வெள்ளி, 19 மே, 2023

தைவானில் சுற்றுலா கிரண்குமார்

 தைவானில்  சுற்றுலவும் கிரண்குமார்

தாய்போலும்  ஊண்பகிரும் பெண்டிர்தரும்

மெய்யன்பு   பெற்றயிலும் உண்டியுடன்

மென்னகையே புரிந்தபடி தோன்றுகிறார்

உய்யவழி  உலகனைத்தும்  வலம்கொள்வீர்

ஓரினமே  யாவருமே எனக்கொள்வீர்

ஐய இந்த உலகினியே சுருங்கிவிடும்

ஆனவுற  வெங்கணுமே  விரிந்துவிடும்!


ஊண் -  உணவு

அயிலும் -  உண்ணும்

மென்னகை -  புன்னகை

உய்யவழி -  முன்னேறவழி

எங்கணுமே -  எங்குமே

விரிந்துவிடும் -  விரிவாகிவிடும்




கருத்துகள் இல்லை: