புதன், 28 செப்டம்பர், 2022

கெளிறும் சனியன் பிடித்த நாரையும்.

கெளிறு என்பது ஒரு  மீன்வகை. இதற்கு ஓர் அழகான தமிழ்ப் பழமொழியும் உண்டு.   சில தலங்கள்  பாடல் பெற்றவை என்று அறியபடுதல் போல  இஃது ஒரு பழமொழி பெற்ற மீன்.  அந்தப் பழமொழி  யாதெனின்:  " சனியன்பிடிச்ச நாரை,  கெளிறைப் பிடித்து விழுங்கினது " என்பதுதான் அது.   கெளிறு என்பது செயப்படுபொருளாய் வருகையில்  "கெளிற்றை" என்று இரட்டித்தல் வேண்டும். ஏன் ஐ விகுதி என்றால் அது விழுங்கியது விழுங்கலாகாத மீனை.  சனியன் பிடித்ததால்தான் அது அம்மீனை விழுங்கிற்று என்பதாம்.

தமிழ்ச் சொற்கள் பிறமொழிக்குச் சென்றால், திரிபு அடைதல் இயல்பு.  அஃது படாமல்,  மலாய் மொழிக்குச் சென்ற இந்த மீன் பெயர்,  "கெலி" என்று மட்டும் வருகிறது.  கெளிறு தொண்டையில் மாட்டிக்கொள்ள,  நாரை படாதபாடெல்லாம் பட்டிருக்கும்.  

நரிக்குக் கொக்குப் பிடிக்கத் தெரியாதது போல, நாரைக்கும் கெளிறு பிடிக்கத் தெரிவதில்லை.  நாய்க்கும் கொசுவைப் பிடிக்கத் தெரிவதில்லை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

சனி, 24 செப்டம்பர், 2022

கிழமைகளில் இறைவன் - [சனிக்கிழமைக் கவி]

 பற்றனெங்கு வணங்குகிறான் அங்கெல்லாம் வருவார்

பற்றனெப்போ பணிகின்றான் அப்பொழுதில் உருவாய்

உற்றுவரும்  உளதாகும் ஆற்றலவர் இறைவன்

எற்றோயாம் அவர்பாதம் பணிவின்றி உறைதல்?       1


பற்றன் -  பத்தன் - பக்தன். பற்றுதல் உடையோன்.

எப்போ - எப்போது,  இது கடைக்குறை, இறுதி -து நீங்கியது, பேச்சுவழக்கிலும் உளது.

ஆற்றலவர் - ஆற்றல் அல்லது சக்தி உடையவர்.

எற்றோ - என்ன?

உறைதல் - உலகில் இருத்தல்.


சரிவில்லா  நற்கிழமை  சனிக்கிழமை அலதோ?

புரிவில்லா  நாளதிலே  புலர்வில்லை பொழுதே

நெரிவில்லா நல்வாழ்வு நினைந்தடைக தொழுதே

கரைவில்லா  நலமாகும் கடந்துறைக பழுதே.


சரிவு -  வாழ்க்கை நிலை இறங்குதல், குறைதல்.

அலதோ -  அல்லவோ(பன்மை), அன்றோ.(ஒருமை)

புரிவு -  செயலாற்றுதல்.  முயற்சி

புலர்வில்லை - விடியல் இல்லை

நெரிவு  -  துயர்படுங்காலம்

கரைவு --செய்த முயற்சிகள் வீணாதல்.


அறிக  மகிழ்க

மெய்ப்பு பின்னர்

தாங்கி - தமிழ்

 போர்க்களத்தில் தாங்கிப்படை இறக்கப்பட்டு, அது எதிரியின்மேல் தாக்குதல் தொடுத்தது என்று தாளிகைச் செய்தி குறிப்பிடுகிறது. தாங்கி என்பது தொன்றுதொட்டுத் தமிழ்ப் பேச்சில் வழங்கிய சொல்லே.

இலக்கியமொழியில் தாங்கி என்ற இகர விகுதியில் முடிந்த சொல்,  தாங்கல் என்ற வடிவில் பதிவு பெற்று, பிங்கலந்தையிலும் குறிக்கப்பெற்றது.

தாங்கு என்பது அதற்கான வினைச்சொல்.

தாங்கு + இ = தாங்கி.

தாங்கு + அல் -=   தாங்கல்.

மனத்தாங்கல் என்ற தொடரும் வழக்கிலுளது.   இதில் உள்ள கருத்து என்னவென்றால்,  வாய்ப்பேச்சு முற்றி ஏசிக்கொண்டார்கள்,  ஆனாலும் கைகலப்பில் ஈடுபடாமல் விலகிக்கொண்டு, ஒருவருக்கொருவர் அதை நினைத்து வருந்திக்கொண்டோ வாய்ப்பேச்சு இன்றியோ இருகின்றனர் என்பது.  இச்சொல் இந்தி மொழியிலும் சென்றேறியுள்ளதென்பது காணலாம்.

நீரைத் தாங்கிக்கொண்டு இருக்கும் பெரிய பாத்திரம் அல்லது மண்குழிவு அல்லது மேல்நிறுவிய பெரிய தக்கர்,  தாங்கி எனவே குறிக்கப்பட்டது. இத்தமிழ்ப் பதம் பிற மாநிலங்களிலும் பரவிப் பின் ஆங்கிலமொழியிலும் கலந்தது.  நீர்ச்சேமிப்புப் பெரும் தாழியும் தாங்கி எனப்படும் - நீரைத் தாங்கிக் கொண்டிருப்பதால். 

இவற்றையும் வாசித்தறிக:

பிறவட்டு:  https://sivamaalaa.blogspot.com/2020/12/blog-post_11.html

பிறமொழிச் சொற்கள் https://sivamaalaa.blogspot.com/2017/05/blog-post_8.html

வீழருவி  https://sivamaalaa.blogspot.com/2017/03/blog-post_10.html

கண்டித்தல் https://sivamaalaa.blogspot.com/2019/04/blog-post_17.htm

Westerners learnt the word "bangle" from Bengal as people there were seen wearing vaLayal ( wristlet) there when the white man first appeared there. Similarly they learnt the word   "thanki" from India. This word by then had spread in several places in India. Thanki was corrupted to tank. The war weapon "tank" looked like water tanks and got its name by this comparison. 

வளையல் என்பதற்கு இன்னொரு பெயர் கைவளை. " கைவளை குலுங்க முத்து மாலை அசைய"  என்று  வருகிறது முத்துத்தாண்டவர் கீர்த்தனையில். (சீர்த்தனை). Also said to be Vengkata kavi. ( did not matter for knowing kaivaLai.. You may check up. I stop here.)


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

வெள்ளி, 23 செப்டம்பர், 2022

சகிப்பு எப்படி அமைந்தது

 அமண் என்ற சொல் சமண் என்றாகும்.  அகர முதலன சகர முதலாய்த் திரிதலென்பது பெரிதும் சொல்லாய்வு (திரிபியல்)  அறிஞர்களால் ஒப்பி ஏற்கப்பட்டதே.

இதனை முன்னிறுத்தி,  சகிப்பு என்ற சொல்லின் ஆக்கத்தை ஆய்ந்தறிவோம்.

வெளியில் காணும் பழக்கமில்லாத ஒருவனிடம் ஏதேனும் சரியாகச் சொல்லிவிட்டாலும் அதைத்  தவறாக எடுத்துக்கொண்டு சண்டைக்கு வந்துவிடுவதைக் காண்கிறோம்.  ஒரு கடையில் அமர்ந்து குளம்பிநீர் (காபி)  அருந்தும்போது ஒரு தேவதை போலும் அழகியைச் சற்று ஆசையுடன் ஒருவன் பார்த்தாலும் அவள் கோபித்துக்கொள்வாள்.  இவைபோலும் பல -- ஒக்க இருக்குங்கால் ஏற்படும் உரசல்கள், வீட்டினுள்ளும் எப்போதும் நடக்கும். ஆனால் அதற்காக வீட்டில் வாழ்வோர் யாரும் ஒருவருடன் மற்றவர் கோபித்துக்கொள்வதில்லை.  ஆகவே சகித்துக்கொள்வ தென்பது ஓரகத்தினுள் வாழ்வோருக்கு ஓர் அன்றாட நிகழ்வு என்பதைப் பண்டைச் சொல்லறிஞர்கள் கண்டறிந்தனர்.

சொல்லறிஞர் என்போர் வலிமையான விளம்பரப் பின்னணி உடையவராய் இருக்கவேண்டு மென்பதில்லை. விளம்பரம் ஒன்றுமற்ற அடக்கமுடைய அறிஞர்கள் வீடுகளுக்குள் குடத்திலிட்ட விளக்குப்போலப் பல்லாயிரவர் உண்டு.  அவர்களை நாம் அறியவில்லை என்பதற்காக அவர்கள் அறிஞர்கள் அல்லர் என்பது சரியன்று.  ஓர் அறிஞனை அவன் தன் ஆக்கமுடைமை கொண்டு தீர்மானிக்க வேண்டுமே அன்றி விளம்பரமுடைமை கொண்டு தீர்மானித்தல் தவறு.  பல சொல்லறிஞர்கள் நமக்குத் தெரியாமலே வாழ்ந்து மறைந்துவிடுகிறார்கள். சிலர் வாய்ப்பின் காரணமாய் அல்லது சூழ்நிலை முதலியவற்றால் மக்களால் அறியப்பட்டு புகழ் பெற்றுவிடுகிறார்கள்.

அகம்வாழ்வோர் முரண்பட்ட சுற்றுச்சார்புகளிலும் பொறுமையையும் அடக்கத்தையும் கடைப்பிடிப்போர்.  முரண்பாடுகள் வந்தாலும்  வீடு என்னும் அரண் அவர்களைக் காப்பாற்றிவிடுகிறது.  தாத்தா சொல்கிறார்;  அப்பா சொல்கிறார்,  அம்மா அன்பினால் முரண்பட்டவரையும் சரண்தொட்டு நிற்குமாறு  மாற்றிவிடுகிறார்.  இணக்கப்போக்கு எனற்பாலது இல்லத்தின் நலந்தரு விளைவு ஆகும்.

அகம் -  சகம் ஆகிற்று.  சகம் என்பதிலிருந்து சகித்தல் என்பது தோன்றியது.  இதற்குச்  சொல்லமைப்புப் பொருள்,  அகத்தில் நடப்பதுபோலப் பொறுமையுடன் நடந்துகொள்வது.

மரம் > மரித்தல் என்பவற்றில் உள்ள உறவினைப் போன்றது இதுவாகும். மரத்திற்கு உயிரோ உணர்வோ இலது என்று ஒருகாலத்தில் எண்ணினர். அவற்றுக்கு உணர்வு உண்டு என்பதை ஜெகதீச சந்திரபோஸ் முதலிய அறிஞர் காட்டினர்.

ஆகவே சகிப்பு இவ்வாறு தோன்றிய சொல்தான் என்பதை அறிக.

இங்குள்ள பூசாரிகளில் எவனும் ஒருவன்,   எப்படி வெளிநாட்டு மொழியைக் கற்று அதில் பூசைக்குரிய சொற்களைக் கோத்து  ஆராதனை செய்வான்?  ஓரிருவர் அல்லர், பல்லாயிரவர் ஒரு குழுவாகக் கற்றுப் பணி செய்து அணி செய்தது எவ்வாறு?   சமஸ்கிருதம் என்பது தமிழின் நிழல் மொழி.  வீட்டுத் தமிழிலிருந்து மரத்தடி நிழலில் தோன்றிய மொழி.  இதை இங்கு விளக்கும் வழியால் உணர்ந்து கொள்ளலாம்.  

சகிப்பு -  ஓரகத்து ஒருங்கு வாழ்தலினால் ஏற்படும் புரிந்துணர்வு என்று இதனை  வரையறவு  (definition) செய்தலே சரியாம். அவ்வாறு வாழ்தலாகிய அதனின் விளை பொறுமைப் பண்பு.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

மீள்பார்வை: 24092022 1421 செய்யப்பட்டது.

புதன், 21 செப்டம்பர், 2022

சாசனம் - பொருண்மை.

 இப்புவியில் உள்ள பொருள்களில் தன் நிலையான இருத்தலுக்குப் பிறபொருளைச் சாராமைகொண்டு இயல்வதே  உண்மைப் பொருளாம். அப்பொருளை மெய்ப்பிக்க இன்னொரு பொருள் தேவையில்லை. அப்பொருளை உளதாய் ஆக்குதற்கு இன்னொன்று தேவையில்லை.  அது தானே இயல்வது.  காலத்தால் அழிவது எப்பொருட்கும் இயல்பு ஆயினும் பன்னெடுங்காலம் அது இயல்வதாயின், காலத்தால் அழியாமையை நெருங்கி நிற்கும் தன்மை அஃது உடையது என்று நாம் கொள்ளலாம்.  ஒரு மண் பாண்டத்தில் ஒன்றை எழுதிக்கொடுத்தால் அஃது விரைவில் அழிதல் தன்மை உடையதாகிவிடும் .  ஒரு பொற்பட்டையிலோ செப்புப்பட்டையிலோ எழுதித்தரின், அது நெடுநாள் உலகி லுள்ளோருக்குக் காணக்கிடைக்கும் என்று அறிக.

நெடுநாள் அழியாதிருத்தலுக்கு.  ஒருபொருள் தன்னைத் தான் சார்ந்திருத்தல் வேண்டும்.  

சாசனம் என்பது நீண்டநாள் நிலைத்திருக்கும் தன்மையை உடைய ஓர் ஆக்கம் ஆகும்.  இச்சொல்லில் இரண்டு உறைவுச்சொற்களும் ஒரு விகுதியும் உள்ளன.   அவை:  சார்(பு);  தன்;  அம் (இது விகுதி).

சார்பு என்பதில் "சார்"  என்பது வினைச்சொல்.  இது கடை எழுத்தாகிய ரகர மெய் மறைந்து  "சா"  என்று நின்றது.

தன் என்பது சன் என்று திரிந்தது.  இது எவ்வாறு எனின்,  தங்கு என்ற சொல் சங்கு என்று திரிந்ததுபோலுமே ஆகும்.  ஓட்டினுள் தங்கி இருக்கும் உயிரியே சங்கு ஆகும்.  தன் > சன்; தங்கு> சங்கு.   அரசன் தரும் விருந்தோம்பலுக்குத் தங்கி உண்டுமகிழ்ந்து,  பின் அவன்முன் பரிசில் பெறும் இடம் சங்கம் ஆனது காண்க.  தங்கு> சங்கு> சங்கம் என்று திரிந்தது போலாம்.  அமைதல் காட்டும் விகுதியே அம் ஆகும்.

ஒரு சான்று வேண்டின் தன்னைத் தான் மெய்ப்பித்துக்கொள்வது:  சார்+ தன் + அம் > சா+ சன் + அம் > சாசனம் ஆனது. "தன்னையே சார்ந்தியல்வது". ஒரு சாசனத்துக்கு வேறு சான்று வேண்டாமையே அதன் பொருண்மை.

இதன் மூலச்சொல் சார்தனம் எனற்பாலது அவ்வடிவில் கிட்டாமைக்கு, அச்சொல் வெகுநாள் பண்டை அரசுகளில் புழக்கத்திலிருந்து திரிந்து பின்னர் எழுத்தில் அதனைப் பதிந்தோரால் அறியப்பட்டமையே காரணமாம் என்பது தெளிவாகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

edited on 23092022


பேரக் குழந்தைகளுடன் வனஜா





வனஜா அம்மையார் இந்தப் படத்தில் தம் பேரக்குழந்தைகளுடன் தோன்றுகிறார்.

ஆசிரியப்பா

சோறும் பாலும் ஊட்டி மகிழ்ந்தபின்

ஆரத் தழுவி  அன்புமுத் தமிட்டுக்

கூறும் கதைபல  இருவரும் மகிழ

மகிழ்வினைக் கண்ட பாட்டி வனஜா

நெகிழ்வுடன் ஓடி  ஆடியும் பாடிய

அந்த நாள்தனை இன்று 

முன்தரும் படங்கள் கண்டுமகிழ் வீரே..

 


சனி, 17 செப்டம்பர், 2022

சின்னப் பிள்ளை

 இது தார்சா  பிள்ளையின் படம்.  ( கீழ்வருவது இன்னிசை வெண்பா)

அம்மாவைப்  போலொரு கைப்பையைத் தானெடுத்துச்

சும்மா சுழன்றுவரப் போகிறேன் என்கின்றாள்

இம்மா நிலத்தே இதுவும் அறிகபெண்ணே

உம்மால் இயலாமை இல்.

தான் எடுத்து - தான் கையிற் பிடித்தபடி

சுழன்றுவர -  ஊர்கோலம் செல்ல

இம்மாநிலத்தே -  இவ்வுலகில

உம்மால் - உன்னால் என்பதன் பன்மை

இயலாமை -  செய்ய முடியாத எதுவும்

நீ  திறமைசாலி என்பது கருத்து.



தார்சா படத்தில்.



வெள்ளி, 16 செப்டம்பர், 2022

நீர் என்ற சொல் தமிழ்

 பனி என்பது அருவிபோல் ஓரிடத்தில் ஊற்றி, வீழ்ச்சி அடைவதில்லை. விரிந்த நிலப்பகுதியில் பரவலாகச் சிறு சிறு துளிகளாகிக் கீழிறங்குவது.  ஆகவே,  துளிகள் பலவாகிப் பெய்வது ஆகும்.  இக்கருத்தில்,  பலவாய்ப்  பரவி வீழ் துளி என்பதால் பல் என்ற சொல் தொடர்புபட்டு நிற்கின்றது.

பனியும் ஒருவகை நீர் தான்.  ஆகவே இது பல் + நீர் =  பன்னீர் ஆகிறது.  பன்னீர் எனின் பலதுளிநீர் என்பதுதான்.

கடையில் விற்கும் புட்டிப் பன்னீர்,  செயற்கை முறையில் ஆனது ஆகும். இதற்குப் பன்னீர் என்பதுதான் பெயராய் வழங்கிவருகிறது.

இரவில் பெய்யும் நீரும்  "பல துளிகள்" தாம்.  ஆகவே பொருளைப் பின்பற்றிச் சொல்வதானால், அதுவும் பல் நீர்.  இவ்விரு சொற்களும் கூடி,  பல்நீர் >  பன்னீர்> பனி ஆயிற்று.  இறுதி ரகர மெய்யெழுத்து மறைந்தது.  பன்னீ(ர்)"   > பனி ஆயிற்று.

தண்ணீர் என்பது "தண்ணி" என்று பேச்சுவழக்கில் வருவது போலும் இங்கு ரகர மெய் வீழ்ந்தது.  இடைநின்ற   னகர ஒற்றும் குறைந்தது. "0னீ" என்பதும் குறுகி, "0னி" ஆனது.  நாலெழுத்துக்கள் குறுகி அமைந்து இரண்டு ஆனதில் மூன்று திரிபுகள் உள்ளன.

இரவில் பெய்வது நீரே ஆனாலும் அதைப் பனி என்பது சிறப்புப் பொருளது ஆகும். குளத்து நீர் வேறு; பெய்யும் பனி நீர் வேறு என்று நாம் கருதுவது இதற்குக் காரணமாகும்.  இச்சொல் வெளிமாநில மொழிகளில் பாணி என்று நீண்டொலித்து, பொதுப்பொருளில் வழங்குவதைக் காணலாம்.  தமிழில் வழங்கும் சில சிறப்புப் பொருட்சொற்கள் பிறமொழிகளில் பொதுப்பொருளில் வழங்கும்.  இதற்கு மாறாக, வெள்ளம் என்ற நீர்ப்பெருக்கைக் குறிக்கும் சொல், மலையாள மொழியில் தண்ணீர் என்ற பொருளில் வழங்கக் காணலாம். தமிழில்போல சமஸ்கிருதத்தில் நீர் என்பது பொதுப்பொருளில்தான் வழங்குகிறது.

நிலம் இறக்கமாக உள்ள இடத்தில் நீர் நில்லாது ஓடுவது ஆகும்.  ஆனால் சமதரையில் உள்ள நிலக்குழியுள் அடங்கி நின்றுவிடும்.  ஆகவே அதன் நிற்கும் தன்மை கருதி,

நில் >  நிர் > நீர்  ஆயிற்று.

இதை,  முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்று கருதவேண்டும்.  முதலெழுத்து நில் > நீல் என்று நீண்டு,  பின் லகர - ரகரத் திரிபாக  நீர் என்று ஆனது,  ஓடை என்பதும் நீர்தான் என்றாலும் அது ஓடுகின்ற நீர் என்று அறிக.   நீர் என்பது ஓடாத நிலையினது ஆகும்.  இது மிகப் பழைய சொல்லாதலின்  அதன் பொருள் இப்போது சிந்தித்தாலே வசமாவது காண்க.

இதிலிருந்து தமிழன் நீரை அறிந்தது அது நிற்கும் நிலையில் என்பது தெளிவாகத் தெரிகிறது.  தமிழின் சிறப்பு என்னவென்றால்,  பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டாலும், தமிழின் சொற்பொருளை இன்றும் நாம் அறிந்துகொள்ள முடிகிறது என்பதுதான்.

பண்டைத் தமிழன், அகத்தியனாரின் பல்லாயிரம் ஆண்டு முன்வாழ்ந்தவன், கடலில் இறங்கினால் இறந்துவிடுவேன் என்று அஞ்சினான்.  அதனாலே அது கடத்தற்கு அரிது என்று கருதி, அதைக் கடல் என்றான்.  ( கட அல் ).[ கடத்தற்கு அல்லாதது ]  அப்புறம் மிதப்புவீடு செய்து, அதைக் கடப்பல் என்றான்.  இதில் டகரம் இடைக்குறைந்து அது கப்பல் ஆனது.  கடப்பல் உண்மையில் ஒரு கடப்பலகை ( கடக்கும் பலகை) ஆகும். இவ்வாறு மிதவூர்திகள் பல உள்ளன.   அவற்றை இங்குக் கருதவில்லை.  இரும்புக் காலத்தின் முன் மரங்களே இவற்றை அமைத்தற்குப் பயன் தந்தன.  வினைத்தொகையில் வலிமிகாது. இந்த விதி அமையுமுன் கப்பல் என்ற சொல் திரிந்து அமைந்துவிட்டது என்பது உணர்க. மேலும் இது மக்கள் அமைத்த சொல்.  கடவுதல் என்பது செலுத்துதல் என்றும் பொருள்தரும்.  கடவுப்பலகை > கடப்பலகை > கடப்பல் > கப்பல் என்று அமைதலும் அது. பலவழிகளில் இதை நிலைநிறுத்துதல் கூடும்.

நிற்பது நீர் ஆதலின், இது தமிழாதல் பெற்றாம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

நிறுத்தக் குறிகள் சேர்க்கப்பட்டன: 18.9.2022  0330


வியாழன், 15 செப்டம்பர், 2022

நாடு + அன் சொல்லாக்கம்.

 தமிழ்ப் புணரியல் இயல்புகளைச் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டியது ஒரு முதன்மை வாய்ந்த செயலாகும்.

நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் வாக்கியத்தில்  நாடு + இல் ( இது இல் என்ற வேற்றுமை உருபு )  என்று புணர்த்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.  இது உண்மையில் " நாட்டில்"  என்றுதான் வரும்.  நாடில் என்று வருவதில்லை.  இவ்வாறே வேற்றுமை உருபு இல்லாதவிடத்தும், எ-டு:  நாடு+ ஆர்  எனில், நாட்டார் என்றே வரும்.  " நான் பேசினாலும் நாட்டார் பேசக் கூடாது " என்ற வாக்கியத்தின் மூலம் இதை உணரலாம்.  நாட்டைச் சேர்ந்தவர் " நாட்டார்".    இது நாடார் என்று முடியவில்லை.  நாம் " நாடு" என்ற இடப்பெயரைப் பற்றி இப்போது விரித்து உரையாடிக்கொண்டிருக்கிறோம்.

இனி  அவன், அவர் என்று பொருள்படும்  அன்,  அர், ஆர் என்ற விகுதிகள் பொருந்திய சொல்லாக்கத்தினைக் காண்போம்.

நாடு +  ஆன் >  நாட்டான்.

[  கடன் வாங்குவதானால் நாட்டானிடம் வாங்கக்கூடாது ---  வாக்கியம் ]

நாடு + அன்  > நாடன்.

ஈர்ங்குன்ற நாடன்  ( குளிர்ச்சி பொருந்திய நாட்டை உடையவன் )

நாடு + ஆர் >  நாட்டார்.

இது ஒரு பட்டப்பெயர்.  இது நாடு + ஆர் என்றவை புணர்ந்தெழுந்த பட்டம்.

நாடு  + ஆர்

இதுவும் ஒரு பட்டப்பெயர்.  நாடு ஆர் > நாடார் ஆனது.

வாக்கியம்:  காமராச நாடார் பெருந்தலைவர்.

நாடு+ ஆர் என்பதுமட்டும் மூன்று வகைகளில் புணர்ந்து சொற்களை உண்டாக்கி உள்ளது.

மொழிக்குச் சொற்கள் தேவைப்படுகையில், இரட்டித்தும் இரட்டிக்காமலும் சொற்கள் உருவாக்கப்படும்.  இதில் புணரியல் விதிகள் கருதப்பட மாட்டா என்பதை உணர்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு: பின்.


வெள்ளி, 9 செப்டம்பர், 2022

காலில் வரும் இனிப்புநீர்த் துளை

காலுக்குத் துளைபோடும் வியாதியொன் றுண்டென்றால்

அதுதானே இனிப்பு   நீராம்; 

காலிலும் துளையுண்டு;   நெஞ்சுக்கும் அடைப்புண்டு; 

மூளைக்கும் வெடுப்பு முண்டாம்;

தோலையும் பாலையாய், விழியையும் இரவாக்கி, 

பல்லீறும் குடைந்து  சேதம்;

வாலைமுதல் ஈதெல்லாம் வழிமாறிச்  செலவாழ்ந்த

வண்புகழர்   எண்விர லாலே.


இது எழுசீர்க் கழிநெடி லடி ஆசிரிய விருத்தப்  பா.  இனிப்பு நீர் நோயினால் வருந்துவோர் பல்வேறு தொல்லைகளை எதிர்கொள்கின்றனர். இறுதியில் வாழ்க்கையும் முடிந்துவிடுகின்றது. உடலின் ஒவ்வொரு பகுதியும் வருத்தம் தருகின்றது. இவற்றை எல்லாம் அடக்கியாண்டு வாழவேண்டியுளது.  இதைக் கூறுவதே இப்பாடல்.



இனிப்புநீர் - நீரிழிவு என்றும் பெயர். " டயபீடிஸ்"

தோலைப் பாலை ஆக்குதல் - தோலை முடியில்லாமல் ஆக்கி நீர்ப்பசை வற்றவைத்துச் சிறங்கு முதலியன உண்டாக்கி இறுதியில் சீழ்த்துளை ஏற்படுத்துதல்.

காலில் வரும் " காங்க்ரீன்"

நெஞ்சுக்கு அடைப்பு  -  இரத்தக் குழாய் குறுகிமூடல்.

மூளைக்கு வெடுப்பு  - மூளையில் வெடிப்பு;  இடைவெளி விரிசல்.

விழியை இரவாக்கி - கண்களைக் குருடாக்கி.

குடைவு -  பல்லீறில் ஏற்படும் பைத்துளைகள்,   - பல்லுக்கும் ஈறுக்கும் இடையில் ஏற்படும் இடைத்தோடுகள்.

வழிமாறி -  நோய் தன்னைத் தாக்காமல் வேறு வழியில் போவது

வாலை - இளம்பருவம்

எண் -  எண்ணிக்கை. விரலாலே:  விரலால் எண்ணிவிடலாம்.

ஈதெல்லாம்:

ஈது - இது ஒருமை; எல்லாம் - பன்மை.  இவ்வாறு ஒருமை பன்மை மயக்கமாக ( கலப்பாகவும்)  சொல்வது மரபு.  "கொடுத்ததெல்லாம் கொடுத்தார்"  என்ற தொடரில், பல முறை கொடுத்தாலும், கொடுத்தல் ஒன்றே செய்தார் என்ற ஒருமைச் செயலால், ஒருமை பன்மைக் கலப்பாகச் சொல்வது சரியாகும்.  ஆக்கியது எல்லாம் ( பரிபாடல், 6.57).  இன்னும் பல உள. ( இதை யாரும் கேட்கவில்லை, உங்கள் சிந்தனைக்குச் சொல்கிறோம்.)   பல தொல்லைகள் என்றாலும் ஒரே நோய் விளைத்தது என்பது கருத்து.

கல்லா உலக நூல் ஓதுவது எல்லாம் ( நாலடியார் 140)  என்பதுமது.

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றவை

தள்ளினும் தள்ளாமை நீர்த்து என்பது குறள். 596.

மின்னுவ தெல்லாம் பொன்னல்ல (பழமொழி)



சொடுக்கி வாசிக்க:-

வியாதி  ( சொல்விளக்கம்):   https://sivamaalaa.blogspot.com/2017/08/blog-post_14.html

சேதம் :  ("  "   " )    https://sivamaalaa.blogspot.com/2020/06/blog-post_10.html

குடைந்து சேதம்  -  இங்கு வலி மிகாது  (புணரியல்).


படம்:










அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

வியாழன், 8 செப்டம்பர், 2022

வினாயகர் அருள்.

அருள்வினை    ஆயகரால்  ஆவனநற்  பேறாய்,

இருள்தீர இவ்வுலக வாழ்க்கை --- தெருள்மிளிர,

எவ்வா  றெனினுமே ஒவ்வாமை ஓடிவிடும்

வௌவாது நாவாய்  அலை.


இவ்வெண்பா எளிமையாகவே உள்ளது
வினை ஆயகர் என்று பிரித்துச் சொன்னது, அதுதான் அவர்தம் வானுலகத் தொழில் என்பது உணரவைத்தற்கு..  அவரே  வினாயகர்.  அவர்தம் அருளால் ஒவ்வாமை உணவிலாயினும் பிறவற்றிலாயினும் மாறிவிடும்.
வௌவாது என்றது :  கடல் அலையும் உங்களைக் கவிழ்க்காது என்றபடி. நாவாய் --- கப்பல்.   இது கடப்பல் என்ற சொல்லின் இடைக்குறை. விளக்கம் இங்குக் காண்க:  https://sivamaalaa.blogspot.com/2021/10/blog-post_8.html

அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்.

பார்வை:  10092022




அ 

ஓணம் பண்டிகை வாழ்த்து

 ஓணத்தின் திருவமைந்த  உயர்ந்தநன் னாள்தன்னில்,

காணத்தண் மகிழ்வினிய  கனியுடனே ஈரெட்டாய்

ஊணயின்றே அடைதுவைந்த குழைவுடனே உட்கொண்டு

மாணியன்ற கலந்துறவில் தாமகிழும்  கேரளமே.


ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.


பொருள்:

தண் -  குளிர்ந்த

கனி -  வாழைப்பழம்  முதலியவை

ஈரெட்டாய் -  16 வகை பக்கணங்களுடன் ( பட்சணங்களுடன்)

சோற்றுக்குப் பக்கத்தில் வைக்கும் கறிகள்

பக்கணம் :  பகு+ அணம்.   பட்சணம் திரிபு.

பகுத்த கறிகள் எனினுமாம்

ஊண் அயின்று =  சோறு சாப்பிட்டு

அடைதுவைந்த குழைவு -  அடைப்பிரதமம் என்னும் பாயசம்

மாணியன்ற -  பெருமிதம் தருகின்ற



திங்கள், 5 செப்டம்பர், 2022

பாலை வனம்

பாலை என்ற சொல்  தமிழ்மொழியில் தொன்மைதொட்டு வழங்கிவரும் சொல்லாகும்.  பிற்காலத்தில் அது நீண்டு " பாலை வனம் " என்று வழங்கிற்று. பாலை என்பது மிக்க வன்மை உடைய இடமாகும். முதலில் வனம் என்ற சொல் எவ்வாறு அமைந்தது என்று தெரிந்துகொள்வோம்.

சங்கம் இயங்கிவந்த காலத்துத் தமிழை நோக்க,  பிற்காலத்தில் தமிழில் சொற்கள் நீண்டுவிட்டன.  இதைத் தெரிந்துகொள்ள, இக்காலத்தில் உள்ள தமிழ்ச் சொற்களில்  ஒரு பத்தினை எடுத்து, இச்சொற்கள் சங்க இலக்கியத்தில் எவ்வாறு வந்துள்ளன என்று பட்டியலிட்டு அந்தப் பட்டியலை மனனம் செய்துகொள்ளுங்கள். செய்யவே சொற்கள் நீண்டன என்பது தெரியலாகும். இவ்வாறின்றி வெறும் கருதுகோள்களை உண்டாக்கிக்கொள்ளலாகாது.

[மனம் > மனன் ( போலிச்சொல்)  , மனன்  + அம் >  மனனம்.

அம் விகுதி அமைத்தல் என்ற வினையின் அடிச்சொல்.   எ-டு:  அறு+ அம்= அறம்- அறன் என்பதுபோல.  ஆகவே, மனத்தினுள் அமைத்துக்கொள்ளுதல் என்பது சொல்லமைப்புப் பொருள்.பாராயணம் என்பதும் அது.  ]

பாராயணம் >   பாராமை + அணம் >  பாராயணம்.

பாராமல் ஒரு நூலிலிருப்பதை அணவுதல் என்போம் .  அணவுதல், அணாவுதல் என்பன, நூலை நெருங்குதல் (   நூற்பொருளைச் சொல்லுதல்).

பழங்காலத்தில் நூல் என்றால் அது காகிதக்கட்டினைக் குறிக்கவில்லை.  மனத்தினுள் அமைந்திருந்த நூற்பொருளைக் குறித்தது.  நூலை எழுதிவைத்தல் என்பது பிற்கால வழக்கு.  

ஒரு காலத்தில் நூல்களின் எண்ணிக்கை பெருகி,  படிப்பதற்கு அதிகம் என்று மாணவன் சலித்துக்கொள்ளுமளவுக்குச் சென்றதனால், வாத்தியார் கேட்கமாட்டார் என்று அறிந்தகொண்டதை மாணவன் மனப்பாடம்  செய்யாமல்  விட்டுவிட்டான். இப்படியே பலவற்றை விட்டவன்,  நூலறிவில் சற்று மட்டமாகிவிடுவான்.  இதையறிந்த ஔவைப் பாட்டி, "நூல் பல கல்" என்று அறிவுறுத்தினார்.  இக்காலத்தில் (ஒளவை வாழ்ந்தபோது)  நூல்கள் பல இருந்தன. ஆகவே தமிழில் நூல்கள் மிக்கிருந்தன என்று முடிவு செய்கிறோம்.  ஆனால் எல்லாம் ஓலைகளில் நினைவுகளில்  இருந்தன. இப்போதுபோல இல்லாமல் கடைகள் குறைவு.  எந்தப் பண்டிதரையாவது நாடிப் போய் தட்சிணை ( தக்கிணை,  தக்க இணை)  கொடுத்துத்தான் நூலைப் பெற்று வந்து படிக்கவேண்டும்.  ஆகவே நூல்பல கல் என்றால் பலவாறும் முயன்றே படிக்கவேண்டும் என்று பொருள். குழாயைத் திறந்தவுடன் தண்ணீர் கிடைக்கும் காலமன்று அது. நூலை நாமே பார்த்து எழுதிக்கொள்ளவேண்டியிருக்கும்.  இன்றேல் மனனம்  அல்லது பாராயணம் செய்துகொள்ளவேண்டும்.   ஆகவே  நூல் உங்கள் மனத்தினுள் இருந்தது என்றும் பொருள். ஆசிரியனிடம் கெஞ்சிக் கூத்தாடி நூலை உங்கள் மனத்தினுள் கொண்டுவரப் பாராயணம் முழுக்க முழுக்க வேண்டிய ஒன்றாம். அப்படி வளர்ந்த மொழிதான் தமிழ்.

இப்போது வனம் என்ற சொல்:

வனம், வனாந்தரம் என்பன காடு என்ற பொருளிலும் வரும்.  பிற:  காடு,  சோலை,  இடுகாடு, என்பன.  கம்பரில் தண்ணீர் என்ற பொருளிலும் வருகிறது.

வன்மைப் பொருள் எவ்வாறு பொருந்துகிறது என்று காண்போம்.

திரிபு:  வல் > வன்>  வனம்.

லகரம் 0னகரம் ஆகும்.

இனி,  வன்மை + அம் >  வன்+ அம் > வனம்.

தமிழாசிரியர் இவ்வாறு காட்டவிடினும்,  லகரம் புணர்ச்சியிலும் அல்லாதவிடத்தும் வன் என்று  திரிதலை உடையது. இப்போது னகர ஒற்றில் முடியும் சொற்கள் பல, பழந்தமிழில் லகர ஒற்றில் முடிந்தவை.  இத்தகு லகர னகரத் திரிபு,  மொழிப்பொதுமை உடையது. (  Not language specific).

இன்னொரு காட்டு:    கல் > கன் > கனம்.

கல்லின் தன்மை கனமாய் இருப்பது.

வன்மைப் பொருளிற் போந்த வனம் என்னும் சொல்,  பின்பு பிற பொருள்களிலும் தாவி வழங்கியது.  எ-டு: வனம் >  வனப்பு.

கவர்ச்சியிலும் வன்மை மென்மை உள்ளபடியினால்,  வலிமைக் கருத்திலிருந்து அழகுப் பொருள் தோன்றுவதாயிற்று.  அழகரசி ஆகிவிட்ட பெண்,  மக்களிடை ஓர் வலிமை வாய்ந்த இடத்தை அடைந்துவிடுதலைக் காண்கிறோம்.  இவ்வாறு பிற பொருள் வளர்ச்சிகளையும் உணர்ந்துகொள்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

We made some changes to the text but the original came back, We do not know why. Anyway the post is still readable.  Thank you readers.




வெள்ளி, 2 செப்டம்பர், 2022

வரன், வரித்தல், வருதல் பொருள்.

இன்று வரன் என்ற சொல்லை அறிந்துகொள்வோம். இதை மாப்பிள்ளை என்ற சொல்லுடன் ஒப்பிடலாம்.

மாப்பிள்ளை என்போன், ( பிள்ளை- )பெண்கள் உள்ள ஒரு குடும்பத்தானுக்கு "வருபவன், " அவனுடைய மகன் போலும் ஒரு நிலையை அடைவோன்,  அவன்றன் மகன்களில் ஓர் பெருமை உடையவனாய்க் கருதப்பட்டவன் என்பவற்றை மனத்தில் இருத்தவே,  அவனை மாப்பிள்ளை என்று குறித்ததன் காரணத்தையும் உணர்ந்து கொள்ளலாம்.  மா - பெரிய,  பிள்ளை -  இங்கு மகன் என்று பொருள்.   மகனாய் மருவியவன் என்ற பொருளிலே மருமகன் என்ற சொல்லும் உண்டாயிற்று.

இதில் ஏன் வல்லெழுத்து மிக்கு வந்தது என்பதற்கு ஒருசொன்னீர்மைப் படுதலும் ஒரு காரணமாகும்.

வரன் என்றும் இவன் அழைக்கப்பட்டான். இதற்குக் காரணம் இவன் வேறு வீட்டில் பிறந்து வளர்ந்து, மணவினை மூலமாய்க் குடும்பத்தில் வந்து இணைதலால்.  இதற்குரிய வினைச் சொல்  வருதல் என்பதே ஆகும்.   வருதலால் வரன்.

வரித்தல் என்பது  வரு+ இ  >  இங்கு ( பெண்வீட்டுக்கு வருதல்) என்ற பொருள் தரும்  சொல்லே..அடுத்தல் என்ற சொல்லினின்று அடித்தல்  ( அடு+ இ)  என்பது தோன்றியது போலுமே இது. கோடு வரித்தலும்  முன்னுள்ள இடத்தினின்று தன் இடம் நோக்கி வரும்படியாக இழுத்துக் கோடு வரைதலால் ஏற்பட்ட சொல்லே ஆகும்.   மணமகளுக்கு வரிகள் வரைவதால் இச்சொல் மணத்தல் என்ற பொருளுடையதாயிற்று என்பர்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

Edited: 13.11.2022. 0854




ஆங்கில இலக்கணத்தில் இறந்த காலம்.

ஆங்கில இலக்கணம்.  கேள்வி  - பதில்.

வாக்கியம்:

........... many private hire vehicle drivers, who are previously taxi drivers and at the average age of 60, they are zealously learning and coping with the industry-related technology and skills.......( This sentence is from a publication: The Independent Sg.)

"who are previously taxi drivers"   

இது சரியா?

பதில்:  "ஆர்" ( are  ) இப்போது உள்ளவர்களைக் குறிக்கிறது.

இவர்கள் முன்னர் வாடகை உந்து ஓட்டுநராய் இருந்தவர்கள்.  இது "பிரிவியஸ்"  என்ற சொல்லில் அடங்கிவிட்டது..  இறந்தகாலம்தான்.

"Were previous"  is redundant. 


அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்