வியாழன், 13 ஜனவரி, 2022

தூரம் என்று சொல்லின் இன்னொரு

 தூரம் என்னும் சொல்லின் புலத்தை  ஆய்ந்தபோது பல்வேறு பொருண்மைகளை நாம் சுட்டிகாட்டியுள்ளோம். எனினும் துர > தூரம் என்பதையே சிறப்பாக எடுத்துக்காட்டினோம்.  ஆயினும்,  வேறுவகைகளிலும் இச்சொல் ஆய்தற்கு வாய்ப்பளிக்கும் என்பதைக் கோடிகாட்டியிருந்தோம்..

தூரமென்பதை இன்னொரு கோணத்திலிருந்து காண்போம். எனினும் மூலச்சொல்லில் மாற்றம் இருப்பதற்கில்லை.

துரு ( துருவம்) , (துருவுதல்) எனற்பாலதே  மூலம்.

துருவம் என்பது ஒன்றன் இறுதிநிலை என்று பொருள்படும்.

நிலக்கோளத்தின் துருவம்:   இஃது  நடுநிலப் பகுதியிலிருந்து வெகுதொலைவில் கடைக்கோடியில் உள்ளது என்பது நீங்கள் அறிந்ததே.  அதனால் இச்சொல்லுக்கு வெகுதொலைவு என்ற பொருட்சாயல் ஏற்பட்டது.

துரு என்பதை அடியாகக் கொண்டு:

துரு + அம் >  தூர் + அம் > தூரம் என்றுமாகி, இடைத்தொலைவைக் குறிக்கும். அதாவது ஒரு புள்ளிக்கும் இன்னொரு புள்ளிக்கும் இடையிலுள்ள தொலைவு. எனவே, இதிற்போந்த பொருள் " தொலைவு" என்பதே.

துரு என்பது தூர் என்று திரிந்ததற்கு உதாரணங்கள்:

பருத்தல்:   பரு + வதி >  பார்வதி.

கரு என்ற நிறம்குறிக்கும் அடிச்சொல்லும் கருத்தல் என்ற வினைச்சொல்லும்:

கரு + முகில் >  கார்முகில்.

இரு என்ற எண்ணுப் பெயர்:

இரு + ஆறு + கரம் >  ஈராறுகரம்.

பெரு  + ஊர் >  பேரூர்.

துர - துரத்து என்ற சொல்லும் துரு என்ற அடிச்சொல்லுடன் பிறவித்தொடர்பு உடையதே ஆகும்.

முன் விளக்கம் இங்கு:

https://sivamaalaa.blogspot.com/2020/10/blog-post_7.html

இவ்விளக்கம் மூலம் அடிகளைப் பற்றிய அறிவை விரிவாக்கம் செய்யும் என்று நம்புகிறோம். தூரம் என்பதன் இன்னொரு பரிமிதி இதுவாகும்.

பரிமிதி -  அதிக இடம் எடுத்து அடிவைத்தல் - அதாவது  மேற்கொள்ளும் அளவு

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.



 

கருத்துகள் இல்லை: