வெள்ளி, 1 ஜனவரி, 2021

2021 புத்தாண்டு வாழ்த்து விளக்கம்




வியாழன், 31 டிசம்பர், 2020

வருக புத்தாண்டே 2021



இருபதிரு பத்தொன்றே வருக நீயே

இனியநல்ல ஆண்டாக விரிக நீயே

இரவியொரு சுற்றார்ந்து அருகில் வந்தான்

இன்னுயிர்கள் எல்லாமும் வளர்ந்து நன்மை

பெறுகவென வாழ்த்துக்கள் சொரிந்து நின்றான்;

பேணிடுவம் வெம்மைதான் பெருகல் இன்றி.

அருந்தாய்மார் தந்தைமார் உறவோர் நண்பர்

அறிவாழ்வில் மக்கள்தாம் பிறங்க நன்றே.



வியாழன், 31 டிசம்பர், 2020

வருக புத்தாண்டே 2021



இருபதிரு பத்தொன்றே வருக நீயே -
இருபது இருபத்தொன்றே வருக நீயே.

இனியநல்ல ஆண்டாக விரிக நீயே
நீ இனிய ஆண்டாக  நல்ல ஆண்டாக விரிவுகொள்வாய்

இரவியொரு சுற்றார்ந்து அருகில் வந்தான்
- சூரியன் ஒரு சுற்றை முடித்துவிட்ட மீண்டும் தொடங்க
இப்போது பக்கத்தில் வந்துவிட்டான்.
இரவி -  ரவி :  சூரியன்.
இருள் அவி > இர் அவி > இரவி  ஆயிற்று. இருள் என்பதில் இர் 

சுற்றார்ந்து - சுற்றை  நிறைவு செய்து.

இன்னுயிர்கள் எல்லாமும் வளர்ந்து நன்மை
பெறுகவென வாழ்த்துக்கள் சொரிந்து நின்றான்;

எல்லா இனிய உயிர்களும் வளர்ச்சி பெற்று 
நன்மை அடையவேண்டும் என்று ஆசிகளை
உதிர்த்து நிலைபெற்றான்;

பேணிடுவம் வெம்மைதான் பெருகல் இன்றி.

உலகத்து வெம்மை பெருகிவிடாமல் நாம்
அதைக் காத்திடுவோம்.

{  உலகம் வெப்பமயம் ஆதலைக் காக்கவேண்டும்.
வேறு வெம்மைகள் தொடர்பு அற்றவை }  

அறிவாழ்வில் -  நாம் அறிந்த இந்த வாழ்வில்.

அருந்தாய்மார் தந்தைமார் உறவோர் நண்பர்

நமக்கு அரிதாய்க் கிடைக்கப்பெற்ற அரிய தாய்மாரும்
தந்தைமாரும்  உறவினர் நண்பர்களும்

அறிவாழ்வில் மக்கள்தாம் பிறங்க நன்றே.

மக்களும் நன்கு ஒளிவீச்சுப் பெறுக.


 இப்பாடலின் பொருள் மேற்கண்டவாறு.




கருத்துகள் இல்லை: