வியாழன், 28 ஜனவரி, 2021

மொழிகளில் ஆர் விகுதி(suffix) இராவணன் முதல்....

 விழுமிய பீடு அணவிநின்றவன்  > வி + பீ டு+ அணன் >  விபீடணன் என்று சங்கப்புலவர் வால்மிகியார் அமைத்துக்கொண்டார்.  அல்லது தமிழ் இராமாயணம் ஒன்றிலிருந்து இப்பெயரை மேற்கொண்டார்.  இதனை நாம் முன்பு எடுத்துக்காட்டிய து உண்டு. இவை இரண்டில் எது சரி என்று இப்போது வரையறுத்தல் இயலாதது---  அது காலக்கழிவினால்(passage of time).

விழு = சிறந்த.

பீடு  =  பெருமை, பெருமிதம்.

அணவுதல் -  மேற்கொள்ளுதல்;  தொடர்பினால் அடுத்து நிற்றல்.


இராவண்ணன் என்பதன் இடைக்குறைச்  சொல்தான் இராவணன்.  ஒரு ணகர ஒற்றினை எடுத்துவிட்டால் வேற்றுலகு ஆகிவிடுகின்றது. ஆராய்ச்சியின்மை அத்துணை மோசமாகிவிடுகிறது.

இனி வான்மிகி என்ற பெயரைப் பார்க்கலாம்.

வான் -   ஆகாயம்.  வால் -  வெண்மை என்ற பொருள் இச்சொல்லுக்கு  முதுகெலும்பின்  பின்வெளிப்பாடு என்ற பொருளும் உளதென்றாலும் அப்பொருள் ஈண்டு பொருந்தாது.

வான்+ மிகு + இ >  வான்மிகி.   வானை மிக்கு  நின்ற புலவர் என்பது பொருள். இது ஒரு புனைப்பெயர். அப்புலவர் வைத்துக்கொண்டதாக வேண்டும்.

வால் மிகி என்பதும் அன்னது.   வால் தூய்மை என்னும் பொருளிலும் வரும். வெணமை மிக்கவர்,  தூய்மை மிக்கவர் என்றும் பொருள்படும். இதுவும் அப்புலவர் மேற்கொண்ட பெயராகவே அல்லது பிறர் வழங்கியதாகவே தெரிகின்றது.

இவை இயற்பெயர்கள் அல்ல.

வான்மிகி என்ற பெயருடைய ஒரு கூட்டத்தவர் உள்ளனர்.  அவர்களுக்கும் இப்புலவருக்கும்  தொடர்பு இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். இப்போது அறுதியிட்டு உரைத்தல் ஆகாது. அதற்குரிய பதிவுகள் கிட்டிற்றில.

தொடர்பு உண்டெனினும் அது ஒக்கும் ; இல்லெனினும்  ஒக்கும்.  எதுவும் பிழையில்லை.

மாரீசன் எனின் மரையாகிய தலைவன்.    மரை - மான்.   ஈசன் என்பது இறைவன் - இறைவர் -  ஈறைவர் > ஈஷ்வர்.

இவற்றுள் ஈறைவர் என்னும் முதல்நீண்ட வடிவம் மறைந்தது. ஆனால் முதனிலை நீண்டு சொற்கள் அமையும் என்பது இலக்கணமாதலின், இறை > ஈறை எல்லாம் ஒன்றுதான்.  பாட்டில் நீட்டும்போது வரையறை இலதாகும். பின் ஈறைவர் என்பதில் ஷ் புகுத்தி அமைத்தால், அதனால் வேறுபடல் ஒன்றுமில்லை.  வடவெழுத்தொரீஇ,    சொல்லாய் ( தமிழ்ச்சொல்லாய்) மீளுறும்.  இதனைத் தொல்காப்பியச் சூத்திரம் தெளிவு  படுத்துகிறது.  

உயர் > உயர்வு :  உயர்த்தி  (விகுதி மாற்றம் )  . ஒஸ்தி ஆனதுபோலும்.  வடவொலிகள் மரத்தடி ஒலிகளாய் இருந்தவை.  வடம் - கயிறு, மரம் என வேறு பொருள்களும் உள.  திரு வி.க.  நன்று கூறினார்.

பல தமிழ்ச்சொற்கள் தமிழின மொழிகளில்  வடவொலிகள் பெற்று இயலும்.

பாணினி என்ற பாணனும்  வால்மிகி என்ற அன்றுயர் பிரிவினரின்  புலவனும் மாற்றுமொழியிற் பெரும்புலமை கொண்டிலங்கினர். 

பெயரின் பின் ஆர் விகுதி பெற்று மன்பதைக்குள் மதிப்புற்றோர் ஆரியர். எடுத்துக்காட்டு:  தொல்காப்பியனார் (ஆர்);  வள்ளுவனார் (ஆர்),  இளநாகனார் (ஆர்),  சாத்தனார் (ஆர்),  இன்னும் பலர்.  உங்கள் பெயர் ஆர் விகுதி பெற்று இயலுமானால் நீங்களும்  " ஆர் + இய + அர்"  தான்!

இந்தத் தமிழ் ஆர் விகுதி உலகிற் பல இடங்களிலும் பரவி விட்டதனால்,  தமிழின் உலகத் தாக்கத்தை நாம் உணர முடிகிறது.

அறிக, மகிழ்க.


குறிப்பு:

ஆசிரியர் என்ற சொல் இடைக்குறைந்தும் ஆரியர் ஆகும்.

ஆ(சி)ரியர் - ஆரியர். ஆர் + இ + அர் : பிறர் மரியாதை செய்வதற்கு   உரியவர்.

மரியாதை:  மருவிக்  கட்டிப்பிடித்துக்கொள்ளுதல்.  சொல்லமைப்புப்பொருள்.

மரு + யாத்(து) + ஐ -   மரியாதை.  யாத்(தல்).    ரு யா >  ரியா  ஆகும்.

ஆசிரியர் - பற்றுக்கோடாக இருப்பவர்  :  ஆசு+ இரு+ இ + அர்.  இ - இடைநிலை. அர் - விகுதி.

vizhumiya means excellent. Does not mean fall.









ஞாயிறு, 24 ஜனவரி, 2021

மன்னித்தல் மருவிநிற்றல்

மருவுதல் என்பது, ஒன்றுபடுதல் இணைதல் என்ற பொருள்களில் அறியப்படுகிறது. தழுவுதல் என்பது இதற்கு இன்னொரு சொல்லால் தரப்படும் விளக்கம். "சங்கம் மருவிய இலக்கியம் " என்னும் வாக்கியத்தில் அவ்விலக்கியம் சங்ககாலத்துக்கு அடுத்த கால நிலைக்குரியது என்று எடுத்துக்கொள்ளவேண்டும் என்னலாம்.

 இதன் தொடர்பில் நாம் இந்த அடிச்சொற்களைக் கவனிக்கவேண்டும். மல் - ( ஒருவரை இன்னொருவர் மிக்க அருகில்சென்று கட்டிப்பிடித்து வீழ்த்தும் ஒரு விளையாட்டு அல்லது பிடியிடு போர். மற்போர். 

 மல் > மன்: இது லகர 0னகரப் போலி.இது நிலைபெறுதல் என்ற பொருளில் வரும் சொல். நிற்றல் இயலாத ஒருவன் அடுத்தவனை அணுகிப் பிடித்தோ, அல்லது ஒரு பொருளைப் பற்றிக்கொண்டோ நிற்பான். தரையில் காலை வைத்து நிற்பதிலும் நிலத்தின் துணை தேவைப்படுகிறது என்பதையும் கவனிக்கவேண்டும். ஆகவே மன்னுதல் என்பதிலும் ஒருசார் மருவற்கருத்து கரந்து நிற்பதை அறியலாம். நிலை நிற்பதெல்லாம் இவ்வாறு சார்ந்தே அமைகிறது. சார்பில் மிகுதியும் குறைவும் கூறுதல் கூடும்.  

மன் > மன்னித்தல். இது நிலைபெறுவித்தல் என்ற பிறவினைப் பொருளில் அமைந்த தமிழ்ச் சொல். மன்னித்தல்: இதுபோல், உன்னுதல் என்பதினின்று உன்னித்தல் என்பதும் அமையும். மன் > மன்று , மன்றம். பலர் கூடுமிடம். இவ்விடங்களில் பலர் அடுத்திருத்தல் காண்க. 

மன்றல் - திருமணம், இருபாலார் அடுத்திருக்கும் வாழ்க்கை. 

மல் > மரு. மருவுதல் என்பதில் மரு என்பது தவிர மற்றவை விகுதிகள். வினையாக்க விகுதி மற்றும் தொழிற்பெயர் விகுதி. 

ஒ.நோ: புல் > புரு. நல்> நறு என்பதும் காண்க. 

மன்னித்தல் என்ற சொல் மன் என்றதிலிருந்து அமைதல் காட்டும் விளக்கம் ஒன்று: இது முன்பு பழைய இடுகையில் விளக்கப்பட்டுள்ளது. https://sivamaalaa.blogspot.com/2020/04/blog-post_12.html 

பலரும் அறிந்த ஒரு திரிபு  -  ஒருவேளை மறந்தும் இருக்கலாம் -   அது:

கரு > கன் என்பது.   கருநடம் >  கன்னடம் என்பது.

நடமென்பது  நாடகம் என்றும் திரியும்:  கருநடம் > கருநாடகம் > கர்நாடகம்.

இவ்வலைப்பூவில் பொருளடக்க அகரவரிசையில் "மன்னித்தல்" காண்க. Glossary on Etymology (Pages) .

மருவி நிற்றல் என்பது இன்னொரு வகையிலும் அமையும். மரு(வி) நிற்றல் --- மருநிற்றல் > மன்னித்தல் என்றும் அமைதல் கூடும். 

புல்லுதல் - பொருந்துதல் . இச்சொல் புல் > புரு என்று திரியும். எனவே புரு > புருசு > புருசன் ( வாழ்க்கையிற் பொருந்தியவன் ) என்பது. 

புரு > புருவம் : கண்ணுடன் பொருந்தி அமைந்தவிடம். இதிலிருந்தும் கண்ணுக்குப் பொருந்தியவன் என்றும் விளக்கலாம். எல்லாம் அதே கருத்துதான். 

 புரு > புருடு > புருடன் என்றும் அமையும் 

பல வழிகளிலும் தமிழ். 

 ஒருவனை மன்னிக்குங்கால் அவனை மீண்டும் மருவிக்கொள்கிறோம். பழைமை நட்பை நிலைநிறுத்துகிறோம். அறிக மகிழ்க. 

மெய்ப்பு செய்யப்பட்டது. 

Owing to software error in Win7, the edit tool bar in this blog disappeared. Hence saved the post and published first. Now this has been edited from another device.

Will review. 25 01 2021

தட்டச்சுப் பிறழ்வுகள் பின்னர் கவனிப்போம்.

வெள்ளி, 22 ஜனவரி, 2021

சிரோமணி

இன்று சிரோமணி என்ற அழகிய சொல்லின் வேர்களை அறிந்துகொள்வோம்;

இதைச் சுருக்கமாகவே அறிவோம்.

சிற  -  வினைச்சொல். சிறத்தல்.   முன்னிருந்ததைவிட இன்னும் நலமுடையதாய் ஆவதே சிறத்தல்.  சீர் பெறுதல்.

ஓ  -  ஓங்குதல்.  மிகுதல்.

மணி -  இதுவும் தமிழ்ச்சொல்.  மண்ணுதல் -  தூய்மை அடைதல். ( நீரினால் கழுவப்பட்டிருத்தல்).  உயர்ந்த (பொன்னும்) மணி(யும்)  அதன் கலப்புகளுடன் தான் மண்ணிலிருந்து மனிதனுக்குக் கிடைக்கிறது.  அது மனிதனால் தூய்மை பெற்றே உயர்வை அடைகிறது.  " மணியாகிறது". மணியை ஒளிபெறச் செய்வது ஒரு தொழிலாளி.

மண்ணுதல்.

மண்ணு + இ > மண்ணி > மணி

ண் தொலைந்தது இடைக்குறை.

மண்ணுமங்கலம் என்ற பழந்தொடர் கருதுக.

சிற + ஓ + மணி

ஓமணி =  ஓங்கும் மணி. அப்பொருள் பெற்ற புத்தொளியைக் குறிக்கிறது. இவ்விடத்து இத்தொடர் வினைத்தொகை.

சிற+ ஓ + மணி =  சிறோமணி -  சிரோமணி. ஓரெழுத்து மாற்றமுற்ற சொல்.

புலவர்மணி,   கவிமணி, கலைமணி முதலிய புகழ்த்தொடர்களை உன்னுக.

மூலத் தமிழ்ப்பதங்களை ஈண்டு காட்டினோம்.


அறிக.

மகிழ்க.




வியாழன், 21 ஜனவரி, 2021

கதம்பவனக் குயில் அம்மன்.

 அம்மன் -  நாம் வணங்கும் இறைவி -   இல்லாத இடமே இல்லை ---- வானத்திலும் பூமியிலும் எவ்விடத்திலும் இருப்பவள் அவள். சிலர் அம்மன் என்ன சாதி என்று உசாவுகின்றனர்.  எல்லாமும் அவளுள்ளே அடக்கமாதலால் எல்லாச் சாதிகளும் அவளுக்குள் அடக்கம்.  அவள் அறியாத சாதி எதுவும் உலகில் இல்லை. யாவும் ஒன்றாய் அவள் ஆட்சியுள் மாட்சியாய் இலங்குகின்றது.

சுடுகாட்டில் இருக்கிறாளா என்ற கேள்விக்கு,  சுடுகாடு சுடாத காடு என்ற பேதமின்றி எங்கும் இருக்கிறாள்.  ஒரே சமயத்தில் ஓரிடத்து ஒருமையாகவும் பலவிடத்தும் விரிந்து பரந்து சிறந்தும் பன்மையாகவும் நிற்பவள் அவள். அவளால் முடியாதது ஒன்றுமில்லை.

அவள் கதம்பவனக் குயில். வண்ணப்பூக்களின் வாசக்குயில். பூவனம் சென்று பொறுமையாகப் போற்றுங்கள்.

ஜகதம்ப மதம்ப கதம்பவனப் பிரிய  வாசினி.

அவள் மலைமகளும் ஆவாள்.  சிகரத்தில் தங்குவதால்  "சிகரி" என்றும் குறிக்கப்படுபவள்.

சிகரி சிரோமணி துங்க இமாலய 

ஸ்ருங்க நிஜாலய மத்யகம்

மேவி நிற்பவள்.



புதன், 20 ஜனவரி, 2021

உனது அமைதி.

 அதோ அந்தக் கடலைப் பார்!

அது அமைதி இல்லாமல் ஓயாமல்

அலைந்துகொண்டே இருக்கிறது.

அதனுடன் போய் கலந்துவிட நினைக்கிறாயா?

நீயும் அலைந்துகொண்டுதான் இருப்பாய்.

அலுவல் ஒன்றும் உனக்கில்லை அங்கே!

உன்னை அது கண்டுகொள்ளப் போவதில்லை,

அது அலைந்துகொண்டுதான் இருக்கும்.

இதுவே இடமாகும் உனக்கு,

இங்கேயே இருந்துவிடு.

உன் அருகிலே உன் அமைதி இருக்கிறதே.

செவ்வாய், 19 ஜனவரி, 2021

அண் சண் சணல் முதலிய (அடுத்தல் கருத்து மூலச்சொல்)

சணல் என்ற சொல்லின் பிறப்பைச் சுருங்க அறிவோம்.

அண் >  அண்முதல்  :  நெருங்குதல்.  அணுக்கமாதல்.

அண் >  அண்டு >  அண்டுதல்  :  அடுத்துவரல்.

அண் >  அண்மை,  அணிமை  :  காலத்தால் இடத்தால் அடுத்திருத்தல். இன்ன பிற.


அண் என்பது சண் என்று மாறும்.

அண் >  சண் >  சண்டி  (சண்+தி).   அடுத்துச்சென்று அல்லது பக்கத்து இருந்துகொண்டு  ஒவ்வாதன செய்தல். சண்டித்தனம் .

அண்டு >  சண்டு  >  சண்டை :  கைச்சண்டை,  வாய்ச்சண்டை.  இவை அடுத்துச் சென்று செய்வன.

அண்டு என்பது இடைக்குறைந்து அடு ( அடுத்தல் ) ஆயினும் பொருள் மாறாது.

அடு > அடி > அடித்தல்.


இப்போது இதை அறியுங்கள்:

அண் > சண் > சணல்.

அடுத்து அடுத்து இருக்குமாறு திரிக்கப்படும் நார்க்கயிறு. அத்தகு பொருள் விளைச்சல். செடிவகை.   a hemp.

அடு > சடு > சடம்பு.

சணப்பநார்,   சணப்பை நார்,    சணம், சணம்பு என்று பல வடிவம் கொள்ளும் சொல்.

சாணைப் பிடித்தல்:  கத்தி முதலியன கூராக்குதல்.

அண் > சண் > சாண் > சாணை.

ஒரு சாண் என்பது அடுத்திருக்கும் தூரம்.  அண்> சண் > சாண்.

பழமொழி:  சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை!


அறிக மகிழ்க.

முகக்கவசம் அணிக.

மெய்ப்பு பின்.



 

சொற்பொருள் காண மூவகை

 பெரும்பான்மை உலகின் சிறந்த நீதிமன்றங்களில் ஆங்கு வழக்குக் கலை வல்ல அறிஞர்கள் மூவகை விளக்க முறைகளைப் பயன்படுத்துவர். முதலாவது ஒரு சொல்லைப் பொருளறிய வேண்டுமெனில் பயன்பாட்டுநெறியில்  அச்சொல் எவ்வாறு எப்பொருளில் வழங்குகிறதோ அவ்வாறேதான் அச்சொல்லை எடுத்துக்கொள்ளவேண்டுமென்பது. (Literal Interpretation)  எடுத்துக்காட்டாக, வீடு என்பது கூரை மேல் வேயப்பட்டு சுற்றுச்சுவரின் உள் இருக்கும் இடமே ஆகுமென்பது. மற்றும்  அது வீடு என்னும் இடத்துக்கு வெளியில் உள்ள திண்ணையையோ  மரத்தடியையோ பூந்தோட்டத்தையோ ஏனை அகநிலத்தையோ குறிக்காது என்று எடுத்துக்கொள்ளவேண்டுமென்பது. 

ஆகவே சாட்சி வீடு என்று சொன்னால் அது மேற்கண்டவாறே  கொள்ளப்படும். இதை உறுதிப்படுத்த, வழக்குரைஞர்  சாட்சி ஒரு  வரைபடத்தில் அவன் எங்கிருந்தான் என்பதைக் குறிக்கச் சொல்லவும் கூடும்.  இதன் மூலம் "வீட்டிலிருந்தான்" என்பது திட்டவட்டமாக எங்கு என்று நீதி மன்றம் அறிந்துகொள்கிறது.

இங்கிலாந்தில் ஒரு காலத்தில் விபசாரிகளைக் கட்டுப்படுத்தும் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டு நடப்புக்கு வந்திருந்தது. அச்சட்டம் விபசாரிகள் வீதிகளில் நின்றுகொண்டு தம் தொழிலுக்கு ஆள்பிடித்தலை  மேற்கொள்ளுதல் குற்றமென்று சொன்னது. இவ்வாறிருக்க, ஒரு விபசாரி ஒரு வீட்டின் சுற்றுவேலியின் உட்புறத்தில் நின்றுகொண்டு அவ்வழியிற் செல்வோரைத் தொந்தரவு செய்துகொண்டிருந்தாள்.காவல் துறைக்குத் தகவல் செல்லவே, அவர்கள் வந்து அவளைக் கைதுசெய்து நீதி மன்றத்தில் நிறுத்தினர்.

அவள் தன் தற்காப்பில்,  தான் நின்றது ஒரு வீட்டின் பகுதிக்குள் என்றாள். ஆகவே அது "பொது இடமன்று. என்னைப் பிடிக்கக் காவல்துறைக்கு என்ன அதிகாரம்" என்று வாதிட்டாள்.  வீதி,  வீடு என்ற இரு பதங்களையும் ஆராய்ந்த நீதிமன்றம்,  வீதியை ஒட்டிய வீட்டின் தோட்டப்பகுதியும் "தெரு" என்று சட்டம் சொல்லிய பகுதியினுள் அடங்கும் என்று முடித்து,  அவளைக் குற்றவாளி என்று தீர்மானித்தது.   இவ்வாறு தீர்ப்புச் செய்யாவிடில் விபசாரத்தைப் பொது இடங்களிலிருந்து தொலைக்க முயலும் அந்தச் சட்டம் வலிவில்லாமல் போய் மக்கள் பாதிப்புறுவர் என்பதால் தெரு என்பது அதனை ஒட்டிய வீடுகளின் நிலப்பகுதிகளையும் உட்படுத்தவேண்டுமென்று மன்றம் முடிவுசெய்தது. ( Mischief Rule )  

இதன்படி தெருவை ஒட்டிய நிலமும் தெருதான். இந்தச் சட்டத்துக்கு இப்படித் தீர்ப்பு.  ஆனால் வீட்டை விற்க முயலும் வீட்டுக்காரனுக்கு உதவும் நிலச்சட்டத்துக்கு அது பொருந்தாது. அவன் வீட்டுடன் சேர்ந்த நிலத்தையும் விற்கும் அதிகாரம் உடையவனே ஆவான்.

தெரு என்ற சொல்லையும் வீடு என்ற சொல்லையும் கையாளும் ஒரு சொல்லாய்வாளன் வீட்டு நிலத்தையும் தெருவில் அடக்க இயலாது. இத்தகைய வாய்ப்பு ஓர் அகரவரிசை செய்வோனுக்கோ சொல்லாய்வு செய்வோனுக்கோ வாய்ப்பதுண்டா?

தொன்ம வரலாறுகளில் "பத்துத்தலை இராவணன்" என்றால் பத்துத் தலங்களை ஆண்ட இராவணன் என்னலாமா? வேலைத் தலையில் நடந்தது என்றால் வேலை செய்யுமிடத்து நடந்தது என்பதுதான் சரி எனலாமா? "பறந்து சென்றான்" என்பதை விரைந்து சென்றான் என்பது சரியாகுமா? ( சலவைத் தொழிலன் ஆட்டுத் தலைக்குப் பறந்தது போல " என்ற பழமொழியை நோக்குக ).   ஒரு கதையில் வரும் எதையும் பொருந்தப் பொருளுரைப்பதற்கு ஆய்வாளனுக்கும் நீதிபதிக்கு உள்ளது போலும் செல்வழி உள்ளது என்று சொல்லலாம் என்று தெரிகிறது.

சொல்லின் உண்மைப் பொருளை மட்டுமே வைத்துப்  பொருள்கூறுதல் (Literal Interpretation ),   அடுத்து அப்படி மட்டுமே பொருள் கூறும்போது பொருந்தாமை நிகழ்ந்தால் உகந்தபடி பொருத்தமாய் உரைப்பது ( Mischief Rule ) ,  கெடுதலான பொருள் போதருமானால் ,1 உண்மைப்பொருள், 2 பொருந்தும்பொருள்,  3. கெடுதலான பொருளை விலக்கி உரைத்தல் ( Golden Rule )  ஆகிய மூன்றையுமே ஏற்புழிக் கையாளுதல் எனபனவற்றுக்கும்  இயற்கையிலே மொழியாசிரியனுக்கும் அதிகாரம்* உள்ளது என்று முடிப்பது சரி என்று தெரிகிறது.

அறிக் மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

*விடுபட்ட சொல் சேர்க்கப்பட்டது. 21012021

 

ஞாயிறு, 17 ஜனவரி, 2021

சொல்லாக்கத்தில் காரணம் அறிதல்.

 ஒரு சொல்லை அமைப்பதற்கு அச்சொல் அமைக்கப்படவேண்டியதன்  காரணமும் முதன்மை யானதாய் இருக்கக் கூடும். ஆய்வாளர் காரணங்களையும் அறிந்துகொள்வது வேண்டற்பாலதே ஆகும்.

பெரும்பாலான பரத்தையர் அல்லது பரத்தமையைத் தொழிலாகக் கொண்டு வாழ்வோர்,  அவ்வாறு அழைக்கப்பட்டதற்குக் காரணம்,  அவர்கள்  ஆடவர் ஒருவர்க்கு மேற்பட்டவரிடமோ அல்லது பலரிடமோ பரந்து ஒழுகியமைதான். இதனினும் விரிந்த முறையில் பலரைச் சார்ந்து வாழ்ந்து வந்த பெண்களையே விபசாரிகள் என்றனர்.  இது ஒரு சொற்சுருக்கமுறையில் எழுந்தது:  வி = விரிந்து, ப =பரந்து,  சார் -  பிறரால் ஆளப்பட்டு   ,  வாழ்ந்தவர்கள். வி+ப+ சார் + இ. = விபசாரி ஆயிற்று. பலவித ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டு, பிறனைத் தன்வயப்படுத்திப் பொருளைப் பெறுபவள்  வேய்+ இ = வேயி> வேசி. வேய்தலாவது இங்கு அணிகளால்,  மணம்தரும் பூச்சுக்களால் கவர்பவள். ஆயின் இந்தச் சிறப்புப் பொருள்கள் நாளடைவில் மறக்கப்பட்டு இச்சொற்கள் ஒருபொருள் எய்தின..  எல்லாவகை விலைமாதரும் மைதீட்டிக் கொண்டனர் என்று தெரிகிறது:"  மைவிழியார் மனையகல்" என்றார் ஒளவையார்.  திருக்குறள் இவ்வகைப் பெண்டிரை > "வரைவின்மகளிர்"  என்று குறிக்கும்.

எந்த வகையான குற்றங்களைத் தடுக்க இந்தச் சட்டம் வந்தது என்று சிலவேளைகளில் நீதிமன்றங்கள் ஆராய்வதுண்டு.  அதை இன்னோரிடுகையில் காணலாம்.  அதிலிருந்து சொல்லமைத்தலுக்கு எதுவும் விளக்கம் அறிய முறைகாண முடியுமா என்று பார்ப்போமே.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்.

வியாழன், 14 ஜனவரி, 2021

Internet outage.

From Mobile Phone: 

Dear friends

Currently Broadband (Singtel) services in our area are down .  3rd day outage.We expect to be back soon.

Gas supply is also down. A minor gas explosion

3 days ago in waterheater. Expect to be good by Sunday. 

Expect to be on track and normal soon.

Sorry for any disruption.

Please take care.


Postscript: 17012021 (from Computer:)

Internet services were restored two days ago after it was discovered the outage had caused a driver software to derecognize the Service Provider.  This was corrected soon after. Other repairs in the house were in progress.  Some lights are affected. This will be repaired soon.

Status now is normal.

Thank you reades and take care. Covid is still around.




திங்கள், 11 ஜனவரி, 2021

பொங்கல் வாழ்த்து

 நேயர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்


உழவர்க்   கினிய  பொங்கற் புதுநெல்

உலகிற் கினிய பொங்கற் பொன்னாள்

உண்பார்க் கினிய சருக்கரைப் பொங்கல்

அன்பால் இனிய அரும்பெரு நன்னாள்.


யாவருக்கும் எங்கள்  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.



ரகர வருக்கங்கள் தோன்றலும் மறைதலும்.

 இடையில் ஒரு ரகர வருக்க எழுத்துத் தோன்றிச் சொல்லமைதலும் பின்பு அவ் வெழுத்து மறைதலும் பழைய இடுக்கைகளில் சிலவினில் ஆயப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை முன் கொணர்கவெனில் உங்கட்கு அது எளிதாயிருக்கும்.

உங்களுள் புதுவரவினராய் உள்ளோர்க்கு அதனை அறிமுகம் செய்யும் வண்ணம் மீண்டும் இங்குச் சில சொல்வோம்.

உ என்பது முன் என்று பொருள்படும் சுட்டடிச் சொல். அ, இ, உ என்பனவிலே உகரமும் ஒன்றாதல் இதனின்று அறிந்துகொள்ளலாம். இஃது  "து" என்னும் மிகுதிபெற்று  உது ஆகும்.  பின் உது  (முன்னிருப்பது),  அதுபின் இகரம் பெற்று உதி > உதித்தல் ஆகும். தகர வருக்கம் பெரிதும் சொல்லாக்கத்திற்குப் பயன்படுவது காண்க. இங்கு,  உது என்பதில் து;  தல் என்ற விகுதியிலும்  து+அல் என,  தகரவருக்கமே வரவுகொண்டது.

உதி என்பதே முன் தோன்றுதல் என்று பொருள்தரும் வினைச்சொல். இது எந்த இலக்கியத்திலும், காணப்பட்டாலும் படாதொழிந்திருந்தாலும் தமிழ்ச்சொல்லே ஆகும். இது பிறமொழிகளிலும் பின் புகுந்தது தெளிவு.  சீனமொழியிலும் "ஊ" என்றால் முன் உள்ளதெனற்பொருட்டு.  ஊ போ என்றால் இருக்கிறதா இல்லையா என்பது. ஹோக்கியன் கிளைமொழியில் நோக்குக.

மலாய் மொழியிலும் உள் என்பது உலு என்று வருவதும் காண.   உலு பாண்டான்,  உலு திராம்,  உலு சிலாங்கூர் எனக் காண்க. இன்னும் உலக மொழிகளில் தேடி மகிழுங்கள்.

தோன்றுதலென்பது  உது > உதி > சுதி  என,  ஒலி முன் தோன்றுதல் வரவுபெறும்.இது சுதி > சுருதி என வரும்.  தோன்றுதற் கருத்தமைவில், சுதி என்பது  பின்பு சுருதி  என இடைமிகை ஆயிற்றென்க.  கோவை என்பதும் ஒரு ரகர ஒற்றுப் பெற்று கோர்வை எனப் பேச்சுவழக்கில் காணப்படுகிறது.  அது ( கோர்வை) வழுச்சொல்லா அன்றா என்பதன்று ஆய்வு. ரகர வருக்கங்களிலொன்று தோன்றுவது இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது. மனித நாவு அப்படி இயல்கின்றது.  அவ்வளவே நாம் சுட்டிக்காட்டுவது.  இனி, சேர் என்பதும் ரகர ஒற்று இடைக்குறையும்.  சேர் > சேர்மி > சேமி. இவையே அன்றி,  குழுமி > கும்மி என்ற பிற எழுத்துக்களுகம் இத்தகு தாக்கம் பெறும்/

கருமி பண்ணுதல் :  கருமி > கம்மி  குறைத்தல்.

வானம் கம்முதல்:  கருமுதல் > கம்முதல்,  மற்றும் கம்மல்.

ரகர வருக்கம் தொலைதலும் தோன்றலும் காணலாம்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.



சனி, 9 ஜனவரி, 2021

வர்மா என்ற பட்டப்பெயர்

 வர்மா என்பதன் சொல்லமைப்பினைக் காண்போம்.

அதியமான்  ம  லையமான்  சேரமான் ( சேரமான் பெருமாள்)  என்ற சொற்களை முன்னர் நீங்கள் எதிர்கொண்டிருந்தீர்கள்.  இச்சொற்களில் வரும் ~மான் என்பது மகன் என்பதன் திரிபு என்பர்.  பெருமகன் என்பதும் பெருமான்,  ( பெம்மான் ) என்று திரியும். எம்பெருமான் என்பதும் எம்மான் ஆகும்.

மன்னர்கள் என்பவர்கள் ஓர் குலமாக வாழ்ந்து மறைபவர்கள். தாத்தா, அப்பன் பிள்ளை என அவர்கள்  அடுத்தடுத்து மன்னர்கள் ஆவர். ஆகவே  ஒரு வழியாக வருபவர்கள் இவர்கள். சிலவேளைகளில் இவர்களின் பட்டப்பெயர்கள் இத்தகு தொடர்வரவைக் குறிக்கக் கூடியதாய் இருக்கும்.  

(தொடர்) வரு அரசு பரம்பரையினர்,  வருமகன் >  வருமான் >  வருமா >  வர்மா என்று தங்களைக் குறித்துக்கொள்வது  அவர்களுக்குப் பெருமிதம் தரும்.  அதில் ஆண்டுகள் பல கடந்தபின்,  இச்சொற்களின் புனைவு வரலாறு மறக்கப்பட்டபின் இவை மிகுந்த உயர்வும் மதிப்பும் பெற்றுவிடும்.  இதுபோன்ற பட்டப்பெயர்கள், மரபுப்பெயர்களில்  பொருள் தெரியாவிட்டால்தான் வியந்துபார்த்துப் போற்று நிலையை  அடையும். இவ்வாறுதான் பல பெயர்கள்  உயர்வு பெற்றன.  எடுத்துக்காட்டு: காந்தி என்ற பெயர். நறுமணப்பொருள் விற்போர் என்று பொருள்படும் இச்சொல்லை பலர் பெயரில் ஒட்டிக்கொள்வதைக் காண்க.

இவ்வாறு வர்மா என்பது குடும்பத் தொடர்வரவு உடையோர் என்ற பொருள் உடையது.

சார்ந்துவாழும் பூசாரிமக்கள்,  சார்+ மான் >  சார்மா > சர்மா என்று வரும். ஓர் அரசரைச் சார்ந்து இவர்கள் பூசை முதலியன செய்து பெருநலம் பெற்றவர்கள் என்பது பெயர் காட்டுவது. முதலெழுத்துக் குறுகிய சொல்.  சார் > சர்.

chaar+maan > chaar + maa > shar maa > sharma.

இதனையும் காண்க:  https://sivamaalaa.blogspot.com/2012/06/blog-post.html

இவை விழிப்பத் தோன்றாத சொற்கள்.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்.








ர்


வெள்ளி, 8 ஜனவரி, 2021

சஞ்சலம்

 மனம் ஒரு நிலைப்படாமல் இடர்ப்படுதலும் ச.லிப்பு என்றே சொல்லப்பெறும். இதன் அடிச்சொல் "சல்"  என்பது.

சல்லுதல்  - சல்லடையால் சலித்தல்

சலித்தல் -  பெரிது சிறிது வேண்டியது வேண்டாதது  என,  சிறு துளைகள் உள்ள ஏனத்தால் பிரித்தெடுத்துத் தூய்மை செய்தல். துளைப்பாத்திரத்தால் கூலங்களைச்  சரிசெய்து மேற்கொள்ளுதல். ஏற்ற துணித்துளைகளாலும் சலிக்கலாம்.

சல் - சலிப்பு:    கோபம். மனநிறைவின்மை.

சலிப்புப் பண்ணுதல் - தொந்தரவு பண்ணுதல்.

கூலத்தைத் துளை ஏனத்தில் அலைத்தெடுப்பதுபோல எண்ணங்கள் நிலையின்றி இருத்தல் .

அலை என்பதன் அடிச்சொல் அல்.  அகரத் தொடக்கமும் வருக்கமும் சகரத் தொடக்க வருக்கங்களாகும்.

அல் >  சல்>  சலி > சலித்தல்.  

இதுவுமது:  அமண் - சமண்.  பிற மற்ற இடுகைகளில் அறிக.

கவனிக்க:

அல்  > அலை

அல் >  அலம்பு.

அல் > அலட்டு

இவை ஆடுதல், அசைத்தல், முதலிய தொடர்புகளை உடையன.   அல்.- இதுவே சல் என்ற சொல்லிலும் உள்ளது. இவ் வசைவுச் சொற்கள் அவற்றிற்கு ஒப்பான மனச்செயல்களைக் குறிப்பனவாயின.   இஃது ஒப்புமையாக்கம்.

சல் > சலனம் என்பதும் இத்தொடர்பில் விளைந்ததே.  ( சல்+ அன் +அம்);

இனிச் சஞ்சலம் என்பது:

தம் + சலி + அம் =  சம் + சலி + அம் >  சஞ்சலம்.   லி e


ன்பதன் இகரம் கெடுதல்.

தம் > சம்  ( த - ச திரிபு)

சலி + அம் >  சலம் 


தம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கை குறிப்பது.  சம் என்பதும் அது.

மனிதன், மனம் ஆகிய இரண்டும் சேரப் பன்மை ஏற்படும்.  ஆகவே சஞ்சலம்

என்பதில் இவ்விரண்டும் தொடர்பு அறுந்த அசைவு காணப்பெறும்.. ஒருங்கியலாமை.

அறிக.  மகிழ்க.

 

  


புதன், 6 ஜனவரி, 2021

ஐஸ்வரிய அல்லது செல்வங்களின் தொகுப்பு

 செல்வங்கள் பதினாறு என்பது நம் சொற்றொகை அகரவரிசை சொல்வது. இந்தச் செல்வங்களின் தொகுதிக்கு இன்னொரு பெயர் ஐஸ்வரியம்  ஆகும் இச்சொல்லின் அமைப்பை எளிதினுணர்தற் பொருட்டு  பிற்பாகமான  "~வரியம்" என்பதை  முதலில் அறிந்துகோடல் நலம்.

மனிதன் பிறக்கும்போது கோவணமும் இன்றித்தான் பிறக்கிறான்.  " நீ என்னதான் அப்படிக் கொண்டுவந்துவிட்டாய்,  அதை நீ இழப்பதற்கு?" என்ற பகவத் கீதையின் கேள்வி பொருண்மை மிளிர்வதாகும். பிறனொருவன் நூல் துணி உடுத்திருக்க, தான் பட்டாடையில் பவனிகொள்வதானால்,  அவன்றனக்கு செல்வவரவுண்மையையே அந்நிலை குறிக்குமென்பதில் ஐயமொன்றில்லை. பிறன் சிறுதொகைத்  தாட்பணமே பயன்படுத்த,  தான் காசோலையும் கடனட்டையும் அரண்மனை போல் வீடும் உந்துவண்டியும் உடையவ னாயின் செல்வமுடையவன் என்று மதிக்கப்படலாம்.  இதுவே ஐசுவரியம் என்று மக்கள் கருதவும் தடையில்லை..இத்தகு மதிப்பீடுகளில் வேறுபடுவோரும் உண்டு.

பண்டைத் தமிழர் பெரும்பாலும்  ஆகுதல் என்ற வினையால் அமைந்த ஆக்கம் என்ற சொல்லையே வழங்கினர்.  அதனடிப் பிறந்த "ஆகூழ்"  என்ற சொல்லையே குறள் முதலிய இலக்கியங்கள் பதிவுசெய்தன. செல்வமாவது ஆக்கம். நற்பலனெனில்  அது நிலம் உடைமை,  ஆடுமாடு கன்றுகள் உடைமை என்று செல்வமுடையோர் மற்றுப் பிறரும்  எண்ணினர்.  இவர்களே  திருவுடையர்,  உரிமை பலவும் உடையார் என்ற கருத்தில்  கிழார் எனவும் குறிக்கப்பட்டனர்.  (கிழமை உடையர்,  கிழ + ஆர் >  கிழார், ).  மாடு என்ற சொல்லே செல்வம் என்ற பொருண்மையும் உடைத்தாயிற்று. கிழமை = உரிமை.

திரு வேறு,  தெள்ளியர் ஆதலும் வேறு என்று, அறிஞர்களைக் குறள் போற்றினாலும்   செல்வமுடையார் மன்பதையுள் வல்லோராகவே  நின்றனர்.

இந்தப் பாடல்வரிகள் கவனத்துக்குரியன:

செல்வமே சுக [ ......தாரம்]*

திருமகள் அவதாரம்;

உள்ளபடி செல்வம் இல்லாதவரே

உலகினிலே வாழ்வதும் தவறே

கல்லார் எனினும் காசுள்ளவரைக்

காட்சிப் பொருளாய்க் காணார் எவரே?  [ கம்பதாசன்]


இன்னொரு கவி செல்வங்களை இவ்வாறு நிரல்படுத்துகிறார்:

பெண்டு பிள்ளை வீடு

கன்று மாடு தனம்

பெருமையான பெரும் பள்ளம்.

கண்டு மோகம் கொண்டு.......

~~~மீளாக் கடலில் வீழ்ந்துவிடாதே...... என்று எச்சரித்தவாறே.


இங்கு  வீடு மாடு கன்று என்பவற்றைக் கவனத்தில் கொள்க.

இனிச் சொல்லியலின் படி,  ஐஸ்வர்யம் என்பதை இவ்வாறு விளக்குவோம்:

மாடு என்ற சொல்லுக்கே செல்வம் என்றொரு பொருள் உளது.

மறத்தல் ஆகாது:

ஆக்கம் என்பதில் அகரமே முதலெழுத்து.

ஆ -  மாடு  ( செல்வம்,  கோமாதா).

இல் -  இடம்.  [  தமிழில் இல் என்பது இடப்பொருள் காட்டும் உருபு, வீடு என்றும் பொருள் உளது ]

வரு  -  வருதல் என்பதன் வினைமுதல்.  தனக்கே அன்றித் தான் பிறந்த குடிக்கு இருந்ததாயினும் அது தனக்கு வருவதாகவே கொள்ளப்படும். இது வீடும் மாடும் வருதல். அதாவது செல்வம் வருதல்.

இ -   இருந்து ( செலவாகிவிடாமல் இருப்பது ).

அம் -  அமைதல் குறித்த விகுதி. [ சொற்கள் பலவினிலும் சில விகுதிகள் பொருளிணைந்தும் சில பொருளின்றி வெற்று இறுதியாகவும் உள்ளன ].

ஆ + இல் + வரு + இ + அம்.

இது:

ஆ + இஸ் + வரி + அம்

. ஐஸ்வர்யம்  ஆகும்.

இங்கு:

ஆ -  ஐ எனத் திரிய,

இல் > இஸ்  ஆனது.

வரு + இ > வரி  ஆனது.

ஆகாரத்தில் ( ஆ என்று) தொடங்கும் சொற்கள் அகரமாகவும் திரியும்.  எளிதான எடுத்துக்காட்டு:

ஆங்கு > அங்கு.

ஆன் (ஆண்பால் விகுதி )  >  அன்  ( ஆண்பால் விகுதி ).

ஆவல் >  அவா.

ஆப்பம் <> அப்பம்

ஆடு மாடுகள் வைத்திருந்தோர் ஒரு காலத்தில் தம் சொத்தால் உயர்ந்து நின்றனர். அன்ன புகழ் அவ்வழி வந்தோர்க்கும் உரித்தாயிற்று.

ஆயர் > ஐயர்.   ஆ> ஐ.

ஆரியர் என்ற சொல்லும் ரி (ரிகரம்) குன்றி ஆயர் என்றாகும்.

செல்வம் வெவ்வேறு குடிகளை வெவ்வேறு சமையத்தில் மேலேற்றிக் காட்டியது.  அரசன் போர்நடவடிக்கைகட்கு அவர்கள் உதவிநின்றும் பங்குகொண்டும் வெற்றியில் களித்தும் தாமடைந்த நிலைகளைத் தமவாக்கிக் கொண்டனர். 

பூசை முதலியவற்றில் செல்வமுடையார் இன்றளவும் முன்னிலை வகிக்கின்றனர். "மரியாதை" பெறுகின்றனர். பொறாமைப் படுவதற்கு ஒன்றுமில்லை. அன்னதானத்துக்கு இரண்டாயிரமோ மூன்றாயிரம் சிங்கப்பூர் வெள்ளி செலவானால்,  அதை அவர்கள் கொடைசெய்கின்றனர். இவ்வுலக வாழ்வில் ஏதேனும் தீங்கு இழைத்திருந்தால்,   இதன்மூலம் தீயகருமவினை விலகும் என்பது உண்மை.  வந்து உண்போருக்கும் கருமவினை தீரும் என்பதும் பொய்யில்லை. ( முன்செய் தீவினை மிக்கிருப்பின் முழுமையும் நீங்காமல் சிறுபாகமே நீங்கினாலும் ஒரு பேறுதான், அடிபட்டுச் சாகவேண்டியவன் இயற்கை மரணம் எய்தல் உதாரணம் ).

ஐயப்ப சாமிகள் செய்யும் தானங்களும் இதன் பொருட்டே. சங்க காலத்தில் வானொலி அலைகளை மக்கள் அறிந்திருக்கவில்லை,  கண்ணுக்குத் தெரியாததெல்லாம் இல்லை என்பது மடமை. எமது சிவஞான போத உரையை இங்கு வாசித்தறிக.

ஐஸ்வரியம் யாதென அறிக. மகிழ்க

 தட்டச்சு மெய்ப்பு - பின்னர்.




.

திங்கள், 4 ஜனவரி, 2021

சண்டாளர் என்போர் யார்

 இன்று சண்டாளன் என்ற சொல்லினை அறிந்தின்புறுவோம்.

சண்டாளன் என்பவன் ஓர் இறைவணக்கத் தொழிலுடையார் பெண்ணுக்கும் பிற குலத்திற் பிறந்த  ஆண்மகனுக்கும் பிறந்தவன் என்று பழைய நூல்கள் தெரிவிக்கின்றன.   ஆபிடியூபா முதலான அறிஞர்களும் இச்சொல்லை ஆய்ந்துள்ளனர். நாம் இச்சொல்லை சில ஆதாரங்களுடன் காண முற்படுவோம்.

இச்சொல்லில் உள்ள " ஆளன்" என்ற சொல் உண்மையில் இது  தமிழில் உண்டான ஒன்று என்பதைத் தெரிவிக்கின்றது.. பண்பாளன் என்ற சொல்லில் ஆளன் வருவது போலவே இங்கும் வந்துள்ளது.    ஆளன் என்பதைப் பிரித்தெடுக்க, முன் இருப்பது  சண்டு என்ற சொல்தான்.

சண்டி, சண்டு என்பna இடக்குகள் செய்தலைக் குறிக்கிறது. கடுங்கோபமுடையவன்,  சண்டன் எனப்பட்டான்.  ஒருவேளை இத்தகு பிறப்பில் வந்தோரை இழிவாக நடத்தியதால் அவர்கள் கோபக்காரர்களாய் மன்பதைக்குள் வளர்ந்து திரிந்தனர் என்றும் நாம் எண்ணலாம். இவர்களை எமனுக்குப் பிறந்தவர்கள் என்று பிறர் பழிப்பது வழக்கமாய் இருந்தது என்று எண்ண இடமுண்டு.

பெரும்பாலும் சண்டைகள் அண்டையிலிருப்போரிடையே தாம் பெரிதும் ஏற்படுகின்றன. இன்றும் இது உண்மை. தென் கிழகாசியாவில் உள்ள ஒருவருக்கு ஆர்க்டிக் துருவவாசியுடன் சண்டை ஏற்படும் வாய்ப்பு இன்றுமே மிக்கக் குறைவுதான்.  சண்டை என்ற சொல்லை அமைக்குங்கால் அண்டையில் இருப்போரிடை ஏற்படுவதென்பதை மொழி ஆக்கியோர் நல்லபடி கவனித்துக்கொண்டுதான்  செய்துள்ளனர். சொல்லியலின்படி,  அண்டு > அண்டை > சண்டை  என்று  வருவது ஏற்புடையதே  ஆகும். அகர வருக்கம் சகர வருக்கமாய்த் திரியும்.   நீர் ஆடும் அல்லது உள்ளிருக்கும் கலம் ஆடி > சாடி ஆனது.  அடுப்பில் அட்டு ( சமைத்து ) உணவு செய்யும் கலம்  அட்டி > சட்டி ஆனது, அமணர் சமணர் ஆனார். ஆ என்று வாயைப் பிளந்து இறப்பதால் ஆ> சா என்று வந்ததா என்பது  ஆய்வுக்குரியது  ஆகும்.  ஆ > சா.   " நான் வாயைப் பிளந்துவிட்டால் என் பெண்டு பிள்ளைகளை யார் பார்ப்பது ?"  என்பது பேச்சு வழக்கில் வரும் வாக்கியம். இதுவரை சாய் > சா என்பதே சொல்லியலார் தெரிவித்திருப்பது ஆகும். அகர சகரத் திரிபுகள் பழைய இடுகைகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.  ஆங்குக் காண்க.

ஒருவனை அண்டி இருந்துகொண்டு அண்டினவனையே ஆள நினைப்பவன் அண்டு ஆளன் அல்லனோ?  அது முனையும்கால் அவன் இடக்கு மடக்குகளும் செய்வான்.  எனவே அண்டு ஆளன் என்பதே சண்டாளன் என்றானது. பெரிதும் ஒரு பூசாரியை அண்டி இருந்துவிட்டு பூசாரியின் மகளை அடைந்துவிட்டுப் பிள்ளை பெற்றுக்கொண்டமையினால் பிறந்த மகற்குச் சண்டாளன் என்று பெயர் வருதல் ஒன்றும் வியப்புக் குரியதன்று.

இவர்களிற் சிலர் நாய் வளர்த்துக்கொண்டு அதற்குச் சமைத்து உணவு கொடுத்தனர் என்று தெரிகிறது. இவர்களுக்கு "நாய்க்கெரிப்போன்" என்ற பெயர் வந்தது. இது கடைக்குறைந்து "நாய்க்கெரி"  என்று வரும்.  இதை மேலும் தொடராது விடுவோம். நாய்க்கெரிகளும் சண்டாளரே ஆயினர்/

சண்டாளர் என்ற பகுப்பினில் வந்தோர் பிறர் உளர். பின்பொருநாள் காண்போம்.

மெய்ப்பு பின்.




ஞாயிறு, 3 ஜனவரி, 2021

குடம்பை

 குடம்பை தனித்தொழியப் புள்பறந்  தற்றே... என்பது ஒரு திருக்குறட் பாவின் முதலடி ஆகும். குடம்பை என்றால் கூடு என்று பொருள். இச்சொல்லுக்குப் பிற பொருட்களும் உள.

 இச்சொல்லில் குடு என்பதே அடிச்சொல்.

குடு  > குடும்பம்.

குடு >  கூடு

குடு > குடி

குடு >  குடகம். இச்சொல்லுக்கு நாடு என்று பொருள்.  உயர்திணைப் பொருளாயினும் அஃறிணைப் பொருளாயினும் சேர்ந்திருத்தல் என்பதே இவ்வடியின் அடிப்படைப் பொருள்  இவ்வடிக்கு வளைவு என்ற பொருளும் உளது. எடுத்துக்காட்டு:  குடா - குடாக்கடல். குடம் :  வளைவுப்பொருள்.  கும்பகோணத்துக்கு குடந்தை என்ற பெயருமுண்டு. இச்சொல்லுக்கும் வளைவு என்பதே அடிப்படைப் பொருள்.

கூடு என்பதும் ஒரு சிறு கொள்கலம் ஆகலாம்.  குடம்பை என்ற சொல்லை  குடம்+ பை என்றும் பிரிக்கலாம். குடம்போலும் பை,  குடமாகிய பை என்று பொருள் கூறுதலும் கூடும். எனினும் இவ்விரு சொற்களும் புணர,  குடப்பை என்று வரும். குடம்+ பாம்பு = குடப்பாம்பு என்பதுபோல. எனவே:

குடு + அம் + பை என்பதே குடம்பையானது.   அம் இடைநிலை. பை என்பது விகுதி என்றறிக.


மெய்ப்பு  பின்.

சனி, 2 ஜனவரி, 2021

PHONE-ன் INTERNAL STORAGE இனி FULL ஆகாது | How to Fix Phone Storage Prob...

கெடுதலிலும் நன்மை காணும் நன்னம்பிக்கை - தமிழர்பண்பாடு

 சங்க காலத்திலும் அது மருவிய காலத்திலும்,  தமிழர் கெடுதல் அல்லது தீமை எள்ளளவும் கலவாத வாழ்க்கையை உன்னி வாழ்ந்தனர் என்று நம் இலக்கியங்கள் சாற்றுகின்றன. அவர்கள் ஒரு மேலான இனமாக வாழ முற்பட்டனர். இக்காலத்தில் தமிழரல்லாதார் பண்பாட்டுக் கூறுகள் யாவை என்பதைத் தமிழிலக்கியம் பெரிதும் காட்டவில்லை. பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு  ஆதலின் அவர்கள் அத்தகைய செய்திகளைத் தம் இலக்கியத்திற் பெரிதும் பதிவு செய்திட்டிலர் என்பதே சரியாகும். தம் மேலான பண்புகளைக் கூறியவிடத்தும் பிறர்தீமை சொல்லாதமைதலே சான்றாண்மை ஆகும்.


பிற தேயத்து மன்னன் ஒருவன் சாலச் சிறந்த பண்புகள் உடையனாய் இருந்தான் என்பதனால் தமிழர்கள் அவனைச் "சாலமன்" என்று அழைத்தனர்.  சாலமோன் எனினும் ஆகும்.   மன் என்பது மன்னன் என்னும் பொருளது.  மோன் என்பது மகன் என்ற சொல்லின் திரிபாகும்.  தாம் சான்றாண்மையுடன் திகழ்ந்தது மட்டுமின்றிப் பிறதேயத்தார் சிறந்த பண்புநலன்கள் உடையாராய்த் திகழ்ந்த காலையும் அவர்களை மெச்சி நலல பெயரை அவர்கட்கு வழங்கத் தமிழர்கள் பின்வாங்கியதில்லை. மேலும் வாசிக்க:-


வறுமை என்பது கொடியது.  கற்றுவல்ல  சான்றாண்மை மிக்கப் புலவர்மாட்டும் வறுமை வந்துற்று அவர்கள்தமை வாட்டியதுண்டு. யாருமற்ற ஏழையும் அவ்வாறு வாடுதல் உண்டு. இவர்கட்கு வந்துற்ற வறுமையைக் கண்டு இவர்களை ஒருபோதும் இகழாமை கடைப்பிடித்து, இவர்களை " நல்கூர்ந்தார்" என்று தமிழர் சுட்டினர். இதை நல் என்ற அடைமொழி கொடுத்துத் தமிழர் குறித்தனர். இஃது மொழியினுள்ளே அமைந்து கிடக்கும் பண்பாட்டுக் கூறு ஆகும். நல்குரவு என்ற சொல்லையும் காண்க. கெட்டுப்போன நிலையையும் நல்ல என்ற அடைகொடுத்துக் குறிப்பவன் தமிழன். கெட்டது விரைவில் நல்லதாகவே மாறிடுதல் வேண்டுமென்பது அவன் தன் இறைவனை நோக்கிய வேண்டுதல் ஆகும். 

இவ்வாறே கெட்டுபோவதை அவன் நந்தல் என்றான்.  நன்மை+ து + அல்  என்று இதன் அமைப்பினைக் கூறினும் நல்> நன் > நன் து >  நந்தல் என்று கூறினும் அதுவே ஆகும். இது நல் தல் ஆகும், நன்றல் > நந்தல் எனினுமது. நன்மையை நினைக்க; தீமை விலக்குக என்பது தமிழர் கொள்கை.  கொடிய விடப்பாம்பையும் நல்ல பாம்பு என்பான் அவன்.

கம்பனும் சீதையை " நந்தல் இல் விளக்கம் அன்ன நங்கை" என்று வருணித்துள்ளமை காண்க. பிறனிடத்து அடைபட்டு வாடியவிடத்தும் நன்மையே கூறினான் கம்பன். அவன் புலமைக்கண் சான்றாண்மை பளிச்சிடுகின்றது காண்க.

அறிக மகிழ்க.

பெய்ப்பு -  பின்பு.


நகர் உலா

 தந்தையுடன் நகர் சுற்றிப் பார்த்த ஒரு பிள்ளை சொல்வது

போலும் இக்கவி:


உந்துவண்டி ஏறியே ஒய்யார மாயமர்ந்து

தந்தையுடன் சுற்றுவேன் பந்துபோல் ---- வந்த

சிறுநகைச் சீரால் மயக்கிவிரல் சுட்ட

ஒருநகர் முற்றும் வசம்'


தொங்கிருக்கை ஊஞ்சலில் தோய்ந்துநான் பேரரசி

இங்கிருக்க ஏற்றிலார் யாவருண்டு ---- நன்குநோக்காச்

செல்வார் திரும்ப வருவார்தம் கையசைக்கக்

கொள்வார்மெல் வாஞ்சையென் பால்.

உந்துவண்டி  -   ( கார்).

சிறுநகை -  புன்னகை

சுட்ட - காட்ட  (சுட்டிக்காட்ட)

நன்கு நோக்கா  -  நல்லபடி பார்க்காத

செல்வார் -  கடந்து போகிறவர்

வருவார் -  (குழந்தை இருக்குமிடம் தாண்டிச் செல்ல)

வருபவர்

கையசைக்க - (குழந்தையைக் கண்டு)  தம் 

கரங்களை  ஆட்ட 

மெல் - மென்மையான

என் பால்  -  என் மேல்

வாஞ்சை -  அன்பு



வெள்ளி, 1 ஜனவரி, 2021

2021 புத்தாண்டு வாழ்த்து விளக்கம்




வியாழன், 31 டிசம்பர், 2020

வருக புத்தாண்டே 2021



இருபதிரு பத்தொன்றே வருக நீயே

இனியநல்ல ஆண்டாக விரிக நீயே

இரவியொரு சுற்றார்ந்து அருகில் வந்தான்

இன்னுயிர்கள் எல்லாமும் வளர்ந்து நன்மை

பெறுகவென வாழ்த்துக்கள் சொரிந்து நின்றான்;

பேணிடுவம் வெம்மைதான் பெருகல் இன்றி.

அருந்தாய்மார் தந்தைமார் உறவோர் நண்பர்

அறிவாழ்வில் மக்கள்தாம் பிறங்க நன்றே.



வியாழன், 31 டிசம்பர், 2020

வருக புத்தாண்டே 2021



இருபதிரு பத்தொன்றே வருக நீயே -
இருபது இருபத்தொன்றே வருக நீயே.

இனியநல்ல ஆண்டாக விரிக நீயே
நீ இனிய ஆண்டாக  நல்ல ஆண்டாக விரிவுகொள்வாய்

இரவியொரு சுற்றார்ந்து அருகில் வந்தான்
- சூரியன் ஒரு சுற்றை முடித்துவிட்ட மீண்டும் தொடங்க
இப்போது பக்கத்தில் வந்துவிட்டான்.
இரவி -  ரவி :  சூரியன்.
இருள் அவி > இர் அவி > இரவி  ஆயிற்று. இருள் என்பதில் இர் 

சுற்றார்ந்து - சுற்றை  நிறைவு செய்து.

இன்னுயிர்கள் எல்லாமும் வளர்ந்து நன்மை
பெறுகவென வாழ்த்துக்கள் சொரிந்து நின்றான்;

எல்லா இனிய உயிர்களும் வளர்ச்சி பெற்று 
நன்மை அடையவேண்டும் என்று ஆசிகளை
உதிர்த்து நிலைபெற்றான்;

பேணிடுவம் வெம்மைதான் பெருகல் இன்றி.

உலகத்து வெம்மை பெருகிவிடாமல் நாம்
அதைக் காத்திடுவோம்.

{  உலகம் வெப்பமயம் ஆதலைக் காக்கவேண்டும்.
வேறு வெம்மைகள் தொடர்பு அற்றவை }  

அறிவாழ்வில் -  நாம் அறிந்த இந்த வாழ்வில்.

அருந்தாய்மார் தந்தைமார் உறவோர் நண்பர்

நமக்கு அரிதாய்க் கிடைக்கப்பெற்ற அரிய தாய்மாரும்
தந்தைமாரும்  உறவினர் நண்பர்களும்

அறிவாழ்வில் மக்கள்தாம் பிறங்க நன்றே.

மக்களும் நன்கு ஒளிவீச்சுப் பெறுக.


 இப்பாடலின் பொருள் மேற்கண்டவாறு.