புதன், 28 ஜூன், 2023

உரூபன் சாருகா திருமண வாழ்த்து

 இன்று நம் வாசகர்கள்  உரூபனும் சாருகா  இருவரும் சிங்கப்பூர் மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.  இவர்களுக்கு நாம் நம் வாழ்த்துப்பாட்டினை வழங்குகின்றோம்.



 


பாரினில் பன்னெடுங் காலம்  பைந்தமிழ்

வாரியில் உருபன்  சாருகை இ ருவரும்

ஓரிணை யாகவே சீருற  நீந்தியே

யாரும்  அறிந்திடா இன்புடன் வாழ்கவே.


பேறெனப்  படும்பதி   னாறும்  பெறுகமுன்

ஏறியுச்  சிம்மலைச்  செல்வம்  அடைகநல்

ஆறு  மாறிடா  அன்பு     வழியினில்

நூறும் வெல்லுக  நுண்மதி   ஓங்குக.


சிவமாலா கவி.

பொருள்:

பார் = உலகம்

வாரி  -  கடல்

ஓரிணை -  சோடியாக

இன்புடன் -  இன்பமுடன்

பேறு =  செல்வங்கள்

ஏறியுச்   சிம் மலை---  ஏறி உச்சி மலை

நீட்டம் வேண்டின் ஓரெழுத்துத் தோன்றியது: ம்.

ஆறு -  செல்லும் வழி

நூறு   மதிப்பெண்கள்

கருத்துகள் இல்லை: