திங்கள், 31 ஜனவரி, 2022

மாலை 4 மணிக்குச் சிற்றுண்டி

(பஃறொடை) 


எந்தநன்  னாளும் எமக்கினிய நன்னாளே

சொந்தவே  லைகளைச் சூழ்ந்து முடித்தபின்

நாலுமணி மாலையில் நல்ல  படியமர்ந்து,

காலுகை கட்குக் கருதியே  ஓய்வுதந்து,

நல்ல கொழுந்துநீர் யாம்விழையும்  சிற்றுண்டி

வெல்லம் இலாதபடி உண்டு மகிழ்வேமே.

இங்குப் படத்தில்   மகிழ்வீர்  இதுகண்டு

பங்குபெற வாரீர் விரைந்து.


கொழுந்துநீர் -  தேநீர்.

எந்த நன்னாளும் -மானிடர்க்கு இடரில்லா எந்த நாளும்

எமக்கினிய நன்னாளே - எமக்கும் இனிமைதரும் நல்ல நாள்தான்.

சூழ்ந்து -  ஆலோசித்து.  சூழ்தல் - ஆலோசனை செய்தல்.

மகிழ்வேமே  = மகிழ்வோமே

ஏம் வரின் எம்மனோரை மட்டும் உளப்படுத்தும். 

முன்னிலையாரை உளப்படுத்தாத முற்றுவினை.

இங்குப் படத்தில் மகிழ்வீர் இதுகண்டு --  இதை "இங்கு 

படத்தில் இது கண்டுமகிழ்வீர் " என்று உரைநடையாக்கிக்கொள்க.







 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்




பிரேதம் சொல்

 மனிதன் பலவகையான வாழ்முறைகளிலும் பல துன்பங்களும் பட்டு வாடித்தான் இன்றைய உன்னத நிலையை அடைந்தான். தொடக்கத்தில் அவன் மரங்களில் கிளைகளில் வீடமைத்துத் தங்கிக்  காட்டில் கொடிய விலங்குகளிடமிருந்து தப்பித்து, இற்றை நிலையை அடைந்தான். இன்று பிற கோள்களுக்குக் குடிமாறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளான்.  ஆனால் அவன் கடந்துவந்த காட்டாறுகள் எத்தனை எத்தனை.

இறந்த மனிதனின் உடல், மண்ணில் புதையுண்டுவிட்டால் அது அழுகி வெளியிடும் கூரிய வீச்சம் குறைந்து, சுற்றுப்புறம் தூய்மைப்படும் என்பதை மனிதன் கண்டபின் புதைகுழிகள் அமைக்கத் தெரிந்துகொண்டான்.  புதைகுழிகட்கு  அதிக நிலம் ஒதுக்கினால் விளைச்சல் வேளாண்மைக்கு  வேண்டிய நிலம் குறைவடையும் என்பதால் அவன் பிணங்களை எரித்துப் பலவாறு நிலப்பயன்பாட்டினைத்  திறமையாக்கிக் கொண்டான். பல்வேறு இனத்தாரும் இதில் முன்னேற்றம் கண்டனர்.

சில குழுக்களிடை மதக்கருத்துகள் நிலைகொண்ட படியினால், எரித்தவர் எரித்துக்கொண்டே இருக்கவும் புதைத்தவர் புதைத்துக்கொண்டே இருக்கவுமான  மாறுதல் இல்லா ஏற்பாடுகள் ஆங்காங்கு உறுதிகொண்டன.

இவற்றை நாம் மாந்த வளர்ச்சி நூல்களிலிருந்து அறிந்துகொள்கிறோம்.

இவை எல்லாம் எவ்வாறாயினும், பிற்காலத்தில் இறந்த உடலைப் புதைக்கும் தொழில்திறமை உடையவர்கள் தோன்றினர்.  எரிக்கும் திறமை உடையாரும் தோன்றினர்.  ஒரு இறந்தவனின் உடலை இத்தகையோரிடம் ஒப்புவித்துவிடும் வழமை உண்டாயிற்று.

அப்போதுதான் இறந்தவனின் உடலை, தம்வீட்டார் முறைப்படி செய்யும் சடங்குகள் முடிந்தவுடன் பிற திறனுடையாரிடத்து ஒப்புவிக்கும் வழக்கம் உண்டாயிற்று.  இத்தகு திறனுடையவர்கள், தமிழர் எண்ணிய குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்ற நால்வகை   நிலங்களில் மட்டுமின்றி பரந்துபட்ட  பாலை உள்ளிட்ட பல இடங்களிலும் வாழ்ந்தனராதலின்,  அவ்விறந்த உடல் ஆங்கு ஒப்படைக்கப்பட்டது.  பண்டமாற்று முறை மாறி  நிதியமைப்புகள் வழக்குக்கு வந்தபின்னர், அவர்கள் பணம் பெற்றுக்கொண்டு அத்தொழிலை மேற்கொண்டனர்.

நால்வகை நிலத்தில் ஒன்றில்   வாழ்ந்து இறுதியை அடைந்தவன் உடல், பரந்துபட்ட இடங்களில் ஒன்றில் வாழ்ந்தவனிடம் சென்றதனால்:

பர + ஏய் + து + அம்  >  பரேய்தம் என்று அவ்வுடல் அறியப்பட்டது.

பரேய்தம் > பரேதம் > பிரேதம் ஆனது.

பர -  பரந்துபட்ட நிலங்கள்.

ஏய்தல் -  (ஆங்கு)  அமைதல்

து - ஒன்றன்பால்  விகுதி, இங்கு இடைநிலை ஆனது.

அம் - விகுதி.

அகரத் தொடக்கம் இகரமாகும். இதைப் பலவிடத்து   விளக்கியுள்ளோம்.

எடுத்துக்காட்டு:  அதழ் - இதழ்.

அடித்தல்  இடித்தல்  இரண்டும் வேறுபாட்டு நுண்மை உடைய சொற்கள்.  ஆனாலும் இரண்டிலும்  இருபொருள் தொடுதல் என்னும் அடிப்படைக் கருத்து உண்மை காண்க.

இறந்தபின் சென்றோனின் உடல், தம் உறவினரிடமிருந்து நீங்கி, அயலானிடத்துச் சென்று அழிக்கப்படுவதாகிறது.  அதனால் அது பரேதம் > பிரேதம் ஆனது. பிற ஏய்தம்> பிரேதம் எனினும் ஓரளவு அமைவதேயாகும்

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.





ஞாயிறு, 30 ஜனவரி, 2022

இழந்துவிட்ட புரிதலை மீட்டுக்கொள்வது எப்படி?

 மீட்டுருவாக்கத்தின் தந்திரங்கள்.


கொஞ்ச நாட்களுக்கு முன்,  வீட்டு வேலைக்கு ஆள் இல்லாமற் போனதால், ஒரு மியன்மார்ப் பெண்ணை முகவர் அனுப்பிவைத்தார்.  அந்தப் பெண்ணுடன் பேசியபோது அவளுக்குத் தமிழ் நன்றாகத் தெரியுமென்றாள். சரி, பேசிக்காட்டு என்றபோது,  அவள் " இராகத்துடன்" ஒரு பாடலைப் பாடினாள்.

அந்தப் பாடல் வருமாறு:

ஏனா  பூனா தாம் பாரூ

ஏனா பூனா தாம் பாரூ

ஏவா  லாவூ சோக்கூ  வாரூ

ஏவா லாவூ சோக்கூ வாரூ

------  என்று பாடினாள். சற்று உறக்கத்தில் வீழ இருந்த எனக்கு,  வந்த தூக்கம் போய்விட்டது. கண்மூட முடியாமல் விழித்துக்கொண்டேன்.

அவள் பாட்டில் பூனை வருவதுபோல் எனக்குத் தோன்றியது.  "பூனைப் பாட்டா?" என்றேன்.  (   Cat song? )

இல்லை. It means,  how beautiful,  how beautiful.  என்று பொருள் சொன்னாள். எனக்குத்தான் விளங்கவில்லை என்ற எண்ணம் மேலிட்டது.  ஐ.நா. பொதுச்செயலாளராக  இருந்த ஊதாண்ட்  போன்ற அறிவாளிகள் இருந்த நாடாயிற்றே  அவள் நாடு ---- என்பதால், அவளை மிகவும் மதித்திருந்தேன்.

மீண்டும் பாடச்சொல்லிக் கேட்டபோது, இந்த வரிகள் தோன்றின.

" என்ன உன்னதம் பார்.

என்ன உன்னதம் பார்,

எவ்வளவு ஷோக்குப் பார்.

எவ்வளவு ஷோக்குப் பார்."

இதுதான் அவள் பாடிய பாட்டு.

அவளுக்குத் தமிழ் தெரியும் என்பது இப்போதுதான் எனக்குப் புரிந்தது.


சனி, 29 ஜனவரி, 2022

விசித்திரம் என்பது

 இன்று விசித்திரம் என்ற சொல்லை ஆய்வோமாக.

இதனைக் காணுமுன் சில தொடக்கநிலைகள் உள்ளன. அவற்றுள், விசி என்ற சொல்லுள்ளது.  விசித்தல் என்பது ஒரு வினைச்சொல்லுமாகும்.

அடிச்சொற்களும்  அடிப்படைக் கருத்துகளும்.

விர்>  விரி.  ( விரிவு).

விர் > விய்  ( விரிவு)  [ எ-டு: வியன்,  வியப்பு,  வியத்தல்,  வியாபாரம், வியாழன் ]

விர் > விய் > (வியி) >  விசி.  ( ய ச போலி).   விரிவு.  விசித்தல்.

விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி  ( புறநானூறு  61)  [பயன்பாட்டுக்கு எ-டு.]

விசித்து + இரு + அம் =  விசித்திரம்.   ( மிக்க விரிவாக இருத்தலால், வியந்து நோக்குமாறு பிறரை ஈர்ப்பது).

ஒன்று மிக்க விரிவாக இருக்கவேண்டும்,  அல்லது மிக்கச் சிறிதாக இருக்கவேண்டும்,  அல்லது முன்னர்க் கண்டிராத உருவிலோ, நிறத்திலோ இருக்கவேண்டும், அப்போது அது விசித்திரம், இவற்றுள் இச்சொல் அமைந்தது விரிவில். பின்னர் பிற பொருள்களைத் தழுவிற்று.  அவையெல்லாம் பெறுபொருள்களாம்.

கண்ணுக்குத் தெரிவதொன்று,  சட்டென்று காணாமற் போய்விட்டாலும் அதுவும் ஒரு விசித்திரமாய் ஆகிவிடக்கூடும்.  இவ்வாறு  கையாளப் பெறுகையில், இச்சொல் திரிசொல் ஆய்விடும். 

இதை இதற்குமுன் தமிழ் வாத்தியார்கள் வி+ சித்திரம் என்று பிரித்து,  விசேசமான வேலைப்பாடு என்பர்.

இத்தகைய விளக்கம் கூறுவதானால், 

வி  என்ற முன்னொட்டு, விழு என்ற தமிழ்ச்சொல்லின் கடைக்குறை.

சித்திரம் என்பது செத்திரம் என்பதன் திரிபு என்றார் தேவநேயனார்.

செத்தல் - ஒத்திருத்தல். எப்பொருளைக் காட்டவிழைந்தனரோ அப்பொருளை ஒத்து இருத்தலே சித்திரம் என்பது இவ்விளக்கத்தில் கருத்தாகும்.

இனி இன்னொரு வகையில்:

ஒன்றன் பெரிதாய் இல்லாமல், சிறிதாகவே முன் காலங்களில் வரைவுகள் இருந்தன. ஆகவே சிறிதாய்க் காட்டியதே சித்திரம்  என்பதாகவும் விளக்கலாம்.

சிறுமை + திறம் >  சிறுத்திறம் >  சித்திரம் 

இவ்வாறு விளக்கினால் இது இடைக்குறைச் சொல் ஆகும்.

திரிபு:  ற என்பது ரகரம் ஆனது.  இவ்வாறு பல சொற்களில் வந்துள்ளது. பழைய இடுகைகள் காண்க. 

இது சிறுத்து + இரு + அம் > சிறுத்திரம் > சித்திரம் என்பது இன்னொரு விளக்கம்.

பெரிதாய் வரைய, வரைசீலை பெரிதாக வேண்டியிருத்தல், பெரிதாய் வரையத் தடையாய் இருந்திருக்கலாம். இது இடநெருக்கடியின்பாற் படும்.

இவ்வாறு விரித்துரைக்கொண்டு செல்லல் தவிர்த்து, இத்துடன் முடிப்போம்.

விசேஷம் என்பது விழுமியதாய் எடுத்துக்கொள்ளப்படுவது. விழு+ எடு+ அம்> விழேடம் > விஷேஷம்.   எடு> ஏடு: முதனிலைத் திரிபுத் தொழிற்பெயர்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.





பத்திரம் - கிளை அதன் பகுதிளைப் பற்றி இருப்பது.

 பத்திரம் என்ற சொல்லை பிற எழுத்தாளர்களும் ஆய்வாளர்களும் ஆய்ந்துள்ளனர். இச்சொல் சங்க த்  தமிழிலக்கியத்தில் வந்துள்ளது என்று எடுத்துக்காட்டி யுள்ளனர்.

இதன்மூலம் பத்திரம் என்பது பழம்பயன்பாடு உடைய சொல் தெரிகிறது.

பத்திரம் என்பது பேச்சுவழக்கிலும் இன்றுமுள்ள சொல் ஆகும்.

பத்திரம் என்ற சொல்லின் அடிப்படைப் பொருள் இலை அல்லது ஓலை என்பதுதான்.  என்னென்ன வகைப் பத்திரங்கள் உள்ளன என்பதை இங்கு நாம் இப்போது கூறவில்லை. 

இலை அல்லது ஓலை என்ற பொருளிலிருந்து இன்று அது ஆவணத்தைக் குறிக்க வழங்குகிறது.  பத்திரம் என்பதன் மற்றொரு வடிவமான பத்திரிகை, (பத்திரிக்கை)  என்பதும் தொடக்கத்தில் இலை என்றே பொருள்பட்டாலும், இப்போது தாளிகை என்ற பொருளில் பயன்படுகிறது.  நாளிதழ், வார இதழ், மாத இதழ் என்று பல வெளிவருகின்றன. பத்திரிகை என்பது இவற்றுள் எதையும் அன்றாடப் பயன்பாட்டில் குறிக்கலாம். 

இலையானது கிளையைப் பற்றி இருக்கிறது.   பற்றி இருக்கை >  பத்தி இருக்கை>  பத்திரிக்கை > பத்திரிகை என்றே சொல்லே இது. சமத்கிருதம் என்ற மரத்தடிச் சாமியார் புனைவு மொழியும் இதையே பயன்படுத்துகிறது. இது காரண இடுகுறிப்பெயர்.

பற்றி இரு அம் >  பத்தி இரு அம் > பத்திரம் ஆகும்.

காலில் மஞ்சள் பற்றுப் போடுவதை பத்துப் போடுவது என்பதில்லை.  இவ்வாறு திரிந்த சொறகள்.  அவற்றை பழைய இடுகைகளில் விளக்கியுள்ளோம்.

கிருதமென்பது மரத்தடிப் பூசாரிகள் மொழியாக இருந்தமையின், அவர்களும் அதைப் பயன்பாடு செய்தனர்..

முற்றுதல் >  (முத்து-தல்)>  முத்து>  (இடைக்குறைந்து) > முது >  முது இர்>  முதிர்.

இத்தகைய திரிபுகள் பல.  பலப்பல. சில திரிபுகளில் நுண்மைவேறுபாடு வழக்கில் எழுவது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்


 



முட்டையும் முட்டாளும்.

 முட்டையும் முட்டாளும்.  ஒரே அடிச்சொல்  முட்டு என்பது.

பூச்சியம்.  இன்மையிலிருந்து தோன்றுதலுண்மை.

பூ> பூத்து + இயம் > பூச்சியம்.

பாணம் என்பது பண்ணில் விளைந்து வெற்றிகொள்வதாவது.

கோவிட்டுக்கு மருந்தடிப்பது எப்படி

 






ஐயப்ப பக்தர்

திரு. மோகன் சாமி ஆலோசனை வழங்குகிறார்.

கேள்விகட்குப் பின்னூட்டம் இடுங்கள்


------------------------------------------------------------------------------------------------------

இன்று யாம் அனுப்பிய செய்தி:  திரு மோகன் சாமி அவர்களுக்கு

------------------------------------------------------------------------------------------------------


[8:41 AM, 2/5/2022] sivamala: Your service was published some days ago.

[8:42 AM, 2/5/2022] sivamala: kaalai vaNakkam sami.

[8:44 AM, 2/5/2022]isivamala: How is the progress.  This service is a great humanitarian effort. You are contributing to the reduction of the affliction and disease. அம்மன் அருள். அய்யப்ப சரணம்.



ஆர் விகுதி ---ஆரியர்

 அது தமிழில்லை, இது தமிழில்லை என்ற வாதம் உண்டாதற்குக் காரணம் என்னவென்று பார்த்தால், வெள்ளைக்கார வரலாற்றாசிரியன்  உருவாக்கிய "ஆரியர் இந்தியா வருகை"  மற்றும் "ஆரியப் படையெடுப்பு"  முதலிய தெரிவியல்களே   (theories) ஆகும்.  இந்தியத் துணைக்கண்டத்தின்மேல் படையெடுப்புகள் நிகழ்ந்துள்ளன,  ஆனால் அவற்றிலெவையும்  ஆரியர் என்போரால் நடைபெறவில்லை.  மேலும் ஆரியர் என்ற பெயருக்குரிய மனிதர்கள் யாருமில்லை.

ஆர் என்பது ஒரு விகுதி.  வந்தார், போனார், இருந்தார் என்பவற்றில் ஆர் வந்துள்ளன.  அகத்தியனார், தொல்காப்பியனார் என்று ஆர் என்ற வணங்குரிமை பெற்ற அறிவாளிகள் பெயரிலும் ஆர் வருகின்றது.  மற்றும் ஆர்தல் என்ற வினைச்சொல் உள்ள மொழி, தமிழ் ஆகும்.  ஆகவே நம்மொழியில் அது  விகுதியுமாகிறது. வினையுமாகிறது.  அரு > ஆர், கரு> கார், வரு > வார். தரு>தார் எனப்பல சொற்களில் முதலெழுத்து நீண்டு ரகர ஒற்றில் சொற்கள் முடிகின்றன.  அரு என்றால் மிகுதியாய் இல்லாதது என்று பொருள். ஆளுக்கு ஆள் அகத்தியனாரைப் போல இருந்துவிட்டால் அவர்களுக்கு ஆர் என்ற பெயர் இறுதிப் பட்டம் இருக்கமுடியாது. அரியன செய்தனர்,  செயற்கரிய செய்தனர், அதனாலேதான் "ஆர்" என்ற இறுதிகொடுத்துச் சொல்லாக்கம் செய்கிறோம்.  வரலாற்றால் அரியராக எப்போதோ தோன்றுகிறார்.  அவர்தான் "ஆர்" என்ற ஒட்டுக்கு உரியவர்.  அரு> ஆர் என்ற திரிபையும் மறக்காதீர்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.


வெள்ளி, 28 ஜனவரி, 2022

முட்டையும் முட்டாளும்

 வகுப்பில் பாடத்தை நன்றாக ஒப்பிக்கவில்லை என்றால், அவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவனுக்கு "முட்டை" கிடைத்ததாகக் கேலி செய்தல் இன்றும்   உள்ளது. இத்தகு பயன்பாடு எல்லா இன மாணவர்களிடமும் காணப்படுவ  தொன்றாம்  (சீனர், மலாய்க்காரர், இந்தியர் என). ஆகவே இவ்வாறு கருதுவது உலக வழக்கு என்னலாம்.  எப்போதும் இவ்வாறு "முட்டைகளை" வாங்கும் மாணவனை,  முட்டாள் என்றும் கூறுவதுண்டு.

ஆனால் இவ்விரண்டு சொற்களும் முட்டு என்ற சொல்லிலிருந்தே  வருகின்றன.

முட்டு + ஆள் = முட்டாள்.

இஃது இரண்டு சொற்கள் ஒன்றாகிப் புனைந்த சொல்.

முட்டு + ஐ = முட்டை.  (வட்டமாக இல்லாமல் ஒரு பக்கம் முட்டிக்கொண்டிருப்பது).

இங்கும் முட்டு என்றே சொல்லே நின்றது என்றாலும் சொல்லமைப்புப் பொருளில் தொடர்பு வழக்கிலிருந்து வருகின்றது.

ஆகவே  முட்டை வாங்கியவன் முட்டாள் என்று சொன்னால்  அது ஒத்துக்கொள்ளத் தக்கதே ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு - பின்

வியாழன், 27 ஜனவரி, 2022

மாத்திரம் என்ற சொல்.

 மாத்திரம் என்ற சொல்லும் தமிழ்ப்புலவோரால் அடையாளம் கண்டுகொள்ள முடியாத சொல்லாய்ச் சிலகாலம் இலக்கிய உலகில் வலம்வந்த சொல்லாகும். தமிழில் இதுவரை கிடைத்துள்ள பழைய நூல்களில் இச்சொல் அருகியே வழங்கியுள்ளதென்று தெரிகிறது.  கலித்தொகை என்ற பழைய நூலில் "முயங்கு மாத்திரம் " என்று இந்தச் சொல் வந்துள்ளது.

மேலும் சிற்றூர்களிலும் " மாத்திரம்" வரைவிலாத வழக்குடையதாய் உள்ளது. ஊர்களில் உள்ளோர்  ஐரோப்பாக் கண்டத்துக்குத் தொடர்பு இல்லாதவ  ரென்பதால், மாத்திரம் தமிழன்று என்றபால வாதினை ஏற்றல் இயல்வில்லை.

சமத்கிருதம் என்பது மேல்நாட்டிலிருந்து வந்தது என்பதை ஏற்பதற்கில்லை. அது இந்திய மொழியே ஆகும்.  தமிழரே உரோமாபுரிக்குச் சென்று தமிழ் மற்றும் சங்கதச் சொற்களை இலத்தீன் மொழியமைப்புக்குத் தந்துதவினர். இவ்வாறு ஒரு வரலாற்றாய்வு கூறுகிறது.  ( மயிலை சீனி வேங்கடசாமி ). மேலும் மிகப் பழங்காலத்தே மேலை நாடுகளில் சென்று குடியேறியுள்ளனர். அவர்கள் மெசொபோட்டேமியாவிலும் வாழ்ந்தனர்.  அந்தச் சொல் அமைந்த விதத்தை இங்குக் கூறியுள்ளோம்:

https://sivamaalaa.blogspot.com/2017/05/blog-post_16.html

இனி, வால்மிகி ஒரு சங்கதக்கவி, அவர் தமிழிலும் பாடியுள்ளார்.  வான்மிகி என்பது வானின் மிக்கவர் என்று பொருள்தரும் தமிழ்ச்சொல்.  வியாசன் தமிழ்மீனவவழியினன்.  பாணினி ஒரு பாண குலத்து இலக்கண அறிஞன்.  இவர்களிலெவரும் பூசாரி வழியினர் அல்லர். 

சமத்கிருதம் என்பதன் பழைய் பெயர் சந்தாசா ( சந்த அசை).  சந்தம் நல்கும் அசைகளை உடைய இந்நாட்டு மொழி.

திர் என்ற அடியிலிருந்தே  திரள் முதலிய சொற்கள் வருகின்றன. திறம் என்பது செயல்திரட்சி குறிக்கும் சொல்.  திரம் என்பது  பொதுவாகத் திரட்சி குறிக்கும் சொல்.  திர்> திர அம் > திரம்,  திர+அள் > திரள். இவற்றுடன் உறவுடைய சொற்கள் பலவாகும்.

இவற்றை மேலும் அறிய விரும்பினால் பின்னூட்டம் இடுங்கள்.

மா என்பது அளவு என்று பொருள்தரும் சொல்.  திரம் என்பது திரட்சி குறிக்கும் பின்னொட்டு.

மாத்திரம் என்பது திரண்ட அளவு என்பதன்றி வேறன்று.

இதுகாறும் சுருங்கக் கூறியவற்றால், மாத்திரம் என்பது தமிழென்பது தெளிவு.

" இம்மாஞ்சோறு என்னால் முடிக்க முடியாது" என்ற வாக்கியத்தில் மா  ( இம்மா) என்பது இவ்வளவு என்றே பொருள்படும். "எம்மாம் பெரிசா இருந்தாலும் தூக்கீடுவான்"  என்பதில் எம்மா என்பது எவ்வளவு என்று பொருள்தரும். இதுபோல்வன பிறவும் அன்ன.  மா என்பது பெரிது என்றும் பொருள்படும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.  




செவ்வாய், 25 ஜனவரி, 2022

மூர்க்கன்.

 எதிலும் ஒருவன் தன்  நிற்பிலிருந்து மாறிகொண்டிருக்கக் கூடாது.  அதேவேளையில், மாறுவதற்குரிய தன்மையை நல்லோர் எதிர்நோக்குங்கால், மாறியமைய வேண்டும்.  அதாவது பிடிவாதமும் கூடாது.  எதிலும் நிலைநிற்பதும் மாறுவதும் சிறந்த காரணங்களுக்காக இருக்கவேண்டும்.  மக்களாட்சியில் ஒருவன் பணம்பெற்றுக்கொண்டு வாக்களிப்பது போலும் நிகழ்வுகள் ஒரு குறைபாட்டையே சுட்டிக்காட்டுகிறது.

இது நிற்க, மூர்க்கன் என்பவன் முரடன் என்ற கருத்தும் மக்களிடையே இருப்பதாகத் தெரிகிறது.

அறியாமை என்னும் நிலையில் மூழ்கிக் கிடப்பவனே மூர்க்கன்.  இதுவே இச்சொல்லின் தொடக்கப் பொருளென்பது தெளிவு.  அதாவது அறிந்து கொள்ளவேண்டியவற்றை அறியாமல் தன் போக்கில் தான்  மூழ்கிக்கிடப்பது.

இப்போது சொல்லைக் காண்போம்.

மூழ் >  மூர்.

மூர் >  மூர்க்கன்  என்பது திரிபுச்சொல். பொருளும் அமைப்புக்குப்பின் விரிந்துள்ளது.  நட்பின் திறமறியான் மூர்க்கன் என்பது இதன் இன்னொரு பொருள்.

முரடு என்ற சொல்லுக்கும் முர் என்பதே அடியாதலால் முர்- மூர் என்ற திரிபும் இவ்வாய்வில் இடங்கொள்வதாகும்.

முர் + அடு என்பதனோடு முர்-மூர் என்பதையும் ஒப்புவைத்தல் கூடுவதே. ஆதலின் மூர்க்கன் என்பது ஓர் இருபிறப்பி என்பதையும் மறத்தலாகாது.

முகிழ் என்பதும் மூர் என்று திரிந்து மேற்குறித்த சொல்லுடன் ஒருமுடிபு கொள்ளும்.

முகிழ் > முகிழ்த்தல்  ( தோன்றுதல்).

முகிழ் > ( முகிர் )>(மூர் )> மூர்த்தி,

ஓரிடத்துத் தோன்றி அருள்பாலிக்கும் தெய்வம்.

இதுபோல் அமைந்த இன்னொரு சொல்:

பகிர்தல் வினை.

பகிர்தல் >  பார் > பார்த்துண்ணல் > பாத்தூண்.

பகுத்துண் > பாத்தூண் என்பதும் ஏற்புடைத்தே..


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

 

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

கரு ( கர் ) என்ற அடிச்சொல்.

 இவ்வடிச் சொல்லை  ("கர்")  முன்னர் சிறிய அளவில் ஆங்காங்கு குறித்துள்ளோம்.  எழுதிக்கொண்டே சிந்தித்து எப்படி சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதென்பதை ஆய்ந்துகொண்டே, ஈண்டு உரைத்து முடிப்போம்.

கர் என்பது கரு என்று ஒரு முழுமையாய் வடிவெடுக்கும். கர் என்பதன் வளர்ச்சியே கரு என்னும் அடிச்சொல்.  குழந்தைகள் வளர்தல் போல் சொல்லினடியும் வளரும். இதுபோல் வளர்ந்த இன்னோர் அடிச்சொல்:

விர்:  அடிச்சொல்.

விர்  > விரு    (ஓ.நோ: கர் > கரு ).

விர் > விய்.   

அமைந்த சொற்கள்:  விர்> விரு.   விரு+ தி  >  விருத்தி

தி என்பது தொழிற்பெயர் விகுதி. 

இவ்விகுதியில் அமைந்த சொற்கள்:  செய்தி, உய்தி,  கைதி ( கையில் அகப்பட்டவன்).   கைது>கைதி எனினுமது.

விர் > விய் > வியன்:  விரிவு என்பது பொருள்.

எ-டு:  வியனுலகு,

வியாபாரம்  : உண்மையில் இது விரிந்து பரத்தல் என்று பொருளுடயது.பொருட்கள் விலைப்பொருட்டு விரிந்து கொண்டுசெல்லப்பட்டு ஆங்காங்கு பரவுதல்.    வியாபாரம் எனில் விரிந்து ஆகும் பரவல் முறை. விய்+ஆ+பர(வு) + அம்.  பர அம் > பாரம், முதனிலை நீண்ட தொ.பெ.

இவ்வெடுத்துக்காட்டு மூலம், விர்> விய் திரிபு விளக்கமுறுகிறது.

ஆகவே  இப்போது கர்  > (கய்) > கை என்பது புரிகிறது.  இதன்மூலம்  அர்> அய் >ஐ என்பதும் புரிந்துவிடும். 

இதன்மூலம், 

அர் > அரன்,

அர் >  அரி

அர் > அய் > ஐ. என்பன புரியும்.  ஐ உயர்வு என்னும் அடிச்சொல் இவ்வாறு உருவெடுக்கிறது.  இதன் பல்வேறு திரிபுகளை இங்கு விளக்கவில்லை. எல்லாம் எழுதினால் அது இடுகையாய் இருக்காது.  இங்கு நாம் நூலெழுதவில்லை. குழப்பமும் தவிர்க்கவேண்டியுள்ளது.

கை என்பது செய்யும் உறுப்பாதலின், கர் என்பது செய்தல் என்னும் ஆதிப்பொருள் உடைய ஓர் அடியே ஆகும்.

கர் > கய்> கை எனலால்,  கை>கய் > கர் என்பதும் அதுவேயாகும்.

ஆகவே,  கர்> கார் என்ற திரிபிலிருந்து,

கார்> காரணம்,

கார் > காரியம்.

கர் > கரு > கருவி

கர் > கரணம்.

கர் > கரணி.

கர் > கார்> காரணி

என்பனவும் இன்னும் இயைத்துக் கூறப்படாதனவும் பொருளுணர்ந்து இன்புறலாம்.

கல் > கர் என்பது பழைய இடுகையில் கூறப்பட்டது. ஆங்குக் காண்க.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

சனி, 22 ஜனவரி, 2022

இல்லம்தோறும் ஐயப்ப பூசை

[ஓமிக்ரோன் தொற்று ஒழிய ஐயப்ப பூசை.]

[இது பதினோரடிகள் கொண்ட இன்னிசைப் பஃறொடை வெண்பா.]

 


படிபூசை   ஏற்றப்  படிதோறும்  மேவ

ஒருநாள் மறவாத் திருவாளர்  பல்லோரும்

இல்லமே தூகுவித்(து) இன்போடு பாடியே

உள்ளமே மீகுளிர ஒன்றாகக் கூவினர்

ஐயப்ப  ஐயப்ப ஐயன் சரணமென்று!

தோரணங்கள் மாலைகள்  நீறொடு சந்தனம்

ஆரத் திருவூண் அனைத்தும் அமைய,

படத்திலே பார்க்க  உடனிருப்பார் பற்றை;

இறையுணர்வு எங்கும் பரவிவரும் இக்கால்,

சரணம் சரணமென்  ஐயப்ப  நீயே

வரணும் வணங்குமிவ் வீடு. 













  உரை:

படிபூசை  ---  படிகளுக்குச் செய்யப்படும் பூசையானது, 

 ஏற்றப்  படிதோறும்  ----  ஏறி மேற்செல்லும் ஒவ்வொரு  படிக்கும் 

மேவ ---இயற்றப்பட, 

 ஒருநாள் மறவாத் திருவாளர்  பல்லோரும்  ---- பூசைநாளை மறந்துவிடாத உயர்வுடைய பல பற்றர்களும், 

இல்லமே தூகுவித்(து) -- வீட்டைச் சுத்தப்படுத்தி, 

இன்போடு பாடியே  -  இன்பத்துடன் பாட்டிசைத்து, 

உள்ளமே மீகுளிர---  மனம் மிகவும் குளிரும்படியாக, 

ஐயப்ப  ஐயப்ப ஐயன் சரணமென்று!  ---  இவ்வாறு அவன் பெயர் சொல்லி,

ஒன்றாகக் கூவினர்  ----  சேர்ந்து  குரலெழுப்பினர்;


தோரணங்கள் மாலைகள்  நீறொடு சந்தனம் ஆரத் திருவூண் அனைத்தும் அமைய   ---  இப்பொருள்களெல்லாம் பூசையிலும் அது நடைபெறும் அறையிலும் வைத்து,

படத்திலே பார்க்க  உடனிருப்பார் பற்றை  -----  அப்போத் பங்கு கொள்வோர் பற்று வெளிப்படுத்துதலைப் படத்திலே பார்க்க;

இறையுணர்வு எங்கும் பரவிவரும் இக்கால்  ----  பத்தி எங்கும் இக்காலத்திலே பரவும்;

சரணம் சரணமென்  ஐயப்ப  நீயே   --  ஐயப்பனே, நீயே சரணம் என்றோம்,

வரணும் வணங்குமிவ் வீடு.  -  உன்னை வணங்கும் இவ்வீட்டுக்கு வரவேண்டும்.

படம் திருவாட்டி சி லீலா.


மெய்ப்பு:  பின்னர்






வெள்ளி, 21 ஜனவரி, 2022

இயலார்வண்டி

 நோயென்றால் இயலாரை ஏற்றிச் சென்று

நுடங்கிவீழ்ந்   திடாதபடி மூச்சைக் காத்தும்,

ஓயாமல் மக்கள்வாழ் வொட்டி  நின்ற

உன்னதநல் உயர்வண்டிக் கீடும் உண்டோ.


தாய்ச்சேவை வண்டிஎன்றே இதனைக் கொண்டால்

தக்கதது மொழிஎன்பார்  ஒப்புக் கொள்வார்;

போய்வேறே எதைஎதையோ  புகழும் மக்கள்

போற்றுங்கள் ஏற்றுங்கள் சேவை தன்னை.





வியாழன், 20 ஜனவரி, 2022

மைனா என்ற குருவியின் பெயர்

 இந்தச் சொல் தமிழிலும் பிற இந்திய மொழிகளிலும் வழங்குகிறது.

மதனா  ( மதனன்) என்ற சொல்லைச் சமத்கிருதத்தில் கண்டு, இந்தோ ஐரோப்பிய வேர் என்று ஐரோப்பிய ஆய்வாளர்கள் பற்றிக்கொண்ட சொல்லிலிருந்து வருகிறது என்று முடிவு செய்தனர்.

கொஞ்சம் தடம்விலகுவோம்:   உயிர்நூலார் இதற்கு வகைதெரிய வைத்த பெயரை "பற்றிரி" என்று  மொழிபெயர்க்கலாம்.  கிளைகளைக் காலால் பற்றிக்கொண்டு இருக்கும் குருவிவகை.[  ( குருவி --குரீஇ). ] ( பற்று + இரு+ இ ):  நாம் ஆங்கிலச்சொல் passerine  என்பதைக் குறிக்கிறோம்.   ஆங்கிலச்சொல் அமைந்த அதேசொல்லின் தொடக்கத்தைத் தொட்டுவிட்டது போதும். அமைப்பில் இது ஒரு காரண இடுகுறி. தாங்குதல் என்னும் வினையடியாக,  நீர் தாங்கும் ஒரு தேக்கேனத்தை,  தாங்கி என்று அமைக்கும்போது ஆங்கிலச் சொல்லையே எழுத்துப்பெயர்ப்புச் செய்துவிட்டோம் என்ற குறை எழக்கூடும்.  பற்றிரி என்ற அமைப்பில் அந்தக் குறைபாடு எழவில்லை.  

இது அழகிய ஒலிகளை எழுப்பும் ஒரு பறவை ஆகும்.

மய -  கேட்பாரை மயக்கும் தகைமை குறிக்கும் அடிச் சொல்.

நா -   இப்பறவை இத்தகை நாவை உடையது என்பது.

மய + நா > மைநா > மைனா  ஆனது.

மை > மய் > மய.  அல்லது மய > மய் > மை.

மயல் என்ற சொல் மையல் என்றும் வரும். எனவே ம - மை என்பன தொடர்பு உள்ளவை.

இன்னொரு வகையில்,  மை - மையலைத் தரும் ஒலிஎழுப்பும்,  நா- நாவை உடைய குருவி என்பது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

குறிப்பு:

also mina, name given to various passerine birds of India and the East, 1769, from Hindi maina "a starling," from Sanskrit madana- "delightful, joyful," related to madati "it gladdens," literally "it bubbles," perhaps from PIE root *mad- "moist, wet" (see mast (n.2)). The "talking starling" of India is Eulabes religiosa.

இது  சரியில்லை. தமிழறியார் செய்த ஆய்வு.

புதன், 19 ஜனவரி, 2022

சொந்தரவு - திரிசொல்.

 தகர முதலெழுத்தாக வரும் சொற்கள்,  சகர முதலாகவும் திரியும் என்ற கருத்தை பலவிடங்களில் முன் வைத்துள்ளோம்.  சில சொற்களை அதற்கு எடுத்துக்காட்டுக்களாகக்  காட்டினோம்.

மலையாளம் பேசுகின்ற  நிலப்பகுதி முன்னர் சேரநாடாக இருந்தது.  இங்குத்தான் செங்குட்டுவன் என்ற அரசன் ஆண்டான்.  அவன் கண்ணகிக்குக் கோயிலெடுத்தான் என்பது நீங்கள் அறிந்தது.  அவன் இளவல் இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் பாடினார்.

சேரன் என்ற சொல், வழக்குக்கு அல்லது பயன்பாட்டுக்கு வருவதன்முன் அது "சேரல்"  என்று இருந்தது.    இச்சொல்லின் இறுதி லகர ஒற்று,  பின் 0னகர ஒற்றாக மாறியே, சேரன் என்று பின்னாளில் அமைந்தது. "  மாந்தரஞ்சேரல் இரும்பொறை" என்ற பழைய தொடரில்,  சேரன் என்பது சேரல் என்றே வருகிறது.  இது மிக்கத் தெளிவாகவே உள்ளது.  அல் என்னும் விகுதி பெற்ற பல சொற்கள், பல உள்ளன.  தலைவன் என்று பொருள்படும் "தோன்றல்" என்னும் சொல் அல்விகுதியில் முடிந்திருத்தல் காணலாம்.  வள்ளல் என்ற சொல், அல் விகுதியிலே முடிந்தாலும், அது மனிதனைக் குறிக்கும் சொல்லே. இதை இக்காலத்தில் நாம் "வள்ளன்" என்று புனைந்திருப்போம்.  ஏனென்றால் புதிய சொற்களில், அன் விகுதிக்குப் பதில் அல் விகுதி வருவதில்லை.

சேரல் என்னும் சொல்,  பின் சேரன் ஆனது என்றோம்.  சேரல் என்பது மேலொரு அன் விகுதி பெற்றுச் சேரலன் என்றும் வரும்.  சேரமான் என்று வரும்.  :"சேரமான் பெருமாள்" என்ற அரசப் பெயரைக் காண்க.

சேரன் ஆண்ட நிலப்பகுதி, சேரலம் ஆனது.  இச்சொல்லே பின்னர் "கேரளம்" என்று திரிந்தது. இதில் "~லம்" என்பது "ளம்" என்று முடிந்தது காண்க.  இது மங்கலம் என்பது மங்களம் என்று பெண்ணின் பெயராய் வருவது காண்க.

இங்கு நாம்  காட்டவிழைந்தது சொல்லின் முதெலெழுத்துத் திரிபையே.

இதைப் போலவே,  தனி என்ற சொல்லும் சனி என்று ஒரு கோளின் பெயராய் வந்தது.  இக்கோள் தனித்தன்மைகள் வாய்ந்தது.  அதனால் தனி என்பது அவ்வாறு திரிந்து கோளைக் குறிந்தது.  இனித் தங்கு > சங்கு,  மற்றும் சங்கம் என்ற பெயரும் காண்க.

இவ்விதி, சகர வருக்க  முழுமைக்கும் பொருந்தும்.

அதனால்,

தொந்தரவு என்பது சொந்தரவு என்றும்  வரும்.  மூலச்சொல் தொந்தரவு என்பதே.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.




செவ்வாய், 18 ஜனவரி, 2022

விபத்து - இழுவுந்து ( ட்ரெய்லர்) கவிழ்தல்.

 இந்தச் செய்தியைப் படங்களுடன் கிழ்க்கண்ட தொடர்பில் சொடுக்கி

வாசியுங்கள்.  நல்ல வேளையாக  இந்த இழுவுந்து (trailer) 

கவிழ்ந்தபொழுது யாரும் அருகில் இல்லை  :  

போக்குவரத்துகளைத் தடைப்படுத்திவிட்ட விபத்து இது.

---  சிங்கப்பூரில்.


https://theindependent.sg/trailer-truck-topples-over-after-driver-fails-to-turn-at-bedok-reservoir-view-roundabout/

இவ்வளவு கனமான வண்டி இப்படிக் கவிழும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

(தேவையில்லாமல் கனமான வண்டிகளுக்கு அருகில் சென்று நிற்கவேண்டாம்).

ஞாயிறு, 16 ஜனவரி, 2022

குளம்பி, கார்ப்பம், காப்பி - குறிப்புச் சொற்கள்

 இது ஓர் ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட ஒரு சிறு கவிதை.  அதை அப்போது வெளியிடவில்லை.  காரணத்தைப் பதிவு செய்து கொள்ளவில்லை. இப்போது கண்டெடுத்தபடியால், இங்கு வெளியிடுகிறோம். சீனர்களில் ஐலாம் வகுப்பினரே பெரும்பாலும் "காப்பிக்கடை" வைத்திருக்கிறார்கள். காப்பியைக் "குளம்பி" என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

கவிதை வருமாறு:


சீனர் குளம்பியாம் காப்பி  -----   கொஞ்சம்

சீனியைக் கூட்டிப்பால் சேர்த்தது வாங்கி,

யாம்குடித்   தேம்சுவை சொல்வேம் ---- அதை

யாண்டுமென் பானமென் றேநனி கொள்வேம்.


கருப்பின் நிறத்ததித்  தேறல் ---- இதைக்

கார்ப்பமென் சொல்லினால் குறிப்பதை ஓர்தல்.

வெறுப்பது கொண்டிடு  வீரோ ---- அது

கறுப்பெனும் காரணம் கண்டிடு வீரோ?


பற்பலர் நல்லினம் கூடும் ---  நல்ல

பண்புடன் வாழ்சிங்கைப் பார்புகழ் நாடு!

நற்சுவை3க் கார்ப்பமே செய்தார் ----  அவர்

நனி தரு ஐலாம்  குலத்தினர் ஆவார்.


கார்ப்பம் குடிப்பது தீது  ---- என்று

கழறிடும் மேதகு காட்சியர் வாது, 

வாய்ப்புக் கிடைக்கின்ற போது ---  வாயில்

வைத்துக் குடித்திடு   வார்பாங்கி  லேது. 


பொருள்

தேறல் பானம் ஒருபொருட் சொற்கள்.

கார்ப்பமென் சொல் -  கார்ப்பம் என்னும் சொல்.

யாண்டும் - எப்போதும்

ஓர்தல் - யோசித்தல்

நாடு - நாடுங்கள்

வாது -   வாதிடுதல்

பாங்கில் -  இடத்தில்

நனி - நல்லபடி

ஐலாம் -  ஒரு சீனப் பிரிவினர்

கார்ப்பம் - காப்பிக்கு நாம் கூறும் இன்னொரு புதிய பெயர்.

இது பாயசம் என்பதுபோல் அம் விகுதிபெற்றது.  கார் - கருப்பு.

குலம் -  CLAN

பற்பலர் நல்லினம் -- நல்லினத்தாராகிய பற்பலர்

கழறிடும் -  சொல்லிடும்.

மேதகு -   மேலான தகைமை உடைய

குளம்பி -  காப்பிக்கு  உள்ள மொழிபெயர்ப்புச் சொல்.

ஏம் விகுதி பெற்ற சொற்கள்: குடித்தேம்,  கொள்வேம்.

கொள்வோம் என்பது கேட்பாரையும் உட்படுத்திய வினைமுற்று.

குறிப்பு:

காப்பி பற்றிய இன்னொரு கவிதை:

https://sivamaalaa.blogspot.com/2021/11/blog-post_14.html


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்

வெள்ளி, 14 ஜனவரி, 2022

மாட்டுப் பொங்கல் வாழ்த்து

 மறுநாளில் பொங்கலுக்கு மாட்டுப் பொங்கல்

மருவியதை வரவேற்போம் மதித்துப் போற்றி,

ஒருநாளும் நாம்மறவோம் உழவர் தம்மை,

உலகுதனக் குணவூட்ட உழைப்போர் அன்னார்,

வெறுநாளாய் உழைப்பின்றி வீண்செய்  வோரை

வெறுத்திடுங்கள் என்றறைந்தான் பெரும்பா வல்லோன்,

நிறுவியதோர் வாழ்வென்றால் ஏர்வாழ் வொன்றே, 

நின்று அதனை வணங்கிடுவோம் இன்றே நாமே.


ஏரென்று  சொன்னாலே மாடின்றி  இல்லையால்

ஊர்கூடித் தூக்கும்  அது.

 

ஏர்வாழ்வு - உழவர் வாழ்வு.

மருவி அதை -  அதைத் தழுவிக்கொண்டு,  ஏற்றுக்கொண்டு,

என்றறைந்தான்  -  என்று சொன்னார்

பெரும்பாவல்லோன் -  மகாகவி பாரதி.

நிறுவிய -  நிலைத்த,  நிலைநாட்டப்பெற்ற.

ஏர்வாழ்வு - உழவர் வாழ்வு

நின்று  -  உடற்பணிவு செலுத்தி.

வணங்கிடுவோம் - மனத்தாலும் போற்றுவோம்.

இல்லையால் = இல்லாததனால்.

தூக்கும் - போற்றி உயர்த்தும்.


மெய்ப்பு  பின்னர்.

உடன்கட்டை ஏறுதல் -- நிகழ்வுகளும் தியாகமும்.

 தியாகம் என்ற சொல்லை மறுபார்வை செய்தறிவோம்.

தீயாகம் என்பதே குறுகித் தியாகம் என்றானது என்பது விளக்கப்பட்டது.  முன் எழுதிய விளக்கம் எதுவும் மாற்றம் பெறவில்லை. அதுதான் இங்கு இன்னும் கொள்ளப்படுகிறது.

முதன்முதலாக, இது கணவன் இறக்க, மனைவியும் உடன்கட்டை ஏறிய செயல்களிலிருந்து ஏற்பட்டிருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் இத்தகு நிகழ்வுகளில், அவள் தீயில் அழிந்துவிடுகிறாள். தொடக்கத்தில், தீயில் வெந்து மடிவதை இடக்கரடக்கலாகக் குறிப்பிடும் ஒரு வழியாக இச்சொல் ஏற்பட்டிருத்தலே நடைபெற்றிருக்கக் கூடும். நாளடைவில் பிற பொருட்களை எரித்தலையும் எதையும் கொல்லாமல் விட்டுக்கொடுத்தலையும் இது குறித்திருத்தல் தெளிவு.   காதல் தியாகத்தில்,  விட்டுத் தரப்படுவது ஒரு  மனத் தொடர்பு என்பது காணலாம்.  இதில் திடப்பொருள் என்பது எதுவுமில்லை.

முன் இதுபற்றி எழுதியது இவண் காண்க.

https://sivamaalaa.blogspot.com/2018/12/blog-post_60.html

தீயில் விழுந்து சாம்பலாகு என்பதையே "தீயாகு" என்பது குறிக்கிறது.  அம் விகுதி இணைந்து "தியாகம்" ஆகின்றது, முதலெழுத்தும் குறுகிவிடுகிறது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

கவிதைப் பொருள்:


கவிதை உள்ள இடுகை  https://sivamaalaa.blogspot.com/2022/01/blog-post_14.html

முதற் கவிதையின் பொருள்:

கொரனாவின் பிடியினிலே விடியல் இன்றி  --- நோய்த்தொற்றில் பட்டுக்கொண்டதால் விடுபாடு ஏதும் இல்லாமல்,

கொலைப்பட்ட பெருமக்கள் தொகையைக் கூற   ----  ஒவ்வொரு நாட்டிலும் இறந்துவிட்டவர்கள் கணக்கை ஒப்புவிக்க,

ஒருநாளில்  இயலாதே சரியாய் -----  ஒரே நாளில் சரியாகச் சொல்லிவிட முடியாது;

நாமும் ஒளிந்தாளும் முறையன்றி வேறொன் றில்லை  --  இத் தொற்றிலிருந்து தப்பிக்க நாம்  அறைக்குள் ஒளிந்துகொண்டு  தொடர்பின்மை கடைப்பிடித்துக்கொண்டு  இருத்தல் தவிர வேறு வழியில்லை.

திருநாளும் வேண்டாத தியாகம் செய்து   ---- பண்டிகை முதலியவற்றுக்கு வீட்டிலிருக்கும் விடுபாடு இன்றி,  தாம் விட்டுக்கொடுத்து,

தினந்தோறும் சேவைசெயும் தாதி மாரை  -- ஒவ்வொரு நாளும் சேவையாற்றும் தாதியரை,

அருஞ்செயற்குப் போற்றுதலே அன்றி வேறே -  அவர்களின் அரிய செயலுக்குப் போற்றுவதைத் தவிர,

பெரிதென்று நாம்  அவர்க்குச் செய்வ தென்னே.  ---  நாம் அவர்களுக்கு என்ன கைம்மாறு செய்துவிட முடியும்?

மொத்த எண்ணிக்கையில் எத்தனை பேர் இறந்தனர் என்று தெரிந்துவிட்டால், பிழைத்தோர் தொகை தெரிந்துவிடும்; தாதிமார் சேவையும் நாம் அறியக்கூடும்.  நோயின் தாக்கமும் எத்தகையது என்று நாம் தெரிந்துகொள்ளலாம்.


இரண்டாவது கவிதையும் அதே பொருளைத்தான் சொல்கிறது. இதன் சில சொற்களுக்குப் பொருள் அறிவதே போதுமானது:-


முடிநோயின் ---  கொரனா

பிடியினிலே  ---  கடுந்தொற்றிலே 

 விடியல் இன்றி   - விடுபாடு இன்றி

முடிந்தோய்ந்த --இறந்துவிட்ட

 நாம்காண்  -   நாம் கண்டுபிடித்த

மூடறைவாழ்  முறையன்றி  ----  "குவாரண்டீன்" என்னும் தடுப்பறைக்குள் இருப்பதன்றி,   மூடு அறை -  கதவு மூடிப் பிறர் நுழைய இயலாத அறை 

 முன்னொன் றில்லை!   -- நம் முன் வேறு வழியில்லை.

விடுநாட்கள் வேண்டாத  ---  விடுமுறைகள் எடுக்காத

வெல்லீ    கத்தால்  -  வெல்கின்ற தியாகத்தால்   (வெல் ஈகத்தால் )

வேறுபடாச் சேவைசெயும்   --   யாவரையும் சமமாக நடத்தும் சேவையைச் செய்யும் 

தாதி மாரை  ( நர்சுகளை )

அருஞ்செயற்குப் போற்றுதலே அன்றி வேறே  - அரிய செயலுக்குப் போற்றுவதன்றி மற்ற,

ஆனபெரி தவர்க்கேநாம் செயலும் யாதோ.---- அவர்களுக்கு நாம் செய்யும் கைம்மாறு  ஒன்றுமில்லை


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


சிலமுறை திருத்திய கொரனாக் கவிதை

 கொரனாத் தொற்று ஏற்படுத்திய இன்னலை விவரித்துச் சில வரிகள் எழுதலாம் என்று நினைத்தேன்.  அதன் தொடக்கத்திலே "கொரனா" என்ற சொல் வந்துவிட்டது. எழுதிமுடித்தபின் மனநிறைவில்லாமல், திருத்தங்கள் செய்தேன். பின்வந்தது இங்கு இரண்டாவதாகத் தரப்பட்டுள்ளது  . எதுநன்று, பிடிக்கிறது என்பதைப் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்:


கொரனாவின் பிடியினிலே விடியல் இன்றி, 

கொலைப்பட்ட பெருமக்கள் தொகையைக் கூற,

ஒருநாளில்  இயலாதே சரியாய் நாமும்

ஒளிந்தாளும் முறையன்றி வேறொன் றில்லை.

திருநாளும் வேண்டாத தியாகம் செய்து

தினந்தோறும் சேவைசெயும் தாதி மாரை

அருஞ்செயற்குப் போற்றுதலே அன்றி வேறே

பெரிதென்று நாமவர்க்குச் செய்வ தென்னே.


கொரனா என்பதையும் சில பிறவும் அகற்றி எழுதியது இப்படி:


முடிநோயின் பிடியினிலே விடியல் இன்றி

முடிந்தோய்ந்த பெருமக்கள் தொகையைக் கூற,

முடியாதே ஒருநாளும் சரியாய் நாம்காண்

மூடறைவாழ்  முறையன்றி முன்னொன் றில்லை! 

விடுநாட்கள் வேண்டாத  வெல்லீ    கத்தால்

வேறுபடாச் சேவைசெயும் தாதி மாரை

அருஞ்செயற்குப் போற்றுதலே அன்றி வேறே

ஆனபெரி தவர்க்கேநாம் செயலும் யாதோ.


எது பிடிக்கிறது என்பதைப் பின்னூட்டம் செய்து தெரிவியுங்கள்.


அருஞ்சொற்பொருள் பின் வெளியிடுவோம்.


வெளியிடப்பட்டது. பொருளை காண இங்குச் சொடுக்கவும்

https://sivamaalaa.blogspot.com/2022/01/blog-post_51.html 


மெய்ப்பு பின்.


வியாழன், 13 ஜனவரி, 2022

தூரம் என்று சொல்லின் இன்னொரு

 தூரம் என்னும் சொல்லின் புலத்தை  ஆய்ந்தபோது பல்வேறு பொருண்மைகளை நாம் சுட்டிகாட்டியுள்ளோம். எனினும் துர > தூரம் என்பதையே சிறப்பாக எடுத்துக்காட்டினோம்.  ஆயினும்,  வேறுவகைகளிலும் இச்சொல் ஆய்தற்கு வாய்ப்பளிக்கும் என்பதைக் கோடிகாட்டியிருந்தோம்..

தூரமென்பதை இன்னொரு கோணத்திலிருந்து காண்போம். எனினும் மூலச்சொல்லில் மாற்றம் இருப்பதற்கில்லை.

துரு ( துருவம்) , (துருவுதல்) எனற்பாலதே  மூலம்.

துருவம் என்பது ஒன்றன் இறுதிநிலை என்று பொருள்படும்.

நிலக்கோளத்தின் துருவம்:   இஃது  நடுநிலப் பகுதியிலிருந்து வெகுதொலைவில் கடைக்கோடியில் உள்ளது என்பது நீங்கள் அறிந்ததே.  அதனால் இச்சொல்லுக்கு வெகுதொலைவு என்ற பொருட்சாயல் ஏற்பட்டது.

துரு என்பதை அடியாகக் கொண்டு:

துரு + அம் >  தூர் + அம் > தூரம் என்றுமாகி, இடைத்தொலைவைக் குறிக்கும். அதாவது ஒரு புள்ளிக்கும் இன்னொரு புள்ளிக்கும் இடையிலுள்ள தொலைவு. எனவே, இதிற்போந்த பொருள் " தொலைவு" என்பதே.

துரு என்பது தூர் என்று திரிந்ததற்கு உதாரணங்கள்:

பருத்தல்:   பரு + வதி >  பார்வதி.

கரு என்ற நிறம்குறிக்கும் அடிச்சொல்லும் கருத்தல் என்ற வினைச்சொல்லும்:

கரு + முகில் >  கார்முகில்.

இரு என்ற எண்ணுப் பெயர்:

இரு + ஆறு + கரம் >  ஈராறுகரம்.

பெரு  + ஊர் >  பேரூர்.

துர - துரத்து என்ற சொல்லும் துரு என்ற அடிச்சொல்லுடன் பிறவித்தொடர்பு உடையதே ஆகும்.

முன் விளக்கம் இங்கு:

https://sivamaalaa.blogspot.com/2020/10/blog-post_7.html

இவ்விளக்கம் மூலம் அடிகளைப் பற்றிய அறிவை விரிவாக்கம் செய்யும் என்று நம்புகிறோம். தூரம் என்பதன் இன்னொரு பரிமிதி இதுவாகும்.

பரிமிதி -  அதிக இடம் எடுத்து அடிவைத்தல் - அதாவது  மேற்கொள்ளும் அளவு

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.



 

பொங்கல் வாழ்த்து

 மங்கலமே தங்கிடுக பொங்கல்  தன்னில்,

மண்மீது  வறுமைபசி  பிணிகள் நீங்கிப்

பங்குபெற வேண்டும்வரு இனிமை வாழ்வில்

பைந்தமிழர் உலகமக்கள் தம்மோ டொன்றாய்!

தொங்குநிலைப் பணிகளெலாம் தொடர்ந்து சென்று

துய்யநிலை எய்திடுமே  வையம் யாண்டும்

பொங்கிவரும் அன்பினிலே தோய்ந்து நின்று

பொலிந்தவுடன் பிறப்புகளாய் வாழ்க நாமே. 

செவ்வாய், 11 ஜனவரி, 2022

வடசொற்கிளவியும் இரஸ்தாவும்

 உருது என்பது புதுமொழியாகத் தோன்றி வளர்ச்சி பெற்றுள்ளது. இம்மொழியில் பல தந்திரங்களைக் கையாண்டு சொற்கள் உண்டாக்கப்பட்டன. இதனை உண்டாக்கிக்கொண்ட மக்கள், நம் தென்னிந்திய முஸ்லீம்கள். அரபி எழுத்துக்களைப் பயன்படுத்தியதால்,  இம்மொழி எழுத்துக்கள் தெரிந்தால், அரபியில் எழுதப்பட்ட நூல்களையும் ஏனைப் பதிப்புகளையும் வாசிக்கலாம்.  மலேசியாவில் உருது அரபி வாசிக்கத்  தெரிந்த சீனர்களும் மற்றோரும் பலர் இருந்தனர்.  அதிலொருவர் தண்டனைச் சட்டங்களை ( Penal Code)  ஆங்கிலத்திலிருந்து உருது, மலாய் மொழிக்கு மொழிபெயர்த்தார். உருது மொழியில் இசையும் நன்கு வளர்ச்சிபெற்று இனிய இராகங்களும் உருவாயின.

முதன் முதலாக மலாய் மொழியில் உருது எழுத்துக்களால் நூல்கள் எழுதியவர் அப்துல்லா என்ற தமிழர்.  இவருடைய தன்வரலாறு, "ஹிக்காயத் அப்துல்லா" என்ற பெயரில் வெளிவந்துள்ளது.  மேல்படிவ வகுப்புகளில் இது ஒரு பாடமாகவும் வைக்கப்பட்டிருந்தது..

பல உருதுச் சொற்கள், நம் முஸ்லீம் தமிழர்களால் படைக்கப்பட்டன. பழைய தமிழிசையை ஒட்டிய புது இராகங்களும் உண்டாக்கப்பட்டன.  மொகலாய அரசர்கள், யோண்புரி ( ஜோன்புரி) இராகத்தையும் இதுபோல் பிறவற்றையும் விருப்பத்துடன் கேட்டு மகிழ்ந்தனர் என்று  கூறுவர். சில தமிழ் மூலங்களையும் பயன்படுத்தி, சொற்களை உண்டாக்கியுள்ளனர். இவற்றை  - முஸ்லிம்களால் படைக்கப்பட்டமையின் உருது என்றும், தமிழ் மூலங்கள் உடைமையால் தமிழ் என்றும் கூறுதல் கூடும்.

இரஸ்தா என்பது இருதிசையிலும் செல்லும் வண்டிகளையும் நடையர்களையும் கொண்ட வழிப்பாதை அல்லது சாலை என்னலாம்.  இது படைக்கப்பட்டது இவ்வாறு:

இரு அசை தா  -  இரசைதா > இரஸ்தா. ( இரு என்பதன் ஈற்று உகரம் கெடுத்தும் சை என்பதன் ஐகாரத்தைக் குறுக்கியும் சொற்புனைவு நடாத்தப்பெற்றது).

இருதிசை அசைவுச் சாலை என்பது. (இருதிசை அசைவு - போக்கு வரத்து)

இருதிசையினும் அசைதருதல் என்ற தொடர்நோக்கி அமைந்த சொல், இரசுதா (இரஸ்தா )  ஆகும்.

வரு(தல்) - வரத்து என்பதில் வரு+ து > வரத்து என்று ருகரத்தின் உகரம் ஒழிந்ததையும் காண்க. து என்பதும் தொழிற்பெயர் விகுதியாய் வரும்.

இதற்கொரு போன்மை காட்டுவோம்.

இறு  என்பது இறுதி ( கடைசி) என்பதன் அடிச்சொல்.  இறைவனே எல்லாவற்றிற்கும் இறுதியானவன்.

அதாவது இறைவன் என்போன், அதனில் தொடங்கி அதனிலே முடிவாய் இருப்போன்.

இறு > இறை > இறைவர் > இஷ்வர் > ஈஸ்வர் ( நாவொலிக்க எளிதாக்கம்).

வடவொலிகள் என்று சுட்டப்பட்டவற்றைத் தமிழ் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை. என்பது பழைய இலக்கணங்களால் தெளிவுறுத்தப்படவில்லை. இவ்வொலிகள் பலமொழிகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கடின ஒலிகளை மெதுவாக்க இவ்வொலிகளைப் பயன்படுத்தினர் என்று தெரிகிறது.  ச என்பது கடின ஒலி. ஸ எனற்பாலது எளிய ஒலி.

வடவெழுத்து ஒரீஇ உரிய தமிழ் எழுத்துடன் புணர்த்தால்,   அது தமிழாகிவிடுகிறது. இது   ஏன் அப்படி என்றால், தமிழ் எழுத்துக்களுக்கு மாற்றீடுகளை உள்செருகித்தான், இவ் அயற்சொற்களைப் படைத்தனர். பயணத்தின் எதிர்த்திசையில் சென்றால், தொடங்கிய இடத்துக்கே வந்துவிடுதல் என்பதுதான் இங்கு பயன்படுத்தப்படும் உத்தியின் உட்பொருள்.  

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

சில திருத்தங்க்ள் 1127  12012022

திங்கள், 10 ஜனவரி, 2022

கபாலி என்ற பதம்.

 இன்று கபாலி என்ற சொல்லைச் சுருக்கமாக ஆய்வு செய்வோம்.

கபாலி என்ற சொல்லின்பின் சமய வரலாறுகளும் பிறதொடர்புகளும் இருத்தல் கூடும். அவற்றைப் பற்றிப் பின்னர் "ஆர அமர"ச்  சிந்திக்கலாம்.    ஆர - நிறைய.  அமர -  in a settled manner or taking time and with due attention.  ஆர்தல் - நிறைதல்.

கபாலம் என்பது தலையைக் குறிக்கிறது.

மனித உடலில் கடுமை அல்லது கெட்டித் தன்மை வாய்ந்த பகுதி கபாலம்.  மற்ற உயிரினங்களிலும் இவ்வாறே பொருள்கொள்ளலாம்.  சில உயிரினங்கள், எ-டு: புழு, பூச்சி முதலியவற்றில் தலை விலங்குத் தலைபோல் கெட்டித் தன்மை இல்லாததாய் இருக்கலாம்.  இஃது இருக்கட்டும்.

கடுமைக்  கருத்து.  (கடு)

பான்மை அல்லது பகுதியாய் இருத்தல் கருத்து.  (பால்)

கடு  + பால் + அம்.

கடுபாலம்.

கடுபாலம் >  கபாலம்.  ( உடலின் கடினமான பகுதி, அல்லது பல்தொடர்புகளும் உள்ள பகுதி. )   A complex  organ or part of the body.

இப்போது வல்லின எழுத்துக்கள் இடைக்குறையில் மறையும் என்பது கூறினோம்.  பழைய இடுகைகள் காண்க.

அண்மையில் வெளியிட்ட இடுகை:

https://sivamaalaa.blogspot.com/2022/01/blog-post_9.html 

உங்களுக்கு ஓர் எ-டு:

தடுத்தல் வினைச்சொல்.

தடு > தடுக்கை. (கை விகுதி பெற்ற சொல்).

தடுக்கை > ( இடைக்குறைந்து)  > தக்கை.

உள்ளீட்டினை வெளிவராமல் பாதுகாப்பது "தக்கை"  ( தடுக்கைதான், வேறென்ன?)

எனவே,  கபாலம் என்பது உடலின் கடினமான பகுதி என்பதையே   பொருளாகக் கொண்டுள்ள சொல்.  இலக்கணப் படி:  இடைக்குறை.

கபாலம் > கபாலி :  கபாலம் உடைமை அல்லது கபாலம் பயன்படுத்துநர்.

அடிச்சொல்: கள் - கடு.

கள் > காள் > காழ் > காழ்த்தல்  ( கடுமை அடைதல்).

கள் > கடு > கடுமை.  கடு> கடி.

கள் > கடு> கடி+ இன் + அம் > கடினம்.

காழ்+ பாலம் >  காபாலம் ( முதனிலை குறுகி) > கபாலம்  ( எனினுமது).

குறுகுதலுக்கு எ-டு:   தாவு > தாவு+ அம் > தவம்.  ( இல்லற நிலையினின்று துறவுக்கு மாறுதல் என்ற கருத்து).  இதற்கு வேறு திரிபு விளக்கங்களும் உள.

இவற்றினுள் பெரிய வேறுபாடுகள் ஏதுமில்லை.  எப்படிச் சொன்னாலும்  மூலச்சொல் ஒன்றானால் பெரிதுபடுத்தப்பட மாட்டாது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.



ஞாயிறு, 9 ஜனவரி, 2022

கம்பி, கப்பி என்பவை [ தென்மொழி, சமத்கிருத]

 தமிழ்மொழியின் சொற்களில் கடை, இடை, முதலெனக் குறைந்து விட்டாலும் முழுச்சொற்கள் போல் வழங்கிய சொற்கள் பலவாகும்.  இவற்றை யாம் கணக்கெடுக்கவில்லை என்றாலும்,  இங்கு ஆய்ந்து வெளிபடுத்தியுள்ள பலவான சொற்களிலிருந்து நாம் இந்த முடிவுக்கு வரவேண்டியுள்ளது.  இயன்மொழியாகிய தமிழில் இயற்சொற்களே மிகுதி என்று யாம் நினைக்கின்றோம்.  எண்ணிக்கை செய்து பார்க்கவில்லை.

கம்பி என்ற சொல்லும் இடைக்குறையே எனினும் இது தெரிவிக்கப்படுவதில்லை. கம்பிகள் பெரும்பாலும் கடியவை.  அதாவது வெகுதிட்பம் உடையவை, இவற்றை வளைக்க இயலும் என்றாலும்!

கடு எனபதே அடிச்சொல் ஆகும்.

கடு > க ( கடைக்குறை) >  க + பி  (விகுதி) >  கம்பி என்று காட்டலாம்.

கடு > க > கப்பி   ( இது சாலையைக் கெட்டிப்பதற்காக இடப்படும் கடுங்குழைவு ).  இதை இட்டு உண்டாக்கிய சாலை: கப்பிச்சாலை.

இதனைப் பின்வருமாறும் காட்டலாம்:

கடு > கடும்பி >  கம்பி.

கடு > கடுப்பி > கப்பி.

வல்லெழுத்துக்கள் மறைவுறும் என்பது முன்னர் இடுகைகளில் கூறப்பட்டுள்ளது.

பீடு > பீடு+ மன் (அன்) > பீடுமன் >பீமன்.  பின்னர் வீமன்.

(பீடுடைய மன்னன்).

அடங்கு > அடங்கு+ அம் > அடங்கம் > அங்கம்.

உள்ளுறுப்புகள் அடங்கிய வெளி மேனி அல்லது உடல்.

கடத்தல் ( கடல் கடத்தல்) >  கடப்பு + அல் > கடப்பல் > கப்பல்.

இங்கும் வல்லொலி மறைந்தது.

விழு+ பீடு+ அண் + அன் > விபீடணன் > ( விபீஷணன் ).

(விழுமிய பீடுடைய மன்னன்).

கப்பி என்பது ஓர் இருபிறப்பி.  சல்லிக்கற்கள் சாலையில் மேற்பகுதியை மூடிக்கொள்வதால் கப்பி  ( கப்புதல் > கப்பி) எனினுமாம்.

சமத்கிருதமென்பது,  வால்மிகி முனிவர் முதலில் கவி இயற்றிய மொழி. பின்னர் வியாசன் என்ற மீனவர்.  பாணினி என்போன் ஒரு பாணப்புலவன்.

பிராமணர் கவி இயற்றிய மொழி தமிழ்.  தொல்காப்பியர் பிராமணர்.  அகத்தியனாரும் பிராமணர் என்பர்.  சமத்கிருதம் தென்னாட்டில் உருவான மொழி என்பர். அதன் செல்வத்தில் பங்குகொள்ளவே மேல்நாட்டினர் அதை இந்தோ ஐரோப்பிய மொழி என்றனர்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


வெள்ளி, 7 ஜனவரி, 2022

தவளை - தவணை - முதனிலைக் குறுக்கம்.

 முதனிலை அல்லது முதலெழுத்துக் குறுகி அமைந்த தொழிற்பெயர்கள் பல உள்ளன. நாம் சில காட்டியுள்ளோம் - பழைய இடுகைகளில்.

தாவு > தவளை

இங்கு,  தாவு என்பது தவ என்று குறுகியதால், முதனிலை குறுகித் திரிபடைந்தது என்பது அறிக.

இதுவேபோல், தவணை என்பதும் குறுகியே அமைந்தது என்பதும் அறிக.

தாவு + அணை.

தாவித் தாவிச் செல்வது போலும் ஒரு கட்டண முறை.

முன் இடுகைகள் இங்கு உள்ளன. Pl click and read for wider discussion.

https://sivamaalaa.blogspot.com/2019/07/blog-post_12.html

https://sivamaalaa.blogspot.com/2022/01/blog-post_6.html

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்பு.


நோய்த்தொற்று அச்சம். தடுக்கும் வழிகள்

 கெட்டுவிட்ட உலகத்தை நன்றே  ஆக்கக்

கிட்டுமொரு வழிதேடி அலைகின் றோமே!

பட்டுவிட்ட மரம்போல மக்கள் வீழ்ந்து

மடிகின்றார் நோய்த்தொற்றால், பரிந்து நல்லோர்

ஒட்டுறவும்   பல்குடியும் காத்துக் கொள்ள

உலகின்முனம் பட்டறியாப்  பாடே பட்டார்!

மட்டிலவாய்த் தடுப்புபல   மேவித்  துன்பம்

மட்டுறுத்தும் வழிகளையே தொட்டாய்ந்  தாரே.


கெட்டுவிட்ட - சீரழிந்துவிட்ட

கிட்டும் - கிடைக்கும்

பட்டுவிட்ட - பட்டுப்போன, காய்ந்துபோன

பரிந்து -  அதுதாபம் கொண்டு

ஒட்டுறவு - சார்ந்திருப்போரை மேலும் உறவினரை

பல்குடி  - மக்களை

முனம் -  முன் காலத்தில்

பாடே - துன்பமே

மட்டிலவாய் - மிகவான

மேவி - மேற்கொண்டு

மட்டுறுத்தும் - குறைத்துக் கட்டுக்குள் கொண்டுவரும்.

தொட்டாய்ந்தாரே - ஆரம்பித்து ஆராய்ச்சி மேற்கொண்டாரே


[Gov.sg அனுப்பிய தகவல் – ஜனவரி 6]


ஓமிக்ரான் கிருமிவகை: ஆக அண்மைய சுகாதார நடைமுறைகள்


😷 அறிகுறிகள், உடல்நிலை ஆகியவற்றின் கடுமைத்தன்மை அடிப்படையில் நோயாளிகள் பரிசீலிக்கப்படுவார்கள். ஜனவரி 6 முதல்:


1️⃣ உடல்நலமில்லை: மருத்துவரைப் பார்க்கவும்

🔹 கடுமையாக நோய்வாய்ப்பட்டோருக்கும் அபாய நிலையில் இருப்போருக்கும் தடுப்பூசி நிலை அடிப்படையில் 10/14 நாள் தனிமை உத்தரவு

2️⃣ நலமாக இருப்போர், மிதமான அறிகுறிகள் உள்ளோர்: சுயமாகத் தனிமைப்படுத்திக்கொண்டு, 72 மணிநேரத்துக்குப் பின், கிருமித்தொற்று இல்லையென உறுதியானால், வெளியே செல்லலாம் 

3️⃣ நெருங்கிய தொடர்பு: 7-நாள் சுகாதார அபாய எச்சரிக்கை


🔗 covid.gov.sg


✅ முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையைத் தக்கவைத்துக்கொள்ள, கூடுதல் (Booster) தடுப்பூசி தேவை

🔷 பிப்ரவரி 14 முதல், 18 வயதிற்கும் மேற்பட்டோர், முதல் இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டு 9 மாதம் வரை, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோராகக் கருதப்படுவர்

🔷 இரண்டாவது தடுப்பூசி போட்ட பின்னர், 5 முதல் 9 மாதத்திற்குள் கூடுதல் தடுப்பூசியைப் (Booster) போட்டுக்கொள்ளவேண்டும்


சில தட்டச்சுப் பிழைகள் திருத்தம்: 08012022 1212

அறிக மகிழ்க.

மீள்பார்வை பின்.





இருவடிவச் சொல் "மாற்றுருத்தம்" " மாற்றுறுத்தம்"

 ஒரு ஈராயிரம் ஆண்டுகட்குமுன் மனிதன் காகிதம் என்னும் தாளை  அறிந்திருக்கவில்லை,  அதைச் செய்து பயன்படுத்தவும் தெரிந்திருக்கவில்லை. மரம் செடி கொடிகளை அரைத்துத் தாள்செய்யும் கலையைச் சீனர்கள் கண்டுபிடித்தனர் என்று சொல்வர்.  "பேபிரஸ்" என்ற தாவரத்திலிருந்து "பேப்பர்" என்னும் தாளைச் செய்துகொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளவும் எகிப்தியர்கள் அறிந்தனர்.  தமிழர்கள் அறிந்துகொண்டது, ஓலைகளில் எழுதுவதற்குத்தான்.

ஓலைகள் குறிப்பிட்ட காலத்துக்குப்பின்  தம்  திட்பத்தினை இழந்துவிடும் ஆதலின் புதிய ஓலைகளைத் தயார்செய்து முன் எழுதியிருந்ததைப் பெயர்த்தெழுதி வைக்கவேண்டும். இப்படி எழுதும்போது  எழுதிக்கொடுப்போர் செய்த தவறுகளாலும் சொற்களில் மாற்றங்கள் நிகழ்ந்ததுண்டு.  சில ஓலை நூற்படிகளை ஒப்புநோக்கி உண்மையான சொல் வடிவம் எது என்று அறிந்துகொள்ளும் வாய்ப்பு இருத்தல் கூடும்.

ஒரு தவறான வடிவம் வழக்குப் பெற்றுவிட்டால், அது பல நூல்களிலும் இடம்பிடித்துக்கொண் டிருக்குமாதலால், இது  போல்வனவற்றைத் திருத்தி அமைத்துக்கொள்வது எளிதன்று.  தவறான வடிவமே தொடரட்டும் என்று விட்டுவைத்தலே அறிவுடைய செயலென்பர்.  இத் தவறுகள் வழுவமைதிகளாய் விடும்.

மரக்குழம்பை தாளாகச் செய்வது ஒரு மாற்றுருத்தம். ஆகும் .  ( அதாவது ஓர் ஓலையைத் தாளாக  மாற்றுருவில் தருதல்.)

உரு என்பது உருவம் எனவும் படும்.  உருத்தல் - தோன்றுதல்.

உருத்துதல் -  உருவிலமைத்தல்.  அதாவது இன்னொரு தோற்றமுடையதாக்குதல்.

"ஊழ்வினை உருத்துவந்  தூட்டும்  என்பதும்

சூழ்வினைச் சிலம்பு காரணமாக "

என்ற சிலப்பதிகார வரிகளில், உருத்து என்ற சொல்வடிவம் வந்திருப்பதை அறிக.  நல்லவேளையாக தமிழுக்கு இச்சொல் காணாமற் போகாமல் இன்னும் கிடைக்கிறது. நமக்கும் மகிழ்ச்சிதான்.

உருத்தல் - தன்வினை.

உருத்துதல் - பிறவினை.

ஆகவே, மாற்றுருத்தம்  ( மாற்று உருத்து அம் ) என்பது processing என்ற சொல்லுக்கு ஈடானது.

மாற்றுறுத்தம் -  வேறு உருவில் அமைத்தல் என்றும் பொருள்காணும்படியாகக் கையாளலாம்.  மாற்றுறுத்தினர் எனின் மாற்றுருவினது ஆக்கினர் என்பது.

எனவே, மாற்றுருத்தம், மாற்றுறுத்தம் என்பன இரு வடிவிலும் ஏற்கத்தக்க வடிவங்களாய் உள்ளன. 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

வியாழன், 6 ஜனவரி, 2022

முதல்குறுகி அமைந்த கிழக்கு, கிழங்கு முதலிய (௳ற்றும்: கிட்டங்கி)

 தோண்டு என்பது ஒரு வினைச்சொல்.  ஒரு வினைச்சொல்லிலிருந்து ஒரு பெயர் அமைந்தால் அதை  "வினையிற் பிறந்த பெயர்" என்று சொல்லலாம், ஆனால் இலக்கணியர் " தொழிற்பெயர்" என்று குறித்தனர். தொழில் என்பதும் வினை என்பதும் செயலைக் குறிப்பன.  வினைப்பெயர், செயற்பெயர் என்றெல்லாம் வேறுபெயர்களால் குறிக்காமல், இத்தகு பெயரை  இலக்கணியர் குறித்தது போலவே நாமும் தொழிற்பெயர் என்றே குறிப்போம்.

தோண்டு என்பது குறுகி,  தொண்டை என்று அமையும்.  ஒரு  தோண்டப்பெற்ற குழாய்போல  அமைந்திருப்பதால்,  தொண்டை என்று அமைந்த சொல், நெடில் குறிலாக அமைந்த தொழிற்பெயர். இதுபோலக் குறுகி அமைந்த இன்னொரு சொல் வேண்டுமாயின் ,  சா(தல்) >  சா+ அம் >  சவம் என்பதை எடுத்துக்காட்டலாம்.

வினைமட்டுமின்றிப் பெயரிலிருந்தும் இன்னொரு பெயர் தோன்றுவதுண்டு. கீழ் மேல் என்பன இடப்பெயர்கள்.  இவற்றிலிருந்து:

கீழ் > கிழங்கு,

கீழ் > கிழக்கு

என்பன அமைந்துள்ளமை காண்க

கீழ்த்திசை ---  கிழக்குத் திசை.

மேல்திசை ----  மேற்குத் திசை. 

 

.  கிழக்கு என்று வல்லழுத்து வருவது திசையையும், கிழங்கு என்று மெல்லொற்று வருவது ஒரு வேரையும் குறித்தது காண்க.  புணர்ச்சி வேறுபாட்டில் விளந்த வெவ்வேறு சொல்லுருக்களை வெவ்வேறு பொருட்குப் பெயராய் இட்டுள்ளமை,  ஒரு சிக்கன நடவடிக்கை என்றே உணர்க.

ழகரம் டகரமாய்த் திரியும்.  கீழ் > கிழங்கு > கிடங்கு என்பது கீழ்நிலம் குறிக்குங்கால் வேறுசொல்லாய் அமையும்.   பொருள்கள் கிடக்கும் ஒரு கூடாரத்தைக் குறிக்கையில் கிட(த்தல்) > கிடங்கு என்று அமையும். வெவ்வேறு சொற்பகுதியிலிருந்து ஒரு முடிபு கொண்ட சொற்கள் இவை.

கிட+ அங்கு + இ = கிட்டங்கி என்ற மலேசிய சிங்கப்பூர்த் தமிழரின் சொல், துறைமுகத்தில் பொருட்கூடாரமாகப் பயன்படுத்தும் இடத்துக்குப் பெயர்.  இது கிட அங்கு என்பவான சொற்களிலிருந்து திரிந்தமை,  கி - ga, (   ) , ட் அங்கு இ  > டங்கி >  dong,  என அதனின் விளைந்து, gadong  என்ற மலாய்ச்சொல் அமைந்தது. இது ஆங்கிலத்தில் godown  என்று திரிந்தது.  பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுகளில் கப்பலில் வந்து சரக்குகளை இறக்கி அடைத்துவைத்தவர்கள் பெரும்பாலும் இந்தியத் தொழிலாளர்கள். அவர்கள் இட்ட பெயர்தான் கிட்டங்கி.   கிட்டங்கிகள் இருக்கும் தெரு, கிட்டங்கித் தெரு என்ப்பட்டன.  செட்டியார்கள் கடைகள் வைத்து வணிகம் நடாத்தினர்.

சில இவ்வாறு இரட்டித்து அமையும். இவற்றை ஒப்பாய்க:

மக + கள் >  மக்கள்.  ( இரட்டித்தது).

தக + அள் + இ >  தக்காளி.   ( இரட்டித்தது).  தகதகவெனக் கண்களை அள்ளும் தன்மை உடைய பழம்.  அள் என்பதின்றி , ஆள் - ஆளுமை என்பதும் உண்டு.

பகு+ அம் > பக்கம் என்பதும் காண.

தகு + அது > தக்கது என்பதுமது.  தகுவது எனினுமாம்.

ஒப்பு நோக்க:

கரியநிறம் தோன்றுமாறு வறுத்தெடுப்பதற்கு  garing என்று மலாய் மொழியில் சொல்வர்.  கரியங்கு >   காரிங்க்.

கருக்கு>  கரிங்கு >  காரிங் எனினும் அமையும்.  சற்று கருப்பு நிறம் வரும்படியாக வாணலியில்  புரட்டி எடுத்தல். 

இவற்றிலிருந்து கற்றுக்கொள்க.  சொற்களை அமைப்பது இலக்கணத்தின் வேலையன்று. திருத்தமாக மொழியைப் பேசவும் எழுதவும் திறனுண்டாக்குவதே அதன் நோக்கம்.

இங்கு வேறு சில பொருத்தங்களை நாம் கண்டுமகிழ்ந்தாலும், யாம் சொல்ல விழைந்தது யாதெனின்,  கீழ் என்ற நெடில்முதலாய் வந்த சொல் குறுகி,  கிழக்கு என்று அமைந்ததுதான்.  கிழங்கு என்பதும் அன்னது ஆகும்.  அதாவது வினையல்லாத பகுதிகளினின்றும் இவ்வாறு அமைதல் காண்க.

முன் ஓர் இடுகையில், காண் ( காணுதல்) என்பதிலிருந்து முதலெழுத்து குறுகி, கண் என்ற சினைப்பெயர் அமைந்ததைச் சுட்டிக்காட்டியுள்ளோம்.

இவற்றை மறவாமல் இருத்தல் தமிழறிய இன்றியமையாதது ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்

புதன், 5 ஜனவரி, 2022

இந்திரனும் ஐந்திரமும் ஒரு விளக்கம்.

 ஐந்திரம் என்பதைப் பலவகையாகப் பகுத்து ஆய்வாளர் என்று சொல்லப்படுவோர் தங்கள் கருத்துக்களை வைத்துள்ளனர்.  ஐ+ திரம் = ஐந்திரம் என்றும்,  திரம்> திறம் என்ற போலியின் காரணமாக, ஐந்திறம் <> ஐந்திரம் என்றும் கருத்துக்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்திரன் என்பவன், இருந்த ஐந்துக்கும் ஆட்சியாளன். இருந்த ஐந்து என்பவை, நிலம் தீ ,வளி விசும்பு, நீர் என்பவை.  இவையே ஐந்திரம் எனப்பட்டன.

ஐந்து + இரு + அம் -  ஐந்திரம் ஆகும்.

ஐந்திரம் என்ற சொல்லே பின் இந்திரன் என்று திரிந்து வழங்கியது.  இந்த ஐந்தையும் இயக்கும் இயற்கை ஆற்றல் அல்லது அவற்றினை ஆளும் பேரான்ம ஆற்றலை  ஆண்பாலில் குறிக்கும் சொல்லாகிவிட்டது.

ஐந்திரு+ அம் என்று பிரித்தால்,  திறம் >< திரம் என்ற மாறுபாட்டில் விளையும் மயக்கம் இராது.  ஐ+ திரு+ அம் அல்லது ஐந்து + இரு+ அம் என்ற இரண்டும் புணர்வில் ஒரு முடிபு கொள்ளுமென்பது அறிக.  திரு என்பதைத் தெய்வ ஆற்றலென்றும் இரு எனின் உள்ளிருக்கும் ஆற்றலென்றும் பொருண்மை கொள்ள இதனால் இயலும்.

இருந்த இருக்கின்ற ஐந்தையும் ஆள்பவன், இவன் தேவனாக உணரப்பட்டவன். விண்ணையும் கடலையும் ஆள்பவன் நாராயணன்.  இவன் உண்மையில் நீரின் அம்சம் அல்லது அமைப்பு.  இவனும் ஒரு தேவன்.  இவன் நீராயினன் என்றிருந்த பெயர் மாறி நாராயணன் என்று அறியப்பட்டான்.  இவன் நிறம் கருமை. வானும் கடலும் கருமை ( நீலம்).

இவ்வைந்தும் கலந்ததே உலகம் என்று தொல்காப்பியர் கூறுவதால்,  ஐந்திரம் என்றது உலகம் என்பதே.  எனவே, உலகுநிறை தொல்காப்பியனே ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன். " உலகுநிறை "  என்றால் உலகில் மிகுபுகழ் உடையோன் என்று பொருள். இது உயர்வு நவிற்சி என்று செய்யுளில் கூறப்படுவதாகும்.  

ஐந்திரம் என்பதை இன்னொரு வகையில் கூறவேண்டுமாயின், பிரபஞ்சம் என்று கூறலாம்.  பிறப்பு அஞ்சு அம் >பிறப்பஞ்சம் > பிரபஞ்சம்..

படைப்புக் கடவுளுக்கு அடுத்த நிலையில் ஐந்திடங்களைக் கவனித்துக்கொண்ட ஐந்திரத்து அதிபதி, இலக்கண ஆசிரியன் அல்லன். அவன் தேவன். ஐந்திரம் அவன் ஆட்சியிடம் ஆகும். ஓர் இலக்கண ஆசிரியனுக்கு அருள்தந்த தெய்வமாகலாம். இவ்வாறு பல கொள்கையினரும் ஒத்துப் போற்று மொரு விளக்கமாய் இது விளையும்.

"ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத்தன் பெயர் தோற்றி" என்று கூறுவது ஏனென்றால், தொல்காப்பியன் உலகு புகழ் பெயரினன் என்று கூறுவதற்காகவே  ஆகும்.

பிரபஞ்சம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி...

உலகம் புகழும் தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி...

ஐந்திரம் என்ற பெயரில் ஓர் இலக்கணநூல் இல்லை...தமிழிலும் இல்லை; சமத்கிருதத்திலும் இல்லை. ஐந்திரம் ஓர் இலக்கணமென்பது ஊகமே. பனம்பாரனார் அதை இலக்கணநுல் என்று குறிக்கவில்லை. சங்கதவாணரும் பிறரும் அஃது இலக்கணமென்று மயங்கியிருக்கக்  கூடும்.

ஐந்திரம் - உலகம் என்ற விளக்கத்துக்கு ஆதரவாக அச்சொல்லே திகழும். புறச்சான்று தேவையில்லை. குறித்த ஐந்தும் இருக்கும் இயற்கை நிலைகள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

சிறு விளக்கங்கள் சேர்க்கப்பட்டன. 06012022

செவ்வாய், 4 ஜனவரி, 2022

பிச்சுவா என்ற கத்தி

 பிச்சைக்காரர்கள் கத்தி வைத்துக்கொண்டு திரிவதாகத் தெரியவில்லை.  வாங்கிய பிச்சையை வைத்துத் தின்பதற்கு ஓர் ஏனம் அல்லது பாத்திரம் வேண்டுமாதலால் அதைத்தான் பிச்சை எடுப்பவன் வைத்திருப்பான்.  கத்தி வைத்திருப்பதென்பது பெரும்பாலும் கள்ளர்கள் வீடுடைப்பவர்கள் வைத்திருப்பார்கள்.

பிச்சை என்ற சொல்,  பைத்தியம் உடையாரின் தன்மையையும் குறிக்கக் கூடும் பித்து > பிச்சு என்று திரியக்கூடியது. பித்தை என்பதும் பிச்சை என்று திரியும்.  ஆதலின் பிச்சை என்ற சொல்லைக் கவனமாகவே ஆய்வு செய்தல் வேண்டும்.

எல்லாப் பிச்சைக்காரர்களும் பைத்தியகாரர்கள் அல்லர். ஏழ்மையினால் வாங்கி உண்பவர்கள் ஒருசாரார்;  பைத்தியமாகத் திரிவோர் மற்றொரு சாரார் ஆவர்.

பைத்தியம் என்ற சொல், அறிவு முதிராமையைக் குறித்த தமிழ்ச்சொல்.  பை - பைம்மை,  முதிர்ச்சி இன்மை.  பையன் - இளையவன்.

பை அடிச்சொல்.

பைத்து -  என்றால் பைம்மை உடையது என்று பொருள்.

பைத்து  + இ = பைத்தி.  பைம்மை உடையோன், உடையோள்.

அம் என்பது அமைந்தமை குறிக்கும் விகுதி. 

எல்லாம் இணைக்க, பைத்தியம் ஆகிறது.  பைத்து இ அம் > பைத்தியம்.

பைத்தியம் என்பது பையன்மை.  "பையலோ டிணங்கேல்" என்பதும் கருதுக. நாளடைவில் பைம்மைக் கருத்திலிருந்து மூளைக்கோளாறு குறிக்கக் கருத்து வளர்ச்சியுற்றது.

இது முதிராமை - அதாவது அகவை (வயது) இருந்தும் அதற்குரிய அறிதன்மை உடையனாயிருந்து சரிப்படுத்திக்கொண்டு செல்லாதவன், பைத்தியம் உடையவன்.  An insane person  cannot adjust himself to situations. Normal persons too sometimes fail to adjust but in an insane person, the failure to adjust is  to a much greater extent.  இதைப்பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிக.  தமிழ்மொழியில் இந்தச்சொல், பைம்மையிலிருந்து தான் வருகிறது.  ஆதலால் இங்கு உரைத்தவாறு உணர்ந்து சொல்லை அமைத்திருக்கிறார்கள்.  இது சரியாகவே உள்ளது.

பிச்சுவா என்ற சொல்லுக்கும் பித்துடைமைக்கும் பைத்தியத்துக்கும் ஏதும் தொடர்பு இருப்பதாகக் கருதுவதற்கில்லை.  இச்சொல் வந்த விதம்:

பிள்  -  ( பிள்> பிள > பிளத்தல் ).

பிள் > பிள் + சு > பிட்சு > பிச்சு.

வாள் என்ற சொல், வா என்று பேச்சு வழக்கில் திரிந்துள்ளது.

சொல்லமைப்புப் பொருள்:  பிளக்கும் நீள்கத்தி.

வா என்ற வினைச்சொல் அன்று; இது வாள் என்பதன் கடைக்குறை. இலக்கணம் பொருந்துகிறது.

பிள் > பிட்சு> பிட்சுவாள் > பிச்சுவா.

அறுவாள் என்னாமல் " அறுவாக்கத்தி" என்று பேச்சில் சொல்வது கேட்டிருக்கிறோம்.  "ள்" குன்றுதல் தமிழில் இயல்பு.   அவள் > அவ,  வந்தவள்> வந்தவ எனற்பால திரிபுகள் உணர்க.

வளைந்த வாயுள்ள மீன்,  கொடுவா என்று குறிக்கப்படுவது காண்க.  கொடு - வளைந்த,  வா - வாயுடைமை.  யகர ஒற்று கடைக்குறை.  கொடுவாய் என்ற மூலம் வழக்கில் இல்லை. ஆகவே உணர்பொருட்டு மீட்டுருவாக்கம்.

அறிக மகிழ்க.

பெய்ப்பு பின்.

திறமும் திரமும் ( ர - ற வேறுபாடு)

 எம் சொந்த ஆய்வில்,  திறம் என்பதும் திரம் என்பதும் பழைய நூல்களில் காணப்படும்போது, ஒன்றுக்கு மற்றொன்று மாற்றீடாக முற்காலத்தில்  வந்திருத்தலை ஒதுக்கித் தள்ளிவிடுதல் இயலாததே ஆகும். இவ்வாறு முடிவு செய்வதற்குக் காரணங்கள் உள்ளன. சில கூறுவோம்.

  • ரகரம், றகரம் இரண்டிலும் ரகரம் காலத்தால் முற்பட்டது ஆகும். எழுத்துருவில், ரகரம் என்பது ஒற்றை ரகரம் என்றால் றகரம் என்பது இரட்டை ரகரம் அல்லது றகரம் எனல் வேண்டும். ஒற்றை ரகரம் : (  ர  ). இரட்டை ரகரம் ( ரர அல்லது ற).  றகரத்தில் இரு ரகரங்கள் ஒட்டி உள்ளன.
  • முற்காலத்தில் ற என்பது ரர என்று எழுதப்பட்டிருக்கவேண்டும்.
  • அழுத்தி ஒலித்தால், ரகரம் றகரமாகிவிட்டதென்பதே உண்மை நிலை. அதனால்தான் ஒன்று ( ர ) இடையினமாகவும் மற்றொன்று ( ற) வல்லினமாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.  இதைத் தமிழர் நாளடைவில அறிந்த பின்புதான் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தனர் என்னலாம்.
  • றகரம் தோன்றுமுன் சற்று மென்மையுடன் ஒலிப்புற்ற ரகரமும் நன் கு அழுத்தி ஒலிக்கப்பட்ட றகரமும்  ஒரு மாதிரியாகவே எழுதப்பட்டிருந்தன. அதனால்தான் இவ்வேறுபாடின்றி எழுதப்பட்ட சொற்கள், இன்றும் வேறுபாடின்றியே எழுதப்படுகின்றன.
  • பிற்காலத்தில் நூல்களை ஓர் ஓலைச்சுவடியிலிருந்து இன்னொன்றுக்கு மாற்றிப் புதுவரைவு செய்தவர்கள்,  இவை மக்களால் எவ்வாறு ஒலிக்கப்பட்டன என்பதைத் தம் புலமையின் மூலமாகக் கண்டறிந்து வேறுபடுத்தி எழுதி நமக்கு அளித்துள்ளனர் என்பதே உண்மை.
  • மலையாளத்தில் றகரம் வரக்கூடிய இடங்களில்,  ரர என்பதற்கீடான முறையிலேதான் எழுதுகிறார்கள்.
  • ஆகவே திறம் - திரம்,  பறை(யன்) - பரை(யன் ) முதலியவையும் இவைபோல் பிறவும் வேறுபாடற்றவையாய் இருந்தன.
திறம், திரம் இரண்டுமே திரட்சிக்கருத்தினடிப்படையில் எழுந்த சொற்கள் தாம்.  ஐந்திரம் என்ற சொல்லில் ஐந்து பகுப்புகளின் திரட்சி குறிக்கப்படுகிறது.   திறம் ( அல்லது திறமை என்பதுகூட,)  வலிமை, செயலூக்கம் ஆகியவற்றின் திரட்சிதான்.   திரட்சி என்பது காண்பொருளிலும் காணாப்பொருளிலும் அறியப்படுவது. இதுபோல் பிற சொற்களிலும் வேறுபாடுகளை உணரவழி உள்ளது.  எ-டு:  பரவுதல்  ( பர ) என்பது தரையிலும் வானிலும் நிகழ்வது.  பற என்பது வானில் மட்டும் நிகழ்வது.

ஆகவே, ஐந்திரம் என்றால் ஐந்தின் திரட்சி என்பதே.  திரளுதல் என்ற வினைச்சொல்லும் திர> திரள் என்றே வருகிறது.  கையாளப்படும் முறையிலிருந்து திறம் என்பது பொருள்களின் தொகுப்பைக் குறிக்க வல்லது என்பது தெளிவு.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்பு.

திங்கள், 3 ஜனவரி, 2022

ரம்மியம் என்பது

 ஒ ருவன் தன் வீட்டின் முகப்பை இடித்துவிட்டு, அடுத்த நாள் வந்து பார்த்து என் வீடு இதுவன்று என்று சொன்னதுபோலவே, பல சொற்கள் தமிழில் உலவுகின்றன.(அ)/றணம் என்ற ஒரு சொல்லை முன் ஓர் இடுகையில் கண்டோம். இப்போது இரம்மியம் என்பதை அறிந்துகொள்வோம்.

இர் என்ற அடிச்சொல்,  இருள், இரவு, இராவணன் முதலிய சொற்களில் வந்துள்ளது. இர் என்ற அடி, ஒளியின்மையை உணர்த்துவது.  கருமை ஒளியின்மையுடன் தொடர்புள்ளதாதலின்,  இர் என்பது கருப்பு நிறத்தையும் உணர்த்தும்.

இர் -  கருப்பு.

அம் -  அழகு.

இ  -  சுட்டுச்சொல்,  இடைநிலையாய் வந்துள்ளது.

அம் -  விகுதி.   பெரும்பாலும் அமைப்பு என்பதைக் குறிக்கும் சொற்களில் வரும். அமைப்பு என்பதற்கும் இது அடிச்சொல் ஆகும்.  அறம் ( அறு+ அம்) என்பதில் இவ்விகுதி வந்துள்ளமை காண்க.  மறம் என்பதிலும் அது உள்ளது.

முன் தமிழர் கருப்பில் அழகு கண்டு சுவைத்தனர் என்பது இச்சொல்லிலிருந்து நாம் அறிந்துகொள்வதாகும். ஒரு நூறு ஆண்டுகட்குமுன் கருப்பு நிற உந்து வண்டியை மக்கள் பெரிதும் விரும்பி அதில் அழகும் கண்டனர் என்று சொல்கிறார்கள்.. இப்போதெல்லாம் பல வண்ணங்களில் உந்துவண்டிகள் வருகின்றன!  ஐயப்ப பற்றர்கள் கருப்பு உடையில் அழகு உணர்ந்தவர்கள். வானம் பாதிநாள் (இரவில்) கருப்பிலே அழகு காட்டுகிறது.  கண்ணின் ஒளியல்லால் மற்றோர் ஒளியில்லை என்றாள் நம் ஓளவை.

இர்+ அம் + இ+ அம் > இரம்மியம்,   பொருள்:  அழகு.

நாளடைவில் கருப்பில் அழகு என்பதை மறந்துவிட்டனர்.

இராமன், இராவணன், கண்ணன், காளி யாவரும் கருப்பிலழகியர்.

ஆகவே, ரம்மியம்  உண்மையில் இரம்மியம் ஆகும்.  இது ஒரு பேச்சுவழக்குச் சொல். இப்போது வழக்கு குன்றிவிட்டது. இதை எடுத்தாண்ட மொழிகள் இச்சொல்லை இறவாது காத்துள்ளன.  அவற்றுக்கு நன்றி.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.



இலங்கை - சொற்பொருள் ஐயப்பாடு

 இலங்கை என்னும் சொல் எவ்வாறு அமைந்தது என்பதை அந்நாட்டு அறிஞர்கள்  மற்றும் பிறரும் வெகுவாக ஆய்வு செய்துள்ளனர். இவற்றுள் ஒருமுகமான முடிவுகள் இல்லை என்றுதான் முடிவுகட்ட வேண்டியுள்ளது. இவற்றை இணையத்தின்வழித் தேடி நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.

இலங்கை என்ற பெயர், ( லங்கா)  ,  இராமாயணம் முதலிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.  கம்பனிலும் உள்ளது.  இராவணன் எவ்வாறு கலங்கினான் என்பதைத் தெரிவிக்க, " கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான்  இலங்கை வேந்தன்"  என்பான் அக்கவிப் பெரியோன்.

இலங்கை என்ற சொல்லை  இல் + அங்கை என்று பிரிப்போமானால்,

இல்  =  இடம்,

அங்கை -  உள்ளங்கை.

என்று பொருள் போதரும்.  ஆகவே உள்ளங்கை வடிவில் உள்ள நாடு என்று தமிழின் மூலமாகப் பொருள் கிட்டும்.  இதுதவிர, வேறு பொருளும் பிறர்தம் ஆய்வினால் கிட்டுகிறது.  அவற்றை இங்கு விளக்கிற்றிலம்.

இல் + அங்கை என்பது லகர இரட்டிப்புக் காணும் புணர்ச்சியை உடைத்தாகும்  என்று கூறுதல் கூடுமெனினும், ( இல் + அங்கை = இல்லங்கை),  இவ்வாறு இரட்டித்தால் பின் இடைக்குறையாகிக் குறுகுதலும் கூடுமாதலால், தமிழிலக்கணத்தின்படி குழப்பமில்லை எனினும்,  இந்தப் பெயர் ஏற்பட்ட காலத்தில் நாம் இல்லையாதலின், இதனால்தான் இப்பெயர் வந்தது என்று முடிவு செய்யக் காரணம் யாதும் அறியோம் என்பதறிக. ஆயினும் பெயர் பொருந்துகிறது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்



ரணம் என்பது

 இச்சொல்லை ஆய்வு செய்து காண்போம். இதைச் சுருக்கமாகவே செய்துவிடலாம்.

அறுத்தல் என்பது வினைச்சொல்.

அறு + அணம் -    அறணம்>  (தலையிழந்து )  ரணம்.

அறுத்த புண்.

முதலெழுத்தாக றகரம் வரக்கூடாது,   ரகரமும்தான் வருதல் ஆகாது.   றகரத்துக்குப் பதில் ரகரம் எழுதுவதால் இலக்கண விதி காக்கப்பட்டது என்று எண்ணலாகாது.

இது மாதிரி அமைந்த இன்னொரு சொல்:

அறு + அம் + பு + அம் =  அறம்பம்,  றம்பம் > ரம்பம்.

அறு  - அறுத்தல் வினை.

அம் - அழகு  ( அழகாக).

பு  - இடைநிலை.

அம் - விகுதி  அல்லது இறுதிநிலை.

பொருள்:  அறுக்கும் வாள்.

ரணம்:  சொல் இவ்வாறு மாறவே, அறணம் என்ற சொல் வழக்கிறந்து.

ரணமென்பது தலைக்குறைத் திரிபு.   அறணம் என்றே எழுதி, விளக்கத்தை அடைப்புக்குறிகளுக்குள் இடுக.

மொழியை ஒழுங்குறக் கையாளவில்லை என்றால், தவறான வடிவங்களே ஆட்சிசெய்யும்.

அழகாக வெட்ட, அறம்பமே  வேண்டும்.  கோடலியால் அது ஆகாது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்

ஞாயிறு, 2 ஜனவரி, 2022

நிறுத்தம் ஆக்கி அருகில் நிகழ்த்தல் - நிராகரித்தல்.

 அருகுதல் என்பதன் பொருளைக் காண்போம்.    அருக்குதல் - Show disinclination.  ( This meaning is close to rejecting).

 

எதுவுமொன்று அரிதாகிவிட்டால்,  அதை அருகுதல் என்போம். அதாவது ஏறத்தாழக் கிட்டாத நிலைக்கு வந்துவிட்டது என்று சொல்லி விளக்கலாம். இன்னும் திறமையாக விளக்க முற்படுங்கள்.  பின்னூட்டம் இடுங்கள்.  எடுத்துக்காட்டாக, வளி என்ற சொல் வழக்கில் அருகிவிட்டது என்று சொன்னால், அந்தச் சொல் ஏறத்தாழப் பயன்பாட்டில் இல்லாததாகிவிட்டது என்பதே பொருள். சிற்றூரார் இதை அரிசாகிவிட்டது என்பர்.  இன்னும் வழங்குகிறது, இங்கொன்றும் அங்கொன்றுமாகச் செவியை எட்டுகிறது என்பதே இங்கு வரும் கருத்தாகும்.

ஆங்கிலத்தில்  diminish, reduced, reaching scarcity என்று விளக்கினால் சரியாக இருக்கும்.

அருகில் என்ற சொல், பக்கத்தில் என்று பொருள்படுவதும்,  தொட்டும் தொடாமல் இருக்கும் நிலையைக் காட்டுவதும் கருத்தில் கொள்க.  அரித்தல் என்ற இகரம் இணைந்த சொல், அரு என்ற மூலத்திலிருந்தே வருகிறது.  இதற்கு ஒப்புமையாக ஒன்றைச் சொல்லவேண்டுமென்றால்,  அடு என்பதினின்று அடி என்ற சொல் வந்ததனைக் கூறலாம்.  அடுத்துச் செல்ல இயலாமல் அடித்தல் இயலாதது காண்க. அதேபோல, அருகிற் செல்லாமல் அரித்தல் இயலாததே.  அருகிற் சென்றதன்பால் சேர்ந்துவிடுதலும் அதைத் தன் பால் கொணர்தலும் ஆன செயல்களில் ஒன்று  நிகழ்வதையே அரித்தல் என்ற துணைவினை குறிக்கும்.  சொறி சிறங்கு வந்து அரித்தல் வேறு.

அரு -  பக்கம் செல்லுதல்.

இ  -  இங்கு. அதாவது உம்பால் வரச் செய்தல்.

அரு + இ > அரித்தல்.  (  Operating at a position where there is O gap between you and the thing or person approached).   இ என்றால் இங்கு என்ற சுட்டடிச் சொல்.  அரு என்பது அங்கு என்ற சுட்டடிச் சொல்லில் விளைந்தது.  ஆகவே அரு இ என்பதில் அங்கும் இங்கும் ஆகிய இரண்டும் இணைந்துவிடுகிறது.

          அடி என்பதும் அன்னது.  அடு+ இ > அடி. 

நிறு என்பது நிறுத்தம் செய்தல்.

ஆகுதல் குறிக்க வரும் ஆகு என்பது  "happen" என்பதை உணர்த்துகிறது.

நிறு + ஆகு + அரு + இ

நிறாகரி  என்று உருக்கொள்ளும் சொல்.   (  நிறுத்தும் நிலைக்கு நெருங்கிச் செல் என்னில் பொருள் விளக்கமாகும் )

இதுதான் நிராகரி என்ற சொல்லாகிவிட்டது.

இந்தச் சொல்லமைப்பில் எல்லாப் பாகங்களும் ஒழுங்காக உள்ளன, பொருளும் இயைபாக வருகிறது.  இங்கு என்ன நிகழ்ந்தது என்றால், றா என்பதற்குப் பதிலாக ரா என்பது வந்துள்ளது.  இது உச்சரிப்பு மென்மையானதைக் குறிப்பதாகக் கொள்ளலாம். அல்லது,  சொல்லின் ஆக்கம் அறியாமல் வேறு எழுத்தை இணையொலிப்பாகப்  பயன்படுத்திய செயலாகவும் இருத்தல் கூடும்.

          தமிழில் சில சொற்கள் ரகர றகர வேறுபாடின்றி வரும்.  அவற்றின்                          பட்டியலை இலக்கண நூல்களிலோ அகரவரிசைகளிலோ காண்க. 

இவ்வாறாக விளக்கம் கிட்டுதலால், இச்சொல்லைச் சரியாக   இடைக்கால புலவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்றே    இவ்வாய்வில்  நன்கு வெளிப்படுகிறது.

           இது ஒரு "பல்லுருப்புணர்வு"ச்  சொல் என்க. ஒரு பகுதியும் ஒரு விகுதியும்               உளவாய்ப் புனைவுறுவனவே அடிப்படைச் சொற்கள். ( எ-டு: கண்+ அம் -               கணம்.  (கண்ணிமைப் பொழுது).

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

 

பக்திவெள்ளம் அலைமோதுகிறது



பத்திவெள்ளம் கரைபுரண்டு  ஓடுகின்றதே

பரவுந்தொற்று விலகுவழியைத் தேடுகின்றதே.

சத்திசிவனும் ஐயன்விட்ணு மனைகள்தம்மிலே

எத்திசையும் மக்கள்நெஞ்சில் நித்தல்நின்றமை

வற்றிமாயும் என்றஎண்ணம் கொண்டநெஞ்சினர்

வாடிவீழும் அலையைநாளும் கூடச்செய்ததே!

சுற்றிநீரும் ஒற்றிநின்று காண்பிரென்றிடில்

சூழலெங்கும் மாற்றமான நன்மைகாண்பிரே.

















நந்தன், நந்தி.

 எதற்கும் ஒரு நல்ல பெயரிட்டு அழைப்பதென்றால்,  பிற சொற்களைத் தேடித் திரிவதைவிட,  நல் -   நன் என்ற அடிச்சொற்களைப் பயன்படுத்திக்கொள்வதும் சொல்லமைத்துக்கொள்வதும் ஒரு திறன் என்றே சொல்லவேண்டும். உங்கள் தம்பி நல்லவன் என்று குறிப்பிட அவனை நல்லதம்பி என்றே சொல்லலாம். நல்லிளவல் என்று சொல்லலாம் என்றாலும் இளவல் என்ற சொல் சற்றுக் கடினமானது என்று சிலர் கருதுவர்.

விகுதிகளில் பழையது அல் விகுதி. இது வினையிலும் அல்லாதனவிலும் வரும்.  மணல் என்பதில் அல் விகுதி உள்ளது.   மண்+ அல் >  மணல் என்று வரும்.  மணல் என்பதற்கு மண் என்ற சொல்லையே எடுத்து, அல் விகுதி யிட்டு, மணல் என்ற சொல்லைப் படைத்துக்கொண்ட தமிழன் சொல்லமைப்பில் திறன்பல கொண்டோன் ஆவான். வட்டமாகவும் நெடிதாகவும் கூடி அமைந்த ஒன்றை குழல் என்று அல் விகுதியுடனே அமைத்ததும் திறனே.  கு என்பது வட்டமாய்ச் சுற்றிவந்து சேர்ந்ததைக் குறிக்கிறது. கு என்பது சேர்ந்துள்ள அனைத்துக்கும் நல்ல துவக்கமான தலை எழுத்து.   கு> குழு> குழல்..  தாயுடன் கூடித் திரிவது குட்டி.  கு> குடு> குட்டி.   இதிற் சிறுமைக் கருத்தும் உள்ளது.  மறைவுநிலையுடன் கூடி உள்ளிருப்பது குட்டு. இவற்றிலெல்லாம் கூடியிருத்தற்  கருத்து நிலைபெற்றுள்ளது.

அல் விகுதியே  பின்னர் அன் என்றும் ஆனது.  லகரம் 0னகரமாகும்.  எடுத்துக்காட்டு:  திறல் >  திறன்.  இதைப்போலவே, நல் என்பதும் நன் என்றாகும்.  மற்றும் சில எழுத்துக்களின் புணர்ச்சியிலும் ல் என்பது 0ன் ஆகும்.

நல் >  நன் > நந்தி.  

நல் > நன் > நந்தன்.

நல் > நன் > நந்துதல் ( நன்மையாதல், இச்சொல் கெடுதற்பொருளிலும் வரும்.  இதைப் பின்னொருகால் விளக்குவோம். )

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

என் இயமானர் ( நாய் சொல்வது)

 


ஒரு சிறுநாய் பாடும் கவி:-

என்னை அழைக்கிறார் இந்த மூத்தவர்

இவரிடம் நான்போக மாட்டேன்

என்னை அணைத்திடும் என்இய மானர்

இந்தவீட் டுள்ளிலுள் ளாரே!

என்னிடம் வருவார் உண்டிடக் தருவார்

பட்டையப் பம்பகிர் வாரே

தண்உறு நீரைத் தவிப்பது தீர

தந்திடு மன்னவர் வருக வாழ்க.



இயமானர் - எசமானர்

பட்டையப்பம்- பிஸ்கட்

பகிர்வார் - பகுதிகளாகத் தருவார்

தண்உறு - குளிரடைந்த

தவிப்பது தீர - தாகம் தீர

மன்னவர் - அரசர்.


எஜமான் என்னும் சொல்:  இங்குச் சொடுக்கி வாசிக்கலாம்: 

https://sivamaalaa.blogspot.com/2018/09/blog-post_18.html


சனி, 1 ஜனவரி, 2022

ஆராதனை

 ஆராதனை தமிழ் மூலம் சொற்புனைவறிதல்


ஆர்-தல்   

:  நிறைதல்.  நிறைவு.

ஆது:            

இது ஆவது என்பதன் இடைக்குறை. இங்கு வகரம் குன்றியது.

அன்       :      

சொல்லாக்க  இடைநிலை.  இது அண்முதல் என்ற வினையின்            திரிபு. அண்முதல் என்பது நெருக்கமாதல்.   அண் - அன் என்று திரிந்து                           சொற்களில் வரும்.   அன்பு என்ற சொல்லில் இது வந்துள்ளது.                    ஆகவே  தமிழில் இல்லாததன்று.  அன்பு என்பதில் ~பு விகுதி.

ஐ:                    தொழிற்பெயர் விகுதி.  கலை, மலை, உலை என்பவற்றிலெல்லாம்                              விகுதியாக வந்துள்ளது.    விலை என்பதில் தொழிற்பெயர் விகுதி.                                 இங்கு வினையுடன் மட்டும் சேராமல் பிற பாகங்களும்                                                        வந்துள்ளபடியால் இந்த ஐ விகுதியைச் சொல்லாக்க விகுதி                             என்று  மட்டும் குறிக்க.

பொருள்:      அணுக்கமாக நின்று நிறைவு செய்யும் ஒரு பூசை.  இங்கு அணுக்கமென்றது வழிபடுபொருளுடன் அணுக்கம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்னர்