புதன், 2 மே, 2018

குருவிபோல அமைந்தது புள் பக விழுமானம்.

புஷ்பக விமானம்

விழுமிய = சிறந்த.  விழு = சிறந்த.  வி -  சுருக்கத் தலையெழுத்து.
 வி மானம். 

புட்பக விமானம்/ வானூர்தி

பூக்கள் செடியிற் பிரிந்து வெகுதொலைவுக்குப் பறப்பதில்லை. வெறும் பூக்களால் ஆன வானூர்தி அல்லது விமானம் பறக்கவியலாதது.
கடவுள்கள் பறப்பதற்கு விமானம் அல்லது வானூர்தி தேவைப்படுவதில்லை. அவர்கள் எப்படியும் பறக்கலாம்.

ஆகவே இலங்கை சென்ற  புட்பக விமானம் ஓர் இன்றியமையாத கருவியாகச் செயல்பட்டிருக்கவேண்டும். வெறும் பூக்கள் அல்ல.

புள் + பகம் = புட்பகம் ஆகிறது.

புள் என்பது பறவை.

பகம் என்பது பகுதி. பகு+ அம் = பகம். இவ்விமானம் அல்லது வானூர்தி  முன்பகுதி பறவை போன்ற  உருவிலானது என்பது பொருள்.

இது புஷ்பக என்று பிறழ உணரப்பட்டு , புஷ்பம் என்பதனோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.  புள் என்ற சொல் தெரிந்த வான்மீகியும் தமிழனாதல் வேண்டும்.சங்கப் புலவன்.  இராமகாதையில் பல சொற்கள் தமிழினுடன் தொடர்பு உடையவை ஆகும். இது முன்னர் நாம் கூறியதேயாம்.

தமிழிலிருந்து சில நூல்கள் சமஸ்கிருதத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட போது, எழில்மலை என்பதை எலிமலை என்று பிறழ உணர்ந்து,  அந்த மணடலத்தை ஆண்ட மன்னனும் எலி வருக்கத்தைச் சேர்ந்தவன் என்று தவறான ஒரு கதையைக் கட்டி, உலவவிட்டு விட்டனர் நம் பண்டிதர்கள். மன்னனும் எலி உருவினன் அல்லன்; மலையும் எலிமலை அன்று.  தவறான மொழிபெயர்ப்பு.
அதுபோலவே பகுதி குருவி போன்று அமைக்கப்பட்டது புட் பக விமானம்.
இப்படி அமைத்தது பறக்கும்;   பூ என்னும் புஷ்பம் பறக்காது. இதை உணரவேண்டும்.

எழில் > எலி வருக்கம் என்பது மூஷிக பரம்பரை என்று மொழிபெயர்த்தனர்.  மேடை நாடகங்களில் அம்மன்னன் பாவம் எலிமுகத்தன் ஆனான்.

வி என்பது விழுமியது என்பதன் முதலெழுத்து.
மானுதல் = ஒத்திருத்தல். மானு+ அம் =  மானம்.
(குருவியை) ஒக்க அமைந்தது.
வி+ மானம் = விமானம்.
மனிதன் குருவியைப் பார்த்துப் பறக்கக் கற்றுக்கொண்டான்
என்பதே உண்மை.  ரைட்  சோதரர்களும் முதலில் இறக்கை அணிந்துதான்
பறக்கப் பார்த்தனர்.
 

கருத்துகள் இல்லை: