வியாழன், 8 செப்டம்பர், 2022

ஓணம் பண்டிகை வாழ்த்து

 ஓணத்தின் திருவமைந்த  உயர்ந்தநன் னாள்தன்னில்,

காணத்தண் மகிழ்வினிய  கனியுடனே ஈரெட்டாய்

ஊணயின்றே அடைதுவைந்த குழைவுடனே உட்கொண்டு

மாணியன்ற கலந்துறவில் தாமகிழும்  கேரளமே.


ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.


பொருள்:

தண் -  குளிர்ந்த

கனி -  வாழைப்பழம்  முதலியவை

ஈரெட்டாய் -  16 வகை பக்கணங்களுடன் ( பட்சணங்களுடன்)

சோற்றுக்குப் பக்கத்தில் வைக்கும் கறிகள்

பக்கணம் :  பகு+ அணம்.   பட்சணம் திரிபு.

பகுத்த கறிகள் எனினுமாம்

ஊண் அயின்று =  சோறு சாப்பிட்டு

அடைதுவைந்த குழைவு -  அடைப்பிரதமம் என்னும் பாயசம்

மாணியன்ற -  பெருமிதம் தருகின்ற



கருத்துகள் இல்லை: