செவ்வாய், 22 மே, 2018

மகாத்தீர் அதிகாரிகள் திறமை


திறத்தினொரு  மலைச்சுனையாய்  தேர்ந்தமகாத் தீரை
தேசமக்கள் கொணர்ந்தமர்த்த தீரபுத்தி  கொண்டார்;

மறைத்துவைத்த பணமனைத்தும் விளைத்தபயிர்  போல
மகாத்தீரும்  வெளிக்கொணர்வார்  குடிகளிது  சொன்னார்.

நிறைத்துயர்ந்த நேர்மையுள்ள அரசினதி  காரி
நிமிரறிஞர்  பலரதனில் குமிந்துழைப்ப தாலே

தரத்துயர்ந்த நடவடிக்கை இனி நலமே  செல்லும்
தரணியிலே  தொலைந்தபணம் உடன்பெறவே  கிட்டும்.

கருத்துகள் இல்லை: