வெள்ளி, 30 ஜூன், 2023

ஊர், ஊர்ந்து ஊர்ந்து பெரிதாகுவது ---மற்ற பொருண்மைகள்

 ஊர் என்பது ஊர்ந்து ஊர்ந்து பெரிதாவதான குடியிருப்பிடம் என்று விளக்கப்பட்டிருப்பினும்,  ஊர்த்துதல்  ( verb) என்றும் ஒரு வினைச்சொல் உள்ளது. ஆகவே ஊர் என்ற வினைப்பகுதியை ஆய்கின்ற பொழுது இதை ஏன் ஊர் என்ற பெயர்ச்சொல்லின் தொடர்பில் விளக்கவில்லை என்ற கேள்வி எழுவது இயல்பு ஆகும்.

ஊர் என்ற சொல்,  நாகூர்,  இந்தூர், போரோபுதூர், ஜொகூர் என்று பன்மொழிச் சொற்களிலும் காணப்படுகிறபடியால்  தமிழின் தாக்கம் எல்லை தாண்டி எங்கும் காணப்படுவதொன்று என்று அறியலாகும்.  ஊர் என்பது இடப்பெயர் ஆதலினால்,  அங்கோர் வாட் என்ற சொற்றொடரில்   அங்கோர் என்பது உண்மையில் ஊர் என்பதேயாகும் என்பதும் ஊகித்தற்குரியது ஆகும்.அங்கூர் > அங்கோர்   (  அங்கு  ஊர் )

.புரி என்ற சொல்லும் இவ்வாறே  பெருநகர் குறிக்கும் புரி என்பதே.   (  நாகபுரி >  நாக்புர்  )

ஊர்த்தல் என்பதற்கு  ஊற்றுதல் என்ற பொருள் உள்ளது.

ஊர்கள் பெரும்பாலும் கொஞ்சம் மேடான பகுதிகளில்தாம் அமைக்கப்பட்டு வந்தன என்பது அறியலாம்.  இவ்வாறு நடந்தால்தான் மழைநீர்  வடிந்து ஊருக்குள் வெள்ளப்பெருக்கு இல்லாமல் இருக்கும் என்பது அறிக, இதற்கேற்ப,  ஊர்த்துவம் என்பது  மேல்  என்று பொருள்பட்டு,  மேட்டுப்பகுதியைக் குறிக்கின்றது. ஊர்த்தம் என்பதும் அது.

கால்கள் மேலெழுந்தவாறு செய்யப்படும் பத்மாசனம்,  ஊர்த்துவ பதமாசனம் எனப்படுவதும் காண்க,, உடல் தலைகீழாக மேலெழுவதனால்,  உடல்நீர்வகைகள் ஊற்றும் பாங்கில் இருக்கும்,

ஊர்த்துவம் என்பது தமிழ் மூலங்களால் ஆன சொல்.

பிற பின்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

This post is corrupted with dots.  To edit.  30062023

புதன், 28 ஜூன், 2023

உரூபன் சாருகா திருமண வாழ்த்து

 இன்று நம் வாசகர்கள்  உரூபனும் சாருகா  இருவரும் சிங்கப்பூர் மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.  இவர்களுக்கு நாம் நம் வாழ்த்துப்பாட்டினை வழங்குகின்றோம்.



 


பாரினில் பன்னெடுங் காலம்  பைந்தமிழ்

வாரியில் உருபன்  சாருகை இ ருவரும்

ஓரிணை யாகவே சீருற  நீந்தியே

யாரும்  அறிந்திடா இன்புடன் வாழ்கவே.


பேறெனப்  படும்பதி   னாறும்  பெறுகமுன்

ஏறியுச்  சிம்மலைச்  செல்வம்  அடைகநல்

ஆறு  மாறிடா  அன்பு     வழியினில்

நூறும் வெல்லுக  நுண்மதி   ஓங்குக.


சிவமாலா கவி.

பொருள்:

பார் = உலகம்

வாரி  -  கடல்

ஓரிணை -  சோடியாக

இன்புடன் -  இன்பமுடன்

பேறு =  செல்வங்கள்

ஏறியுச்   சிம் மலை---  ஏறி உச்சி மலை

நீட்டம் வேண்டின் ஓரெழுத்துத் தோன்றியது: ம்.

ஆறு -  செல்லும் வழி

நூறு   மதிப்பெண்கள்

செவ்வாய், 27 ஜூன், 2023

திருமணத்து முன் : அண்ணனுக்குத் தங்கை செய்யும் அலங்காரம் -

 
















மணத்திற்கு முந்திய மகிழ்வான நாள்,
மனத்து வாஞ்சை மாறா மணியன்ன தங்கை,
மணமகன்  கைகளில் செய் அலங்காரம்
மயில்தோகைப்  புள்ளிபோல் மாகவின் விளைத்ததே

அன்பு வாழ்க.





சனி, 24 ஜூன், 2023

நித்தத்துவம்.

 நித்தத்துவம் என்ற கடினமானதாகத் தோன்றும் சொல் காண்போம்.

நில் >  (இது கடைக்குறைந்து ) :  நி,

தன் து  ( தனது) >  த + து >  தத்து .

இரண்டையும் சேர்க்க  நித்தத்து என்று வரும்.

அம்  -  அமைதல் என்பதன் முனைப்பகுதி.    இங்கு விகுதியாய் வருகிறது.

நி + த +து + அம் >  நித்தத்துவம்.

என்றுமுள்ளது,  மாறாதது.

தன்மை என்ற சொல்லை ஒட்டிப் படைக்கப்பட்ட சொல்தான் தத்துவம்.  அம் விகுதி பெற்றுள்ளது.

தன் > தனம் ( தன் + அம்) >[  தன்னைத் தான் சார்ந்து எழுவது தனம்  ( தனதாய் நிற்கும் பண்பு) அல்லது தத்துவம் ]  எ-டு:  கோமாளித்தனம்.

தன் பொருட்கள் என்று வரும் தனம்  (தன்னவை)  என்பது வேறு சொல்.  தன்னுடன் அமைந்த பொருட்கள்.

தன் -  த  , கடைக்குறை.

து  என்பது அஃறிணை ஒன்றன்பால்,  விகுதி.   உடைமையும் குறிக்கும்.

மலைக்கும் அழகமர்ந்து  சொல் அமைந்தது.

இது ஒரு புனைவுச்சொல்.

மனிதன் தன்மகிழ்ச்சிக்கு  வேண்டிய சொற்களைப் படைத்துக்கொள்வது இயல்பு.. எக்கலைச் சார்பிலும் வரும்.  ஒரே அடியிலிருந்து எழுந்தபோதும்  வழக்கில் வெவ்வேறு பொருளைப் பெறுவன பல.  

அடிச்சொற்களும் விகுதிகள்  மற்றும் இடைநிலைகளும் விடுபடாமல் சொல் புனையப்படவேண்டுமாயின்  தன்றுவம் என்றுவரும்.  இதன் ஒலிப்பைப் பாராட்ட இயல்வில்லை.  நாம் தத்துவம் என்ற சொல்லுடன் பழகிவிட்டதனால் இப்படி உணர்கிறோம் எனல் உண்மையாகலாம். ஆனால் திட்டமாகச் சொல்லஇயலவில்லை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்







துவம்சம் என்ற இருசொல் ஒட்டு

 துவம்சம் என்பது அறிவோம்.

துவைத்தல்  -  துணி துவைத்தல்..

ஒரு மற்போரில்,  இவன் எதிரியைத் துவைத்து எடுத்துவிட்டான் என்று பேசுவதைக் கேட்டிருப்போம்.  இது ஓர் அணியியற் பாணியிலான பேச்சு ஆகும்.

இதில் இரண்டு மூலங்கள் உள்ளன.  துவைத்தல்,   அம்சம்.

துவை + அம்சம் >  துவை + அம் - சம் > துவம்- சம்>  துவம்சம்.

அமை+ சு+ அம் = அமைச்சம் > அமைசம் >  அம்சம்.

[அமிழ்த்து + சு + அம் >  அமி+ சு+ அம் > அமிசம் > அம்சம்  என்பதுமாம்.   துவைத்து அமிழ்த்தல் என்பது பொருட்சிறப்புடையது எனினும்,  பல எழுத்துக்கள் வெட்டுண்டன.  எனினும் ஆகும்.]  தகரம் சகரமாதலும் கூடும்.

ஏற்கெனவே உள்ள அம்+ சம் என்ற இடைவெட்டுச் சொல், இதில் பின்னிணைப்பாக உள்ளது.

அமைச்சம் என்பது அமைந்தது என்று பொருள்படுவது.  இது ஒழிந்த வடிவம் ஆகும். வெட்டுப்பட்டு  அதன்பின் சொல் ஒழிந்தது.

மொழி என்பது பலர் வாய் பட்டுக் கைபட்டு  உயிர்த்து வந்த நிலையில் நாம் அதனுடன் அணுக்கமாகி உள்ளோம்.  எல்லா வகையான திரிபுகளும் இல்லாவிட்டால் மொழி இல்லை.

பல்வேறு திரிபுகளும் இல்லாத மொழி, கற்பனையில் தான் உள்ளது.


சரு > சருகு > சரக்கு

 சரக்குப்புரக்கு என்று சத்தமாக ( ஒலியெழலாக) இருக்கிறது என்பது நாம் பேச்சுமொழியில் கேட்குமொன்று  ஆகும். நகரும்போது சரசர என்று ஒலியெழுப்பும் பாம்புக்கு,  சாரைப்பாம்பு என்று பெயருள்ளதையும் நாம் அறிவோம். இதற்குச் சேரை என்ற பெயருமிருப்பதால்,  சாரை><சேரை  என்னும் ஆ<>ஏ என்னும் திரிபுக்கு எடுத்துக்காட்டாகவும் இச்சொல் வரும்.  நிலத்துடன் சார்ந்து அல்லது சேர்ந்தபடி சென்று எலி முதலியவற்றை வேட்டையாடி வாழ்வதால் இப்பெயர் பெற்றது என்று கருதுதற்கும் இச்சொல் இடம்தருவது.  இதற்கு இலஞ்சி , இராசிலம், துண்டம்  என்ற பெயர்களும் உள்ளன.

காய்ந்த இலைகளே சரசர என்று ஒலி எழுப்ப  வல்லவை ஆகும்.  சரசரத்தல் என்பதும் காய்ந்தமையால் ஒலிஎழல் காட்டுவதே.

எனவே சரக்கு  ---  சரு என்ற அடியினின்று எழுந்த சொல்.  பெரும்பாலும் பச்சைக்காய் கறிகள் தவிர்த்தன காட்டும் சொல்லே  " சரக்கு" என்ற சொல்.

சருகு சுருங்கிக் காய்ந்த இலை குறிப்பதாலும்,   அஃகு  என்பது சுருங்குதல் குறிப்பதாலும்  சரக்கு என்பது  காய்ந்த பொருள் குறித்துப் பின் பொருள் சற்று விரிவடைந்த சொல். அக்கி என்ற சொல்லும் வெப்பம் குறிப்பது.  சுருங்குதலும் வெப்பத்தினால் நடைபெறும்.

சரு  + அஃகு >  சரு+ அக்கு >  சரக்கு   ஆகும்.

சருகு என்பது  சரி என்றும் வருவதால்,   சரி+ அக்கு > சரக்கு எனலும் ஆம்..

உலகில் காணப்படும் பொருட்கள் பன்முகத் தன்மை கொண்டவை.  காய்ந்தவை, பச்சையானவை என இரண்டு முன்மை வாய்ந்தனவாகும்.  இவற்றுள் சரக்கு என்பவை, காய்ந்தவை.  பச்சையை இடம்பெயர்த்தலும் காய்ந்தவையை இடம்பெயர்த்தலும் மனிதனின் வெவ்வேறு திறனையும் செய்ம்முறையையும்  எதிர்கொள்பவை ஆகும்.  அதனால் சரக்கு என்ற சொல் தேவையாயிற்று.  சரக்கு என்ற சொல் இவ்வாறு எழுந்தாலும், இதன் பொருள் பிற்காலத்து ஏற்பட்ட  விரிவினால்,  பச்சைப்பொருட்களையும்  உள்ளடக்க வேண்டியதாயிற்று. குளிர்ப்பதன முறைகள் பிற்காலத்தில் ஏற்பட்டு காயாத பச்சைப் பொருட்கள் வெகுதொலைவு இடம்பெயர்க்கப்படுதற்கு உதவியாய் மலர்ந்தன வென்பது நீங்கள் அறிந்ததே.

வியாபாரம் என்ற பொருட்கள் விலைப்பொருட்டு விரிந்து பரவும் தன்மையையும் முறையையும் காட்ட எழுந்த சொல். இதில் இரண்டு மூலங்கள் உள்ளன. வியன் - விரிவு;  பரவு: பர >பர+ அம் > பாரம்.  முதனிலை நீண்டு,  அம் விகுதி ஏற்ற சொல்.  வியன்பாரம் >  வியபாரம் > வியாபாரம்.  விர் - விரி;  விர்>விய்> வியன். (வியத்தல் என்பது உறவுச்சொல்.).  வணிகமுறையில் பொருட்களைக் கொண்டுசென்று பரப்புதல்  ( பகிர்மானம்)  முன்மையானதாகும்.


அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்

அந்தகன் ( எமன்) என்ற சொல்

 "அந்தகன் வரும்போது அவனியில் யார்துணை"  என்று  பிறப்பு இறப்பு மறுபிறப்பு  பற்றிய ஆய்வுரைகளின்  பொழுது  பேச்சாளர் வினவுதலுண்டு.  அந்தகன் என்றால் எமன் என்பது  நீங்கள் அறிந்துவைத்துள்ளதே. அப்போது தெய்வத்தைச் சிந்திக்கவேண்டும்  என்பது பதிலாக வருவது.  நாம் அலச வேண்டியது இச்சொல்லின் அமைப்பினை.

முன் இதனை நேராக ஆய்வு செய்யவில்லை என்றாலும்,  தொடர்புடைய கருத்துகளை ஆய்வு செய்துள்ளோம்.  அவற்றுட் சில அடிக்குறிப்பாகக் கீழே தரப்பட்டுள்ளன.  நேரம் இருப்பின்  அவற்றையும் படித்தறிந்துகொள்க.

இன்று  அறுந்து  என்ற எச்சவினைச்சொல்லிலிருந்து புறப்படலாம்,

அறு என்ற வினையும்  அறுந்து என்ற எச்சமும் கூட  முடிவு என்ற பொருளையே குறிப்பனவாகும்.   முன் இடுகைகளில் பல எச்சங்கள் ஆங்காங்கு காட்டப்பட்டுள்ளன.  அவ்வாறு இங்கும் காட்டப்பெறும்.  

ஆண்டவன் என்ற சொல்லுக்கும் அவ்வாறு காட்டப்பெறும்.  ஆண்டு + அவன் என்பது ஆண்டவன் என்றாகும். ஆண்டு என்பது எச்சவினை,  இங்கு பெயரெச்சம் ஆகும்.  இவ்வாறன்றி  ஆள் + து+ அ + அன் என்றும்  வினைச்சொல்லிலிருந்தும் காட்டலாம்..  இவற்றுள் தெளிவுறுத்துவது எது என்று நாம்தாம் அறிந்துகொள்ள வேண்டும்.  எதனால் எது நன்கு  விளக்கமுறுகிறதோ அதையே பற்றிக்கொள்வதில்  வழுவொன்றும் இல்லை..

இதனால்,  அறுந்து என்பதை மேற்கொண்டு,   று என்ற எழுத்தை நீக்கிவிட்டால், அது அந்து என்று வந்துவிடும்.இலக்கணப்படி இது இடைக்குறை. தொகுப்பு எனினுமது.  அந்து + அகம் + அன் =  அந்தகன் ஆகிறது.  எமன் என்பவன் நமக்கு இறப்பு விளைவிப்பவன்.  இவன் நம் உள்ளிலே உலவுகின்றான்,  இவற்றை நாம் நோய்நுண்மிகள் என்றும், கிருமிகள் என்றும் கூறுகிறோம். இது அணிவகையாகச் சொல்லப்பெறுவது.   திரிபு:  கரு >கிரு.  கிருட்டினபட்சம்,  கறுத்த பாகம்  என்பது காண்க.  கரு >  கிரு> கிருமி என்பதும் அங்கனம் விளைந்த சொல்லே.

பிறப்பு என்பது அறும் தன்மை உடையது.   ஆகவே  அறு என்ற வினையினின்று புறப்படுதல் ஒரு சிறப்பை உடையது .  எமனும் உள்ளேயே உள்ளான்;  ஆதலின் அகம் + அன் > அகன் என்பதும் பொருட்சிறப்பு உடையதாகிறது.

பாலி,  சமத்கிருதம் முதலிய மொழிகளில் எச்சவினைகளிலிருந்து சொல்லாக்கம் காட்டுவர் புலவர். அதுபோலவே இங்கும் காட்டப்பெறுகிறது. இது எளிதிற் புரிவித்தல் என்னும் உத்தியாகும் என்பதறிக.   

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்


அடிக்குறிப்புகள்:

அந்தம் அன்று முதலிய:

https://sivamaalaa.blogspot.com/2021/08/blog-post_15.html


வியாழன், 22 ஜூன், 2023

சீனிவாசன், சீனிவாசகன் என்ற பெயர்கள்

 மலேசியா சிங்கப்பூர் முதலிய நாடுகளில் வாழ் தமிழரிடையே,  ஒரு சீன நண்பரைக் குறிக்க " சீனிவாசன் எங்கே போய்விட்டார்,  இன்னும் காணவில்லையே,"  என்று பேசிக்கொள்வதுண்டு. இத்தகைய உரையாடல் தமிழ்நாட்டில் நடைபெறுதற்கில்லை அல்லது அதற்கான வாய்ப்புகள் குறைவு ஆகும்.  எங்கும் பரவலாக இருப்பவன் சீனிவாசன் என்றால்,  அந்த வருணிப்பு அவர்களுக்கு மலேசியாவில் பொருந்துவதே.  அகரவரிசையில் குறிப்பிட்ட பொருளிலேதான் ஒரு சொல்லைப்  பயன்படுத்தவேண்டும் என்பதில்லை.  காளமேகம் போன்ற கருத்தாளர்கள் - புலவர்கள்,  வேண்டியவாறு பயன்படுத்திக்கொள்வர்.

சீனி என்பது ஓர் இனிப்பரி ஆகும்,  ஆதலின் இனிமையாகப் பேசுபவர்க்கு  அவர்தம் பேச்சுக்கள் இனிமையுடையவை என்ற பொருளில்  " சீனி வாசகர்"  என்றும் சொல்லலாம்.,  வாசகர் வேறு  வாசர் வேறு என்று பொருள்வேறுபாடு கண்டு,  சீனிவாசகர் என்பதை வேறுபடுத்திக் காட்டுதலும் கூடும்.  சீனி வாசகர் என்பது " மணிவாசகர் " என்பதுபோலும் சொல்லமைப்பு ஆகும்.

அடையாள அட்டைகளில் பெயர்கள் வேறுபட எழுதப்பட்டுள்ளன வென்பதும் யாமறிவதே.

இனிச் சீனிவாசன் என்பதன் பதிவுபெற்ற, வேறுபட்ட வடிவங்களின் பொருள் கண்டறிவோம்.

ஸ்ரீ  என்பது  திரு என்பதற்கு நேரான வடிவம்.  திரு> த்ரி> ஸ்த்ரி > ஸ்ரீ என்பதில் தொடர்பினை அறிந்துகொள்க.  வேங்கடம் என்பது  திருவேங்கடம் என்று அடைமொழி கொடுத்தும் விள்ளப்படுவதாகும்.  வேங்கடத்து இறைவன் போற்றிக்கொள்ளப்படுபவன் என்பதை இதனாலறியலாம்.

அடுத்து உள்ள சொல் நிவாசன் என்பது.    நி என்பது நித்தியத்தை அறிவுறுத்துவதாகும்.  நிலைபெற்ற தென்று பொருள். மாற்றமில்லாதது.  வாசன் என்பது எளிதான சொல்தான்.  வசிப்பவன் என்பது பொருள்.  எனினும் இதற்கு சற்று மாறுபட்ட பொருளும் உண்டு.  அஃதாவது,   இலக்குமி  வேங்கடத்துள்  வாழ்கிறாள் என்பது.  இந்தப் பொருள் வெளிப்பட,  அன் விகுதி இன்றிச் சொல்வதானால்,  அது பொருந்துவதாகும்.  சீனிவாசு,  (சீனிவாஸ்)  என்பது காண்க.

திருவேங்கடத்தில்,  திருவாக நிலையாக வாழ்பவன் என்று பொருளுரைக்குங்கால்,  இடக்குறிப்பினை வருவித்துக்கொள்ளவேண்டும்..  கடவுள் எங்கும் இருப்பவன் ஆதலின்,  அஃதின்றியும் உலகில் எங்கும் இருப்பவன் என்று விரித்துரைத்தலும் ஒப்பதே  ஆகும்.  உலகில் வேங்கடமும் உளது ஆதலின் இதில் பொருள்திரிபு ஒன்றுமில்லை.  எனினும்,  இடங்களில் சில உயர்வுடையவாகக் கருதுதல் மக்கள் வழக்கு ஆகும்.

வாஸ்  என்பது வாழ்  என்பதே  ஆதலின்,   நிலைத்த திரு வாழ்நன் (நிலைத்திருவாழ்நன் )   என்பது இதன் தனித்தமிழ்.ஆகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்.


சனி, 17 ஜூன், 2023

விகாரம் பதம் என்பவை

 

விகாரம் என்ற பதம் தமிழ்

இன்று விகாரம் என்ற சொல்லை நோக்குவோம்.

இதன்  முந்துவடிவம் :  மிகாரம் என்பது.

இச்சொல் இப்போது இல்லை. மொழியின் நெடிய ஓட்டத்தில் இறந்துவிட்ட சொற்களில் இதுவுமொன்று.   (இது மீட்டுருவாக்கம்.)

இது மிகு+ ஆர் + அம் என்று பிரியும்.

மிகுதல் என்பதன் பொருளாவன:

அதிகமாதல்
மிஞ்சுதல்
பொங்குதல்
சிறத்தல்
பூரித்தல்.

ஆர்தல் என்பதன் பொருளாவன:

நிறைதல்
புசித்தல்
பொருந்துதல்
அடைதல்
ஒத்தல்
தங்குதல்
அணிதல்.

மிகரத்தில் தொடங்கும் சொல் விகரமாதல் உண்டு. இது வருக்க எழுத்துக்களுக்கும் பொருந்துவது.

எடுத்துக்காட்டு:  மிஞ்சுதல் -  விஞ்சுதல்.  மினவுதல் -  வினவுதல்.
வானம் என்பதைச் சிற்றுரார் மானம் என்று சொல்வர்.   வ>< ம.
விழித்தல் என்பதை முழித்தல் என்றும் பேச்சில் கூறுவர்;
மகரத்துக்கு வகரம் பாட்டில் மோனையாகவும் வரும்.

மிரட்டு என்பதும் வெருட்டு என்று திரியும்.  விரட்டு என்றும் திரியும்.

மிகு + ஆரம்  எனின்   அதிகமாகி, அல்லது மிஞ்சி அல்லது சிறப்படைந்து  பொருந்தும் சொல் என்று பொருள்.  மிகு என்பது விகு என்று திரியவே, விகு+ ஆரம் என்பது விகாரம் ஆயிற்று.

அதிகமாகி:    விகுதிபெற்று நீட்சி பெறுதல்.
மிஞ்சி:  எழுத்துக்கள் குறைந்து, அதன் காரணமாக மிஞ்சி இருக்கும் சொற்கள். இவை பெரும்பாலும் குறைச்சொற்கள்.  எ-டு:  மயங்குவது >  ம(யங்குவ)து = மது.  இதில் நாலெழுத்துக்கள் குறைந்தன.   கபோதி:   கண் போன திக்கற்றவன். இதில் மூன்று பதங்களில் எழுத்துக்கள் குறைந்தன. 
சிறப்படைந்த நிலை:  தப்பு + அம் >  தபு அம் >  தபம் > தவம்.  உலகியல் துன்பங்களிலிருந்து தப்புவதற்காகச் செய்வதே தபம் அல்லது தவம்.  தப்புதல் என்பது இடைக்குறைந்து தபுதல் ஆனது,  பின் தபம் > தவம் என்ற சொல் அமைந்தது.

விபுலானந்தம் :  விழு புலம் ஆனந்தம்:   வி + புல + ஆனந்தம்;  இது விழுமிய அதாவது சிறப்பான;  புலம் -  புல.  மகர ஒற்று கெட்டது. நிலப்பகுதி அல்லது பாங்கு என்பது பொருள்.  சிறப்பான இடத்து ஆனந்தமாய் இருத்தல்.  இதில் விழுபுலம் என்பது விபுல என்று இரு கடைக்குறைகள் வர,  வருமொழியாகிய ஆனந்தம் இயல்பாய் நின்றது.

ஓரிரண்டு எழுத்துக்களை எடுத்துவிட்டாலே படிப்போன் அல்லது கேட்போன் தடுமாறிவிடுவான்.

இந்தோனேசிய மொழியில் அபாங்  சொகர்னோ என்ற பெயர் புங் கர்னோ என்று சிறப்பெய்தியது காண்க.  முகம்மது சாலே என்ற பெயர் மாட்சாலே என வருதலும் கொள்க.  பிறகு வெள்ளைக்காரர்களுக்குப் பொதுப்பெயர் ஆனது.

இவ்வாறு ஆகும் சொல் மூலத்துடன் வேறுபடும்;  ஆகவே விகாரம் என்பது
வேறுபாடு என்றும் பொருள்படலாயிற்று. பல்வேறு விகாரங்களை இலக்கண நூல்களிற் காண்க.

வி என்ற ஓரெழுத்துச் சொல்லும் வேறு என்ற பொருளுடையதே.

வி + கு + ஆரம் என்றாலும்.  வேறுபாட்டில் பொருந்துவது என்பதே. இங்கு வந்த
கு என்பது அப்போது சொல்லாக்க இடைநிலை ஆகும்.

மிகுதி > விகுதி என்றாலும்,  வி + (கு) + தி =  விகுதி,   வி +( கு ) + ஆரம் = விகாரம் என்றாலும் ,   மிகு + ஆரம் = மிகாரம் > விகாரம் என்றாலும் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வேறுபாடு என்பதே பொருள்முடிபாகும். இங்குச் சொல்லாக்க இடைநிலைகளைப் பிறைக்கோடுகளுள் இட்டுள்ளேம்.

மி என்ற அடிச்சொல்லும்   வி என்ற ( விண் முதலிய சொற்களைப் பிறப்பித்த ) அடிச்சொல்லும் ,  மி > வி என்ற திரிபு வசதியும்  மேல் என்ற அடிச்சொற்பொருளும்  விகாரம் என்பது தமிழே என்பதை உறுதிசெய்கின்றன.
மி- (மிசை) = மேல்;  வி (விண் ) = மேல்.அடிச்சொற்கள் : மி வி.

வேறு என்ற  சொல் மேலை மொழிகட்கும் பரவியது;  அது  வேரி   (vary ) என்ற ஆங்கிலச் சொல்லில் தெரிகிறதன்றோ?  Also consider: prevaricate,  meaning speak or act evasively.  (Actually means speaking of something different instead of going to the point raised ).  pre-vari-cate. You may have other examples.

cf MEng variance, variaunce, fr OFr  variance  Anglo-Latin variaunce, veriaunce, wariaunce; Latin variantia.

வேறு  >  வேற்று >  வேத்து > வேத்தியாசம்  >   வித்தியாசம்  என்பதை இன்னொருகால் விளக்குவோம். வே >  வி.  Please see closeness in meaning: வே(ண்டு) :  வி(ழை).  வே - வி.    இதைப் பின் விளக்குவோம், எழுதி முடிக்கவேண்டியிருப்பதால்.

வேதம் என்பதற்குத் தரப்படும் சொல்லமைப்பையும் காண்க:   வித் > வேதம்,  வி >வே.

எனவே வேத்தியாசம் - வித்தியாசம் என்று யாம் காட்டியதில் வியப்படைவீரோ?

விகாரம் என்பதில் வி என்றாலே  வேறுபாடுதான்.   பிற விளக்கங்கள் அதன் திரிபயணம் விளக்குபவையே ஆகும்.

பதி + அம் = பதம்:  பொருள் பதிந்தது; பொதிந்தது.

அறிவோம்; மகிழ்வோம்.

வெள்ளி, 16 ஜூன், 2023

உதாசீனம் ---- சொல்லின் மூலங்கள்.

இது மதிப்பீடு வகைகள் பற்றிய சொல். 

நட்பு, உதாசீனம், பகை என்று மூன்று பகுப்புகள் கூறுவர். இவற்றுக்கு முன்,  நட்பு பகை என்ற இரண்டே பெரிதும்  கருதினர்.  ஒரு குற்றமுங் கூறாமல் ஒன்றை  ஏற்றல்,  அப்பொருளின் சிறப்பைக் காட்டும்.  ஒன்றை எதிர்கொண்ட மாத்திரத்தில் இது சரியில்லை,  அது அப்படி இருக்கவேண்டும். இது மட்டும் ஏற்கலாம் என்று பல்வேறு பகுப்புகள் செய்து பேசினால்,  அது  பகை ஆகும்.   பகு +ஐ =  பகை, அதனுட் புகுந்து பகுத்து உரைத்து இறுதியில் வேண்டாமை. இவை இரண்டே அல்லாமல்,  மூன்றாவதொன்றும் தோன்றியது.  அதுவே உதாசீனம்.

உதாசீனம் என்பதைச் சிறுமைப்படுத்தல் என்போம். உங்கள் முன் தோன்றிய ஒன்றைப்  பெரிதென்று கொள்ளாமை.  இந்தச் சொல் எவ்வாறு வந்ததென்பதைக் காண்போம்.

உது  :  அது, இது  உது  என்ற மூன்றிலும்  உது என்பது முன்னிடத்தில் வந்துற்றது ஆகும். உன் என்ற சொல்லில்,  இந்த முன்மை இருப்பதை அறிந்துகொள்ளலாம். உம், உங்கள் என்பவை பன்மை வடிவங்கள்.  உது என்பதில் து என்பது அஃறிணை விகுதியாக இன்றும் நம் மொழியில் உள்ளது. சுட்டுச்சொல் உ என்பதே.

ஆ =  ஆன என்பது

சீனம் என்பது சீன நாடு குறிக்கவில்லை.   சின் + அம் >  சீனம் ஆகும். இது முன்னிருப்பது,    ஆனால் சிறிய மதிப்புடையது,  அல்லது இருக்குமிடத்திற்கு ஏற்ற உயர்வு இல்லாதது என்று ஒதுக்கப்படுதல் ஏற்பட்டு வீழ்வது என்று பொருள். சீனம் என்பது முதனிலை நீண்டு அம் விகுதி ஏற்ற சொல்.

இது  " முன்னிருக்கலாம்  ஆனால்  முன்மை உடையதாகக் கருதத்தக்கதன்று"  -சிறியது  என்னும் பொருளினதால்,  உதாசீனம்  ஆயிற்று.

சின்னம் என்ற சொல்  இயல்பான உருவினின்று சிறிதாகச் செய்யப்பட்டது  என்பதைப் பொருளாய் உடைய சொல்.   சின்னம் என்பது இயல்பாய் நின்ற முதனிலை உடையது.  ஆனாற்  சீனி என்பது  சின்+ இ என்ற மூலங்கள் உள்ளதாய்,  சீனி என்று நீண்டு,   சிறிய துகள்களான இனிப்பரிகளைக் குறிக்கிறது.  சீனா நாட்டினின்று வருவிக்கப்பட்டதால், சீனி எனப்பட்டதென்பாருமுளர்.  சீனா என்பதன் அடிச்சொல்லான சின் என்பதும் சீன் என்றே நீண்டு நாட்டுப்பெயரானமை கண்டுகொள்க.  சின் > சீனா.ஆகவே இத்தகு நீட்சித் திரிபுகள் பிறமொழிகளிலும் வரும். [ not language-specific ]

சீனை என்ற ஒரு மூலிகை,  சிறிய வடிவினதானதனால் அப்பெயர் பெற்றது.  இங்கும் சின் என்பது சீன் என்றாகி ஐ விகுதி பெற்றது.  சீக்கல் என்பது சிறுகல்வகையைக் குறிப்பது,  பெரும்பாலும் இரும்புமண் கலந்து இயற்கையில் கிட்டுவது.   இங்கெல்லாம்  சிறு > சீர் > சீ  என்று திரிந்துள்ளது.  சீழ் வடிவது சிறு நீரினும் அருவருப்புக்குரியது,   சிறு > சீ > சீழ்.  மனித உடலின் சிறுமை காட்டும் புண்ணின் வடிநீர். சினை என்பது உறுப்பு என்னும் பொருளுடைத்து.  ஓர் உயிரிக்குள் இருக்கும் சிறிய உயிரி அல்லது விலங்கின் கரு.  இஃது இலக்கணக் குறியீடுமாகும் (. சினைப்பெயர்.)

சில் கல் >  சிற்கல் >  சிக்கல் என்பதும் கொள்க.

சில் என்பது  சின் என்பதன் அடிச்சொல்.   சில்> சீலை> சீலைவாளை.  ஒரு சிறிய வாளை வகை.  இது சொட்டை வாளை எனவும் படும்.  நம் மீனவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்க.   ( சேலை   என்பதும் சீலை ஆகுமெனினும் குழப்பம் தவிர்க ).

சில்லு என்பது ஒரு பெரிய பாறையிலிருந்து பிரிந்து பறந்துவிழும் கல் துண்டு.

சீன என்ற சொல்லுடன் தொடர்புடைய சிறுமைக் கருத்துக்கள் இங்கு விளக்கப்பட்டன.  இங்கு,   சிறுமை, சிற்றுரு,  சிறுமெய்.

நட்பே யுதாசீ னம்பகை யென்னும்

ஒப்புடைக் குறிப்பி னொருமூன் றாகும். 56

------பன்னிருபாட்டியல் ( இலக்கணநூல் ).

இது எட்டாம் நூற்றாண்டு  நூல் என்பர்

அறிக மகிழ்க

மெய்ப்பு: பின்னர் செய்வோம்,

வியாழன், 15 ஜூன், 2023

சொல்லாய்வுத் தரவியல்-- உதயமும் உதையும்

 இன்று "தை" என்ற விகுதியையும் அதன் பயனையும் அறிந்துகொள்வோம்.

உதை என்ற சொல்லில்  தை என்பது விகுதி  ( வி- மி போலி,  எனவே  பகுதியின் மிகுந்து நின்ற ஒலி என்பதாம்).  உ என்பது ஒரு சொல்,  அதன் பொருள் முன்னிருப்பது என்பது.  தை என்பதற்குப் பொருள் உண்டு. விகுதிகளிற் சில பொருள் தரும்,  சில தாரா.  பொருளை நாம் கண்டுபிடித்துப் பொருந்துமாயின் அதன் பொருள் அதுவெனலாம். இன்றேல் அஃது வெற்று விகுதி எனல் வேண்டும்.

உதை என்ற பகுதி விகுதிப் புணர்ப்புச் சொல்லின் பொருள் காலால் தொடுதல், அல்லது தாக்குதல் எனலாம். தை என்பது தொடுதல், தடவுதல், இணைத்தல் என்றெல்லாம் பொருளுடைத்து ஆதலின்,  உதை எனின், கால் முன்சென்று தொடுதல் அல்லது இடித்தல் என்று பொருள்.  உயிரிகளை இயற்கை அழகுடன் இணைக்கும் மாதத்துக்கு " தை"  என்று சொல்லப்பட்டடதால்  அது பொருளுடையதே.  தை+ இல் + அம் =  தை( இ ) ல் + அம் =  தைலம்.  இது வாக்கியச் சொற்களின் புணர்ச்சி அன்று;  சொல் உருவாக்கப் புணர்ச்சி. இங்கு இ கெட்டது. பிற ஒன்றிப் பிணைந்து  ஒரு சொல்லானது. பொருள்: ஓரிடத்து * {உடலில்) தடவும் மருந்து என்பது . இங்கு தை என்பது பொருள் உடையது.  இடைநிலை "( ~ ல்) "  இடப்பொருளது.  அம்: பொருள் உள்ளதாகவோ இல்லாததாகவோ கொள்ளப்படலாம்.  எவ்வாறாயினும் அதனால் நட்டமொன்று மில்லை.   அம் = "அமைக்கப்பட்டது" எனினும் கொள்க.  (ஏற்கலாம்.)

உதை +  அம் =  உதையம்,   ஐகாரம் குறுகி, உதயம் எனின் பொருள்கண்டோம். அல்லது  உ+ து + ஐ + அம் =  உதையம் > உதயம் என்று குறுக்கினும் பெரிதும் வேறுபாடின்மை அறிக. இவ்வாறு செய்வதில் நன்மைகள் சில காணப்படினும், இது ஒவ்வொரு சொல்லிலும் எழுவதே ஆகும்.  நாய்க்குட்டி என்றாலும் குட்டிநாய் என்றாலும் இவை பேசுகிறவன் மாற்றிக்கொள்ளும் உரிமையிற் பட்ட மாற்றங்கள்.  இவை சொல்லியலில் பேசப் பயனற்றவை.  அவற்றுள் புகோம்.

எந்த மனிதக் கூட்டமும், பேசுகையில் அவர்கள் பேசும் பாணிக்கும் சொற்றொகுதிக்கும் பெயர் வைத்துக்கொண்டு பேசுவதில்லை.  காலப்போக்கில் பெயர்கள் ஏற்பட்டு இன்று பெயர்கள் மொழிகளுடன் ஒட்டிக்கொண்டன.  சில சொற்கள் இதற்குரியன என்றும் அதற்குரியன என்றும் அறியப்பட்டாலும் அதனால் நட்டமொன்றுமில்லை.  கடனும்  (  கட்டிமுடிக்கவேண்டியது)  ஒன்றும் இல்லை.

உதை என்பது காலோடு தொடர்புபட்ட பொருளுடையதாய் இருத்தலால் அதை  வேறு பாணியிற் காட்ட விழையலாம்.  உதை என்பதிலிருந்து உதயம் வந்தபின் நாம் காலை எண்ணிக்கொண்டிருக்க வேண்டியதில்லை.  மறவாச் சிந்தனை எழுமாயின் வேறுவிதமாகக் காட்டிக்கொள்ள,   பெரும்பாலான சொற்களில் வசதி உளவாதல் அறிக.

அறிக மகிழ்க

மெய்ப்பு: பின்னர்.






to note:

உதயபானு

திங்கள், 12 ஜூன், 2023

குச்சி குறுச்சி கூர்ச்சி ( சொல்லியல் உண்மைகளும் மரபுகளும் )

 மொழி எனப்படும் தொடர்புக்கருவி,  நம் பிறப்புக்கு முன்னிருப்பது,  நமக்குப் பின்னரும் வெகுகாலம் வழங்கி மனிதர்களுக்கிடையில் பயன் தருவது ஆகும். யாரும் அதை முழுதுணர்ந்துவிட்டதாகக் கூறிவிட இயலாது. தொல்காப்பிய முனிவரே  தமக்கு முன்னிருந்தோர் சொல்லிவைத்தனவாகப் பலவற்றைக் கூறிச்செல்கின்றார். வள்ளுவனாரும்  பல கருத்துக்களிடையே,  பிறர் கூறியனவற்றையும் குறிப்பிட்டு,  அவற்றுடன் இயைந்தும் முரணியும் செல்கின்றார்.  எடுத்துக்காட்டாக,   "  அறத்திற்கே  அன்பு சார்  பென்ப  அறியார்!  மறத்திற்கும் அஃதே துணை" என்று இடித்துரை வழங்குகின்றார்.  "எண்ணென்ப, ஏனை எழுத்தென்ப, இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" என்றும் விளக்குகின்றார்.

"நான் சொல்வதே சரி"  என்று யாரும் முடிவாகக் கூறிவிடுதல் முடியாது. யாரும் முடிவென்று சொல்லியிருந்தாலும்,  அது முடிவாகிவிடாது என்பதை அறிதல் அறிவாகும்.இப்போது குச்சி என்பதையும்  குச்சு என்பதையும் இவற்றுடன் தொடர்புடைய சொற்களுடன் கண்டு சில விளக்கங்களை அடைந்து மகிழ்வோம்.  குச்சி என்பதில் கு என்பதே அடிச்சொல்.  சி என்பது விகுதி.   குச்சு என்பதிலும் அங்ஙனமே  சு என்பது விகுதி ஆகும்,  கு என்ற பகுதியின் பொருள்,  குறுகியது என்பதே ஆகும்   கு என்ற ஓரெழுத்து ஒருசொல்லின் பொருள் யாதோவெனின், அதற்கும் குறு  ( குறுகியது) என்பதற்கும் வேறுபாடின்மை அறிக.

இதைப் பின்வருமாறு மீட்டுருவாக்கம் செய்யின், பொருள் மிகத் தெளிவாம் காண்க:

குறு = கு,

குறுச்சி  : ( இது இடைக்குறைந்தால்  )  குச்சி  ஆகிவிடும்.

சி என்பதும்  சு என்பதும் விகுதிகளாதலின்,

குச்சி என்பதும் குச்சு என்பதும் ஒரு பொருளின் விரிவமைவுகளே.

இங்கு  வரும் "ச்"  என்னும் எழுத்து,  வல்லெழுத்து,  இதனை மென்மையாக்க எழுந்த சொல்லே:  குஞ்சு என்பதாகும். கோழிக்குஞ்சு கியாகியா என்று கத்திக்கொண்டு தொடுதற்கும் மிக்க மென்மையானதே.  குச்சு என்பது மெலிந்து குஞ்சு ஆனது பொருத்தமே ஆகும்.  பொருள் மென்மை உடையதாதலின் அதுவும் மெல்லெழுத்துக்களாலே குறிக்கப்படுதல் வேண்டுமென்பது தமிழ்ச் சொல்லியல் நெறியாகும். மெல்லிய பொருளைக் குறிக்குங்கால் தடபுட கடபுட என்று உருட்டுமுரடாக இல்லாமல்  குஞ்சு என்று வந்ததே சிறப்பமைவு என்பது கண்டுகொள்க.

கு என்பதிலிருந்து நேரடியாக, குன் என்ற அடிச்சொல் பிறக்கிறது. குன் என்பதிலிருந்து  சிறிதாகுதல் குறிக்கும் குன் + சு என்று இணைத்து,  குஞ்சு என்ற சொல்லை உருவாக்கியும் காட்டலாம்.    அதே தத்துவத்தை ( தன்+ து + அம்>  த + து + அம் > தத்துவம்)  அல்லது தன்மையை விளக்க,  இஃது இன்னொரு குறுஞ்சாலை  ஆகும் என்பதறிக. 

குன் > குன்றுதல்:  சிறிதாயமைவு.

கொடிநாட்டுக் குழி குறுமை உடையதாதலின்,  அதுவும் குஞ்சி எனப்பட்டது. மென்மையான கொடி தாங்கு கம்பு நிற்பிடம் இதுவாதலின் சொல்லும் மென்மை காட்டுகிறது.

குறு என்பது நீட்டப்படின்  கூற் என்றாகாது. கூறு என்பது கூடுமாயினும் அது கூர் என்று மென்மை காட்டுதலின், ஏற்புழி கொள்ளப்படும்.  அடி அகன்று இருப்பினும் நுனி குறுகியே கூராதல் கூடும்.  கூரான கால்களை உடைய சிறு இருக்கை கூர்ச்சி ஆகிப்   பின் குருச்சி ஆகித் திரிந்தது.  இதில் வரும் குரு என்பது ஆசிரியன் என்று பொருள்படும் குரு என்பதனுடன் தொடர்பிலாதது, கூர் என்பது குரு என்று திரிந்தது.  முற்படக் கூரியது எனவாகும் பொருளில் கூரியம் > குரியம் >  குயம் என்பது பெண்ணின் மார்பகம் குறித்தது,  நெடில் குறுகியதும் இடைக்குறை கொண்டதும் ஆன சொல்.

குச்சு  இல் என்பது குச்சில் ஆகிச் சிறு வீட்டைக் குறித்தது.

தொடர்புடையன  பிற, பின்னொரு நாள் எடுத்துக்கொள்வோம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்.

பார்வை: 13062023

வெள்ளி, 9 ஜூன், 2023

சாரங்கபாணி என்ற பெயர்.

 சாரங்கம் என்பது பல்பொருள் ஒருசொல்.

இச்சொல்லை  அறிந்துகொள்வோம்.

சாரங்கம் என்பது  எய்கூர்குச்சியைக் குறிக்கிறது. இதை அம்பு என்று கூறுகிறோம்.  தொடக்கத்தில் குச்சிகளை எய்திருப்பர்.  பின்னர் அது வளர்ச்சியடைந்து ஓர் உயர்நிலை நண்ணி "அம்பு"  ஆனதென்பது உண்மை.

மனிதன் தனக்கு வேண்டியவற்றைத் தானே பண்ணிக்கொண்டான். அம்பு செதுக்கிச் செய்யப்பட்டதால் அல்லது பண்ணப்பட்டதால்,   பண்(ணு) + அம்=பாணம் ஆனது,  தொலைவிலிருந்தே விலங்குகள் முதலியவற்றை வீழ்த்த அறிந்த அவன் மனமிக மகிழ்ந்து பண்ணி முடித்த பெருமையில் " பாணம்" என்றான். பாணம் என்பது முதனிலை நீண்டு அம் விகுதி பெற்ற தொழிற்பெயர். தொழிற்பெயர் என்பது ஒரு வினைச்சொல்லிலிருந்து பெறப்பட்ட பெயர்.  படு என்ற சொல் பாடு (தொ.பெ) என்று நீண்டு பெயரானது போன்றதே இது.  பண்ணப்பட்டவெல்லாமும் பாணம் ஆகாமையின்,  இது ஒரு காரண இடுகுறி ஆகும்.  பாணி -  பாணம் ஏந்தியோன்,

பாணம் என்பதற்கு வேறு சொல்லாக்கம் கூறப்பட்டிருப்பது காணினும், இதுவே அதன் சொல்லமைவு ஆகும்.

அங்கு இருக்கும் ஒன்றைச்  சாட வேண்டுமென்றால், எய்யும் செதுக்கிய கூர்குச்சிக்கு என்ன சொல்வது? அது "சாடு+ அங்கு+ பாணம்"  ஆயிற்று.  சாடு என்ற சொல்லின் டுகரம்  ருகரமாகும்,  சாரு ஆயிற்று.   சாரு அங்க பாணம் ஆனது.  மடி என்பது மரி  ஆனதுபோல்,  சாடு என்பது சாரு ஆனது.  இத்தகை திரிபுகள் பல உள. அடுத்து இருப்பது  அருகில் இருப்பது என்னும்போது டு ரு ஆனது காண்க.  முன் இடுகைகளில் பல காண்பீர்.  அங்கு என்பதில்  உகரம் கெட்டு  அங்க ஆனது. அங்கே  அல்லது அங்க  சென்று தாக்கும் பாணம்.

சேருதல்  சாருதல் என்பனவும் சேர்தல் கருத்தே ஆகும்,  இதன் மூலமும் இதை விளக்கலாம்,

ஒரு புதுக்கதையை அல்லது வரலாற்றை எழுதுகையில் புதிய சொற்களை அமைத்துக்கொள்ள பல உத்திகளைக் கையாளலாம். அறியாதவனைத் திக்குமுக்காடவும் செய்யலாம். எல்லாம் பண்டையர் திறமைதாம்,

அம்பு என்பதும் அங்கு சென்று புகுவது என்ற பொருள் உடைய சொல்தான். பு விகுதிக்கு  குறிப்புப் பொருளும் கூறலாம்,  சாரங்க பாணி என்பதிலும் இக்கருத்து உள்ளது.

அ என்பது அங்கு என்று பொருள்படும் சுட்டு.   அம்பு  -  பு என்பது விகுதியும் புகுதல் பொருளதான குறிப்பும் ஆகும். சொற்கள் சிலவற்றில் விகுதிகளும் பொருள் குறிப்பன. அன்பு என்பது அணுகி (  நெஞ்சில் ) புகுதல் என்று பொருளாக்கம் செய்துகொள்ளத் தக்கதே.  அன், அண் என்பன பொருளொன்றானவை.  அனுபந்தம் -  அணுக்கமாகப் பற்றியுள்ள  இணைப்பு.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

வெள்ளி, 2 ஜூன், 2023

பழச்சோலையும் பாதுகாப்பும்.

 




"பழச் சோலையில் பிடுங்கித் தின்னப்  பலர் வருவார்கள்" என்பது பொருளாயினும், காத்துக்கொள்வது தோட்டக்காரனின் கடமையும்  ஆகும்.



அகநானூறு. 109 :  மரச்சோலை

பல் இதழ் மென் மலர் உண்கண், நல் யாழ்
நரம்பு இசைத்தன்ன இன் தீம் கிளவி,
நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊரே
கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டிக்
காடு கால்யாத்த நீடு மரச் சோலை . . . . 
.......................................................................
அறன் இல் வேந்தன் ஆளும்
வறன் உறு குன்றம் பல விலங்கினவே .

எனக் கண்டு,   பழச்சோலை என்பதும்  ஆம்  என்று  கண்டுகொள்க.

Edited: 12062023 1452