்களால் இது வந்தது"  என்று கருதுதல்.

செல் வரை -   இறக்குமட்டும்,  சாகும் வரை

பற்றிலராய் -  யான் எனது என்ற மனத்தொடர்பு இல்லாதவராய்.

சூழ்ந்து -  ஆலோசித்து;  இரு =  இருப்பாயாக;  வாழ் -  வாழ்க.


இதன் கருத்து:

வருகின்ற போரும் நிற்கின்ற போரும் என்றெலாம் நம் செயலால் வரவில்லை, கோள்களினால் வருகின்றன என்றிருப்பவர்க்கு,  துன்பங்களிருந்து தம்மைக் கூறுபடுத்திக்கொண்ட  தன்மையதால்,  எந்தக் கெடுதலும் இல்லை. இத்தகையவனுக்கு இரத்த அழுத்தம் முதலிய துன்பங்கள் விளைவதில்லை.  இவனுக்குப் பிறர்தரும் இரக்கமும் தேவைப்படுவதில்லை. எல்லாம் இறைவன் செயல்  என்பவன் தன்  பாரத்தை வெளியில் எடுத்துவிடுகிறான்.  அவனுக்குத் துன்பமில்லை. பற்றிலனாய் இருக்க.   சொல்வதற்குத் துன்பக் கதைகள் இல்லை.  ஆய்ந்திருந்து வாழ்க என்பது இதன் பொருள்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்னர்.


செவ்வாய், 15 நவம்பர், 2022

சொல் நடுவில் வரும் திரிபு. சொல்: செதிள்.

 அசடு என்பது இசடு என்று வரும் என்றாலும், இந்த உதாரணம் அல்லது காட்டு,  ஓர் அளவிற் பட்டதே.  ஏன் இவ்வாறு சொல்கிறோம் என்றால்  சொல்லின் முதலெழுத்தில் மட்டும் இங்ஙனம் திரிதலுண்டு என்பதை மட்டுமே இது காட்டுகின்றது. ஆதலின் இது ஓர் எல்லையுட் பட்டதே எனவேண்டும்.

சொல்லின் தலையெழுத்தில் வரும் திரிபினை இலக்கணியர், " மொழிமுதற் றிரிபு" என்பர். இந்தக் குறியீட்டில், மொழி என்ற சொல்லுக்கு,  "சொல்" என்பதே பொருள். பாசை ( பாஷை) அல்லது பேச்சு என்பது பொருளன்று.

பேசு > பாசு > பாசை > பாஷை. இதை அறிஞர் பிறரும் கூறியுள்ளனர்.

சொல்லின் நடுவிலும் ( அதாவது சொல்லிடையும் )  இகர -  அகர அல்லது அகர- இகரத் திரிபு வரும்.

இப்போது செதிள் என்னும் சொல்லைக் காண்போம்.  இது சிதள் என்றும் திரியும்.  இங்கு -  தி ( இ ) என்பது  த ( அ) என்று திரிந்துள்ளது. இரண்டும் இலக்கியத்துட் காணப்படுவன ஆதலின்,  கற்றோர் வழக்குடையது ஆகும்.

அசடு என்பது இசடு என்று வரலாம்,  வரட்டும்.  அசடு என்பது பிசடு என்றுவரலாமோ எனின்,  அது வாய்மொழியில் வருகிறது.   " அசட்டுப் பிசட்டு" என்று வரலாம்.  அசட்டுப் பிசட்டு என்று பிதற்றுகிறானெனின்,  மடத்தனமாகப் பேசுகிறான் என்பதே பொருள்.

செதிள் என்பது செதில் என்றும் வரும்.  இறுதி மெய்யெழுத்து ளகரம் லகரமாதல்.

பின்னர் செதிலென்பது  செலு என்றுமாகுமே! பின்னர் இன்னும் திரிந்து சிலாம்பு என்று இன்னொரு சொல்லாகும்.  கன்னடம்: சிலு.  ( செலு > சிலு).

திரிபுகட்கும் எல்லையுண்டோ?   உண்டு.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின் 


திங்கள், 14 நவம்பர், 2022

அசடு, இசடு கசடு முதலிய சொற்கள்.

தகர சகரப் போலியில் நாம் கவனித்துக்கொண்டிருக்கும் "இந்தச் சொல் "  (ஏதேனும் ஒன்று)  --- திரிந்திருக்கிறது என்று சொல்லுகையில், அதை இணையத்தின் மூலம் படிக்கும் ஒரு தமிழறிந்தார் தம் மனத்தினில் இதனைப் பதிவு செய்திருப்பார் என்று நாம் நினைக்கவில்லை. எனினும் எல்லா வாசிப்பாளர்களும் ஒரே மாதிரி அவ்விடுகையைக் கடந்து சென்றிருப்பர் என்று கூறிவிடவும் முடியாது.  ஓரிருவர் அதைப் பசுமரத்தாணிபோல் மனத்தினுள் அமர்த்திக்கொண்டிருப்பர். பெரும்பாலோர் இன்னொரு முறை அதைச் சந்தித்தால் ஓரளவு அது அவர்களுக்குத் தெரியவரும்.

ஒரு மனிதன் ஒன்றை 5 முறையாவது கடந்து சென்றிருக்கவேண்டும். அப்போதுதான் ஒருவன் அதை நினைவுகூரும் திறத்தினை அடைவான் என்று சொல்லப்படுகிறது.  இவை எல்லாம் பிறர்தரு ஆய்வு முடிவுகள்.

கல்விக்குப் பெரிய எதிரி எதுவென்றால் அது மறதி தான்.  கல்வி என்பது பெரிதும் நினைவாற்றலை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுகிறது.  

நினைவாற்றல் தடுமாற்றம் பள்ளிகளில் போலவே வழக்குமன்றச் சாட்சிகளிடமும் காணப்படுவதொன்றாகும். மாறுபாடுகள் எனப்படும் இவற்றையெல்லாம்  முறையாக உணர்ந்து இறுதியில் தீர்ப்பை உரைக்கும் நீதிபதிகள் பாராட்டுக்குரியவர்கள் ஆவர்.  அவர்களின் வேலை மிக்கக் கடினம்

பகர்ப்புச் செய்வதென்பது  இன்னும் எளிதானது.  இதைக் காப்பி அடிப்பது என்பர்.  காப்பி அல்லது பகர்ப்புச் செய்வோன் அறிந்துகொண்டது சொற்பமே.

இப்போது ஆய்வுக்கு வருவோம்.

இகரம் அகரமாகத் திரிவதென்பது,  தகரச் சகரப் போலியினும் குறைவான நிகழ்தலை உடையதுதான்.  இதழ் என்பது  அதழ் என்று திரிதல் போலும் நிகழ்தல்   சொற்களின் எண்ணிக்கையில் குறைவே  ஆகும்.   சில முன் இடுகைகளில் எடுத்துக்காட்டப் பட்டன.

இசடு என்பதும்  அசடு என்று வரும்  அல்லது ஒன்று மற்றொன்றாக வரும்.  அசடு என்பது மூடத்தன்மையையும் குறிக்கும்.  புண்ணின் வடிநீர் அல்லது குருதி,  மேலாகக் காய்ந்து,  நன்கு  காய்ந்த பின் எடுபட்டுப் புதிய தோல் முளைக்கும்.  இதை அசடு என்பர்.  புண்வடிகை  காய்ந்து பெயர்தல்.   

இசடு என்பது கசடு என்று திரிதல் காணலாம்.   கசடு என்பது குற்றம் குறை என்றும்  அணியியல் வகையில் குறிக்கும்.  " கற்கக் கசடற கற்பவை" என்பது ஒரு குறள் தொடர்.  

வானின்மதிபோல் மேவும் வாழ்வே  இசடே இல்லாததே"  என்று ஒரு பாடல்வரி வருகிறது.  வான்மதியில் இசடு இருந்தாலும்,  எம் வாழ்வில் அது இலது என்பதை இதன் பொருளாகக் கொள்ளல் வேண்டும்.  இங்கு இசடு என்பது களங்கம் அல்லது கசடு என்று கொள்க.

இச்சொற்களின் திரிந்தமைவை இன்னோர் இடுகையில் காணலாம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

சனி, 12 நவம்பர், 2022

சொல்: மலயம், மலயமாருதம்.

 ஐ என்ற எழுத்து தமிழில் நெடில்.  இதற்கு உரிய மாத்திரை  இரண்டு.  வேறுவிதமாகச் சொல்வதென்றால்  :  கண்ணை இருமுறை இமைக்கும் பொழுது அல்லது  காலம் ஆகும்.   ஐ என்னும் எழுத்து,  சொல்லில் முதலில் வரும்.  எடுத்துக்காட்டு:  ஐயனார்.,  ஐயா  என்பன.   சொல்லின் இறுதியிலும் வரும்:  எடுத்துக்காட்டு:  மலை,  கலை,  தொகை.   ல்+ ஐ: லை;  க் + ஐ = கை.  மெய்யுடன் கலந்து இறுதியில் ஐ நிற்கிறது.

ஒலிநூலின் படி,   ஐ என்பது குறுகி ஒலிக்கும் இடங்களும் சொல்லில் ஏற்படும். இந்த வாக்கியத்தைப் பாருங்கள்:

இவன் முன்னர் கலையையும் பழித்தான்,  பின்னர் நம் நிலையையும் பழித்தான்.

இது வாயால் ஒலிக்கும்போது,  "கலயயும்",  " நிலயயும்"  என்று உங்களை அறியாமல் குறுகிவிடலாம்.    இது ஒரு குறுக்கமே ஆகும்.  பேச்சில் குறுகுவது ஒரு பொருட்டன்று.  கவிதையில் மாத்திரை  அல்லது ஒவ்வோ ரெழுத்தையும் ஒலிக்கும் காலம் முதன்மை பெறுவதால், ஐகாரம் குறுகுவது ஐகாரக் குறுக்கம் எனப்படும்.   இவ்வாறு குறுகும்போது, இசைமுறிவு ஏற்படாமல் கவிஞன் பார்த்துக்கொள்ளவேண்டும்,    ஐகாரம் முழு அளவில் ஒலிக்கும்போதும் இதைக் கவனிக்கவே வேண்டும்.

மலை என்ற முழுச்சொல்,   அம் விகுதி பெற்று,  மலையம் என்றாகும்.   அப்போதும் மலையம் என்பதற்குப் பொருளில் ஒன்றும் வேறுபாடில்லை.  இருப்பின், அம் என்பது அழகாதலின்,  மலையழகு என்று விரித்துரைக்கலாம்.  எழுதுவோன்  மலை என்ற இடம் குறித்தானோ?  அல்லாது அதனழகு குறித்தானோ எனின்,  அழகைக் குறிக்கவில்லை,  வெறும் மலையைத்தான் சொல்கிறான் என்றுணர,   அம் என்பது வெறும் சாரியை என்று ஆகிவிடும். இது பொருள்கோள் என்பதில் கவனிக்கவேண்டியதாகும். உரையாசிரியன் சிறந்த பொருளை எடுத்துக்கூறுவது என்பதைத் தன் கடனாகக் கொண்டவன் ஆவான்.

மலை, மலையம் என்பவற்றில் மலையம் என்பது மலயம் என்று குறுகுவதுண்டு.  இவ்வாறு கவிதையிலன்றி, இயல்பாகவே பேச்சில் குறுகுவதுண்டு.  இதற்குக் காரணம் கூறவேண்டின், முயற்சிக் களைப்பு எனல் ஏற்புடைத்து. எனவே, சொல் திரிபடைந்தது.  இதுவே உண்மை.  இது ஒன்றும் பிறமொழி ஆகிவிடாது. இவ்வாறு திரிந்தபின், மாருதம் என்ற சொல்லுடன் கலந்து, மலயமாருதம் ஆகும். 

இனி இன்னொரு வகையில் சிந்திப்போம்.  மலை என்று மனிதன் மலையைக் கண்டு மலைத்து நின்றதனால் ஏற்பட்ட சொல் என்பதுண்டு.  இருக்கலாம்.  மல் என்ற அடிச்சொல் வலிமை குறிப்பதால்,  மல் > மலை என்றும் வந்திருக்கலாம். அப்படி வரவில்லை என்பதற்குக் காரணம் எதுவுமில்லை.  மல்> மல்+அ + அம் >  மலயம் என்று வந்துமிருக்கலாம்.  அ என்பது இடைநிலை;  அம் ஈறு அல்லது விகுதி.  மல்- வல் போலியுமாகும். மலயம் என்பது மலை குறிக்கும் சொல்லே. "ஓங்குயர் மலயம்" என்கின்றது மணிமேகலைக் காப்பியம். மலயம் என்பது மலை.

மலயமாருதம் என்பது அழகிய தமிழ்ச்சொல்லே. ( சொற்றொடர்  அல்லது கூட்டுச்சொல்.  மருவிச்செல்வது காற்று.  மரு+து+ அம்> மாருதம்  முதனிலை நீண்டு திரிந்த பெயர்.  மருவு என்ற வினையும் மரு எனபதனை அடியாய்க் கொண்டதே ஆகும்.  

பரத்தல் வினை:    பர >   பார் ( உலகு).   பரந்து விரிந்த உலகம் என்பது,   வியனுலகம் என்றார் தேவரும் திருக்குறளில்.  இதுவும் முதனிலை  நீண்டு திரிந்து பெயரானதே ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


திங்கள், 7 நவம்பர், 2022

தருபார் அல்லது அரசவை.

 அரசனுக்கு இரண்டு வேலைகள் முதன்மை வாய்ந்தவை.

ஒன்று  இல்லை என்று வந்து கையேந்தி நின்றார்க்கு வழங்கி அருள்புரிவது.

இதைத் "தருவது" அல்லது தருமம் என்போம்.  

தரு+ ம் + அம்  = தருமம்.  பிறருக்குத் தருவது,  கொடை.  ம் என்பது இடைநிலை.

இதே போல் அமைந்த இன்னொரு சொல்  அறிக:   பரு(த்தல்) + ம் + அன் > பருமன்.

இர் இர் இர் என்பது ஒலிக்குறிப்பு.   இதிலிருந்து இரு என்ற ஒலிக்குறிப்பு அடிச்சொல் வருகிறது.

இரு+ ம் + உ -  இருமு>  இருமுதல்.

இரு +  (உ)ம் + அல் =  இருமல்.

"ம்" என்பது உம் என்பதன் முதற்குறை ( தலை இழப்பு).

கொடை/ தருமம்:

இவ்வாறு சும்மா வாங்கிக்கொண்டு போகும் நபர்கள் நாட்டில் பலர் இருப்பர். இல்லையென்றால் அது " உலக அதிசயம்"  அல்லது ஞாலவியப்பு ஆகும்.  இதை அரசின் வேலையாக, இங்கு சொல்லப்படுவது அவ்வாறான  கருத்துகள் முன் இருந்தமையால். இற்றைநாள் அரசுகள் இலவசம் தந்து மகிழ்விப்பதுபோலுமிது.

அடுத்தது நாட்டுக் காரியங்களைப் பார்ப்பது. பார்ப்பது கண்பார்வை அன்று. இயக்குதல் முதலியன நிகழ்த்தி அரசு நடாத்துதல்.

இதைப் " பார்ப்பது" , நாடுபார்ப்பது என்னலாம்.

தமிழ் மன்னர்கள் தருவதும் பார்ப்பதுமாக அரசவையில் இருந்தனர்.  ஆகவே அது "தருபார்"  ஆனது.

இதை மற்ற மன்னர்களும் அம் முதனிலைச் சொற்களால் சுட்டினர்.

நாளடைவில் தருபார்  ( தர்பார்) என்ற கூட்டுச்சொல் உண்டானது.

இதில் வியப்பு ஒன்றுமில்லை.

பகவொட்டு என்ற இடுகையையும் பார்க்கவும்.

உருதுச்சொற்கள்:   இத்தகைய தமிழ் வழக்குகள் பலவற்றால் உந்தப்பட்ட சொற்களைக் கைக்கொண்டன.   உருது தொடர்பாக எழுதிய இடுகைகளைப் பார்க்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

மாதமும் மாசமும்.

 தகரம்  (  அதாவது த என்ற எழுத்து)  பலவிடங்களில் சகரம்  (  ச  எழுத்து) என்று மாறிவிடுவது இயல்பு  என்று  நாம் பல இடுகைகளில் கூறியுள்ளோம்.   புலவர்கள் என்போர் அரசு அமைக்கும் இடத்தில் விருந்தினராகத் தங்கிக்கொண்டு,  கவிகள் இயற்றி  அரசவையிற்   சென்று பாடும் ஏற்பாடுதான்   சங்கம்.   இது ஒரு திரிபுச் சொல். இதன் மூலம் தங்கு என்பது.   தங்கு -  சங்கு,  சங்கம் என்றானது இச்சொல். அரசன் "புலவர்களை நாளை பார்க்கிறேன்"   என்றால் நாளைதான் சங்கம்.  அதைத் தீர்மானிபவன் அரசன்.  இதுபோலும் ஏற்பாடுகள் எங்கும் நடக்கலாம்.  அவையெல்லாம் ஏன் சங்கம் என்று பெயர் பெறவில்லை?

இந்தச் சங்கம் என்ற சொல்லைப் பயன்படுத்தியவர்கள் கூட்டங்கள்  பிறவற்றை அவ்வாறு அழைக்கவில்லை.  நீங்களும்தாம்.

சங்கம் என்று பிறரால் அறியப்பட்ட  கட்டடங்கள் எவையும் இல்லை.  அரசவை ( அதுகூடி இலக்கியம் ஆயும்போது ) சங்கம்.  எல்லாவற்றுக்கும் அரசிறைவனே தனிநடுநாயகம்.

இத்தகைய த > ச திரிபு  மொழியிற் பரவாலாத் தோன்றும் ஒன்றாகும்.  மாதம் என்ற சொல் மாசம் என்று வருவதிலிருந்து இதை உணர்ந்துகொள்ளலாம்.   தனிச்சிறப்பு உடைய சனிக்கிரகம் அல்லது கோள்,  தனி > சனி என்று  திரிந்ததும் அதுவாம்.

சகர முதற்சொற்கள் பலவும் முற்றடைவுகள்.  த என்று தொடங்கும் பல தொட்டமைவுகள். பண்டைத் தமிழில் தொடுதல் என்பது தொடங்குதல் என்றும் பொருள் தரு சொல்.  பலர் மறந்திருக்கலாம்.

அவள் மாசமாய் இருக்கிறாள் என்ற இடக்கரடக்கலையும் கவனிக்க.  இதற்கு மாதம் என்ற சொல்வடிவைப் பயன்படுத்துவதில்லை,

அறிக மகிழ்க

பின் செப்பம் செய்வோம்.

ஞாயிறு, 6 நவம்பர், 2022

தான்சானிய வானூர்தி விபத்து.

 பறவூர்தி ஏறுபய   ணிகளே அந்தோ

புறவேரிக்குள் நடந்து  நீந்திச் சென்று

பெறுகாப்பு  வெகுசிறப்பு  உறுதுன்  பங்கள்

கருதுமுனம் நடந்தத(ம்)மா கடந்த  தம்மா!


தான்சானி யாமக்கள் துயரம் தன்னைத்

தாமுணர்ந்த பெருமக்கள் கண்கள் நீரில்!

யானெனது கண்ணீரைச் செலுத்து  கின்றேன்

யாவரையும் எம்மிறைவன் காக்க வேண்டும்.


இறங்குதுறை சேராமல் ஏரிக்  குள்ளே

கறங்கிவீழ் வானூர்தி கவலை சேர்க்கும்

நொறுங்குவிபத் துக்களினி நடவா வண்ணம்

திறம்செறிந்த நலம்காக்க இறைவா நீயே.


பறவூர்தி  -  வானூர்தி

புறவேரி   -  பக்கத்து ஏரி

இறங்குதுறை -  வானூர்திநிலையம்

முனம் -  முன்னம்,  முன்னர்.


நீங்கள் ஆக்குதிரைக்குள்   [[compose mode ]    தவறி நுழைந்துவிட்டால்

எதையும் மாற்றாமல் வெறியேறிவிடுங்கள். அதற்கு

எங்கள் நன்றி.

வெள்ளி, 4 நவம்பர், 2022

விலாசம் - தமிழ்

 

விலாசம் என்பதென்ன? பெயர் என்பதென்ன?

 ஒரு  மனிதனுக்குப் பெயர் என்பது மிக்கத் தேவையானது ஆகும். இதனாலே பெயர் என்ற சொல்லுக்குப் புகழ் என்ற பொருளும் நாளடைவில் மக்களிடையே ஏற்படுவதாயிற்று.  பெயர்தலாவது ஓரிடத்தினின்று இன்னோரிடம் செல்லுதல். இதிலடங்கிய கருத்தை, ஒரு மனிதனிலிருந்து இன்னொருவனைப் பெயர்த்து அல்லது வேறுபடுத்தி அறிய உதவுவது என்று விரிவுபடுத்தினர். எவ்வளவு சிறிய இடமாயினும் ஒரு மனிதன் இன்னொருவனிடமிருந்து அப்பால்தான் இருக்கமுடியும். ஒருவனின் கால்வைத்துக் கொண்டிருக்கும் இடத்தில் இன்னொருவன் கால்வைக்கமுடிவதில்லை. அதற்குப் பக்கத்தில் கால்வைக்கலாம், இதன் காரணமாகப் பெயர்த்தறிதல் என்பதைத் தமிழன் கூர்ந்துணர்ந்துகொண்டான். இடப்பெயர்வு போன்றதே மனிதக் குறிப்பின் பெயர்வும் ஆகும்.  ஆதிமனிதற்கு மிகுந்த அறிவு இருந்தது என்பது இதனால் புரிந்துகொள்ளமுடிகிறது. The space occupied by an individual  on ground can only be taken up by one person at a time. Different persons occupying the same place at different times must be differentiated. 

ஒருவன் தன் வீட்டைக் கட்டிக்கொண்டு அதில் வாழ்கிறான்.  இன்னொருவன் அதற்கு  அடுத்துக் கட்டுவான்.  இப்போது உள்ள அடுக்குமாடி வீடுபோல், அதே இடத்தில் முற்காலங்களில் வீடமைக்கும் வழக்கமோ திறனோ வளர்ந்திருக்கவில்லை என்றாலும் ஒருவீட்டிலிருந்து இன்னொரு வீட்டைப் பெயர்த்தறிதல் நடைபெறவே செய்தது.  வீட்டுக்கும் பெயரிட்டுக் குறித்தான். அந்தப் பெயர்,  அழகாக, "நீவாசம்" என்றோ  " அக்காவீடு" என்றோ இருந்திருக்கலாம். பெயர்ப்பலகை போடாமல் குறிப்பிட்டு அறிந்துகொள்வது  " அக்காவீடு"  என்பது.  மாமாவீடு என்பது வேறுவீடு.  இதன்மூலம், மாமாவீடு என்பது அக்காவீட்டிலிருந்து " விலக்கி"  அறியப்பட்டது.  விலக்குதலுக்கான இந்த சிந்தனைத் தெளிவு 'பெயர்" என்பதன் தன்மையை உணர்ந்ததனால் ஏற்பட்டதாகும். 

இவ்வாறு விலக்கி அறிய ஏற்பட்டதுதான் விலாசம் என்பது.  வில என்பது அடிச்சொல். ஆசு என்பது விலக்க ஆவதான பற்றுக்கோடு ஆகும்.  ஆகவே வில+ ஆசு+ அம் = விலாசம் ஆகும்.   நல்ல தமிழ்ச் சொல் என்று அறிந்து,  உங்கள் மாணவர்களுக்கோ கேட்பவர்களுக்கோ விளக்கிச் சொல்லுங்கள். பிற்காலத்தில் இது முகவரியைக் குறித்தது.  கடைகள் முதலிய இடங்களுக்கு இடப்படும் குறிப்புச்சொல்லையும் முன்நிறுத்தியது.  விலாசம் என்பதை விலாஸ் என்று பலுக்கினால் அது பிற சொல்லைப் போல் தெரியும்.  அன்று என்று அறிக.

ஆசு என்பது முண்டாசில் கூட இருக்கிறதே. முண்டு என்பது துண்டுத்துணி. முண்டு ஆசு முண்டாசு.

வில்லிருந்து அம்பு புறப்படுகிறது.  அம்பை விலகிச் செல்ல உதவுவதே வில். வில் என்பது இங்கு அடிச்சொல் -  பிரிந்து சொல்லுதல் குறிக்கும்.  இதிலிருந்து விலகுதல் என்ற சொல் ஏற்பட்டது.  விலாசம் என்பது இவ்வடியிற் பிறந்ததுதான்.

வில்லா என்ற இலத்தீன் சொல்லும் இதனோடு தொடர்புடைய இரவல்தான். வில்லாக்கள் தனித்தனியான மாளிகைகள்.

வங்காளத்தில் தாம் கண்ட வளையல்களை  வங்காளம் > பங்காள் > பேங்கள் என்று குறித்த ஆங்கிலேயனும் கெட்டிக்காரனே.

வில் ஆசு அம் என்பது வில்லாசம் என்று லகரம் இரட்டிக்க வேண்டுமென்று நீங்கள் நினைத்தால்,  ஒரு லகர ஒற்றை இடைக்குறைத்து விளக்கலாம்.  உங்கள் மனநிறைவுக்கு.  எம் சிந்தனையில் அது தேவையில்லை.

விலகி விலகி அமைந்த உடற் பக்க எலும்புகள் விலா என்ற பெயர் பெற்றன. ஒரு மனிதனிடமிருந்து ஏதேனும் பெற்றுக்கொண்டு அடுத்தவனிடம் சென்ற பொருள்  வில்> வில்+தல் > விற்றல் ஆனது.  வில் > விலை.  வில் பு அன் ஐ > விற்பனை.

ஒரு சொல்லமைவது,  அந்த அமைப்புச் செயலின் முன்நிற்போனையும் அவன்றன் சுற்றுச்சார்பினையும்,  அவன் சிந்தனையையும்  சிறிதளவு அவன் சார்ந்துள்ள மொழிமரபினையும் நிலைக்களனாகக் கொண்டுள்ளது என்பதை அறிய வேண்டும்.  எடுத்துக்காட்டாக பெயர்தல் என்ற சொல் அவன் சிந்தைக்குள் வரவில்லை என்றால்,  "வேறு" என்பதையே அவன் எண்ணிக்கொண்டிருந்திருப்பான் என்றால், பெயர் இட்டுக்கொள்ளப்படுவதன்று, ஆடைபோல் உடுத்துக்கொள்ளப்படுவது என்று கருதிக்கொண்டிருந்திருப்பான் என்றால்  அவன் அமைக்கும் சொல்:  வேறுடை என்று வந்துவிடும். உடுத்தும் உடையைக் குறிப்பதால் சரியில்லை, அடை என்பதே சரி என்று அவன் மனைவி சொல்கிறாள் என்றால் அதை அவன் வேறடை என்று மாற்றிக்கொள்வான்.இதில் இன்னும் கருதுவதற்கு இடமுள்ளது. இத்துடன் நிறுத்துவோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

 

வியாழன், 3 நவம்பர், 2022

பொருள்--- சொல்லமைந்ததெப்படி?

 பொருள் என்னும் சொல்  ஒரு பகாப்பதம் அன்று.  இஃது ஒரு  தொழிற்பெயர் போல உள்விகுதி பெற்றமைந்த சொல்.  இதன் அடிச்சொல் பொரு  என்பதே. 

உள் என்னும் விகுதி பெற்றமைந்த சொற்கள் தமிழிற் பல. சில சொல்வோம்:  கடவுள்,  இயவுள்,  அருள்,  நருள், செய்யுள் ( செய் என்னும் வினைச்சொல் அடி), பையுள்,  ஆயுள் ( ஆ(தல்) )   உறையுள் எனக் காண்க.

வினைச்சொல்லும் விகுதி பெறும்;  அல்லாதனவும் விகுதி பெறும்.    அல்லாதன விகுதி பெறா  என்னும் விதி இலது  அறிக.

தமிழர் அணுகுண்டு என்னும் ஆயுதத்தைக் கண்டுபிடித்து எவன் தலையிலும் போடவில்லை என்றாலும்,   அணுவை அறிந்திருந்தனர்.   பொருட்களெல்லாம் அணுக்கள் இடையற  அணுக்கமாக  அடைந்து நின்று இயல்கின்றன என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.  அணுவியலைத் தனிக்கல்வியாக அவர்கள் வளர்க்கவில்லை போலும்,  எனினும் இதை அறுதியாய் உரைக்க இயல்வில்லை.  இதற்கான ஏடுகள் இருந்து அழிந்துமிருத்தல் கூடும். இருந்து, அடுத்து இலங்கிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுமிருத்தல் கூடும். நூல்கள் இலாமை யாது காரணம் என்று இற்றை நாளில் கூறவியலாது.

பொரு என்ற அதே அடிச்சொல்லில் பிறந்து  "பொருந்து" என்று வினையாய் அமைந்த சொல் நம்மிடை உள்ளது.  எல்லாப் பொருட்களும்,  தம்மில் தூள், தூசு, பகவுகள், அணுத்திரள்கள்,  அணுக்கள் என்பன  பொருந்தி நின்றதனால் அமைந்து உலகில் இலங்குபவையே  ஆகும்.  ஒரு பொருளாய் ஒன்று இலங்குதற்குக் காரணியாவது, இவ்வணுக்கள் பொருந்தி நின்றமையே  ஆகுமல்லால், மற்றொன்றில்லை. இதனின்று பொருந்தியமைவு எனற்பாலது நன்கு அறியப்படும்.

பொருவு என்ற வினை ( ஏவல் வினை)  பொரு என்ற அடியினெழுந்ததே  ஆகும். ஒத்தல்  நேர்தல் நிகழ்தல் என்ற பொருளில் இச்சொல் இன்னும்  உள்ளது.   பழம்பாட்டுகளில் இது வந்திருந்தாலும்,  இற்றை நாள் எழுதுவோர் பாடுவோரிடை இச்சொல் வழக்குப் பெற்றிலது என்று முடித்தலே சரியாகும். கம்பனிலிருந்து சின்னாள்காறும் இச்சொல் நிலவி வழங்கியிருத்தல் கூடும்.  உன்னைப்போன்ற அறிஞர் என்று சொல்ல விழைந்தோன்,  உன்னைப் பொருவு அறிவுடையோர் என்று கூறினாலும் பொருளதுவே ஆகும்.

புரைய என்ற உவம உருபு தொடர்புடையது.  புரைதல் வினை.  பொரு> புரை.

பொருவு+ உள் >  பொருவுள் என்றமையாமல்,  பொரு+ உள் >  பொரு+ (உ) ள்> பொருள் ஆகும்.    தேவையற்ற  உகரத்தை விட்டமைத்தனர்.   இதேபடி அமைந்த இன்னொரு சொல்:  அரு + உள் >  அருள்  ஆகும்.  இதில் உகரம் கெட்டது என்று இலக்கணபாணியிற் சொல்லலாம். இற்றை மொழியில்,  உகரம் களைந்தெறியப் பட்டது என்க.

தெர் > தெரி.

தெர் >  தெருள்.  (தெருள் மெய்ஞ்ஞான குருபரன் என்ற சொற்றொடர் காண்க)

தெரு என்பது போவார் வருவார் யாவும் தெரியச் செல்லும் பாதை. பிறபொருளும் கூறல் ஆகும்.

பொருள் என்பதே போலும் பொருளில்,    பொருக்கு என்ற சொல்லும் வழங்கும். பொருக்கற்றுப் போயிற்று என்றால்  பொருளில்லாமற் போயிற்று என்பதே. பொருக்கு என்பதில் கு விகுதி.  அடிச்சொல் பொரு என்பதாம். வழியிற் கிடக்கும் பொருக்குகளைப் பார்த்து விலகிச் செல் என்பதில் இது அமையும்.  காய்ந்த மண்ணுக்குப் பொருக்காங்கட்டி என்பதுண்டு. மண்ணாங்கட்டி என்பதும் அது.

தோல் காய்ந்து வெடித்தல்  பொருக்குவெடித்தல் என்று வழங்கும்.

பொருக்கு என்பது ருகரமிழந்து,  பொக்கு என்று குன்றும். இடைக்குறைக்கு நல்ல எடுத்துக்காட்டு.

பொருக்கு எனற்பாலது  இடைக்குறைந்து  பொருகு என்றாகி சோறு குறிக்கும்

பொருக்கு >  பொக்கு >  பக்கு:  இது சோறு முதலியவற்றின் அடிமண்டை.  ( அடியில் மண்டியிருப்பது  அல்லது உறைகுழைவு  )

இவற்றிலிருந்து பொருள் என்ற சொல்லின் திறம்கண்டீர்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

௳றுபார்வை செய்யப்பட்டது 13112022 0906

 

புதன், 2 நவம்பர், 2022

மதியமும் ( நிலவும்) காலக்கணக்கும்.

 மாதம் என்ற சொல்லின் பொருண்மையைப் பலவாறு ஆய்ந்துள்ளனர்.  காலத்தை அளவிடற்கு பண்டையர்க்கு ஓர் அளவை அல்லது "அளவுக் கருவி" இருந்ததென்றால்  அது நிலவு அல்லது நிலா எனப்படும் மதியமே  ஆகும்.  சைவ ஏடுகளில்  மதியம்  ( மாலை மதியம்)  என்ற சொல்லமைப்பு காணப்படுகிறது. காலத்தை மதிக்க அல்லது மதிப்பீடு செய்ய மனிதற்குக் கிட்டிய கருவி அதுவாம்.

அது புவிக்குத் தெரியாமல் இருக்கும் காலம் "அமாவாசை" எனப்படுகிறது. நிலவு இல்லாமற் போய்விட்டது என்று பண்டை மக்கள் நினைக்கவில்லை. அது இருளில் மூழ்கிவிட்டது என்று அவர்கள் அறிந்திருந்தனர். அது இருட்டிடமாக மாறிவிட்டது,  ஆனால் நிலவு அங்குதான்* உள்ளது!  இந்த இடுகைகளைப் படித்து அறிந்துகொள்க.

https://sivamaalaa.blogspot.com/2016/01/blog-post_24.html

 https://sivamaalaa.blogspot.com/2018/04/blog-post_17.html 

இதற்குப் பொருள்:  அந்தப் பெரிய இருள் இடம்,   அழகிய இருள்சூழ் இடம்.  அ(ம்) என்பது சுட்டாகவுமிருக்கலாம்,  அழகுப் பொருள் படுவதாகவும் இருக்கலாம், ஏன் இவ்வாறு இருவழியிற் சொல்கிறோம் என்றால்  இவை அச்சொற்களிலே காணப்படுவதால். மா என்ற சொல்லும் பெரிது என்றும் பொருள்தரலாம்.  இருள் என்றும் பொருள்தரலாம்.  அளவு என்றும் பொருள்தரலாம். மாதம் என்ற சொல்லில் மா என்பது அளவு,  பேரளவு என்று பொருள்தரும்.  அமாவாசை என்ற சொல்,  கவிதைக்கு உரிய சொல்லாக கையாளப்படவில்லை. இதை "அம்மா வாசெ" என்றே சிற்றூரார்  ஒலித்தனர் என்று தெரிகிறது.  அமா~ என்று ஒலிப்பது பிற்காலத்தில் வந்த திருத்தம்.

அமாவாசை என்பதில் இடையில் தோன்றும் மா என்ற சொல்லும்,  மாதம் என்பதில் முதலில் வரும் மா என்ற சொல்லும்,   அளவுச் சொற்களே.  நிலக்கணக்கிலும் " மா"  என்பது "ஒரு மா நிலம் "என்று அளவே குறித்தது.  மாத்திரை என்ற சொல்லிலும் " மா" என்பது அளவுதான்.  மா என்பது பல்பொருள் ஒருசொல்.  பெருமை என்று பொருள்தரும் " மானம் " என்ற சொல்லும் அளவு, மதிப்பீடு என்பவை குறிக்கும் சொல்லே.   மதிப்பு என்ற சொல்லிலும் மதி என்பதிலும் மதி என்பது அளவு, அளவிடுதல் என்னும் பொருளதே.

மா - மதிப்பு.  மாமன் - மதிக்கப்படுபவன்,  மாமா.  பெரியோன்.

மாகக்கல் -  கானகத்தில் கிடைத்த ஒரு கனிமக்கல்.

மாக்கடு -  போற்றப்பட்ட ஒரு கடுக்காய் வகை.

மேஷர் ,  மீட்டர் என்ற பலவற்றிலும் அளவு உள்ளது.  அவற்றை இங்கு விட்டுவிடுகிறோம்.

எல்லாம் மகர வருக்கச் சொற்கள்.

மதித்தல் என்பதே இவற்றுக்கெல்லாம் உறவுச்சொல். வினைச்சொல்.

மதி -  வினைச்சொல்.  ஏவல் வினை.

மதி+ அம் =  மாதம்.  [  முதனிலை நீண்டு விகுதி பெற்ற சொல்.]

எடுத்துக்காட்டு:  சுடுதல் , வினைச்சொல். verb.  சுடு> சூடு ( முதனிலைத் திரிபு), சூடு> சூடம்> சூடன்.  காம்ஃபர் என்னும் எரிக்கத் தகுந்த வெண்பொருள்.  அம், அன் விகுதிகள்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

*அங்குத்தான் - not favoured.  வலிமிகல்

ஒரு திருத்தம்: 3.11.2022 11.17