வியாழன், 16 மே, 2024

A P Mani Birthday


 நம் எழுத்தாளர் அ.மா. பிள்ளை அவர்களின் பிறந்த நாள் விழா இன்று  16 மே அன்று கொண்டாடப் பட்டுப் பலர் கலந்துகொண்டனர்.  அனைவருக்கும் நன்றியும் வணக்கமும்.

ஏற்பாட்டாளர்:  திரு குமரன் பிள்ளை குடும்பத்தார்

                     ```        ஆசிரியர்  The Independent Singapore  




விருந்து தொடங்குமுன்......

புதன், 15 மே, 2024

சங்கல்பம் தன்முனைப்பு ஈடுபாடு.

தொடங்குரை:  யாகம், ஓமம்

இருபத்தொரு வகை யாகங்கள் உள்ளன என்று அறிகிறோம். ஓமம் செய்தல் ஓமம் வளர்த்தல்  வேள்விசெய்தல் என்றும் சொல்லப்படும். யாகம் ஓமம் என்பவை ஒருபொருட் சொற்களாகக் கருதப்படுதலும் உளது.  ஓமம் என்பது ஒரு விதையைக் குறித்தலோடு, ஓமத் தீ வளர்த்தலையும் குறிக்கும். இச்சொல் தமிழில் பல்பொருட் கிளவியாதலின், யாகம் குறிக்கும் ஓமம் வளர்த்தலை ஹோமம் என்று அயலொலி ஏற்றிக் கூறினர். இது பொருள்வேறுபாடு கருதியதே ஆகும்.  ஓமம் என்ற விதையைக் குறிக்காதபோது அதை ஹோமம் என்று வேறுபடுத்தி ஒலித்தனர். ஓமம்வளர்த்தல் என்று விரித்தால் இந்தப் பொருள்மயக்கம் நீங்கும்.

யாகம் சொல்லமைப்பு:

யாகம் என்ற சொல் தமிழ்ச்சொல்தான்.  பூசை அல்லது தொழுகை மொழியும் திரித்து வழங்கிய தமிழே ஆதலினாலும்,  வீட்டில் தமிழ்ப் பேசியவனே பூசையின்போது தமிழ்த் திரிபுகளுடன் பரகதத் திரிபுகளையும் கலந்து  பூசையிற் பயன்படுத்திக்கொண்டான் என்பதனாலும் இத்திரிபுகள் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளையே குறித்தன.  பர கதம் என்றது பிராகிருதம் என்ற வெளிமாநிலத்து மொழித்திரிபுகளை.  பர கதம் என்றால் பரந்து பயன்பாடுகண்ட ஒலிமுறைய. பிராகிருதம் என்றது அப்பெயரைத் திரித்துக் கூறிக்கொண்டது ஆகும். யாகம் என்றது யாத்தல் என்ற கட்டுதல் பொருட் சொல்லில் உண்டான சொல்லமைப்பு.  கட்டுதலாவது தீவளர்த்தலைக் கட்டமைப்புச் செய்தல் என்ற பொருளதாகும். யா+ கு + அம் என்பது யாகம் என்றாகி யாத்துக் கட்டுங்கால் அதனுடன் இணைந்து (கு)  அமைந்த முறைத் தரவுகள் ( அம்) என்பதைக் குறித்தது.  நிறுவி அதை முடித்தல் முதல் உள்ள அனைத்தையும் குறிக்கக் கு என்ற சேர்வுப் பொருட்குறிப்பும்  அம் என்ற இறுதி அமைப்பு முழுமைபெறுதல் பொருளும் உள்ளமைந்தன. இவற்றின் பொருள் அறிந்துகொள்க. வேட்டல் விரும்புதலாம். வேள்வி என்பது அது.  

விரும்பிச் சேரும் சடங்கு.  சங்கல்பம்  (சங்கலப்பம்)

 இறைவழிபாட்டுச் சடங்குகளின் தொடக்கத்திலும், அதில் பங்குபெறுகிற முன்மாந்தன், இதில் நான் பங்குகொள்வதுடன் இந்த சடங்கினை நிகழ்த்துகின்ற பூசாரியை நான் அவ்வாறே பணிக்கின்றேன் என்னும் உரையைச் செவிப்படுமாறு சொல்லவேண்டும். எனவே இந்து மதத்தில் ( இது தற்காலப் பெயர்) இது பலகாலும் கடைக்கப்படிக்கப்பட்டு வந்தது. இந்த சடங்குகளில் யாரும் வற்புறுத்தப்படவில்லை.  ஒருமுறை கோயிலில் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டால் நீர் எல்லாவற்றிலும் வற்புறுத்தப்படுகிறீர் என்ற பணிப்புமுறை இந்து மதத்தில் இல்லை. இது தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதற்குச் "சங்கல்பம்" செய்தல் எனப்படும். இதைச் சங்கற்பம் என்றும் எழுதுவர்.  விரலிலும் தருப்பை அணிவிக்கப்படும்.

இச்சொல் சங்கலப்பம் என்றே விடப்பட்டிருந்தால் இதில் தெளிவு மிகுந்திருக்கும்.  ஆனால் சொல்லமைப்பில் புதுமை இராது. தங்கலப்பம் என்றே விட்டிருக்கலாமே! அதுவும் ஓர் உத்திதான்.  புதுச்சொல் ஆக்கத்திற்குத் திரிபுகள் தேவைப்பட்டன.

பூசாரிகள் சடங்குகளை நடைபெறுவித்தாலும், உம் இறைவனைக் கண்டுபிடித்து மேன்மை கொள்ளுதல் உம்முடைய சொந்த முயற்சி ஆகும். வேறொரு முறையில் நீர் இறைவனைக் கண்டுகொள்வீராயின், உம்மை யாரும் அழைக்கவுமில்லை,  வலிந்து பணிக்கவுமில்லை. விசுவாமித்திரன் என்ற முனி உள்பட எல்லோரும் சொந்த முயற்சியே செய்தார்கள். நீ இதைச் செய்யவேண்டாம் என்று தடுத்த பிறர்பற்றிப் புராணங்கள் கூறியுள்ளன. நீ செய்க, இல்லையென்றால் தலையை வெட்டிவிடுவேன் என்று யாரும் சொன்னதாக யாம் அறியவில்லை. 

ஆகவே சங்கற்பம் என்ற சொல் முதன்மை பெறுகிறது. இதன் தமிழ் மூலங்களைப் பார்க்கின்ற வேளையில், ஏனை மொழிகளில் பிற மூலங்கள் கூறப்படும் என்பதை அறிக.

தம் + கல+ பு + அம் :  தாம் கலந்துகொள்வது.

தம் + கல் + பு + அம் >  தங்கல்பம் > சங்கல்பம் > சங்கற்பம்.  இவ்விறுதி புணர்ச்சித் திரிபு. தகரம் சகரம் ஆகும். இது திரிபு.

இதில் கல என்பதன் அடிச்சொல் கல் என்பதுதான். கல் என்பதில் அ என்ற பன்மைச் சொல் கலந்து கல என்றாகி கலத்தல் என்ற தொழிற்பெயரானது.

வந்தன சென்றன என்பவற்றில் அ என்ற பன்மைச்சொல் கொண்டு முடிந்தமை காண்க.  இடைச்சொல்லும் ஒரு சொல் என்பதே இவண் கருத்தாகும்.

கலப்பு அம் > கலப்பம் > கற்பம் என்று முடிக்க. கல என்பதில்  அகர கெடுக்க ( அல்லது எடுக்க). கல் என்பதே மிஞ்சுவது காண்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


திங்கள், 13 மே, 2024

பத்திரம் என்ற சொல்.

 பத்திரம் என்பது.

பற்று > பத்து.

இரு  

அம்

எல்லாம் இணைக்கப் பத்திரம் ஆகிறது.

ஒருவன் பற்றி வைத்திருக்க வேண்டிய பொருள் என்று இதிலிருந்து தெரிகிறது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

ஆவணங்கள் நூல்கள் பத்திரம்

எம்மிடம் இருந்த சங்க இலக்கியத் தமிழ் நூல்கள் அனைத்தும் காணாமற் போய்விட்டன. மலேசியாவில் இருந்து எமது சேமிப்பறைகளிலிருந்து இவை தொலைந்தன. சில சட்ட நூல்கள், மென்பொருள் நூல்கள் மட்டுமே உள்ளன. நாம் உணர்ந்துகொள்ள வேண்டிய தென்னவென்றால், எம்மிடம் அது உள்ளது இது உள்ளது என்று மற்றவர்களுக்குப் பரப்புரை செய்துகொண்டே இருத்தலாகாது. அவர்களுக்கு ஒரு வேகம் வந்துவிட்டால் அவர்களில் யாராவது சதிவேலைகள் செய்து அவை இருந்த இடம் தெரியாமல் செய்துவிடுவார்கள். யார் எப்படிச் செய்தார்கள் என்று கண்டுபிடிக்கும் கட்டமைப்புகள் நம்மிடம் இல்லை. இன்னும் காணாமற் போனவை எவை எவை என்று இங்குக் கூறவில்லை.  அதனாற் பயனும் இல்லை.

இவை போன்றவை அழிக்கப் படுவதற்கான " நல்ல"  நேரம்  ஒரு போர்க்காலம் தான்.  இப்போது போர்கள் வந்துவிடுமோ என்ற அச்சம் நிலவும் காலமும் இதுவாகும்.  மகுடமுகி நோய்ப்பரவலும் ( கோவிட்19)  ஒரு போர்தான். அது போர் என்று தெரியாமலே உலகம் அதில் உழன்று மேல்வந்துள்ளது.

ஓர் இருநூறு ஆண்டுக்காலத்துக்கு இலங்கையிலிருந்து வெளிவந்த தாளிகைகளின் சேமிப்புகள் கொண்ட தமிழ் நூலகம் அழிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

ஆவணங்களையும் பத்திரமாக வைத்திருங்கள்.

மெய்ப்பு பின்னர்.


அத்திறம் > அத்திரம் > அஸ்திரம்.

அம்பு அஸ்திரம் என்ற சொற்களை நாம் விரித்து ஆய்ந்துள்ளோம்.  இவற்றை முன்னர் நீங்கள் படித்திராவிட்டால் இங்குச் சென்று வாயிக்க- ( வாசிக்க)லாம்.

சொடுக்குக:  https://sivamaalaa.blogspot.com/2020/08/blog-post_20.html

இப்போது இன்னொரு வகையில் அஸ்திரம் என்ற சொல்லை அறிந்துகொள்ள முனைகிறோம். மேற்கண்ட இடுகையில் அஸ்திரம் என்பது தூரத்திலிருந்து அடிக்கும் வழி என்பதை அவ்வளவாகப் பெரிதுபடுத்தவில்லை.  இப்போது அடியை அல்லது உதையை மையமாக வைத்து அதே சொல்லைக் காட்டுவோம். தமிழிலே ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில் இதைக் காட்டலாம் என்பதை முன்னரே நாம் கூறியுள்ளோம். இங்குள்ள இடுகைகளில் சிலேடைகள்போல சொற்பிறப்பைக் காட்டுதலைத் தவிர்த்துள்ளோம். சிலவேளைகளில் தமிழ்மொழியில் வளத்தையும் வசதியையும் விரித்துரைப்பது அவசியமாகிறது.

அஸ்திரம் என்ற சொல்லையே இன்றும் எடுத்துக்கொள்கிறோம்.

முதலில் இறுதல் என்ற சொல்லைக் கவனத்தில் கொண்டுவருகிறோம்.  இறுதல் என்றால் முடிதல். இறு என்பதனுடன் தி என்ற விகுதி சேர இறுதி என்ற சொல் பிறந்து முடிவு என்ற பொருளைப் பயக்கிறது.  இன்றைக்கு உள்ள அஸ்திரங்களை அல்லது எறிபடைகளை ( missiles ) கொண்டு சில நொடிகளிலே பல ஊர்களை அழித்து பல்லாயிர அல்லது பல்லிலக்கவரை சாம்பலாகச் செய்துவிட முடியுமன்றோ? இத்தகைய திறனை அதே சொல்லில் காட்டுதல் கூடுமோ?  பார்க்கலாம். அஸ்திரம் என்ற சொல்லையே தேர்ந்தெடுப்போம்.

இறு என்ற சொல்லிலிருந்துதான் இற இறத்தல் என்ற சொல்லும் வருகிறது.  பல இறப்புகள் நிகழும் என்பதால் இறம் என்பது பொருத்தமான சொல்லிறுதி ஆகும். இறம் என்பதை இரம் என்று வைத்துக்கொள்ளலாம்.

அடித்து + இறு + அம் > அடித்திறம் > ( டி யை விலக்க) >  அத்திறம் > அத்திரம்> அஸ்திரம் என்ற அதே சொல் வந்துவிட்டது.

அழித்து அல்லது அடித்து இறுதல்.

அழித்திறம் >  அத்திறம் > அஸ்திரம் என்றும்  ஆகும்,  ழி விலக்கப்பட்டது.

பூசைமாந்தர் செய்ததுபோல இச்சொல்லை நாம் மாற்றி அழிப்பை அல்லது அடித்தலை மறைவாக்கியுள்ளோம்.

அஸ்திர என்பது  astro என்ற சொல் போலவே இருப்பதால் மிக்க நன்று.

இப்போது ஏவுகணை, எறிபடை என்பனவும் அறிவோம். பறக்குத்தி, பறவெடி, வெடிப்பறவி என்று பல உண்டாக்கலாம்.  சொல்லுக்கு நமக்குப் பஞ்சமில்லை. மனநிறைவு தருகிறதா என்பதே அறியத்தக்கது,

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

ஞாயிறு, 12 மே, 2024

அம்மாவின் அருள்.

அம்மாவின் அருளால் அவருக்குப் பெருவெற்றி

இம்மா நிலத்தவர்க் கிருந்திடும் விரிவியப்பே, 

சனி, 11 மே, 2024

சாதாரணம், சாமானியம், சாமான்.

 வேண்டுதன்மை*,  கிடைப்பு**  என்ற இரண்டுமே எப் பொருளும் விலை உடையதாய் உள்ளதா என்பதற்கு விடைதருவனவாம். ஒருபொருள் தேடுவாரற்றதாய் இருக்குமானால் அதை யாரும் வேண்டுமென்னார். இயல்பாய்க் கிட்டும் பொருட்களும் சில தேவையுடையவாகிவிடும் நிகழ்வுகள் ஏற்பட்டுவிடலாம்.  அப்போது அவை விலையுடையவாகும். நாம் பொருட்களில் சிலவற்றைச் "சாதாரணம்" என்று குறிக்கிறோம்.  சாமான், சாமானியம்  என்றும் குறிக்கிறோம்.  இச்சொற்களைப் பற்றி யாம் சில குறிப்புகளே தருவோம்.

சமஸ்கிருதம் என்ற பூசைமொழியும் இந்தியாவிலே தோன்றி வளர்த்து விரிவாக்கப்பட்ட  மொழியே ஆகும்.  இதிலிருந்தும் தமிழிலிருந்தும் பல சொற்களை இலத்தீன் மொழி அறிஞர்கள் கற்றுக்கொண்டு தங்கள் (அப்போது) புதுமொழியை விரிவாக்கினர். உரோமப் பேரரசு அமைந்துகொண்டிருந்த அக்காலத்தில் ஓர் குறுகிய இடத்தில் வழங்கிய வட்டார மொழியாகிய இலத்தீனம், ஒரு பேரரசுக்கு ஏற்ற மொழியாக விரிவு செய்யப்பட்டுப் பயன்பாடு கண்டது. பலவகைகளில் புதுச்சொற்கள் படைக்கப்பட்டன. பிரிட்டீஷ் அரசு விரிந்த காலத்தில் ஆங்கிலோ செக்சன் மொழியாகிய ஆங்கிலமும் இவ்வாறே பல புதிய சொற்களைக் கடன் கொண்டு விரிவு செய்யப்பட்டது.பழைய பிரித்தானிய மொழி நசுக்குண்டு இறந்தது.  ஆனால் தமிழ் அரசு மொழியாய் ஆன பண்டைக் காலத்தில் இத்தகைய வசதி தமிழுக்குக் கிடைக்கவில்லை.  அதனால் அது தனக்கு வேண்டிய சொற்களைத் தானே உண்டாக்கிக்கொண்டது. அது தனித்தன்மை உடைத்தாய் இருந்து செழித்ததற்கு அதுவே காரணம்.  இன்று ஆங்கிலச் சொற்கள் நமக்குக் கிட்டுதல்போல் அந்தப் பழங்காலத்தில் பிறமொழிச் சொற்கள் நம் முன்னோர்க்குக் கிடைக்கவில்லை. அதனால் அது  தம்> தம் இழ் > தமிழ் ஆனதென்பதுண்டு. தனித்தியங்கிய மொழி.  விரிந்த பொருளிலக்கணம் உடைய மொழியாய்த் தமிழ் பரிணமித்தது. தமிழர்கள் அடிக்கடி போரிலீடுபட்டமையால் வரையறைகள் பல உண்டாகி எப்படிப் போர்புரிவது, எப்படி அதைப் பாடுவது என்பவற்றுக்கெல்லாம் இலக்கணம் உண்டாயிற்று.

சாமான் என்ற சொல்,  சாதல், மானுதல் என்ற இரண்டு சொற்களாலான ஒன்றாகும்.  ஒரு விதை போலும் உயிருள்ள பொருள் காயவைத்துச் சற்று சிறிதாகி அதுபோன்ற  விதைகளுடன் மளிகைக் கடையில் எடைக்கணக்கில் விற்கப்படுகிறது.  இவற்றை மளிகைச் சாமான் என்று கூறுகிறோம்.  சா - உயிரற்ற , மான் - மானும் ( ஒக்கும் ) பொருளுடன் விற்கப்படுவது, சா என்பது ஏவல் வினை,  மான் என்பதும் ஏவல் வினை. இரண்டு ஏவல் வினைகளை இணைத்துப் புனையப்பட்ட சொல். அருமையான அமைபு ஆகும்.  இது ஜாமான் அன்று,  சாமான் என்பதுதான்.


இவற்றையும் உசாவி அறிக:-


https://sivamaalaa.blogspot.com/2017/09/blog-post_4.html  சாமான்

https://sivamaalaa.blogspot.com/2022/08/blog-post_3.html   சாதாரணம்

https://sivamaalaa.blogspot.com/2017/09/blog-post.html       சாமானியம்.

உங்கள் கருத்துகளையும் பின்னூட்டம் இடலாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்


குறிப்புகள்:

வேண்டுதன்மை < வேண்டுதல்+ மை

கிடைப்பு <  (கிடைத்தல்)

புதன், 8 மே, 2024

கோவிந்தன் கோயிந்தன் சொல்

 தெய்வப்பெயராகிய கோவிந்தன் என்பதையும்  கோயிந்தன் என்பதையும் இன்று ஆய்ந்தறிந்து கொள்வோம். 

பல்வேறு இந்திய மொழிகளில் இது சில திரிபுகளை அடைந்து வழங்கும். கோவின்ட, கோபின்ட, கோபின்ட். கோவின்ட் என்பன சில திரிபுகள். பகரத்துக்கு வகரம் வருவது பல மொழிகளிலும் காணப்படும் திரிபுவகை. இந்தத் திரிபுகள் சொல்லில் எந்தக் கருதத்தக்க  பொருள் மாற்றத்தையும் உணடாக்கிவிடவில்லை.

கோவிந்தன் என்றால் மாடுகள் மேய்ப்பவன் என்ற பொருள் தரப்படுகிறது.  கண்ணன் அல்லது கிருஷ்ணன் இளமையில் மாடுமேய்க்கும் வேலையைப் பார்த்ததனால் இப்பெயர் பெற்றான் என்பர். ஆனால் கண்ணன், கிருஷ்ணன் என்ற பெயர்கள் அவன் நீல அல்லது கருப்பு நிறத்தினன் என்பதனால் ஏற்பட்டது என்பர். மாடுகள் மேய்ப்பவன் என்ற  பொருள் தமிழுக்கும் ஏற்புடையதே.

கோ + இன் + து  + அன்

கோ = மாடு(கள்)

இன் - உடைமை காட்டும் இடைச்சொல். உருபாகவும் வருவது.

து -  இடைநிலை.

ஆண்பால் விகுதி.

ஆகவே மாடுகளை உடையோன் என்பது பொருளாகிறது.

இவ்வாறு பிரிக்காமல் வேறு விதாமாகப் பிரித்து இன்னும் சிறந்த பொருள் கிட்டுகிறதா என்று பார்க்கலாம்.  ஏனென்றால் நெடுங்காலமாகப் பலவாறு பிரித்த சொல்தான் இது. தன் என்ற தமிழ்ச்சொல்லே இறுதியில் நிற்பதாகக் கருதி,  தன் கோக்களே (  மாடுகளே) தான் மேய்த்தவை என்ற பொருள் விளங்குபடியாகத் தன் என்ற சொல்லே இறுதி என்று முடிக்கலாம்,  எல்லாச் சொற்களுமே ஒரு விகுதியில்தான் முடிதல் வேண்டும் என்று எந்த இலக்கணமும் விதிக்கவில்லை. எனவே தன் என்பது தன்னைக் குறிப்பதாக, அதாவது பரமாத்மாவைக் குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம். உண்மையில் இதன் பொருள் என்னவென்றால் பரமாத்மா தன் பற்றர்களுக்குத் தானே வழிகாட்டி ஆகிறான் என்பதுதான். மாடுகள் என்பவை பற்றுடன் தன்னில் வந்து சேர்ந்தோர் ஆவர். இவ்வாறு அணியியற் பொருளிருக்கின்ற படியால் தன் என்று விடுதலும் சிறப்பே ஆகும். பற்றர்களைப் பின்னர் பெண்காளாக்கியது ஏனென்றால் பற்றின் ஆழத்தை வெளிக்கொணர்வதற்காகத் தான்.  ஆகவே மாடு பெண்கள் என்பவை எல்லாம் பற்றின் திறமும் இறைவனின் ஏற்பினையும் காட்டுவதே நோக்கமாகும்.

கோயிந்தன் என்றும் கோவிந்தன் என்றும் யகரம் வகரம் ஆகிய இரு உடம்படுமெய்களும் வரும், இவற்றுள் பிறமொழிகள் வகரத்தையே தேர்ந்தெடுத்துக்கொண்டு உள்ளன.

இன் என்பதற்கு இனிமை என்ற பொருளை எடுத்தால்  கோக்களுக்கு இனியவன் கண்ணன்;  கண்ணனுக்கு இனியவை கோக்கள் என்று இன் என்பது ஒரு நடுநாயகமாய் ஆய்விடும் சொல்லாகிவிடும்.  இது தமிழால் மட்டுமே வரும் பொருள் . இது வெகுமானிக்கத் தக்கதாகும்.

இடையனும் மாடுகளும் என்னும் பொருள்மரபு பிற மதங்களிலும் பரவி நலம் விளைத்துள்ள கருத்தியல் ஆகும்.  இதற்காக நாம் மகிழ்ச்சி அடையலாம்

கருநிறத்தோனாகிய கடவுள் கண்ணன், வடநாட்டில் கொண்டாடப் பட்டாலும் ஒரு காலத்தில் தமிழர் நாவலந்தீவு முழுமையும் பரவியிருந்தனர் என்பதைக் காட்டும் அடையாளமாகக் கருதுவதற்குக் காரணமுள்ளதென்பதை அறிக .

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.





தச்சுப் பொருட்கள் காத்து உலகுகாப்பீர்.







எழுசீர் விருத்தம் 


அச்சுப் புரைய அழகைச் தெளித்தார் அருகினில்  வைத்தார்  நமக்குநல்ல

தச்சுப் பொருட்கள் சளிநோய்க் கடுங்கட்  டுகளால் கெடுதல் அடைந்துபின்னே

வச்சுப் பயன்கொள் தரமே இலாமல் எடுத்தே எறிய  முனைந்தகாலை,

எச்சம் இவற்றை  அழகாய் உருப்படுத்  தித்தரு வேனே எனத்துணிந்தார்.


துணிந்தநற் றச்சரும் சின்னாள் அவற்றை இழைத்தார் அழகுத்  திரவமிட்டார்

அணிந்த திலகத் தரிவை நிகர்த்த பொலிவோ டிவற்றைச்  செய்துதந்தார்.

பணிந்தே இவைதமை எம்மிடம் சேர்த்தார் படத்தினில் காண்பிரோ எம்முடனே

இணைந்தே செயல்பட வாரீர் மரந்தமைக் காப்பீர் திருந்தும்  எழுமுலகே.


அச்சுப் புரைய --   அச்சுப்  போன்ற;  அழகைத் தெளித்தார் -  காட்சிக்கினிமையை உண்டாக்கினார்;  அருகினில்  வைத்தார் -  எம்மெதிரில் எடுத்து வைத்துக் காட்டினார்;   நமக்குநல்லதச்சுப் பொருட்கள் - இவை நமக்கு நல்ல மரவேலைப் பொருட்கள் ஆயின;    சளிநோய்க் கடுங்கட்  டுகளால் கெடுதல் அடைந்துபின்னே -  சளி நோய் காரணமாக கவனிக்க முடியாமல் கெட்டுவிட்ட பிற்காலத்து; வச்சுப் பயன்கொள் தரமே இலாமல் எடுத்தே எறிய  முனைந்தகாலை--- பயன்பட முடியாமல் போய் அப்புறப்படுத்த வேண்டிய நிலை வந்துற்ற காலத்தில் ; எச்சம் இவற்றை  அழகாய் உருபபடுத்  தித்தரு வேனே எனத்துணிந்தார்.-  எடுத்தெறிந்தவை போக இவற்றை அழகுபடுத்தி எமக்களிப்பேம் என்று துணிவு கொண்டார்.

துணிந்தநற் றச்சரும் சின்னாள் அவற்றை இழைத்தார் ---- அழகு படுத்தத் துணிந்த அவரும் சில நாட்களில் அவற்றை அழகு படுத்தினார்; அழகுத்  திரவமிட்டார் -- அழகிய திரவப் பூச்சு செய்தார்; அணிந்த திலகத் தரிவை நிகர்த்த பொலிவோ டிவற்றைச்  செய்துதந்தார். -  ஒரு பொட்டு அணிந்த பெண்ணைப் பார்த்த அழகைப் போல இவற்றை கவினாக்கினார்; பணிந்தே இவைதமைஎம்மிடம் சேர்த்தார் -  மிக்கப் பணிவுடன் இவற்றை எம்மிடம் முன்னிலைப் படுத்தினார்;  படத்தினில் காண்பிரோ ---  படத்தில் பாருங்கள் ; எம்முடனே இணைந்தே செயல்பட வாரீர் -  நீங்களும் எம்முடன் சேர்ந்து கொள்ளுங்கள்;  மரந்தமைக் காப்பீர் -  இயற்கையில் வளரும் மரங்களைக் காப்பாற்றவேண்டும்;   திருந்தும்  எழுமுலகே.- அப்போது உலகம் திருந்தும்.

எச்சம் -  எறிந்தன போக மிஞ்சியவை. வச்சு - வைத்து, பேச்சுவழக்குச் சொல். காண்பீரோ என்பது காண்பிரோ என்று குறுகிற்று.

புதிய புதிய மரச்சாமான்கள் வாங்கிவைத்தால் அவற்றைச் செய்ய பல மரங்கள் தேவைப்பட்டு, காடுகள் அழியும். காடுகளைக் காக்க முனையவேண்டும். அதுவே கவிதையின் செய்தி.







அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

சாமான் கள் என்று கள்ளைத் தனியாகத்
தான் எழுதமுடிகிறது. உடனே திருத்தினால்
அது சாமாங்கள் என்று தானே திருந்திக்கொள்கிறது.
(தன்திருத்தம்), ஒருநாள் கழித்து இவற்றை ஒன்று சேர்த்தல்:
அப்போது இந்தத் தொல்லை வரவில்லை.

திருத்தங்கள் உடன் நடைபெறா என்று உணர்க.

திங்கள், 6 மே, 2024

அட்சரமும் சரசுவதியும்

 இந்நாட்களில் சரம் என்ற சொல் பெரிதும் பேசுவோரால் அருகழைக்கப்படுவதில்லை.  ஒருகாலத்து அது கவர்ச்சிச்சொல்லாய்ப் பேசுவோரிடை இருந்தது,  அட்சரம் என்ற சொல்லில் அது இருக்கிறது. இவற்றைச் சரமாக எழுதி அழகுபார்ப்பதற்குத் துணைப்பொருட்கள் சிலவே இருந்தன.  சரம் ஒரு தேவியினால் சாத்தியமாயிற்று என்று நினைத்தனர்.  அந்தச் சரம் என்ற சொல்லைப் பயன்படுத்தியே அவளையும் அழைத்து அறிந்துகொண்டனர் அவள் சொந்தமாகவே அங்கு வந்துவிட்டவள். சரத்தில் தானே தோன்றியவள் என்ற பொருட்பட அவளுக்குப் பெயரும் இட்டனர். பிறவிப்பயன் என்பதென்ன?  இதை அறியானாயின் அவன் மடையன்.   ஆனால் இவர்கள் மிக்க அறிவாளிகள். மகிழ்வுக்கோ குறைவில்லை.

பல சிறு கட்டிகளை வரிசையாக அடுக்கிக் கோத்து  ஒரு மாலை செய்தனர். வரியடுக்கில் வைத்த மாலை. அடுக்கமுறு மாலை.  ஒரு கடின ஒலியை விலக்கி ஒரு புதுச்சொல்லைப் படைத்துக்கொண்டனர்.  அந்தச் சொல் அக்கமாலை. அக்கமாலை உண்டான மகிழ்வில் எழுத்து ஒன்றை இணைத்துக்கொண்டு, அதைப் புகலுறு புனைகுமாலை என்றனர்.  அழகே அழகு. தண்டியாசிரியன் சொன்ன சித்திரகவிகள் போலப் புனைந்துகொண்டனர்.

அறுக்க அருகில் வருவதுதான்  அறுக்கரம்.   அறுக்க அறுக்க அருகி வந்து வேறு பொருள் பயக்கும்.  அறுக்க அருகில் ----   அக்கரம். அழகுறு சொல்லமைப்பு.  வர வர வர அது வருவது.  அண் அன் அனமாகும்.

புரிய நேரமாகக் கூடும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

சனி, 4 மே, 2024

பிருட்டபாகம் என்னும் உடலின் பாகம் - சொல்.

 பிறகிட்ட  -  இதை புரக்கட்டு, பெரக்கட்டு என்று நாவு பலவாறு பலுக்கும்.

பிருட்ட பாகம்.  இது மரூஉச் சொல்.  கி என்ற எழுத்து மறைந்து விட்டது  இட்ட ( இடு > இட்ட ) பாகம் என்பது உட்ட பாகம் ஆயிற்று.பிர்+ உட்ட > பிருட்ட!  பின் இது பூசை மொழியில் இடம்பெற்று,  பிரிஷ்ட, பிருஷ்ட என்று மகிழ்வாய் மெருகு இட்டுக்கொண்டு வழங்கிவருகிறது.  ற + இ சேர்ந்து ரு ஆனது இதன் ஈர்ப்பு ஆகிவிட்டது.

மொழி எவ்வாறு அழகுள்ளதாக இலங்குகிறது என்றால், இன்னொரு திரிபு பாருங்கள்:

அவையின் இடு(க்)கை >சவையின் இடுக்கை >  சவனி(டு)க்கை > சவனிக்கை.   இது மேடைக்கு இடப்படும் திரைச்சீலையைக் குறிக்கிறது. திரை விலகியபின் ஒருவன் வந்துபாடுவான். மக்கள் மகிழ்ச்சி அடைவர்.  அகரம் சகரமாகும். கடின ஒலிகள் ( டு போல)  தானே நீங்கிவிடும். கேட்பவன் கவனக்குறைவால் சொல்லில் மாற்றம்.

(ஞானயோகம்) மேவும் அவர் என்பது, பாகவதர் பாடுகையில் மே-பூங்கவ என்பதுபோல் ஒலிக்கிறது. படுதா போடும் வேலைக்காரனுக்கு நேரமில்லை. அதனால் அவனுக்கு சவனிக்கை என்று காதில் விழுந்து அவ்வாறே எடுத்துக்கொள்கிறான். இதில் மொழிக்கு ஒரு புதுச்சொல் கிடைத்துவிட்டதே.

பாவினால் மக்களைக் கவர்ந்தார்.  பா கவ(ர்ந்)தார் > பாக வதார்>  பாகவதர்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

மற்றொரு வகையிலும் இச்சொல் விளக்கமுறும். இங்குக் காண்க: https://sivamaalaa.blogspot.com/2021/07/blog-post_21.html.  இருபிறப்பி ஆகும்.


தொழிலில் ஒற்றுமை

 உங்களின் வேலையை  நீங்களே செய்வதில்

உங்களுக் கோர்பெயர் நல்லது வந்திடில்

உங்கள் மனமே  நிறைவினில் நிற்கும்  

உங்களுக் காகும் உடல்நலம் ஓங்கும்,


விரைந்து முடிக்கவே  வேண்டுவ தாயின்

வேண்டிய  நற்றுணை கொள்வதும் கூடும்.

சிறந்தது  கைத்திறம் உள்ளார்  உதவிடச்

சிறப்புடன் வேலை முடித்திட வேண்டும்


புன்னகை பூத்து முரண்பா டகற்றி,

புகழுற யாவரும் ஒற்றுமை போற்றி,


மன்னர்கள் நாமென நன்மகிழ் வெய்த,

முன்னரே ஆக்கமே நண்ணுதல் காக்கவே..


(இப்பாடல் வெண்தளை பயின்று வருமாறு செப்போலோசையில் எழுதப்படுகிறது,  அடுத்த வரியில் வெள்ளோசை தழுவப்படவில்லை.)


நல்லது - நல்ல பெயரைக் குறிக்கும். மற்ற நன்மையும் அடங்கும்,

ஓர் பெயர் - ஒரு பெயர். கவிதையில் ஒரு என்று எழுதவேண்டியதில்லை

இலக்கணம் விலக்கு அளிக்கிறது,

சிறந்தது கைத்திறம் =  கைத்திறம் என்பது சிறந்தது,  அது கொண்டு

நற்றுணை - நல்ல துணை.

எய்த -  அடைய.

நன்ணுதல் -  அடைதல்

முன்னரே - இது முன்னரே காக்க என்று இணைக்க.

காக்கவே -  காத்துக்கொள்க.


வியாழன், 2 மே, 2024

தினாத்யயா - சமஸ்கிருதச் சொல். பொருள்.

தினம் என்ற சொல்,  தீ என்ற தமிழிலிருந்து வருகிறது.  தீ என்பதோ தேய் என்பதிலிருந்து வருகிறது. சில பொருட்கள் தேய்வதனால் வெப்பம் மிக்குவந்து தீ உண்டாகிவிடுகிறது.

தினம் என்பது தமிழ்ச்சொல் என்று சில தமிழாசிரியர்கள் கூறியுள்ளனர்.

முதலில் தமிழர்கள் தமிழும் சமத்கிருதமும் இருகண்கள் என்றும் ஒன்றுக்கொன்று இணையானவை என்று சொன்னார்கள். வெள்ளைக்காரன் அது எங்கள் கண்டத்திலிருந்து உங்கள் கண்டத்துக்கு வந்த மொழி என்று கட்டுரைத்தபின்,  அவர்கள் கடன் வாங்கியதைத் தெரிவிக்காமல், நீங்கள் எல்லாம் கடன் வாங்கிவிட்டீர்கள் என்று சொல்லிவிட்டான். அந்நாளிலிருந்து தமிழறிஞர்கள் மனமிகக் கவன்று,  அது சமஸ்கிருதம், இது சமஸ்கிருதம் என்று பிரித்து. ஆய்வுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். வால்மிகி என்ற தமிழ்ப்புலவன் தான் முதலில் சமஸ்கிருதத்தில் நூலெழுதியவன்.  அவன்பாடிய இராமரும் நீலவண்ணத்தவர்தான். வெள்ளையன் அல்லன்.

வான்மிகி என்ற புலவர் சங்கத்திலும் சென்று பாடியுள்ளார்.

சமஸ்கிருதம் என்பது நம் உள்ளூர் பூசை மொழி. 

நிற்க, தினம் என்பது நாள் என்று பொருள்படுதலால்,  தினாத்யா  என்ற சொல்லைப் பார்ப்போம்.  தினம் அற்றுப்போவது தான்  தினாத்யா அல்லது தினாத்யாய. அற்றுப்போவது என்றால் முடிந்துபோவது.  அறவே இல்லாமல் போவது அன்று.  (அல்ல).  தினம் அற்றுப் போவதால் இரவு வந்துவிடும்.  அற்று -  இன்று அத்துப்போனால்  நாளைச் சூரியன் முளைக்கும்.  அப்போது   வரும். பூமி சுற்றுவதும் நீங்கள் அறிந்ததே.[ Dinātyaya]

தினேஸ்வரன் என்ற பெயரும் பலரும் விரும்பும் பெயர். தினத்துக்கு ஈஸ்வரன் என்றால் சூரியன். இறைவன் > இஷ்வர் ( ஈஷ்வர்)> ஈஸ்வர் மீண்டும் அன் பெற்று ஈஸ்வரன் ஆகும்.  சூரியன் தெய்வமாக வணங்கப்படுவது. சூடு கொடுப்பவன் ஆதலால் சூடியன்: சூரியன் ஆனான்.

தினாதி என்பது தின ஆதி,  காலைப்பொழுது, இப்போது இவ்வாறு பல சொற்கள் உள்ளன. இந்த மாதிரிச் சொற்களின் மூலம் சமஸ்கிருதமும் பல பெற்று சொற்செழுமை அடைந்தது. 

தின அன்று அகம் என்பவற்றைக் கொண்டு  தின அந்து அக >  தினாந்தக என்ற சொல் உண்டானது. மாலை வந்து மருவும் நேரத்தைக் இது குறித்தது.

அன்று அல்ல என்பதுமாகும், அன் து < >அந்து

தேய் > தீ > தினம்போல,  தேய் என்பதிலிருந்தே டே  ( நாள் ) என்பதை ஐரோப்பியர்கள் உண்டாக்கிக்கொண்டனர்.

தீ இன் அம் > தி ன் அம் > தினம்,.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின

புதன், 1 மே, 2024

புதிய பிரதமர் வோங், மூத்த அமைச்சராகும் லீ மேதகையோருக்கு வாழ்த்துக்கள்.

 சிங்கமான பலசிங்கர்  சிறப்பொடுவாழ் சிங்கைநகர்

தங்கநகர்த் தலைமைசேர்  நல்அமைச்சர் வோங்கவரும்

பொங்கெழிலே  பூத்திருக்கப் பொறுப்பேற்கும் நன்னாளில்

தங்குகசீர்  மங்களமே  தரணிப்பண் நிலைதருமே.


நிறைவான செல்வமெலாம் நித்தலுமே பெருகிவர

நிறைவானும் குன்றாத மழைபொழியச் செழிப்பாகத்

திறைபொருளின் வளம்கொழிக்கத் தேன்மொழியும் கலந்துவர

இறைவரமும் தொடர்தரவே இவராட்சி நிலைதருமே.


பல்லாண்டு  நீள்நகரைப்  பண்புடனே ஆண்டவர்நம்

தொல்குடியின் லீசியன்லுங் துவள்வில்லா வானம்போல்.

வல்கணமொன்  றில்லாமல் வளமான ஆட்சிதந்தார்

நல்மணமே ஒன்றியன்று நலம்காக்க   நிலைதருமே.


இவை மூன்றடுக்கிய தாழிசைப்பாக்கள்.

அரும்பொருள்:

திறை பொருள்  - வரியும் பொருளியலும்

உம்மைத் தொகை.

நித்தல் - என்றும்

தரணிப்பண் -  உலகம் ஒத்து இருந்து பாராட்டுதல்

சிங்கர் -  சிங்கம்போன்ற மனிதர்கள் சிங்க( ம் ) + அர்> சிங்கர்

சிங்க(மவ)ர்>  ( தொகுத்தல் விகாரம் என்றும் கொள்க)

தொடர்தர =  தொடர்ந்துவர

இறைவரம் - கடவுள் கிருபை

தொல்குடி -  முதல் தலையமைச்சரின் குடி

நீள்நகர் - பெருநகர்

வல்கணம் - கடினமான தன்மை

ஒன்றியன்று -  ஒன்றாக இணைந்து

ஒன்று இயன்று - ஒன்றாய் இயன்று. ஆய் உருபு தொக்கது.

துவள்வில்லா -  துவள்வு இல்லா - மடங்கிக்கெடுதல் இல்லாத.

வன் கணம் நன் கணம் என்று புணர்த்தாமல் நல் வல் என்றே எதுகைநோக்கி இருத்தப்பட்டன. ஆகவே நல்கணம், வல் கணம், வன் கணம் : வன்மை நிகழ்வின் திரட்சிகள்;  நல் கணம் - நன்மை நிகழ்வின் திரட்சிகள் ( ஆட்சியில்) .

"நல் கணம்" என்பதைப் பயன் படுத்தாமல்  நல் மணம் என்று பாடியுள்ளோம்.

நட்பினை(சேர்தலை) மிகுத்தல்

 நட்பு என்ற சொல் நள் என்ற அடிச்சொல்லில் பிறந்தது. நள்+ தல் என்பது நட்டல் என்றும் வரும்.  நண்பு மற்றும் நட்பு என்றும் தோன்றும். நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள்பவர்க்கு என்று தேவர் திருவாய் மலர்கின்றார். நண்பர்கள்  ஆனபின்  வீடு  இருந்த இடத்தில் இருக்கும் என்றாலும் வீடில்லை  அதாவது விடமுடியாது என் கின்றார்.  நண்பர்  ஆனபின் பிரிந்துவிடுதல் எளிதன்று.  நண்பர்களாகு முன்னர் மலைகள்போல்   பெரியனவாகத் தெரிந்த குற்றங்களும் கண்களாற் காணவும் இயலாதன ஆகிவிடும். அதனால்தான் வள்ளுவனார் வீடில்லை,  விட்டு விலக முடியாது என்று சொல்கிறார் வெகு திட்டவட்டமாக.

ஒரு செடியை நடுதல்,  மரத்தை நடுதல் இவை போன்றவைதாம்.  இந்த நட்டலும். கொஞ்ச நாட்களிலே  வேர்விட்டு வளரத் தொடங்கிவிடுகிறது. கூடியவர் பிரிந்தால் கொஞ்சம் அழுகையும் வரலாம்,  அப்போது உங்கள் நண்பர் கோடிக்கணக்கில் கொள்ளை அடித்ததாக ஊரெல்லாம் ஓமலித்தாலும் உங்களுக்குத் தெரியாது போய்விடும். நட்பில் குற்றம் தெரிவதில்லை. அப்புறம் வீடில்லை.  விடுபாடு கிடையாது.

இவ்வாறெல்லாம் ஏன் சொல்கிறோ மென்றால்,  நட்பு என்பதற்கும் செடி மரம் நடுவதற்கும் வேறுபாடில்லை.  எல்லாம் நள் என்ற அடிச்சொல்லிலிருந்தான் வருகிறது.  அதனால்தான் :"நட்டலிற் கேடில்லை, பின்னர் வீடில்லை:" என்கிறார்.

இப்படி நட்பில் மிகைபாடு இருத்தலால்,  பூசைமொழியில் மிகுத்தல் கருத்திலிருந்து மித்திரம் என்னும் சொல்லைப் படைத்துள்ளனர். நட்பு என்பதே ஒரு கூடுதலில் வரும் மிகைதான்.  இதை உணர்ந்துகொண்டால் மிகு திறன் என்பது ஏன் மித்திரம் ஆனதென்பதை உணரலாகும்..  இதை "திறன்" என்று சொல்வதை விட திரன் என்று சொல்வதே திரிதல் காட்ட எளிதான சொல்லமைபு ஆகும்.  இது உண்மையில் திரி+ அன் > திரன்தான். திரிபுப்பொருள். அகரவரிசையை  நோக்காது  எழுத்துத் திரிபுகளை மட்டும் நோக்குக. இந்த உத்தி புரிதலுக்குத் தேவையானதாகும்.  திரி என்பதில் இகரம் கெட்டு திர் அன் திரன் என்று வந்த சொல்.  மிகத் திரிதல் > மித்திரி அம்> மித்திர ஆகி,  பூசைமொழியில் வரும் நட்புச்சொல்லுக்கு மிக்க நெருக்கமான திரிபு வடிவங்களை முன்வைக்கும்.  திறம், திரம், திரி அம்,  என்பவற்றில் திரி  அம் என்பது மிகத் தெளிவான விளக்கம்  அதாவது புரியவைக்கும் விளக்கம் ஆகும்.

கூடுதல் என்ற தமிழ்ச் சொல்லும் மித்திரன் என்ற சங்கதச் சொல்லும் அதிகம் புலப்படுத்தும் கருத்தில் உண்டாயின. 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.