ஞாயிறு, 29 மார்ச், 2020

முன்னுக்கும் பின்னுக்கும்.

கட்டுரை முதலியன எழுதுங்கால்  முன்னுக்கு, பின்னுக்கு என்று எழுதுவதில்லை.   வகுப்பு வாத்தியார் பார்ப்பதற்காக எழுதிய கட்டுரையிலும் " முயற்சி செய்து ஒவ்வொருவரும் முன்னுக்கு வரவேண்டும்" எழுதினால், அவர் முன்னுக்கு என்ற பதத்தின் மேல் ஒரு வட்டம் போட்டு, இது பேச்சுமொழிச் சொல் என்று கூறி அவ்வாறு எழுதுதல் கூடாது என்று அறிவுறுத்துவார்.

மாணவனும் தான் செய்தது தவறு என்று " அறிந்து" கொள்வான்.

மூச்சை நிறுத்தும்போது எழுப்பும் ஒலியை முக்குதல் என்பர். எப்படி அமைந்தது இச்சொல்?    மு என்பது முன் இடம் குறிக்கும் ஓர் அடிச்சொல்.
கு என்பது சேர்தல் குறிக்கும் சொல். இன்று பெரிதும் உருபாக வழங்குவது.

முக்கு என்பது முன்னிடம் கொண்டுவா என்று சொல்வதாகும்.

தொடர்பினைக் காட்ட,  முன் +கு என்று எழுதி,   முன் கு >  முற்கு என்ற காட்டுவதே சரியாகும்.  முற்கு என்பது பின்னர் முக்கு ஆனதென உரைப்பதே விளக்கும் எளிய வழியாகும்.

முன்னுக்கு என்ற உருபேற்ற சொல்லுக்கும்  முற்கு என்ற சொல்லுக்கும் அடிப்படையில் சொற்புனைவு  வேறுபாடாவது ஒன்றுமில்லை.   வாத்தியார் முன்னுக்கு என்ற சொல்லுக்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும்,  முற்கு என்று அமைந்து பின்னொரு அம் விகுதிபெற்று  "முற்கம்" என்றாகி  மொழியில் இடம்பிடித்துவிட்ட சொல்லுக்கு அவரென்ன எதிர்ப்புத் தெரிவிக்கப்போகிறார்?
முற்கம் > முக்கம் என்பது ஒலி  குறிக்கும் சொல்.

இன்னொரு பதத்திலும் மு என்ற அடிச்சொல்லும் சேர்விடம் குறிக்கும்  கு என்ற துணுக்குச்சொல்லும் இணைந்து இறுதியில் ஓர் அம் விகுதியையும் இட்டுக்கொண்டு சொல்லமைப்பைச் செய்துள்ளது காண்க. அது மு+ கு+ அம் = முகம் என்ற சொல்லே.  முக்கம் என்ற சொல்லிலும் இம்மூன்றுமே  இணைந்துள்ளன என்றாலும் ஒன்றில் ககர ஒற்றுச் சந்தி எழுத்து வந்துள்ளது; இன்னொன்றில் சந்தி இல்லை. இவ்வாறு ஒன்றில் சந்தி வைத்தும் இன்னொன்றில் அஃது இல்லாமலும் ஆக,  இருசொற்களைத் தோற்றுவித்துள்ளமை ஒரு சீரிய அமைப்புத்திறனே ஆகும்.  இத்திறன் மொழியில் வளர்நாட்களிலேயே நன்கு  வெளிப்பட்டுள்ளது பல சொல்லமைவுகளில் காணலாம்.  எடுத்துக்காட்டுக்கு ஒன்று:   அறு + அம் = அறம்.   அறு+ அம் = அற்றம். இவை இருவேறு பொருண்மைகளை உணர்த்த முன் நிறுத்தப்பட்ட சொற்கள் ஆகுதல் காண்பீர்.

இவ்வாறாக, முன் உள்ளதாகிய முகம் என்னும் சினைப்பெயர் ,  மு+ கு +  அம் = முகமென்றே வந்ததல்லால் முக்கம் என்று வந்திலது அறிக.

முன் என்ற சொல்லிற் போலவே,  பின் என்ற சொல்லிலும் அமைப்புத் திறத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.   பின்+ பு =  பின்பு என்றும் இதனின் பேதமாக பின்+ பு + அம் =  பிம்பம் என்றும் வந்துள்ளமை அறிக. இதற்குக்  காரணமும் கூறுதல் கூடுவதே.  பின்பு என்பதிற் பின்மைக் கருத்து வெளிப்பட்டு நிற்றல் வேண்டும்.  பிம்பம் என்பதில் அக்கருத்து உள்ளுறைவாக மட்டுமிருந்தால் போதுமானதாகும். நிலவுக்குப் பின்னால் என்று யாரும் சொல்வதில்லை,  நிலா கோட்டை கட்டியுள்ளது என்று சிற்றூரார் கூறுவதிலிருந்து இதன் சொல்லமைப்புப் பின்மைக் கருத்து அடியிற் படுத்துவிட்டது.

இவ்வாறு சொல்லாக்க நுட்பங்களை அறிந்திடில் தமிழினிமை தக்கவாறு பளிச்சிடுமென்றறிக.

சொல்லமைப்புக் கருத்து பின்புலத்தில் ஒடுங்கிவிடில் அது நிகழ்ந்த சொல்லைத் திரிசொல்லெனலே தகும்.

இப்போது முன்னுக்கு என்ற உருபேற்ற வழக்குச்சொல்லை மட்டும் வைத்துச் சொல்லமைப்போம்.

முன்னுக்கு
மு என்பதும் முன் என்பதும் ஒரே சொல்லின் இரு வடிவங்கள்.
முன்னு என்பதில்  னு என்பது:    0ன்  என்பது சந்தி. உ என்பது சாரியை.
க்கு என்பதில் க் என்பது சந்தி;  கு என்பது  இடம் அல்லது சேர்விடம்.
ஆகவே அடிப்படை உள்ளிருப்புகள்  மு என்பதும்  கு என்பதும். மற்றவை தள்ளுபடி,
மு + கு,
இப்போது அம் விகுதி சேர்த்துச் சொல்லாக்கம் நிகழ்த்துக.
மு + கு + அம் =  முகம்  ஆயிற்று.
முகம் என்றால் முன்னில் அல்லது முன்னுக்கு உள்ள உறுப்பு என்பதே.
இன்னொரு வகையாகச் சொல்லவேண்டின்
முகம் என்றால் முன்னுக்கு.
முன்னுக்கு என்றால் அது முகம், ஆனால் முன்னுக்கு உள்ள பிறவும் குறிக்கும்

முகம் என்பதை முன்னுக்கு என்பதினின்று அமைத்ததில் முன்னுக்கு உள்ள ஓர் உறுப்புக்குச் சிறப்பான பெயர் வைத்தோம்.
மூஞ்சி என்பது முன் + சி=  மூஞ்சி.  முதனிலை நீண்டு சொல் அமைந்தது.  சி என்பது விகுதி.  இடப்பெயரினின்றும் தோன்றிய ஒரு சினைப்பெயர்.

தட்டச்சு சரிபார்ப்பு பின்,



வியாழன், 26 மார்ச், 2020

தொழுகை - பிரார்த்தனை

பிரார்த்தித்தல் என்பதை அறிவோம்.

பண்டை நாட்களில் இறைதொழும் நடவடிக்கைகள் வீட்டுக்கு வெளியில்தான் பெரிதும் நடைபெற்றன.  இதற்குக் காரணம் வெளியிடத்துள்ள lஇடவிரிவு ஆகும்.  ஆலமர் கடவுளும்  (சிவன்)   அங்குதான் வைத்துப் பூசனை பெற்றார்.  ஆலமரம் என்பது அகல மரம்.   அகல் அகலம்.   அகல் ஆல். இது பகல் பால் என்றசொல் போலுமொரு திரிபு.  பகல் எனிற் பிரிவு.  பகு அல் > பகல்.     அறத்துப்பால் என்றால் அறத்தைப் பற்றிக் கூறும் பிரிவு. மற்றும் சூரியன் ஒளிரும்   பகுதி நேரமும் பகல் எனவேபடும்.
சூடியன் >  சூரியன்.    இது மடி > மரி போலும் திரிபு.

வீட்டுக்குள் தொழும் முறை இடவசதிக் குறைவின் காரணமாய் அப்போது பெரிதும் ஏற்படவில்லை.

மக்கள் ஆலமரத்தடி சென்று பிரார்த்தித்தனர்.   பிரார்த்தித்தலாவது புறத்தே ( வீட்டுக்கு வெளியில் ) சென்று தொழுகை மேற்கொள்ளுதல். வேண்டிக்கொள்ளுதல். அரண்மனைகளில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறை வேறாகும்.

இதில் உள்ள சொற்கள்:

புறம்  .>  புற. (   வெளியில்.     )
ஆர்த்தல் :    ஒலித்தல்.  இச்சொல் ஏனைத் தமிழின் இனமொழிகளிலும் உளது.

ஆர்த்தல் என்பது பின் சொல்லமைவின் பொருட்டு  ஆர்த்தித்தல் என்று திரிந்தது.  ஆர்த்தித்தல் என்பது ஒலிக்கச் செய்தல்.

புற ஆர்த்தித்தல் >   பிர ஆர்த்தித்தல் > பிரார்த்தித்தல்.

வெளியில் நின்று தொழுகை மேற்கொள்ளுதல். தொழுமனைகள் அல்லது கோயில்கள் அமைந்தபின்  அங்கு தொழுதல்,  வீட்டில் வசதி கிட்டியபின் அங்கு தொழுதல் என்று பின் பிரார்த்தனை பொருத்தமான எவ்விடத்தும் செய்யப்படுவதாயிற்று..  சிற்பிகள் தோன்றிச் சிலைகள் வடித்த பிற்காலத்தில் அவற்றின்முன் நின்று ஒலி எழுப்பி வேண்டிக்கொள்ளுதல் பிரார்த்தனையே ஆயிற்று.

ஆர்த்து ஆர்த்து ஓங்கி:  திருவாசகம்  3.51

அர், ஆர் என்பன ஒலித்தல் குறிக்கும் தமிழ் அடிச்சொற்கள். வல்லமையுடன் ஒலிஎழுப்பிப் பிறரை அடக்கிக் கீழ்ப்படியச் செய்து இயக்கியவனே அரசன்.   அர் . >  அர >  அரசு. ( பரி > பரிசு:   சு தொழிற்பெயர் விகுதி ).  அர் >  அரற்று > அரற்றுதல்:  ஒலித்தல்.  அர் >  அரட்டு.
கடல் ஆர்த்து எழுந்து சுனாமி வருகின்றது.  "  ஆர்த்தெழுவோம் நாம் தமிழரென்று " என்ற வாக்கியத்தில்  ஒலித்தெழுவோம் என்று பொருள்.  அர அர அர சிவா என்பது பின் ஹர ஹர சிவ என்று அயலில் மெருகுண்டு திரிந்தது.  அரட்டு > அதட்டு என்றும் திரியும்.  "த த  வாடா" என்பதில் த என்பது அதட்டுதல் குறிப்பு.   அர அர என்பது ரா ரா என்றும் திரியும்.   ரெக்ஸ் என்ற இலத்தீன் சொல் அரசு என்பதன் திரிபு.  இப்போது உலக சேவைச் சொல் அதுவாகும்.,.


அர ஹர   சிவ சிவ குருநாதா
அருகினில் வந்தெமைக் காவாவா  ( பாட்டு. )

அர்ச்சனை அருச்சனை என்ற இவற்றை ஆய்வு செய்யுங்கள்.

மறுபார்வை பின்

துக்க வீட்டில் மிக்க கவனம் வேண்டும்.

நண்பன் இறந்தாலும் நாட்டுறவோர் சென்றாலும்
முன்பின் அறியார் மறைந்தாலும் ---  பண்பனே
நால்வர்தாம் போதுமே நன்காடு கொண்டுசெல
நீள்வதோ கூட்டமே கேடு.


தொற்றும் மகுடமுகி நோய்நுண்மி  ஆதலால்
குற்றம் செயல்புன்மை வேண்டாமே ---- உற்றார்
உறவென்ப தொன்றைத்தான்  உள்மனத்தால் போற்று
குறைவொன்றும் நாடா துனை.


நோய்வட்டத்தைச் சுருக்கும் பல நடவடிக்கைகளை அரசுகள்
எடுத்துவருகின்றன.  அவற்றுக்கு ஆதரவாக இருந்து விதிகளைத்
தவறாமல் கடைப்பிடிப்பதே நாம் இந்தத் துன்பகாலத்திலிருந்து தொலைவில்
சென்று தப்பிக்கும்  மார்க்கமாகும்.  உடல்நல வழிகளைத் தவறாமல்
பின்பற்றுங்கள்.

புதன், 25 மார்ச், 2020

மகுடமுகி நோய்நுண்மிகள் - ஆடினது போதுமே.

குறுமியாம் கிருமியே இருபதாம் ஆண்டிதனைக்
குறுகியதும் துன்பநாளே.
வறுமையில் வாடிடுவர், வளம்பல கூடிடுவர்
வந்திடும்  யாரெனினுமே.

கொன்றதுபல் ஆயிரமே  பிள்ளைதாய் ஆயினுமே
மண்டுபசி தீராமலே,
உண்டதுவே குடித்ததுவே உயிர்களை என்செய்வோம்
உலகெங்கும் வெடித்ததொற்றே.

தோன்றுமிடம் சென்றினிய தோழியரைத் தோழர்களை
ஊழியர்கள்  ஈண்டுகாணத்
தாண்டிடவும் விட்டதிலை தலையிலடித் தேவீட்டில்
தங்கிடவே பொங்குதுயரே.

ஆடினது போதுமினி மகுடமுகிப் பேய்க்கிருமி
ஓடிடவே செய் இறைவனே
நாடின இன் பங்களெலாம் நாம் காணக் கொஞ்சமினி
நன்மக்கள் பெறவேணுமே.


அரும்பொருள்

குறுகியதும்   :     அடைந்ததும்.   சேர்ந்ததும்.
வளம்பல கூடிடுவர் :   செல்வத்துடன் கூடி இருப்போர்.
மண்டு  -   மிகு.

தோன்றுமிடம் -  நினைத்துச் செல்லுமிடம்
தாண்டிடவும் -  தடுப்புகளைக் கடந்திடவும்.
பொங்கு துயரே -  துயர் மிகுதல்.




செவ்வாய், 24 மார்ச், 2020

பிரேமை காதல் காமம் காம். மற்றும் காவாலி

பிரேமை,  மோகம் முதலிய சொற்களை முன் விளக்கியதுண்டு எனினும் அவை இங்குக் காணப்படவில்லை.

பிற ஏமை -  பிரேமை

பிற குடும்பத்தில் அல்லது பிற கூட்டத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணை தான் தனக்கென்று எடுத்துக்கொண்டு அவளைக் காத்து ஒதுக்கிக்கொள்வதே பிரேமை என்ற சொல் அமைவதற்குக் காரணமானது,  ஏம், ( ஏமம்) என்பது பாதுகாவல் என்று பொருள் தரும் சொல்.  தன் குடும்பத்தில்  பிறந்த பெண் தனக்குத் தங்கை அல்லது  அக்கை ( அக்காள் )  ஆகிவிடுதல் கூறவேண்டாதது. உறவு முறைகள் மக்களிடை வரையறுக்கப்பட த் தொடங்கலுற்ற மிகப் பழங்காலத்தில் நிலவிய கருத்துகளின் அடிப்படையில் பிற ஏமை  (பிரேமை) என்ற சொல் அமைவுற்றது,  பிற குடிப் பெண்ணைத் தனக்கென்று காத்துக்கொள்ளுதலே பிரேமை என்றாகிப்  பொருள் ஒருவாறு மாறிப் பின்னர் அது காதலென்ற (  மனவுணர்வுப் )  பொருண்மையைப் பெற்றது,  காவற் கருத்து மறைந்தது எனினும் சொல்லில் அது இன்னும் ஒளிந்துகொண்டிருக்கிறது.    பிற என்பது பிர என்று எழுத்துமாறி அதன்பின் ஈற்று அகரம் கெட்டு ஏமம் என்ற  சொல்லுடன் இணைந்து  பிரேமை என்ற சொல் அமைந்தது அறிக. ரகர றகர வேறுபாடின்றி சொற்கள் வழங்கிய காலமும் உண்டு. பின்னர் அவை குறைந்தன.

காதல்

காதல் என்ற சொல்லும் காத்துத் தனக்கென்று மேற்கொள்ளும் மனவுணர்வினையே குறித்ததென்பது காணின், பிரேமை என்பது அதே கருத்திலமைந்த சொல்லே என்பதை வலுப்படுத்துதல் காணலாம்.  காதல் என்பது காத்தல் என்பதன் தன்வினை வடிவமே எனினும் காலப்போக்கில் இதனைப் புலவரும் மக்களும் மறந்தனர் என்பது மிகத்தெளிவு.   இதே கா என்ற காத்தல் அடிப்படையில் எழுந்ததே காம், காம் + அம் = காமம் என்ற சொல்லும் (வடிவங்களும்) என்பதுணர்க.

தான் கண்டு காதலுற்ற பெண்ணைத் தனக்கென்று ஒதுக்கி மேற்கொள்ளும் செயல்பாடு உலகனைத்தும் காணப்படுதலின் தமிழ்ச்சொற்கள் மனித இயற்கையை ஒட்டிஎழுந்தவை என்பது உணரற்பாலதாகும்.

காவாலி

பயனற்றவற்றைப் பற்றித் திரிபவன் காவாலி.     கா -  காத்துக்கொள்ளுதல்.  வால் =  வால்போல் பின்செல்லுதல்.  காவாலி -  வேண்டாதன பின்பற்றிக் காத்துத் திரிபவன்.  காத்தலாவது விடாது பற்றி நிற்றல்.   இனிக் காவு + ஆல் + இ என்று பிரித்து -     காவு -  காத்தல்;  ஆல் -  விரிவாக அல்லது மிகுதியாக என்று பொருள்தரும் சொல்.  அகல் > ஆல் என்று திரியும்.   இ -  உடையனாதல் குறிக்கும் விகுதி.   ஆகக்  காவாலி எனினுமாம்.

கா என்ற அடியிற் பிறந்த சொற்கள் இன்னும் பல. சில பின் காண்போம்.


காமுகன் என்பது எவ்விதம் அமைந்தது?  இதில் முகம் என்பதென்ன ?

மேலும் அறிக:  https://sivamaalaa.blogspot.com/2018/11/blog-post_3.html

தட்டச்சுப்  பிறழ்வுகள் பின் கவனிக்கப்படும்.

(We are on self quatantine from Jan 2020. Pl take care. Coronavirus.)

சனி, 21 மார்ச், 2020

சாஷ்டாங்கம் ‌ - சொல்

இன்று " சாஷ்டாங்கம்"   என்ற சொல் அறிவோம்.

இச்சொல்லின் முந்துவடிவத்தைக் கண்டு ஒப்பிடுவது  எளிதே ஆகும். இதை இவண் செய்து  மகிழ்வோம்.

அங்கத்தை முழுவதும் தரையில் சார்த்தி இறைவணக்கம் முதலியன இயற்றுதல்  "சாஷ்டாங்க"மாகும்.

சார்த்து அங்கம் >. சார்த்தாங்கம்> சாஷ்டாங்கம்   ஆயிற்று..

அதாவது  இஃது பூசைப் பொருள்கள் சார்த்துதல்போல் அங்கத்தைச்  சார்த்துவது.

சார்த்து என்பது பின் "சாத்து‌"  என்று
திரிந்தது.  பின்னர் அயல்சென்று    சாஷ்டா....>   சாஷ்டாங்கமாயிற்று. சாஷ்டாங்கம் வழக்குக்கு வந்த பின் சார்த்தாங்கம் இறந்தது

இவ்வாறு பின்வடிவம் வலுப்பட்டு நின்ற பின் முந்தையது  மூழ்கிப்போன இன்னொரு சொல்: கட்டம் (1)> கஷ்டம்.

கடு + அம் = கட்டம் > கஷ்டம்(1).  இனிக்   கட்டு + அம் = கட்டம்(2)  என்றுமாம். கஷ்டம்(1) என்ற சொல் செய்த பணி என்னவெனில்,  கட்டம்(2) என்பதனுடன்    ஏற்பட்ட பொருள்மயக்கு விலக்கியமை என்பர்.   சாஷ்டாங்கம்  என்பது இவ்வாறு ஒன்றும் உதவிற்றில்லை காண்க.

அங்கம் என்பது முதன்மை  (important)  உள்ளுறுப்புகள் யாவும் உள்ளடங்கிய உடல்.  அடங்கு>. அடங்கம்>    அங்கம் எனக் காண்க. இது  டகரம் ஒழிந்த இடைக்குறைச்சொல்.  இவ்வாறு புனைவுற்ற இன்னொரு சொல் :  கேடு + து =  கேது என்பது.    பெரிதும் கேடு விளைக்கும் கிரகம் அல்லது கோள்  என்பது இதன் பொருள். மற்றொன்று :  பீடு + மன் = பீமன்,  பீடுடைய மன்னன்.

ஒரு திரிந்த  துணுக்கும் ஓர் இடைக்குறைச் சொல்லும் கலந்த மயக்கமே சாஷ்டாங்கமாகும்.

தேய்ந்து அழிதக்கது தேகம்.  இது  தேய் + கு + அம் =  தேய்கம் என்றாகி யகர ஒற்று விலக்கித்  தேகம் என்றமைந்தது.   பேச்சு வழக்கில் திரேகம் என்றொரு சொல்லும் உள்ளது.  அது தோல் திரைந்து பின் அழிதல் என்னும் கருத்தில் அமைந்தது.   திரை+ ஏகு + அம் =  திரேகம்.  திரைந்த பின் ஏகிவிடுவது.  போய்விடுவது என்பதே ஏகு என்ற சொல்லால் உணர்த்தப்பட்டது.  இச்சொல்லமைப்பில் திரை என்ற சொல்லின் இறுதி ஐகாரம் கெட்டது.

நரை திரை மூப்பு மரணம் என்பது தமிழ்நாட்டினர் சொல்லும் முதுகருத்து ஆகும்.

ஒப்பீடு:

வாய்+ தி = வாய்த்தி >  வாத்தி > வாத்தியார் ( பணிவு அல்லது மரியாதைப் பன்மை.)  யகர ஒற்று ஒழிந்த சொல்.
அதுவேபோல்  தேய்கம் > தேகம் என்பதும்.

சாஷ்டாங்கம்:

எட்டு உறுப்புகள் தரைப்படுவதால் இப்பெயர் ஏற்பட்டது என்பார் உளர்.

சா -  சாய்ந்து,
ட்டு    =   எட்டு   ( திரிபு:  அட்டு )
அங்க(ம்)   மகர ஒற்று விலக்கல்
ஆக சாட்டாங்க > சாஷ்டாங்க என்பது  என்பர்.

எட்டு உறுப்புகள் ஆவன: இரு கைகள் இரு முழங்கால் இரு தோள் மார்பு நெற்றி   ஆக எட்டு என்பர். அங்கம் என்பதில் தோளும் மார்பும் அடங்கிவிட்டன ஆகையால் இது பொருந்தவில்லை.  தோள் முழுமையாய்த் தரையிற் படுவதில்லை. இதனினும் உயிருக்கு வரும் தீமையை உடலுக்குச் சாட்டுதல் என்னும் கருத்துக் கூறி  சாட்டு + அங்கம் = சாட்டாங்கம் என்று புனைந்து  சாஷ்டாங்க என்று திரிப்பின் நல்ல விளக்கமாகுமே! இறைவணக்கத்துக்கு உண்டான புனைவு பின் பிற வணக்கங்களுக்கும் பரவிடில் வியப்பொன்றுமில்லை.



அறிக மகிழ்க.


இங்கு தட்டச்சுப் பிறழ்வுகள் இருப்பின்.
பின் சரிசெய்யப்படும்.

22.3.2020 failed to generate edit preview  .

புதன், 18 மார்ச், 2020

செவிலி ஆவிலி சக்கிலி காப்பிலி முதலானவை

பக்கத்தில் துணைவி என்று யாருமில்லாமல் அலைபவன் பக்கிலி,   இச்சொல் பக்கு + இலி  என்று பிரியும்.   லகரம் ரகரமாகத் திரிவது தமிழில் மட்டுமின்றிப் பிறமொழிகளிலும் காணக்கிட்டுவதாகும்.  பக்கிலி என்பது பின் பக்கிரி என்று திரிந்து அறியாமையால் பிறமொழிச்சொல் என்று தவறாக உணரப்பட்டது.

பகு என்பது பலவாறு திரியும் சொல்.அவற்றில் அனைத்தையும் இங்குக் கூறின் பெருகும்.   பகு என்பது பக்கு என்று திரியும்.   இதன்பொருள் இரண்டாகப் பகுந்தது என்றும் ஆகும்.  பகு என்பது முதனிலை திரிந்து பாகு என்றுமாகும். இதன்பொருள் பல பாகங்கள் கலந்துருவானது என்பதே.  இனி அம் விகுதி பெற்றபின் பாகம் என்றாகுவது பகுதியாவது என்ற பொருள்தரும்,  பக்கு என்பது அம் விகுதி பெற்றுப் பக்கம் ஆகும்.  பக்கு என்பது மெல்லெழுத்து வந்து பங்கு என்றும் ஆம்,   பின் அது அம் விகுதி பெற்று பங்கம் என்றுமாம். எனில் அது பகுதி நலமிழந்தது என்பது. பங்கு என்பது இ விகுதி பெற்றுப் பங்கி என்றும் பின் அது முதல் நீண்டு பாங்கி  ( தலைவியின் பக்கமிருப்பவள் )  அதாவது தோழி என்றும் பொருளுடைத்துமாம்,  \

பகு > பக்கு > பக்கு இல் இ > பக்கிலி > பக்கிரி என்றறிக,

இச்சொல்லின் இடையில் வந்த இல் என்பது இல்லாமைப் பொருட்டு. ஆனால் இல் என்பது இடமென்றும் இல்லமென்றும் பொருளும் உடையதாதலின் அவ்வாறும் சொற்கள் அமைந்துள்ளன.

இதற்கு எடுத்துக்காட்டு.  செம்மை + இல் + இ :  அதாவது சீரான முறையில் இல்லத்திலிருந்து பார்த்துக்கொள்பவள்.   இங்கு மை விகுதி கெட்டு  செ+ இல் + இ =  செவிலி ஆகிற்று.  செம்மை > செவ்வை.  இது அம்மை > அவ்வை போலும் திரிபு.  செவிலி > செவிலித்தாய் என்றுமாம்.

சாக்கிய முனியாகிய புத்தரைப் பின்பற்றி இல்லத்து வாழ்வை அமைத்துக்கொண்டவர் சாக்கு + இல் + இ >  சாக்கிலி என்பது முதலெழுத்துக் குறுகி சக்கிலி எனலும்  ஆகும். இதற்கு வேறு அமைப்பும் கூறலுண்டு என்பது அறிக,  முதலெழுத்துக் குறுக்கம் பல சொற்களில் நிகழ்ந்துள்ளதொன்றாகும்.
இது தமிழ்மொழியில் பல சொற்களில் காணக்கிட்டுமொரு நிகழ்வானதால் விரித்திலோம்.
[ சாக்கிய என்பதில் சாக்(கு) + இய  என்று பிரித்தபின் இய என்பது பெயரெச்சம் காட்டும் பின்னொட்டு என்று காண்க. அயலில் இது சாக்ய என்று குறுகும்‌. சாக்கு + இல் + இ > சாக்கிலி > சக்கிலி.  சாக்கியக் கொள்கையில் இருப்போன்,  அல்லது சாக்கியம் பற்றி வாழும் வீட்டினன் என்று ஏற்ப விரித்தல் கொள்க. ]


சக்கிலி:  மற்றொரு விளக்கம் இங்குக் காண்க:

சக்கிலியன் http://sivamaalaa.blogspot.sg/2015/11/ii.html


" வா ",  "வருவாய் ". முதலிய சொற்கள் ஆன் விகுதியுடன் இறந்தகாலத்தில் வந்தான் என்று குறுகுதலால் இது (ுதல் ுதல்  ுுுதல் ) வினைகளிலும் மிகுதி.   தோண்டு + ஐ என்பது தொண்டை என்று குறுகுதலும் காண்க. பகுக்கப்படுதலின் வெட்டிய கமுகுக் கொட்டை பாக்கு என்று நீடலும் காண்க.  நாக்கு என்பது வினையாக்கத்தில் நக்கு -  நக்குதலென்பதும் அறிக.

ஆவிற்கு இடம் கட்டிக்கொடுத்தவன் ஆவிலி > ஆவிலியன்.   இனி  ஆவிலாமல் வேட்டுவனாக வாழ்பவன் ஆவிலி யாவதும் காண்க. இடனும் வரலாறும் நோக்கிப் பொருள்கொள்ளுதல் வேண்டும்.  பாதுகாப்பிலாதவன் காப்பிலி எனலும் தனக்குக் காவல் இல்லம் அமைத்து வாழ்பவன் காப்பிலி ஆவதும் வரலாறு நோக்கியே தீர்மானிக்கத் தக்கவை என்பதுமறிக.

மூச்சு நிறுத்தி வெளிக்கொணர்தல் ஆவது மூக்கு > முக்கு > முக்குதல் ஆனதும் காணின் நீட்டலும் குட்டையாக்கலும் சொல்லமைப்பில் இயல்பென்றுணர்க.

செவ்வாய், 17 மார்ச், 2020

அரசியலில் ஆதவன்

கீழுள்ள நாலு வரிகள் கொண்ட கவிதை
ஒரு மூன்று ஆண்டுகளின்‌முன்
வேறு நாட்டில் இயங்கிய அரசியல் கட்சியைப் பற்றி‌ வரையப்பட்டது.

இக்கட்சி இப்போது இறங்கிவிட்டது.

ஆம்ஆம் என்றனர் ஆற்றலைப் போற்றி
அரசியல் வானதில்  ஆதவன்  என்றிட

ஏமுற அனைவரும் ஏத்திய கட்சி
இழுபறிப் படுகிற‌‌ தூழலில் சிக்கி.

வாசித்து மகிழுங்கள்.

இவ்வரிகளில் வந்த சில சொற்கள் பற்றி அறிவோம்.5

ஆதவன்:  சூரியனைப் போற்றுவது நம் பண்பாட்டில் உள்ளது. தவ ஞானிகளும்
போற்றினர். தங்கள் தவம் அவனால் ஆகும் என்று   நம்பினர்.
amma left with
ஆ :  ஆகும் .
தவம் :   ஞானிகள் செய்வது.  தவமாவது உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை என்றபடியான நெறிநிற்றலாம்.

தவம் ஆகுவதற்கு உதவுவோன் ஆ+தவன்.  இது முறைமாற்றுச் சொற்புனைவு. இவ்வாறு  புனையப் பெற்றவை பலவாகும்.  இதுபோல் புனைவுபெற்ற இன்னொரு சொல் தபு தாரம்  என்பது...   மா+தவன் > மாதவன் எனற்பால சொல் இயல்பாய் அமைந்தது  ஆகும்.  மாதவன் எனின் பெருந்தவமுடையோன்.

ஆதவன் என்பது காரணச் சொல்.

யாதவன் என்ற சொல் பற்றி இவண் காண்க.

https://sivamaalaa.blogspot.com/2019/11/blog-post_23.ht

யா என்பது இவண் ஆ (  மாடு ) என்பதன் திரிபு.   இதுபோலும் இன்னொன்று  ஆடு > யாடு.    தவர் என்பது தமர் ( நம்மவர்) என்பதன் திரிபு.    இனித் தவர் > தவமுடையோர் எனினும் ஒக்குமென்றறிக.

இது இங்கனம் திரிபுற்றது பொருள்மயக்கு அகற்றிற்று.


கட்சி -  கள் + சி.  இது கள் என்ற அடிச்சொல்லில் தோன்றியது.
கள் +து = கட்டுதல்.  காரணத்தால்
கட்டுண்டு நிற்கும் கூட்டமே கட்சியாகும்.


தட்டச்சு த் திருத்தம் பின்.
மறுபார்வை:  20.3.2020.



வியாழன், 12 மார்ச், 2020

வக்கணம் வக்கணை விரித்துரைத்தல்

வரிக்கு வரி அழகு வெளிப்படும்படி ஒன்றை விரித்துரைத்தலும் வக்கணை எனப்படும்.

வரிக்கு வரி + அணி > வரிக்கணி > வக்கணி >  ( இவ்விடத்து வினைச்சொல்லாகி ) வக்கணித்தல் எனவாகி,  அழகுரைத்தல் என்ற பொருளிலும் இச்சொல் வரும்.  இதனை உபசாரம் என்றும் சொல்வர்.

இறைவன்பால் உண்மையான அன்புவைத்தலால் அன்றி வெறும் வக்கணையால் இன்பமில்லை என்பார் தாயுமான அடிகளார்.

வக்கணை தன் ஐகார விகுதியை விட்டு வக்கணம் என்றும் வருதலுண்டு.

வற்கண் > வற்கணி > வக்கணித்தல் ஆகி, வினைச்சொல் ஆவது,  ஒரு+கண்+இ > ஒருக்கணித்தல்  ( ஒருக்கணித்துப் படுத்துறங்கு )  என்பதுபோலும் சொல்லாக்கம்.

ஆணித்தரமாக ஒன்றை விளக்குதல் என்ற பொருளில்,  வன் + கண் + அம் > வற்கணமென்பது திரிந்து வக்கணம் என்றுமாகும் எனவும் அறிக.

இச்சொல் பல்வேறு புனைதிரிபுகளால் பல்வேறு பொருட்சாயல்கள் உடைத்தென்று அறிக.

புதன், 11 மார்ச், 2020

பேச்சில் வக்கணை.

கடிதத்தில் வக்கணையை முன் இடுகையில் கண்டு மகிழ்ந்தோம்.

https://sivamaalaa.blogspot.com/2020/03/blog-post_11.html


அதன் பொருத்தணை மேலே உள்ளது,  ( link )

பேசும்போது நேரிய முறையில் பேசாமல் வழுக்கலாகவும் தேவைக்கதிகமான முறையிலும் பொருத்தமின்றியும் சொற்களைப் பொழிவது வக்கணை. இது விளக்கம் தான்; வரையறவு அன்று.

வழுக்கலாகச் சொற்களைச் சேர்ப்பிப்பது அல்லது அணைப்பிப்பதுதான்  வழுக்கணை ஆதலின்

வழுக்கு + அணை =  வழுக்கணை

இது வக்கணை என்று ழுகரம் இடைக்குறைந்தது.

ழகர ஒற்றும் வருக்கமும் இடைக்குறைவது மிகுதி.

வழு + கண் =  வழுக்கண்,  வழுக்கண்+ அம் = வழுக்கணம்;  வழுக்கண்+ ஐ = வழுக்கணை, பின்  ுகரம் இடைக்குறை எனலும் இன்னொரு விளக்கம். எனினும் இதில் , அண் என்பதற்குக் கண் ( பொருள் :  இடம் ) மாற்று.

வழு -  குற்றம் ;  வழுக்கு என்பது வழு என்று வருவது மற்றொரு நோக்கில் கடைக்குறை.

வழுக்கு+ அண்
வழு + கண்.

வழு என்ற அடியில்‌  வினைச்சொற்கள்:

வழு > வழுவுதல்
வழு > வழுக்குதல்

ழுகரம் இடைக்குறைதல்:

வழுத்துதல்
வாழ்த்துதல்.
சிற்றூர்களில் முன் இதை வாத்துவது என்பர்.

வாழ்த்தியம்   வாழ்த்தி இசைக்கப்படும் இயம்.

வாத்தியம் ஆனது காண்க.

இவை திரிபுச் சொற்கள்.

இயற்சொல் திரிசொல் வடசொல் திசைச்சொல் என்று தொடங்கும் ஒரு
தொல்காப்பிய நூற்பா,  அதை மனப்பாடம் செய்யுங்கள்.  நூற்பா எண் மறதி.

வக்கணை -   புகழுரை பின் காண்போம்.

(இதிற் சில  தட்டச்சுப் பிறழ்ச்சிகள் சரிசெய்யப்பட்டன.  15.3.2020.
பின் மறு பார்வை பெறும்.)
Note:
We are in the fear of  grip of covid19 ( corona virus). But will try to function normally.  Flu is also in circulation.


கடிதத்தில் வக்கணை.

ஒரு கடிதம் எழுதினால் அது யாருக்காக எங்கு செல்வதற்காக எழுதப்படுகிறது என்பதைத் தெளிவாக எழுதவேண்டும்.  இல்லாவிட்டால் இதைச் சுமந்து சென்று கொடுப்பவன் யாரிடம் சேர்ப்பது என்று திணறுவான்.

கடிதத்தை இடைவருவோனிடமிருந்து பெற்றுக்கொள்பவனும் அது தனக்குத்தான் என்று  அறிந்துகொள்ள அதற்கான முன் அறிகுறிகளை அறிந்துதான்  அதைப் படிக்கத் தொடங்குவான்.


இவ்வாறு கடிதங்களை வகுத்து அணைப்பிக்க வேண்டும்.  அணைப்பித்தலாவது சேர்ப்பித்தல்.

அண்முதல் - நெருங்குதல். சேர்தல்.
அண்டுதல் -   அடுத்துச்செல்லுதல்.
அண்மை
அணிமை.
எனப் பல சொற்கள்.  இவற்றின் அடிச்சொல் அண் என்பது.

அண் >( அணு )> அணுகு > அணுகு(தல்).
அண் > அன் > அனு>  அனுப்பு > அனுப்பு(தல்)
அண் >  அணை > அணைதல்  ( கப்பல் துறையில் அணைதல் )

இவற்றில் சேர்தல் கருத்து,   தொடர்வதை அறிந்துகொள்ளுங்கள்.

வகுக்கும்  அணை.

மாட்சிமை  பொருந்திய மாமன்னரே!.

இது அணை வாக்கியம்.  அணைக்கும் வாக்கியம்.

வகுக்கு(ம்)  அணை>  வகுக்கணை > வக்கணை.

இடையில் கு என்ற எழுத்து மறைந்து இடைக்குறையானது.

வக்கணை என்பதற்கு வேறுபொருளும் உண்டு. இது பல்பொருளொரு சொல்.

பிற பொருள்  :  அவற்றை அடுத்தடுத்து அறிந்து மகிழ்வோம்.

வக்கணை = கடித முகப்புக் குறிப்புரைகள்.

சனி, 7 மார்ச், 2020

பைசா என்ற சொல்.

பைசா என்ற சொல் பாதம் + அம்சா  என்ற இருசொற்களின் இணைப்பு என்று கூறினாருளர். அப்புறம் பாதம் என்பதைக் கால் என்று பொருள்கூறினர்.  பாதம் கால் ஆனால், கால் என்பது நாலில் ஒருபகுதி என்றனர்.  ஆனால் கால் என்பது தமிழ்ச்சொல்.  நடக்கு காலும் கால்; நாலில் ஒன்றும் கால்தான்,

சிறிய மதிப்புள்ள சிறு காசுகளைப் பைக்குள் போட்டுப் பெட்டிக்குள் வைத்தனர்.   பெட்டி - கல்லாப்பெட்டி.

பைக்குள் வைக்க  (பை).  சாத்தி வைத்தபடியால்  (.சா)

ஓரிடத்தில் வைக்கப்பட்ட சிறு காசுகள்.   பை - சா.

பா (பாதம் ) அம்சா என்பதினும்  பெ (பெட்டி)  + சா ( சாத்திவை)  என்பது இன்னும் பொருத்தமாகும்.

பெ + சா > பை சா.   பெட்டிக்குள் சாத்திவைப்பது.  பெ  சா > பெய்சா > பைசா.
பை + சா > பைசா.   பைக்குள் இட்டுச் சாத்திவைப்பது. மற்ற மதிப்பு நாணயங்களுடன் கலக்காமல்.
பா + சா > பாசா.        பாதத்தின் அம்சம். பாதம் = கால்.  ஆக கால் மதிப்பு.  

பெட்டிக்குள் கண்டபடி கிடக்காமல் பைக்குள் இட்டுச் சாத்துவது பைசா.
பைக்காசு என்பதாம்.

காத்து வைப்பதே காசு. பெட்டி அல்லது பைக்குள் இடுவது காத்துவைப்பதே ஆகும். பைசா பல மதிப்பினது ஆதலின் கால் மதிப்பு என்பது முழுப்பொருள் தரவில்லை.

உருவம்  =    ரூபம்   > -  ரூபாய்.
அரசனின்  முகம்  அல்லது அரசினருடைய முத்திரை உடைய நாணயம்.

தட்டச்சு மறுபார்வை பின்.

துலாக்கோலும் தராசும்

அளந்து தருவதற்கான கருவிக்கு எப்படிப் பெயரிடுவது?

ஒரு பாத்திரத்தில் அரிசியை எடுத்தால் அது எந்த அளவினது என்று மதிப்பிடலாம்.  அதற்கு ஒரு பட்டறிவு வேண்டும். எனினும் அஃது ஒரு மதிப்பீடு மட்டுமே. அவ்வரிசியை ஓர் ஒப்பிடு கோலில் ஏற்றி அளந்து அறிந்தாலே அரிசியின் எடை தெரிகிறது. சோறு சமைக்கும்போது ஓர் அளவு குவளை வைத்துக்கொண்டு  " ஒரு குவளை, இரண்டு குவளை" என்று சமைப்பவர் அளந்து இடுவார். ஆனால் அது அளவுகருவியன்று. கோலின் ஒரு புறத்தில் ஓர் எடைக்கட்டியும் மற்றொரு புறத்தில் அரிசியையும் வைத்து நடுவிற் பிடித்துத் தூக்கி  அறியும் கோல் துலைக்கோல் அல்லது துலாக்கோல் எனப்பட்டது.  துலாக்கோல் உண்மையில் எடையைத் துலக்கும் ஒரு கோலே ஆகும்.

துலக்குகோல் > துலைக்கோல்.
துலக்குக்கோல் > துலாக்கோல்.

துலக்குதல் என்ற சொல்லில்  குகரம் ஒரு சொல்லாக்க விகுதி.  துல் + கு = துலக்கு.   மூழ் > மூழ்கு என்பதிற் கு என்பது வினையாக்க விகுதியானதுபோல் துலக்கு என்பதில் கு என்பதும் விகுதியே. இப்படி அமைந்த இன்னொரு சொல்: விளக்கு(தல்)  ஆகும்.   விள்> விள்ளுதல் ( வெளிப்படுத்தல்).   விள் > விள் + கு = விளக்கு.  விளக்கு என்பதில் விள் - பகுதி. அ - இடைநிலை.   க் என்றுவந்தது சந்தி அல்லது புணர்ச்சி.   கு என்றது விகுதி. துலக்கு என்பதும் அன்னதே.

துலக்குதல் : பல் துலக்குதல் என்பதிலும் அதே சொல் வருகிறது.

எளிதில் அறிய இயலாத ஒன்றை ஒப்பீடு மூலம் அறியலாம்.

சமன்செய்து சீர் தூக்கும் கோல் என்றும் விளக்குவதுண்டு.

அரிசி போலும் அளக்கப்படும் பொருளைப் பிறனுக்கு விற்பதற்கு அல்லது பண்டமாற்றாய்த் தருவதற்கு (  " தரு " )     ஆகும் கோல்  ( "ஆசு" )   தராசு எனப்பட்டது. 

தருதலுக்கு   ஆகும் ஒப்பிடுகருவி.
தரு +  ஆ + சு (விகுதி).
தரு என்பது வினைச்சொல்.  ஆ என்பதும் வினைச்சொல்.  சு என்பது விகுதி.
தராசு.
ஆசு - பற்றுக்கோடு.  ( பற்றிக்கொள்ளுதல்).  தருதற்கு பற்றுக்கோடு ஆகும் கருவி எனலுமாம்.

தர+ ஆசு =  தராசு எனினுமது.


சு விகுதிச் சொற்கள்:   பரிசு.   விழைச்சு.
சு விகுதி இடையிலும் வந்து வேறு விகுதி ஏறும்.   அலை > அலை+ சு + அல் = அலைச்சல்.  இதேபோல் விளைச்சல். குடைச்சல்.  நமைச்சல்.

நீர்ப்பாசனம் என்ற   கூட்டுச்சொல்லில்  பாய் + சு + அன் + அம் >  பா(ய்)சனம் > பாசனம்.  நீர் பாய்ச்சுதல். யகர ஒற்று மறைவு.

யகர ஒற்று மறைந்த இன்னொரு சொல்:  வாய் + தி >  வாய்த்தி > வாத்தி(யார்).  வாய்ப்பாடம் சொல்பவர்.

பாய் > பாய்ம்பு > பாம்பு.  யகர ஒற்று மறைந்தது.   (முனைவர் மு வரதராசனார்.)

இவற்றை அறிக. மகிழ்க.



வெள்ளி, 6 மார்ச், 2020

தொம் > தொந்தி

தொங்கு என்ற சொல்லில் தொம் என்பதே அடிச்சொல்.

தொம் + கு =  தொங்கு.

தொங்கு(தல்) வினைச்சொல்.   தல் என்னும் விகுதி பெற்றால் விகுதி ஒழிய முன்னிற்பது வினை. வினை என்பது செய்கை. தொங்குதல் என்பது வினைக்குப் பெயராகிறது, இதனைத் தொழிற்பெயர் என்று இலக்கணியர் சொல்வர்.

தொம்பல்

இது தொம் > தொம்(பு + அல்) = தொம்பல்   ஆனது.  பு  மற்றும் அல் என்பன விகுதிகள்.  இரு விகுதிகள் பெற்ற சொல் இதுவாகும்.  கலப்பையில் தொங்கிக்கொண்டிருக்கும் ( ஒட்டியிருக்கும்) மண் அல்லது சேறு.

(சேர்ந்துகொண்டிருப்பது சேர் > சேறு.   ( இது வீர் > வீறு போன்றமைந்த சொல்). வைரஸ் என்ற சொல்லின் அடியும் இதுவாகும். விரைவு என்பது ஓர் உள்ளாற்றலால் முடுகி அல்லது விரைந்து சென்றடைதலைக் குறிக்கும்.

இதைப்பின் தனியாக விளக்குவோம்.  இங்கு    விர் > வீறு என்பதை மட்டும் ஒப்பிட்டுக் கொள்க.) 

தொம் > தொம்பு > தொப்பு

தொப்பு தொப்பு என்று நனைந்துவிட்டோம் என்பது காண்க

தொப்பு - துணி நனைந்து தொங்கும்படியாக


தொப்பு > தொப்பை
தொப்பு > தொப்பி.  ஒரு நடுப்பகுதி வெளிவந்த தலையணி.
தொப்பு > தொப்பூழ்.

தொம் என்பதற்கு தொ என்பது அடிச்சொல்.  ஆகவே மூலம்.

தொ >  தொடு,   ப > படு  போல. இதைத் தனியாக விளக்கவேண்டும். தொடும்போது உங்கள் கை இருக்குமிடத்திலிருந்து நீட்டப்பெற்று எதையும் தொடுகிறது.  நீள்வது வெளிவருவதே போன்றது. இருக்குமிடம் விட்டு வெளிவருவது.

தொடு > தொடை.

உடலைவிட்டு நீண்டு கீழாக  வெளிவந்தது.


தொம் > தொம்தரவு. > தொந்தரவு.  ( விடாமல் தொங்கிக்கொண்டிருப்பதுபோல ஒன்றைச் செய்து வருத்துவது ),


தொந்தி   ( தொம் தி )   -  வெளித்தள்ளித் தொங்குவயிறு.


விளக்கும்பொருட்டு ஒன்றை ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களால் சொல்லநேரும்.  வெளித்தள்ளுதல் தொங்குதல் எல்லாம் அதே.

தொம்பைக்கூத்து, தொம்பைநாற்று  இவை கூட்டுச்சொற்கள்.


அறிக மகிழ்க.

தட்டச்சுப் பிறழ்வுகள் பின்.

செவ்வாய், 3 மார்ச், 2020

கபிலர் என்னும் புலவர்பெயர்.

எப்பொருளாயினும் அதை ஒளிவு மறைவின்றி எடுத்துரைப்பதற்கு ஒரு திடமான மனம் வேண்டும்.   ஒளிவு மறைவு என்பதற்கு மற்றொரு சொல் "கட்பு"  என்பதாகும்.

கட்பு என்ற சொல் எப்படி அமைந்தது என்பதை முதலில் பார்க்கலாம்,

கள்ளம் என்ற சொல் எதையும் ஒளிப்பதையும் பொய்மையையும் குறிக்கும்.  கள்ளர் என்பது திருடர் என்றும் பொருள்படுவது.  இச்சொல் கருப்புநிறத்தவர் என்றும் பொருள்தரும்.  கள்ளி என்பது திருடி அல்லது மறைத்தவள் என்றும் குறிப்பதுடன் கள்ளிச்செடி, கள்ளிப்பலகை முதலியவையையும் குறிக்கும். இவற்றின் அடிச்சொல் கள் என்பதுதான்.  கள் ஒரு குடிதேறலையும் குறிக்கும்.

கள் என்பது அடிச்சொல் என்றோம்.  இச்சொல்லுடன் ஒரு "பு" விகுதியைச் சேர்த்தால்  கள்+பு =  கட்பு என்ற சொல் உருவாகின்றது.

ஒளிவு மறைவோ அல்லது தீய  பண்புகளோ இல்லாதவர்,  அல்லது எதையும் வெளிப்படையாக அணுகி ஆய்பவர்  என்று பொருள்தரும் ஒரு பெயரை அமைப்பதற்கு:

கட்பு + இலர்  =  கட்பிலர் என்ற சொல் அமையும்.

இச்சொல் மெய் நீக்கப்பட்டால்  அல்லது நாளடைவில் இடைக்குறைந்தால்

கபிலர் என்றாகிவிடும்.

கபிலர் என்ற சொல்லுக்குத் தமிழிலும் சங்கதத்திலும் வேறு பொருள்பல கூறலாம் எனினும் அவற்றை இன்னோர் இடுகையில் காணலாம்.

இடைக்குறைச்சொற்கள் பல ஆய்ந்து முன் கூறியுள்ளோம். பழைய இடுகைகள் காண்க.   நகுலன் என்ற பெயரும் நற்குலன் என்ற சொல்லின் இடைக்குறையாகி நற்பொருளே தரும். வல்லவர் என்ற சொல்லும் வலவர் என்று வருமே. பல்லோர் என்பதும் அர் விகுதி ஏற்குங்கால் பலர் என வருதல் கண்கூடன்றோ? இவையனைத்தும் நீங்கள் ஒப்பிட்டு அறிதற்கானவை.

இதைக் கபி -  குரங்கு  என்று பொருள்படும் சொல்லினடித் தோன்றியதாகக் கொண்டு பொருளுரைப்பாருமுண்டு.   அதையும் பின் காண்போம்,

கபிலர் என்ற பெயருள்ள புலவர்கள் தமிழ்நாட்டில் இருந்துள்ளனர்.    சங்கப்புலவர் கபிலர் என்பவர் பத்துப்பாட்டில் ஒன்றாகிய "குறிஞ்சிப்பாட்டு" பாடியுள்ளமையால் இப்பெயர் முதன்மை பெறுவதாகிறது.

தட்டச்சுப் பிழைகள் திருத்தம் பின்