வியாழன், 13 ஜனவரி, 2022

பொங்கல் வாழ்த்து

 மங்கலமே தங்கிடுக பொங்கல்  தன்னில்,

மண்மீது  வறுமைபசி  பிணிகள் நீங்கிப்

பங்குபெற வேண்டும்வரு இனிமை வாழ்வில்

பைந்தமிழர் உலகமக்கள் தம்மோ டொன்றாய்!

தொங்குநிலைப் பணிகளெலாம் தொடர்ந்து சென்று

துய்யநிலை எய்திடுமே  வையம் யாண்டும்

பொங்கிவரும் அன்பினிலே தோய்ந்து நின்று

பொலிந்தவுடன் பிறப்புகளாய் வாழ்க நாமே. 

கருத்துகள் இல்லை: