திங்கள், 30 நவம்பர், 2020

குசேலா என்ற பெயர்.

 குசேலா (குசேலன்) என்பதில் இரு சொற்கள் உள்ளன.  ஒன்று குச என்பது. இன்னொன்று ஏலா என்பது.  குச என்பது இவர் குயவர் வழியினர் என்பதை உணர்த்தும். குய என்ற சொல் இன்றும் குச என்றே திரிந்து வழங்குகிறது. இது தமிழ்ச்சொல். ஏலா என்பது விளிப்பெயர். இதன் எழுவாய் வடிவம் ஏலன் என்பது. இது ஏடன் என்பதன் திரிபு.  இதன் பொருள் தோழன், நண்பன் என்பதே. எனவே, இஃது ஓர் இயற்பெயரன்று என்பது தெளிவாகிறது.

வியாசர் இதனைக் காரணப்பெயராய்க் கதையில் அமைத்துள்ளார்.

பிற்காலத்தில் குசேலன் பிரம்மம் என்னும் பெருமானை உணர்ந்து வாழலானார். பிரம்மத்தை உணர்ந்தவனே பிராமணன்.  ஆதலின் இவர் வாழ்ந்த காலத்தின்பின்பு இவர் பிராமணர் என்றே குறிக்கப்படலாயினார்.. குசேலனின் தொடக்கத் தொழிலை இலைமறைகாய்போல் பெயரில் அமைத்தது வியாசரின் கதைசொல்லும் திறனையே கோடிட்டுக் காட்டுகிறது.

தமிழ்ச்சொற்கள் சில திரிபுகளுடன் எவ்வளவு அழகுள்ளவையாக அமைந்துவிடுகின்றன என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும். தொடக்கத்தில் எத்தொழில் உடையரேனும் பின்னர் அவர் தெய்வத்தொண்டராய் மாறுதற்கு இவர் வாழ்ந்த காலத்தில் வழியிருந்தது என்பது தெளிவு.   கண்ணன் அரசானதும் இதையே மீண்டும் வலியுறுத்துகிறது,  வியாசன் மீனவத் தொழிலினின்றும் கவியானதும் இதையே தெளிவுபடுத்துகிறது.

மக்கள் அனைவரும் ஒருவரே போல் வேறுபாடின்றி வாழ்ந்தனர். இதனைக் கூர்ந்துணரலாம் என்பதறிக.

தட்டச்சுப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்படும்.

பிறழ்வுகளைச் சரிசெய்தல் பெரிய வேலையாய் உள்ளது. நீங்கள்

பின்னூட்டமிட்டு உதவினால் நன்றியுடையேம்.


கலைத்தல், கலத்தல், கலயம்.

 முன் காலத்தில் ஐயம் இட்டுண்பது ஓர் அறச்செயல் என்று கருதப்பட்டது. இதற்கான அறக்கலயங்களை வீட்டுக்கு வெளியில் திண்ணையில் வைத்திருந்தனர். இரந்து நிற்போரைக் காணின் கலயத்தில் இட்டுவைத்திருந்த அரிசியை அள்ளிப்போட்டு  அன்புடன் அனுப்பிவைத்தனர்.  இந்தப் பாத்திரங்களில் பலவகை அரிசிகளும் கலந்து வைத்திருந்தனர். குறுநொய் (குருணை), பிறவும் இருக்கும். அதனால் இவ்வகைப் பாத்திரங்கள் "கலயம்" எனப்பட்டன.

பாற்கலயங்களும் பயன்பாட்டில் இருந்தன.

ஐகாரம் குறுகி அகர இறுதிபெற்றாலும்  அம் விகுதிபெற, யகர உடம்படுமெய்  சொல்லாக்கத்தில் தோன்றும்.

கலைத்தல் > கலை > கல > கலயம்.  கலையம் > கலயம்.

நிலைத்தல்  நிலை > நிலையம் > நிலயம்.


கல + அம் = கலயம்

மலை + அம் >  மலையம், மலயம். [மலயமாருதம்]

வினை+ அம்>  வினையம் > வினயம்.

இல்லை  > இலை. 

இலை+ அம் > இலயம்.  (அழிவு). [ இல்லையாதல் ]. லை - ல : ஐகாரக் குறுக்கம். னை - ன என்பதும்  அது.


சொல்லாக்கத்தில் ஒரே அடியிலிருந்து வெவ்வேறு இடைநிலைகள் பெற்றுச் சொற்கள் அமையும்.

கல+ அம் > கலயம்

கல+ அம் > கலவம்.

கலம் என்பதே கலயம் என்று வந்தது என்றும் ஆசிரியர் சிலர் கருதுவர். உயிர்மெய்யெழுத்துத் தோன்றுதல்:  இவ்வாறு சொல்வதன் கருத்து யாதெனின் கல என்பதே இரு வடிவங்கட்கும் அடி எனல் ஆகும்.

மண் கலந்து, நீரும் கலந்து குழைத்துச் செய்யப்படுவதால்,  கல+ அம் = கலயம் என்பதுமாம். வெவ்வேறு வகை மட்கலப்பினால் கலையத்தின் தரம் மாறு படுமா என்பது குயவர் பெருமக்களிடம் உசாவி அறிக.

ய ச திரிபு: கலயம் > கலசம்.

வாயில் > வாசல் என்பது எடுத்துக்காட்டு. 

முடிமுகி நோய்நுண்மி பரவாமல் காத்துக்கொள்க. (கொரனா)

மெய்ப்பு பின்னர்.

சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 01122020




ஞாயிறு, 29 நவம்பர், 2020

Coronavirus in Singapore

 

[Sent by Gov.sg]


*COVID-19: 29 Nov update*


New locally transmitted cases: 1

- Cases in community: 1 (1 asymptomatic)

- Cases residing in dormitories: 0


Imported cases: 7 (4 asymptomatic, 3 symptomatic)

- All placed on SHN or isolated upon arrival in SG


Total new cases: 8


*Active cases: 60*

 - in hospitals: 31 (0 in ICU)

 - in community facilities: 29


Fatalities: 29

Total discharged: 58,124

 - discharged today: 5


Total cases: 58,213


Go.gov.sg/moh29nov


[Sent by Gov.sg – 26 Nov]


As of 12pm, MOH has preliminarily confirmed 1 new case of locally transmitted COVID-19 infection. 


Based on investigations so far, the case is in the community, and there are no new cases in the dormitories.


There are 4 imported cases who had already been placed on Stay-Home Notice upon arrival in Singapore. In total, there are 5 new cases of COVID-19 infection in Singapore today.


MOH will share further updates in its press release that will be issued later tonight.


புறத்தோதிய புரோகிதன்.

 பண்டைக் காலத்தில் அரசரும் அவர்தம் கொடிவழியினரும் விரிவான வாழிடங்களில் வசதிளுடன் வதியும் பாக்கியத்தை அடைந்திருந்தனர். இயல்பான மக்கள்,  குடில்கள், குடிசைகள், செலவமிலார் எனினும் சீருடன் வாழும் வீடுகள் ஆகியவற்றில் குடியிருந்தனர். கடவுட் கொள்கைகள் அப்போதுதான் மெல்ல மக்களிடைப் பரவிக்கொண்டிருந்தன. அவற்றை ஒருவாறு அறிந்த மக்கள், இறைவணக்கம் செய்யத் தலைப்பட்டனர். மரங்களிலும் குகைகளிலும் வாழ்ந்துகொண்டிருந்த அந்தக் கட்டத்தைக் கடந்து பலர் சேர்ந்து ஓரிடத்து  வைகும் நிலையை மக்கள் அடைந்துகொண்டிருந்தனர். ( சேரிகள் அமைதல் ). அவர்கள் பேச்சும் கருத்துகளும் வளர்நிலைக்கு வந்துகொண்டிருந்தன. அது மொழிவளர்ச்சி எனலாம். புதிய சொற்கள் உருப்பெற்று உலவின. பயன்படாத காட்டுக் காலத்துச் சொற்கள் மெல்ல மறைந்துகொண்டிருந்தன. மக்கள் தாம் சொந்தமாகச் சாமி கும்பிட்டதுடன், அத்தொழுகையை நன்றாகச் செய்வதாக உணரப்பட்ட சிறப்புச் செயலர்களை அறிந்தணுகி அவர்களிடமும் சென்று இறைவணக்கம் செய்வித்து மனனிறைவு கொண்டனர்.  ஓ ஓ ஓம் என்று ஒலியெழுப்பித் தொழுகைகளை நடாத்திய இவர்கள் ஓதுவோர் ( ஓதுவார்)  என அறியப்பட்டனர்.  ஓ என்பது ஓசை, அதை எழுப்பி இறைவணக்கம் செய்தோர் ஓது ( ஓ அடிச்சொல், ஒலிக்குறிப்பில் தோன்றிய சொல்) > ஓதுவார் என்று சுட்டப்பட்டதன் அமைதிறத்தை நாம் எளிதில் சிந்தித்து அறியலாகும். 

குடியிருப்புகள் இக்காலக் கட்டத்தில் பெரும்பாலும் சிறியனவாய் இருந்தன.ஓதுதொழிலர்கள் வீடுகட்கு வெளியில் இருந்துகொண்டே தங்கள் வேலையைச் செய்தனர்.   வெளியிலென்றால் வீட்டின் முன்பு ஒரு மரத்தடியிலோ அல்லது ஆலமரத்தடியிலோ இவை நடைபெற்றன.   அடிக்கடி மக்கள் குழுமி இத்தொழுகைகள் நடைபெற்ற இடங்கள்  "ஆலயங்கள்" எனப்பட்டன. ஆல் -  ஆலமரத்தடி;  அ - அங்கு;  அம் - அமைந்த இடம்.  எல்லாம் சேர்த்தால்  ஆலயம் (என்னும் சொல்) ஆய்விடும். மரப்பட்டை சீரை > சீலை > சேலை என்று இன்று பட்டுச்சீலையையும் குறிப்பதுபோலவே,  ஆலயம் என்ற சொல்லும் அதன் அமைப்புக் காலத்தைக் கடந்து இன்று பெரும் கற்கட்டிடங்களையும் குறிப்பதாய் வளர்ந்து பொருளைத் தருகிறது.

வீட்டுக்கு வெளியில் அல்லது மரத்தடியில் செயல்பட்டனர் என்பதுதோன்ற இவ் வோதுவார்கள் "புற ஓதிகர்" எனப்பட்டனர். இதுவே பின் திரிந்து,  "புரோகிதர்" என்றானது.

புற ஓதிகர் >  புரோதிகர் > புரோகிதர்.  (திரிசொல்).

புறம்  ஓது  இ  கு  அர். இவை சொல்லுறுப்புகள்.

ஓதிகர் > ஓகிதர். 

இதில் எழுத்து முறைமற்றுத் திரிபு ஏற்பட்டுள்ளது. இது போல எழுத்து முறைமாற்று ஏற்பட்ட சொல் , விசிறி > சிவிறி;  மருதை > மதுரை ( எனப்பல). றகரத்துக்கு ரகரம் வந்த சொற்களைப் பழைய இடுகைகளில் கண்டறிக. ரகர றகர வேறுபாடின்றி வழங்கிய சொற்களும் இப்போது வழங்கும் சொற்களும் உள. அவற்றைச் சில இலக்கண நூல்களில் பட்டியலிட்டிருப்பார்கள். அந்நூல்களில் கண்டறிக.

நம்பிக்கை மிக்குவந்த பிற்காலத்தில், வீடுகள் விரிவாக அமைக்கப்பட்டு புரோகிதர் வீட்டினுள் வரவழைக்கப்பட்டுத் தம் சேவைகளைச் செய்தனர். இதனால் அக + ஓதிகர் = அகோதிகர் என்ற ஒரு புதுச்சொல்லைப் படைத்துக்கொண்டு மகிழ்வுடன் இருங்கள். புதுச்சொல்லை அது வழக்கில் இன்மையால் பிறர் அறியார். இது ஒவ்வொரு மொழிக்கும் உள்ள இயற்கையான வரம்பு ஆகும். புற ஓதிகரென்பது திரிந்தமைந்திருந்தாலும் வழக்குண்மையால் பொருள்தருகிறது. மொழியில் உள்ள எந்தச் சொல்லிலும் சரியும் இல்லை, தவறும் இல்லை. எந்தச் சொல்லிலும் பொருள் உள்ளில் இல்லை; பொருள் இருப்பதாக மனிதன் உணருகிறான். பொருள் என்பது சொல்லின் உள்ளுறைவு என்று நீங்கள் நினைத்தால், " சிங்க் சியாங்க்" என்றவுடன் உங்களுக்குப் பொருள் தெரியவேண்டுமே! அதில் ஒரு சீனன் பொருள் உணர்கிறான், தமிழன் விழிக்கிறான்.  காரணம், தமிழில் அந்தச் சொல் இல்லை என்பது மட்டுமன்று;  சிங்க்சியாங்கில் பொருள் ஏதும் உள்ளுறைந்திருக்கவில்லை. என்பதுதான் உண்மை. அமைந்துவிட்ட ஒரு சொல்லில் ஒலிப்பிறழ்வுகள் ஏற்பட்டு அதுவே வழக்குக்கு (பொதுப்பயன்பாட்டுக்கு ) வந்துவிட்டால், அதுவே பின் சரியென்று கொள்ளப்பட்டுவிடும்.  அப்படி ஆனதுதான் விசிறி > சிவிறி. இது தத்துவம்.

புற+ ஓது + இகு + அர் = புரோxகிதர் எனினுமாம். இகுதல் - தாழ்ந்துவிழுதல் ,  இகுத்தல் - (முழவு முதலிய )  ஒலித்தல்.  சுட்டடிப் பொருள்:  இ - இங்கு; கு - சென்றுசேர்தல்.  இங்கு > இகு. இடைக்குறை. இவற்றைக்கொண்டு ஏற்ப வரையறவு செய்தல் ஆகும். அமையும். 

குறிப்பு:

புரோகிதன்

புறஓதிகன்

புறஓகிதன்  (முறைமாற்று:  திக > கித)  இருகுறில் முறைமாற்று

புறஓகிதன்

புரஓகிதன்  ( றகர ரகரத் திரிபு)

புரஓகிதன்

புரோகிதன் -  பு ர்  அ ஓ ~ கிதன்

பு ர் ஓ கிதன் : ( அகரம்) கெட்டு மிஞ்சிய (ர் ஓ) இணைந்தன. 

அமைவு  நன்று.

பாயசம்:

பய அசம் >  பயாசம் > பாயசம்

( குறில் நெடில் முறைமாற்று)

பயறு  ( பய - கடைக்குறை)

அசித்தல் - வினைச்சொல்  பொருள் : உண்ணுதல்.

அசி + அம் =  அசம் ( இகரம் கெட்டுப் புணர்ந்தது): 

உண்பொருள்.


அறிக மகிழ்க. 


மெய்ப்பு பின்னர்.

சனி, 28 நவம்பர், 2020

"ஒரு" -வில் விளைந்த இனிய சொற்கள்.

 ஒத்திடம் கொடுத்துக்கொண்டிருந்த எப்போதாவது ஒன்று, ஒரு என்பவற்றை நீங்கள் நினைத்துக்கொண்டதுண்டா? எங்காவது விரைவாகப் போகமுயன்றபோது இடித்துக்கொளவதுண்டு. இதனால் வீக்கம் ஏற்பட்டால் இப்போது குளிர்க்கட்டி ஒத்திடம் கொடுக்கச்சொல்வார்கள்.  சுடுநீர் ஒத்திடத்திலும் குளிர்க்கட்டி ( ஐஸ்) ஒத்திடம் நல்லது என்பார்கள். எதற்கும் மருத்துவரின் பரிந்துரைப்படி நடக்கவேன்டும்.

    ஒத்தி ஒத்தி இடுவதே ஒத்திடம். (ஒத்தடம் அன்று).

    ஒத்திடம் என்பதில் ஒ என்பதே அடிச்சொல் ஆகும். ஒ  எனின் ஒன்று.

    ஒ என்பதனுடன் து என்ற விகுதியைச் சேர்த்தால் இருவகையாய்ச் சொற்கள் ஏற்படும்.

    ஒ + து =  ஒத்து  >  ஒத்துதல். (வினைச்சொல்).

    ஒ + து  >  ஒன்று.  அல்லது ஒ > ஒன் > ஒன்று.  ஒன்+ து > ஒன்று.

    இனி ஒரு மூன்றாவது வடிவமும் தோன்றும்.

    ஒ > ஒல் > ஒல்+து > ஒற்று.

    ஒல்லி என்ற சொல்லில் ஒல் உள்ளது. இரு இணைகோடுகள் ஒன்றாவதுபோல்,  பக்கங்கள் ஒன்றாதல் நோக்கிய நெருக்கத்தால்  ஒல்லியான தன்மை ஏற்படுகிறது. ஒ என்னும் ஓரெழுத்துச் சொல்லை  ( ஒ+த்த)  உணர இவ் வரையறவு தேவையாகிறது.

  ஒப்பு என்ற சொல்லில் பு விகுதி. இது பெயரும் வினையுமாகும். தொழிற்பெயர் ஒப்பு முதனிலைத் தொழிற்பெயர், ஒப்புதல் விகுதி பெற்ற தொழிற்பெயர்.

   ஓங்குதல் என்ற சொல்லில், ஒன்று பிறவின் மிக்குநின்றதே கருத்து. ஒப்புமைக் கருத்து ஈண்டு கரவுகொண்டு நிற்கின்றது. உலகில் ஒரே பொருளாய் அது இருப்பின் ஓங்குதற் கருத்துக்கு வேலையில்லை.

 முடிவனவும் ஒருவனுக்கு ஒன்று பின் ஒன்றாக நிகழுதலே பெரும்பான்மை ஆதலின் ஓண்ணு > ஒண்ணுதல் என்பதும் முடிதற் கருத்தைக் கொண்டிருக்கிறது.

   ஒ > ஒரு என்பதும், கு என்னும் வினையாக்க விகுதி ஏற்று, ஒருகுதல் ஆகும். இதன் பிறவினை ஒருக்குதல்.  ஒன்றை இன்னொன்றில் சொருகும்போது இச்சொருகுதலால் இருபொருள் ஒருவித இணைப்பைப் பெறுகிறது. இவ்விணைப்பு  ஒருமை உறுத்துவதால்,  ஒருகு -  சொருகு என்பன உறவுடைய சொற்கள்.  அகர வருக்கச் சொற்கள் சகர வருக்கமாதல் பழைய இடுகைகளில் தெளிவுறுத்திய கருத்து.  அவற்றை மீண்டும் வாசித்துக்கொள்க.

    ஒருகு > சொருகு.

    ஒ.நோ:  அமண் > சமண்.

                    அடு > சடு> சட்டி.

ஒருகு உருவம் > சொருகு உருவம் > (சொரூவம்) >  சொரூபம்.

உருவம் > ரூபம்.

உரு என்பதில் முதல் உகரமும்  இறுதி உகரமும்  தோன்றற் கருத்தின் வெளிப்பாடு.

உரி என்றால் தோன்றி இங்கேயே இருப்பது. ஆகவே உரியது.  உர்+இ

ஒர் உ > ஒரு என்பது வேறுபடா முன்னிருத்தல் குறிக்கிறது.

இவை சுட்டடி வளர்ச்சிகள்.

அறிக மகிழ்க

மறுபார்வை பின்.


 



வியாழன், 26 நவம்பர், 2020

தனிமையில் கிடந்து இறந்தவர்கள்

என்பொடு தோலுமாய் இளைத்த உடம்பினர்

எண்பது போல்பலர் எண்ணிடு அகவையர்

பண்புடை யவர்கள் பாவம் ஒற்றையாய்

நண்பர் உறவினர் யாருமி  லாதவர்


நகர்களில் நாட்களைக் கழித்தோர் இவர்கள்

பகர்வதும் இலர்தம் துயர்தரு தனிமை;

புகர்மலி மானிட வாழ்க்கை! ஒருநாள்

தகர்ந்துயிர் நமற்குத் தந்துல ககன்றனர்.


போயபின் ஆரும்  அறியாப் புகுதியாய்

மாயவிவ் வாழ்வில் மயங்குல கசங்காச்

சாயுறு கூடாய்க் கிடந்தனர், சாவினை

வாய்கொடு சொல்வார் வையகத் தில்லை.   


தனிமைத் துன்பம் முடிவிலும் தொடர்வது;

மனிதன் சாவில் இணைந்திடு பின்பும்

புனிதமும் புனலா டுதலும் வேண்டுமே;

இனையதோர் காப்பும் இனிவரல் நாடுவம்.


உள்ளார் தனியெனில் உள்ளவர்  கூடி

மெள்ள அவரை மன்பதை புகுத்தித்

தள்ளா அணைப்பினில் தகையுறக் கூட்டிப்

பிள்ளைகள் போலும் பிழையற நின்றும்


இறுதிக் கருமமும் இனிதாய்ப்

பெறுகபின் செல்கெனப் பீடுறச் செய்வமே.  


பகர்வதும் -  சொல்வதும்

இலர் - இல்லை 

நமன் - எமன். நமற்கு - எமனுக்கு.

புகர்மலி -  துன்பம் நிறைந்த;

புகுதி -   நிகழ்வு, சம்பவம்.

அசங்கா(த) - (இரங்கி) அசையாத 

சாயுறு கூடாய் - இறந்த (சடலமாய்)

வாய்கொடு சொல்வார் - அறிவிப்பவர்கள்

தனிமைத் துன்பம் - ஆதரவின்றி வாழும் இடர்

முடிவிலும் -  இறந்துவிட்ட பின்னரும்

புனிதமும் புனலாடுதலும், - சடங்குகளும் பிணம் குளிப்பாட்டுவதும்

இனையதோர் காப்பு - இத்தகைய ஒரு காவலுடைய சூழல்

நாடுவம் -  நாடுவோம்.

உள்ளார் தனியெனில் உள்ளவர் கூடி - தனியாக வாழ்ந்து வருந்துகிறவர்களைப் பக்கத்தில் வாழ்பவர்க்ள் ஒன்றுசேர்ந்து;

மன்பதை புகுத்தி -  சமூகத்துக்குள் கொண்டுவந்து;

தள்ளா அணைப்பினில் - (இத்தகு தனியவர்களை) விலக்கி விடாமல் உதவிக் கரம்   நீட் டி      உடன் சேர்ந்து;

பிள்ளைகள் போலும் - ( பிள்ளைகுட்டி இல்லாதவர்கள் ஆகையால்)

நாமே பிள்ளைகள் போலச் சுற்றி நின்று;

இறுதிக் கருமம் -  இறுதிக் கடன்களை [முடித்து அவர்

உடலை அடக்கம் அல்லது தகனம் செய்வோம்.]


இதுபற்றிய ஒரு துன்பச் செய்தியைக் காண

கீழ்க்கண்ட தொடர்பினைச் சொடுக்கவும்: 


https://theindependent.sg/remains-of-elderly-woman-dog-found-in-condo-unit-over-a-year-after-she-was-last-seen/


எழுத்துப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்பெறும். 

விந்தை

 இச்சொல்லைப் பார்ப்போம்.

இது ஓர் இடைக்குறை சொல். எனினும் அதன் மூலச்சொல் வழக்கிறந்துவிட்டது. ஒரு செடியில் பூத்தது, உலரத் தொடங்கி விழுந்து மறைந்தபின், புதிய மலர்கள் தோன்றிப் பார்ப்போரை மகிழ்விக்கின்றன. மொழியின் ஒரு நீண்ட உலக ஓட்டத்தில் சொற்களும் இவ்வாறே மறைந்துவிடுகின்றன. இயற்கை ஒலியைத் தன் செயற்கை முயற்சியினால் அமைக்கும் சொற்களும் விதிவிலக்கு ஆகமாட்டா. ஆங்கிலோ செக்சன் மொழியிலிருந்த எத்தனையோ சொற்கள் இன்று வழக்கில் இல்லை.  " மர்ட்ரம்" என்பது ஒரு தண்டத்தின் ( அபராதத்தின்) பெயர். ஒருமனிதனைக் கொன்றுவிட்டால் அரசன் அதைக் கொன்றவன்மேல் விதித்தான். அதிலிருந்து கொலை என்று பொருள்படும் ஆங்கிலச் சொல் " மர்டர்" வந்தது.  ஆனால் இற்றை ஆங்கில மொழியில் " மர்ட்ரம்" இல்லை. அஃது ஒரு வரலாற்றுச் சொல் ஆகிவிட்டது. அறிஞர்தம் வரலாற்று ஆய்வில் இது வெளிப்படுகிறது.

விந்தை என்ற சொல்லின் மூலச்சொல் வியந்தை என்பது.  இந்த வியந்தை என்ற சொல்லின் ஓர் எழுத்து அல்லது ஒலி மறைந்தது.  அது யகரம்தான்.  வியப்புக்குரிய ஒன்றுதான் விந்தை.  வியன் > வியந்தை > விந்தை ஆயிற்று. விந்தை என்பதற்கும் விந்து என்ற சொல்லுக்கும் தொடர்பில்லை. இதை அறியாமல் விந்தை என்ற சொல்லைப் பகுதி, விகுதி என்று பிரித்தால் அது  முட்டாள்தனம் ஆகிவிடும். இத்தகைய சொற்களைத்  தொல்காப்பியப் பேராசான் திரிசொல் என்று வகைப்படுத்தினார்.

இடுக்கண் > இடுக்கண்+து > இடுக்கட்டு > இக்கட்டு என்றானதுபோலவே. இக்கட்டு என்பது திரிசொல் ஆதலின் அதில் பகுதி அல்லது முதனிலை அதன் உருவில் அங்கு இல்லை.

ஆங்கிலம் "வொண்டர்" என்பது ஜெர்மானிய " wundran" என்பதிலிருந்து அறியப்பட்டாலும்,  அதற்கப்பால் எங்கிருந்து வந்ததென்பது மேலை ஆய்வாளர்க்கு எட்டவில்லை. அவர்கள் சுமேரிய, எலு, போனிசிய மொழிகளைத் தேடிப்பார்க்கவில்லை. சுமேரியத் தமிழ்த் தொடர்புகளை அறிந்திருக்கவில்லை. (மயில்)  தோகை என்னும் தமிழ் யூதத்தொன்மத்தில் உள்ளதை டாக்டர் கால்டுவல் கண்டுபிடித்தது பாராட்டுக்குரியது.  பண்டை மயில்தோகை நண்ணிலக் கிழக்குக்கு ( மிடல் ஈஸ்ட் நாடுகட்கு) தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதியானதை இது காட்டுகிறது. நாம் சொல்வதன் உள்ளுறைவு யாதெனின்  விந்தை - வொண்டர் ஒலியணுக்கம் ஆகும்.

ஆங்கில மற்றும் இந்தோ ஐரோப்பியம் தமிழ்ச் சொற்களின் ஒப்பீடு ஏறத்தாழ இருபது ஆண்டுகளின்முன் இணையத்தில் வெளியிடப்பட்டது.  அது இப்போது கிட்டவில்லை. இணையப் பதிவின் இருப்புக்கும் பணம் செலவாகிறது. அச்சிட்டு வெளியிட்டனரா என்பதை அறியோம்.


அறிக மகிழ்க.

தட்டச்சுப் பிறழ்வுகள் - பின்பு கவனம்.


கௌபீனம் என்ற கோவணம்.

கோவணத்தைக் கௌபீனம் என்றும் சொல்வதுண்டு. இடைச்சுற்றுக் கயிற்றில் ( அரைஞாண் ) இருபக்கலும்  கோத்து அணியப்படுவதால் அது கோவணம் எனப்பட்டது.  

கோத்தல் என்பது வினைச்சொல்.

கோ+ வ் + அணம் = கோவணம்.  வ் என்பது உடம்படுத்தும் இடைநிலை. அணம் என்பது விகுதி அல்லது இறுதிநிலை. அணி+ அம் என்பதும் அணம் ஆகும்.

சொல்லை மிகுத்து இன்னொரு சொல் படைப்பதற்கு உதவுவது விகுதி.  மிகுதி என்பது விகுதி என்றானது.  மிஞ்சு என்பது விஞ்சு ஆனதுபோலுமே இது.

கோவு + அணம் = கோவணம் எனினும் இழுக்காது.

இனிக் கௌபீனம் என்பது.

இவ்வரையுடை,  முன்னே கோத்துப் பின்பக்கமும் செல்வதால்:

கோ > கௌ.

பின்னு + அம் =  பின்+ அம் = பீனம்.

பீனம் என்பது பின்னுதல் என்ற வினைவடிவம் (பின்) முதனிலை பீன் என்று நீண்டு, அம் விகுதி பெற்று பீனம் ஆனது.

கோபீனம் > கௌபீனம்.

காக்கும் பின்னுகை என்ற பொருளில் கா+பீனம் > காபீனம்> காவுபீனம்> கௌபீனம் எனினும் இழுக்காது. காபீனம் - வினைத்தொகை.  காவுபீனம் இருதொழிற்பெயரொட்டு.


உகர ஒகரத் திரிபுகள்

 உகரம் ஒகரமாக மாறுவது தமிழில் இயல்பான திரிபுதான். இதைப் பலர் கண்டுகொள்வதில்லை.

ஒங்க வீடு எங்க இருக்கு என்று கேட்கும் போது,  உங்கள் என்பது ஒங்க என்று மாறிவிடுகிறது.

சொந்தமுன்னா திங்க உங்க ஒண்ணுக்குள்ளே ஒன்னா ஒத்துமையா இருக்கணும் என்ற பேச்சுமொழி வாக்கியத்தில் வரும் உங்க என்பது உண்ண என்ற சொல்லே ஆகுமென்பதைச் சொல்லவேண்டியதில்லை. இதில் உங்க என்பது எதுகைநோக்கிய திரிபு போன்றதாகும்.

உன்னாலே முடிந்ததைப் பார்

ஒன்னாலே முடிஞ்சதைப்  பாரு. (பேச்சு)

உறவு > ஒறவு      ஒறமொறெ

பேச்சுத் தமிழின் திரிபுகளை இமனோ அண்ட் பரோபோல யாராவது முற்ற ஆராயவேண்டும்.

எழுத்துமொழியில்  ஊங்கு - ஓங்கு என்பவற்றிலும் இது காணலாம்.

அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை.

அறந்தினோங்கிய ஆக்கமும் இல்லை.

ஊங்கு என்பது எச்சவினையன்று எனினும் அதன் உறவு தெளிவாகவே உள்ளது.

புதன், 25 நவம்பர், 2020

குந்தாணி. சொல் திறம்.

முன்வந்த இடுகை இங்கு உள்ளது.

https://sivamaalaa.blogspot.com/2020/11/blog-post_24.html

மேற்கண்ட இடுகையில் குந்தாணி என்ற சொல்லை ஆய்வு செய்யும்படி நேயர்களைக் கேட்டிருந்தோம்.  இதுவரை யாரும் எதையும் தெரிவிக்கவில்லை என்றாலும், இப்போது நாம் அதைக் கவனித்து அறிவோம்.

குந்தாணி என்பதில் குந்து என்பது முன் நிற்கும் சொல்.  இது கு + து என்ற இரண்டு உள்ளீடுகளை உடையது.

கு என்பது சேர்விடம் குறிக்கும் சிறுசொல்.   அமெரிக்காவிற்கு என்பதில் அது உருபாக வருகிறது.  ஆனால் குந்து என்பதில் அஃது இடம் குறிக்கிறது.

கு எனில் இடத்தில் என்று பொருள்.

து என்பது வினையாக்க விகுதியாய் வந்துள்ளது.  

முழுப்பொருள் இடத்தில் இரு என்பதே.

ஓரிடத்தில் வன்மையுடன் சென்று சேர்தல்  சற்றே  மென்மையுடன் சென்று சேர்தல் என்று சேர்தல் இருவகைப்படும்.  வன்மையுடன் சேர்தலைக் குறிக்க, வல்லெழுத்து சேர்க்கப்படும்.   கு + து >   குத்து என்று.  து என்பது வல்லெழுத்தே என்றாலும், குது என்றால் அது மெதுவடைந்துவிடுகிறது.  குத்து என்று தகர ஒற்று நுழைந்தால்தான் வன்மை மேல்வருகிறது.  கையால் குத்துதல், நெல்குத்துதல் குச்சி குத்துதல் முதலியவற்றில் வன்மை உள்ளது.

சற்று மென்மையுடன் சென்று சேர்தலே  குந்துதல். இந்த மென்செயல் குறிக்க, சொல்லும் நகர ஒற்று  ( ந் ) பெற்று ஒருவாறு வன்மை குன்றுகிறது.  குத்துதல் என்ற செயல்வன்மை குந்துதலில் இல்லை.  ஆனால் இரண்டும் சென்றடைவினையே குறிக்க எழுந்த சொற்கள்.

ந் என்பது  மெல்லினம். மென்மை குறிக்க, மிக்கப் பொருத்தமாகிறது.

நெல்லைக் குத்துவது உரலுக்குள் ஓர்  உலக்கை அல்லது தடி. அது நெல்மேல் சற்றே மென்மைப்படவே குத்தப்படுவதால்,  அது அவ்வேலையை நல்லபடி அறிந்தோரால் கையாளப்படுகிறது என்று சொல்லவேண்டும்.  இந்தக் கையாளுதலைக் குறிக்க,  ஆள் என்ற சொல் அடுத்து வைக்கப்படுகின்றது.

அதன்பின் இடைநிலையும் விகுதியும்.  இடைநிலையான  ந் என்ற ஒற்றும்  முடிவாக இ என்ற இ'றுதிநிலையும் வைக்கப்பட்டுள்ளன.   எல்லாம் இணைக்க,

குந்து + ஆள் + ந் + இ =  குந்தாணி ஆகின்றது.

ஓட்டுநர் என்ற சொல்லில் ந் + அர் வந்ததுபோலவே,  இங்கு  ந்+ இ  வருகிறது.

அறிக. மகிழ்க.



 


சிங்கப்பூர்க் கொரனா (முடிமுகிக் கிருமி)

 சிங்கப்பூரில் உள்ளூர்வாசிகளிடம் நோய்நுண்மித் தொற்று இல்லை. வெளியூர் வருகையாளர்களால் இந்நோய் வந்தபோதும் அவர்கள் வீட்டிருப்பு மூலமோ வேறுவகையிலோ தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இன்று ஏழுபேருக்குத்தான்.

அதிகம் ஒன்றுமில்லை.  இன்று திகதி 25, நவம்பர் 2020.

இது அரசு அறிவிப்பு மூலம் அறிந்தது.

செவ்வாய், 24 நவம்பர், 2020

இலக்கணமும் சொல்லாய்வும்

பகுபதத்தில் தொகுத்தல், பகாப்பதத்தில் முக்குறைகள்  என்று  இலக்கண ஆசிரியர்கள் கூறுவர். பார்த்தால் இத்தகு வேறுபாடு சொல்லாக்கக் கலையில் அல்லது சொன்மூலக் கண்டுபிடிப்பில் எந்த விளைவுகளையும் ஏற்படுத்திவிடுவதில்லை.  ஆகவே இடையில் எழுத்துக் குறைவுகள் அல்லது ஒலிக்குறைவுகள் ஏற்படின், எத்தகு பதமாயினும் இங்குள்ள இடுகைகளில் இடைக்குறை என்றே குறிக்கப்பட்டுள்ளன என்பதை பலகாலும் ஈண்டு வந்து சென்றோர் உணர்ந்திருக்கக் கூடும். ஒன்று சொல் குறுகிவிட்டது  அல்லது நீண்டுவிட்டது : அவ்வளவுதான்.

இலக்கண நூலார் ஒவ்வொருவரும் முக்குறைச் சொற்களுக்குப் பெரும்பாலும் எப்போதும் காட்டப்பெறும் எடுத்துக்காட்டுகளையே காட்டுவர். பாடத்திட்டங்கள் மாறும்வரை, வாத்தியார்களும் அவற்றையே சொல்லிக்கொண்டிருப்பார்கள். பல்கலைக்கழக வாத்தியார்முதல் பொடியன்களுக்குக் கற்பிப்போர்வரை எல்லாரும் அவ்வாறே.  தொழில் முறை அவ்வாறு உள்ளது. பாகவதர்கள் பாட்டுகள் போல. பாகவதர் சிலர்மட்டுமே சின்னூரில் பாடிய பாகத்தை  (பாகம் ஒன்று)  குன்னூரில் மறுபடியும் பாடாமல் இன்னொரு பாகத்தை (பாகம் 2)ப் பாடி,  3-வது ஊரில் ( முன்னூரில்) மூன்றாவது பாகத்தைப் பாடுவராம்.  அருகருகே உள்ள ஊர்களில் அதே பாகத்தைப் பாடக்கூடாது என்பதற்காக.

நாம் இங்குக் குறுக்கச் சொற்களைப் பெருவாரியாகக் காட்டியுள்ளோம்.

கிருஷ்ணன் என்ற சொல்கூட இடைக்குறையாய் வந்து முன் நிற்கிறதே.  இசையமைப்பில் புகழ்பெற்ற (சங்கர்-) ஜெய்கிஷன் பற்றி எண்ணும்போது, ~~ ஜெயக்கிருஷ்ணன் என்பதுதான் வடக்கில் இடைக்குறைந்து அவ்வாறு வழங்குகிறது என்று நாம் சொல்வோம். பகர வகரத் திரிபாயின், பன்சாடா என்பது வன்சாடா ஆகும் என்றும் பசந்த் என்பது வசந்தம் என்றும் சொல்வோம்.

நீங்கள் பின்னூட்டமிட்டு வாதிக்கப் பலவுண்டு ஈண்டு.

இரும்பினால் செய்யப்படுவதே ஆணி,  ஆனால் குந்தாணியில் ஆணி எதுவும் இல்லை. அப்புறம் எப்படி அதற்கு ஆணி என்ற பெயர் ஏற்பட்டது?   குந்துவது என்பது உட்காருவது, அமர்வது என்னலாம். உங்கள் ஊரில் உள்ள குந்தாணியில் ஆணி அடிக்கப்பட்டுள்ளதா என்பது யாம் அறியாதது.  அடித்திருந்தால் பெயர் பொருத்தம் என்று விட்டுவிடுவோம். இல்லை என்றால் மேலும் ஆய்வு செய்வோம். உள்ளதுகாறும் மென்மேலும் அறிவினை வளர்த்துக்கொள்ளுதல் நன்று,   இன்றேல் ஊதியமில்லை உயிர்க்கு.

பின்னூட்டமிடுங்கள். உங்களிடமிருந்து அறிய ஆவல்.

நாளை அல்லது பின்பு அளவளாவுவோம்.


சனி, 21 நவம்பர், 2020

தீபத்தம்பம் - தமிழில்?

 இச்சொல்லை இக்காலத்தில் நாம் பெரும்பாலும் எதிர்கொள்வதில்லை. இக்காலங்களில் மிகுதியானோர் வான்வழிச் செலவு  என்னும் பறந்து செல்லுதலை மேற்கொள்வதுதான் காரணம். கப்பலில் சென்றால் ஒரு துறைமுகத்தை அடையுமுன் வழிகாட்டும் கலங்கரை விளக்கங்களைக் காணவேண்டிவரும். கலம் என்பது நீர்மேலூர்தி. கரைதல் ஆவது அழைத்தல். விளக்கு -  இங்கு எரியும் நிலைப்பந்தம். இது ஓர் அழகான சொல்தான்.

நீர்மேலூர்திகள் -  ஓடம், படகு, கட்டுமரம்,  தோணி, கலம் எனப்பலவுள்ளன. இதைப் படிக்கும் நேயர்கள், நிமேதி என்பது என்ன ஊர்தி என்று எனக்குத் தெரிவியுங்கள். (பின்னூட்டமிடுங்கள்).

கப்பல் என்பது நல்ல தமிழ்ச்சொல் என்று ஒரு  தமி ழாசிரியர் வெளியிட்டிருந்தார். அதற்கான விளக்கத்தையும் அவர் தெரிவித்திருந்தார். அதை அவர் நூலில் கண்டுதெளிக. ( உரிமைப்பதிவு செய்த நூல்: அதிலுள்ளதை இங்கு விரித்தல் இயலாது, , மன்னிக்கவும் ).

கப்பலென்பது  "கப்பு கப்பு" ஒலிசெய்த வண்ணம் புகைவிட்டுக்கொண்டு  சென்றதால்  (  அந்தக்காலத்தில் எல்லாம் நீராவிக் கப்பல்கள்)  ஏற்பட்ட பெயர் என்று சில மூத்த பெருமக்கள் கூறுகின்றனர்.  இருக்கலாம்.

இயங்கு ஈருருளிகள்  வந்த காலத்தில் வாழ்ந்த அம்மையார் ஒருவர்,   "மோட்டோர் சைக்கிள்" என்பதை "திக்குதிக்கு வண்டி" என்றாராம். இதிலிருந்து "திக்குருளி" என்ற சொல் ஏற்படவில்லை.

அதைப்போல ஒலிக்குறிப்புகளிலிருந்து சொற்கள் எல்லாமொழிகளிலும் ஏற்பட்டுள்ளன.  காவ்காவ் என்று குலைப்பதால் (குரைப்பதால்)  காவ் என்பது சீனமொழியில் நாய்க்குப் பெயராய் உள்ளது.  குர்ர்ரோ குர்ர்ரோ என்று கத்துவதால் காக்கைக்குக் குரோ என்று ஆங்கிலத்தில் பெயர் அமைந்தது.  கப்பல் என்ற சொல்லும் ஒலிக்குறிப்பு அடிப்படையில் எழுந்த பெயராயும் இருக்கலாம்.  பெயர்கள் பல காரணங்களால் ஏற்படுவன ஆகும்.

ஆனால் கப்பலென்பது பெரிய கடல்களைக் கடத்தலுக்கு (கடந்துசெல்லுதலுக்கு)  உதவும் பொருட்டு ஏற்பட்ட நீர்மேலூர்தியாம். கடப்பு+ அல் = கடப்பல் என்ற பெயர் இடைக்குறைந்தும் கப்பல் என்ற பெயர் வந்துற்றது.  இச்சொல் ஒரு பல்பிறப்பி ஆகும். இது, பல உள்ளுறுப்புகள் அடங்கிய உடலின் மேற்பாகம்,  அடங்கம் > அங்கம் என்று இடைக்குறைந்து பெயர் ஏற்பட்டது போலுமே. இடைக்குறைச்சொற்கள் மிக்கு மிளிரும் மொழி தமிழாகும்.  இத்தகைய சொற்கள் (திரிபுகள்) மிக்கிருந்த காரணத்தால், தொல்காப்பியர் செய்யுளீட்டச் சொற்களில் திரிசொற்களையும் உள்ளடக்கினார். இயன்மொழியாம் தமிழ் தன் திரிபுகளால் பலமொழிகளைப் பிறப்பித்துத் தாயானது.

வருகிறான், போகிறான் என்பவற்றில் { இடைநிலைகள்  கிறு (கின்று, ஆநின்று) } ---- கிறு என்பது கு+இன்று என்பதன் புணர்வில் விளைந்த இடைக்குறையாகிய இடைநிலை என்பதை அறிஞர் வரதராசனார் கண்டுரைத்துள்ளார். இஃது நுண்மாண் நுழைபுலம் ஆகும்.

இப்போது தீபத்தம்பம் அல்லது தீப ஸ்தம்பம் என்ற சொல்லைக் காண்போம்.  ஸ்தம்பம் என்பது தானாய் நின்றுகொண்டிருப்பது. தன்+பு+அம் = தம்பம்.  இச்சொல் பின்பு +அம் = பிம்பம்  போலும் அமைந்தது.  பிம்பம் என்பது பின்வீழ் ஒளிநிழல்.  தன்பம் - தம்பம் தானாய் ( ஒற்றையாய்) நிற்பது.  தன் பின் பிறந்தவன் தம்பி (தன்பின்) என்றானது கண்டு தெளிந்துகொள்க. பின்னாளில் தீபத்தம்பம் தீபஸ்தம்பம் என்று மெருகுற்றது.

தீபம் என்பது தீ  பற்றி எரியும் கோலைக்குறித்தது.  தீ + பற்று + அம் > தீப(ற்ற)ம் > தீபம் என ஆகிய இடைக்குறைச் சொல்.  தமிழில் இடைக்குறைகள் கூடுதல்.

இதைச் சுருக்கமாக ஆய்வாளர் தீ + பு+ அம் :  தீபம் என்று விளக்கிக்கொள்ளலாம்.  மோசம் இல்லை.

இதைப் பாருங்கள்

பத்தினோடு ஒன்று >  பத்தின் ஒன்று > பதினொன்று.( பதுனொண்ணு ). நன்றாக இருக்கின்றது.

பன்னிரண்டு:  பத்தினோடு இரண்டு > ப(த்தி)ன் இரண்டு > பன்னிரண்டு.

பத்து என்ற சொல் பல் என்பதிலிருந்து வருகிறது.  பல்>பன் திரிபு. இன்னொரு வகை விளக்கம்.

விளக்கம் பலவென்று துளக்குறா நெஞ்சம் வாழ்க.

மெய்ப்பு பின்.

வெள்ளி, 20 நவம்பர், 2020

சூழ்தருதனம் அல்லது செல்வச்சூழல்.- சுதர்சனம்

 பண்டமாற்றுப் பொருளியல் தேய்ந்து பணப்புழக்கம்  நாட்டில் ஏற்பட்ட பின்பு மக்கள் தாங்கள் தேட்டினை உலவும் பணத்தாள்களாக மாற்றிவைக்க முனைந்துவிடவில்லை. நகைபகை1*யெல்லாம் ஒரு குடத்துக்குளிட்டுப் புதைத்து வைத்துக்கொள்ளவே தலைப்பட்டனர். கல்யாணம் காட்சி என்று வரும்போது தோண்டி எடுத்துப் பயன்படுத்திக்கொள்ள இவ்வழக்கம் உதவியது.

ஓருவனின் செல்வம் குடத்துள் இட்டுப் புதைப்புறாமல்,  அவனிடத்துச் சூழப் பலராலும் காணப்படுமாயின், அத்தனத்தைச் சூழ்தரு தனம் என்று சொல்வதே சரி.  புதையல் அன்று என்பது யாரும் அறிவார்.  தனம் என்பது தன் சொந்தச் சேமிப்பில் தான் வைத்திருப்பது.  தன் + அம் = தனம்..  இதைத் தனம் என்க.  த என்பதை எடுத்தொலிக்கவேண்டாம். இது பெர்சனால்டி என்பதுபோலும் சொல்.

இனித் திரிபு காண்போம்.

சூழ் >  சூ > சு. (கடைக்குறையும் முதனிலைக் குறுக்கமும்).

தரு -  தர். உகரம் கெட்டது.

தனம் > சனம்.    முன் இடுகைகளில் த ச திரிபு கண்டுகொள்க.

சு + தர் + சனம் = சுதர்சனம்.( பாக்கியவான்.)

சுதர்சனம் > சுதனம்


குறிப்புகள்:

1*நகை என்பது பெரும்பாலும் பொன்னாலான அணிகலன்கள் அல்லது ஆபரணங்கள்.  பகை என்பது எதிரிகள் அல்லர்.  ஒருவர் வைத்திருக்கும் முழு நகைத்தொகுதியிலும் ஒரு பகுதி.    பகு > பகு+ ஐ > பகை. --  எனில் பகுதி.  பகை என்ற பகுதி  எதிரியைக் குறிக்கக் காரணம் அவன் நம்மிலிருந்து பகுந்து வேறுபட்டு நிற்பதுதான்.  இப்பொருளும் சொற்பொருண்மையுடன் தொடர்புபட்டதே ஆகும்.

எழுத்துப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்படும்.

உந்தன், உன்றன் எந்தன் என்றன் எது சரி

 இந்த இடுகைக்கு நல்ல தலைப்பு எது என்று சற்று சிந்தித்தேம். "ஓருமை பன்மை மயக்கம்" என்பது சரியான தலைப்பு என்றாலும், இதில் வரும் "மயக்கம்" என்பது புரியாமல் போய்விடும் என்னும் தடை எண்ணம் வந்தது. இலக்கணம் அறிந்தாரும் சிலவேளைகளில் தெரிந்தே அதை மீறவேண்டியுள்ளது. எடுத்துக்காட்டாக:

"கண்ணல்ல தூங்கம்மா - நீ என்

கண்ணல்ல தூங்கம்மா"

என்ற மக்களுக்குப் புரியும் பாட்டில்,  கண் அன்றோ தூங்கம்மா என்றிருக்கவேண்டும் என்று மாறுபடலாகும். இதற்குக் காரணம்,  கண் ஒருமை; அல்ல என்று முடித்தல் ஆகாது என்னலாம்.   ஆனால் அப்படிச் சொல்வதும் சரியில்லை.   இதன் முழு வாக்கியம், " நீ என் கண் அல்லளோ"  என்பது. ஆகவே, அல்லளோ என்று முற்றுறுவதே சரி என்னலாம்.  ஆனால் அதுவுமே  ஏற்கத் தக்கதன்று;  "நீ  என் கண் அல்லையோ"  என்பதே மிக்கச் சரியானது என்று எதிர்த்தெழலாம்.

தமிழ்ச்சான்றோர்  எவ்வாறு எழுதினரோ - பேசினரோ அவ்வாறு எழுதுவதே சரியான இலக்கணம் (மரபு).  என்று ஒரு விதியை முன்வைத்துப் போற்றுதல் வேண்டுமென்பது சரியான கொள்கையே. அதன்படி,

நீ அல்லை;

நீர் அல்லர்.

யான் அல்லேன்

யாம் அல்லேம்

யாங்கள் அல்லோம்

நீம்  அல்லீம்

நீர் அல்லீர்

நீவிர் அல்லீர்

நீங்கள் அல்லீர்கள்

என்பவும் இன்ன பிறவுமே போற்றி எழுதுதலே சரி  என்று சொல்லவேண்டும்., இவையெல்லாம் சரியே என்றாலும் இவற்றில் பாதிக்குமேல் மொழியிலிருந்து ஒழிந்துவிட்ட வடிவங்கள். "விளங்காததை யாரும் படிக்கமாட்டார்கள்" என்பதே சரி. மொழி என்பது ஒரு கருத்தறிவிப்புக் கலையே ஆதலின், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னிருந்த மொழிநிலையை மீட்டெடுத்து அதன்படி எழுதினால் எவனுக்கும் புரியப்போவதில்லை என்பது உண்மை.  ஆ.எல். ஸ்டீவன்சன் கூறியபடி, நாம் எழுதுவது அடுத்தவனுக்குப் புரியவில்லை என்றால் குற்றம் நமதே  ஆகும்.  அவன் என்ன செய்வான் பாவம். அந்தச் சுமை, அறிவிக்க முயல்வோனுடையது ஆம்.

விளக்கிச் சொல்லிப் புரியவைக்கலாம். ஆனால் சில வேளைகளில் அது முடியாதது ஆகிவிடுகிறது.  செய்தியறிக்கை வாசிப்பவர்  கடினச் சொற்களைப் போட்டு வாசித்தால்,  கேட்பவன் அகரவரிசையைக் கையில் வைத்துக்கொண்டு கேட்கவேண்டும்.  சொல்லைத் தேடிக் கண்டுபிடித்து அறிவதன்முன், செய்தியறிக்கை முடிந்துவிடும்.

ஆனால் எழுதும்போது நிலைமையைச் சற்று சரிப்படுத்திக்கொள்ள வசதி இருக்கிறது என்றாலும் அதற்கும் ஓர் எல்லை உள்ளது.

புறநானூறு முதலியவற்றில் எத்துணை அழகிய கவிதைகள் உள்ளன. அதனில் ஒரு பாட்டு:

இரவலர் புரவலை நீயும் அல்லை

என்று தொடங்குகிறது.  கேட்பதை வழங்கி அறம் செய்வோன் என்று எண்ணி அவன்பால் நண்ணி   இரந்து நிற்பவனுக்கு  அப்பொருளை வழங்கி அவனைக் காப்பவன்  நீ  'அல்ல' என்பதே இதன் பொருள்.

இதைப் பாடிய தமிழ்ப் புலவன் நாலே சொற்களில் அதைச் சொல்லிவிட்டான்.

"நீயும்" என்பதில் வரும் உம்,  ஈதல் செய்யார் பட்டியலில்  உன்னையும் சேர்க்கவேண்டும் என்று இடித்துரைக்கிறது.

இதை இங்கே எழுதக் காரணம்,  "அல்லை" என்ற சொல்தான்.  இதுபோல் சொல் வடிவங்கட்கு அகரவரிசையில் பொருளறிதல் கடினமே.  நீ அல்லை என்பதே சரி. நீ அல்(?/?) என்ற பிறவடிவங்கள் வழுவாம்,  பழைய இலக்கணப்படி.

"எந்தன் கண்ணில் கலந்து விளையாடும்

இன்பமே ஓடிவா"  

என்பது ஒரு பாட்டு வரி.  இதைப் படிக்க நேர்ந்த ஒரு தமிழ்ப்புலவர்,  எந்தன் என்ற சொல் தவறு என்றார்..  உண்மைதான். எந்தன் என்பது எம்+தன்.  எம் என்பது பன்மை.  தன் என்பது ஒருமை.  இதுதான் ஒருமை paன்மை மயக்கம் என்பர். இது ஒரு வழூஉச்சொல் ஆனாலும் இக்காலத்து அது ஏற்கப்படுமாயின் வழுவமைதி ஆகிவிடும்.  ஒருமையில் என்றன்  என்றும் பன்மையில் எந்தம் என்றும் இருக்கவேண்டும்.

"அவர்தானே என் ஆருயிர் வாழுந்தெய்வம்,

அடியாள் என்னை ஆட்கொண்ட காதல் தெய்வம்".

அவர் - ஒருவரைக் குறிப்பின் பணிவுப் பன்மை.  தானே என்பது ஒருமை. இங்கு அவர் என்பது வடிவில் பன்மையாய் இருப்பினும் பொருளில் ஒருமையே ஆதலின் தானே என்ற ஒருமை பொருந்திற்று என்னலாம். என்றாலும் அவர் என்பது பன்மை ஆதலின், வழுவமைதி என்று முடிப்பதே நன்று எனலாம். இங்குப் பணிவின் பொருட்டு அவர் என்று வந்தமை சுட்டிக்காட்டுவர்.

எனவே:

என்+தன் = என்றன்  ( சரி)

உன் +தன் =  உன்றன் (சரி).

எந்தன் உந்தன் என்பவை தவறான சொல்வடிவங்கள் எனினும்,  வழுவமைதிகளாகக் கொள்ளலாம்.

ஒருமை பன்மை இல்லாத மொழிகள் உலகில் உள்ளன. அவற்றுக்கு இந்தத் தொல்லை எழவில்லை. இலக்கணம் அதிகமிருந்த மொழிகள் சில இறந்துபட்டன. கன்னித்தமிழ் இன்னும் மாறாத மாண்பின் ஆட்சியைச் செலுத்திக்கொண்டுள்ளது. மாறிவிட்டவை சில.

தட்டச்சுப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்படும்.


 


புதன், 18 நவம்பர், 2020

தருமம்--- சொல்லில் திரிபுகள்

 சொல்லாய்வு மேற்கொள்ளவோ அவ்வாய்வுகளை நன்கு அறிந்துகொள்ளவோ அதுபற்றிய எதிருரைகளை மேற்கொள்ளவோ எண்ணும் ஒருவர்,  பலவேறுவகைத் திரிபுகளை அறிந்து அவற்றை மனத்துள் ஆழப்பதிந்துகொள்ளுதல் இன்றியமையாதது ஆகும். இதைப்பற்றிய பதிவுகளை மனத்துள் அமைத்துக்கொள்ளாதவர்,  ஓர் ஆய்வினை ஏற்கவோ மறுக்கவோ இயலாதவராகிறார் என்பது சொல்லவேண்டாமலே புரிந்துகொள்ளவேண்டிய ஒன்றாகும். வேறுவகைப் படிப்பறிவு பெற்றிருந்தாலும் இது கற்காமல் புரியக்கூடியதன்று.

ஆகவே இங்கு கூறப்படுபவை கவனத்தில் கொள்ளத்தக்கவை,  கொள்ளவேண்டியவை என்பதறிக.

ஆழ்ந்துசெல்லும் நோக்கமற்றவர்,  அறிந்து இன்புற்றுப் பின் அதை மறந்துவிடலாம். 

இப்போது சில திரிபுகளைத் தெரிந்துகொள்வோம்.

தர்ம என்ற சங்கதச் சொல்லின் பொருள் சற்று விரிவானது ஆகும்,  ஆனால் தமிழ்ச்சொல் " தருமம்",  பிறருக்கு விலைக்கின்றித் தருதல் என்பதையே பொருளாய்க் கொண்டது. இவற்றின் பொருள்வேறுபாடுகளை அறிந்துகொள்க.

சங்கதத் தருமம்,   "  மனு தர்மம் " என்ற சொற்றொடரிற்போல,  விதிமுறைகள், வரையறவுகள், விளக்கங்கள், கட்டுப்பாடுகள்  என பலவற்றையும் குறிக்கக் கூடியது.

தமிழில் தருமம் என்பது ஈதலைக் குறிப்பது.  "தருமத்தை ஒருநாளும் மறக்கவேண்டாம்" எனில் ஈதலை மறத்தலாகாது என்பதுதான்.  ஆனால் தருமம் என்பதற்குச் சமத்கிருதத்தில் உள்ள பொருளும் தமிழில் வருவிக்கப்பட்டு இதற்குப் பொருள்கூறுவர். இப்படிக் கூறின் இதன் பொருள் விரியும் என்றறிக.

தருதல் வினைச்சொல்

தரு+ ம் + அம் = தரும.  தருதலாகிய ஈதல்.

கொடுத்தல், தருதல், ஈதல் என்ற மூவேறு சொற்களின் பொருள் வேறுபாடு  இந்தச் சொல்லில்  பிற்காலத்திற் பின்பற்றப்படவில்லை 

தமிழில் தோன்றிய தருமம் என்ற என்ற சொல், பின் வழக்கு விரிந்து அயலில் பயன்பாடு கண்டு பொருண்மை விரிந்தது. தருமம் என்பதன் சொல்லமைப்புப் பொருள் அச்சொல்லில் சிறிதே இப்போது உள்ளது.  தருமத்துக்குக் கொடுப்பது என்றால், பேச்சு வழக்கில் விலையின்றிக் கொடுப்பது என்பதே பொருள்.

தருமம் என்பது நன்னெறிச் செல்கை என்பது,  பின்னர்ப் பொருள்விரி ஆகும்.

ஆயினும் கொடுத்தல் என்பது சிறப்புத் தருமென்பதால், இப்பொருள் நாளடைவில் ஏற்படுதல் இயல்பு.

நன்னெறிச் செல்லாமை, அதருமம் எனப்பட்டது.  இது அதர்மம் என்று எழுதப்பட்டது.  உகரம் கெட்ட சொல். அதர்மமாக நடப்பவன் அதர்மன்.  இது அதமன் என்று இடைக்குறைந்தது,  ரகர வீழ்ச்சி இடைக்குறை.  பிற சொற்கள் பலவற்றில் ரகர ஒற்று வீழும்.  எ-டு:

சேர்மி >  சேமி.> சேமிப்பு.

ரகர ஒற்றுக்குப் பதிலாக ஒரு 0னகர ஒற்றும் தோன்றுவதுண்டு:

அதர்மம் > அதன்மம்.

இன்னொரு திரிபு இது போல்வது:  கர்மம் > கன்மம். ர் -- 0ன்.

சிறு மையம் என்பது சின்மயம் ஆனதோ.  பின்னொரு நாள் பேசுவோம்.  று>ன்

பாலி மொழியில் தர்ம  என்பது டம்மா (தம்மா)  என்று திரிந்தது.

டம்மா (தம்மா) என்பது இப்போது ஆசியா எங்கும் வழங்குகிறது.

Derma (atau sumbangan ) என்று மலாய் மொழியில் வழங்கும்.   நரகம் என்பது neraka என்று வழங்குவது போலத்தான்.

முகக் கவசம் அணிந்து பிறருக்கும் உங்களுக்கும் இடையில் ஒரு காப்புத் தொலைவு கடைப்பிடியுங்கள். நன்றி.  

மெய்ப்பு - பின்பு.

திங்கள், 16 நவம்பர், 2020

சேனை (பலர்சேர் படை)

ஆட்சேபம் என்ற சொல் நல்ல தமிழ்ச்சொல் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம் .இராணுவத்துக்கு ஆளெடுப்பதை ஒட்டி எழுந்த சொல்லே "ஆட்சேபம்"  ஆகும். ஆட்சேர் + பு+ அம் =  ஆட்சே(ர்)பம்.  படைக்கு ஆள்சேர்க்குங்கால் வேண்டாம் வேண்டாம் மாட்டேன் மாட்டேன் என்று கதறுவார்கள், பண்டைக்காலத்தில்.  அதுவும் ஒரே மகன் வைத்திருப்பவர்கள் படும்பாடு கேட்கவே வேண்டாம். கால்கை நொண்டியானால் விட்டுவிடுவார்கள். நொண்டி வேண்டாம் என்பதும் ஓர் ஆட்சேபமே  ஆகும்.  சேப்புதல் என்றால் தங்குதல்.  நொண்டி தங்கிவிடுவான். நொண்டியை எடுப்பதில் மறுப்பினால் ஆட்சேப்பு+ அம் = ஆட்சேப்பம் > ஆட்சேபம் எனக் காண்க. இடைக்குறைச் சொற்கள் இவை எனல் உன்னுக.

பொருள்முரண் இடைக்குறைச் சொற்களிலும் பிறவற்றிலும் ஏற்படும்.

இவற்றையும் வாசித்துக்கொள்ளுங்கள்:

ஆட்சேபம்  https://sivamaalaa.blogspot.com/2018/02/blog-post_4.html

ஆட்சேபித்தல் என்னும் வினைச்சொல் ஒரு பின்னமைப்புச் சொல்.

இராணுவம் என்பதோ அரணுவம் என்பதன் திரிபு:  அகரமாகிய தலைபோய், பின்னிருந்த தலைநீண்டு, அப்புறம் இலக்கணம் போற்ற, ஓர் இகரம் பெற்று அமைந்த சொல்லாம். அரணன் > ராணா; அரணி > ராணி.  இவர்கள் அரண்வாழ் ஆட்சிமேலோர்.

இங்குக் காண்க.

இராணுவம் :  https://sivamaalaa.blogspot.com/2020/10/blog-post_19.html

அரசாட்சி முறை தென்பகுதியிலிருந்தே வடக்கில் சென்றது.  வடக்கில் இலடாக்கு, திபேத்து முதலிய இடங்களில் அரசுமுறைகள் பண்டைநாட்களில் சரியாக இயங்கவில்லை என்னலாம்.

சேர் சேர்தல் என்பது இராணுவத்தில் சேர்தலையும் குறிக்கும்.  சேர்வை எனின் சேனை என்றும் பொருள்.  சேர்> சேர்ந்நை > சேனை ஆகும்.  அன்றி, 0னை விகுதியும் உள்ளது.  பா> பானை ( அகன்றவாயுள்ள பாத்திரம்.)   பர > பார்> பா. ஒ.நோ:  வரு> வார் > வா. (வருக, வாரீர், வாங்க).  பா என்பது அகன்றிருத்தல் குறிக்க, 0னை விகுதி பெற்று பானை ஆதல்போல்,  சேர் > சே> சேனை ஆகும்.

( ந்நை ) >னை.

சேர் > சேர்நர் > சேர்ந்நை > சேர்னை > சேனை என்று ஒலியமைப்பினைக் கண்டுகொள்க.

ஓட்டு > ஓட்டுநர் போல. ( சேர்நர்).


குறிப்பு:  

சேனை https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_20.html -  இங்குக் காண்புறாத விரிவரைவு சில இந்த முன்போந்த இடுகைக்கண் தரப்பட்டுள்ளது. சேர் அல்லது அதனுடன் அணுக்க உறவுப் பதம் எதிலிருந்த வந்ததாக இச்சொல்லைக் காட்டினும் அஃது நிலையொக்கும் என்றுணர்க.

விரிவரைவு:

விரி > வி.

வரை -  வர்

அம் - அமைவு குறிக்கும் விகுதி.

வி + வர்+ அம் = விவரம்.  

இப்படி எழுதினால் அது தமிழென்பது உடன் காண்தரும் அறிக.

அறிக.






 

ஞாயிறு, 15 நவம்பர், 2020

அடிச்சொற்கள் கு>கூ . மொழியில் அமைந்த விதம்

 ஒரு காலத்தின் மொழியில் எல்லாம் குறுகிய அல்லது சிறிய சொற்களாய் இருந்தன. இத்தகைய குட்டைச் சொற்களைத் தாம் அவர்கள் பயன்படுத்தி வந்தனர். ஒரு குகையிலோ ஒரு மரத்திலோ வாழ்ந்துவந்த அந்த மனிதர்களுக்கு நீண்ட சொற்கள் தெரிந்திருக்கவில்லை என்பதைவிட அவை இன்னும் அமைவு பெற்றிருக்கவில்லை என்பதே சரி.  நான், நீ, போ, வா,  இர் ( இரு),  ஓ (ஓடு) என்று பேசிக்கொள்வது போதுமானதாக இருந்தது. எங்காவது தண்ணீர் இருக்கும் குட்டைக்குள் இறங்கிவிட்டால் உடலின் நாற்றம் குறைந்துவிடுதலை உணர்ந்து உடல் தூய்மை அடைவதை அறிந்துகொண்டவன்,  தூய்  தூய்  (தூய்மை) என்றோ,   குள் குள் என்றோ சொல்லிக்கொண்டிருந்தான்.    குள்> குளி!.

கு = அவ்விடத்துக்குப் போய்.    (கு என்பது சேர்விடம் குறிக்கும் சொல்).
உள் =  தண்ணீருக்குள் இறங்கு என்பது.
இ  =  இங்கேதான் அருகில் அந்தக் குட்டையும் நீரும்!

இவ்வாறு  கு+ உள் + இ என்று  அழகான குளி   என்ற சொல்லையும் படைத்துக்கொண்டான்.  அதுவே அப்போதைய மொழியில் பெரிய கண்டுபிடிப்பு.

கு உள் என்பதை குள் என்று சுருக்கக்கூட கண்டுபிடித்ததே பெரிய அறிவுதான்.

இந்தக் காலத்தில் இப்படிச் சுருக்க "நம்மள் பசங்களுக்கு" எங்கே தெரிகிறது.

சேர்ப்பதற்கும் சேர்வதற்கும் அவன் கண்டுகொண்ட முதன்மைவாய்ந்த சொல், கு > கூ என்பதுதான்.

அந்த அமைவுக் காலத்தில் மதுரை இல்லை. இருந்திருந்தால் மதுரைக் கு  என்று சொல்லியிருப்பான்.  பெயர் இல்லாத  அ கு  ( அங்கு),  இ கு ( இங்கு) -- இவைதாம் இருந்தன. இவை சுட்டடிச் சொல் வளர்ச்சிகள் ஆயின.

சேர்வது என்ற கு-வில் இருந்து:

கு இ  -  குவி.   (இங்கே சேர்த்துவை)

கு  >  கூ.

கு > குடு.

கு > கூ > கூடு  (கூடுவது).

குவை  :  குவியல்  (குவித்து வை).

வீடு கட்ட அறிந்த பின் சிறு வீடுகளின் கூட்டத்தைக் குப்பம் என்றான்.

கு: குப்பு > குப்பம்.

சேர்த்துவைத்த வேண்டாததற்கும் கு-விலிருந்துதான் சொல் அமைந்தான்.

கு > குப்பு > குப்பை. ( பு  : தோன்றற் கருத்துடைய விகுதி, இங்கு இடைநிலை, ஐ இறுதிநிலை )

அம்மா அப்பா பிள்ளைகள் சேர்ந்த  அணுக்க நிலைக்கும் கு-விலிருந்தே பெயர் கொடுத்தான்:

கு > குடு > குடு+பு > குடும்பு > குடும்பம்..

டு, பு, அம் எல்லாம் சொல்லாக்க நீட்சிகள்.  விகுதி - மிகுதி (சொல் மிகுதி).

ஒப்பு:  மிஞ்சு = விஞ்சு.  மி> வி > வீ > வீ + கு > வீங்கு.

( வீங்கு இள வேனில் என்று சைவத் திருமுறைப் பாடலில் வரும்.)

பல உள்ளன. இது போதும் . எமக்கும் வேறு செய்யவேண்டியவை உள்ளன.

அறிக மகிழ்க

தட்டச்சுப் பிறழ்வு - பின் நோக்குவோம்.





சனி, 14 நவம்பர், 2020

சமாதானம் (தாம் தானாதல்)

 நம் நேயர்கள் தங்களின் இனிய தீபாவளி அல்லது தீபஓளிப் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ச்சியில் இருந்துகொண் டிருப்பீரகள். இவ்வேளை எங்கும் நல்லமைதி நிலவும் என்பது எம் எதிர்பார்ப்பாகும்.  இவ்வேளையில் சாமாதானம் என்ற சொல்லைப் பார்ப்போம்.

தாம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான தன்மைச் சொல். தான் என்பதே ஒருமையாகும். ஒருமைக்கு மறுபெயர் ஒற்றுமை. ஒற்றுமை இருந்தால் சாமாதானம்.

இன்னொரு வகையில் நோக்கினால் தாம் என்பது தம்மைச் சுட்டிக்கொள்ளும் இருகுழுவினரையும் (அல்லது அவ்வெண்ணிக்கையின் மேற்பட்டோரையும்)  தான் என்பது ஒருகுழுவினரையும் சுட்டுவதாய் எடுத்துக்கொள்ளுதலும் ஆகும்.

சமாதானம் நிலவுவதாயின் இருவர் ஒருவராக வேண்டும்.

உடலளவில் இருவர் ஒருவராக முடியாது.  ஆனால் கலாய்த்துக்கொண்டிருக்கும் இருமனங்கள்  அல்லது இருநிலைப் பன்மனங்களும் ஒன்றுபடவேண்டும். இதையே சமாதானம் என்ற சொல் காட்டுகிறது.

தம் எனற்பாலது சம் என்று திரிவது தம் > சம் மோனைத் திரிபு  ஆம்.

தம் + ஆ+ தான் + அம்

சம் + ஆ + தான் + அம்

சமாதானம் ஆகிறது.

தம் என்பது சம்  ஆனது.  ஆ என்பது ஆகுதல் குறிக்கும்,  தான் - ஒருமையாதற் குறிப்பு. அம் அமைவு குறிக்கும் விகுதி.

இப்படி இச்சொல்லைப் புனைந்துள்ளனர்.

அறிக மகிழ்க.


௷ய்ப்பு பின்



வெள்ளி, 13 நவம்பர், 2020

இருபிறப்பிக்குச் சங்கத உதாரணம்

 இருபிறப்பிச் சொல்லுக்கு சமஸ்கிருதத்திலிருந்து எடுத்துக்காட்டு.

 ததா+கத்த> ததாகத்த -  வருகை தந்தவர்

ததா+ அகத்தா > ததாகத்த - போய்மறைந்துவிட்டவர்.

இரண்டு சொற்களும்  முடிபொருமை  கொண்டன.

இதில் இன்னொரு சிறப்பு யாதெனின் இச்சொற்கள் முரண்பொருளன

ஆகுமென்பது.

 


இதை மனனம் செய்துகொள்ளுங்கள்

யானைகளைக் காப்பாற்றிய கவனமுள்ள ஓட்டுநர்

 https://twitter.com/i/status/1326377941463408640

தாட்சன்னியம் என்பது

 இச்சொல்லைப் பார்ப்போம்.

அரசன் போலும் அல்லது இறைவன்போலும் மனமிரங்கி அருளும் வல்லோனின் தாள்களில் சென்று வீழ்ந்து பெற்றமைவது தாட்சன்யம். இச்சொல் அமைந்த விதம்:

தாள் - கால்கள்; திருவடிகள்.

செல் - அடைக்கலம் அல்லது சரண்புகுதல்.

நீ. ( இது கருணை வேண்டுவோனைக் குறிக்கிறது ).

அம் - பெரிதும் அமைதல் குறிக்கும் விகுதி. இங்கு பெற்றமைதல்.

தாள்+ செல் + நீ + அம் = தாட்சென்னீயம் > தாட்சன்னியம்.

செல் என்பதன் முதல்நிலை எகரம் அகரமாகத் திரிந்தது.

இத்தகு திரிபுகள் பிற: எளியர் - அளியர், தெரிசனம் > தரிசனம்.

நீ என்பது நி என்று குறுகிற்று. இன்னொரு எ-டு:

பழம்நீ என்பதில் நீ என்பதும் நி என்றே குறுகிற்று.

அல்+ நீ + அன் ( அன்னியன்) என்பதிலும் நீ குறுகியவாறு கண்டுகொள்க.

பொருள்: நீ அல்லாத பிறன்.

இவ்வாறு தாட்சன்னியம் என்பது இரக்கம் என்று பொருள்பட அமைந்த சொல் எனக் கண்டுகொள்க. காலில்விழுந்து பெறுவது.

தயவு தாட்சன்னியம் என்பது பேச்சுவழக்கில் மரபுத்தொடர்.

செவ்வாய், 10 நவம்பர், 2020

பசுவென்னும் பதம்

இடையர்தம் வாழ்வில் பசுமையைப் புகுத்தியது  ஆக்கள் என்னும் பசுக்களே ஆகும்.  பசு என்னும் சொல்லும் தமிழரிடத்துப் பட்டி தொட்டிகளிலெல்லாம் வழங்கும் சொல். இது எப்படி இப்பொருளை அடைந்தது என்பதை அறிவோம்.

இடையர்களே பசுக்களை பெரிய அளவில் வளர்த்துப் பால் தயிர் மோர் வெண்ணெய் எல்லாம் விற்றுப் பண்டமாற்றும் பின்னர் பணமும் பார்த்தனர். பூசாரிமார் சிறிய அளவிலே பசுக்களை வைத்திருந்திருக்கலாம்.

இடையர்தம் வாழ்வில் பசுமை ஆக்கிய ஆக்கள் பசுக்கள் எனப்பட்டதானது , இந்த ஆக்கள் "பசு" என்ற பசுமை தந்த வாழ்வின் அடிப்படையில்  அவ்வாறு குறிக்கப்பட்டன. இந்த இடையர் சொற்பயன்பாடு,  நாளடைவில் எங்கும் பரவி ஆவிற்குப் பசு என்பதே பெயராகிவிட்டது.

பசு வென்பது பசுமை என்னும் பண்புப் பெயரின் கடைக்குறை. ஆகுபெயராய் ஆவைக் குறித்தது ஆயர்தம் பெருமையைக் காட்டும் பழநிகழ்வு ஆகும்.  பசுமை என்பது செல்வப் பெருக்கம்.  மாடு என்பதும் செல்வப் பொருள் உடைத்தாம். மாட்டைச்  செல்வம், ஆக்கம், பசுமை என்று தமிழர் கருதினர் என்பதைச் சொல்லத் தேவையில்லை.  பண்பாடு.

ஆதாரம், ஆதரவு என்ற சொற்களும் இத்திறத்தனவே ஆகும்.  எதிரிகள் ஆநிரை கவர்ந்த போது ஆ பற்று > ஆபத்து ஆனது. பற்றுதல் கவர்தலும் ஆகும்.

அறிக மகிழ்க.

 --------------------------------------------------------

 

குறிப்புகள்:

Pasu is a farming term as in English where "course" (taking a course or certain course) is a nautical term.  பொருள் பதிவுபெற்ற ஒரு சொல் பதமாகும்,  பதி+ அம் = பதம்.   இறையுணர்வு பதிந்த செய்யுள் பதிகம் - பதி + கு+ அம் .  கு இடைநிலை.  அமைவு காட்டும் அம் விகுதி அல்லது இறுதிமிகுதி. ( இறுதிநிலை)

ஒப்பீடு:  ஆ என்ற சொல்லும் பசுவென்ற சொல் போலவே,  ஆக்கம் குறிப்பதாகும்.  ஆதல், ஆகு, ஆகு+ அம் = ஆக்கம், என்பவும் இன்னுமுள்ள சொல்வடிவங்களும் இந்தக் கருத்தொற்றுமையைக் கொண்டுதருகின்றன. ஆக்கம் தருவது ஆ, பசுமை தருவது பசு. இப்பொருண்மை இன்னும் தொலைந்துவிடாமல் கற்படிவு (fossils) போல நம்மை எதிர்கொள்கிறது.

மாந்த வளர்ச்சி நூலைப் பின்பற்றி, மனிதன் எப்போது பண்டைவரலாற்றில் பசுபோலும் விலங்குகளை வளர்த்தெடுத்துப் பயன் காணத் தொடங்கி நன்மை பெற்றானோ,  அப்போதே அவனுக்குப் பசுமையானது வாழ்வில் உண்டாகத் தொடங்கிவிட்டது என்று  முடிக்கத்தான் வேண்டியுள்ளது. பசு என்ற சொல் பால்கறக்கும் பெண்மாட்டுக்குப் பெயராய், அப்பழங்கால முதல் இன்றுவரை தமிழில் வழங்கிவருகின்றது.  இது ஒரு பேச்சுமொழிச் சொல். பேச்சுமொழிச் சொற்களைத் தமிழிலும் குறைத்து எண்ணும் போக்கு, இன்றுபோலவே சங்க காலத்திலும் இருந்தது என்பது தெளிவு.  ஆவென்பது அரசர் கேட்புக்குரிய சொல். பசுவென்பது ஊர்ப்பிள்ளைகள் சொல். பிற்காலத்தில் மதங்கள் இறைகொள்கைகள் சிறந்து நின்ற காலை, பசுவென்பது மதத்துறைக்குள் புகுந்து வேறு பொருட்சாயல்களைக் கவர்ந்துகொண்டு இன்றும் காணப்படும் நிலையை அடைந்துவிட்டது .  இச்சொல்லுக்கான மதத்துறை விளக்கங்கள் பிற்காலத்தவை. பல மதநூல்களினுள்ளும் புகுந்து பசுவென்பது புதிய பொருண்மையையும் பொருட்சாயல்களையும் அடைந்தது.

கடவுட்சிந்தனை ஒவ்வொரு மனிதனுக்கும்  மனிதகுலத்துக்குமே வளர்ச்சிமுதிர்வில் வருவது,  சிறுபிள்ளைகளைப் பழக்கினாலே வருவது. தானாக வருவதில்லை.  

பிணி மூப்பு சாக்காடு உணவின்மை இன்னல்கள் எல்லாம் வரவேண்டும். சாவின் திறமறியாமல் திகைக்கவேண்டும்.  அப்போதுதான் சாத்திறம் ( சாஸ்திரம் ) அவன் அறியவும் பின் வெகுகாலம் சென்று அறிந்தன தொகுக்கவும் மனிதன் தொடங்குவான். பெரிய பெரிய ஞானிகட்கும் பிற்பாடு வருவதுதான் இறையறிவு.

முற்பிறப்புகளின் தாவற்பதிவுகளாலும் ஏற்படுமென்பர்.  அதுவும் பட்டறிவுதான்.

"கெட்டபின்பு ஞானி."


௷ய்ப்பு பின்

ஆடவர்க் குறிக்கும் விகுதிகள் அமைவு

 

தமிழில் ஆடவரைக் குறிக்கும் விகுதி அன் - ஆன் என்பன. இரண்டும் ஒன்றுதான். ஒன்று மற்றதன் திரிபு ஆகும். ஆன் என்பது விகுதியல்லாத போது ஆண் என்று திரியும்.

இரண்டிலும் முந்துவடிவம் ஆன் என்பதே.


ஆண் >< ஆன்.

ஆன் என்பது அன் என்பதன் நீட்சி ; அல்லது ஆன் என்பதன் முதனிலை குறுகியே அன் அமைந்துள்ளது. ஆனால் இவ்விரண்டிலும் மூத்தது அன் என்பதே. எவ்வகைச் சொல்லாயினும் நீட்சி பெறுதலும் குறுக்கம் பெறுதலும் முதனிலைக்கு இயல்பானதே, இவ்வாறு திரிந்தாலும் பொருள் திரியாதது போலி. திரிந்து பொருளும் மாறியபோது வேறு சொல்லாகிவிடுகிறது.

எடுத்துக்காட்டாக, ஆன் என்பது பொருள் மாறி பசுவைக் குறிக்குங்கால் வேறு சொல்லாகிவிட்டது. தனிச்சொன்னீர்மை அடைந்துவிட்டது.

அன் என்பதும் ஆன் என்பதும் ஆள் என்ற பெண்பால் விகுதியிலிருந்து வந்தனவாகும், இதைக் குமுகத்தில் பெண் தலைமைநிலை பெற்றிருந்த பழங்காலத்திலே அவள் ஆட்சி செய்தமையால் " ஆள் " விகுதி பெறக் குறிக்கப்பெற்றாள் என்பதைக் கூறும் எமது இடுகையில் கூறியுள்ளேம்.

பழங்காலத்தில் அல் என்ற விகுதியும் இருந்தது, அது ஒரு காலத்தில் அன் விகுதிக்கு இணையாக வழங்கியது, எடுத்துக்காட்டு:

பையல் > பையன்.

இது ஐகாரக் குறுக்கமாய்ப் பயல் என்றும் வழங்கும். இது பெண்மகட்கும் வழங்கியது. எடுத்துக்காட்டு: தையல் (பெண்).

இந்தப் பழங்காலத்தை இன்னும் நினைவு படுத்திக்கொண்டிருக்கும் சொற்கள்:

தோன்றல்(தலைவன்), இளவல்(தம்பி) எனச்சில.


ளகரமும் ணகரமாய் மாறும். -டு: களவாளி > களவாணி.

எனவே ஆள் என்ற விகுதி ஆண் என்று மாறுவது மற்றொரு வழியிலும் அமைவதால் ஆள் - ஆண் திரிபு இருபிறப்பிச் சொல்.

முடிவு: அல், அன், ஆன், அல்> ஆள், அன்> ஆன் > ஆண்e எல்லாம்

தொடர்புடைய திரிபுகள்.

மெய்ப்பு பின்

திங்கள், 9 நவம்பர், 2020

தீபாவளி

 நாள்தோறும் நண்ணுவதோ கொண்டாட்டம்?

    நாவினுக்கே ஊறுசுவைப் பலகாரங்கள்!

ஆள்சீரால் விண்வரையில் பண்மீட்டி,

    ஆங்ககலா நன்மகிழ்வில் நலம்தாருங்கள்.


கேள்நெஞ்சம் ஒத்துநின்று நம்வீட்டில்

    கேடகன்ற நன்னிலையைத் தழுவிக்கொண்டார்

நீள்மேரு நன்மலையில் சேர்துள்ளல்

    நீங்காமல் தீபஒளி தரவேசெய்யும்.


யாம்பெற்ற இன்பமெலாம் பெறுவையம்,

    யாவையுமே எமக்கென்பார் இலர்இங்கேதான்

மான்பெற்ற பிள்ளைகளாய் மேல்துள்ளும்

    மக்களுயர் நெஞ்சமகிழ் தீபநன்னாள்.


தீஎன்னும் சொல்லதிலே தமிழுண்டு

    தீபமெனில் பூவினொடு அம்முமுண்டே!

யார் இந்த சொற்கள்தமை வேறென்றார்

    யாமிதிலே கண்டதமிழ் நீவிர்கண்டீர்.


கல்தோன்றி மண்ணெழாமுன் குடிமூத்தோன்

    கன்னித்தமிழ் மைந்தர்களே கொண்டாடுங்கள்,

முன்தோன்றி தீயறிந்து தீபம்கண்டான்

    முத்தமிழன் மூத்ததமிழ் மெய்யன்பன் தான்.


பூவினொடு - பு என்னும் விகுதியோடு.  அம்மும் -

அம்மென்ற இறுதிநிலையும்

ஆள்சீரால் - ஆளுமையுடைய சீரால்.

ஆங்ககலா - அங்கு நீங்காத;

கேள் நெஞ்சம் - உறவினர் நெஞ்சம்

மேரு - இமைய மலை

மேல் துள்ளல் - மிகுந்த மகிழ்ச்சி

தீபநன்னாள் - தீபாவளி


மூவசைச் சீர்களும் மாற்றமாக நாலசைச் சீர்களும்

இறுதியில் நிற்க விரவிப் பாடப்பட்டுள்ள கவிதை.


கடவுள், தெய்வம், தேவன், தேவி, துரை மற்றும் God!

ஒரு சொல்லுக்கு ஒரு பொருள்தான் இருக்கிறது என்று நாம் எண்ணினால் நமக்கு மொழியறிவு  போதவில்லை என்று அறிந்தோர் சொல்லி நம்மை ஒதுக்கிவிடுவார்கள். ஒரே பொருளைக் கொண்டிலங்கும் சொற்கள் பல மொழிகளில் மிகவும் குறைவு என்றே தோன்றுகிறது.  யாம் கணக்கெடுக்க வில்லை என்றாலும் இதை நீங்களே பட்டறிவின் மூலமும் உணர்ந்திருப்பீர்கள் என்பது எம் துணிபாகும்.

ஆங்கிலச் சொல்லான,  கடவுள் என்று பொருள்தரும் God  (கா*ட்) என்பதைப் பார்ப்போமானால்   அதற்கு நேரான கிரேக்க மொழிச்சொல் "தியோ" என்பதாகக் கூறுவர்.  ஆனால் தியோ என்றால் "ஓடு (ஓடுதல்)" என்ற வினைச்சொல்லுடன் தொடர்புள்ள சொல் என்பர். இவ்வாறு சொல்லமைந்திருப்பது வியப்பினையே அளிக்கக்கூடும், இருந்தாலும் ஆய்வாளர்கள் கூறுவது இது.  காரணமொன்று இருக்கவேண்டும்.  பாடிப்பாடி தினம் தேடினாலும் ஓடி ஓடி மறைந்துவிடுபவர்தாம் கடவுள் என்று நீங்கள் நினைத்தால், யாமொன்றும் சொல்வதற்கில்லை. கடவுள் என்ற சொல்லும் நாம் தேடி அணுகுங்கால் கடந்து சென்றுவிடுகிறவர் என்பதை முன்வைப்பதாகத் தெரிகிறது. எளிதிற் கிட்டுபவராகத் தெரியவில்லை.

தெய்வம் என்ற தமிழ்ச்சொல்லும், தேய்தல் என்பதனுடன் தொடர்புடைய சொல்லாகும்.  பற்றாளன் பரவப் பரவ  ( அதாவது கும்பிடக் கும்பிட )  அவர் வந்து முன் தோன்றாமையால் நம்பிக்கை தேய்ந்துபோதலை உடைய, நாமறிதற்கு எளிதானவரல்லாத ஓர் ஆற்றலர் தாம்  " தெய்வம்" (தேவன், தேவர்)  என்று கூறலாம்.  எனினும் தெய்வம் என்ற சொல்லின் அமைப்பு வேறுவிதமாக அறியப்பட்டுள்ளது.  கடவுளைப் பற்றிய இடுகைகள் பல இங்கு உள்ளன. அவற்றில் தேய்வு பற்றியும் தெய்வம் பறியும் தொடர்புகண்டு கூறும் இடுகையை இங்குக் காண, சொடுக்குங்கள்:-

https://sivamaalaa.blogspot.com/2017/03/blog-post_5.html

(தீயைப் பற்றிய மனித சிந்தனை).

தேவு, தேவன், தேவி முதலிய சொற்களும் மேற்சொன்ன இடுகையில் தொடர்பு கண்டுள்ளன.

"காட்" என்ற ஆங்கிலச் சொல் ஓடுதலுடன் தொடர்புடையது என்று சொல்கையில்,  தமிழில் கிடைக்கும் துரை என்ற சொல், துரத்துதல் என்பதனுடன் தொடர்பு பட்டது என்பது தெரிந்துகொள்ளற் குரியது.

துர , துரத்து என்ற அடிச்சொல்லின் பரிமாணங்கள்:

துரந்தரன் -  பொறுப்பு வகிப்பவன்; ( துர+ அம் + தரு + அன் );

துரந்தரி  -   பொறுப்பு வகிப்பவன் ( அன் விகுதிக்குப் பதில் இ இறுதி);

துர . துரப்புதல் :  (இது துரத்துதல் என்ற பொருளின் திரிந்து தேடுதல் என்று பொருள் படுகிறது .)

துர > துரம் ( துர + அம்  = துரம் ( பொருள்: பொறுப்பு).

துர >  துரிதல் : தேடுதல்.

துர >  துரிதம் : (  துர+ இ + து + அம் ).  { துரத்தும்போதும் தேடும்போதும் ஓடும்போதும்  ஏற்படுவதுதான் விரைவு, வேகம். }

துர < துரு > துருப்பு  (படை ).  எதிரியை துரத்தியடிக்க வேண்டியது துருப்பு.

துர < துரு > துருவம்:  துரத்தி இறுதியில் அடைவது துருவம் ( துருவிச் சென்று காண்பது)

துர > துரை ( வேலையாட்களைத் துரத்தி வேலைவாங்கி அவர்கள் வேலைகளை துருவி ஆய்பவன் துரை ).  துருவல் என்பதற்கு ஆராய்தல் என்றும் பொருள் உண்டு.

பெங்களூர் ரமணியம்மாள் பாடிய ஒரு பத்திப்பாடல் துரை என்ற சொல்லை இடமும் பொருளும் கனியப் பயன்படுத்துகிறது:

தணிகைமலைப் பெருந்துரையே வாவாவா---  என்

தயாநிதியே தரும துரையே வாவாவா.




ஞாயிறு, 8 நவம்பர், 2020

தன்னிலை இழந்த மயில்.

 முதிர்ந்த மயிலொன்று மூவுலகும் காணாத 

அதிர்ந்த ஆட்டமொன்று வியந்திட ஆடிற்றே

புள்ளியும் அதற்கில்லை புள்ளியும் கொள்ளாமல்

நள்ளிரவில் தன்வலிமை நலிந்திட இழந்ததுவே

தானாடிய மேடையை,  வான்துயர் வருத்திடவே;

நிலையில்லா இவ்வுலகை நிலையென் றெண்ணுவதோ?

மலைகளும் தோன்றுவதும் மறைவதும் இயல்பாகும்

தழங்கிற்று தன்னையே தள்ளிவிட்டார் என்றின்று!

விழுங்கினரே யானறியா வீண்நிலையில் என்றபடி,

போகட்டும் மயிலேயது கிட்டவில்லை என்றாலோ

நோகுமனம் தேற்றிடுவாய் வெட்டென்று மறந்திடுவாய்.

ஒன்றுமில்லா உலகினிலே ஒட்டாது வாழ்ந்திருப்பாய்

சனி, 7 நவம்பர், 2020

தீவளி - தீவாளி - தீபாவளி.

நன்றாகப் படித்த பண்டிதன்மார் என்போர்,  நல்ல தமிழில்  ஒல்லுவழி எதையும் உரைத்தல் வேண்டுமென்னும் உயர்நெறி போற்றுவார் ஆவர். தமிழில் பேச்சுமொழியிலிருந்து பண்டைச்சொற்களை மீட்டுருவாக்கம் செய்ய எண்ணி முயல்பவர் யாரெனினும்  அறவே படிப்பறிவில்லாதாரை அண்டிப் பேசியே அவர்கள் வழங்கும் செற்களை ஆய்ந்து பின்னர்தான்  ஓர் ஐந்து விழுக்காடு சொற்களையாவது அறிந்துகொள்ளவியலும்.அவர்களின் வாத்தியார்களால் பன்முறை திருத்தப்பெற்ற நாவினர்வழி இச்சொற்களை அறிதல் இயலும் என்று யாம் நினைக்கவில்லை.

இப்போது தீபாவளிப் பண்டிகை விரைந்து வந்துகொண்டிருக்கிறது.  தீபாவளியைத்  தீவளி என்று பேசிய படிக்காதவர்களை யாம் கேட்டு வியந்ததுண்டு. வியத்தற்கு ஏனென்று வினவின்,  அஃது விளக்கற்கு எளிது காண்பீர்.  "நிலம் தீ நீர் வளி விசும்போடைந்தும் கலந்த மயக்கம் இவ்வுலகம் ஆதலின்" என்றே தொல்காப்பிய மாமுனி --  பல்புகழ் நிறு த்தப் படிமையோன் --  பாடியுள்ள படியினாலே,  மற்றும் தீயும் வளியும் இவ்வைந்தனுள் இரண்டு என்னும் ஓர் உண்மையினாலே,  வியப்புமில்லை, அயிர்ப்புமில்லை என்பதேயாம்  அதற்கு விடை கூறுவது ,  கண்டுகொள்க.

தீபாவளி என்பதும் வடக்கில் தீவளி அல்லது தீவாளி என்றே வழங்கும்.  தீவளி என்பதற்கும் தீவாளி Diwali எனற்பாலதற்குமுள்ள வேற்றுமை மிகச் சிறிதேயாகும்.   ஆனால் தீபாவளிக்கும் தீவாளிக்கும் உள்ள இடைவெளி சற்றே மிக்கதாகும்.

தீபாவளி என்பதைப் பார்க்கலாம்.  தீ என்பது நெருப்பு.  பா - வினைச்சொல் பரவுதல்.   வளி - காற்று.  இது தீபரவும் காற்று என்று பொருள்தருகிறது. இது வினைத்தொகை, இதில் ஐந்து பூதங்களில் இரண்டு தரப்பட்டு ஒரு சொல்லாகியுள்ளது.  ஆகவே தீபாவளி என்பது இயற்கை  ஆற்றல்களுக்கு எடுக்கப்படும் ஒரு விழா  என்றும் பொருள்கூற வேண்டியுள்ளது. இன்றையப் பேச்சில் சொல்வதானால், அக்கினி பகவானுக்கும் வாயு பகவானுக்கும் எடுக்கும் விழா ஆகிறது. தீக்கெல்லாம் மூலமாவது சூரியனாதலின் அது சூரியனையும் உள்ளடக்கும். தீபத்தையும் உள்ளடக்கும். தீயைப் பரப்பும் காற்றும் அடங்கிவிடும்.

தீபாவளிக்கு எண்ணிறந்த விளக்கங்கள் உள்ளன. மிக்கப் பழங்காலத்தில்  தீப ஒளியாகவும் தீப ஆவலி என்னும் நாட்டியமாகவும் அது பரிமாணம் பெறுதற்கு வெகுகாலத்தில் முன்பாகவே, அது தீயையும் பாவும் வளியையும் இயற்கை ஆற்றல்களாய் வணங்கப் பெற்ற பெருமையை உடையதாய் இருந்த ஓர் பண்டிகை  என்று காணக்கிடக்கின்றது அறிக.

இனிப் பண்டிகை ஆவதென்ன?  இகவுதல் என்றால் பெருகுதல், மிகுதியாதல். பண்டு என்றால் முற்காலத்தில்.  முற்காலத்தில் மக்கள்  மிக்குப் பின்பற்றி இன்று நம் காலத்திலும் வந்தணைந்த ஒரு மகிழ்துள்ளல் நாளே பண்டிகை. பண்டு காலந்தொட்டு இகவிய நாள்  பண்டு+ இக(வு)+ ஐ = பண்டிகை.

இயற்கையை ஒட்டிவரும் தீபாவளியை அணைத்து, அதில் நம்மை நாம் கொண்டு பிணைத்து, மக்களையும் இணைத்துச் செல்வோம்,  வருக.

காலம் நோய்மிக்கது ஆகலின்,  கவனம் கடைப்பிடித்துக் கொண்டாடுதல் கடமையாகும்.


குறிப்புகள்:

பேரகராதியிலிருந்து:

பாவு-தல் pāvu-tal (p. 2635)

பாவு¹-தல் pāvu- , 5 v. intr. 1. To extend; பரவுதல். மைப்பாவிய கண்ணியர் (திருவாச. 24, 6). 2. To be diffused; to pervade; வியாபித்தல். (W.) 3. To spread, as creepers on the ground.

பாவு¹-தல் pāvu- , 5 v. intr. 1. To extend; பரவுதல். மைப்பாவிய கண்ணியர் (திருவாச. 24, 6). 2. To be diffused; to pervade; வியாபித்தல். (W.) 3. To spread, as creepers on the ground; to ramify, as family connections; படர்தல். (W.) 4. To touch, skim along the ground; ஊன்றுதல். கால் நிலத்துப் பாவாமையால் (சிலப். 23, 190, அரும்.). — tr. 1. To lay in order; to pave, ceil with boards; தளவரிசை யிடுதல். 2. To spread; பரப்புதல். (யாழ். அக.) 3. To seed closely for transplanting; நாற்றுக்கு நெருக்கி விதைத்தல். (W.) 4. To transplant; நாற்று நடுதல்Loc. 5. To leap or jump over; தாண்டுதல். (W.)

பாவு pāvu (p. 2635)

பாவு² pāvu , n. < பாவு-. 1. [M. pāvu.] Warp; நெசவுப்பாColloq. 2. Measure equal to double the arm's length; இரண்டு பாகவளவு. (G. Tj. D. I, 134.) 3. A measure of weight equal to two palamஇரண்டுபலங்கொண்ட நிறுத்தலளவை. (G. Sm. D. I, i, 283.)

இகவுதல் பாவுதல் பரவுதல் என்பவற்றில் வு என்பது வினையாக்க விகுதி. அடிகளாவன இக பா பர என்பனவாகும்.

தீ பாவளி  -  இது உம்மைத் தொகை.

பா வளி இது பரவும் வளி என, வினைத்தொகை.

தீப ஆவலி :  ஆவலி ஒரு நடனவகை.

தீப ஒளி : இது தீபாவளிக்கு இற்றைப் பெயர்.


மெய்ப்பு பார்க்கப்படும் 


 


ராக்காயி, ராக்கம்மா

 இராக்கம்மா, இராக்காயி என்பவை அம்மனின் பெயர்கள்.  சிற்றூரால் ஆளப்படும் சொற்கள் இவையாகும்.

    இது அமைந்த விதம்:

    இரக்கம் உடையவள் அம்மன்.

    இரக்க +  ஆயி =  இராக்காயி > ராக்காயி.

    இரக்க + அம்மா = இராக்கம்மா> ராக்கம்மா.

    இவ்வாறு திரிந்த இன்னொரு சொல்:  பக்கம் > பட்சம் > பக்ஷம்.

    மோள் > மோள்+சு+அம் = மோட்சம் > மோக்கம்.

    மோள் > மோள்+கு +அம் > (மோட்கம்)> மோக்கம் > மோட்சம்.

    மோள் என்பது மேல் என்பதன் திரிபு. கேரளத்தில் இவ்வழக்கு உள்ளது. மேலுலகு என்பது பொருள்.

இதைப்பற்றிய முழு நீள இடுகை நீக்கப்பட்டுள்ளது. சுருக்கமான செய்தி மேற்கண்டபடி.

மறுபார்வை பின்.


வெள்ளி, 6 நவம்பர், 2020

அங்கீகரித்தல்

 அங்கீகரித்தல் என்பதை முன்னர் விளக்கியுள்ளேம். இங்கு கண்டுபிடிக்க இயலவில்லை. இதை வேறு வலைத்தளங்களில் வரைந்திருத்தலும் கூடும் பல ஆண்டின்முன்.  இவற்றைத் தேடிக்கொண்டிருக்காமல், அதை இங்கு தருவேம்.1

இது முற்காலத்து எம் நெகிழ்வட்டுகளில் உள. floppy discs.

அங்கு .  ( அதாவது முன்வைக்கப்பட்ட மாத்திரத்தில் )

ஈர் -  ( ஈர்த்தல்:  பெற்றுக்கொள்ளுதல், ஏற்றல், தன்பால் இழுத்துக்கொள்ளுதல்).

இது ஈ என்று குறைந்தது கடைக்குறை.

கரித்தல் -  இது சில இடுகைகளில் விளக்கப்பட்டுளது.  ( கு+ அரு+இ+தல்)

கு - வந்து சேர்தல் குறிக்கும் இடைச்சொல். 

அரு = தன் பால்.  (  அருகில் ).

இ - வினையாக்க விகுதி.

இது பல சொற்களில் உள்ளது. எ-டு:  ஆமோதி(+தல்).  ஆமென்று ஓதுதல். ஓது+ இ. வினையினின்று வினையாக்கம்.

ஆகவே  ஏற்றுக்கொள்ளுதல் என்பது இப்புனைசொல்லின் திரண்ட பொருள் ஆவதாம்.

" அதை அதிகாரி முன்னாலே வச்சாங்க. அவர் ஈகரிச்சுக்கிட்டாரு" என்று முன் காலத்தில் பேசப்பட்டு, பின்னர் அங்கு என்பது முன் ஒட்டிக்கொண்டு ஒரு சொன்னீர்மை எய்திச் சொல் அமைந்திருக்கலாம். எழுத்தில் வரும்போது ஒரு சொல்லாய்ப் புனைவுறலானது. முன்னோர் பேசிய சொல்வழக்குகளை அறிய வழியொன்றுமில்லை.  எழுத்தில் இருந்தன கிடைத்தவை சில, நூல்கள் வாயிலாகவே.

அறிக மகிழ்க.



தருவேன்,  இதன் பன்மை தருவேம் (ஏம் விகுதி).

வியாழன், 5 நவம்பர், 2020

வழிபாடு - இன்னொரு சொல்

 

வழிபாடு இன்னொரு சொல்

வழிபாடு என்பதை எழுத்துத் தமிழில் சொல்லப் பல சொற்கள் உள்ளன. இறைவழிபாடு என்று இன்னும் தெளிதிருத்தமாகச் சொல்வதும் உண்டு.

பழந்தமிழ் நூல்களிலிருந்து "பணியல்" என்ற சொல்லும் கிடைக்கின்றது. இந்தச் சொல்லைப் பயன்படுத்தி அது வழக்கிறந்துவிடாமல் காப்பாற்றுவதும் தமிழர் கடனாகும். இது பணி(தல்) என்ற வினையினின்று அமைந்த சொல்லே ஆகும்.

ஒரு வீட்டில் ஒரு விழாப்போல எடுத்துப்ெரிய அளவில் பணியல் நடைபெற்றுக்கொண்டிருந்தது. யாமும் சென்றிருந்தோம்.  அப்போது ஒருவர ்  வந்து உரையாடத் தொடங்கினார்.  "இவர்கள் ரொம்ப மும்முரமாகச் சாமி கும்பிட ஆரம்பித்துவிட்டார்கள்" எ்ன்றார் அவர்.  இவர்கள் என்றது வீட்டாரை.  இதிலிருந்து  "சாமி கும்பிடுதல்" என்பதே பணியல் என்பதற்குப்ேச்சு வழக்குச் சொல் என்பதை அறிந்துகொள்ளலாம்.

பணியல் என்பது பணிதல் என்ற வினையடிச் சொல்லே என்பது யாம் சொல்லாமலே உங்கட்குப் புரியும்.


மெய்ப்பு பின்


 


திங்கள், 2 நவம்பர், 2020

குதர்க்கம்... (பேசி மயக்குதல்)

 கவி கா.மு ஷெரிப் ஒரு சிறந்த கவிஞர்.  சீறாப்புராணத்திற்கும் உரை வரைந்துள்ளார் இவர். இவரெழுதிய இருகுரலிசைப் பாடலில் பெண்- ஆண் பாடுவதாக வரும் இரு வரிகளை இங்குக் காண்போம்.

பெண்:  குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்குக் கற்றீரோ?

ஆண்:    உனது கடைக்கண் பார்வை காட்டும் பாடம் தன்னிலே!

இந்த உரையாட்டுப் பாடல் நன்றாகவே உள்ளது.

இதில் வரும் குதர்க்கம் என்ற சொல்லையும் அதற்கு முன்பாக தர்க்கம் என்னும் சொல்லையும் இங்கு ஆய்ந்து காண்போம்.

சொல்லுக்குச் சொல், வார்த்தைக்கு வார்த்தை தருதலே " தருக்கம் " ஆகும்.

தருதல் என்பது வினைச்சொல்.

தருக்கு என்ற அடிச்சொல் தருதல் என்பதனடித் தோன்றியதே ஆகும்.  பதிலுக்குப் பதில் பேசிவிட்டால், " நல்லாக் கொடுத்தான் பாரு!" என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.  இத்தகு  சொல்லாடல்களின் தொடர்பில் தருதல் என்பது முன்மை பெறும் கருத்தாகும்.  தருக்கு என்பதில் தரு - பகுதி; கு என்பது விகுதி ஆகும்.

தருக்கு என்பது உலகவழக்கில்  தருதல் என்ற அடிப்படைக் கருத்தைக் கடந்து அகங்கரித்தல், ஊக்கமிகுதல்  என மட்டுமின்றி சில தொடர்புடைய மனவுணர்வையும் நடத்தையையும் குறிக்கலாயிற்று.   பல சொற்கள் இவ்வாறு பொருள்விரிவுறும்.  தருக்கு என்பது செருக்கு என்று கூறுதலும் கூடும்.  வீண்வார்த்தையாடுதலை மக்கள் விரும்பாமையே இத்தகு பொருள்விரிவுக்குக் காரணம்.

தருதல் என்ற வினையடிப் பிறந்த சொற்கள் ஏராளம்.  அகப்பை அல்லது சட்டுவத்துக்குக் கூட இவ்வினையிலிருந்து பெயர்கள் ஏற்பட்டுள்ளன.  அது தருவி,  தறுவி என்பனவாகும்.  சட்டியிலிருந்து குழம்பைத் தருவிப்பது அகப்பை அன்றோ?  தரு என்பது தார் என்று திரிந்து, தாரம் என்று மனைவியையும் குறிக்கும்.

இப்போது தருக்கு என்பதற்கே திரும்புவோம்.  இது அம் விகுதி பெற்றுத் தருக்கம் என்றாகும். அப்போது வாதத்தையும் ( சொல்லாடல்) குறிக்கும்.

தருக்கம் என்பது தர்க்கம் என்றும் குறுக்கி எழுதவும் பேசவும் படும். 

இந்நிலையில்  சிறு சிறு தருக்கங்களைக் குறிக்க ஒரு சொல் எழுந்தது.  அது " குதர்க்கம்" என்ற சொல்.    குதர்க்கம் என்பது  குறு தருக்கம் என்பதன் குறுக்கமாகும்  குறு என்ற சொல்,  றுகரம் இழந்து கு என்று நின்றது,  இது கடைக்குறை ஆகும்.

குறு >  கு

கு + தர்க்கம் >  குதர்க்கம்.

குதர்க்கம் பேசியும் ஒருவரை மயக்கலாம் என்கிறார் கவி.

மெய்ப்பு பின்பு



 


 

சாமந்தன் - புணரியல் விளக்கம்.

 நிலைமொழியும் வருமொழியும் இணைகின்ற போது, சொற்கள் எவ்வாறு மாறும் என்பதற்குப் புணரியல் ( சொற்புணர்ச்சி இலக்கணம்) சில விதிகளைத் தருகிறது. ஆயினும் இதிற்சொல்லப்படும் இலக்கணம்,  ஒரு வாக்கியத்தில் அல்லது கவிதை வரியில் இரண்டு முழுச்சொற்கள் இணைதற்கான இலக்கணமே ஆகும்.  ஒரு சொல்லை அமைக்கும்போது அதில் நிலைமொழி - வருமொழிகள் இல்லை. எடுத்துக்காட்டாக,  என்று என்பது என்+து என்ற இரண்டும் சேர்ந்தமைந்த சொல்லாகும்.  இவற்றுள் என் என்பது நிலைமொழியும் அன்று; து என்பது வருமொழியும் அன்று. எனவே சொல்லமைப்பில் வேறுபட்டு இணைதல் நிகழும்.  எடுத்துக்காட்டாக:

என் + து =  என்று ( தமிழில்)

என் + து =  எந்து   ( மலையாளம்).

தமிழிலும் இவ்வாறு சொற்கள் அமையும்.  உதாரணமாக:

முன் + தி  =  முந்தி

பின் + தி =  பிந்தி.

ஆசிரியர் சிலர் இவற்றையும் காட்டுவர்:

மன் + திரம் =  மந்திரம்.  

தன் + திரம் = தந்திரம்.

இங்குத் திரம் என்பது  திறம் என்பதன் திரிபு.  இது விகுதியாய்ப் பயன்பட்டது.  இறைவன்முன் வைக்கப்படும் ஒரு வேண்டுதலை  ஓதுவதன் மூலம் நிலைபெறுவித்தலே மந்திரம் என்பது.  மன்னுதல் -  நிலைபெறுவித்தல். தன் சொந்தத் திறமே தந்திரம் என்பது.  மந்திரம் என்ற சொல்லை அமைக்கக் காரணமாகியது ஓதுவோன் அதனை வேட்போன் ஆகியோரின் நம்பிக்கையாகும்.  

மன் என்ற அடியிலிருந்தே மனிதன்  ( மன்+ இது + அன் ). மாந்தன் ( மன்> மான்; மான்+ து +அன்),  மன்+ தி > மந்தி முதலிய சொற்களும் அமைந்தன.  மாந்தன், மந்தி முதலியவை, மான்றன், மன்றி என்று அமையவில்லை. மாறாக, பல்> பன் > பன்றி (பன்+தி) என்று அமைந்தாலும்,  பல் > பன் > பன்னி என்ற சொல்லும் வழக்கில் உள்ளது.  வென்றி என்ற சொல்,  வெல் > வென்> வென்றி,  வெல்+தி : வெற்றி என்று இருவகையில் வருமெனினும் வெந்தி என்று வரவில்லை.

இனிச் சாமந்தன் என்ற சொல் காண்போம்.

சாமந்தன் என்போன் சார்பாக ஓரிடத்தை ஆள்பவன்.  இது:

சா : சார்பாய்,

மன் - ஒரு மன்னனின் கீழ்

தன் - தன் ஆளுகையை மேற்கொள்பவன்.  அல்லது சார்பு மன்னன்.

இங்கு,  சார்மன்னன் என்று சிந்தித்து சாமன்னன் என்று அமைத்திருக்கலாம். அப்படியானால் செத்துப்போகும் மன்னன் என்று அமங்கலப் பொருள் தோன்றுமாகலின், அதை மாற்ற ஒரு து இடையில் வந்தது.

சார் + மன் + து + அன் ,  இதில் ர் என்பதை விலக்க, சாமந்தன் என்று அமைந்தது புனைந்தோன் திறனே.

இது சாமன்றன் என்று அமையவில்லை. 

இடைநிற்கும் ரகர ஒற்று மறைதற்கு எ-டு:  சேர்+ மி > சேமித்தல்.

(சேர் + ம் + இ ).

இவ்வாறு ஓர் உத்தியைக் கையாண்டுள்ளனர்.


மெய்ப்பு பின்



 

ஞாயிறு, 1 நவம்பர், 2020

மயிர் என்பது

மா என்பது கருமை நிறத்தையும் குறிக்கும்.  இச்சொல்லுக்குப் பல பொருள்கள். ஆதலால் "நிறத்தையும்" என்றோம்.

பேச்சு  வழக்கில் மாநிறம் என்றால்,  மிகுந்த கறுப்பைக் குறிக்காமல், இடைப்பட்ட ஒரு நிறம் குறிப்பதாகும்.

மா நிறம் என்பதனுடன் தொடர்புகொண்ட இன்னொரு சொல்லைக் கவனிப்போம்.

மா இர் >   மை இர் >  மயிர்.

இதில் மா என்பது மை ஆகிவிட்டது. மை என்பது "ம" ஆனது. 

சொல்வரலாற்றில் மைக்கு முந்தியது மா. அதனால் அதைக் காட்டினோம். நீங்கள் மை+ இர் என்ற முடித்துவிடலாம் என்று நினைக்கலாம். அப்படியே நீங்கள் வைத்துக்கொள்வதில் எமக்கு மறுப்பு ஒன்றுமில்லை. மை எப்படி வந்தது -- யாரும் கேட்டால் அப்போது நீங்கள் விரித்துக்கொள்ளுங்கள்,

இதுபோல் திரிந்த இன்னொரு சொல்:   மை+ இல் =  மயில் ஆகும்.   இல் என்பது
இடம் என்ற பொதுப்பொருள் உடைய சொல் மைப்புள்ளிகள் போலும் இடங்களை உடைய தோகைப் பறவை.

இர் என்ற இறுதி,  இரு என்பதோடு உறவுற்ற சொல்    இரு > இர்; அல்லது இர்> இரு. எவ்வாறு ஆயினும் உணர்ந்துகொள்வதே முதன்மை யானது ஆகும். இரு என்ற வினைச்சொல் முன்மை வாய்ந்தது.  வினைச்சொல் எந்த மொழியில் உள்ளதோ அங்குதான் பெயர் ஏற்பட்டது என்பது சொல்லியலார் முடிபு.

மை இர் என்பது இணைந்து,  மயிரானது.  முதனிலைக் குறுக்கம்..

மயிர் என்பது மசிர் என்று வழங்குவது  ய- ச திரிபு.  இது பல மொழிகட்குப் பொதுவான திரிபு.  தமிழில் வாயில் > வாசல்,  காண்க.

மெய்ப்பு - பின் வரும்.