புதன், 30 மே, 2018

மாநாடு - மகாநாடு. அமைப்பும் பொருளும்.

மகாநாடு,  மாநாடு  என்ற சொல்வடிவங்கள் இப்போது
பலரும் தாளிகைகளில் கண்டு நினைவுறுத்திக்
கொள்ளுவன ஆகும்.

தமிழில் மா என்றால் பெரிய என்று பொருள். இந்த மா
என்னும் சொல்லுக்கு வேறு பொருள்களும்
உள்ளனவென்றாலும் அவை நம் இன்றைய
உரையாடலுக்குத் தொடர்புடையனவல்ல.

நாடு என்பது பல்பொருளோருசொல்.  அதாவது பல
பொருள்களையுடைய ஒருபதம்.  நாடு என்பதன்
பொருளாவன:

இடம்
உலகம்
ஊர்
பக்கம்
பூமி
தேசம்
நாட்டுப்புறம்
இடப்பரப்பு
மருதநிலம்

இவற்றுள் எதுவும் மக்கள் கூட்டத்தைக் குறிக்கவில்லை
. ஆனால் நாம் மாநாடு என்று  அல்லது மகாநாடு என்று
கூறினால் மக்களின் கூட்டத்தையே குறிக்கின்றோம்.

எனவே இடம். உலகம், தேசம், பூமி என்பவற்றில்  எதுவாயினும்,  ஆகுபெயராய் நின்று ஆங்குக் கூடும் மக்களைக் குறிக்கவே,   மா என்பதும் பெரிய என்று பொருள்தர,  இறுதிப்பொருளாய் வருவது:  பெரிய மக்கள் கூட்டம் என்பதே ஆகும்.

"ஊரே சொன்னது, நாமிருவரும்தாம் பொருத்தமான மணமக்கள் என்று "  என்பதாக வரும் உரையாடலில்,  ஊர் என்பது ஊர்மக்களைக் குறித்தது.  உயிருள்ளனவும் இல்லாதனவாகிய பிறவற்றையோ கட்டிடங்களையோ குறிக்கவில்லை.  வணிக வளாகம் விலையை ஏற்றியிருக்கிறது என்றால் அங்குள்ள கட்டிடம் விலையை ஏற்றவில்லை;  அதை நடத்தும் முதலாளியோ  குழும்பின் ஆட்சிக்குழுவினரோ ஏற்றிவிட்டனர் என்று பொருள்.  பெட்ரோல் ( கல்லெண்ணெய்)  விலை ஏறிவிட்டதென்றால் தானே எப்படி ஏறும்?   இது ஒரு பேச்சு வழுவமைதியாகும்.

இப்போதைக்கு இவ்வாறு புரிந்துகொள்வோம்.  மகா, மா என்பன எப்படி வந்தன, பெரிய என்ற பொருள் எப்படி ஏற்பட்டது,  மா என்ற மரத்தினாலா?
அதை இன்னோரெழுத்தில் அறிந்தின்புறுவோம். 

பிழைத்திருத்தம் பின்னர்.

திங்கள், 28 மே, 2018

தீபகற்பம்: தீவகம் அல்லாதது (முக்கரைத்தொடர்)

தமிழ்மொழிக்குரிய நிலப்பகுதி இந்தியாவின் தென்பகுதி என்று நாமறிவோம், அதிலும் ஒரு பகுதியே இப்போது தமிழ் வழங்கும் நாடு,  இதைத் தீபகற்ப இந்தியா என்று நாம் சொல்லலாம்,  இன்னும் துல்லியமாகச் சொல்லவேண்டுமாகில், தீபகற்பத்தின் ஒரு பகுதி எனலாம்.

தீபகற்பம் என்ற சொல்லையும் ஆய்வோம்.

தீபகற்பம் என்ற சொல் தமிழ் அகரவரிசைகளில் இல்லை என்று தெரிகிறது.  யாம் வைத்திருக்கும் சில அகரவரிசைகளில் இல்லை. ஆனால் எம்  சமஸ்கிருத அகராதியில் அது உள்ளது.

தீபகல்பம் என்பது சமஸ்கிருதத்தில் தீவையும் குறிக்கும். முப்புறம் கடல் சூழ்ந்த தீவு அல்லாத பகுதியையும் குறிக்கும்.

ஆனால் பிராமணர் என்போர் கடல்தாண்டிப் போகக்கூடாது என்று சாத்திரங்கள் சொல்கின்றன.  இப்போது யாரும் இதைக் கடைப்பிடிக்கவில்லை என்றாலும்  தீவுக்கும் தீபகற்பங்களுக்கும் பெயரிட்ட மிகப் பழங்காலத்தில் அவர்கள் அங்கெல்லாம் சென்றிருக்கமாட்டார்கள் என்பது தெளிவு.  தீவுபக்கம் போனால் அன்றோ அதைத் தீவு என்று பெயரிடுவார்கள்.  முப்புறம் கடல் சூழ்ந்த குமரிக்கண்டத்தினன் தமிழன் ஆதலாலும் உலகின் பல பகுதிகட்கும்  சென்றுவந்தவன் அவன் ஆதலினாலும் அவன் அதற்குப் பெயர்களை இட்டிருப்பான் என்று நாம் நன்றாக நம்பலாம்.

தீவு தீபகற்பம் முதலிய சொற்களைத் தமிழர்கள் படைத்திருந்தாலும் அவர்கள் இவற்றைப் பதிந்த நூல்கள் இல்லாதொழிந்தமையால், நாம் இவற்றைச் சங்கத நூல்களின் துணைகொண்டு கண்டுகொள்கிறோம்.

தீவு என்ற சொல் முன்னர் இங்கு விளக்கப்பட்டது.  அதனைக் காண
அன்புகூர்ந்து சொடுக்கவும்:

http://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_47.html

 அதைப் படித்துவிட்டீர்கள். இப்போது தீபகற்பம் என்ற சொல்லைப் பார்ப்போம்:

தீவு என்ற சொல் தீவகம் என்றும் வரும்.  தீபகற்பம் என்பது முழுதும் நீரால் சூழப்படாமல் உள்ள நிலம்.  தீவு அல்லாதது.  தீவகம் அல்லாதது.

தீவகம்+ அல் +( பு+  அம்).
அல் என்பது அல்லாதது. ( பு,  அம் விகுதிகள். )
தீவ(க + அல்) + பு + அம். :    ஓர் அம் கெட்டது,   அம் என்பது நிலைமொழியின் ஈறு,
தீவ(கல்)+பு+ அம்.  (மீண்டும் ஓர் அ  கெட்டது.)
தீவகற்பம்.
வகரம் பகரமாய்த் திரியும்.
எனவே  தீபகற்பம்.

உண்மையில் இது தீவகற்பம் என்றே இருப்பது தக்கது.

தீவக அல் பு அம் =  தீவகற்பம்  : பொருள் தீவகம் அல்லாதது,  தீவு அல்லாதது,

தீவு என்பது தீர்வு என்பதன் திரிபு அன்றோ?  ஆதலால்  "தீவக அல்லாதது" "என்றால் தீர்வாகச் சூழப்படாதது என்று பொருள் சரியாக வருகிறது.

தீவகற்பத்துக்கு இன்னும் கற்பம் ஏற்படவில்லை,  காரணம் எல்லாம் தமிழ்ச் சொற் பகுதிகளாகவும் விகுதிகளாகவும் இருப்பதால்.

தீவகற்பமென்பது உண்மையில் முக்கரை நிலத்தொடர்  ஆகும்.  தீபகற்பம் என்ற சொல் பிடிக்காதபோது இதை "முக்கரைத்தொடர்"  என்று குறிப்பிடுதல் ஏற்புடைத்தாகும்.
 

மகர வகர ஒலியுறவும் திரிபுகளும். சிறு கண்ணோட்டம்

மகரமும் வகரமும் ஒலியுறவு உடைய எழுத்துக்கள். நாம் கவிதை எழுதும்போது  முதலடியை மகரத்தில் தொடங்கி அடுத்த அடி தொடங்குவதற்கு  மகரத் தொடக்கமான இன்னொரு சொல்லைத் தேடுகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். மகரத்தில் கிட்டவில்லையானால் வகரத்தில் தொடங்கும் ஒரு சொல்லுடன் இரண்டாவது அடியைத் தொடங்கலாம். மோனை வந்ததுபோலவே கேட்போருக்குத் தோன்றுமளவுக்கு இவ்வெழுத்துக்களுக்கு ஒலியுறவு இருக்கின்றது.

இம்முறை சொல்லமைப்பிலும் வந்துள்ளது.

வினவுதல்  -     மினவுதல்.   (பொருள் ஒன்றுதான்.)
விஞ்சுதல்   -     மிஞ்சுதல்.

இதன் தொடர்பில் விரட்டுதல் -  மிரட்டுதல் என்பது கவனிக்கத்தக்கது.

மிரட்டுதல் என்பது அச்சுறுத்துதல் என்ற பொருளிலே மக்களிடை அறியப்பட்டுள்ளது.   விரட்டுதல் என்பது ஓடும்படி செய்தலைக் குறிக்குமென்று நாமறிவோம்.  எனினும் இச்சொல்லுக்கு அச்சுறுத்துதல் என்ற பொருளும் உள்ளது.   ஆகவே  அந்நிலையில்  மிரட்டுதல் என்பது விரட்டுதலுக்கு ஒப்பாகிறது.

எனவே:

விரட்டுதல் -  மிரட்டுதல்.

இதற்குக் காரணம் விலங்குகளை அச்சுறுத்தியே ஓடச்செய்ய இயலும் என்பதாக
 இருத்தல் தெளிவு.

மிகுதியே  பின் விகுதி என்று திரிந்தது என்பது நாம்  முன் இடுகைகளில்
கூறியதாகும்..மி -  வி.  மிகுதி > விகுதி,


அடிக்குறிப்பு:

-------------------------------------------------

1.மால்வரை ஒழுகிய  வாழை வாழை   (   மா -  வா  )  மோனை.
சிறுபாணாற்றுப்படை.   21.

2.  -நாவொலியிலும்  வானம் என்பது மானம் என்றே வரும்.
மானம் மழை வந்தால்தானே இங்கே பயிர் விளையும் என்பர்.

மானாமாரி >  வானாமாரி என்பதும் காண்க.

3  வல் -  தமிழ்ச்சொல்.  பொருள்:  வலிமை.   மல்   வலிமை.
வல் = மல் .   வல்லன் -  மல்லன்.   வல்  + அன்  = வல்லன்  > வலன் .
வகர மகர மோனைத் திரிபு.

வல்  என்பது பல் என்றும் திரியும்.   வலம் > பலம் , (வலிமை ).

ஞாயிறு, 27 மே, 2018

விண் -- என்றுமுள்ளது இருள்.

விண் என்பதே  ஆகாயம்.  இதைப் பண்டைத் தமிழர் ஆ என்ற முன்னொட்டு இன்றிக் காயமென்றனர். இதற்குக் காரணம் எல்லோன் என்னும் சூரியன் முதல் உடுக்களுடன் நிலவுவரை  விண்ணில் காய்பவை.  காய்தல் என்றால் சூட்டில் நீர்வற்றுதல் மட்டுமன்று,  ஒளி வீசுதலும் ஆகும்.  ஒளி வீசுதலின் அது காயமெனப்பட்டது.  அது பின் காசம் என்று திரிந்தது.   இது யகர சகரத் திரிபு. இத்தகைய யகர சகரத் திரிபு தமிழில்மட்டுமின்றிப் பிறமொழிகளிலும் காணலாகும்.  புறத்தே காய்தலே  புறக் காயம் > புறக்காசம் > பிறகாசம் என்று திரிந்தது.  இன்னும் மெருகேற்றப்பட்டு பிரகாஷ் ஆனது.

விண் என்பதே திரிந்து விஷ்ணு ஆனது.  இன்றும் நீலவண்ணன், மேகவண்ணன் என்றெல்லாம் ஏத்தி ஓதப்படும் விஷ்ணு  நிறத்தால் கருமையே. எல்லும் மதியும் தோன்றாக் காலத்து விண் கருமையே.  ஆகவே இயற்கையில் கருமையே நிறமாகும். வெண்மை என்பது பகலோன் வந்து தரும் நிறமாகும். கருமையை நீலமென்பதும் பெருவழக்கு.

இருளே இயற்கையில் காணக்கிடக்கும் நிறமாதலின் நம் தெய்வங்கள் பலவும் கருமை நிறமே தம் நிறமாய்க் கொண்டன.  நம் பண்டைக் கடவுட் கொள்கையில் தெய்வங்கள் இயற்கை நிறத்தில் தோன்றுமாறு நம் முன்னோர் கவனித்துக்கொண்டனர்.

கருமை விலகத் தோன்றும் ஒளி சிவமாகும்.  சிவமெனின் செவ்வொளி.  செம்மையைச் சே என்ற ஓரெழுத்துச் சொல் உணர்த்தும். சேவடி எனின் செவ்வடி அல்லது சிவந்த அடிகள்.  சேயோன் என்பது சிவப்பு நிறத்தன் என்றும் மாயோன் என்பது கருப்பு நிறத்தன் என்று பொருள்படும்.  மா என்பது கருப்பு ஆகும்.

நமது அடிப்படைத் தேவு அல்லது தெய்வங்கள் சிவப்பும் கருப்புமாம்.

இது இயற்கை வண்ணம் பிறழாமை ஆகும்.

என்றும் இருப்பது இருள். அது ஒளி தோன்றுங்கால் விலகும்.

இருப்பது இருள். அடிப்படை.

இரு+ உள்  =  இருள் ஆகும்.  உள் என்பது தொழிற்பெயர் விகுதி.

கட > கடவுள் என்றது போலும்.

ஒட்டுதல் என்ற சொல்லின் அடி ஒள்.  அதனோடு ஒள்+ து  =  ஒட்டு என்று இணைத்து வினையானது.   ஒளி என்பது இருளொடு ஒட்டுகின்றபோது இருள் விலகி நிற்பதை உணர்வீர்.  ஆக ஒள் என்பது  பின்வந்து ஒட்டிய நிலையைத் தெரியக்காட்டும்.  இதுபின் வெளிச்சத்தையும் குறித்தது.

ஒள் >  ஒடு;  ஒள் > ஒட்டு.  ஒட்டு> ஒட்டுதல்.
இருளென்னும் அடிப்படைமேல்  வெளிச்சம் என்னும் ஒளி ஒட்டப்படுகிறது,
ஒளி மேல் ஒட்டு ஆக, இருள் உள் இருப்பதாகி  இரு+ உள்  ஆயிற்று.

இருளும் ஒளியுமே உலகு ஆகும்.  அவையே  இறைமையின் வெளிப்பாடுகள்.  

சொல்: மோகம் (மோகத்தைக் கொன்றுவிடு!)

மோகனம் என்பது இராகத்தின் பெயராகவும் இருக்கிறது.  மோகன் மோகனா என்ற பெயருள்ளவர்களும் பலருள்ளனர்.   மோகனம் என்ற பெயருள்ளவர்கூட சிங்கப்பூர் வானொலியில் பணியாற்றியுள்ளார். மோகம் என்ற சொல்லும் பேச்சு வழக்கில் உள்ள சொல்;  மற்றும் பாடல்களில் எதிர்கொள்வதுதான்.

விலங்குகள் மோப்பம் பிடித்தே பாலியல் அணுக்கம் கொள்கின்றன.
யாரும் போய்த் தெரிவிக்காமலே உணர்ந்து நெருங்குகின்றன. ஆகையால்
மோகம் என்ற சொல் மோத்தல் என்ற மோ விலிருந்து பிறந்தது.

மோ+கு+ அம் =  மோகம்.  இங்கு கு என்பது சொல்லாக்க  இடைநிலை.  மோப்பம் என்பதில் மோ+பு+அம் ‍= மோப்பம் என்று பு இடைநிலை ஆனது போல.  இதில் பு இடைநிலை என்னாமல் "விகுதி"   ',இன்னொரு 'விகுதி " என்றும் சொல்லலாம்.

மோகித்தல் என்பதில்  இகரம் இறுதியில் நின்று வினையானது. மோ +கு+ இ = மோகி.   இடை  நின்ற கு=  க் +உ.  .  இதிலுள்ள உகரம்  கெட்டது .  மோ +க் +இ = மோகி .ஆயிற்று.

மோகப் பற்று :  இது பின் மோகபத்  ஆனது.

மோகத்தைக் கொன்றுவிடு ==== அல்லால் நீ என்
 மூச்சே நின்றுவிடு

என்று பாரதியார் பாடவில்லை. அவர் பாடியது வேறுமாதிரி.



பழைய நூல்களில் மோப்பு என்ற சொல் கிடைக்கிறது.  இச்சொல்லில் பு என்பது விகுதியாதலின் மோ என்பதே பகுதி என்று தமிழாசிரியர்கள் கருதியுள்ளமைக்கு  ஆதாரம் உள்ளது.  மோகம் என்ற சொல்லுக்கும் மோ என்பதே பகுதியாகும்,  மோப்பாகினேன் என்றால் மோகம் கொண்டேன்,  காதல் கொண்டேன் என்று பொருள்.

காதல்வயப்பட்டுத் திரியும் பெண்ணுக்கு "மோப்பி"  என்றும் சொல்வர். இஃது கைப்பெண்களுக்குப் பயன்படுத்தப்படும்  சொல்லாகும்.  இச்சொல்லும் தொடர்புடையதே  ஆகும்.

மோகம்:   இது தமிழ்ச்சொல்லென்று அறிந்து மகிழ்வீர்.  வகையில் இது திரிசொல் ஆகும். வாசனைபிடித்தல் என்னும் பொருளினின்று திரிந்து காதல் என்ற பொருளுக்குச் சென்றுவிட்டபடியால் திரிசொல் ஆவது இது.

மோகினி என்பது மோயினி என்றும் திரியும்.

பிழைகள் தோன்றின் பின் திருத்தம்பெறும்.

சனி, 26 மே, 2018

சேகரித்தல் சேமி இரு; பாயிரம் ஆயிரம் : விளக்கம்

சேகரித்தல் என்பதொ ஒரு பேச்சு வழக்குச் சொல்.  தொல்காப்பிய முனிவர் தம் ஒப்பரிய இலக்கணத்தைத் தமிழ் மொழிக்கு இயற்றிய காலத்திலே  எழுதப்பெற்றிருந்த  ஓலைச்சுவடி நூல்களையும் வழக்கையும் ஆராய்ந்து பின்னர் தொடங்கியதாகவே பாயிரம் கூறுகிறது.

பா என்னும் பாட்டினால் இயற்றப்பட்டது.  நூலின் முனனே முதல் பாடலாக அல்லது தொடக்கப்பாட்டாக வைக்கப்பட்டது. நூலைப்பற்றியும் நூலாசிரியரைப் பற்றியும் உங்களுக்கு எடுத்துக்கூறுவது. இது நாம் சுருக்கமாகக் கூறுவது ஆகும். பாயிரம் - சொல் எப்படி அமைந்தது?   

பா =  -பாட்டு.
இரு =  நூலில் முன்னிருக்க வைக்கப்படுவது.
அம் =  விகுதி.

பா+  இரு + அம் =  பாயிரம்.

இப்படி இரு என்ற பலபொருட் சொல் பல சொற்களில் தோன்றுவதை முன்னர் விளக்கியுள்ளேன்.  எடுத்துக்காட்டாக  ஆயிரம் என்ற சொல்:

ஆ =   மிகுந்த.  கூடுதலான.    ஒன்று ஆகப் பெரியது என்றால் மிகவும் பெரியது என்று சொல்வதான பேச்சுவழக்க்

இரு =  பெரிய.

இருள்சேர் இருவினை என்ற குறள் தொடரில் இரு என்பது பெரிய என்று பொருடரும்.  ஈண்டும் அஃதே பொருளாம்.

அம் = இறுதிநிலை அல்லது விகுதி.

எல்லம் கூட்டினால்:  ஆ+  இரு+ அம் =  ஆயிரம்.  அப்போது அது ஆகப் பெரிய எண்.  இப்போது சிறியதே.  மலேசியாவில் மூன்று டிரில்லியன்  அரசுப் பணம் கொள்ளை போய்விட்டதென் கிறார்கள்.  ஆயிரம் இன்று பெரிதன்று.  சொல்லமைப்பில் அது பெரிது. இன்றைச் சுற்றமைப்பில் குட்டிதான்.

இரு என்பதுபோலும் சொற்கள் சொல்லமைப்பில் பயன்பட்டுள்ளன.

சில சொற்கள் நெல்வயல்களில் உழைத்தோரால் உருவாக்கப்பட்டவை.
அவற்றுள் சேமித்தல் சேகரித்தல் என்பவை கவனிக்கத்தக்க மேன்மை உடையவை.

சேர் + மி =  சேர்மித்தல்.  

இது வினைச்சொல்லிலிருந்து இன்னொரு வினைச்சொல்  உருவாக்கும் பொதுமக்களின் திறமை. சொல்லிக்கொடுத்ததை மட்டும் படித்த புலவனுக்குப்
புரியாத திறமை.  இது மொழிக்கு உதவியுள்ளது.

தமிழ் என்பது மக்கள் மொழி.

சேர்மித்தல் என்பதில் ரகர ஒற்று வீழ்ந்து சேமித்தல் என்றானது.  சேர்த்தலும் சேமித்தலும் ஒன்றானாலும் நுண்பொருள் வேறுபாடு உடையவை.  சேமிப்பு வங்கி என்னும்போது இச்சொல் நன் கு பயன்படுகிறது.  சேர்ப்பு வங்கி என்றால் சிறக்கவில்லை.

சேகரித்தல்:   இது சேர் + கு + அரி  + தல்.

இங்கும் ரகர ஒற்று வீழும்.  முதற்சொல் சே என்று ஆகும்.

கு என்பது சேர்விடம் குறிக்கும் சொல். இங்கு சொல்லிடைநிலையாகப் பயன்பட்டது.

அரித்தலாவது  தன்னருகில் வரும்படியாக இழுத்தல்.  அருகு > அரு> அரி.
இதில் குவிகுதி வினையாக்கச் சொல்லமைப்பு.  இந்தக் கு தேவையில்லை.  ஆகவே  அரு என்பதை மட்டும் கொண்டு, ஓர் இ வினையாக்க விகுதி சேர்த்து
அரி என்ற சொல் படைக்கப்பட்டது.  அரு  இ!   என்றால் பக்கத்தில் வா என்று வாக்கியமாகும் .

சேகரி என்பதில் இந்த   அரி பயன்பட்டது.

இன்னொரு நாள் சந்திப்போம்.


வெள்ளி, 25 மே, 2018

மோசம் - சொல் மோசமன்று.


இந்நாள்  மோசமென்னும் வழக்குச் சொல்லினை அறிந்து இன்புறுவோம். ஒன்றை மோசமெனின் அது ஏற்றுக்கொள்ளத் தக்க நிலையினின்றும் மிகத் தாழ்ந்துவிட்டதென்று பொருள்.  இச்சொல் மதிமோசம், பொருள்மோசம், மோசம் போனான்மோசடி என்ற பல நிலைகளில் வரும்.

உணவுப் பொருளில் ஈ மொய்ப்பதுதான் மோசம்.  இப்படி மொய்க்கப்பட்டது விரைவில் கெட்டுவிடுவதையும் அதை உண்டவன் நோய்வாய்ப்படுவதையும் கண்டனர்.  எனவே மொய்க்கப்பட்டது  ஏற்புடைத்தன்று என்று முடிவுகட்டினர்.

இக்கருத்தினின்று மோசமென்பது சொல்லாகத் தோன்றியது.


மொய்+ அம் =  மோயம்.   இது முதனிலை திரிந்து நீண்ட தொழிற்பெயர்.
தொழிற்பெயர் என்றால் வினைச்சொல்லிலிருந்து அமைந்த பெயர்ச்சொல்.

யகரம் சகரமாக மாறுமாதலின் இது பின் திரிந்தது:

(மோயம்) > மோசம்.   >ச திரிபு.  தரம் தாழ்ந்தது என்பது பொருள்.

மோயமெனற்பாலது வழக்கொழிந்தது.

மோயன் என்பது சிப்பந்தியைக் குறிக்கும்.( தாழ்நிலையன் .) இவர்கள் கூட்டமாய் நின்று வேலையில் ஈடுபடுவதால் இப்பெயர் பெற்றனர் ..  படித்தரக் காரர் என்றும் பொருளாகும்.  மோயனென்பது ஒரு குடும்பப் பட்டப்பெயர் என்றும் அறியப்படுகிறது.

மூசுதல் -  கெட்டது என்றும் மொய்த்தல் என்றும் இருபொருளுடைய சொல்.

இனிமூசு+ அம் = மோசம் எனினும் அதுவாம்.  மொய்த்தது என்றும் கெட்டது  என்றும் இருபொருளுமுடையதாகும்.

மூசு > மூஞ்சு > மூஞ்சல்:  இதுவும் கெட்டதெனப் பொருள் படும்,

முனிவரும் மோனமும் என்னும் இடுகையில் கூறப்பட்ட திரிபுகளை
நினைவு கூர்க.  உகரம் ஓகாரமாகவும் வருக்கங்கள் ஏற்பவும் திரிதலுடையன.

மறப்பின் சொடுக்கிக் காண்க:

மொய் என்ற சொல்லும் மோ  என்பதனுடன் தொடர்புள்ளதாகும்.  ஈக்கள்
மொய்த்து மோப்பமிட்டு உண்கின்றன. இது கீழ்த்தர நடவடிக்கை என்று அறிக.

http://sivamaalaa.blogspot.com/2018/05/blog-post_47.html

=========================================================================

அடிக்குறிப்பு.

இந்நாள் என்பது முன்னர் இன்னாள் என்று மேலே கொடுக்கப்பட்டிருந்தது.  இது
தவறு,  இந்த எழுத்துரு மென்பொருள் நகர எழுத்தை வருவிக்க இயலவில்லை.
இப்போது சரிசெய்யப்பட்டிருப்பதால் திருத்தப்பட்டுள்ளது.  இதுபோலும் தவறுகள் 
தோன்றினால் பின்னூட்டம் இடுங்கள்.   கண்டுபிடித்துத் திருத்திவிடுகிறோம்.

இ+ நாள்=  இந்நாள்.     இன்னாள்  அன்று.

சில வேளைகளில் மென்பொருள் ஒத்துழையாமை வருத்தமளிக்கிறது.

கைப்பேசிகளிலும் தொந்தரவு ஏற்படுகிறது.  என்செய்வது.  பொறுமை  
கடைப்பிடித்தால் கணினி நன்மை நல்கும் பின்பு.

பிரிட்டீஷ் இந்தியாவில் அடிமைகள்.



இந்தியா என்பது பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்கு   ஒரு வளமான களமாக இருந்ததென்றே தெரிகிறது.  இங்கு சாதியிற் குறைந்தவர்கள் இருந்தார்கள் என்பது அந்த வளத்திற்கு ஒரு பலம் சேர்த்தது.  பலர் அடிமைகளாக வெளிநாட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டனர்.  இஃது ஆராய்ச்சிக்குரிய ஓர் விடயமென்பதில் ஐயமில்லை.   நீங்கள் வரலாற்றாராய்ச்சி செய்பவராக இருந்தால் இதை நன் கு ஆராய்ந்து  முனைவர் பட்டம் பெறலாம்,

 உங்களுக்குச் சில குறிப்புகள்:


Between 1772 and 1833, the British parliament debates, as recorded in Hansard confirm the existence of extensive slavery in India, primarily for Arabian and European colonial markets under the East India Company

Hansard Parliamentary Papers 125 (1828), 128 (1834), 697 (1837), 238 (1841), 525 (1843), 14 (1844), London, House of Commons

---------------------------------

In fact, eighteenth century Europeans, including some Britons, were involved in buying, selling and exporting Indian slaves, transferring them around the subcontinent or to European slave colonies across the globe. Moreover, many eighteenth century European households in India included domestic slaves, with the owners' right of property over them being upheld in law. Thus, although both colonial observers and subsequent historians usually represent South Asian slavery as an indigenous institution, with which the British were only concerned as colonial reforms, until the end of the eighteenth century Europeans were deeply implicated in both slave-holding and slave-trading in the region.

 Slavery, Abolitionism and Empire in India, 1772-1843

சீனாவிலிருந்து தென் கிழக்காசியாவிற்குக் கொண்டுவரப்பட்டோர்  ஈயமண் எடுத்தல் மற்றும் பொருளியலை அமைத்தல் முதலிய செய்ல்களுக்காகக் கொண்டுவரப்பட்டனர்  என்று தெரிகிறது.   ரப்பர்பால்   (தேய்வைப் பால் அல்லது மரச்சாறு  )   எடுப்பதற்கு இந்தியர்கள் கொண்டுவரப்பட்டனர் என்று அறிகிறோம்.


பிரீட்டீஷ் அரசு அடிமைப்படுத்தியது என்ற குற்றச்சாட்டுக்குச் சிலர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.  அடிமைகளாகக் கொண்டுசெல்லப்பட்டோர் பலரும் இந்தியார்களாலே அடிமைப் படுத்தப்பட்டுக் கிடந்தவர்கள்.  பழைய அடிமைகளை இடம் மாற்றியது அடிமைப் படுத்தியதாகாது என்பதுதான் அந்த வாதம்.   இந்த வாதமும் திறமையான வாதமே ஆகும்.

அனுபவப் பட்ட  (பட்டறிவுடையஅடிமைகளை வாங்கிச் சென்றார்கள்.  அதற்கென்ன  என்பர்.

Slavery was endemic in India when Europeans arrived. They could only be enslaved through warfare according to Muslim rules, but were widespread in Hindu territories.   European Slave Trading in the Indian Ocean, 1500–1850 Table 1 gives the numbers of slaves traded by Europeans in and out of India.

ஒரு பதில் இப்படி இருந்தது.
 

தொந்தரவு என்ற சொல்.

தொல்லை என்ற சொல்லை நன்`கு கவனித்தால்,  அது "தொல்" என்னும்  அடியினின்று தோன்றியது என்பதை உணரலாம்.

தொல் > தொல்லை.    இதில் வந்த விகுதி:  ஐ என்பது.

முன்செய்த செயலெதுவும் ஒரு பின்விளைவை ஏற்படுத்தி இடர்விளைக்குமாயின் அதுவே தொல்லை ஆகும்.

கடந்த காலத்தைக் குறிப்பது "தொல்"   என்னும் சொல்.

தொல்லை என்பது பல்பொருளுடைய சொல்லாகும்.  அவற்றின் பொருள்களில் பழமை என்பதுமொன்றாகும்.பழமை என்றே பொருள்தரும் ஒரு சொல்,  அப்பழமையினின்று போதரும் ஓர் இடரையும் குறிக்குமாயின் அஃது  ஆகுபெயர் ஆனது.

தொல், தொல்லை என்பன காலப்பெயர்கள். அதாவது காலத்தைக் காட்டும் பெயர்ச்சொல்.  அது காலத்தினின்று வரும் இடரைக் குறித்தமையின்,  காலவாகு பெயர் எனப்படும். பொருள், இடம், காலம்,  சினை, பண்பு, தொழில் என்னும் ஆறு நிலைகளிலிருந்தும்  பிறவற்றுக்குப் பெயராகிவருவது ஆகுபெயர்.

இன்றுள்ள மொழி நிலைமையில்  தொல்லை என்று சொன்னால் அது இடரையே குறிக்கும்.  பழமையைக் குறிக்கவில்லை.  அதன் பழமைப்பொருள் எங்காவது பழைய நூல்களிலே காணலாமேயன்றி வழக்கில் இருப்பதாக யாம் அறியவில்லை.  ஆகவே தொல்லை= பழமை  என்பது ஒரு வரலாற்றுப்பொருள் ஆகிவிட்டது.

ஆகவே தொல்லை என்பது ஒரு பண்பு  என்று கருதி அதைப் பண்புப்பெயர் என்று சில ஆசிரியர் துணிவர்.    ஆகுபெயர் அன்று என்று கருதுவர்.

எதுவாயினும்  தொந்தரவு என்பது அமைந்த விதம் காணுவோம்.

தொல் >  தொன்.   இது லகர   0னகரத் திரிபு.

தொன் + தரவு =  தொந்தரவு ஆகும்.

தரவு என்பது தருதல் விளைதல் என்று பொருள்படும்.

முன்+தி =  முந்தி என்று புணர்ந்தது போன்றது இது.

இதனால் தொல்லை என்பதும் தொந்தரவு என்பதும் பொருள் ஒன்றான சொற்கள் என்று அறிக.

சிலர் தொந்தரு என்பார்கள்.

வியாழன், 24 மே, 2018

USE OF COOKIES

IF you are a  visitor to this blog,  we do not know whether the software of this blog uses any cookies on your computer to allow you to go through the material herein.

If you consent to such cookies  if any, please enter our blog and read the materials offered.

If you do not consent please do not enter our blog.

If you enter, you are deemed to have agreed to   the use of such cookies.

-----------------------------------------------------------
HACKERS PL DO NOT CORRUPT THE TEXT.
-----------------------------------------------------------

சொல்லமைப்புத் தந்திரங்கள்.

பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை, சாரியை என்பன பதங்களைப் பகுத்தறிந்து கண்டுபிடித்தவை.  குகைமாந்தனும் காட்டுமனிதனும் பேசித் தொடங்கிய  எந்தமொழியிலும் அவன் செயல்பட்ட காலத்தில் இவற்றைக் கவனிக்காமலே சொற்களைப் புனைந்துகொண்டான் என்பதுதான் உண்மை.  ஆலமரத்தைப் பார்த்தான். மேலிருந்து நேராகக் கீழிறங்கும்  மரப்பகுதிகளை விழுது என்று குறித்தான். மேலிந்து அது கீழிறங்குவது "விழு"வது போலிருந்த படியால் அப்படிப் பெயரிடுவதே பொருத்தமாக அவனுக்குத் தெரிந்தது.  பிற்காலத்தில் மொழி பண்பட்டுச் செம்மை நிலை கண்டபோது வந்த இலக்கணப்புலவன் "து" என்று இச்சொல் முடிகிறதே,  இது பெரும்பாலும் அஃறிணையில் வருவதாயிற்றே, இப்படியும் அமைக்கலாம், விழு -  பகுதி;  து என்பதுதான் விகுதி என்று அறிந்துகொண்டான்.  அறிந்ததைப் பிறர்க்கும் உரைத்தான்.

பண்டை மனிதன் அறிந்தோ அறியாமலோ அமைத்த சொல்லை  ஆய்வுசெய்து அதன் உள்ளுறுப்பு ஒன்றை அறிந்து உரைத்தது  மொழிக்கும் ஒரு முன்னேற்றம் ஆனது. மிகமிகப் பிற்காலத்தல்  "கையில் " அகப்பட்டுக்கொண்ட குற்றவாளியைப் பிடிப்பதைக் "கைது" என்றும் அவனைக் கைதி  என்றும் மொழிச்சொற்களை மிகுத்துக்கொள்ளவும் புதுச்சொற்களை ஆக்கிக்கொள்ளவும் தந்திரம் மேவினான். கைது பொழுது  முதலிய சொற்களில் து விகுதி சொல்லமைப்புக்கு உதவியது மட்டுமின்றி  அழகும் சேர்த்தது . கொழு  >  கொழுந்து.   உள்  >  உளு >  உளுந்து. (  நாற்காலி  என்பதில் போல இஃது காரண இடுகுறிப் பெயர் ).  மரு >  மருந்து.

விகுதி என்பது உண்மையில் மிகுதியே  ஆகும்.   மி என்ற எழுத்து வி என்று திரியும்.  மாந்தன் தன் பேச்சில் மி என்று ஒலிக்காமல் அதை வி என்று திரித்து ஒலித்த காரணத்தால் இத்திரிபு ஏற்பட்டது.  இதை எப்படி உறுதிசெய்வது?  மிஞ்சு என்ற சொல் விஞ்சு என்று திரிவது முன்னரே கண்டறியப்பட்டுள்ளது.  அதனால் மிகுதி என்பது விகுதி என்று திரிந்தது என்று உறுதிகாண்கிறோம்.  இங்ஙனம் பொருள் மாறாமல் சொல்லானது இன்னோர் உருவெடுப்பது தமிழ் இலக்கணியர் கண்டுபிடித்துப் "போலி"  என்று பெயரிட்டனர்.  போல இருப்பதால் போலி ஆனது. இப்படிக் கண்டுபிடிததுக் கூறி நம் அறிவை அவர்கள் பெருக்கியுள்ளனர்.

பரம்பரை என்பது மனிதன் குழந்தைகள் உடையவனாகி அவன் குடி தொடர் கொண்டதைக் குறிக்கிறது. இதற்கு இன்னொரு சொல் வம்மிசம்.   வம்மிசம் மிசைமிசை வருதல்.  அதாவது மிசை - மேலும் மேலும் வருதல். வருமிசை என்பது வம்மிசை ஆகி,  அம் விகுதி பெற்று வம்மிசம் என்று மாறி அழகுற்றது.
சங்ககாலத் தமிழன் ஒருவன் உங்களைப் பார்த்து : "வம்மினோ., வம்மினோ" என்று கூவினான் என்றால்  வாருங்களேன்,  வாருங்களேன்"  என்று பொருள் தரும் நல்ல தமிழ் அது.  இத்தகைய சுற்றுச்சார்பில் எழுந்த சிற்றூராரின் சொல்லாகும் வம்மிசம் என்பது.   அது பின் வம்சம் என்று குறுகியது.  அப்புறம் வம்ஸ  ஆனது.  சில குழுவினரிடத்தில் அது  வன்ஸ  ஆனது.   மலாய் மொழியில் அது "வங்ஸ"  ஆகி,  "பங்க்ஸ"  வும்  ஆயிற்று.  இப்போது ஐக்கிய நாட்டு அவைக்கு   "பங்க்ஸ பங்க்ஸ  பெர்சத்து"  என்று பெயர். இவைகளெல்லாம் தாவல்திரிபுகள்.  இவை வாழ்க..இவை நம்மொழிக்குப் பெருமை சேர்ப்பவை.

சரி,  இனி ஒரு சொல்லை மட்டும் அறிந்து  இவ்விடுகையை முடித்துக்கொள்வோம்.

பாதி இரவுக்கு  நள்ளிரவு என்று சொல்வோம்.  நள் என்றால் நடு.  நள் என்பதே நடு என்று திரிந்தது.  நடு என்பதைத் தனியாய் நோக்கினால் அது இயற்சொல். ஆனால் நள் என்ற சொல்லையும் அறிந்து அதிலிருந்து நடு என்பது வந்தது நாம் அறிந்திருப்பதால்  நடு என்பது திரிசொல்.    ஆனால் இலக்கண நூல்கள் இவற்றுக்குக் கூறும் வரையறைக்கு இது சற்று வேறுபட்ட புரிதல் ஆகும். திருநள்ளாறு என்ற ஊர்ப்பெயரை நோக்குங்கால்   அது ஆற்று நடுவில் இருக்கும் ஒரு பெருந்திட்டில் அமைந்த இடம் என்று உணரமுடிகிறது. பிற்காலத்தில் மாற்றங்கள் ஏற்பட்டதா என்று தெரியவில்லை.  நள்ளாறு -  நடு ஆறு.  (சீர் அரங்கம் போல).

நள்ளிரவு என்ற சொல்லில் சலிப்பு ஏற்பட்டதோ என்னவோ,  அதேபொருள் உள்ள இன்னொரு சொல்லைப் படைக்க எண்ணினர்.  எண்ணி,  பாதிரம் என்ற சொல்லைப் படைத்தனர்.  அது எப்படி அமைந்தது என்று பார்ப்போம்.

நள்ளிரவு என்றால் பாதி இரவு.
பாதி + இரவு + அம்.
பாதி என்பது இகரத்தில் முடிகிறது.  இரவு என்பதும் இகரத்தில் தொடங்க, இரண்டு இகரங்கள் தேவையில்லை. ~வு விகுதியும் தேவையற்றதே.
பாதி+ ர + அம்.
இந்த ரகரம் அகரத்தில் முடிகிறது.  அம் என்ற விகுதியும் அகரத்தில் தொடங்குகிறது.  இரண்டு அகரம் எதற்கு?  ஆகவே:
பாதி + ர + ம்.   = பாதிரம்.

எனவே நள்ளிரவுக்குப் புதிய சொல்:  பாதிரம்.

பழைய சொல்தான் இதுவும். இப்போது வழக்கில் இல்லை.

எந்தச் செயலாலும் ஒரு பகுதி தாக்கம் ஏற்பட்டு இன்னொரு பகுதி தாக்கம் இல்லாதிருக்குமானால் அதைப் பாதிப்பு எனலாம்.

பாதி > பாதித்தல். பகுதி கெட்டது என்று பொருள்.

கள்ளப் பணத்தினால் நம் பொருளியல் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்கியத்தில் பாதித்தல் என்பது காண்க.

பாதி + அகம் = பாதகம்.  (கெடுதல்).

இப்போது இச்சொற்களில் பாதி என்ற பொருள் தொலைந்தது. முழுதும் கெட்டாலும் பாதித்தல் என்றே சொல்லலாம். 


8.4.2020 மறுபார்வை. சில தட்டச்சுப்
பிழைகள் திருத்தம் பெற்றன.







புதன், 23 மே, 2018

நித்தியம் என்ற சொல்.

தமிழறிஞர் சிலர் நித்தியம் என்ற சொல்லினமைப்பை  ஆய்ந்து வெளியிட்டுள்ளனர்.

இது நில் என்ற் அடிச்சொல்லிலிருந்து பெறப்பட்டதாய்க் கருதப்படுவது ஆகும்.

நில் > நிற்று >  நிற்றியம் >  நித்தியம்.

இது சிற்றம்பலம் >  சிதம்பரம் என்றானது போல.  (  பேராசிரியர் முனைவர் சேதுப்பிள்ளை அவர்களும் இது கூறியுள்ளார் )

நில்+ து =  நிற்று.
நிற்று + இ + அம் =  நிற்றியம்.
நிற்றியம் நித்தியம் என்பது பேச்சு வழக்கைப் பின்பற்றிய திரிபு.


இதை இன்னொரு வகையிலும் அறியலாம்:

நிறுத்துதலாவது ஒன்று நிலைநிறுத்தப்படுவது.

நில் > நிறுத்து.

நிறுத்து+  இ + அம் =   நிறுத்தியம்,

இடைக்குறைந்து  று என்ற எழுத்து மறைந்தால்:

நித்தியம்.

எல்லா உறுப்புகளும் உள்ளடங்கிய கூடு அங்கம் எனப்பட்டது.

அடங்கம் >  அங்கம்  ஆனது போல.  இதற்கான இடுகை காண்க.

பிழைகள் திருத்தம் பின்.

ராகுல் காந்தியும் சோமநாத ஆலயமும்

இராவுல்  வின்சி என்னும் இயற்பெயர் உடைய ராகுல் கான்தி குச்ராத்திலுள்ள சோமநாதர் ஆலயத்துக்கு வருகைபுரிந்த போது  நிகழ்ந்தவற்றை கீழ்க்கண்ட செய்தித்துணுக்கு  தெரிவிக்கின்றது.

https://timesofindia.indiatimes.com/india/somnath-temple-visit-rahul-gandhi-listed-as-non-hindu/articleshow/61849303.cms

செய்தியைப் படித்து மகிழுங்கள்.

முனிவரும் மௌனமும்.

மௌனம் என்பது  ஓர் அழகிய சொல்.  இது எப்படி அமைந்தது என்பதற்குப் பேச்சு வழக்கையும் பிற பயன்பாடுகளையும் ஆராய்தல் வேண்டும்.

தமிழ்ப் பேச்சுவழக்குச் சொற்கள் பலதிரிந்து அழகான சொற்களாகக் காணப்படுகின்றன.

முனிவன் என்பது   தமிழ்ச்சொல்.  முன்+ இவன் என்பதைப் புணர்த்தினால் முனிவன் ஆகும்.    முன்னிவன் என்று இரட்டித்தாலும் ஓர் ஒற்றுக் குறைந்து முனிவனென்றே வரும்.அப்போது அது இடைக்குறை என்பர் இலக்கணியர்.

 முனிதல் என்றால் கோபம் கொள்ளுதல் என்றும் பொருள்.  தாம் தியானத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் காலத்தில் யாரேனும் போய்த் தொந்தரவு பண்ணினால் கோபம் அடைவர்.  அதனாலும் அப்பெயர் ஏற்பட்டிருக்கலாம்.  முன்னுதல் என்றால் எண்ணுதல் என்றும் பொருள் உண்டு.  எதையாவது சிந்தித்துக்கொண்டிருப்பவர்கள் முனிவர்கள்.  உணவுதேடி உண்ண நேர்ந்த நேரம் போக மற்ற நேரங்களில் அவர்கள் வேலை சிந்திப்பதே.

சிந்தித்துக்கொண்டிருப்பதால் இவர்களுக்குச் சித்தர்  என்றும் பெயர்.  சிந்தி > சிந்தித்தல்:  சித்து  > சித்தர்..  சிந்தித்தபின்  எங்கும் சிந்திக்கொண்டிருப்பவர்கள் இவர்கள்.  சித்தர் பாடல்களைப் பாருங்கள். எவ்வளவோ கருத்துகளை அள்ளித் தெளித்திருக்கிறார்கள் ,  அதாவது சிந்திச் சென்றிருக்கிறார்கள்.

முனிவர்கள் பெரும்பாலும் பேசாமை மேற்கொள்கிறார்கள்.  அதுவே இயற்கை நிலை ஆகும்.   ஐம்பூதங்களும்  பேசுவதில்லை.  அவற்றில் வாழும் செடிகொடிகள் பெரும்பாலும் ஒலிசெய்வதில்லை.  ஒலியின்மையே பெரும்பான்மை ஆதலால்  சித்தர்களும்   அதாவது முனிவர்களும் பேசாமல் தியானத்தில் அமர்ந்துவிடுகிறார்கள்.   அப்படிச் செயவதன்மூலம் அவர்களின் வாழ்வு இயற்கையுடன் மிக நெருங்கிய வாழ்வாகிவிடுகிறது.

முனிவர் என்ற சொல்லினின்றே மோனம் என்ற சொல் உருவாகிற்று.

முனி > முனிவர்'
முனி >  > மோனம்  ஆகிறது.   எப்படி?

முனி > மோனி > மோனம்.

முனி என்பது  உகரத்தின்முன்  மகர ஒற்று நின்ற சொல்.   ம்+ உ= மு.

மோனம் என்ற சொல்லிலும்  மகர ஒற்று உள்ளது.  திரிந்தது உகரமே ஆகும்,

உகரமானது  ஒகரமாகவும் ஓகாரமாகவும் திரியவல்லது,

1  வேற்றுமை உருபுகளில் உடன் என்பதை நோக்குக.  உடு + அன் = உடன்.
அன் விலகினால் மீதம் உடு.  இந்த உடு என்பது ஒடு,  ஓடு என்று திரிகிறது.

கந்தனுடன் ஓடினான்;  கந்தனோடு  ஓடினான்;   கந்தனொடு  ஓடினான்,

2 ஊங்கு என்பது  ஓங்கு என்பது இரண்டும் நெருங்கியவை,
" அறத்தினூங்கு  ஆக்கமும் இல்லை"  என்னும் போது  " அறத்தின் ஓங்கிய ஆக்கம் ஒன்றில்லை"  என்று சொல்வதே ஆகும்.

3.பேச்சு வழக்கில் உன்னுடைய என்பது  ஒன்ட, ஒன்னோட என்று திரிகிறது.

4 உதை என்பது ஒத என்று திரிகிறது,

5  கூகூ என்று கூவும் குயில் கூகிலம் எனப்படாமல் கோகிலம் என்று பெயர் பெறுகின்றது.   ஊகாரம்  ஓகாரமாகக் கொள்ளப்படுகிறது.

6  முகனை என்ற பேச்சுச் சொல்லிலிருந்துதான் மோனை என்ற யாப்பிலக்கணச் சொல் உருவானது என்று ஆய்வறிஞ்ர்  கருதியுள்ளனர்.

இவற்றால்   முனி > மோனி > மோனம் என்பது அமைந்த  விதம் விளங்குகிறது.

மோனம் என்றானவுடன் மவுனம் மௌனம் என்று திரிவதற்குத் தடையேதுமில்லை.

மோனம் என்பது இயற்கையின் முடிவற்ற நிலை.  ஆனால் சொல்லோவெனில் முனிவனிடமிருந்து வருகின்றது.  இதை நமக்கு உணர்த்திய பெருமை முனிவர்தமையே ஐயமின்றிச் சார்கிறது,

சிவமோ மோனகுரு எனப்படுவான்.  இயற்கை நிலை மோனமே.

முடிவற்ற அழிவற்ற மோனத்தில் கலந்துவிட்டால்.......

திருத்தம் பின்பு
==================================