புதன், 20 ஜனவரி, 2021

உனது அமைதி.

 அதோ அந்தக் கடலைப் பார்!

அது அமைதி இல்லாமல் ஓயாமல்

அலைந்துகொண்டே இருக்கிறது.

அதனுடன் போய் கலந்துவிட நினைக்கிறாயா?

நீயும் அலைந்துகொண்டுதான் இருப்பாய்.

அலுவல் ஒன்றும் உனக்கில்லை அங்கே!

உன்னை அது கண்டுகொள்ளப் போவதில்லை,

அது அலைந்துகொண்டுதான் இருக்கும்.

இதுவே இடமாகும் உனக்கு,

இங்கேயே இருந்துவிடு.

உன் அருகிலே உன் அமைதி இருக்கிறதே.

கருத்துகள் இல்லை: