செவ்வாய், 30 ஏப்ரல், 2019

சிங்குதல் என்ற சொல் அமைதல்.

சிங்கிவரும் விலங்கு சிங்கு+அம் = சிங்கம் என்பது கண்டோம்.  இச் சிங்குதல் என்னும் கருத்து அரிமா என்பதிலும் உள்ளுறைந்து அமைந்து கிடக்கின்றதென்பது ஓர் இடுகைக்கு முன் தானே கண்டோம். அதனால் நம் நேயர்கள் இதனை மறந்திருத்தலுக்கான வாய்ப்பு மிகவும் குறைவே ஆகும்.

சிங்குதல் என்ற வினைச்சொல் இன்னும் நம் அகரவரிசைகளில் காணப்படுகின்றது.  சொல்விளைந்த வினைச்சொல் எந்த மொழியில் இருக்கிறதோ அந்த மொழிக்குரியதே அதனின்று பிறந்ததாக அறியப்படும் பெயர்ச்சொல்லும் என்பது பிற ஆய்வாளர்களாலும் ஒப்பப் பட்டதே  ஆகும்.  அரிமா என்பதும் அதே பொருளுடைத்தாதல் அறிக.  அதற்கு இன்னொரு சொல் தேவைப்பட்ட ஞான்று அதே பொருளில் அதனை அமைத்தது ஒரு சிந்தனைச் சிக்கனமே ஆகுமென்பதை அறிந்தின்புறுவீர்.

இனிச் சிங்குதல் என்ற வினைச்சொல்லை ஆய்வோம்.

சிறுகுதல் > (சிகுதல்) > சிங்குதல் என்றமைந்ததே இச்சொல் ஆகும்.

இவ்வாய்வில் வழக்கொழிந்த வடிவங்களையும் கண்டெடுக்கலாம்.  அவை சிகுதல், சிறுங்குதல்.

ஒன்று இன்னொன்றில் மாட்டிக்கொண்டு ( எ-டு: நூல், தைக்கும்போது ) இரண்டு ஒன்றாகி எண்ணிக்கை குறைதலும் சிங்குதலே ஆம்.  இது சிக்குதல் என்ற சொல்லினைப் பிறப்பித்தது.

இதனை அறியத் தொடங்கு என்ற சொல்லைப் பார்ப்போம்.

தொடு >  தொடர்.
தொடு > தொடகு ( கன்னடம் ) > தொடங்கு (தமிழ்).

இதனுடன் இலகு> இலங்கு என்ற தமிழ் வடிவங்களையும் ஒப்பீடு செய்யுங்கள்.

நடுவில் ஒரு ஙகர ஒற்றினைப் பெற்றுச் சொல் விரிதல் தமிழிலும் ஏனைத் திராவிட மொழிகளிலும் காணப்படுதாகும்.

பகு என்ற வினைச்சொல் ஒரு ஙகர ஒற்று ப் பெற்று விரிந்து பெயராதலும் அறிக.  பகு> பங்கு.  பகுக்கப்பட்ட ஒரு பகுதியே பங்கு.

தகுதி உடையாரே தங்குவர்; தகுதி இல்லார் வெளியேறுவர். இது உலக இயல்பு.

தகு > தங்கு  என்ற சொற்களின் தொடர்பும் அறிக.

அ என்ற சுட்டடி ஓரெழுத்து ஒருசொல் கு என்ற சேர்விடம் குறிக்கும் உருபினை இறுதிநிலையாகப் பெற்று,  அ+ கு =  அங்கு என்று புணர்ச்சித் திரிபு அடைதலும் இதன் இயல்பைக் கோடிகாட்டுவதே.  கு என்பது ஈண்டு உருபாக வராமல் ஒரு விகுதியாய் நின்றது.

சொல் மிகுதற்குத் துணையாவதே விகுதி:  மிகுதி> விகுதி. இது இறுதிநிலை எனவும் படும்.

சிறு > சிறுகு ( வினை)
சிறு > சிறுகு > சிறுங்கு ( இது இடைமிகை).
சிறுங்கு > சிங்கு   ( இது இடைக்குறை).

இத்தகைய திரிபுகளும் வழக்கொழிவும் நடைபெறக் காலம் சென்றிருக்கும். சில இடைவடிவங்கள் இல்லாதொழிதலும் இயல்பே.

பிழை காணின் பின் திருத்தம்,
சில திருத்தமும் சில சேர்க்கையும் செய்யப்பட்டன:  1.5.2019

நிலைபெற்றவை: நிலம் முதல் நிறம் வரை

நிலம், நிலவு என்ற சொற்கள்  "நில்" என்ற சொல்லினடியாகப் பிறந்தவை என்பதை முன் சில அறிஞர்கள்  அறிவித்திருந்தனர்.  நிலம் என்பது மனிதனும் ஏனைப் பொருட்களும் "நிற்பதற்குரிய இடம்" என்பதே பொதிந்த பொருளாம்.  பண்டைத் தமிழனோ நிலவும் நிலம்போல நிற்கும் கோள் என்றே கருதினான்.  அதனால் அதையும் நில்> நிலா என்று அறிந்து சொல்லை அமைத்தான்.  அதாவது வானத்தில் நிலை கொண்டிருக்கும்  கோள்களான   சூரியன், நிலவு  ஆகும் இவை ஏன் " உதயம்" ஆகின்றன,  ஏன் மறைகின்றன என்பவற்றை  அவர்கள் முழுமையாக அறிந்திருந்தார்கள் என்று சொல்வதற்கில்லை. இவை எல்லாவற்றையும் விளக்க இன்னும் ஒரு கலிலியோ பிறந்துவிடவில்லை.

நில் > நில் + அம் > நிலம்    நிற்பதாகிய நிலம். மண்.

நில் > நிலா.  இதில் ஆ என்ற இறுதி ஒரு விகுதி ஆகும்.

ஆ என்ற விகுதி பெற்ற வேறு சொற்கள்:

பல் > பலா  :   பல சுளைகள் உள்ள ஒரு பெரிய பழம் ,  அதைத் தரும் ஒரு மரம் அதன் உறுப்புகள்.

கல் >  கலா  .  இதன் பொருள் கலை.  இது ஒரு தமிழ்ச் சொல் என்பதை அறிந்து கூறினார் பேராசிரியர் அனவரத விநாயம்பிள்ளை.  கல்லுதல் :  தோண்டுதல். கல் = கற்றுக்கொள்ளுதல்.  இளமையில் கல் என்றார் ஒளவைப்பாட்டி.

இனி இன்னொரு முடிபையும் சொல்லக்கடவது.  அதாவது:

மன் :   நிலைபெற்றது.

மன் >  மண் என்பது திரிந்தமைந்தது.  இரு சுழி எழுத்து முச்சுழி எழுத்தினும் முந்தியது ஆகும்.  இவற்றின் பொருளமைதி ஒப்புமை காண்க.

இனி இன்னொன்றையும் அறிந்து இன்புறுவோம்.  இப்புவியில் நிலையான பொருள்களில் நீரும் ஒன்றாகும்.   இதுவும் நில் என்ற வினையடிப் பிறந்த சொல்லே.

நில் > நீல் > நீர்.   முதனிலை என்ற முதலெழுத்து நீண்டது. லகரம் ரகரமாவது தமிழில் மட்டுமன்று பிற சில மொழிகளிலும் காணக்கிடைக்கும் ஒரு திரிபு ஆகும்.  இத்தகு திரிபு விளைந்த சொற்களைப் பழ இடுகைகளில் காண்க.

நில் > நீல் > நீலம்.  வானத்தின் கருமையே நிலையானது ஆகும்.  அது நிற்பது என்று சொன்னால் அது மாறாதது ஆகும்.   மாறாத இந்த நிறம் நீலம், ஓர் அடிப்படை நிறம்.

நில் > நிறு > நிறம்.   நிறம் என்னும் வண்ணம் நிற்பது.  அது பொருளில் நிற்கின்றது,  இலையில் பச்சை நிறம் போலும்.

இங்கு காணப்பட்ட சில பொருள்கள் வேறு இடுகைகளில் விளக்கமும் ஒப்புமையும் தெளிவுறுத்துவன  ஆகும்.  அறிந்து மகிழ்க.


 இது மீள்பார்வை பெறும்.


வெள்ளி, 26 ஏப்ரல், 2019

கூகிள் கூடுதலால் பெற்ற கடந்தகாலப் பயன்`கள்

கூகிள் நிறுவனம் கூடுதல் அச்சேவை
பாகினது பாத்திரம் ஆங்குதர ---- ஆகினவே
உட்புகுந்  துள்ளன ஓங்க நுகர்தலும்
கட்பகிர்ந்  தன்ன கருத்துகள்---- கொட்புறலும்
நற்பயன் பெற்றோமந் நாள்.

பெற்ற பயன் நினைவு கொள்ளுதல் பற்றிய கவி.
வெண்பா. நேரிசை.


பொருள் ( உரை)


கூகிள் நிறுவனம் கூடுதல் சேவை -  கூகிள் ப்ளஸ்
என்ற மென்பொருட் சேவை;
பாகினது -  காய்ச்சின பாகினுடைய
பாத்திரம் -  உண்கலம்
ஆங்கு தர -  விரைவாகத் தேடிக் கொணர்ந்து கொடுக்க;
உட்புகுந்து -  வலைத் தளத்தினுள் நுழைந்து;
உள்ளன ஓங்க நுகர்தலும் -  இருக்கும் இடுகைகளை
விரிவாக அனுபவித்தலும்;
கட் பகிர்ந்தன்ன  --  கண்களே பாகுபடுத்தி எடுத்துக்கொள்ளுதல்
போலவே;
கருத்துகள்:  எண்ணி எழுதிய பலவும்;
கொட்பு உறலும் -   மேற்கொள்ளுதல் மிகுதலும் ஆன;
நற்பயன் -  நன்மைகள் விளைந்திடுதலை;
பெற்றோம் அந்நாள்:  முன்னாளில் பெற்றும் மகிழ்ந்தோம் அல்லோமோ?
பெற்றோம் என்றபடி.

கூகிள் சேவை,  பாகுப் பாத்திரம் கொணர்ந்தளித்தலுக்கு உவமையாக
இங்கு சொல்லப்பட்டது.

மறுபார்வை செய்யப்பெறும்.



அரிமா சிங்கம் குறைந்துவருதல் பொருண்மை

அரிமா சிங்கம் என்ற இரு சொற்களையும் இன்று நுணுக்கமாக நோக்குவோம்.

அரிமா என்ற சொல்லின்  பொருள் அரிதல் - அரித்தல் ( தன்வினை - பிறவினை ) என்ற வினையடிப்படையில் தோன்றிய தென்று அறிஞர் கூறியதுண்டு.  சிற்றுயிர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து இல்லாதனவாக்கும் கொடிய வலிமை பொருந்திய விலங்கு என்பது இதன் பொருள் என்பர்.

இஃது சரியான சொல்லாய்வு என்று ஒப்புவோம்.  நீருள் பாசியைச் சிறிது சிறிதாக அரித்தெடுத்தல் போல உயிர்களை அது  ஒழித்துவிடுகிறது  என்பது அருமையான கருத்தே.

அரி என்ற வினைக்கும் அப்பால் சென்று அதனடியைக் காணின்,  அது அரு என்ற வடிவமே என்பது புலப்படும்.

அரு >  அருமை.
அரு >  அருகு >  அருகுதல்.   எண்ணிக்கையில் குறைவாதல் இதன் பொருள்.
அரு > அரி  ( அரியது;  குறைந்த எண்ணிக்கையே உடையது )

ஓர் இடத்திற்கும், இன்னோர் இடத்திற்கும் உள்ள இடைத் தொலைவு சுருங்குதலும் அருகுதலே ஆதலின்,   " அருகில் ( உள்ளது)" என்ற வழக்கு உண்டாயிற்று.

காணற்கு அரியனவான இவ்விலங்குகளை அரிமாக்கள் என்று பெயரிட்டது
அற்றை நிலையுடன் மிகப் பொருந்தியதாகும்.  இன்று அருகிவரும் விலங்குகளைக் காப்பதற்குப் பல நடவடிக்கைகளை  ஐக்கிய நாடுகள் நிறுவனமும் பல அரசுகளும் எடுத்துள்ளன என்பது நீங்கள் அறிந்ததே.  அரிமாக்கள் என்னும் சிங்கங்கள் அருகிவிட்டன என்று தமிழன் அன்றே கவலைப் பட்டிருக்கின்றான். 

சிங்குதல் என்பதும் அழிதல், தேய்தல் , மீந்துபோதல் என்பன போலும் பல பொருளுடைய சொல்லே.  சிங்கம் பல நாடுகளில் இல்லை. ஆகவே அழிந்துவரும் ஓர் விலங்கினம் அது.  மனிதனால் பாதுகாக்கப்படவேண்டிய இரங்கத்தக்க நிலையில் இருக்கின்றது.  அதன் எண்ணிக்கை தேய்ந்துகொண்டு உள்ளது.  

அருகிவரும் விலங்கு. அழிந்துவிடுமோ என்ற அஞ்சத் தக்க விலங்கு. சிங்கிக் கொண்டு வரும்  விலங்கு சிங்கம்.

அரு+ இ = அரி > அரிமா.
சிங்கு + அம் =  சிங்கம்.

விலங்குகளின் அரசனுக்கு இந்தக் கதியா? 

சிங்கம் என்பது அன்றாட வழக்கிலுள்ள சொல்.  சிங்கு என்ற வினையின் அடியாகத் தோன்றிய பெயர்.  மேலும் எங்கும் பரவித் தமிழுக்கும் பெருமை சேர்த்த சொல்.

சிங்கிப்போன சிங்கத்தையும் அருகிப்போன அரிமாவையும் கண்டு சொல்லுக்கு இன்புற்றோம், கருத்தடிப்படை கண்டு கவலைகொண்டோம், பொருளடிப்படை ஒன்றுதான்.


பழமொழி:  பன்றி பத்துக்குட்டி சிங்கம் ஒற்றைக் குட்டி. குறைவுக்கு இதுவும் காரணமாகுமோ?

வியாழன், 25 ஏப்ரல், 2019

பிராந்தியம்

இன்று பிராந்தியம் என்ற சொல்லை ஆய்வோம்.

இந்தத் திரிசொல் தமிழ்ச் சொல் போல் தெரிகிறதா என்றால் இல்லை. செந்தமிழ் ஒலிமரபை இச்சொல் வெளிப்படுத்தவில்லை.

ஒரு மன்னனின் ஆளுகைக்கு உட்பட்டது அவனுடைய  நாடு எனப்படும். அவனுடைய நாட்டைச் சுற்றியுள்ளனவும் பதிலரையர்களை  ஆட்சியர்களாகக் கொண்டவையுமான மற்ற நிலப்பகுதிகள் "பிராந்தியங்கள்" எனப்பட்டன.

இந்தச் சுற்றுவட்ட நிலப்பகுதிகளை இந்த மன்னன் கைப்பற்றி அவற்றினின்று நீங்கியவனாய் அந்த ஆட்சியர்களிடமிருந்து இவன் பொருளைப் பெற்றுக்கொண்டபடியால் அவையும் இவனின் நேரல்லாத ஆளுகைக்கு உட்பட்டவையே ஆயின.

இந்த மன்னனின் மக்கள் அந்தச் சுற்றுவட்டங்களை " பிறவாம் தேயம்" என்றுதான் சொல்லமுடிந்தது.  பிரிட்டீஷ் மக்கள் இந்தியா முதலிய நாடுகளைக் "காலனி"கள்  ( குடியேற்றங்கள் )  என்று கூறியது போலவே யாம்.

பிறவாம்தேயம் >  பிறாந்தீயம் >  பிராந்தியம்.

பிறவாம் :   பிராந்   ( ற  - ர;   வா: கெட்டது;   அல்லது விலகிற்று.    ம் >ந்  புணர்ச்சித் திரிபு. )
தேயம் :  தீயம் > தியம். >  த்யம்   ஏகார ஈகார மாற்றம்.

எலாம் திரிபுமயமே.

சங்க காலத்தில் தேயம் என்ற சொல் தேம் என்று இருந்தது.

தேம் >  தேயம் ( ய என்பது எழுத்துப்பேறு )  >  தேசம்  ( ய ச போலி ) > தேஷ்.

பிற என்பது சொல்லில் பிரா என்று மாறுவது:  எடுத்துக்காட்டுகள்:

பிற அணி >  பிறாணி > பிராணி. ( மனிதரல்லாத மற்ற அணி உயிர்கள் ).
பிராணியின் உள்ளிருப்பது:  பிராணன்  > பிராணா.

பிறகு ஆர் அம் =  பிரகாரம்.
பின்புறத்தில் அல்லது வெளிப்புறத்தில்  சுற்றியுள்ள இடம்.  ஆர்தல்: சுற்றியிருத்தல். மூலத்தானத்தின் பின்னர் சுற்றுவட்டம் முதன்மையான இடம்.
ஒரு பூசாரி கோவிலின் மூலத்தானத்திலிருந்து வெளிப்பட்டுப் பின் பிரகாரத்துக்கு வந்து அப்புறம் வெளியிற் செல்லுகின்றனன்.

புறக்கட்டு:    புற + கு + ஆர் + அம் = புறகாரம் > பிரகாரம் எனினுமாம்.

புறம் : புற (எச்சச்சொல்.)

இவ்வளவுதான். மீண்டும் கண்டுரையாடுவோம்.







செவ்வாய், 23 ஏப்ரல், 2019

மா உனம் மௌனம்

சில இடுகைகளை வாசிக்குமுன் முன்வந்த இடுகைகளயும் வாசித்தல் நலமாகும். அப்போது சற்று விரிவாக அறிந்துகொள்ளுதல் இயலும், இங்கு எழுதப்பட்டவை ஒரு நூல்போல இல்லாமல் தனித்தனிச் சுளைத்தன்மை உடையனவாய் இருத்தலால் முன்னிடுகை வாசிப்பு நலம்பயக்கும்.

முன் இடுகை இது:-

https://sivamaalaa.blogspot.com/2018/05/blog-post_47.html



(முனிவரும் மௌனமும்)


முன்னுதல் என்ற வினைச்சொல்லே முனிவர் என்பதன் அடியாகும்.

அடி என்பது அடுத்து முன்னிற்பது:   அடு > அடி ( அடு+ இ ).

உன்னுதல் என்பதும் முன்னுதல் என்பதும்  ஒன்றுக்கொன்று பிறப்புத் தொடர்பினவாம்.   ஆகையால்  உன்னுதல் என்பதினின்று சொல்லமைப்பைக் காட்டினும் வேறுபாடு ஒன்றுமில்லை.

இப்போது மௌனம் எனற்பாலதை உன்னுதல் என்னும் சொல்லினடிப்படையில் அறிவோம்.

மா = பெரிய, நீண்ட

உன்னு(தல்) >  உன்னு > உன்னம் > உனம்.     ஆழ்ந்து சிந்தித்தல். முன்வைத்து எண்ணுதல்.

மா+ உனம் >  மாவுனம் > மவுனம் > மௌனம்.

ஒன்றைத் தீர எண்ணுகின்றகாலை,  பேச்சுக்கு வேலை இல்லையாகின்றது. பேசாமை மௌனமென்று பொருள் எழுவதாகுதல் காண்க.

இவ்வாறு உரைப்பினும் இழுக்காதென்ப தறிக.

சிவனாகிய ஆதிப்பரம்பொருள் எப்போதும் பேசுதல் இல்லை, எப்போதாவது மொழிந்ததாகச் சொல்லப்படுதல் உண்டு.

இலக்கணம்:

மா உ என்பது மௌ என்றும் மவு என்றும் திரிந்தது.  இது நெடிற் குறுக்கம்.

தலை எழுத்துக்கள் நீளுதலும் குறுகுதலும் நீரோடைபோலும் மிக்க இயல்பான நிகழ்வாகும்.

தோண்டு >  தொண்டை  ( ஐ விகுதி ).
மா உ  > மவு (குறுக்கம் )  >  மௌ ( திரிபு).
முனி+ அம் = மோனம் ( திரிபு - முதனிலை திரிதலும் மு> மூ என்று  தன்னீட்சியாக இன்றி  மு> மூ >  மோ என்று இனமாகத் திரிதலுமாம்.

பண்டு ( பழமை ) என்ற குறில் தொடக்கக் குடிப்பெயரில் பகரம் பாகாரமானது தன்னீட்சி ஆடும்.

பண்டு > பாண்டு> பாண்டியன்.  மூவேந்தருள்ளும் பண்டு தோன்றியோன்.

காலம் செல்லச் செல்லவே எதுவும் பண் அடைகிறது,

பண் > பண்டு > பாண்டு > பாண்டியன் -  பண்பட்டவன் என்று பொருள் கூறினும் ஏற்கலாம்.

சொற்கள் தோன்றித் திரிவுறுகையில் நாம் பார்த்துக்கொண்டோ கேட்டுக்கொண்டோ இருக்கவில்லை. நாம் பிறந்தது இந்நூற்றாண்டில்.    ஆய்வு நெறிகளால் அதில் கிட்டிய அளவைகள் சிலவற்றால்தான் நாம் இதைக் கூறலானோம். ஈரளவைகளும் பொருந்துங்கால் சொல்லை இருபிறப்பி என்று ஏற்றல் அறிவுடைமை என்று முடிக்க. ஒன்றைச் சரி என்று தொங்கிக்கொண்டிருக்கலாகாது.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

ஐயப்ப சாமி பாடல்

ஒரு சிறிய பாடல். இது ஐயப்ப சாமியைப் புகழ்வது:


ஐயப்பனின் மகிமைதனைப் புகழும் வாய்களே  -- இந்த
அகிலமதில் இனியவாழ்வு பெறுவ துண்மையே.

கொய்தணிந்த உனதுமாலை மணமும் வாழ்விலே -- இங்கு
கூடிவரும் நாடிவந்த பத்தர் காணவே.

காலையிலே கருதியவை மாலை நேரமே --- ஒரு
சோலைமலர்ச் சோபனத்தில் மெய்விளங்குமே.

சபரிமலை மகிபன் தனைப்  புகலும் வாய்களே ---ஒரு
தணிந்திடாத ஒளியைச் சேர்க்கும் தரணி போற்றவே.


பொருள்:

புகலும் =  சொல்லும்.  புகுமாறு தெளியச் சொல்லுதல்.
மெய் = உண்மை
சோபனம் :  அழகு.
காணவே = இங்கு மனத்தால் உணர்தல்.


 





நரிக்கு ஓர் ஆடு : ரகர டகர ஒலியணுக்கம்

டகர ரகரங்கள் ஒன்று பிறிதொன்றாய் நிற்கத் தக்கன என்பதைச் சில இடுகைகளில் குறித்திருந்தேம்; எடுத்துக்காட்டுக்கு ஒன்று:-

மடி ( இறந்துபோ)

மரி  ( இறந்து போ)


மடி > மரி  (போலி  என்பதுமாம்).

இதுபோலும் ஒலிப்போலி உண்மைகள் ஒலிநூலின் பாற்பட்டவை.

இப்போது இந்தப் பழமொழியைப் பாருங்கள்:

"நரிக்கு ஓர் இடம் கொடுத்தால்
கிடைக்கு ஓர்  ஆடு கேட்கும்."


நரிக்கு  -  இதில் இரண்டாமெழுத்து  ரகர வருக்கத்தினது.   ர -  ரா - ரி......

கிடைக்கு  -  இதில் இரண்டாமெழுத்து டகர வருக்கத்தினது,  ட டா டி டீ டு டூ டெ டே டை......

இப் பழமொழியில் வரிமுதல்களில் இரண்டாம் எழுத்து ரகர டகர மாக ஒன்றுபட அல்லது வேறுபட,  ஏனை இரண்டெழுத்துகளும் ஒன்றிவந்து எதுகை நன்`கு அமைந்துள்ளது காண்பீர்.

சில சொற்களில் வெறும் எழுத்துப் போலியாக மட்டுமின்றி, நுண்பொருண்மை வேறுபடுதலும் கொள்ளப்படும்.

கடி -  கடினப் பொருளைக் பல்லால் பற்றுதல் (பற்றி உடைத்தல்.)
கறி -சற்றுக் கடினக் குறைவான பொருளைப் பல் பற்றுதல்.

டி றி இரண்டும் வல்லெழுத்துக்களெனினும் றகரம் சற்று வன்மை தாழ்ந்தது.
இத் தாழ்வன்மை இலக்கண நூல்களிற் கூறப்படுவதில்லை.  நுகர்வில் உணரப்படுதல் உடைத்து.  ( சுருதி, யுக்தி, அனுபவம்!)

கவிதையில் நாம் இவ் வொலியணுக்கங்களைப் பெய்து நயமுடைத்தாக்கலாம் என்பதறிக



 

வியாழன், 18 ஏப்ரல், 2019

காத்தாலே என்னும் பேச்சுமொழிச் சொல்

"காத்தாலே பார்த்தேன் --- கடைக்குப் போய்க்கொண்டிருந்தார்;  எங்கே போனாரென்று தெரியவில்லை"

என்பதுபோலும் வாக்கியங்களைப் பேச்சில்  கேட்டிருக்கலாம்.   காத்தாலே என்பது எழுத்துமொழியில் வருவதில்லை.

காத்தாலே என்பது பெரும்பாலும் ஏழை மக்களிடையே வழங்கும் சொல் என்பதுண்டு.

இச்சொல் வந்த விதம் அறிவோம்.

காலை என்பது விடியற்பொழுதையும் அதற்கடுத்த இரண்டு மூன்று மணிக்கூறுகளையும் உள்ளடக்கிய காலப்பகுதி என்றால் அது சரியாக இருக்கும். நண்பகல் வருவதற்கு முன்னுள்ள நேரத்தை "முற்பகல்" என்பர்.

காலை என்ற சொல்லும் காலம் என்ற நீள்பொழுதைக் குறிக்கும் சொல்லும் ஓரடியினின்று வருவதாம்.

கால் > கால்+ அம் = காலம்.
கால் + ஐ =  காலை.

காலம்+ காலம் என்று சொற்புணர்ச்சி  காலாகாலம் என்றும் காலங்காலம் (காலங்காலமாய் ...)   என்று இருவகையில் வந்து பயன்பாடு காணுதலை நாமறிவோம்.

கால் என்பது நீட்சி என்று பொருள்படும் சொல்.

நடக்கும் நம் கால்கள் நீட்சியின் காரணமாகவே அப்பெயர் பெற்றன. பொழுதுநீட்சியும் கால்+அம் என்று போந்தது அது காரணமாகவேயாம்.

வந்தக்கால், செய்தக்கால் என்ற தொடர்களில் கால் என்பது  காலம் என்று பொருள்படும்.  அம் என்பது பெரும்பாலும் அமைவு குறிக்கும் ஒரு விகுதி.

அம் > அம்+ ஐ > அமை > அமைதல்.  ஐ இங்கு வினையாக்க விகுதியாகும்.

காலம் என்ற சொல்லுக்குக் காலை நேரம் என்றும்  பொருள் உள்ளபடியால் மலையாள மொழியில் "காலத்து" என்றால் காலையில் என்று அர்த்தமாகும்.

காலத்து வந்நு   (  ம  ) =   காலையில் வந்தான். (த)

காலையில் வந்தான் என்பதை காலத்தாலே வந்தான் என்பது பேச்சு மொழி.

காலத்தாலே என்பது இடைக்குறைந்து காத்தாலே என்று வந்தது.

காலத்தாலே  >  காத்தாலே.

ஒரு லகரம் வீழ்ந்தது அல்லது கெட்டது.


இதற்கும் காத்தல் என்ற வினைப்பெயருக்கும் தொடர்பொன்றும் இல்லை.

புதன், 17 ஏப்ரல், 2019

கண்டித்தல் துண்டித்தல்

தலையில் துண்டு கட்டிக்கொள்வது சிலரிடத்துக் காணப்படுகிறது. மலேசியா இந்தியா முதலிய நாடுகளில் காணலாம்.

துண்டு என்பது  துண்+து,
இதில் ஈற்றுத்  து என்பது விகுதி.
ஒரு நீளமான நெசவிலிருந்து துணிக்கப்பட்ட அல்லது வெட்டப்பட்டதுதான்
துண்டு. பிறபொருளெனினும் இஃதொக்கும்.  எடுத்துக்காட்டு: மரத்துண்டு.

துணி என்பதும் ( க்ளோத் ) துணிக்கப்பட்டதனால் வந்த பெயரே.

அடிச்சொல் துண்.
துண்+ இ=  துணி.

வீடு கட்டுகையில் நெடுஞ்சுவர் எழுப்புவதுடன், இடையில் உள்ள மாடித்தரை அல்லது  உத்தரங்கள் முதலியவை விழாமல் இருக்கத் தூண் வைக்கப்படுகிறது. தூண்கள் கற்றூண், இருப்புத் தூண் என வகைபல.  இவை சுவர்போல் அடைத்த நெடியனவாய் இல்லாமல் மரங்கள் போல் மேல் கூரை அல்லது தரையினைத் தாங்கி நிற்கும்.

பண்டை மனிதன் தூண்கள் அமைக்கக் கற்றுக்கொண்டது மரங்களைப் பார்த்துத்தான்.  மரங்கள்மேல் வீடுகட்டி வாழ்ந்தவன் மனிதன்.

துண் என்ற அடியிலிருந்தே தூண் என்பதும் வந்தது.

துண் > தூண். (  முதனிலை திரிந்த பெயர்)

தூணுக்கு  ஸ்தம்பம் என்பர்.   தானே அல்லது தனியே தனியே நிற்பதுதான் தூண்.   ஆகையால்  தன்> தன்பு அம் > தம்பம் > ஸ்தம்பம் ஆனது.  பு அம் விகுதிகள்.  ஸ் என்பது தலைமெருகு.  திறம் > ஸ்திரம் என்பதுபோல.  ர- ற
மாற்றீடுகள்.

ஒ.நோ:  பின் > பின் + பு + அம் = பின்பம் > பிம்பம், ( பின் தோன்று நிழல்).

துண்டு என்ற சொல்லினடி  துண் > துணி என்றும் பின் துணித்தல் என்றும் ஆனது.  துண்டு ஆக்குதல் என்பதற்கு  துண்டு > துண்டித்தல் என்று சொல் அமைந்தது.

ஆனால் கண்டித்தல் என்பது  கடிதல் (  சினந்துகொள்ளுதல் )  என்பதன் இடைமிகை ஆகும்.   கடு>  கடி> கடிதல்.  கடுமையாக நடந்துகொள்ளுதல், 

கடி> கண்டி > கண்டித்தல்,  கண்டனை  கண்டனம்  ( அனம் அனை விகுதிகள்).
கண்டி என்ற சொல்லில் 0ணகர ஒற்றுத் தோன்றியது.

கண்டு என்பது ஒரு துண்டு என்று பொருள்படும்,  பூச்சி கடித்துக் கண்டு கண்டாகத் தடித்திருக்கிறது என்ற வழக்கை நோக்குக.  நூல்கண்டு என்ற வழக்கையும் காண்க.

எனவே கண்டு > கண்டித்தல் என்ற விளக்கம் அத்துணைப் பொருத்தமன்று,

அறிஞர் சிலரும் இதை விளக்கியதுண்டு.

தட்டச்சுத் திருத்தங்கள்  பின்.





செவ்வாய், 16 ஏப்ரல், 2019

விகுதிப்பொருத்தம்.

ஒரு புதிய சொல்லைப் படைப்பதென்றால் பல திறமைகள் தேவைப்படுகின்றன.  தகுதியுடைய ஒரு பகுதியை ( நிலைக்கூறு ஆவதைத்  ) தெரிந்தெடுப்பது மட்டுமின்றி,  விகுதி என்னும் வருகூறும் பொருத்தமாக இருத்தல் இன்றியமையாதது என்று அறியவேண்டும்.

இதனைச் சேனை என்ற சொல்லின்மூலமாக விளக்கலாம்.

பலர்  சேர்ந்து செல்வதே சேனை.  சேமிப்பு என்ற சொல்லில் எப்படி சேர் என்பதன் இறுதி ரகர ஒற்று மறைந்து சேர்மிப்பு என்பது சேமிப்பு என்று ஆனதோ அப்படியே சேர்நை என்று வரவேண்டியது சேர்னை > சேனை என்றானது.  நகர வருக்கம்  0னகர வருக்கமாக மாறுதலுடையது என்பதைக் குறித்துக்கொள்ளுங்கள்.  அண்மைய எடுத்துக்காட்டு ஒன்று:

ஓட்டுநர் >  ஓட்டுனர் ( நகரம் 0னகர மானது )
இயக்குநர் > இயக்குனர்.(மேற்படியே)

சேனை என்ற சொல்லைப் படைப்பதன் முன் மனிதனின் மூளையில் உருவான அடிப்படைக் கருத்து:  சேர்ந்து அனைவரும் செல்வது என்பதே.

இதன் பகுதிகளை மட்டும் எடுத்து:

சேர் + அனை >  சேரனை >  சேனை.  அல்லது  சே+னை.>  சேனை.

அனைவரும் பாடுவது பஜனை.

பாடு+ அனை > படனை > பஜனை. இங்கு முதலெழுத்தைக் குறுக்கிப் பாடு என்பதில் உள்ள சொல்லும் பொருளும் மறைக்கப்பட்டது.

இதுபோலும் குறுகிய இன்னொரு சொல்:  தோண்டு > தொண்டை.
காண் > கண்.

பெயர் நீண்டு வினையாதலும் கொள்ளப்படும்.

அனை என்பதே விகுதியாக்கப்பட்டு, பின் அகரம் களையப்பட்டு  0னை மட்டுமே தேய்ந்த விகுதியாய் நின்றது.

ஐகார இறுதி பிற பேச்சுக்களில்  ஆகாரமாக மாறும்.  சேனை> சேனா.

சோடனை என்னும் சொல்லும் இங்கனமே  வேண்டிய இடங்களிலெல்லாம் சோடித்தல் என்ற பொருள்வர,  சோடி+ அனை =  சோடனை என்றானது. வேண்டிய  அனைத்தையும் அழகுபடுத்தல். அனைத்தும் சோடித்தல். அழகற்ற அனைத்தையும் அழகுபடுத்தாவிடில் சோடனையில் புண்ணியமில்லை என்பதை உணரவேண்டும்.  இச்சொல்லுக்கும் அனை என்ற விகுதி பொருத்தமே.

கொள்வனை கொடுப்பனை என்ற  சொற்களில் மணமக்கள் சார்பினர் தங்கள் தங்கள் உறவினர்களையும் ஏற்றுக்கொள்ளுதலால் அனைவரும் உட்படுத்தப்படுகின்றனர் என்பதையும் கவனிக்கவும்.

இவை "அனை" என்ற விகுதி பொருந்திய சொற்களாம்,

எழுத்துப்பிழைகள் பின் திருத்தப்பெறும்.

ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

தென்சீனக் கடல்: ( ஹாங்காங் சுற்றுலா)


தென்சீனக் கடலோரம் தெவிட்டாத அழகே
கண்சொன்ன படிகேட்டு நுகர்ந்தின்பம்  பழகே.

வெள்ளி, 12 ஏப்ரல், 2019

வாதி பிரதிவாதி

இன்று வாதி பிரதிவாதி என்ற சொற்புழக்கங்களை உணர்ந்து இன்புறுவோம்.

பிரதி என்ற சொல்லைக் கண்டு மிரளவேண்டியதில்லை.

இதைப் படி என்ற சொல்லின் திரிபு என்று கூறிய அறிஞரும் உளர்.  ஒன்றுபோல் படிந்துள்ள இன்னொரு பொருள்தான் படி.  இதை ஏன் படி என்று கூறுகிறோம் என்றால் அது "படி" அமைந்துள்ளது. அதாவது எது முன் கண்டோமோ அதன் படியாகவே அல்லது படியே அமைந்துள்ளது.  நூற்படி என்றால் ஒரு நூலின் மாதிரியாகவே அமைந்துள்ள இன்னொன்று.  இதை ஆங்கிலத்தில் காப்பி என்று சொல்வார்கள். குடிக்கும் காபியை காபி என்று எழுதுவது நன்று.  அதைக் காப்பி என்று எழுதுவது அவ்வளவு பொருத்தமென்று சொல்ல மாட்டேன்.  காபி என்றொரு இராகமும் உண்டு. இனிய இந்த இராகம் நீங்கள் கேட்டிருக்கலாம்.

படி என்ற சொல்லே பிரதி என்று திரிந்தது என்பர்.   ப > ப்ர.  டி > தி  எனவே ப்ரதி > பிரதி ஆயிற்று.   ஆகவே தொலைப்படி  என்பது தொலைப்பிரதி என்று வரும்.

படி என்பது படு என்ற சொல்லினின்று திரிந்தது ஆகும்.  கொஞ்சம் மாவை எடுத்துத் தூவுங்கள். அந்த மாவு காற்றின் வேகத்துக்கு ஏற்பத் தரையில் போய்ப் படுத்துக்கொள்ளும். மாவு தரையில் படும், அப்புறம் படுக்கும்:  படுத்துக் கொள்ளும்.   படு > படுதல்;  படு> படுத்தல்.  தன்வினை பிறவினை வடிவங்கள். இவ்வாறு மனிதன் தரையுடன் ஒட்டிக்கிடப்பதுபோல் மாவும் ஒட்டிக் கிடத்தலால் படு > படி > படிதல் ஆனது. படி > படிவு > படிவம்.   படிந்தபடியே அமைவது படிவம்.  இது திரிந்து வடிவம் என்றும் ஆவதானது பகர வகரப் போலி என்பது இலக்கணமாகும்.  படம் என்பது படியாக ஒன்றன் படியே அமைந்தது  என்று உணர்க.

ஒன்று இன்னொன்றில் போய்ப் பட்டுக்கொண்டது என்றால் மாட்டிக் கொண்டது என்று பொருள்.  படை என்ற சொல்லும் ஒரு சார்பு வீரர்கள் இன்னொரு சார்பு வீரர்களுடன் போய் அடித்துக்கொள்ளும் செயலில் மாட்டிக் கொண்டவர்களைக் குறிப்பது என்பதை எளிதின் உணரலாம்.   படு > படை ஆகும்.  படு என்பது பலபொருள் ஒருசொல்.   அதாவது பல அர்த்தங்களைத் தரும் ஒற்றைச் சொல் ஆகும். இனிப் படுதா என்பது ஒரு பொருளை மூட இன்னொன்று அதன்மேல் முழுதும் படும்படியாக போர்த்தபடுவதற்குப் பயன்படும் இரட்டுவகை .  இரட்டு என்பது ஒற்றை இழையாக இல்லாமல் இரட்டை இழையாக நூற்கப்பட்ட கடினவகைப் போர்வை.  போர்வை என்பது மனிதன்மேல் போர்த்துவதற்கும் ஏனைப் பொருள்கள் மேல் போர்த்துவதற்கும் பயன்படுவது. தரையில் விரிப்பதும் தரையைப் போர்த்துவதே ஆகும். ஒன்றில் படும்படியாகத் தரப்படும் கடிய நெயவு வகையே படுதா.  படும்படி தா என்பதே இதன் அமைப்பு,   வாய்தா என்பதும் இப்படி அமைந்ததே.  வருவாயில் ஒருபகுதி தா என்பது வாய்தா ஆனது.  இதில் வரு என்பது தொகுந்து நிற்கின்றது.  முதற்குறைச் சொல். தா என்ற ஏவல் வினை இங்கு முதனிலைத் தொழிற்பெயராய் நிற்கின்றது.   ஆனால் மாதா என்ற சொல் இப்படி அமையவில்லை.  மா:  அம்மா என்பதன் முதற்குறை.  தா என்பது தாய் என்ற சொல்லின் கடைக்குறை. இது மா+ தா >  மாதா ஆனது. இது ஒரு பகவொட்டுச் சொல். ( போர்ட்மென்டோ)  ஆகும்.

வாதி என்பது உண்மையில் வகுந்து அல்லது பகுந்து அல்லது பிரிந்து நிற்பவன்.  வகு >வகுதி > வாதி.   இது  பகுதி > பாதி என்பதுபோலும் சொல் அமைப்பு ஆகும். வாதம் செய்தலின் வாதி என்பதும் பொருந்துவதால் இது ஓர் இருபிறப்பி ஆகும்.  பிரதிவாதி என்பவன் அவனின் பிரிந்துநின்று வேறாகப் பேசுவோன் ஆகும். பிரிதுவாதி என்ற பதத்தை எளிதில் புரிந்துகொள்வதானால் அதைப் பிரிந்து வாதி என்று சொல்லிப் பார்த்து உணரலாம். இது படி என்ற பிரதி அன்று.  பிரிதல் அடிப்படையில் பிரி.> பிரிது > பிரிதுவாதி > பிரதிவாதி என்று மருவியதை உணர்க. பிரிது என்பது பிரிந்து என்பதன் இடைக்குறை என்று இலக்கணம் கூறுக.  பிறிது என்பது பிரிது என்று மாற்றி எழுதப்பெற்றது என்று கொள்ளினும் ஆகும்.  பிரி, பிற, பிறிது என்பவெல்லால் பில் என்ற ஒரே அடியில் பிறந்த பல்வேறு வடிவங்கள் ஆதலின் இவற்றுள் யான் காணும் ஓர் வேறுபாடு இலதாதல் உணர்க. பிறத்தல் என்ற சொல்லும் ஒன்று ( தாய்) இன்னொன்று ( பிள்ளை) -  பிற (பிறிது )  ஒன்று ஆவதே ஆகுமென்பதையும் காண்பீர். (பிற என்பது பெயராம்போது பன்மை வடிவம்).

கடலோர உலா

குளிர்ந்த காற்று வீசும் ஹாங்காங் கடலோரம்





ஹாங்காங் நகர் வலம்.

உலவு தொறுநகர் நயம்காண்பீர் ----  இந்த
உலகினில் அழகிது நகர்ஹாங்காங்!
வலம்வர வண்ணமும் பலதந்தே  ---- பெறும்
வாழ்வை விளக்கிய ஒளிகாண்பீர்.




வியாழன், 11 ஏப்ரல், 2019

தக்கசிறு நாய்க்குட்டி வைத்துக்கொள்ளும்;



வெளி நாட்  டிலே  ஒரு வேலை கிடைத்து
வீடொன்றும் கிடைத்திட்ட போதினிலே
தனியா  ளாய்இருக்க வேண்டாமையா
தக்கசிறு நாய்க்குட்டி வைத்துக்கொள்ளும்;
தனிமை எனவொரு துன்பமுண்டே
தடுத்ததை இன்பமாய் மாற்றிக்கொள்வீர்
நனி யது வீட்டுக்குள் ஓடியாடி
நாளினைப் போக்கிடும் நலமே செய்யும்.

இந்தப் படத்துக்கு ஒரு விளக்கம் எழுத  எண்ணினேம்
அது ஒரு கவிதைபோல் வந்துவிட்டது. படத்தையும்
வரிகளையும் நுகர்ந்து மகிழ்வீர் .

திங்கள், 8 ஏப்ரல், 2019

அகிலமும் கைலாசமும்

தமிழ்மொழியை முற்றுமறிதல் என்பது முடியாத வேலை என்று  சொல்லலாம். எங்கெங்கு சென்று கற்றாலும் எல்லாமறிதல் இயலாமையினால். நாலுபேர் கூடி நன்மொழிகள் பேசிவிட்டுக் கலைந்து போவது வேறு.  மொழியறிதல் என்பது வேறு.

இல்லென்ற சொல்லொன்று உள்ளதே அது எங்கெங்கெல்லாம் உள்ளதென்பதை இப்போது கண்டு மகிழ முனைவோம்.  ஆயினும் எத்துணை முயன்றாலும் நாம் ஒன்றிரண்டை அறிந்துகொண்டால் அதுவே பேருவகை தருவதென்றுணர்வீராக.

அகிலம் என்ற சொல்லின் இடையில் இல் உள்ளது.

இல் என்பது இடம் என்று பொருள்படுவது.  இஃது இகரச் சுட்டடிச் சொல்.   இ என்பதிலிருந்து இல் தோன்றியது.   இல் எனின் இங்குள்ளது என்பது பொருள். இங்குள்ளது இடம்.  அதுதான் இங்கிருபதனைத்துக்கும் அடிப்படை. இடம் இல்லாமல் பொருளில்லை.

கண்ணில் இருப்பதென்ன என்ற வாக்கியத்தில் இல் என்பது இடப்பொருள் சுட்டும் உருபாக வருகிறது.   இடம் என்பதே இதன் அர்த்தம் என்பது விரிக்க வேண்டாதது.

அகிலம் என்ற சொல்லில்:

அ + கு + இல் + அம்  என்ற துண்டுகள் உள்ளன.  சொல்லின் இடையில் இல் இருப்பதை உணரலாம். 

அ =  அங்கு.
கு =  சேர்விடம் குறிக்கும் சிறுசொல். இது உருபாகவும் வரும்.  அவளுக்கு இவளுக்கு என்று சொல்லி அறிக.
இல் = இடம்.
அம் = விகுதி.   இந்த விகுதி அமைவு என்ற சொல்லின் அடிச்சொல் ஆகும்.

இதை இப்போது வாக்கியமாக மாற்றினால்:

" (இங்கிருந்து  )  அங்கு சென்று சேர்ந்தால் அதனில் உள்ள இட அமைப்பு"

என்றாகும்.  அங்கு என்பது தொடுவானாக இருக்கலாம்.  இது எல்லாம்
"அகிலம்."

அகிலம் என்ற சொல்லை அமைத்த அந்த இருண்ட காலத்துத் தமிழன் வானூர்தியிலோ துணைக்கோளத்திலோ பறந்து  பார்த்தானில்லை. இவையெல்லாம் அவனுக்குத் தெரியாதவை. அவனறிந்த மாத்திரத்தில் அவன்
சொல்லை அமைத்து விட்டுப் போயிருக்கிறான். சுழியனைப் பிட்டுப் பார்த்து உள்ளே சருக்கரையும் பயறும் இருப்பன கண்டு அறிந்ததுபோலுமே இச்சொல்லை நாமறிந்து கொள்கிறோம்.

அகலம் என்ற சொல்லும் இதுபோல் அமைந்ததே.  அ+ கு+  அல் + அம் = அகலம்.  அங்குபோய்ச் சேர்வது மட்டுமின்றி அவ்வெல்லையும் அல்லாத விரிவுடையது  என்று சொல்லிமுடித்து அமைந்ததே இச்சொல்.

உலகம் விரிந்தது ஆதலின் விரிவு குறிக்கும் அகலமென்னும் சொல்லினின்று அகிலம் என்னும் சொல் அரும்பியிருத்தல் கூடுமாதலின் இஃது  ( அகிலம் ) இருபிறப்பி ஆகும்.  அகலக் கருத்தே அகிலச் சொல்லுக்கு ஆக்கம் தந்திருக்கலாம்.  அல் என்பது இல் ஆனது. ஒன்றைப் பார்த்து இன்னொன்று அமைத்தல்.

இல் என்பதையும்   (  இடம் )   அல் என்பதையும்  ( அல்லாதது )  கொண்டு இவ்வளவு திறம்படச்  சொற்களை அமைத்துள்ளான் பண்டைத் தமிழன்.  காட்டிலும் மலைகளிலும் அருவி அருகினிலும் கடல் அருகினிலும் சுற்றித் திரிந்து  சிறுசிறு சொற்களைக் கொண்டு உரையாடிய அந்தக் காலத்துத் தமிழன் அவன். அவனையும் அவனமைத்த சொற்களையும் அறிய நீங்கள் உங்கள் இற்றை  நாகரிகத் துணைகளைக் களைந்துவிட்டு வெகுதொலைவு  காலச் சாலையில் பின்னோக்கிப் பயணிக்க வேண்டுமென்பதை மறவாதீர்.

அகல்+தல் = அகலுதல் என்ற வினையும் அதிலிருந்து அமைந்தது.  அகல்+ தல் = அகறல் என்று வருதலும் அமையும்.

தீவு என்பது நாற்புறம் நீர் சூழ்ந்து நிலத்தொடர்பு முற்றத் தீர்ந்த நிலத்துண்டு. தீர்வு> தீவு என்பதை அறிவுறுத்தினோம்.  தீராத தொடர்பு நிலம்  தீவு+ அகம் + அல் + -பு + அம் என்ற பல துண்டுகள் கூடிய சொல்லே தீபகற்பம்.   தீவக அற்பம் > தீபகற்பம்.  வகர பகரப் போலி.  இதில் அல் என்ற அன்மைச் சொல் பயன்பாடு கண்டுள்ளமை காண்க. தீவு என்ற சொல் தீவகம் என்றும் வரும்.  நிலத்துண்டின் அகத்தே தொடர்பு ஏதுமின்றி  அமைந்தது என்று பொருள். அகம் என்ற சொல் புனைந்து அதனால் வந்த சொல்லூதியம் சொற்பமே ஆகும். பெரிய பொருள்மாற்ற மெதுவும் ஏற்பட்டுவிடவில்லை. தீவற்பம் என்று அமைத்திருக்கலாம். தீபகற்பம் என்பது சற்று இனிதாய் உள்ளது.

கைலாசம் என்ற சொல்லிலும் கை + இல் + ஆய + அம் என்று இல் என்ற இடப்பொருள் வந்திருப்பது காண்க.  பக்கத்தில் சிவனாருக்கு இல்லாமாக அமைந்தவிடம் என்று பொருள்.  கை=  பக்கம்;  இல் = இடம்;  ஆய்  = ஆகிய. அம் = அமைப்பு, அல்லது விகுதி.   அந்தக்கையில் இந்தக்கையில் என்ற தொடர்களில் கை என்பது பக்கப்  பொருளை உணர்த்தும்.  ஆய > ஆச.

இனி இல் என்ற இடப்பொருள் அமைந்த சொற்கள் எங்கெங்கு விரவியுள்ளன என்பதைத் தேடிக் கண்டுபிடியுங்கள்.


புதன், 3 ஏப்ரல், 2019

கலியாணம் விவாகம் ரத்து

இன்று வீடு என்ற சொல்லுக்கும் அகம் என்ற சொல்லுக்கும் ஒரு ஒப்பீடு எழுதலாம் என்று எண்ணினாலும் கல்யாணம் என்ற சொல் வந்து குறுக்கிட்டு என்னை எழுதென்றது. அதற்கு ஒப்பி இச்சொல்லைப் பற்றி இன்று சிந்திக்கின்றோம். ஒப்பீட்டு ஆய்வை இன்னொரு நாளில் கவனிப்போம்.

கல்யாணம் என்பது உண்மையில் கலியாணமே ஆகும். இதற்குக் காரணம் கல்லுக்கும் கல்யாணத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை. ஆனால் இச்சொல் பல இந்திய மொழிகளில் வழங்கி வருகிறது. அங்கெல்லாம் அது கல் என்றுதான் தொடங்குகிறது. நாம் கலியில் தொடங்குவதானது பிற மொழி வழக்குகளுக்கெல்லாம் இசையாமல் நம்மைக் கல்லாக்கிக் கொண்டு தொடங்குவதுபோலச் சிலரால் உணரப்படுதலும் இயல்பே ஆகும்.

தமிழ்ச்சொற்கள் பிற மாநிலங்கட்குச் செல்லுங்கால் இவ்வாறு சுருக்கப்படுதல் இயல்பு. கைலாசம் என்பதை கைலாஷ் என்றுதான் பிற மொழிகள் சுருக்கும். சுருங்கிய நிலையில் வந்து சேர்ந்த சொற்களை விரித்துப் பலுக்குதலும் காணப்படுவதே. எடுத்துக்காட்டு: ப்ரட் என்ற ஆங்கிலச் சொல் பிரட்டு என்று தமிழரிடை மாறுவது காண்க. எக் (முட்டை) என்பது எக்கு என்று ஒலிப்புறுகிறது. இதை நாம் மறந்துவிடவில்லை.

கல்யாணம் கலியாணம் என்பவற்றை விளக்கி யாம் எழுதியது
இப்போது கிட்டவில்லை.

இப்போது புதிதாகவே சிந்திப்போம்.

சங்க காலத்தின் பின்பு பெண்கள்மேல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆண்கள் பலர் ஏமாற்றிவிட்டு ஓடிவிடுதல் கூடுதலாக நிகழ்ந்தமையால் இவை விதிக்கப்படவேண்டி நேர்ந்தது.
கலி என்பது மகிழ்ச்சி என்று பொருள்படும். ஆணுடன் பழக அனுமதி பெறும் சடங்கே கலி + ஆண் + அம் ஆகும். சிற்றூரார் இன்றும் கலியாணம் என்றே சொல்வர். ஆணுடன் சேரும் நிகழ்வு என்பதே கலியாணம் என்பதன் பொருள். ஆண் என்பது யாண் என்று வருவது யகர உடம்படு மெய். அம் விகுதியாகும், இவ்வாறு அறியவே இது தமிழ்ச்சொல் ஆகிறது.

வாழ்க்கை விழுமிய நிலையை அடையத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது பண்டைத் தமிழர் கொள்கை. இதனடிப்படையில் எழுந்தது விவாகம் என்ற சொல்: வி+ வா + ஆகு + அம் : விவாகம், விழுமிய வாழ்வு ஆகும் தொடக்கச் சடங்கு. இது ஒரு சொற்சுருக்கப் புனைவு ஆகும். இரத்து என்பது இறத்து: இறு+ + து: இறத்து > இரத்து > ரத்து, இறுதல்: முடிதல்; இறுதி என்ற சொல்லும் இதில் வந்ததே. ஆக விவாக ரத்து என்பதை உணர்ந்து கொண்டீர்கள்.


செவ்வாய், 2 ஏப்ரல், 2019

சேனை

சேனை என்னும் சொல் முன்னர் விளக்கப்பட்டது.  அதை இங்குக் காணலாம்:


https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_20.html

 சேனை என்பது பல்வேறு பொருளுடைய சொல் என்பது இங்குத் தெளிவாக உள்ளது.

ஐயப்பாடுகள் யாவையேனும் இல்லாவிடின்  உங்கள் சிறுசேனைகளையும் கூட்டிவைத்துச் சொல்லிக்கொடுக்கலாம்.

சிறு சேனைகள் :  உங்கள் குழந்தைகள்.

சிறிசேனா என்பவர் இலங்கை அதிபர்.   அவர்பெயரும் இச்சொல்லுடன் தொடர்புபட்டிருப்பது மகிழ்வு தருவதே.

வீதியில் போய்வந்து கொண்டிருப்பவர்களும் சேனை எனப்படுவர்.  பலர் சேர்ந்த கூட்டமே சேனை.

சேர் >  சேர்நர்  .  சேர்நன்.

சேர்ந + ஐ =  சேர்நை >  சேனை.  என்று இலக்கணப்படி செல்லும்போதும் இதை இப்படி அமைக்க ஒரு கருத்து வாக்கியம் உதவி இருக்கக் கூடுமென்பதையும் மறுத்தற்கில்லை.

விளக்கம்:

வாக்கியம்:  அனைவரும் சேர்ந்து  செல்கிறார்கள்.

சேர்  ( சேர்ந்து )
அனை  (அனைவரும்  )

சேர் + அனை  =  சே +னை  =   சேனை என்று அழகாக சொல் வடிந்து வருகிறது.
என்றாலும் தமிழிலக்கண மரபு நோக்கி  சேர்ந் + ஐ  என்று சொல்வதும் பின் ரகர ஒற்று  கெடுதலும் ஐ கார விகுதி காட்டுதலும் பொருத்தமாக இருக்கும்.

இதனைப் பஜனை என்ற சொல்லுடன் ஒப்புவைக்கலாம்.

பாடு + அனைவரும்.
அனைவரும் பாடுவதுதான் பஜனை.  வேறு என்ன பஜனை.  சில மாதிரி பாட்டுக்களைத்தாம்  பாடுவார்கள். இது பாடல் தேர்வு முறையன்றி இதனால் ஒன்றும் சொல் அமையவில்லை.

டகர வருக்கத்துக்கு ஜ, ஷ முதலியன மாற்றீடாக வரும்.

பாடு + அனை >  பாஜ் + அனை >  பஜனை.

நெடில் குறில் குறுக்கம்.  பாடனை > படனை > பஜனை.
அனைவரும் என்பதில் அனை என்பதை விகுதியாக்குதல்.

அயற்சொற்களும் இப்படிக் குறுகும்:

ராஜா >>  ரஜினி. ( பெண் ).  ரா> ர.    அப்புறம் ஜ்+ இன் + இ.

தோண்டு > தொண்டை.  தோண்டியதுபோல் உள்ள உணவு மூச்சுக் குழல்.
தோ > தொ குறுக்கம்.

பாடனை(வரும்)  என்பது குறுகி பஜனை என்று வந்தாலும் சேனை என்பது குறுக வழியில்லை.  குறுகிச் செனை என்பது நன்றாக இல்லை.

அறிந்து மகிழ்வீர்.