சனி, 27 மே, 2023

யௌவன்னம் ( யௌவனம்)

 யௌவன்ன ராணி  நான் 

இசைபாடும் வாணி நான்


என்ற  பாடலொன்றை  கவி கா மு ஷரீப்( 1914  -1994) எழுதியிருந்தார்.

இந்தச் சொல்லும்   ( யௌவனம்) அவ்வப்போது தலைகாட்டுவதுண்டு.  இது என்ன சொல்லென்று அறிந்து இன்புறுவோம்.

எழுத்துக்களிலெல்லாம் அகரமே  மிக்கச் சிறப்புவாய்ந்தது.   அகர முதல எழுத்தெல்லாம்  என்றார் திருவள்ளுவர்.

கள் என்ற பன்மை விகுதி பெரிதும் வழங்காத காலம் அவருடைய காலம்.  கள் என்பது உயர்திணைக்குரிய பன்மை விகுதி அன்று என  அந்நாளைய நற்புலவர்கள் கருதினர். இது நிற்க,  

"அவ்  அன்ன"  என்றால்  அகரத்தைப் போல் மிக்கச் சிறப்பு உடையது என்றே பொருள்.  அன்ன என்பதற்குப்  போல என்று பொருள்.  இஃது ஓர் உவம உருபும் ஆகும்.

ஆனை என்ற சொல்,  யானை என்று திரிந்தது.  இப்போது யானை என்பதே  நாகரிகமான வடிவம் என்று கூட சிலர் நினைக்கலாம்.  ஆண்டு என்ற சொல்லும் அவ்வாறே  யாண்டு என்றும் திரியும்.  பழந்தமிழை அறியாத புதுப் பட்டதாரிகளாக இருந்தால்,  யாண்டு என்பதை ஆண்டு என்று  திருத்தி,  மன நிறைவு கொள்வர்! நாம் சொல்ல வருவது,  அகர வருக்கச் சொற்கள், யகர வருக்கமாகத் திரியும் என்பதுதான்.

எனவே,  அவ்வன்ன  என்பது யௌவன்ன என்று திரியும்.  திரியவே  யௌவன்ன என்ற சொல்லின் பொருளும்  அகரம் நிகர்த்த அழகு உடைத்து  ( உடையது)  என்பதுதான்.

இவ்வாறே  ஆரையடா சொன்னாய்  அது என்றால்,  யாரையடா சொன்னாய் அது என்றுதான் பொருள்.

யௌவன்ன(ம்) என்பது பின்னர் யௌவனம் என்று அம்  விகுதி பெற்று ஒரு சொல்லானது. ஒரு னகர ஒற்று மறைந்த சொல் அது.  வனப்பு என்ற சொல்லுக்கு அழகு என்ற பொருளிருப்பினும்,  இங்கு அந்தச் சொல் இல்லை.

யௌவ(ன்)னம் என்பது இடைக்குறைந்து  யௌவனம் ஆனது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

புதன், 24 மே, 2023

மோடி புகழ்

 சீரழிந்து கிடந்த இந்தியாவிற்கு

யாரிந்த மோடி என்று யாவரும் கேட்கப்

பாரினில் வந்தவர் நாரணன் தந்தவர்

ஊருக்குழைக்கும் உண்மை நல்லவர்.


அன்பர் ஒருவர் மோடி அவர்களின் படம் அனுப்பியுள்ளார்.

நன்றி.  அதற்கு யாம் அனுப்பிய சிறு கவி. 

வெள்ளி, 19 மே, 2023

The best vehicle for my travels

 


Vehicles in the world,  there are many

Planes, rockets,  buses, cars, boats,

But I like  necks of mom and granny,

They never fail to secure my  votes.

        ------  Passenger Leah.

ART CAN'T LOVE YOU BACK ( English poem.)

 by Young Poet Saran,  Melbourne:


ஒரு தத்தாவின் பிறந்தாநாள்.


 2014 ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது  எடுக்கப்பட்ட படம்.



2014-ல் இரு மகள்களுடன் தாத்தா கொண்டாடிய பிறந்த நாளில் கலந்துகொண்டோரை இப்படம் காட்டுகிறது.

குழந்தை மகிழ்ச்சி.

 எதைக் கண்டு சிரிக்கிறது



படம் அனுப்பியவர்:  திருமதி  ஓ.  ரோஷினி


கண்ணில் தோன்றும் காட்சி யாவும்

கருத்தைக் கவர்ந்த மகிழ்ச்சியே;

விண்ணில் இல்லை வீட்டின் உள்ளில்

விரியும்  சுருங்கும்  பொம்மையே.


எண்ணிப் பார்க்கும் எல்லாம் வந்தே

எனறன் முன்னில்  ஆடினால்

கண்ணில் ஊறும்  இன்பக் கண்ணீர்

கருத்தில் காணொளி  ஆனதே!





தைவானில் சுற்றுலா கிரண்குமார்

 தைவானில்  சுற்றுலவும் கிரண்குமார்

தாய்போலும்  ஊண்பகிரும் பெண்டிர்தரும்

மெய்யன்பு   பெற்றயிலும் உண்டியுடன்

மென்னகையே புரிந்தபடி தோன்றுகிறார்

உய்யவழி  உலகனைத்தும்  வலம்கொள்வீர்

ஓரினமே  யாவருமே எனக்கொள்வீர்

ஐய இந்த உலகினியே சுருங்கிவிடும்

ஆனவுற  வெங்கணுமே  விரிந்துவிடும்!


ஊண் -  உணவு

அயிலும் -  உண்ணும்

மென்னகை -  புன்னகை

உய்யவழி -  முன்னேறவழி

எங்கணுமே -  எங்குமே

விரிந்துவிடும் -  விரிவாகிவிடும்




மழைத்துளி ஆசிரியப்பா

 ஆசிரியப்பா


வாழ்கென வரமருள் குளிர்ந்த மழைத்துளி, 

வீழ்கென ம(ன்)னமகிழ் ஆழ்மனம்  வாழ்கநீ!

உடலில் வீழ்கென ஓடிமுன்  நிற்க,

படலும் குன்றியப்  பெயலும் நின்றது;

வானம்  நீயே வரையாது  வழங்குவை

கானம்  இசைத்தனை கடுந்தரை மோதலில்;

ஏன் நின்  றனைநீ   ஏற்றிடு  நீயே

நான்முயல்  வேனே நனிஇன்   னொருநாள்

கூன்படு நோக்கு குறைத்தே

நnன்மகிழ்ந்திடவே  நனைத்திடு  கவினே.



பொருள்:

வாழ்கென -   வாழ்க என்று

வீழ்கென -  பெய்க என்றவாறு

மனமகிழ் -  மன்ன மகிழ் ( தொகுத்தல்) -ன்  குன்றியது.

---  பொருந்தும்படி மகிழும்.

வாழ்க நீ -  மனமே நீ வாழ்க

படல்  -  உடலை மழைத்துளி தொடுதல்.

வரையாது -   குறைவின்றி

மழைத்துளி கானம் இசைத்தனை - தரையில் வீழ்தலில் ஓர் இசை

வந்த என்பது

மழையில் நனைவதும் ஒரு மகிழ்வு தரும்!

ஏற்றிடு நீயே -  ஏற்றுக்கொள்வய்  நீ

கானம் --- இசை

கூன்படு நோக்கு -  நேர்மையற்ற பார்வை அல்லது நடப்பு

நனி -  நன்றாக

நனைத்திடு -  என்மேல் பெய்திடு

கவினே -   அழகே.  இது மழையை விளித்தது

 மெய்ப்பு  -  பின்னர்:


புதன், 17 மே, 2023

கைகோர்ப்பு -- சொல்லில் தவறு என்ன?

 கைகோர்ப்பு என்று பேசுவதும் எழுதுவதும் சரியா?

தெரிந்துகொள்வோம்.

கோத்தல் என்ற சொல் "ஏடுகோத்தல்" என்ற பதத்தில் உள்ளது.  இது பழங்காலத்தில்  ஓலைச்சுவடிகளில் காய்ந்த இலைகளைப் பதப்படுத்திக் கோத்தல் அல்லது தைத்தல் என்று பொருள்படும்.  நாளேறிவிடின்,  ஓலைகள் காய்ந்து மொருகலாகி உடைந்திடும்.  இதற்கு ஒன்றும் செய்யமுடியாமையால்,  புதிய ஓலைகளைத் தயார்ப்படுத்தி,  அவற்றில் பெயர்த்தெழுதினால் நூல்கள் பாதுகாக்கப்படுதல் இயலும்.  பெயர்தெழுதுகிறவர்கள் கவனக்குறைவால் பிழைகள் செய்துவிடின் மொழிமரபு கெடுதலாக நேரிடக்கூடுமாதலின், இவ்வாறு செய்தலில்  பிழையாமை காத்தல் முற்றிலும் இயல்வதில்லை.

செயற்கரிய என்று தொடங்கும் குறளில், ஐந்தாம் சீர் "செயற்குரிய" என்று வந்திருக்க வேண்டும் என்று தமிழறிஞர் ஒருவர் கூறியுள்ளார். நூல்பெயர்தெழுதியவர்கள்  பிழைபட்டிருக்கலாம் என்று அவர் கருதுகிறார்.

கோத்தல் என்பதே வினைச்சொல் ஆதலின்,  கோர்த்தல் என்ற வினை இல்லை. கோ> கோத்தல்;  கோ>கோர்>கோர்ப்பு என்பது இல்லை. ஆதலின், கோர்ப்பு எனற்பாலது பிழையான சொல்லே ஆகும்.

ஆசாரக்கோவை என்ற நூற்பெயரில்,  கோவை என்றுதான் வரும்.  கோர்வை என்று வருதல் இல்லை.   கோ> கோவை.  வை என்பது விகுதி.

கோ> கோவணம்,   உடலை அண்மிக்கும்படியாகக் கோக்கப்படுவதாதலின், கோவணம் ஆகும்.  கட்டணம் என்பதிற்போல, அணம் ஒரு தொழிற்பெயர் விகுதி.

கோப்பு,  கோவை, கோவணம் என்றே எழுதுக.

அரைஞாண் கயிற்றில் கோப்பது ஆதலின்,  கோவணம் ஆனது.

கௌபீனம் என்பது திரிபு.

கோ + பு+  இன் + அம் >  கோபீனம்-  கௌபீனம் என்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

குறிப்பு:

கோ+ பின் + இன்+ அம்:   கோ -  கோக்குங்கால் ,  பின் - பின்னாலும் கோத்து,  இன்-  இன்னும் ( முன்னும் ) கோத்து,   அம்-  அமையும் சிறு துணி என்பது பொருள். வாக்கியமாக்கச் சரியாக வருகிறது.

காவு + பின் + அம்:  காவ்பீனம் > கௌபீனம். பின் புறம் காத்துக்கொள்ள அணியப்படுவது, ( பூச்சி முதலிய பின்னால் வந்து கடித்தால், கடித்தபின் தான் தெரியும் ஆதலால்,  பின் புறம் முதன்மை வாய்ந்த உடலிடம்  ஆனது. உடலில் நகர்கையில் தெரிந்தாலும் தடுக்க இயலும்,

இருவழிகளிலும் அமையும் சொல் இதுவாகும். இருவழிகளிலும் தமிழ்ச்சொற்கள் அடிச்சொற்களாய் இருத்தலால் இது தமிழ்ச்சொல்.  பூசாரிகள் கோவணம் கட்டிக்கொண்டு நிற்பதில்லை. ஆதலால் இது வயல் தொழிலாளர்களிடையே தோன்றியசொல்.

Anyway,  it is kOvaNam,  not kOrvaNam, that is the point .


திங்கள், 15 மே, 2023

கள்ளப்பிறர் > களப்பிரர்

 இன்று கள்ளப்பிறர் என்று நாம் கொடுத்துள்ள சொல்லையும்  களப்பிரர் என்ற சொல்லையும் ஒப்பிடுவதுடன்  தொடர்புடைய கருத்துகளில் சிந்தனையைச் செலுத்துவோம்.

களப்பிரர்  அல்லது  களப்பிறர் என்பது பொருளில் ஒன்றே  ஆகும் என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்.  எப்படி என்பதைச் சிறிது விளக்குவோம்.

ஒரு பொருளினின்று இன்னொன்று பிரிகின்றது.  பிரிகின்றது என்றால் வேறாகிறது.  

பிற என்பதும் இதுவே ஆகும்.  ஒன்றிலிருந்து  ( எடுத்துக்காட்டு:  பெண் பூனையிலிருந்து )  குட்டி பிறக்கின்றது.  பிறக்கிறது என்றாலும்,   பிரிகிறது - பிறந்தது என்றாலும் கருத்து ஒன்றுதான்.  காலவேறுபாட்டை ( நிகழ் மற்றும் இறந்த காலங்களைக்) கருதவேண்டியதில்லை .

அது  பில் > பிரு ( பிர்)  >  பிரி.   வினைச்சொல்:  பிரிதல்.

பிரு என்பதிலிருந்து வரும் சொல்:  பிருட்டபாகம்,  பிரிவுடைய உடற்பாகம்.

பில் > பிறு >  பிற   -  பிறத்தல்.

மொழிமரபு போற்றும் நாம்,  பிறர் என்பதைத் தனிச்சொல்லாய் எழுதினாலும்,  களம் என்ற சொல்லுடன் வரும்போது அதைப் பிரர் என்றே எழுதுகிறோம்.  மொழிமரபின் காரணத்தினால் களப்பிறர் என்று எழுதுவதில்லையே தவிர,  புரிந்துகொள்ள அதைப் பிறர் என்று இணைத்துசொன்னாலும்  அதுவே ஆகும்.

களப்பிரர் என்ற சொல்லில் முன் உள்ள சொல் களம் என்பதாகும். கள் (என்ற விகுதி)  -  களம்   உண்மையில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் உள்ள இடம்.  அது போர்க்களமாக இருக்கலாம்,  வேலையிடமாக இருக்கலாம். பன்மை மாந்தர் கூடி நிற்றல் எனல் குறிப்பாம்.  வழக்கில் அது பலர் ஆழ்ந்து செயலாற்றும் இடம் என்றாகிறது.

கள் >  கள்ளர் -  பலராகச் சென்று பொருள் எடுத்துக்கொள்ளுதலையே அது குறித்தது. எ-டு:  ஆநிரை கொள்ளுதல்.  போரைத் தொடங்குமுன் செய்யும் முதற்செயல்.

கள் >  களம்.  பலர் செயலாற்றும் இடம்.

களம் > களவர் > கள்வர். இச்சொல்லில் மூலச்சொல்லே  (கள்)  வந்தது.

பிர் > பிரி> பிரிவு.

பிர் > பிரர்.  பொருள்:  படைப்பிரிவினர் என்பது ஆகும்.

பிரி > பிரி+ அர் > பிரர்,  இகரம் கெட்டு அர் விகுதி ஏற்றது என்று முடிக்கவேண்டும்.

இதை இன்னொரு வகையில் காட்டலாம்:

பிறர் -  மூலப் படையிலிருந்து பிரிந்து செயல்படுவோர்.  பிரர் என்பதுமது.

கள்ளப்பிறர் >  களப்பிறர் >  களப்பிரர்.

பொருளாலும் ஒன்றே என்பது உணர்த்தப்பட்டது.

கல் > கலத்தல் என்பதும் பன்மை காட்டும்.    கல் > கள் என்னும் வடிவங்களில்,  கலி> கலித்தல் என்பன பன்மையர் என்று  பொருள்படுதலும் கொள்க.   கலி -  கலியரசன். ( களப்பிர அரசன், களப்பரன் எனினுமாம்.)  எ-டு:  இதழ் -  அதழ்,  திரிபு,


அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்னர்.


புதன், 10 மே, 2023

அபேட்சை என்பது

 இனி அபேட்சை என்பது வந்துற்ற விதம் காண்போம்.

ஏதேனும் ஓர் அவா மனத்தினுள் ஏற்பட்டுவிடுமாயின்,  அத்தகு அவாவினுட் பட்ட மனிதன் அதனால்  அலைப்பட்டு விடுகிறான்.

அவா ஏற்சித்தல்   - அவேற்சி > அபேட்சி+ ஐ >  அபேட்சை  ஆகிவிடுகிறது.

சித்தல் என்பது சுற்றல் ( சுத்தல் ) என்பதன் திரிபு.

ஏல் என்பது ஏற்றல் வினை(ச்சொல்).

வகரம் பகரமாகும் என்பதால்,  அவா என்பது  ஏல் என்பதன் முதனிலை ஏகாரத்தினோடும் கூடி, அபே என்று நின்றது காண்க.

இவ்வாறு நோக்க,  அவாவினோடும் செல்லுதல் என்ற கருத்து பெறப்படுகிறது.

இன்னொரு நோக்கில்,   அவா இச்சை என்ற இரண்டும் கூடித் திரிந்து,  அபேட்சை என்று திரிந்து நடத்தலும் இயல்வதே.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

திங்கள், 8 மே, 2023

தேர்தல் வெற்றியில் தேன்போலும் வாழ்வு

 கர்நாடகா தேர்தலில் வேட்பாளர் சிலரும் அவர்களின் தாய்தந்தையரும் கூட மக்கள்முன் தோன்றிக் கண்ணீர் வடித்துக்கொண்டு,  தங்களைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்டதாகச் செய்திகள் வந்துள்ளன.  அரசியல் களத்திலே இருப்போருக்கும்கூட,  வேலையிழப்பு,  ஊதியமின்மை என்பன இன்னல்கள் பலவற்றை உண்டாக்கிவிடுகின்றனவென்பது வெளிப்படையான உண்மையாகும். தேர்தல் வெற்றியென்றால் பல நன்மைகள் கிட்டும். சம்பளத்தோடு கிம்பளமும் கிட்டும்.  அதைக் கூறும் இப்பாடல்  வருமாறு. கிம்பளமும் அழகு என்ற சொல்லில் வைக்கப்பட்டுள்ளது.

வெண்பா:

வேட்பாள ராய்நின்று வெற்றியே பெற்றிடின்

ஆட்பட வேண்டாமே அல்லற்கு  ----   தாட்பட்டு 

மாற்றுக் குழுதன்னைத் தாம்மருவ வேண்டாமே

ஆற்றுப்  படுமா  றழகு.



வேட்பாளர் -  தேர்தலில் நிற்பவர்

ஆட்பட -  ( அனுபவிக்க)

அல்லற்கு  -   அல்லலுக்கு.

தாட்பட்டு -   பிறர் காலில் விழுந்து

மாற்றுக் குழுதன்னை  -  வேறு அரசியல் கட்சிகளில் உள்ளோரிடம்

தாம் மருவ - போய்ச் சேர்ந்து உறுப்பினராகிட

ஆற்றுப் படுமாறு  -   முறையான அரசியலாளராக வழிச்செல்லும்படியாக

அழகு  -   நலங்கள் யாவும் ஏற்படும்.


இது இயல்பான  எதிர்பார்ப்புதான்.  ஆனால் அரசியல் வாழ்விலும் பொருளிழந்தோரும் இழிக்கப்பட்டோரும் கொலைப்பட்டாரும்கூட உண்டு.

அது வேறு விடையமாகும்.

வேட்பாளர் கண்ணீர் வடிப்பது எதற்கு என்பதை இப்பாடல் கூறுகிறது.

மக்கள் சேவையே நோக்கம் என்பார்கள்.  இல்லை,  வாழ்வின் அழகே நோக்கம்.

அதாவது வேட்பாளர் மக்களிடம் வேலை கேட்கிறார்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.


சமிஞ்ஞை, சமிக்கை முதலிய சொற்கள்

 முன்னர் நாம் சைகை என்ற சொல்லை ஆய்ந்து கண்டுள்ளோம்.  இதனை நம் நேயர்கள்  வாசித்து இன்புற்றுள்ளனர்.  செய் என்ற சொல் சை என்று திரிதலைப் பற்றி முன்னர் விளக்கியுள்ளோம்.   தொடர்புடைய இடுக்கைகள் இங்குக் கிடைக்கின்றன:

1.  சைகை,   சைதன்னியம்  :  

https://sivamaalaa.blogspot.com/2017/02/blog-post_23.html

2. சைவ உணவு  :

https://sivamaalaa.blogspot.com/2017/11/blog-post_1.html

இவற்றுள்  செய் என்ற சொல்தான்  சை என்று திரிந்தது என்பது தெளிவிக்கப்பட்டது.

செய் என்ற சொல் விளைநிலம், விளைபொருள் என்ற பொருளில் வருவதுண்டு.   எடுத்துக்காட்டு:  நன்செய்,  புன்செய்.  விளைவித்தல் என்பது மனிதனின் செயல்பாடு ஆதலின்,  செய் என்ற சொல் இவ்வாறு சொற்களை உண்டாக்கியது  நாம் உணர்வதற்கு எளிதானது ஆகும்.  செய்கை எனற்பாலது  சைகை என்று மாறியதும்  எளிமையானதே ஆம்.

ஆயினும் சமிக்கை என்பது செய் என்ற சொல்லினின்று தோன்றவில்லை. ஆயினும்  செய்கையைக் குறித்து எழுந்ததே ஆகும். தாம் பிறருக்குச் செய்கையால் இடும் குறியே சமிக்கை ஆகும்.  அதை இவ்வாறு உணரலாம்:

தம் இடுகை >  தம்மிடுகை 

தகரம்  சகரமாய் மாறவல்லது.   இவ்வாறு மாறுதல் பல இடுகைகளில் விளக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டு:  தனி >  சனி. ( தனித்தன்மை வாய்ந்த கிரகம்).  தங்கு> சங்கு.  ( உள் தங்கி வாழும் உயிர்).

வதி ( இடத்தில் வாழ்தல்) >  வசி(த்தல்).

மனத்துட் பதிவு:

பதி > வதி > வசி >  வசியம்.

எனவே:

தம்மி(டு)கை >  ச(ம்)மிக்கை.

வல்லொலியாகிய டு போன்றவை மறையும்.

பீடுமன் >  பீமன் > வீமன்.  ( பீடுடைய மன்னன்).

பீமன் > பீமா.

சம்மிகை என்ற பாலது  சமிக்கை என்று வலித்தது.

இதன் திரிபு:   சமிஞ்ஞை.  இது சமிக்ஞை என்றும் எழுதுவதுண்டு.

சைக்கினை என்பதும் உண்டு.  இது குறுகி சைன்னை என்றுமாம்.

அறிக.  மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.