திங்கள், 5 பிப்ரவரி, 2024

பாத்திரம் என்ற சொல்

 பாத்திரம் என்ற சொல்லைப் பார்ப்போம்.

பாத்திரம் என்பது  பரவலான வாய் திறந்த ஓர் ஏனம்.

பர ( பரவலான ) திற ( வாய் திறந்த )  கொள்கலம். அல்லது அடுகலன்..

பர என்பது  பார்> பா என்று திரியும்.

இது வரு > வார்> வா என்பது போலும் ஒரு திரிபு.

இதன் திரிபை வருக, வாராய், வா என்பவற்றில் உணர்க.

திற ( திறப்பு) என்பது  திர என்று திரிந்தது.  திற என்பது இன்னொரு சொல்லின் பகுதியாய் வந்தால் திர என்று இடையினமாகும். இது பல சொற்களில் வரும்.

திற+ அம் > திரம்,  வினைச்சொல் அம் விகுதி பெற்று புதிய சொல்லின் உள்ளுறைவு ஆனது.

பாத்திரம் சொல்லமைந்து விட்டது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.


கருத்துகள் இல்லை: