சனி, 28 அக்டோபர், 2023

பாண்டு, பாண்டியர், மற்றும் தொடர்புடைய சொற்கள்.

 தலைப்பிற் கண்ட சொற்களுடன்  சிறிது நேரம் செலவிட்டு அவற்றை அறிந்துகொள்வோம்.

பாண்டியன் என்ற சொல்லைப்  "பண்டு " என்ற சொல்லுடன் சேர்த்துக் கவனித்த சில தமிழறிஞன்மார்  பாண்டிய அரசகுலம்  மிக்கப் பழமைவாய்ந்த  மரபாக இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.  இது மிகவும் சரியானதாகவே தோன்றுகின்றது.  எப்படி என்று வினவலாம்.   மூன்று முடியுடை வேந்தருள் ஒருவரே ஆதியில் இம்மரபினைத் தோற்றுவித்தவராக இருந்திருக்கவேண்டும். பாண்டியர்களே அவ்வாறு செய்து நிலைநாட்டினர். மேலும் முச்சங்கங்கள் நிலவின என்ற வரலாறும் பாண்டிய மன்னர்களை  முன்னிலைப்படுத்திய  வரலாறாகவே சொல்லப்படுகிறது. மேலும்  தென்னாடு என்பது நீண்ட கடற்கரையை உடையதாகவே இருந்துள்ளது.  இந்தியாவின் ஆதிக்குடிகள் என்போர்  பெரும்பாலும்  கடல்நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டு,  மீனுணவு உட்கொண்டு வாழ்ந்தவர்களே. அவர்கள் தெய்வம் மீனவப் பெண்தகையான மீனாட்சியே.  அது உண்மையில் கடல்நாகரிகமே, அதாவது மீன்நாகரிகமே.  அவர்கள் நாட்டைப் பிடித்து ஆண்டாலும் மீனே அவர்களை ஆட்கொண்டு சிறந்தது.  நீரிலிருந்து துள்ளி எழுந்து விழும்போது,  இந்த மீன்கள் மின்னின,  மின்னுதல் >  மின் > மீன் என்பது முதனிலை நீண்டு அமைந்த தொழிற்பெயர்.  தகைமையில் இம் மீன்கள் விண்மீன்களை ஒத்தன.  ஆறுகளிலும் மீன்கள் கிடைக்குமென்றாலும்  நிலம்சார்ந்து வாழ்ந்தோருக்கு  மற்ற உணவுகள் ஒத்த அளவிலோ மேலாகவோ கிட்டின.  இம் முன் மரபினரோவெனின் மீனைத் தம் கொடியிற் பொறித்தது இயல்பானதே ஆகும். இவர்களின்  முதல் ஆட்சித் தலைமை ஒரு பெண்ணாகவே இருந்தமையால்,  அவர்  மீனாட்சியம்மை யாகினார்.  வாழ்க மீனாட்சியம்மை மகிமை.

பாண் அடிச்சொல் வந்த மற்ற சொற்பயன்பாடுகள்: 

கேரளத்து மலைகளில் தமிழ்ப் பேசிய குறவர்கள்,  பாண்டிக்குறவர் எனப்பட்டனர்.  பாண்டி என்பது அவர்கள் பழங்குடிக் குறவர்கள் என்ற பொருட்டாகும்.  இதன்மூலம் பாண்டி என்ற சொல்லுக்குப் பழமைப் பொருள் உண்மை தெளிவாகிறது.  அதேபோல் பசு வகைகளிற் பழமையானவை பாண்டிப் பசு எனப்படுகிறது.  பாண்டிப்பசுவின் பால், மிக்க இனிமையுடையதாகும். 

பாண்டல்  ( பாண்டு+அல்)  என்பது பழையதாய் உதவாமற் போன பொருட்களைக் குறிக்க வழங்கும் சொல் .(  எடு:  பாண்டல்நெய்,  பாண்டல்கருவாடு, பாண்டல்மீன் எனக் காண்க.)  

இவற்றில் அடிச்சொல்:  பாண்டு. பாண்டு என்பது பண்டு என்பதன் நீட்சியே ஆகும்.  

பாண்டிகன் என்ற சொல்லோ கோயில்களில் திருப்பள்ளி எழுச்சி பாடுவோனைக் குறிக்கிறது.  இச்சொல்லில் வரும் பாண் என்ற அடிச்சொல் பண் > பாண் என்ற என்று பாட்டினைக் குறிக்கும் சொல்லுடன் பொருளியைபு உடையதாகின்றது.  இவ்வகைப் பாட்டுக்காரர்கள் நம் எண்ணத்திற்கும் எட்டாத பழங்காலத்திலிருந்தே இவ்வேலையைச் செய்துவந்தவர்களாய் இருக்கவேண்டும் என்று கூறுவதன்மூலம்  "பண்டு"   (பழங்காலம்) என்பதனோடு இணைக்கலாம். இம்முயற்சிக்கு  வேறு அடைவுகள் ஒன்றுமில்லை.  படித்தவர் சொல்கிறார் என்பதே தவிர, இதுவா அதுவா என்று முற்றுறக் கூற முடியாத நிலைமையே மிஞ்சும்.  இருபிறப்பி  இது என்றும் கூறி முடிக்கலாம்.  கொண்டுவந்த பண்களை கோயிலில் வீழ்த்திச்செல்பவர்கள் என்பது இச்சொல்லின் பொருளாதல் கூடும். இகுத்தல்  வீழ்த்துதல்,  இ - இங்கு, கு-  சேர்(ப்போன்).

பண்கள் அல்லது பாட்டுகள் முன்னரே எழுதப்பெற்று அல்லது புனையப்பட்டு மெட்டு அல்லது இராகம் அமைத்துப் பின்னரே பாடப்படும்.  புதிய பாடல்கள் புனைந்து பாடுவோர் பெரும்பொருள் வரவை எதிர்பார்ப்பதே இயல்பு.   ஆதலின் இயல்பான நிலையில் பண்கள் பழையவை.  இந்தப் பழமையிலிருந்து பண் -  பண்டு என்பதற்கு பழையது என்ற பொருள் வந்திருகிறது  என்பது தெளிவு.  பண் என்பது பண்ணுதல் அல்லது செய்தல் என்னும் வினையிலிருந்து வருவதால், பண்ணும் நேரம் வேறு,  அது உணவாயின் தின்னும் நேரம் வேறு.  பண்ணப்பட்ட நேரம்  முன் செல்கிறது. பயன்பட்ட நேரம் பின்வருகிறது.  இதுவே பெரும்பான்மையும் இயல்புமாம்.  ஆதலின் பண்+ து >  பண்டு என்று அமைக்க ப்பட்டது  முன் பண்ணினதையே பெரிதும் குறிக்கும்.  ஆதலின் பண். பண்டு என்பதன் பழமைத் தொடர்பை உணர்ந்துகொள்க.  ஆகவே பாண்டு என்பதும் அது.  பல பண்கள் நல்லனவாய் அமைந்தவை.  ஆதலின் பண்ணாகும்  என்று சொன்னால் நன்றாகும் என்பதும் பொருளாம்.

பண் பாண் பாண்டு என்பன தொடர்பில் பல உள்ளன.  எல்லாவற்றையும் இங்குக் கூற இயலவில்லை.  சிலவே கூறினோம்.'

வாக்கியம்:   பண் அது பழைமை:   இப்போது அது என்பதற்குத் து என்ற இறுதியை மட்டும் விகுதியாக்கினால்:-  பண் + து >  பண்டு, (பழமை). பண்டு > பாண்டு.  பண் பாடுவோர் பாணர்.  ( பண்- பாண் கண்டுகொள்க.)  பாண்டு+ இ+ அர் >  பாண்டியர் ஆகும்.  ( பழங்காலத்திலிருந்து , இ - இங்கு,  அர் - இருப்பவர்(கள்).  )   பண்ணுதல் -  வினைச்சொல்.

அறிக மகிழ

மெய்ப்பு பின்


செவ்வாய், 24 அக்டோபர், 2023

அன்புக்கும் உண்டோ அடைக்கும்தாழ்?

 பரிசுகள் வழங்கினோம்,


உதவி புரிந்த வாசகர்கட்கு நன்றி தெரிவிப்பது கடமையாகும்.

உதவி புரிந்த உயர்மன வாசகர்க்கு
இதயம் கனிசெயல் இயற்றலும் கடனே.

இதயம் கனி  -  அவர்களின் இதயம் கனியுமாறு
செயல் இயற்றலும் -- ஏதேனும் செய்தலும்
கனிசெயல் -  வினைத்தொகை.  இங்கு வலி மிகாது.

வாசி அகர் > வாசகர் என்றும் பிரிக்கலாம்.
வாசி + அ + கு+ அர்>  வாசகர்,   இங்கு  அ என்பதை இடைநிலை என்று கொள்க.

கண்ணுக்குத் தெரியும்படி இருப்பது " இங்கு"  இருப்பது.  ஆனால் மனம் அங்கு இருக்கிறது.  அதாவது உடலினுள்.  அ =  அங்கு,  கு=  இணைந்து.  "தனியாக இல்லாமல் உடலுடன் இணைந்து. "  ஆகவே அகமாயிற்று.

அறிக மகிழ்க
மெய்ப்பு - பின்னர்

Food delivery problems

 https://www.msn.com/en-sg/news/singapore/foodpanda-customer-unhappy-with-rider-who-left-his-food-outside-the-door-without-telling-him/ar-AA1iJazj?ocid=socialshare&pc=U531&cvid=9d5859bf8188468fb43e7abf9ae231fa&ei=29


https://www.msn.com/en-sg/news/singapore/foodpanda-customer-unhappy-with-rider-who-left-his-food-outside-the-door-without-telling-him/ar-AA1iJazj?ocid=socialshare&pc=U531&cvid=9d5859bf8188468fb43e7abf9ae231fa&ei=29

வீட்டுக்குச் சாப்பாடு வரவழைக்கும் போது  கவனமாய் இருங்கள். கொண்டுவருகிறவர்களுக்கு மண்டைக்குழப்பம் அச்சம்  ஆகியவை ஏற்படுவதுண்டு.  நடந்ததைச் சொல்லப்பயந்து ஓடிவிடுவதுண்டு.

சனி, 21 அக்டோபர், 2023

சமுத்திரம்

 https://sivamaalaa.blogspot.com/2017/10/blog-post_91.html

முந்நீர்  என்பதும் முத்-  திரை  ( மூன்று நீர்) தான்.   ஒப்பிட்டு அறிந்துகொள்க.

திரை என்பதும் நீர்தான்.

சமுத்திரம் என்பது தமிழ்தான்.   சமஸ்கிருதம் என்பது வெளிமொழி என்பது ஓர் இடுபுனைவு ஆகும்.   வெள்ளைக்காரன் எழுதிவைத்தது.  சமஸ்கிருதம் பயன்படுத்தியவர்கள் முன்னையப் பூசாரிகளான பண்டை இனத்தவர்களே.  வால்மிகியே பூசைமொழியில் முதற்பாவலரும் பெரும்பாவலரும் ஆவார். இலக்கணம் வகுத்தவன் பாணப் புலவன் ஆகிய பாணினி (  பாண்+இன்+ இ).

சமுத்திரம் பற்றிய இதர ஆய்வுகள்:

https://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_19.html

https://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_18.html

https://sivamaalaa.blogspot.com/2016/02/blog-post_28.html   முந்நீர். - சமுத்திரம்.

தம் மு( த்) திரை > சம் முத் திரை >add அம்

>சமுத்திரம்.

திரம் என்பதில் ஐகாரம் குறுகிற்று. 

திறம் திரம் ஈறானது எனினுமாம். Then define accordingly.


வியாழன், 19 அக்டோபர், 2023

அஸ்தினாபுரம்

 இன்று அஸ்தினாபுரம் என்ற சொல்லைக் கவனிப்போம்.

இந்த அஸ்தினாபுரம் என்னும் சொல். தமிழில் பழைய நூலாகிய சீவக சிந்தாமணியிலே உரையாசிரியர் வழியாக நாம் எதிர்கொள்கிறோம்.   வேறு பிற்கால நூல்களில் உள்ளது என்பதும் ஏற்கத்தக்கதே.  இங்கெல்லாம்  அஸ்தினாபுரமென்பது அத்தினாபுரம் என்றே காணப்படுகிறது.    வடவொலி நீக்கி அவ்வாறு   காணப்பட்டதா,  அதுதான் மூலமா  மூலத்தின் எதிரொலியா என்றெல்லாம் அறிந்துகொள்ள வழியேதும் இல்லை. 

பாண்டவர்,  பாண்டு என்ற சொற்களும் கவனிக்கத்தக்கவை.  இவற்றை இங்கு இடுகைப்படுத்தவில்லை.

பகு என்ற சொல் முதனிலை நீண்டு பாகு என்றாகும்.  இதன் சொல்லமைப்புப் பொருள் இனிப்பானது என்பதன்று.   பாகுபடுத்தப்பட்டது என்பது.  வழக்கில் காய்ச்சப்பட்ட பாகுகளெல்லாம் இனிமை பயந்ததனால்,  இச்சொல் இறுதியில் இனிமைப் பொருளதானாது.  பகு என்ற சொல்லுக்கு எவ்வாறு பொருந்துமெனின்,  உணவின்போது இது தனிச்சிறப்பு உடைமையினால்,  ஏற்புடைத்தாயிற்று.  உணவின் மிக்க இனிமையான பகுதி.  பல உணவிலும் ஒரு மணிமுடியாய் இருக்கும் பகுதியுணவு. ( "பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன்"  எனக்காண்க. ) காரண இடுகுறிப்பெயராவது இஃது.  பாகு >  பாகு+ தி >  பாத்தி,  அல்லது  பாகு> பா > பாத்தி.  பகுத்தியலும் வயலின் பகுதி.  இங்கு  கு என்னும் விகுதி மறையும்.  அது பாத்தி என்னும்.  சொல்லில் தேவையற்றதும் தடையும் ஆகும். பாகு தனியாகவும் காய்ச்சப்படுவது.  பத்தி (பகுக்கப்பட்ட உரைப்பகுதி ).  பகுத்தி > பத்தி.  வினைச்சொல் பகு என்பதே.

இதை ஏன் கூறுகிறோம் என்றால்,  அத்தி, பத்தி, சத்தி, முத்தி என்பனவும் இவைபோலவன பிறவும் பாத்தியில் குகரம் மறைந்தது போல்  இடைமறைவு அல்லது குறைப்பட்ட சொற்களா என்பதை ஆராய்ந்தறிவது அறிவுடைமை.

அஸ்தினாபுரம் எல்லா இனிமையும் பயக்கும் படி    வடிவமைக்கப்பட்ட நகரமாகும்.  இந்த இனிமை அல்லது மகிழ்ச்சி  ( நல்ல மதிப்பீடு)  மனத்தில் தோன்றுவது ஆகும்.   மனம்  என்பது அகம்.   அகம் என்பது உள் என்றும் பொருள்படும்.  அகத்தில் இன்பம்தரும் நகரம்  அகத்தில் இன் ஆகும் ஒன்றாவது.  அகத்து இன் ஆகு புரமே  அகத்தினாபுரம் ஆகி,  அத்தினா புரம் என்று குறுகிற்று.  அந்நகரத்தினர் தென்பகுதி அரசர்கள் அல்லது தென்பகுதியிலிருந்து வடபகுதி ஓரிடம் அடைந்து ஆங்கு அரசோச்சியவர்கள்.

யானை நகரம்,  அஸ்தின் என்ற அரச நகரம் என்றும் முன் கூறியுள்ளனர்

இன் என்றால் இன்பம், இனிமை.  தாழ்மை உடையது எதுவும் புன்மையாகும். துன்பம் என்பதொன்று.

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.  குறள் 1152

இவ்வாறு திரிந்த சொற்கள் சிலவற்றைப் பழைய இடுகைகளிலும் காணலாம்.

இன்னா - துன்பம்.  இதுவன்று அடங்கிய சொல் 

இன் ஆ புரம் > இன்பம் ஆகும்  ( ஆக்கும்) நகரம்).  ஆபுரம் என்பது வினைத்தொகை.

நிறைய மாடுகளும் பாலும் உள்ள நகரம் எனினும்  ஆகும்.  ஆ - பசு. ( வீட்டுக்குப் பசுமை தருவது பசு. )   கோமாதாவினால் சிறப்புற்ற நகரம் ஒரு சிறப்பு ஆகும்.

சமஸ்கிருதம் என்பது சில வெளிநாட்டுச் சொற்கள் இருப்பதால் இந்தோ ஐரோப்பியம் ஆகிவிடாது. வெளிநாட்டு மொழி அன்று. ( வரலாற்றாசிரியர்: ரோமிலா தாப்பார்).

அறிக மகிழ்க.

மெய்ப்பு: பின்னர்.


திங்கள், 16 அக்டோபர், 2023

பாஞ்சாலி

 இன்று சாலி  என்று முடியும் ஒரு சொல்  காண்போம்

முதலில் பாஞ்சாலி  என்ற பெயரின் பொருளாய்  அறியப்பட்டவை:  அரசி,  அழகுள்ளவள் என்பவை. பொம்மை போலும் அழகியவள் என்றும் பொருளென்பர்.  இன்னும் வேறுபட்ட பொருட்களையும் கூறுவர். இது பழைய நூல்களில் வரும் பெயர் ஆதலினால்,  அவ்வந் நூல்களில் பொருள் விரிக்கப்படாதவிடத்து,  ஆய்வின் மூலமாகவே இதைக் கூறுவர். இயல்வது அதுவே.

பழம்பெயர்களில்  சிலவற்றை நாம்  ஆய்ந்து பிறர்பால் அறியாத பொருட்களை நாமே கூறியுள்ளோம்.  இவற்றைப் பழைய இடுகைகளில் கண்டுகொள்க.

திரௌபதி என்பதைத்   திற+ அவ+ பதி+ ஐ   என்று பிரித்தால்,  மிகவும் திறமுடையவர்களால், அவம் ( அவி+ அம் >  அவம்,  அவிபடுதல் )  செய்யப்பட்டு, பதி+ஐ  -  பதை,  பதி என்பதன் பெண்பால்,  பெண்தெய்வம்  ஆனவள் என்று பொருள்படுகிறது.   இது உண்மையில் இவள் ஏன் கருநிறம் அடைந்தாள் என்பதற்கு ஒரு விளக்கமாகிய பெயரே ஆகும்.  இப்பெண்ணின் இயற்பெயர் இது என்று எண்ண இடமில்லை.  இன்னொரு வழியிலும் பார்க்கலாம்.   திரு+ அவ+பதை  என்று பிரிக்க,  உயர்ந்த  அவிபட்டு எரிந்துவிட்ட + பெண்தெய்வம் என்று பொருள்படும்.  இரண்டிலும் தமிழில் பொருள் அறிய இடனிருப்பதால், நம் நேயர்கள் எதையும் ஏற்கலாம்.   இஃது  ஒரு பல்பிறப்பிச் சொல் என்னலாம். இப்பெருங்காவியம் பாடியவர்களின் நோக்கம் இதில் வரும் பாத்திரங்களின் உயர்வினையும் பிற கணிப்புகளையும் மக்களுக்கு உணர்த்துதலே ஆதலின், பெயர்கள் பெரும்பான்மை புனைவுகளே  ஆகும். இப்பாத்திரங்களின் இயற்பெயர்களைக் கூறினாலும், அதனால் நீர் பெறும் அறிவு  0  என்பதாகவே இருக்கும்.  யாகத் தீயிற் புறப்பட்டுக் கருநிறம் கொண்டாள் என்பது,  அவ்வம்மையின் நிறத்திற்கு  ஏற்புறுத்தல் என்னும் உத்தியே  ஆகும்.   திற(ம்), திரு என்பவவையே  அல்லாமல்.  திரி ( திரிதல்) என்பதையும் கவனத்தில் கொள்ளலாம்.  திரி+ அவி + பதை  என்றவாறு.

இவ்வம்மை ஒரு தென்னாட்டு அரசியாய் இருந்திருத்தல் இதனால் அறியக்கூடும்.  இவ்வம்மைக்குக் கிருஷ்ணை என்னும் பெயரும் உள்ளது.  கிரு என்பது  கரு என்பதன் திரிபு.   மூலம் கரு என்பதே. கரு -  கருப்பு என்பதன் அடிச்சொல்.  

ஒப்பிடுக:  கிருஷ்ணயசுர்வேதம் ,  சுக்கிலயசுர்வேதம்.   சுக்கில எனின் வெள்ளை நிறம்.

இனிப் பாஞ்சாலி என்பது:   பாண் என்பது  அம்மையார் பெயர்  பாண் +  சால் + இ என்று அறிய  வழிசெய்கிறது.   சால்  என்றது நன்மைப் பொருளது.  சாலுதல் - நிறைவும் ஆகும்.  இகரம் பெண்பால் விகுதி.  பரம்பரையாகப் பண்களில் சிறந்து விளங்கிய வழிவந்தவர் என்பது இதன் பொருள்.  பாணர்களும் அரசு ஓச்சிய காலம் பழங்காலம் ஆகும்.  ஆகவே இவ்வம்மை ஓர் இளவரசி என்றதில் ஓர் ஐயம் ஏற்படவில்லை.

பாணர் என்பதன் அடிச்சொல் பாண் என்பது.  பண் > பாண் தொடர்புடைய சொற்கள்.  பண்+ அர் =பாணர்.  முதனிலை நீண்டு அர் என்னும் பலர்பால் விகுதி பெற்றது. பண்ணன் எனினும் பாடுகிறவன் என்றே பொருள். ஒப்பு நோக்குமாறு:   வள்  என்பது வண் என்று திரியும்.  வண்ணம் என்பது பொருட்கள் (meanings ) பலவினொன்றாகும்.  வண் + இ =  வாணி.  முதனிலை நீண்டு இகர விகுதி பெற்று,  வண்ணம் உடையாள் என்று பொருள் படும்.  வாழ்நன் என்பதும் வாணன் என்று திரிதல் உளது.  [ பள்: பள்ளு, பாட்டு.  பள்> பண்,  இதுவும் பாட்டு. கண்டுகொள்க  ]

பாண் என்ற சொல் வாண் என்றும் திரியும்.  வாணபுரம் என்ற ஊர்ப்பெயர் பாணர்கள் ஆண்ட இடங்களில் ஒன்று  ஆகும்.  இது இன்று திருவல்லம் என்று அறியப்படுகிறது.  ( வேலூர்).  கர்நாடகாவில்  புங்கனூர் (  முனைவர் பேரா.இராசமாணிக்கனார், சோழர் வரலாறு.) என்பது இன்னொன்று.  பிற நூல்களில் அறிக.

னகர  ணகர ஒற்றீறும்  சொல்லாக்கப் புணர்ச்சியில்  ஞகர  ஒற்றாகும் என்று உணர்ந்துகொள்க.  வல் > வன் >  வன்+சு+ இ >  அனை >  வஞ்சனை என்பதுபோலும்  அமைந்தது.   வன்+ சி >  வஞ்சி -  வஞ்சிப்பா.

வான் >வான்+சை > வாஞ்சை   ( பொருள் உயர்ந்த அன்பு).

திரௌபதை அம்மன் என்னும் தெய்வம் பிராம்மணர் அன்று.  பாணர் குலத்து திரௌபதைக்குக் கண்ணன் உதவியதில் சாதி இல்லை என்பது தெளிவு.  

இந்தத் தெய்விக வடிவு,  வாழ்வாங்கு வாழ்ந்து விண்ணகக் கண்ணனருள் பெற்று,  வான் எய்தினள்,  அருள் பாலிக்கின்றனள்.  பால் = பகுப்பு. பாலித்தல் - யாவருக்கும் வேண்டியவிடத்து அருள் பகிர்ந்தளித்தல்.  பால்+ + தல்: இங்கு "இ" வினையாக்கவிகுதி.

அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்.

ஞாயிறு, 15 அக்டோபர், 2023

Birthday of Leah

 


A nice board to welcome guests to the  celebration hall.   Leah appears with smile in the board photo.



Comfortable in the hands of the mother is birthday girl Leah.

In the lovely embrace of my mummy's hands

I am ignited into a certain happiness;

I feel the silk, forget my milk,

Imbued into an unknown  part drowsiness!


சனி, 14 அக்டோபர், 2023

போர் இல்லாத உலகம் வேண்டாமோ?

 போரிடக்  காண்பதோ  யார்க்குமோர் துன்பமே

நேர்வன அழிவுடன்  பல்லோர்  இறத்தலே

சீர்பெற ஞாலத்  தலைவர் தொண்டர்மேற்

பார்வையில் எங்கோ  சோர்வெனக் கொள்வதோ.


குழந்தைகள் முதியோர் கொல்லப்  பட்டனர்

இழந்தனர் கணவரைப்  பல்லிள  மனைவியர்

வளர்ந்தன  பொருட்கள்தம்  வணிகர் விலைகளும்

உழந்தனர் மக்களும்  ஆயிரம் தொல்லைகள்.


வண்டிகள்  எண்ணெய் வான்விலை தொட்டதும்

கொண்டிகள் போட்டுநம் வீட்டினுள் குந்திட!

எண்டிசை உலகிலும் இணையில் புலம்பலே

கொண்டவர் தம்முடன் பெண்டிரும்  முரண்கொள.


இத்துணைத் துயர்களும் இழைத்திடும் போர்தனை

எற்றி விரட்டிட இனும்மனம் இல்லையோ?

கொத்துக் கொத்தென  குடிகள்  மடிதலில்

மெத்த நலமென மிஞ்சிய தென்னவோ? 



ஓர் துன்பமே - கவிதையில் ஒரு என்பது ஓர் என்று வரலாம்.

நேர்வன - நடப்பவைகள்

மேற்பார்வை -  தலைவர் மற்றும் மேலாளர் வழிகாட்டுதல்

சோர்வு -  பிசகு

வணிகர்விலை - விற்கும்விலைகள்

உழந்தனர் -  அனுபவித்தனர்

வான்விலை -  உயர்ந்தவிலை

கொண்டி - தாழ்ப்பாள்

எண்டிசை -  எட்டுத் திசைகள்

கொண்டவர் -  கணவன்மார்

எற்றி  -  காலால் உதைத்து.

புதன், 11 அக்டோபர், 2023

தொப்புள்

தொப்புள்  என்ற சொல்லின் உள்ள தொப்பு என்பது,  உள்ளாக வயிறு தொய்தலைக் குறிக்கிறது,   தொய்வு என்பது உள்ளாகவும் வெளியாகவும் அமையலாம் ஆகையால்,    இச்சொல் உள் என்ற சொல்லுடன் முடிகிறது.  உள் என்பதை விகுதியாகக் கொண்டாலும்  ஒரு தனிச்சொல்லாகக் கொண்டாலும் இச்சொல்லின் பொருள் ஏதும் பாதிப்பு அடையவில்லை என்பதே  உண்மை  இங்கு விளக்கத்தின் பொருட்டு,  உள் என்பதை உள்ளாக என்று எடுத்துக்கொள்வோம்.

தொய் என்பது  கடைக்குறைந்தால்  தொ என்றாகும், " தொ" என்ற சொல் காணப்படாமையால்,  இதை  தொய்>  தொய்ப்பு >  தொப்பு என்று காட்டுவதே பொருந்தும்  திரிபு  ஆகும்.  உள் என்ற சொல்லை இணைக்க,  ஓர் உகரம் கெட, தொப்புள்  ஆகிறது.  யகர ஒற்று இறுதி சொற்களில் மறைதல் இயல்பு.  எடுத்துக்காட்டு:  தாய் >  தாய் + தி >  தாதி  ( தாதிமார்).   இங்கு யகர ஒற்று மறைந்தது.  இன்னொன்று:  வேய்(தல்) >  வேய்வு >  வேவு.   ( வேவு பார்த்தல்).  பெரும்பாலும் மாறுவேடத்தில் ஒற்றர் சென்று பணியாற்றியமையால்,  இது வேய்தல் அடியாக அமைந்தது.  வேய் -  வேடு >  வேடம்.  கேட்டால் விரிவாக உணர்த்தப்பெறுவீர்.

உள் என்னும் தொழிற்பெயர் விகுதி பெற்ற சொற்கள் பல.  நாம் நன்கு  அறிந்த விகுதி பெற்ற சொல்  "கடவுள்" என்பது.  இ( ன்னொன்று ஆயுள் என்பது.  உயிருடன் உடல் கூடிவாழ்தலே  ஆக்கம்  ஆகும். அவ்வாறின்மை என்பது அழிவு என்றறிக.  ஆக்கமுற இவ்வுலகில் உலவுதல் அல்லது இருத்தல் என்பதே ஆயுள் என்ற சொல்லால் குறிக்கப்பெறுகிறது. இச்சொல் பின்னர்  ஆயுசு என்றும் பேச்சு வழக்கில் வரும்.  ஆயுசு என்பது திரிசொல் ஆகும் என்பதறிக.  ஒரு திரிசொல்லைப் பிரித்து அடிச்சொல் கூறினால் சில வேளைகளில் தவறாக முடியும்  ஆதலின் கவனம் தேவை.

தொய்ப்பு + உள்  >  தொப்புள்,  

தொப்புள் என்பதற்கு இன்னொரு பெயர் :  உந்தி என்பது.  இதனை "கரியமால் உந்தியில் வந்தோன்"  என்று ஔவையின் பாட்டில் வருதல்கொண்டு அறிக.  தொப்புள் என்பது கொப்பூழ் என்றும் திரியும்.  இங்கு தொப்புள் என்பது " உள் கொண்ட "   ( பெரும்பாலும் உள் இழுத்துக்கொண்ட அல்லது தொய்ந்த நிலையில் இருப்பதனால்,  கொள் > கொப்பூழ் என்றும் கூறலாம் என்றாலும்,  தொப்புள் >  கொப்பூழ்  திரிபு  என்பதும் பொருத்தமே. 

கொள் >  கொள்+ பு>  கொட்பு  + உள் >  கொப்பு+ ஊழ் >  கொப்பூழ்.  இங்கு உள் என்பது ஊழ் என்று திரிந்தது.  இதிலிருந்து ஊழ் வினை என்பது மனிதனின் ஆன்மாவின் உள்ளிருக்கும் (முன்) வினை என்பதும் தெளியலாம்.

 தொ என்பது சொ என்றும் பின் சொ என்பது கொ என்றும் திரியும்.  ( தனி> சனி;  தங்கு> சங்கு ). இது பின்னும்  சேரலம் > கேரளம் என்பதாய்த் திரியும்.  ஆகவே தொப்புள் என்பது கொப்பூழ் என்று திரிவது முறைப்படியாக  அமைந்ததே ஆகும்.

தொப்புள் >  கொப்பூழ்.  ளகர ஒற்று ழகர ஒற்றானது,   இது  தமில் >  தமிழ் என்பது போலும்.  தம் இல் மொழி  தமில் > தமிழானதாய் அறிஞர்கள் கூறுவர்.

இன்னும் இவ்வாறு திரிந்தவைகளை முன்னர் வந்த இடுகைகளில் கண்டறிக.  குறிப்பெடுத்துக்கொண்டு மனப்பாடம் செய்துகொள்க.  இதனால் அடிக்கடி தேடிக்காணும் நேரம் குறையும்.

உந்தி >  ( உந்தி வெளிவருவது என்று பொருள்).

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

ஞாயிறு, 8 அக்டோபர், 2023

பிராணி, பிராந்தியம்

அண்முதல்   என்ற  சொல்லின் பொருள் :  நெருங்கிச்செல்லுதல் என்பதாம்.   இஃது அண்ணுதலென்றும் வடிவம் கொள்ளும்.   அணத்தல்,  அண்வருதல். அணவுதல் என்பனவும் இணைப்பொருண்மையன  ஆகுமென்றறிக.

இப்போது தேர்தல் களம் நெருங்கிக்கொண்டுள்ளது.   தேர்தலிற் கூட்டணிகள் ஏற்படுதல் இயல்பு. ஓர் அணியினர் இன்னொரு கூட்டத்தாரை அணுகி,  ஒன்றாக களப்பணிகளில் இறங்க முனைவராயின்,   அவர்கள் ஒரு கூட்டணியினர் என்று சொல்கிறோம்.  இவற்றிலெல்லாம்  அண் என்ற அடிச்சொல்லே சொற்களை நமக்குத் தருகிறது.

அண்முதல், (  வினையாக்கம்:  அண்+ ம் + உ , இவற்றுள்  ம் என்பது  இடைநிலை,  உ என்பதுதான் வினையைப்  பிறப்பிக்கும் விகுதி  ), இதில் தல் என்னும் பெயர்ச்சொல் விகுதியைச் சேர்த்தால்  தொழிற்பெயர் என்று கூறுவோம்.  வினையிலிருந்து உருவான பெயர்.  அதாவது ஒரு செயலுக்குப் பெயராவது.

பிராந்தியம் என்ற சொல்லிலும் இந்த  அண் என்பதைக் கண்டுகொள்ளலாம். ஓர் அரசுக்குட் பட்ட பகுதிக்குள் முறையாகவோ தொடக்கத்திலிருந்தோ உள்ளடங்காமல்,  தனியாக ஆளப்படும் நிலப்பகுதியை இவ்வாறு குறித்தல்கூடும்.  இது:

பிற + அண் + தி + அம்

என்று பகுத்தறியப்படுவது  சிறப்பாம்.  பெரும்பான்மை இத்தகு நிலப்பகுதிகள் அண்மி இருப்பவை.  தி அம் என்பன தேயம் என்பதன் திரிபாக அறியப்பட்டுள்ளதனை இங்குக் காணலாம்.   அன்றி  தி விகுதி என்று எண்ணப்படுதலும் இழுக்காது என்று அறிக.

https://sivamaalaa.blogspot.com/2019/04/blog-post_25.html

பிராணி என்ற சொல்லும் மனிதரல்லாத பிற அணியில் உள்ள உயிர்கள் என்று பொருள்பட்டுத் தமிழாதல் காண்க.  இதை முன்னைய ஆய்வாளர்கள் இவ்வாறு சிந்திக்க மறந்தனர்.  இவ் வாறு  சிந்தித்தல் தமிழுக்கும் பிறவுக்கும் இடையில் உள்ள நெருக்கத்தைத் தெளிவுபடுத்துவதாகும்,  இத்தகைய பல்வேறு ஒற்றுமைகள் வெறும் உடனிகழ்வாதல் (mere coincidence)  இயலாமை உணர்க.  அதனால்தான் சமஸ்கிருதம் இந்தோ ஐரோப்பியம் அன்று என்று கூறலானோம். இப்பூசை செய்வார் மொழி உண்மையில் வெளியிலிருந்து வரவில்லை என்பதே உண்மையாகும். வெள்ளைக்காரன் உரையை வெற்றுக்கட்டு (புனைவு) என்பதால் நாம் ஏற்கவில்லை. 

பிற என்ற சொல் சொல்லாக்கத்தில் ஒரு பகுதியாக வருங்கால்,  அது பிர என்று மாறிவிடும்,  றகரம்  ரகரமாகும்.  வல்லொலி இடையின ஒலியாய் மாறி மென்மை பெறும்,  இதை முன் சுட்டிக்காட்டி யுள்ளோம்.  இதை அறிவதும் முதன்மையாகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

ஞாயிறு, 1 அக்டோபர், 2023

A Paradoxical Synthesis by Poet Saran

 A Paradoxical Synthesis  



Our lives flow through the currents of many other lives.

   -We are all alive and dead at the same time-


Outside of physicalities we exist,

in memories of the past.

   -In forgotten memories of yesteryears-


In the present,

We are all held together in the unity of time.

Promised of a future,

   -A finite future-

An infinite constant shared between all of us.


Here I stand with blood running in my veins,

But where do I stand in the memories in your brain.


Close your eyes and think of me,

and I will be alive even when I am dead.

And, if you have forgotten me in the near future, 

I am as good as dead.