செவ்வாய், 8 மே, 2018

திருநீறும் விபூதியும்.

விபூதி என்னும் சொல் வேறு வழிகளிலும் சிலரால் விளக்கப்பட்டுள்ளது. இது தமிழிலும் வழங்கும் சொல்லாகும்.   இதனை இன்று தமிழின் மூலம் உணர்வோம்.

இதற்கு மற்றொரு பெயர் திருநீறு என்பதாகும்.  எரிந்து முடிந்தபின் கிடைப்பது நீறு எனப்படும்.

தகரமும் சகரமும் ஒன்றுக்கொன்று நிற்பதுண்டு.  தனித்தன்மை வாய்ந்த கோளாகிய சனியின் பெயர்   இப்படி அமைந்தது  ஆகும்:

தனி >  சனி.
தட்டு > சட்டம்.  ( சகரத்தில் மாறி விகுதி பெற்றது).
தம் பற்று >  சம்பத்து.   (தாம் பற்றி வைத்திருப்பவையே ஒருவனுக்கு சம்பத்து)

இங்கு  காட்டிய வற்றுள் ச-த திரிபு உணர்த்தப்பட்டது.

எனவே:

விழுமிய  பூச்சு  :  விழு+ பூசி > விழுபூதி. > விபூதி.

திருநீறணிதல் உயர்கொள்கை ஆனபின் இச்சொல் படைக்கப்பட்டது.
நீறிலா நெற்றி பாழென்பது தமிழர் கொள்கை.  நீறு பூசுதல் விழுமிய பூச்சு ஆகும். விழுமிய =  சிறந்த.

கருத்துகள் இல்லை: