சனி, 9 ஜனவரி, 2021

வர்மா என்ற பட்டப்பெயர்

 வர்மா என்பதன் சொல்லமைப்பினைக் காண்போம்.

அதியமான்  ம  லையமான்  சேரமான் ( சேரமான் பெருமாள்)  என்ற சொற்களை முன்னர் நீங்கள் எதிர்கொண்டிருந்தீர்கள்.  இச்சொற்களில் வரும் ~மான் என்பது மகன் என்பதன் திரிபு என்பர்.  பெருமகன் என்பதும் பெருமான்,  ( பெம்மான் ) என்று திரியும். எம்பெருமான் என்பதும் எம்மான் ஆகும்.

மன்னர்கள் என்பவர்கள் ஓர் குலமாக வாழ்ந்து மறைபவர்கள். தாத்தா, அப்பன் பிள்ளை என அவர்கள்  அடுத்தடுத்து மன்னர்கள் ஆவர். ஆகவே  ஒரு வழியாக வருபவர்கள் இவர்கள். சிலவேளைகளில் இவர்களின் பட்டப்பெயர்கள் இத்தகு தொடர்வரவைக் குறிக்கக் கூடியதாய் இருக்கும்.  

(தொடர்) வரு அரசு பரம்பரையினர்,  வருமகன் >  வருமான் >  வருமா >  வர்மா என்று தங்களைக் குறித்துக்கொள்வது  அவர்களுக்குப் பெருமிதம் தரும்.  அதில் ஆண்டுகள் பல கடந்தபின்,  இச்சொற்களின் புனைவு வரலாறு மறக்கப்பட்டபின் இவை மிகுந்த உயர்வும் மதிப்பும் பெற்றுவிடும்.  இதுபோன்ற பட்டப்பெயர்கள், மரபுப்பெயர்களில்  பொருள் தெரியாவிட்டால்தான் வியந்துபார்த்துப் போற்று நிலையை  அடையும். இவ்வாறுதான் பல பெயர்கள்  உயர்வு பெற்றன.  எடுத்துக்காட்டு: காந்தி என்ற பெயர். நறுமணப்பொருள் விற்போர் என்று பொருள்படும் இச்சொல்லை பலர் பெயரில் ஒட்டிக்கொள்வதைக் காண்க.

இவ்வாறு வர்மா என்பது குடும்பத் தொடர்வரவு உடையோர் என்ற பொருள் உடையது.

சார்ந்துவாழும் பூசாரிமக்கள்,  சார்+ மான் >  சார்மா > சர்மா என்று வரும். ஓர் அரசரைச் சார்ந்து இவர்கள் பூசை முதலியன செய்து பெருநலம் பெற்றவர்கள் என்பது பெயர் காட்டுவது. முதலெழுத்துக் குறுகிய சொல்.  சார் > சர்.

chaar+maan > chaar + maa > shar maa > sharma.

இதனையும் காண்க:  https://sivamaalaa.blogspot.com/2012/06/blog-post.html

இவை விழிப்பத் தோன்றாத சொற்கள்.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்.








ர்


கருத்துகள் இல்லை: