புதன், 28 பிப்ரவரி, 2024

கணவனும் புருடனும் ( புருஷன்)

 கண்போன்று இணைந்திருப்பவன் கணவன்.

புருவம் போன்று இருந்து காப்பவன்: புருடன். சொடுக்கி வாசிக்க:

https://sivamaalaa.blogspot.com/2016/03/blog-post_37.html

புல்லுதல் -  பொருந்துதல்.

புல் > புரு  என்றும் திரியும்.  

புருவம் -  பொருந்தியிருப்பது,  அதாவது விழியுடன் பொருந்தியிருப்பது. விழியுடன் என்று வருவிக்கப்பட்டதால்,  காரண இடுகுறி.

புரு>  புருடு,

டு என்பது ஒரு சொல்லாக்க விகுதி,  குருடு, வருடு,  திருடு என்று பலசொற்களிலும் வரும்.

இந்த விகுதி எப்படி உண்டானது என்பது  ஆய்வில் இன்னொன்று.   பின் தனி இடுகை எழுதரச் செய்வோம்.

புருடன் -  பெண்ணுடன் பொருந்தியிருப்பவன். பெண்ணுக்கே முதன்மை;  அவளுடன் வந்து பொருந்திவாழ்வோனே புருடன்.  இது பெண்ணாதிக்க காலத்துச் சொல்.

இச்சொல் பின்பு  புருஷன் என்று திரிந்துவிட்டது.   பூசைமொழியிலும் உயர்ந்த இடத்தைப் பிடித்தது.  எடுத்துக்காட்டு:  புருஷசுக்தம்.  பெயர்களில் புருஷோத்தம் என்பதும் காண்க.

வழங்குதல்: c 1500  -  5000 BCE.

ஆகவே, மிகப் பழைய சொல்  ஆகும். சென்ற 100 ஆண்டுகளுக்கு முன் புருசன், பிரிசன் என்றெல்லாம்  சிற்றூர்ச்சொல்லாக வழங்கிற்று.  ஆகவே இந்தச் சொல் பேச்சுத் தமிழில் நீண்டகாலம் பயன்பாடு கண்ட சொல்லாகும். ஆங்கிலேயர் வருமுன் இருந்த பேச்சு மொழியை ஆராய வழியிருந்தால்  ஈடுபடுவீராக.  புர்சன் பொண்டாட்டி என்று இணைச்சொற்களாக வழங்கும். இப்போதுள்ள பேச்சுத்தமிழ் கலப்பாகிவிட்டது.

பிரியாத பெண் தன்மையினால்,  பெண் பிரியாள் எனப்பட்டாள்.  அது கடைக்குறையாக   பிரியா>  ப்ரியா  என்றானது.

பழங்காலத்தில் புருவமாக இருந்த கணவன், பின்னர் கண்களாகவே மாறிவிட்டது  தகுதியுயர்த்தம் ஆகும்.  

கணவன் கண்ணான பின்,  பெண்ணைக் கண்ணின் மணியாக உருவகித்தனர்.

புருஷ என்பதற்குப்  படைப்புக்காரணியானவன் என்ற பொருள் ஏற்பட்டது.  எல்லா உயிர்களுடனும் பொருந்தியிருத்தலால், புருஷ என்பதன் மூலம் நோக்க இன்னும் பொருண்மை கெடவில்லை.

அறிக மகிழ்க

மெய்ப்பு: பின்னர்.

இணைந்திருங்கள்



செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

கோவிட் நட்ட ம்

 கோவிட் 19 வந்து பலதத நடாமகிவிட்டது. பொருள்கள் வைத்திருந்த இடத்ததிதபருந்த எல்லாமும் தொலைந்துவிட்டன.. மீதமிருந்த 4 பொருட்களுக்கு ஒருவர் சாயமிட்டுப் பளபளப்பாக்கிக் கொடுத்தார்.

அவை படததில் உள்ளன 

திங்கள், 26 பிப்ரவரி, 2024

வனஜாவின் ஒரு கவின் முகம்


 வனஜாவின் ஒரு தோற்றம் 



இதில் நாம் எழுதியதை சிலர் மாற்றி எழுதியுள்ளனர். இது தேவையற்ற தலையீடு. உள்ளே கள்ளத்தனமாகப் புகுவதும் மாற்றங்கள் செய்வதும் ஒரு குற்றமாகும். தயை செய்து இதுபோன்ற காரியங்களில் ஈடுபடாதீர். பிடிபட்டபின் எம்மைக் கெட்டவர்கள் என்பது சரியன்று. கடவுச்சொல்லைக் கண்டுபிடிக்கும் மென்பொருள் உங்களிடம் இருக்கலாம், ஆனால் அதனால் நீங்கள் கெட்டிக்காரர் என்று  பொருள்படாது


Last edited on 16042024

ஊகம் - வியூகம்: சொல்.

 இன்று ஊகம் என்ற சொல்லை அறிவோம்.  தலைப்பில் குறித்ததுபோல் இது யூகம்,  வியூகம் இது தலைவளர்ச்சி பெறும்.

அகர வருக்கத்துக்கு யகர வருக்கம் மாற்றீடு ஆகும்.

ஆனை -  யானை;

ஆடு (விலங்கு)  -  யாடு

ஆர்  -   யார்?

ஆதவர் (ஆ+ து + அ + அர்) >   யாதவர். (  ஆ - பசு,

ஒன்றோ பலவோ ஆக்களை வளர்ப்போர் என்பது பொருள்.

து -  இடைநிலை.    ஒன்று என்பதும் பொருள்.

அ -  இடைநிலை.   பலவாகவும் இருக்கும் என்பதும் பொருள்.

அர்  -  பலர் பால் விகுதி.

யாதவர் என்பது தமிழ் மூலங்களைத் திறமையாகப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட சொல்.

இது போல பல  முன் இடுகைகளில் சொல்லியுள்ளோம்.   அறிந்து நீங்கள் தமிழைப் படித்துப் பிறருக்கும் போதிக்கவேண்டும்.

ஆக,  ஊகம் என்ற தமிழ்ச்சொல்லே. யூகம் என்று திரிந்தது.

ஒரு யூகம் பயனற்ற நிலையினதாகிவிடலாம்.  மிகுபயன் நல்கி,  நன்மை பயப்பதாகவும் ஆகிவிடலாம்.   விழுமிய யூகம்  என்பது பயன் தரு யூகமாகும். விழு. விழுமிய என்பதற்கு  முன்னால் வி போட்டுக்கொண்டு,  வியூகம் என்றனர்.  நாளடைவில் இந்த வி என்பதன் சிறப்பு இல்லாயிற்று.

இன்று யூகமென்றாலும் வியூகமென்றாலும் வேறுபாடு யாதுமிலது.

ஊகம் என்பது ஒரு உகரச் சுட்டடிச்சொல்.  ஊ  -   முன்னிருப்பது,   உன் என்ற சொல்லில்  உன் என்று முன்னிருப்போன் உடைமை குறிக்கப்படுகிறது.  எ-டு: உன் முகம்,  உன் பூனை  எனக் காண்க.  கு  என்பது,  சேர்ந்திருத்தல் குறிக்கும் ஒரு பழந்தமிழ்ச் சொல்.  அம் என்ற இறுதி  அமைதல் குறிக்கும் ஒரு பழைய தமிழ் விகுதி.  வீட்டிலிருப்பவனே,  பூசாரியாய்  கோவிலிற் சென்று சற்றுத் திரிந்த அல்லது வேறுபாட்டுச் சந்தங்களுடைய  பேச்சில் பாடி இறைப்பற்றாளரை ஈர்த்துக்கொண்டான்.  அது  தொழுகை மொழி ஆயிற்று. பல அருஞ்சொற்களையும் பயன்படுத்தினான்.  சன் -  இது அன் என்பதன் திரிபு.  அணுக்கம்,  மனவீர்ப்பு குறிக்கும்.  வன் -  வலிமையுடன் வருக என்று பொருள். (வன்மை).  மன் -  நிலைபெறட்டும் என்று பொருள்.  வலிமை பொங்க அணுகி வந்து நிலைகொள்வாய் என்பதுதான்.   தொழுகை மொழிகளைக் கண்டுபிடித்து அல்லது உருவாக்கி உலகை வியப்பித்தவர்கள்,  இந்த இயல்பான மக்க்ளில் ஒரு சாரார்.  வெள்ளைக்காரன் அல்லன்.  ஒருத்தன் கண்டுபிடிக்க இன்னொருவன் கண்டுபிடித்தான் என்று பரிசு வழங்கலாகாது..அது திருட்டைத் தலைமேல் வைப்பதாய்  ஆகிவிடும்.

ஊகம் என்பது முன் வந்து சேர்ந்ததை அமைத்துக் கொள்ளுதல் என்று பொருள்படும்.  ஊ - முன்வந்து,  கு-  சேர்ந்ததை,  அம் -  அமைதருதல் என்று வரும் விகுதி.  பொருளிலதாயினும் கொள்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்னர்.


எழுதுவார்க்கு:

அமர் ( போர்) -  சமர்

அமர்க்களம்


சனி, 24 பிப்ரவரி, 2024

யாப்பியல் வல்லவர் : அமித சாகரர் - அளவிடற்கரிய கடலவர் பெயரும் காரணமும்

அமிதசாகரர் என்பது  யாப்பருங்க்கலக் காரிகை என்னும் யாப்பியல் நூலைப் பாடிய பெரும்புலவரின் பெயர்.   இந்த ஒரு பெயரில் இரண்டு சொற்கள் உள்ளன. அந்த இரண்டு யாவை எனின்,  அமிழ்தல்,  சாகுதல் ( சாதல்)  என்றவையே. அமிதம் என்ற சொல்.   தமிழ்மூலத்ததான ஒரு சொல்.  அமிதம் என்பதற்கு  அதிகமானது என்று பொருள்.

இவர் இந்தப் பெயரை வைத்துக்கொள்வதற்காகச் சொற்கள் இரண்டையும் திரித்து அமைக்கவில்லை. முன்னரே திரிந்து வழங்கிய இருசொற்களையும் பயன்படுத்தி இந்தப் பெயரை அமைத்தனரென்பதே உண்மை.

அமிதம் என்ற சொல்லை ஏற்கெனவே விரித்து எழுதியுள்ளோம்.  அவ்விடுகைகள் இவை:

1.  https://sivamaalaa.blogspot.com/2018/04/blog-post_22.html

    மெது, மித, மிதம்,  அமிதம்.

2  https://sivamaalaa.blogspot.com/2015/12/x.html

    மித  அமித.

https://sivamaalaa.blogspot.com/2014/04/meaning-moderation-medium.html

   மிதம், ( அளவானது,  அதிமில்லாதது.)

ஆனால்  அமித சாகரர் என்ற பெயரில்  அளப்பரியது என்றே பொருள்கொள்ளவேண்டும்.   " அளப்பருங்கடலார்" என்று "தனித்தமிழில்" சொல்லவேண்டும்..

சாகரம் என்ற சொல்லையும் விரித்துள்ளமை காணலாம்.  இங்கு உண்டு அது:

https://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_78.html   சாகரம்.

மேலும்:

https://sivamaalaa.blogspot.com/2022/04/blog-post.html          கண்டமும் சாகரமும்

https://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_18.html  சமுத்திரம் குமரிகண்டம்

சமுத்திரம் என்ற சொல்லும்  சம்+ மு + திரை  ,   சா + மு+ திறம் என்றெல்லாம் பலவாறு பிரிக்கும்  வசதியை உள்ளுடைய சொல்தான், முத்திறமும் சாவுதரும் இடமென்று விளக்கலாம்.  திரை -  கடல்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.


வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

மோடி என்னும் அருள் முன்னவர்

 அருளுடையார்  சொல்வனவில் பொருளும்  உடையார்

அகிலத்தார்க்கு   அருளுடைமை புகட்டும் கொடையார்

தெருளுடையார் அரசாட்சி  தெரிந்த  நடையால்

தீர்க்கசிந்த    னைச்செயல்கள் புரிந்த  விடையார்


மோடியென்ற முன்னறிவார்  பரதம்  அடைந்து

முன்னறியாப் பன்னலமும்  முடுக்கிக் கடைந்து

ஆடிநாளும் போக்காத  அமைதி மிடைந்தார்

அடிநாளில் தொடங்கி நலம்  இயற்றிச் சிறந்தார்.


(வேறு சந்தம்)

கட்டாரில் வேவுபார்த்த கெட்டா   ரென்றே

எட்டுநமர்  சாக்காட்டுக்  குற்றம்  பெற்றார்,

மட்டில்லா  இரக்கத்தால் தலைவர் மோடி

மாற் றியுயிர் காப்பாற்றி நாடு  கொணர்ந்தார்.


(வேறு சந்தம்)


செயல்திறனால் சீரார்ந்த செம்புகழ்   பெற்றார்---- மோடி

வயல்வரப்பில் உழைப்பார்க்கு வாழ்வும்   தந்தார் ,

பெயல்தன்னால் மண்குளிரும்.  

 பெருமக்கள் வாழ்வடைவர்


அயல் நாட்டில் அக நாட்டில்

அவர்நிகர்த்தார் பிறருளரோ?



அரும்பொருள்

முடுக்கி -  விரைந்து  செலுத்தி

விடையார் -  மறுமொழி  பதில்நடவடிக்கைகளை வெளிப்படுத்துபவர்.

அடைந்து -  (இறைவனால் ) அனுப்பப்பட்டு   இடத்தைச் சேர்ந்து

பரதம் -  பாரத நாடு



பரதத்தோங்கிய கோடாச் செங்கோற் சோழர்தங் குலக்கொடி

 ( மணிமேகலை)

கடைந்து  -  அலசி மேலெடுத்து

மிடைந்து = இடையில் கலந்து

சாக்காட்டு -  மரணதண்டனைக் குரிய (குற்றம்)

குற்றம் பெற்றார் -  served with charge sheets

நமர் -  நம்மவர்,  நம்மக்கள்

கட்டார் -  கட்டார் என்ற அரபு நாடு

கெட்டார் - கெட்டவர்கள் ( என்னும் குற்றச்சாட்டு)


பெயல் - மழை

மோடி மழை போன்றவர் என்பது குறிப்பு.

அக நாட்டில் - உள்நாட்டில்

வயல்வரப்பில் உழைப்பார்க்கு வாழ்வும்   தந்தார்:

இது அவர் விவசாயிகளின் நண்பன் என்பதற்குச் சொல்லப்படுகிறது.

ஆடிநாளும் போக்காத  அமைதி---  இது அவர் ஆரவார அரசியலில் ஈடுபாடாதவர்  என்ற பொருளுடையது.



வாழ்க வையகம்

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024

விரிதருதல் > விஸ்தரிப்பு. தமிழ்.

 இது  எப்படி த் தமிழென்று காண்போம் 

விரி + தரிப்பு.

>விஸ்தரிப்பு

விரிதரிப்பு என்று நாம் தந்திருப்பது  முன்னிருந்த தமிழில் விரிதருதல் என்று இருந்தது. விரிதருதல் என்பதில் தரு  என்பது ஒரு துணைவினையாக இருந்தது.

தரு என்பது தரி  என்று  இன்னொரு சொல்லாக அமைந்தது.  தரப்பெற்றதை  பெற்றபின் பயன்செய்தலை அல்லது பின்நிகழ்வை இந்தச்சொல்   குறித்தது.

இது விரிதரிப்பு என்று சிலகாலம் வழங்கியபின் விஸ்தரிப்பு என்று அயலொலி பெற்றமைந்தது, சிற்றூர்மக்கள் திரித்து வழங்கியதால் ஏற்பட்டதே ஆகும்.  உயர்த்தி-  உசத்தி  என்ற சொல் ஒஸ்தி என்றமைந்தது போல்வதே இதுவாகும்.  ஒஸ்தி என்பதில் ஸ் என்ற ஒலி,  அயலாரால்  புகுத்தப்பட்டதன்று. ஸகரம் வந்தமையால் விஸ்தரிப்பு என்ற சொல்  தமிழன்று என்று கூறிவிட முடியாது.

எனவே விஸ்தரிப்பு என்பது  விரிதருதல்,  விரிதரிப்பு என்பவற்றின் பின்வடிவமே ஆகும் என்பதறிக.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.







சனி, 10 பிப்ரவரி, 2024

வாகன நெருக்கடி.

 https://assets.msn.com/staticsb/statics/latest/views/icons/Link.svg


சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்வதாயின் கடுமையான வாகன நெருக்கடியைச் சந்திக்க வேண்டிவரும். இதைப் பற்றிய செய்தியை மேற்கண்ட தொடர்பைச் சொடுக்கி அறிந்துகொள்ள்ளுங்கள்.


Migrant worker celebrates his certification by donating food to others because he once lived in their shoes



வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

பீலிவளை என்ற நாகா இளவரசியின் பெயர்ப் பொருள் மற்றும்........

 பீலிவளை என்பது தலைப்பில்  குறித்ததுபோல்,  நாகமக்கள் இளவரசியின் பெயர்.  இவள் மஞ்சள் நிறத் தோல் உள்ள நாக அழகி என்று நாம் கருதலாம்.  மஞ்சள் நிற மனிதத் தோல் என்பது இன்றைய புலப்பாட்டில்,  வெள்ளை இனம் என்று சொல்லக்கூடியதுதான்.  மஞ்சள் நிறமுடைய யப்பானியரும் சீனரும் பிறரும் வெள்ளையராக ஏற்கத் தக்கவர்கள் என்பதே இன்றை நிலை ஆகும்.  சோழ இளவரசன் வெல்வேள் கிள்ளி இவள் அழகில் மயங்கி இரண்டாம் மனைவியாகக் கட்டிக்கொண்டான் என்று நாம் நினைப்பதில் உண்மையுண்டு. முதலாமவள் பாண அரசன் ஒருவனின் மகள்.  நாகர்கள் தலை சற்றுப் பெரிதாக உடையவர்கள். தொடை பெரிதான  உடலர்.  மூக்கு வெளித்தள்ளாமல் உள்ளடங்கி இருக்கும். உதடுகள் நடுத்தரத் தடிப்பு உள்ளவைதாம்.

தமிழரிடை ஒரு குடும்பத்தில் பிறந்த குழந்தைகளை நோக்கினால்,  ஒன்று கருப்பாகவும் இன்னொன்று கருவல்நிறம் குறைந்தும் அல்லது சிவப்பாகவும் இருத்தலைக் காண்கிறோம்.  இத்தகைய பிறப்புவகைகள் தமிழர் இற்றை நிலையில் கலப்பு இனத்தவர் என்பதை அறிவியற்படி அறிவிப்பதாகும்.  தொழிலடிப்படையாய் உருவான சாதிகளுக்குள்,  பலதரப்பட்ட மனிதர்களும் ஒரு தொழில் மேற்கொண்டு சம்பாதித்து உணவு கொண்டநிலையில்,  அவை பிரிக்கப்பட்டன.  ஓரினமல்லாத கலப்பு மக்களைப்  பிரித்து அமைத்தால், இவ்வாறுதான் நிறத்தில் வேறுபாடுகள் காணக்கிடைக்கும்.  ஒருமொழியையே பேசினாலும்,  அதிலும் வட்டார வழக்குகள் வேறுபட நிற்பனவாம்.  ஆகவே தமிழரிடைச் சாதிகள் என்பன, ஒவ்வொரு சாதியும் ஒரு பற்றுதலை உருவாக்கினாலும்,  தொல்காப்பியர் மொழியில் சொல்லவேண்டுமானால்,  "கலந்த மயக்கம் பயந்தது  ஆதலின்"  என்றுதான் பாடவேண்டும்!!

தமிழ் என்ற சொல்தான்  திரிந்து திராவிடம் ஆனது என்று தேவநேயப் பாவாணர் கூறுகிறார். இதைச்சொல்லுமுன்,  தம் இல் மொழி என்பதுதான் திரிந்து தமில்>  தமிழ் என்று மாற்றிற்று என்றும் கூறினார். பின்னது செக் நாட்டுப் புலவர் கமில் சுவெலபெல்லும் கூறினார்.   இல் மொழி ( இல்லத்தின் மொழி) என்பது ஒன்றிருந்தால்,  வெளியில் பேசிய மொழி வேறொன்று என்பது பெறப்படவேண்டுமே.  அது பூசுர  (பூசை+ உரு+அ) மொழியாய் இருக்கவேண்டும். அல்லது இரண்டும் கலந்த மொழியாய் இருக்கவேண்டும். உண்மை என்னவென்றால்,  இராமன் கதை பாடிய வால்மீகியார் சமஸ்கிருதத்தைப்on பாடிய முதற் பெரும்பாவலாகிறார்.  வால்மிகி என்று ஒரு சாதியும் உள்ளது.  சமஸ்கிருதத்துக்கு இலக்கணம் செய்தவர்,  பாணராக இருக்கிறார்.  அவர் இயற்றிய இலக்கணம் பாணினீயம் ஆயிற்று.  பெயரிலே பாண் இருக்கிறது.  சாலச்சிறந்த பாஞ்சாலியும் பாண்சாலிதான்.  பாஞ்சு என்பது ஐந்தைக் குறிக்கவில்லை. பாண் சால் என்பதுதான்.  ஒருவருக்கே மனைவி.  மற்ற நால்வருக்கும்  மனவி என்பது ஐயத்தில் எழுந்ததாக இருக்கலாம்.  புராணங்களை இயற்றியவர்களும் பிராமணர் அல்லாத நிலையிலே சாதிகளைப் புகுத்தியவர்கள் பிராமணர் என்பதற்கு ஆதாரம் இல்லை.  அதிகாரம் உடையவன் அரசனே ஆதாலால்,  அவன் தான் ஓட்டுநன் நிலையில் உள்ளவன்.  கோவிலில் மணியடித்து வாழ்பவனுக்கும் சாதிக்கும் அதிகார முறையில் தொடர்பில்லை.  வெள்ளைக்காரன் வந்தபின்னும் பட்டியலை இயற்றியவன் அரசாண்ட வெள்ளைக்காரன் தான்.  பிராமணன் அல்லன்.  பிழைப்புக்காக ஒத்து ஊதியிருக்கலாம் பிராமணன்.  ஆனால் எல்லாச் சாதிக்காரனும் அதற்கு ஒத்துப்போனவன் தான்.  தாழ்த்தப்பட்டவன் என்பவனும் அன்று தன்னை வியந்து உயர்த்திக்கொள்ளலை விடுத்து,  தாழ்ந்து பணிந்து ஒத்துக்கொண்டு அதனால் பெருமிதம் வரும் என்று நினைத்த ஏமாளி.  பின்வந்த காலங்களில் அவனது தாழ்மைக்கு வியப்பார் இலராயினர்.

தமிழ்ப்புலவர்களை அழைத்து தமிழ்ச்சொற்களை இலத்தீனில் கடன் பெற்றுக்கொண்டவர்கள் உரோமப் பேரரசின் ஆட்சியாளர்கள்.  இதை மயிலை சீனி வேங்கடசா,மி தம் நூலில் கூறியுள்ளார்.  ஒரு சரித்திரப் பேராசிரியரை அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.  சமஸ்கிருதச் சொற்கள் இலத்தீனில் இருப்பதை வைத்து,  ஆரியப் படையெடுப்பு என்னும் தெரிவியல் ( theory)  வரைந்தது முட்டாள்தனமாகும்.  மேலும் இதைச் சீன ஆய்வாளர்களும் மறுத்துள்ளனர்.    மேலும் இந்தத் தெரிவியல் இப்போது கைவிடப் பட்டுள்ளது.  ஆரியன் என்பது ஓர் இனப்பெயரன்று. ஆர் விகுதிப் பெருமை படைத்த நம் சங்கப் புலவர்களே அறிவாளிகள்,  ஆர் இய அர் >  ஆரியர்.  ஆர், அறி என்பன தமிழ்ச்சொற்கள்.

இந்தியத் தீபகற்பத்தில்  (ஒருபுறமண்தொடர்)  திரைகடல் முப்புறமும் உள்ளது. அதனால்  திரை+ இடம் >  திரையிடம்>திரவிடம் என்றிச்சொல் ஏற்படும் நிகழ்வும் தள்ளிவிடமுடியாது.  அதனால் திரவிடம் என்பது கடல்புறம்  என்று பொருள்படும் இடப்பெயர்.  யகரம் வகரமாகுவதை பேச்சுமொழியிலே அறிந்துகொள்ளலாம். ஓடியா என்பது  ஓடிவா என்பதுதான். இந்த மாதிரியில் பல சொற்களை அறியலாம். குறிப்பு வைத்துக்கொள்ளுங்கள்.

பீலிவளை என்பது இவளின் இயற்பெயரன்று. பீலி என்பது  மயிற்பீலி.   வளை என்பது  வளையல்.  மயிலிறகில் வளையல் செய்து அணிந்துகொண்டிருந்தவள் பீலிவளை. மயில்பால் மயங்கிய பெண்மயில். இன்றேல்   அவள் மொழியின் மொழிபெயர்புப் பெயராகவும் இருக்கலாம். அவள் அதுபோது ஒரு சைனோ திபெத்தன் மொழியினளாய் இருந்து, தமிழும் அறிந்திருந்திருக்கலாம். 

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்.

கொண்டாடும் நம் சீன நண்பர்களுக்குச் சீனப் பெருநாள் வாழ்த்துக்கள். 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


வியாழன், 8 பிப்ரவரி, 2024

நாகர் பற்றியவை

 நாகர் என்றால் நாகத்தை வணங்குவோர் என்று கூறிய அறிஞர்கள் உள்ளனர்.  நாகர் என்று தங்களைப் பெயரிட்டுக் குறித்துக்கொள்வோரும் உள்ளனர். நாகபட்டினம், நாகூர், நாகர்கோயில், நாக்பூர், நாகாலாந்து, நாகரினம் என்று பலகுறிப்புகள் உண்மையால்,  நாகவணக்கம் செய்திருந்தாலும் இல்லாவிட்டாலும் இவர்கள் பெரும்பாலும் நாவலந்தீவகற்பம் முழுவதும் பரவி வாழ்ந்தவர்கள் என்று தெரிகிறது.பலசாதிகளுக்குள் கலந்துவிட்டவர்கள் என்றும் தெரிகிறது. தங்களின் வெண்மஞ்சள் தோல் நிறத்தையும் பரப்பிவிட்டனர். சோழமன்னன் வெல்வேள் கிள்ளி  என்பவன் பீலிவளை என்ற நாகக் கன்னிகையை மணந்தபின் இவர்கள் தம்முள் கலப்பதைத் தமிழர்கள் வரவேற்றனர் என்று தெரிகிறது.  தமிழ்ச் சாதியர்களில் கலப்பின்மை இல்லை என்பதே உண்மை.  தமிழருள் மட்டுமின்றிப் பிற  தென்னிந்திய வட இந்தியக் குலங்களிலும் இவர்கள் கலந்துள்ளனர்.

நாகர் எங்கும் பரவியுள்ளமையால்,  அவர்கள் இந்தியாவெங்கும் நகர்ந்து திரிந்தவர்கள் என்பதே சரியாகும். நாகர் என்ற சொல்:

நகர்(தல்) >  நாகர் என்று முதனிலை நீண்டு அமைந்த பெயர்.  இதற்குரிய வினைச்சொல் நகர்தலே. ( நகர்பவர்கள் , ஓரிடத்தில் அமையாதவர்கள்.). வினையடித் தோன்றிய பெயர்களையும் பெரிதும் வினை என்றே குறிக்கின்றோம்.

நாகம் என்ற சொல்லும் நகர்தல் என்னும் வினையடியாய்த் தோன்றியதே. 

நகர் >  நாகர்.   ( அர் என்ற பலர்பால் விகுதி):  சுடு > சூடு என்பதுபோல் தலை எழுத்து நீட்சி.

அ டிச்சொல்   நகு என்பதே.  இதில் கு என்பது சேர்விடம் குறிக்கும் பழந்தமிழ்ச் சொல்.

சிரிப்பது, நடப்பது, இடம்பெயர்வது எல்லாம் அசைவு குறிப்பன,  ந என்பதே அடிச்சொல்.  உல் >நுல்> நல் > ந.

நாடுதல் என்பது முன் உள்ளதை நோக்கிய ஈர்ப்பு அல்லது  முன் நகர்வு.

நுல் > நூல்.  ( துணியில் நுழைவது )

நுல் > நுழை.  நுழைதல்.

நுல் > நல் > நட.  நடி, நடம், நடனம்.

நடி > நாடி:  அசைவது.

நகு >  நகு அர் > நகர்.  (  நகர்தல் ).

நகு > நகல்

.  ( ஒன்றிலிருந்து புறப்பட்டுப் படியமைதல் ) 

நகர் > நக(  ர்)   > நாகம்  ( அம் விகுதி)

ந - ( அசைந்து),  கு  ( சேர்விடத்து).  அ - ( அங்குப் போ).  

= நக + அரு >    [ அருகில்)

நக+ அரு+ தல் >  நகருதல்.

ஓப்பீடு  சீனம்:

纳     பெற்றுக்கொள்.  ( அசைவு).   அப்புறம்  ( நிகழ்வு)     "நா"  (ஒலிப்பு)

ஆதியில் தமிழ், சீனமொழிபோல்,  ஓரசைச் சொற்க்ளைக் கொண்டு இலங்கியது.  பின் சொற்கள் வளர்ந்தன.

அசைந்து முன் செல்வதே நல்லது.  அதனால் நன்மைக் கருத்து அசைவுக் கருத்தில் தோன்றியது.   அறிக.  பழம் இருக்குமிடத்துக்கு அசைந்து சென்றுவிட்டால் பழம் கிடைக்கும். பழம் நல்லது.  உணவு ஆதலின்.


சமஸ்கிருதம் அல்லது சந்தாசா என்பது சந்த அசைவு உள்ள பூசை மொழி.  இந்தோ ஐரோப்பியம் என்பது அவர்கள் அணைத்துக்கொண்ட இந்தியப் பூசாரிப் பாடை.  பாடு+ ஐ:  பாடை, பாடுமொழி. அவர்கள் அதிலிருந்து பல சொற்களை எடுத்துக்கொண்டனர்.  பாடை>  பாஷா.   மூலச்சொல் பாடை என்பதுதான்.

நாகர் என்ற சொல்லுக்குத் தமிழில் விளக்க அமைவதற்குக் காரணம்,  இவர்களை இப்படி அழைத்தவர்கள் தமிழரென்பதுதான்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.


புதன், 7 பிப்ரவரி, 2024

ஜிம்போ பலகாரம்

 வாழைப்பழ உருண்டைப் பொரியல்.

இது மிகவும் எளிதான மலாய்ப் பலகாரம். இரண்டு சுமாராகப் பழுத்த வாழைப் பழங்கள். கொஞ்சம் அரிசி மாவு. சர்க்கரை.  உப்பு சிறிது. கையால் பிடிக்கும் படியான அளவு மாவு போதும் எல்லாம் பிசைந்து படத்தில் காட்டியதுபோல் உருட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பலகாரம் தயார்.

இதில் மூன்று உருண்டைகள் பிடிக்கலாம். சற்று அதிகம்  தேவையானால் அதற்கேற்பப் பொருள்களைக் கூட்டிக் கொள்ளவும்

மலாய் மொழியில் இதை ஜிம்போ ஜிம்போ என்பார்கள்.

யாதவர்போல் நாயுடு -- நாயும் நாகரிகமும்




ஆடு மாடு முதலிய வளர்ப்புகள் போல் நாயும் நீண்ட காலமாகவே மனிதருடன் கூட்டுறவுள்ளதாக வாழ்ந்து வந்துள்ளது. நாயின் தொடர்பு பல்லாயிரம் ஆண்டுகட்கும் மேலானது என்று சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இவற்றுள் முதன்மை வாய்ந்ததாகச் சென்ற இருபதினாயிரம் ஆண்டுகளைக் கூற முடியுமென்கிறார்கள். நாய்கள் ஓநாய்களிலிருந்து சிறந்தமைந்தவை என்று கூறுகிறார்கள்.

ஆடு மாடுகள் வளர்ப்போர் ஒரு முக்கிய இடத்தைத் தமிழ் நாகரிகத்தில் பிடித்துள்ளனர். ஆயர் குலமென்று போற்றப்பட்டு யாதவர் என்றும் சிறப்பாகக் குறிக்கப்படுகின்றனர். பெரும்பாலும் வேடர்களே நாய் வளர்த்தனர் என்று கூறப்பட்டாலும், வேடருக்குத் தனிச்சிறப்பு அளிக்கும்படி நாயுடன் தொடர்புடைய பெயர்களால் அவர்கள் குறிக்கப்பட்டன ரென்று யாரும் எழுதியுள்ளதாகத் தெரியவில்லை.

1. முல்லை நிலம் 2. ஆயர் குலம் 3 இடைக்குலம், 4 யாதவர் முதலிய பெயர்கள் சிறப்புடைமை காட்டுவனபோல் நாய் வளர்த்தோருக்கு இடமிருப்பதாகக் கூறப்படவில்லை என்று தெரிகிறது. எனினும் காடுகளில் மனிதர்கள் வாழ்ந்து சில குலங்கள் காட்டிலிருந்தே நாட்டுக்குப் பெயர்ந்து மேன்மை அடைந்தனரென்று தமிழாசிரியர் யாரும் வெளிப்படுத்தவில்லை. இதை இப்போது ஆராய்வோம்.

பெரும்பாலான ஐரோப்பிய இனங்கள் தமிழரோடு ஒப்பிடுங்காலத்து மிக்கவும் குறுகிய கால வரலாற்றை உடையவர்களே. கல்தோன்றி மண்தோன்றாக காலத்து மூத்த குடியினரானவர்கள் எழுதப்படாத நீண்ட வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள். அதனால்தான் நாய் போன்ற உயரிய விலங்கினோடு ஒத்துழைப்பு இருந்திருந்தாலும் அது எழுதப்படாமையால் அல்லது விளக்கப்படாமையால் இன்று படித்தறியும்படியான வரலாறுகள் எவையும் இல்லை.

நாய்க்குப் பல்வேறு பெயர்கள் உள்ளன. ஞமலி என்பது நாயைக் குறிக்கும்.  திறந்த வாயுடன் நாக்கைத் தொங்கவிட்டுக்கொண்டு திரிவது. ( பகுவாய் ஞமலியொடு பைம் புதல் எருக்கி, தொகு வாய் வேலித் தொடர் வளை மாட்டி, பெரும்பாணாற்றுப்படை 112-3 ). இன்னும் சில: மனிதருடன் தொடர்பிலிருந்த விலங்கு நாய் என்று புறநானூறு சொல்கின்றது. தொடர்ப்படு ஞமலி என்று நாய் குறிக்கப்படுவதற்கு இதுவே காரணியாகும். நாய்க்குக் கூரிய நகங்கள் இருந்தன என்று பட்டினப்பாலை தெரிவிக்கின்றது. நகம் என்பது நகுதல் ( வெள்ளொளி வீசுவதுடையது) என்பதனால் ஏற்பட்ட பெயர். உகிர் என்பது உ+ கு+ இர் : விரலில் முன்னிருப்பது என்ற பொருளுடைய சொல். இர் என்பது இல் என்பதன் திரிபு: இடப்பொருளதாகும். இது ஒரு சுட்டடிச் சொல். இர் என்பது இரு ( இருத்தல்) என்பதன் அடிச்சொல்லுமாகும். குறு> கு> குக்கு> குக்கல் என்பது சிறு நாய் வகை. ஞாளி என்பது வலம்புரித் தோகை உடையது என்று அகநானூறு கூறுகிறது. ஓளி குன்றிய இடத்தில் நாயை வேலையில் ஈடுபடுத்தினால் அவை சோர்ந்து விடுமென்று குறுந்தொகை தெரிவிக்கின்றது. நல்ல வெளிச்சமான நேரங்களில் நாய்களை ஈடுபடுத்த வேண்டுமென்பது குறிப்பு. இவை இங்கு விரிக்கப்படவிலை. இவை உங்களுக்கு இலக்கியச் சுவை.


நாய் வேட்டைக்கு முதன்மை வாய்ந்த விலங்கு எனினும் மேலும் ஆடுமாடு மேய்ப்பதற்குப் பேருதவி புரியும் என்பது தெளிவான செய்தி எனினும் இதன் பங்கு பேரளவில் போற்றப்பட்டதாகத் தெரியவில்லை.

சீனாவிலிருந்து வரும் நாய்கள் சிங்கப்பூரில் பதினையாயிரம் வெள்ளிவரை விலைபெறுவதாக அறிகிறோம்.

நாயைப் பற்றிக் கிடைக்கும் சொற்கள் மூலம் நாயுடன் பண்டை த் தமிழர் கொண்டிருந்த தொடர்பினைச் சிறிதளவே அறியக்கூடும். உங்களுக்குத் தெரிந்த தமிழ் நூல்கள் இது பற்றிச் சொல்வதை நீங்கள் அறிந்திருந்தால் இவ்விடுகைக்குப் பின்னூட்ட மிடுவீராக.

இங்கு நாம் சொற்களைக் கொண்டே இதன் வரலாற்றைத் தெரிந்துகொள்வோம்.

நாயுடு என்பது ஒரு குலப்பெயராய் உள்ளது. இங்கு உடு என்பது உடன் செல்லுதலைக் குறிக்கும். வேட்டையின்போது நாயுடுகள் நாயுடன் சென்றனர். வேட்டையில் ஈடுபட்டனர். இன்னொரு வழியிற் பார்த்தால் உடுக்கோன் என்பது சந்திரனை ( நிலவை) க் குறிக்கும். உடு என்பது விண்மீனுமாகும். ஆகவே வேட்டையிற் சிறந்தோர் என்றும் நாயுடன் சென்றோர் என்றும் பொருள் தெரிவிக்க வேண்டும். STARS IN HUNTINGS WHO WENT WITH DOGS என்று இதற்குப் பொருள் தெரிக்கலாம் என்று அறிக.


நாயகர் என்பது அகத்தில் நாய்வைத்துக் காவல் மிகுத்தோர் என்ற பொருள் தருகிறது. இது பின் நாயக்கர் என்று திரிந்துவிட்டது. நாயகக் காரர் என்பதே பின் நாயக்கர் என்று திரிந்தது. வீட்டுக்காவலுக்கு நாய்கள் வைத்திருந்தவர்கள் என்பதாம் பொருள். நாயர் என்பது இடைக்குறை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

திங்கள், 5 பிப்ரவரி, 2024

மூத்திரம் சொல்.

 மூத்திரம் என்ற் சொல், தமிழ்நாட்டுப் பேச்சு வழக்குச் சொல்.

மூள் என்றால் உடலில் மூண்டு வெளிவருவது.  மூளுதல் என்றால் உண்டாவது.

மூள் >  மூ  ( இது கடைக்குறை).

திரி + அம் >  திரம்,  மாற்றமடைந்த வெளிவரும் நீர்.

திரம்,  திரை என்பவை நீர் குறிப்பவை.  திரை என்பது கடல்நீர்.

மூ + திரம் >  மூத்திரம் ஆயிற்று.

மூள்+ திரம் > மூட்டிரம் > மூத்திரம் என்று காட்டுவதும் உண்டு. 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

பாத்திரம் என்ற சொல்

 பாத்திரம் என்ற சொல்லைப் பார்ப்போம்.

பாத்திரம் என்பது  பரவலான வாய் திறந்த ஓர் ஏனம்.

பர ( பரவலான ) திற ( வாய் திறந்த )  கொள்கலம். அல்லது அடுகலன்..

பர என்பது  பார்> பா என்று திரியும்.

இது வரு > வார்> வா என்பது போலும் ஒரு திரிபு.

இதன் திரிபை வருக, வாராய், வா என்பவற்றில் உணர்க.

திற ( திறப்பு) என்பது  திர என்று திரிந்தது.  திற என்பது இன்னொரு சொல்லின் பகுதியாய் வந்தால் திர என்று இடையினமாகும். இது பல சொற்களில் வரும்.

திற+ அம் > திரம்,  வினைச்சொல் அம் விகுதி பெற்று புதிய சொல்லின் உள்ளுறைவு ஆனது.

பாத்திரம் சொல்லமைந்து விட்டது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.


வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

பலி (பலிகொடுத்தல்)

இன்று பலி என்னும் சொல்லைப் பற்றி அறிந்துகொள்வோம்.

பலி என்னும் சொல்  முன் பரி என்று இருந்து பின்  திரிபு அடைந்து பலி என்றானது என்பது அறியவேண்டும்.   இது இப்போது bali என்று எடுத்தொலி செய்யப்பட்டு அயற்சொல் போல பலுக்கப்படுவதால் அயற்சொல் போல் தோன்றுவதாகிறது.  

இது தலைவெட்டப்பட்டுக் கொல்லப்படுவதைக் குறிக்கிறது.  பரித்தல் எனின் வெட்டப்படுதல்  தொடர்புடைய இடுகை:

ஆடு கோழி முதலியவாய் பலவாகக் காவல்தெய்வத்துக்கு வெட்டப்படுதலாலும் பல் என்னும் அடியிலிருந்தும் இச்சொல் விளக்கப்படலாம். ஆதலின் இது இருபிறப்பி ஆகும்.

 https://sivamaalaa.blogspot.com/2016/08/blog-post_29.html

அறிக மகிழ்க