ஞாயிறு, 17 ஜனவரி, 2021

சொல்லாக்கத்தில் காரணம் அறிதல்.

 ஒரு சொல்லை அமைப்பதற்கு அச்சொல் அமைக்கப்படவேண்டியதன்  காரணமும் முதன்மை யானதாய் இருக்கக் கூடும். ஆய்வாளர் காரணங்களையும் அறிந்துகொள்வது வேண்டற்பாலதே ஆகும்.

பெரும்பாலான பரத்தையர் அல்லது பரத்தமையைத் தொழிலாகக் கொண்டு வாழ்வோர்,  அவ்வாறு அழைக்கப்பட்டதற்குக் காரணம்,  அவர்கள்  ஆடவர் ஒருவர்க்கு மேற்பட்டவரிடமோ அல்லது பலரிடமோ பரந்து ஒழுகியமைதான். இதனினும் விரிந்த முறையில் பலரைச் சார்ந்து வாழ்ந்து வந்த பெண்களையே விபசாரிகள் என்றனர்.  இது ஒரு சொற்சுருக்கமுறையில் எழுந்தது:  வி = விரிந்து, ப =பரந்து,  சார் -  பிறரால் ஆளப்பட்டு   ,  வாழ்ந்தவர்கள். வி+ப+ சார் + இ. = விபசாரி ஆயிற்று. பலவித ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டு, பிறனைத் தன்வயப்படுத்திப் பொருளைப் பெறுபவள்  வேய்+ இ = வேயி> வேசி. வேய்தலாவது இங்கு அணிகளால்,  மணம்தரும் பூச்சுக்களால் கவர்பவள். ஆயின் இந்தச் சிறப்புப் பொருள்கள் நாளடைவில் மறக்கப்பட்டு இச்சொற்கள் ஒருபொருள் எய்தின..  எல்லாவகை விலைமாதரும் மைதீட்டிக் கொண்டனர் என்று தெரிகிறது:"  மைவிழியார் மனையகல்" என்றார் ஒளவையார்.  திருக்குறள் இவ்வகைப் பெண்டிரை > "வரைவின்மகளிர்"  என்று குறிக்கும்.

எந்த வகையான குற்றங்களைத் தடுக்க இந்தச் சட்டம் வந்தது என்று சிலவேளைகளில் நீதிமன்றங்கள் ஆராய்வதுண்டு.  அதை இன்னோரிடுகையில் காணலாம்.  அதிலிருந்து சொல்லமைத்தலுக்கு எதுவும் விளக்கம் அறிய முறைகாண முடியுமா என்று பார்ப்போமே.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்.

கருத்துகள் இல்லை: