வியாழன், 30 நவம்பர், 2023

வான்மழை

 வாழ்கென வரமருள் குளிர்ந்த மழைத்துளி, 

வீழ்கென மகிழ்தரு ஆழ்மனம்  வாழ்கநீ!

உடலில் வீழ்கென ஓடிமுன்  நிற்க,

படலும் குன்றியப்  பெயலும் நின்றது;

வானம்  நீயே வரையாது  வழங்குவை

கானம்  இசைத்தனை கடுந்தரை மோதலில்;

ஏன் நின்  றனைநீ   ஏற்றிடு  நீயே

நான்முயல்  வேனே நனிஇன்   னொருநாள்

கூன்படு நோக்கு குறைத்தே

நnன்மகிழ்ந்திடவே  நனைத்திடு  கவினே.


இந்தக் கவிதை என்ன சொல்கிறது என்பதை உங்கள் கருத்துரையில் எழுதுக. இதற்கு முன் எழுதியுள்ள பொருள் தேடி எடுப்போம்.

செயற்கை மழை பெய்வித்தல் முதலியவை இக்காலத்தில் உண்டாதலால், வான்மழை என்பது பொருத்தமான தலைப்புதான்.

புதன், 29 நவம்பர், 2023

சன்னுத என்ற சமஸ்கிருதச் சொல் அமைப்பு

 வெகுசுருக்கமாக,  சன்னுத என்னும் சொல்லை அறிவோம்.

சன்னுத:

தன் என்பது சன் என்று வரும். இது தகர சகரப் போலி.

எ-டு:  தனி  - சனி. தனிச்சிறப்புடைய கோள்.

             தங்கு -சங்கு  ஓர் ஓட்டுக்கூட்டினுள் தங்கி வாழ்வது.

அ, இ, உ மூன்றும் சுட்டு.

உ - முன்.

உது -  முன்னது, முன்னிருப்பது.

உத -  முன் அங்கிருப்பது.   உ, து,  அ.   (அ என்றால் அங்கிருப்பது.)

முன்னதாய் அங்கிருப்பது.

நாரத சன்னுத -  நாரதன் உன் முன்னிருப்பதான என்று பொருள்.

பாணினி இலக்கணத்தின்படி இது வேறு விதாமான விளக்கம் உடையது,

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

செவ்வாய், 28 நவம்பர், 2023

Dog's love for the child.

 


When the dog is with the child
The world is so peaceful; 
The child is soft and mild.
 Combs the fur  being 'teaseful'.






This little dog is happy when the child sits on her head, even though it has to bear the weight.

Well, when you like it, there is no problem!



A real friend......this dog.



Sweets for the sweet pet.

திங்கள், 27 நவம்பர், 2023

உச்சரித்தல் என்ற சொல் அமைப்பு.

இங்கு இது புதுவதாய்  ஆராய்வோம்.

உது  என்பது சுட்டடிச் சொல்.  உகரமுதலானது.

உது என்றால் முன்னிருப்பது, முன் கொணர்வது என்று பொருள்.

உது  >  உத்து.

இங்கு தகரம்  இரட்டித்தது.   அதாவது து என்பது த்து என்று அழுந்தி வெளிவந்தது.   அது என்பது அத்து என்று தோன்றிச் சிலவிடத்துச் சாரியையாவும் வருதல் போலும்.

உத்து: பொருள் "முன் கொணர்ந்தது."

உத்து > உச்சு.  இது தகர சகரத் திரிபு அமைதல்.

இனி  அரு என்றால் அருகில் இருப்பது   

அரு  + இ :  >  அரி.    அருகில் இடுதல், வைத்தல். 

உச்சு + அரு + இ  >  உச்சரி >  உச்சரித்தல் ( வினைச்சொல்_-)

முன் கொணர்ந்து  அருகிலாக்குதல். defining for you.

நாவின் மூலம் முன் கொண்டுவந்து அருகிலமைத்தல்.

முன் இதன் ( அரு + இ) பொருண்மையை ஆய்வறிஞர் சிலர் கண்டுகொள்ளாமல் விலகிச் சென்றுவிட்டதால்  இது  விளக்கமுறா தொழியலானது. இதனை இங்கு உளப்படுத்தியுள்ளோம். இது கணக்கில் விடுபாடு போலவே. 

Pro-nounce என்பதில் உள்ள முன்னொட்டும் இப்பொருளதே என்பது மகிழ்விக்கிறது.

உ - முன்மைப் பொருள்.

அரு இ - அண்மைப் பொருள்.

இரட்டைப் பொருத்தம் ஆகிவிட்டது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

லதா தமிழ்

 இலையைத் தருவது கொடி.

இலை  >  ல.

தரு(வது)  >   தா.

ல+ தா >  லதா.  என்றால்  இலையைத் தரும் கொடி.

தமிழ் மூலம் மெய்ப்பிக்கப்பட்டது.

பேச்சு :

இலை -  எல - ல (என்று பலுக்குவர்.)

தரு  -  வினைப்பகுதி.  தா  என்பது ஏவல்வினை

பலுக்குதல் - உச்சரித்தல்.


அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்.

கணபதியை வணங்கி வரப் பொறுத்தருள்க

ஐஞ்சீர் விருத்தம்





இந்தப் படத்தில் அம்மன் இயல்பாக உள்ளார்



 நீயே  பணிந்தேன்  சிரித்தாய் இன்றேன் கவலைமுகம்,

தாயே எளியேன் எதுவும் செய்தேன் ஏலாததோ

வாயே  திறக்கத் துணிவே இல்லேன் நாலுதிசை

ஆயும்  கணங்கள்  பதிகால் வீழ்வேன்  பின்சரணே.


பணிந்தேன்,  நீ சிரித்தாய் ---  முன்னர் பணிந்தக்கால் நீ சிரித்தாய்.

இன்றேன்  கவலைமுகம்  -  இன்றைக்கு ஏன் கவலை தோய்ந்த முகத்துடன்

இருக்கின்றாய்;

வாயே  -  உன்னை வாழ்த்துவதற்கு வாய்.

திறக்கத் துணிவே இல்லேன் -   பயன்படுத்தவும் துணிச்சல் இல்லாதவன் ஆனேன்;

நாலுதிசை ஆயும் கணங்கள் பதி -  நான் கு திசையும் ஆட்சிசெய்யும் கணங்களின் அதிபதி,  

கால் வீழ்வேன் -  அடிகளைப் பணிவேன்,  

பின் சரணே -  பின் தாயாகிய உன்னிடம் சரண் புகுவேன்


இது துர்க்கை அம்மனை நோக்கிப் பாடிய பாட்டு.



சனி, 25 நவம்பர், 2023

At Durgai Amman Temple Singapore

 After worshipping Sri Sivan,  devotees worship Sri Durga for spiritual peace and grace.








எமையாளும் இறைவிநீ  துர்க்கை யம்மா

என்றும்நீ  துணைசெய்வாய் எம்மில் நின்றே

சுமையாக வருந்துன்பம் சுருண்டு வீழச்

சோர்வகற்றிக் கூரறிவு சூழத்  தந்தாய்!


--- சிவமாலா


வெள்ளி, 24 நவம்பர், 2023

தீபாவளியும் அதற்கான விளக்கங்களும்

 தீபாவளியைப் பற்றிய விளக்கங்கள்  உலகிற் பல  உள்ளன. சமண மதத்தினர்  கூறும்  விளக்கம்  ஒன்று, புத்த  மதத்தினர் சொல்வது  இன்னொன்று, இந்து சமயத்தினர் கண்டது வேறொன்று, வரலாறு சொல்ல வருவோன் வரைந்து வைத்தது மற்றொன்று என்று இவை பலவென்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இவை அனைத்தையும் படித்துப் பேசிக்கொண்டிருப்பது  சிலர்க்கு வாடிக்கையும் வேடிக்கையும் ஆகும்.

மற்றவன்  சொல்வதுதான் உம்மை ஆளும் தன்மை உடையதா? அவன் சொல்வது எதுவாயினும்  உமக்குச் சொந்தப் புத்தி இல்லையா என்று  எண்ணிப்பார்த்தால் உமது வலிமையின்மை உமக்கு விளங்கிவிடும். 

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்

உண்மை அறிவே மிகும்  

என்றார்  தேவர் தம் இனிய  திருக்குறளில்.

இதன் பொருளை மணக்குடவர் என்னும் பண்டை உரையாசிரியர் சொல்லும் உரையுடன் உற்றுநோக்கி அறிவோமாக.

மணக்குடவர் உரை: நுண்ணியவாக ஆராய்ந்த நூல்கள் பலவற்றையுங் கற்றானாயினும், பின்னையும் தனக்கு இயல்பாகிய அறிவே மிகுத்துத் தோன்றும் என்றவாறு.

மேல் அறிவிற்குக் காரணம் ஊழ் என்றார். அஃதெற்றுக்கு? கல்வியன்றே காரணமென்றார்க்கு ஈண்டுக் கல்வியுண்டாயினும் ஊழானாய அறிவு வலியுடைத்தென்றார்.

ஊழ் என்ற சொல் பொருண்மை கருதுங்கால் சிலருக்கு மருட்டுவதாக இருப்பினும் இதன் அடிச்சொல் உள் என்பதுதான்.  ஒருவற்கு அவன்பால் உள்ளிருப்பது எதுவோ அதுவே ஊழெனலாகும். இதைத்தான் தெளிவு மிக்கில்லாதது என்று எண்ணப்படும்  சொல்லாகிய விதி என்பதும் எடுத்துச்சொல்லும். முன்னரே எது அகற்றற்கு இயலாததாகி ஒருவன்பால் உள்ளதோ அது விதி. சாலையைக் கடக்கையில் கவனமாய் இருக்கவேண்டும் என்பது கடமை. அது தவறின் இடர் விளையும். விளையின்  அது விதி எனப்படும். இதில் விளைவன யாவும் -  மரித்தல் உட்பட -  விதியினுள் அடங்கும்.   கணியத்தின் வழி இது முன் கூறுதற்  கியல்வதாயின் அதுவும் விதியே. இவ்வாறு விதி என்பது விரிவுடைப் பொருளதாகிறது. ஆகவே ஊழென்பது உண்மை அறிவு.  அடிப்படை அமைவு என்றும் கூறலாம்.

[ கணியம் என்பது சோதிடத்தை.]

எதைப் படித்தாலும் அவனுள் இருப்பதை வைத்துதான் அவன் பேசுவான். இதைப் புத்தி என்று சிலர் நினைத்தாலும்,  அஃது உண்மையன்று. புத்தி என்பது புதுவதாய்த் தோன்றி வழிகாட்டும் அறிவு. உண்மை அறிவு என்றால்  முன்னரே உளதாகிய அறிவு. புதுமுறை அறிவு பரப்பியதால் கௌதமருக்குப் புத்தர் என்று பெயர் வந்தது. இவரை இவ்வாறு கூறியோர் தமிழர் என்பது தெளிவு. 

உண்மை அறிவுக்கு மாறானது புத்தறிவு. (  புத்தி ).

புதிய நடப்புகளில் எவ்வாறு நடந்துகொள்வது என்று தெரிந்து நடப்பது புத்தி.

தீபாவளி என்பதற்கு இவ்வாறு நோக்கினால் பலவிதமாகப் பொருள் கூறலாம். தீயை முதன்முதல் உண்டாக்கக் கற்றுக்கொண்டு, காற்றின் துணைவலிமையைப் போற்றிக்கொண்டு வாழ்வதற்கு மனிதன் அறிந்துகொண்ட தினத்தைக் கொண்டாடுவதுதான் தீபாவளி.  தீ எரிகையில் பாயும் வளி. அதைக் கட்டுக்குள் வைத்துப் பயன்படுத்திக்கொள்ளும் தன்மை எல்லாமும்  அவனுக்குக் கைவந்த நாள் அதுவாகும்,  தீப ஒளி என்பதும் நல்ல பொருள்தான்.  எப்படியாயினும்  இது இயற்கையும் தொடர்புடைய ஒரு பண்டிகை என்பது தெளிவாகும்.  இதில்  ஆரியன் என்று யாரும் தொடர்புபட வில்லை. உம்முடன் தொடர்பு கொண்டவை தீயும் காற்றுமே ஆகும். பொங்கல் என்பதற்கு பொங்குதல் தொடர்பாவது போல் எரிதலும் காற்றும் தீபாவளிக்கு உரியனவாகுகின்றமை தெளிவு.  வட இந்தியாவின் டி-வளி என்பது இதற்கு மிக்கப் பொருத்தமுடையதாகிறது.  உமக்குப் பொருந்தியவாறு சிந்தித்து வாழ்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

சோதிடம் என்ற சொல்:  சொரிதல் வினைச்சொல். சொரி + தி > சோர்தி  > சோதி.  சொரியும் ஒளி.  எப்படி ர் போகும்? இப்போது பாரும். வரு > வார் > வாருங்கள்> வாங்க. எங்கே போனது  'ர்'? இதே போல் எழுத்து மொழியிலும் பல . கேளும் சொல்வோம். பழைய இடுகைகளைப் பார்த்துப் படித்ததுக்கொள்ளுவீராக.
.

கிராமம். சொல்லமைப்பு

 கமம் சொல்:

கமம் அல்லது அதன் அடியாக உள்ள கம் என்ற  ஈரெழுத்து ஒரு சொல், இன்று வழக்கில் இல்லை.  இதைப் பழைய நூல்களில் ஈரெழுத்து ஒரு மொழி என்பார்கள்.  மொழி என்ற சொல்  இந்நாட்களில்  language  என்ற  பொருளில் வழங்குகிறது.  அதனால் மொழி என்பதைச் சொல் என்பதற்கு ஈடாக இங்குப் பயன்படுத்தவில்லை. இற்றை மொழி  பெரிதும் மாறுபட்டுள்ளது.  புறநானூற்று மொழியில் எழுத முடிந்தாலும் எழுதினால் பொருள் மாறுபட்டு அறியப்படலாம் ஆகையால்  தவிர்த்தலே நன்று.  பொருள்கூறுதற்குரித்தான வாய்ப்பில் கூறுதல் ஏற்புடைத்தாகலாம்,

கமம் என்ற சொல்லின் பகுதி அல்லது அடி,  கம் என்பது.  இது கும் என்பதன் திரிபு என்று சொல்வதும் ஏற்புடையதே,   கும், குடும் , ( குடுமி) ( குடும்பம்) , கும்> கம்  >  கமம்  என்று புரிந்துகொள்க.  அகர வருக்கச் சொற்கள் ஒன்று மற்றொன்றாக மாறும் தன்மை உடையன. பழைய இடுகைகளில் கண்டு தெளிக. அகர வருக்கம் என்றால்  அ முதல் ஔ வரை உள்ளவை.

அடு  குடு என்பவற்றில் பொருள் அணிமையையும் கருத்தில் கொள்ளவேண்டும்.  அடுத்துச் செல்வது முன் நடப்பது.  குடு>  கூடு என்பதில் அடுத்து செல்லும் எதுவும் கூடித் திரள்கிறது என்பதை உணர்ந்தால் இவற்றில் உள்ள பொருள் அணுக்கம் தெரிந்து விடுவதோடு  திரிதன்மைகளையும் உணர்ந்து கொள்ளலாம்.

க என்பது க்ர என்று பூசைசெய்வோர் மொழியில் திரியும்.  இது இயல்பு.. பிற புற என்பன ப்ர என்றாகும்.  "புற கு ஆரம்"  என்றால் புறத்தே இணைந்து சூழவருதல்.

ஆர்தல் என்றால் சூழ்வருதல்.   ஆர் > ஆரம்.  அம் விகுதி பெற்ற சொல்.

மறைமொழி மக்கள் தாம் கூறுவன தெளிவு தேடியறியத் தக்கனவாய் இருத்தலை விரும்புதல் உலகெங்கும் காணப்படுவது ஆகும்.  மலாய் சீனம் என்று எம்மொழியாரிடமும் இது காணப்படுகிறது. இது அவர்களின் பெருமைப்படக் கடைப்பிடிக்கும் நடவடிக்கை.  நிறைமொழியார்க்கு மறைமொழி உயர்வாகும்.

கீழ்க்காணும் இடுகையைப் படித்து மேலும் அறிக.

குறிப்புகள்:

கிராமம் முதலிய சொற்கள்: 

https://sivamaalaa.blogspot.com/2020/01/blog-post.html

வியாழன், 23 நவம்பர், 2023

காக்கைகுத் தெரிந்த கடவுள்

(இணைக்குறள்  ஆசிரியப்பா.) 

இது சில அடிகள் குறைந்தியன்ற ஆசிரியப்பா.


பதுமநா  பசாமி கோவில்  திருமுன்

ஒதுங்கி நின்ற நோயுற்ற காக்கை:

சாமியை  நோக்கி

தவம்செய நிற்பது  போல்நிற்   கிறது.

என்ன  வென்று  வினவலாம் என்று

முன்னில்  அணுகிட

ஒன்னும்  விளங்க  வில்லை.

என்னவோ விண்ணப்பம் 

தெரியவும் இல்லை.

எனக்கேன் தெரிய   வேண்டும் என்று

தனக்குள் நினத்துக் கொண்டதோ?

விரட்டினாலும் போகவும்  இல்லை. 

கடவுளை அறிந்தது காக்கை,

மடமுறு மனிதன் தடமறி  யானே


பொருள்:

( மிரட்டு விரட்டு)

திருமுன் - சந்நிதி முன்.

பதும நாப -  பத்ம நாப

மடமுறு -  அறியாமை கொண்ட

தடம் -  செல்நெறி.  போகும் பாதை.



செவ்வாய், 21 நவம்பர், 2023

கிரகம் என்ற சொல் அமைப்பு

 கிரகம் என்பது இரகம் என்பதன் பிரிப்புத்திரிபு  ஆகும்.

இரு  அகம் -  இரகம் -  கிரகம்.

இருப்பதற்கான அகம் என்பது வீடு.  அதுதான் இரகம்.

கார் இரு அகம் -  காராகு இரு அகம் -  காராகிரகம்,  ~ கிரகம் ஆனது.

பிரித்ததில் வந்த சொல்.  பிறழ்பிரிப்பு  என்னலாம்.

இரகம்  ( இருஅகம்,  இருக்கும் வீடு)  என்பது  அக்கிரகாரம் என்ற சொல்லிலும் உள்ளது;  https://sivamaalaa.blogspot.com/2016/06/blog-post_86.html

அஃகு + இரக(ம்) + ஆர்(தல்) + அம்>  அக்கிரகாரம்.[ ஃ இங்கு  க்  ஆனது. ]

குறைந்த மனைகள் உள்ள பகுதி.  சிறிய சுற்று எல்லை உடையது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

திங்கள், 20 நவம்பர், 2023

மோடி -எழுந்த சூரியன் கோழிக்குத் தெரியவில்லை

முன்-னரே எழுந்-ததே மோ-டிஎன் சூ-ரிய-னும்

இன்-னுமே இரண்-டுமூன் றாம்-சே வல்-கூ-வின,

ஒண்ணுமே புரிந்தி( ல்)லை கோ-ழிகள் ஆ-றறி-வை

என்றுமே பெற்றுய்ய அன்றிறை வைத்ததிலை.




பொருள்:

முன்னரே - பொழுது விடிந்துவிட்டது என்பது.

சேவல்கள் இன்னும் விடியவில்லை என்று நினைத்தன.

கோழிகள் அறிந்துகொள்ளத் திறனில்லை என்பது

எழுந்த சூரியன் -  உதய சூரியன்.

புரிந்திலை - புரிந்து இல்லை

வைத்ததிலை = வைத்ததில்லை

ஒண்ணுமே - அறியத் தக்கனவற்றில் எதையுமே.

என் சூரியன் -  என்னும்  சூரியன்.  வினைத் தொகை. 

பெற்றுய்ய - அடைந்து முன்னேற

இறை - இறைவன்.


அறிகமகிழ்க

மெய்ப்பு பின்னர் 

This post was hacked now restored 20.11.23

இரண்டாவது முறையாகத் திருத்தம்: 21.11.23

வெள்ளி, 17 நவம்பர், 2023

ஐஸ்வரியம் சொல்லெழுந்த விதம்.

 இதைச் சுருக்கமாகவே சொல்லிவிடுவோம்.  ஐஸ்வரியம் என்ற சொல் முன் ஒருக்கால் எம்மால் விளக்கப்பட்டது எனினும்,  அது நீக்குண்டது.  இது கள்ளப் புகவர்களாலோ மிகுதியாகிவிட்ட  இடுகைகளைக் குறைக்க வேண்டி நேர்ந்ததாலோ இருக்கக்கூடும். பழைய இடுகையை நீங்கள் பதிவிறக்கி வைத்திருந்தால், இங்கு சொல்லும் உள்ளுறைவுடன் ஒப்பிட்டுக்கொள்ளுங்கள். வினாக்கள் எழுந்தால்,  கருத்துரைப் பகுதியில் எழுதி, எம்மிடம் விளக்கம் பெற்றுக்கொள்ளலாம்.

ஐஸ்வரியம் என்பதில் மூன்று பழந்தமிழ் உள்ளீடுகள் உள்ளன.  ஆசு,  வரு-தல்,  இயம் என்பவை  அவை.

ஆசு என்பது பற்றுக்கோடு.  இதை இன்று ஆதாரம் என்ற சொல்லால் குறிக்கிறோம்.  அதாவது பொருளாதாரம்,  இனி  வருதல் என்பது உங்களுக்கு வரும் செல்வம்,  இயம் என்பது இ,  அம் என்ற விகுதிகள்.

இங்கு விகுதிகட்குப் பொருள் கூறலாம்.  இ  -  இங்கு.  அம்  -  அமைதல். சேர்க்க இயம் ஆயிற்று,

ஆதல் என்பது  ஆசு என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது.  பொருள் ஆதல் என்பது ஆக்கம் எனவும் படும். ஆசு என்பது ஆதல்தான்.  சு என்பது ஒரு விகுதி.  பெயர் வினைகளிலும் வரும்.   மாசு,  ஏசு எனக் காண்க.

வரியம் என்று முடிதலால்,  பொருள் வரவே இதன் பொருள். வருவதும் செலவாவதுமாக இல்லாமல் நின்று நிலவும் பொருட்திரட்சி என  அறிக.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

வியாழன், 16 நவம்பர், 2023

பத்துக்குமேல் வாங்காத (தயங்கிய) பழங்காலப் பூசாரிமார்.

 

பத்துக்கு மேல் தயக்கம் -  எண் வரலாறு


மிகப் பழங்காலத்தில், மனிதனுக்கு எண்ணத் தெரியவில்லை.  அவனுக்கு - பழம் எத்தனை பறித்தான்,  முயல் எத்தனை வேட்டையாடினான் என்று இவற்றை அறிந்துகொள்வதற்கே  எண்கள் தேவைப்பட்டன. அரிசி முதலிய கூலங்களை ஒன்றாகக் கூட்டி, பெரிய இலைகளில் எடுத்துக்கொண்டு அப்படி எடுப்புற்றவற்றைக் கொண்டே எண்ணிக்கை கூறினான் ( எ-டு: ஒரு கட்டு அல்லது ஒரு மூட்டை).  விரிந்த இலைபோல்வதற்கு ஒரு மூட்டுப்போட்டுக் கட்டி,அதைத்தான் "மூட்டை"  என்றான்.  மூட்டு இடப்பட்ட விரி அல்லது விரிப்பு என்று இதை இன்று உணர்ந்துகொள்கிறோம்.

ஒன்பதின் மேற்செல்ல அவன் தயங்கினான் என்பதே உண்மை.

எண்கள் அப்போதுதான் அமைந்துகொண்டிருந்தன.

மரங்களிலும் குகைகளிலும் குடி இருந்த காலத்தில் எங்கேயோ  இன்னொரு மரத்தடியில்தான் பூசை ( பூசெய்)  நடைபெற்றது.  வருகிறவர்களெல்லாம் எளிதாக ஆளுக்கொரு பழம் கொண்டுவந்து சாத்தினால், பூசாரி என்ன செய்வான் பாவம்.  வைத்துக்கொள்வதற்கு  வசதிகள் எதுவும் இல்லை. ஒன்று அவன் எல்லாவற்றையும் சாப்பிட்டுவிடவேண்டும்.  அல்லது பக்கத்தில் திரியும் ஆடுமாடுகளுக்கு ஊட்டிவிட வேண்டும்.  அல்லது உரமாகப் பாவித்து மரத்தடிகளில் போட்டுவிடவேண்டும்.  அவன் தயங்கியதற்கு அதற்குரிய எண் இல்லாதது மட்டும் காரணமன்று.  பற்பல காரணங்கள்.  எல்லாம் சொன்னால்தான் நம்புவீரென்றால் அதற்காக ஒரு கட்டுரையை எழுதவேண்டும்.  ஆகவே நம்புவது நல்லது.  ( நம்பினார் கெடுவதில்லை!) 

ஒன்பதின் மேல் கொஞ்ச காலம் பல என்று சொல்வதே அவனுக்குப் போதுமானதாக இருந்தது.  அது அவனின் "தயக்கத்தையே"  இன்று காட்டுகிறது.  நாளடைவில் ஒருவாறு  பல்+ து  ( பல-து)  என்பதையே பத்து ஆக்கிக்கொண்டு ஓர் எண்ணை உண்டாக்கிக்கொண்டான்.  இன்றளவும் அது தமிழில் நன்றாகவே வழங்கிவருகிறது.

பூசைகள் செய்யும்போது மட்டும் அந்தத் தயக்கம் அவனுக்கு ஏன் மேலிட்டு நின்றது ?  தயங்கும் எண் என்பதைக் காட்ட  அவன் தயம் என்றே அதைச் சொன்னான். தய + அம் = தயம்.   ஓர் அகரம்  ஒழிந்தது.   பகு அம் >பகம் என்பதில் ஓர் அகரம் தொலைந்தது போலுமே.  வேறுபெயர் ஏதும் வைக்காமல்  தயம்>  தசம் என்பதையே பத்துக்கு மேற்கொண்டது  ஒரு குறுக்குவழியே  ஆகிவிட்டது. இன்று சிறந்த எண் பத்து, தசம் என்பவை ஆகும்.

தய- தயங்கு.

த - தடை கொண்டு நிற்பது,   அ>ய:  ஆங்கு என்று பொருள்.

த டு:  இதில் டு என்பது வினையாக்க விகுதி.  படு,  விடு என்பவற்றிலும் வினைவிகுதியே  ஆகும்.

தசம் (daśa) என்ற சொல் தமிழ் மூலத்துப் பிறப்பு  ஆகும்.  இது உலக முழுதும் பலமொழிகளில் கிடக்கலாம்.  ஆய்வு செய்து கொண்டுவாருங்கள்.

பல என்பது மலாய் முதலிய மொழிகளில் "பு-லோ"  என்று திரிந்து இறுதி நீண்டுள்ளது. sa puloh  (10)

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்   

திங்கள், 13 நவம்பர், 2023

சொல்லமைப்புத் தந்திரங்கள்: பத்தாயம்

 சொல்லமைப்புத் தந்திரங்கள் பலவாறு வேறுபட்டு வளர்ந்துவந்துள்ளன. எவ்வாறு என்பதை இப்போது ஆய்ந்து மகிழ்வோம். குறைகள் காண்பது நம் நோக்கமன்று. குறைகள் ஏற்படவே செய்யும். நீண்ட நெடிய வரலாறு உடையதன்றோ தமிழ்மொழி.  சொல்லாக்கத்தின் கருத்தாக்களாக மக்களும் திகழ்ந்துள்ளனர்;  புலவர்களும் இருந்துள்ளனர். 

காக்கா அல்லது காக்கை என்ற சொல்லில் அந்தப் பறவையே அந்த முயற்சிக்கு ஊற்றுக்கண்ணாகத் திறன் காட்டியுள்ளது. பல மொழிகளில் இது நடைபெற்றுள்ளது.  க்ரோ என்ற சொல்லும் கத்தொலியைக் கறந்து வடித்த சொல்தான். சீனர்களின் செவிகட்கு நாய்கள் காவ்காவ் என்று கத்துவதுபோல் கேட்டுள்ளது. வெள்ளைக் காரனுக்கு பவ்வௌ என்று கத்துவது தான் சரியென்று தோன்றியுள்ளது. இதுபோன்ற சொற்களை ஒப்பொலிச் சொற்கள் நம் மொழிநூலார் பெயரிட்டுள்ளனர்.

பூனை மியாவ் என்று கத்துவதாகச் சொல்வர்.  ஆனால் நம் பண்டைத் தமிழர்  அது ஞை  என்று கத்துவதாகக்   கருதி,  பூஞை என்று பெயரிட,  அது திரிந்து பூனை  ஆகிவிட்டது.  இதுவும் ஒப்பொலிச் சொல்லே.

இன்னொரு தந்திரம்

குருவி பிடிக்கும் பொறிக்குக் குருவிப்பொறி என்று பெயரிட்டிருப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.  ஆனால் அதற்குப் பத்தாயம் என்று பெயரிட்டனர். குருவியைப் பற்றிக்கொள்ளும் கருவி  ஆதலின்  பற்று ஆயம் என்று பெயர் வந்தது.  ஆக்கித் தருவது கருவி எனற் பொருட்டு,  ஆ+ அம்,  ஆ - ஆக்கு என்னும் வினைச்சொல், அம் -அமைப்பு  என்னும் பொருள்தரும் விகுதி.  இச்சொல்லில் பற்று என்பது பத்து என்று  பேச்சுவழக்குக்கு ஒப்பத் திரிந்தபடியால்,  இது சிற்றம்பலம் என்பது சி(த்)தம்பரம் ( ல் - ர்)  என்னும் திரிபு போல் ஆயிற்று. 

இப்படிச் சொற்கள் பல திரிந்துள்ளன.  ஒன்பதின் மேற்படுவது பத்து.  பத்து என்று ஒரு சொல் அமைக்கவேண்டி நேர்ந்தபோது  அடிச்சொல்லாகப்  "பல்"  (பல)  என்பதைக் கொண்டனர்.  பல் +  து > பற்று > பத்து ஆனது.   இங்கும் பற்று என்று எழுத்துப் புணர்வினால் ஆன சொல்,  பத்து என்றே ஊர்வழக்கை ஒட்டியே திரிந்து அமைந்தது.  து என்பது ஒன்றன்பால் விகுதி ஆயினும்,  ஓர் எண்ணே குறிக்கப்பெறுவதால்  பொருந்துவதாயிற்று. பன்மை விகுதி கொள்வதாயின் " அ"  என்பதை இடவேண்டும்.  எழுத்துகள் புணர்ந்து பல என்று வரின், இன்னொரு சொல் அவ்வடிவு கொண்டு நிலவுதலால்,  அது பொருந்தாதது ஆயிற்று என்க.  எருது என்ற சொல்லின், எருவுக்குப் பயன்படும் விலங்கு என்ற பொருளில் எருது என்று விகுதி புணர்த்தினர்.  இங்கு அதன் ஒருமை எண்ணிக்கை கருதப் படாமல் விலங்குக்குப் பெயராகவே அமைப்புற்றது.  ஒன்றுக்கு மேற்பட்ட எருது என்பதற்கு  எருதுகள் என்று கள் விகுதி இணைப்புற,  ஒருமை குறிக்கும் து விகுதியொடு  கள் விகுதி புணர்க்க, ஒருமை பன்மை மாறுபாடு கருதப்படாதது ஆயினது கண்டுகொள்க. [ஏர்+ து>எருது என்று சொல்வதுண்டு]

ஒருவன் உண்மை பொய் என்ற இரண்டும் வந்து எதிர்கொள்கையில் உண்மையையே பற்றிக்கொள்தல் வெண்டும்.  யாரும் பற்றி ஒழுகத் தக்கது உண்மை.  அதனால் அதுவும் பற்று+ அம் > பற்றம் ஆகி,  ஊர்த்திரிபின் முறையையே தழுவி,  பத்தம் என்று  திரிந்தது.    ஆகவே பத்தம் என்றால் உண்மை என்று பொருள்.  இதற்கு எதிர்ச்சொல் ஆவது பத்தம் அல்லாதது என்று பொருள்படவேண்டுமே.  அதனை அல் ( அல்லாதது) + பத்தம் என்று அமைக்கலாம். அது அற்பத்தம் (அல்பத்தம்)  என்று வரலாமே  அப்படியானால் அரபிச்சொல் பாணியில் " அல்கதீப்"  என்பதுபோல் அமைந்தாலும் சரியானதாகவே தோன்றும்.  ஆனால் அல்பத்தம் என்பது திரிபுற்று  " அபத்தம் " ஆகி இன்றுவரைத் தமிழில் வழங்கிவருகிறது.

ஊர்களில் வற்றிப்போய் விட்டது என்று தமிழ் வித்துவான் சொன்னால் வீட்டில் உள்ள பாட்டி வத்திப் போய் விட்டது என்றுதான் சொல்வாள். காரணம் பேச்சுமொழிச் சொல் வத்திப்போய்விட்டது என்று சொல்வதுதான்.  ஆய்வாளன் ஒருவன் பேச்சுமொழி வடிவம் எழுத்துவடிவில் வராது என்று முடிபாகச் சொல்ல எந்த ஆதாரமும் இல்லை. செய்யுள் வழக்கு உலக வழக்கோடு வேறுபடும்.  நாம் உலக வழக்கு என்று சொல்வது நகர வழக்கு, வட்டார வழக்கு, ஒருசாதியினர் வழக்கு, பலசாதியினர் வழக்கு, தமிழ்நாட்டின் ஒருமூலையில் மட்டும் உள்ள வழக்கு, பல ஊர்களின் வழக்கு என்று உண்மையில் எண்ணிறந்தன வாகும். இவை பலவும் அறியாமல் ஊர்வழக்கு என்று சொல்லக்கூடாது சொல்லாக்கத்திற்குப் பயன்படாது என்று சொல்லுதல் மடமை.  இலக்கணம் என்பது ஒரு மொழியை எழுத்திலும் பேச்சிலும்  பிழைபடக் கையாளாமல் முறையாகப் பயன்படுத்துவது எப்படி என்னும் நூல்தான்.  புதிய சொற்களை நீங்கள் உண்டாக்கிக் கொள்வதற்காக எழுதப்பட்ட இலக்கணம் அன்று.  புதிய சொற்களை நீங்கள் உண்டாக்கிக் குவித்தாலும் அவற்றை யாரும் பயன்படுத்தாவிட்டால் அவை குப்பைதான்.

ஊர்வழக்கில் உள்ளவை முன்பே உள்ள சொற்கள் தாம். அவற்றின் வழக்கியலை யாரும் ஒழித்துவிடவும் இயலாது.

இவையும் பிற பலவும் தந்திரங்கள் என்றே கூறத் தகுவனவாகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.


ஞாயிறு, 12 நவம்பர், 2023

தீபாவளி வாழ்த்துக்கள் அனைவருக்கும்

 ஆபாலும்   இட்டினிய பாயசம் பண்டங்கள்

தீபா வளியன் றுணவுமகிழ்----வேபாய

எய்துக இல்லத்தில் எல்லாமும் இன்பமொன்றே

பெய்திடத் துர்க்கை அருள்.


எல்லாத் தெய்வங்களின் ஆசியாலும் எல்லா நலமும் பெறுவீர்

யாவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் உரியனவாகுக.


ஆபால்  -  ஆகும் பால் ( கறந்த பால்),   ஆவின் பாலுமாம்.என்பது  குறிப்பு

இட்டினிய -  இட்டு இனிய

பாய - பெருகி ஓடிவர

எய்துக -  அடைக

பெய்திட -  இன்ப மழைபோல்  இறையருள்.


செவ்வாய், 7 நவம்பர், 2023

அதி(கம்) என்பதற்கு மற்றொரு முடிபு.

அதி என்பது ஒரு முன்னொட்டு  ( prefix)  என்று வகைப்படுத்தப் பட்டது  எனினும் முழுச்சொல் அன்று.  அதிகம் என்ற சொல்லின் முன்பாதி என்று எடுத்துக்கொள்ளலாம்.  இதன் பொருள் :"மிகு" என்பதுதான்,  அதிமதுரா என்ற சொல்லின் அதி என்பது முன்னொட்டாக வருகிறதைக் கண்டிருப்பீர்கள்.  அதிவேகம் என்ற சொல்லிலும் அது ஒரு முன்னொட்டாக வருதலை அறியலாம்.

அதிகுணன், அதிகாரம், அதிகாலை, அதிகோரம், அதிகோலம்,அதிசங்கை என்பவற்றிலும் அதி முன்னொட்டு வருதல் காணலாம்.

இதனை ஒன்றின் மேற்பட்ட எண்ணிகையில் விளக்குவதற்கு வழியுள்ளன என்பதை அறிக.  அதி என்பது ஒரு சமஸ்கிருத ( சமத்கிருத என்று எழுதுவதுண்டு)  ஒட்டுமுன்னி   [PREFIX] என்று சொல்லலாம்.  இதற்குக் காரணம் அதி என்பது ஒட்டிய சொற்கள் பல ஆங்குள்ளன. இதனை உபசர்க்கம் என்றும் கூறுவர். 

கிருபானந்த வாரியார் சுவாமிகள் தமிழ் என்ற சொல்லுக்கு ஒரு சொற்பொழிவில் நூறு பொருள்கள் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது போல,  பெரும்புலவர்க்கு யாவும் எளிதாகும்.  ஐயப்பன் என்ற சாமி,  பிரம்மன், விட்ணு, சிவபெருமான்,  வினாயகப் பெருமான்,    திருவுடைய முருகன் ஆகிய ஐந்து ஒன்றான கடவுள், காரணம் ஐ என்றால் ஐந்து என்று ஒரு பற்றாண்மைசால் புலவர் கூறியது போலவே திறனுடையார் பல்வேறு வகைகளில் கேட்போரைக் கவர்ந்துசெல்ல முடியும். சீவக சிந்தாமணியார் ஒரு வரிக்கு ஒருபொருள் போதருமாமாறு எதுகைகளை அடுக்கியவாறு போல, புலவர்தம் திறம்தான் என்னே என்போம்.

சிங்கப்பூர் என்பது சிங்கம் என்ற இந்தியச்சொல் வருவதால் இந்தியர்களால் அமைக்கப்பட்ட சொல் என்று ஒருவர்கூற,  அது உண்மையில் சின்-ஜா-போ என்ற சீனமொழிச் சொல்லின் திரிபு என்று இன்னொருவர் கூற, கேட்பவர் ஒரு முடிவுக்கும் வரவியலாத நிலை வரக்கூடும்.

அதிகம் என்பதை நாம் முன்னர் விரிவரிவனப்புச்  செய்துள்ளோம் . ஆயினும் இங்கு ஒரு சுட்டடிச்சொல்லமைப்பாக விளக்குவோம்.

அது  -  இஃது அஃறிணை ஒருமைச் சொல்.

இ  -       இங்கு  என்று பொருள்தரும்  சுட்டடிச் சொல்.

கம் -     கடக்கும்  அல்லது வரும் என்னும் பொருளிய இடைக்குறை.  இதில்             "டக்கு" என்ற எழுத்துக்கள் மறைந்தன.  இதுவும் தமிழிலக்கணப்படியான              சிறந்த விளக்கமே ஆகும்.   கடந்து இங்கு வந்துள்ளபொருள் இங்கு மிகுதியை உண்டாக்கும்.  ஆதலின் அதிகம் ஆகிறது.

கடக்கும் என்ற சொல் குறைந்து வரும் இன்னொன்று "வேங்கடம்" என்பது ஆகும்.  வேம் -  இது வேகும் என்ற சொல்லின் குறை.  ஆகும் என்பது ஆம் என்று குறைவுற்றது போலுமே ஆம்.  கடக்கும் என்பது கடம் என்று குறுக்கிப் பயன்பாடு கண்டது.  வேக்காளம் மிக்கதான கடக்கும் இடம், வேங்கடம் என்று பெயர் பெற்றது.  காரணப் பெயர்.

அவகடம் அல்லது அபகடம்:  இங்கும் கடம் என்பது கடத்தற்கரியதொன்றையே குறித்தது.  அவம் ஆனதும் கடக்கவேண்டிய அரிய நிலையை உண்டாக்குவதுமாகிய செயல்.  வ-  ப போலி.

மற்ற இடத்தினது இங்கு வருமேல் மிகுதிப்படுதல்.

இன்னும் பல எழுதலாம்.  உங்களுக்கும் ஓய்வு தேவை.  

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.



திங்கள், 6 நவம்பர், 2023

முயற்சி திருவினை

 எழுந்துநிற்  பதற்குமொரு  பயிற்சி  வேண்டும்

எழுந்ததும் விழுந்தாலும் அமர்ந்தி   ருந்தே  ,

அழுந்துயர் அடுத்தலிலா  முயற்சி  வேண்டும்

விழுந்தமை தனைஎண்ணி வியர்ப்ப  தின்றிக்

குழந்தையைப் போலதற்கு மனமே வேண்டும்

விழுந்தரம் அடுத்துவெற்றி எனவே  தாண்டு!


தொழுங்கரம்  தேவனருள்  ஈர்த்த வாறே

துலங்குவதே யாவதுமே  உலகின்  மீதே.


பொருள்:

விழுந்தரம் -  விழுந்தடவை அல்லது  விழுந்த பொழுது.

தரம் தர நடந்தன என்றார் கம்பநாடர்.

கரம்  -  கை.  (கர் - கை திரிபு)

ஒ நோ:       அர் - ஐ.  ஆர் -  ஐ  என்பவுமாம்.

வந்தனர்,  வந்தனை, வந்தார் என்ற விகுதிகள் ஒன்றிலிருந்து

இன்னொன்று திரிந்த தொடர்புடையவை.

ஏனைச் சொற்கள் எளியவை.

சனி, 4 நவம்பர், 2023

காசி என்னும் சொல்.

 இன்று காசி என்னும் சொல் பற்றியும் தொடர்புடைய ஒருசிலவற்றையும் தெரிந்துகொள்வதுடன் இச்சொல்லைத் தமிழ் மூலங்களைக் கொண்டு, சற்று ஆய்வுசெய்தறிந்திடுவோம்.

"காத லாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார்  தமை நன்னெறிக்கு  உய்ப்பது  வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே"   என்பது மிக்க வான்பொருளுய்க்கும் தேவாரப் பாடலாகும்.

இங்குக் கசிதல் என்ற வினைச்சொல் பொருந்திப் பொருள்மிகுக்கும் சொல்லென்க. ஒருவன் காசிக்குச் செல்வதே  இறையை எண்ணிக் கசிந்துருகுவதற்காகத் தான்.

வெள்ளி போல் உருகி ஊற்றுமிடத்து அதில் ஒளிபடுமானால் வெண்மை மின்னி அழகுறுத்தும் என்பதில் ஐயமில்லை.  ஒளியில் மின்னுதல் என்பது இதன் பொருள் என்று ஏனை மொழியினர் கொண்ட பொருளும்  ஏற்புடையதே ஆகும்.
பட்டு மின்னுதல் என்பது மட்டற்ற மகிழ்வு தரும் பொருளாயினும்,  தேவாரம் தரும் பொருள் மனத்துக்கண் நிகழும் கசிவே ஆகுமாதலின்.  அம்மனத்தையே தளமாகக் கொண்டு பொருள் விளக்குதல் இன்னும் சிறப்புடைத்து என்பது  மேம்பாடுடைய கருத்தெனக் கொள்க.

சுடு > சூடு என்று முதனிலை ( அதாவது முதலெழுத்து ) நீண்டு பெயர்ச்சொல் ஆவது போலுமே,  கசிதல் -  கசி >  காசி என்று அமைந்து,  மனம் கசிந்துருக இறைவணக்கம் இயற்றுமிடம்  என்று பொருள் கொள்வது மிகுந்த  சிறப்புடைத்து ஈண்டு என்று முற்றுவிப்போம்.

இப்பெயர் தென்காசி என்று தென்னாட்டிலும் மீள்வருகைகொள்வதால்,  தென் காசிக்கும் இப்பொருள் கொள்ள இடனாகின்ற தென்க.

காசி என்பது காக்குமிடம் என்று காத்தல் அடியாக நின்று,  இருபிறப்பியுமாகும்.
மாசி என்பதில்  மா (பெரிது) என்ற சொல்லுடன் சி விகுதி வந்ததுபோலும் இஃது  விகுதிபேறு ஆகும். மாசி எனின் சிறப்புடைய மாதம். நாசி என்பது நாவின் மேலிருப்பது என்று பொருள்படும் உறுப்பின்பெயர். அதாவது  மூக்கு, நாவொலிகட்குச் சிறப்புச்செய்வது.  சி -  சிறப்பு எனினுமாம். ஆசி என்பது ஆக்கம் சிறக்க என்பது.     ஒப்பிட்டுக்கொள்க. 

இதனைக் காஷி என்று எடுத்தொலித்தல் பின் வந்த மெருகூட்டல்.

அறிக மகிழ்க


மெய்ப்பு பின்னர்.

புதன், 1 நவம்பர், 2023

மந்திரவித்தை வேறுபெயர்கள்

 மந்திரவித்தை என்பது எல்லாக் காலங்களிலும் மக்களிடைக் கடைப்பிடிக்கப்பட்டே வந்துள்ளது.  இதை ஒரு கலையென்று கூறலாம்.  ஆங்கில உலகில் இதை ஓர் அறிவியல் என்று சொல்கிறார்கள். Occult Science என்னும் இதுபற்றி எழுதப்பட்ட நூல்களும் உள்ளன. இது கலையா அறிவியலா என்பதைப் பற்றி நீங்கள் வாதத்தில் ஈடுபடலாம்.  தென் கிழக்காசியாவில் இது பயிலப்பட்டு பயன்பாட்டில் உள்ளதொன்றாகும்.

அசுரமாயம்,  பூதாசனம், சித்திரகருமம், இந்திரஜாலம்,  மாயாஜாலம், கர்மண, கிர்திஹாரம், மந்திரவித்யா, மந்திரரத்னா  என்பவை முதல் சமஸ்கிருதத்தில் பல சொற்கள் உள்ளன. இந்தச் சொற்களை எல்லாம் வேண்டியாங்கு மந்திரவித்தையைக் குறிக்கப் பயன்படுத்துதல் கூடும்.

தமிழில் மந்திரம்செய்தல் என்று வழக்கில் சொல்லப்படும் இதற்கு,  ஒட்டியம் என்றொரு  சொல்லும் உள்ளது.  சூனியம் செய்வோர் பூசனை செய்யும் காளிதேவிக்கு  ஒட்டியக் காளி என்றும் சொல்லுவர்.

ஓர் உண்மை நிகழ்வை அறிந்தபின்  அதை வேறுபடுத்தவே மந்திரங்கள் செய்யப்படுகின்றன. எ-டு   ஒரு பெண் ஓடிப்போய்விட்டாள்,  அவளைப்பற்றி நிகழ்வறிந்த பின் செய்யப்படுவதே மந்திரவேலை.  ஓடிப்போனவள் திரும்பவேண்டும் என்பது குறிக்கோள்.  இதனால் இந்த மந்திரம் ஒட்டியம் எனப்படுகின்றது.  ஒட்டிச்சென்று இயல்விப்பது ஒட்டிய மந்திரம்.  ஒட்டுவித்தை. ஒட்டுமந்திரம்.  இரண்டாம் உலகப்போர் முடிந்துபின் துணிப்பஞ்சம் இருந்ததால் துணிகளை ஒட்டுப்போடும் தையல்காரர்கள் அதிகமிருந்தனர். இதழொலிகளால் ஆன கவியும் ஒட்டியம் எனப்படும்.

பில்லி,  சூனியம் என்ற வழக்குகளும் உள்ளன.  புல்லுதல் என்றால் ஒட்டிச்செல்லுதல் என்று பொருள். புல்,  மரம்போல் மேலெழாமல் தரையுடன் ஒட்டிவளர்வதால்  (புல்லி வளர்வதால்)  அஃது அப்பெயர் பெற்றது. புறக்காழனவே புல்லென மொழிப என்பது  தொல்காப்பியம்.  ( மரபியல் காண்க). ஆனால் வரையறவுகள் இன்று வேறுபட்டுவிட்டனவால், தொல்காப்பியர் காலத்தின் "புல்லும்"  இன்று நாம் குறிக்கும் புல்லும் வேறுபடுதல் கொள்க.

பில்லி என்பது புல் > புல்லி> பில்லி என்று திரிந்தது.  உ-இ திரிபு.

சூழ்தல், உன்னுதல் என்ற இருசொற்களின் பகவொட்டாகத் தோன்றிய சொல்லே "சூனியம்"  என்ற மந்திரவகை.  சூழ் உன்னியம்.> சூ(ழ்) + (உன்)னியம்.  சூழ் ~தல்  என்பது ஆலோசித்தல்,  ஊன்றி எண்ணுதல்.  உன்னுதல் என்பது அவ்வாறு எண்ணியன முன் கொணர்தல். உன்னுதல் என்பது தியானித்தலுமாகும்.   சூன்யமென்பது ஒன்றுமின்மை என்பது இங்குப் பொருளாகாது.  எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின் என்ற குறள் நினைவிலிருக்கிறது.  சூனியம் என்பது மிக்கத் திண்ணியனவாய் எண்ணி நிகழ்த்தப்படுவது.  பில்லிசூனியம் என்பன இணைச்சொற்களாய் உலகவழக்கில் ஒருபொருட்குறிப்பின வாகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


தொடர்புடைய மற்ற இடுகைகள்:


If these connections do not take you to the post,  there may be a fault in connection.
You have to search manually to reach these posts. We are sorry about that.