செவ்வாய், 30 ஜனவரி, 2024

குதர்க்கம் - சொல்

 "குதர்க்கம்" பேசி என்னை மயக்க

எங்கு கற்றீரோ?"

உனது கடைக்கண் பார்வை காட்டும்

பாடம் தன்னிலே,"

 இந்தப் பாட்டின் கடைசிக்கு முந்திய இரு வரிகளயே இங்குக் காட்டியுள்ளோம். பாடல் முழுமையும் குதர்க்கமாகவே உள்ளது.இப்படிப் பேசினால் அதைத்தான் குதர்க்கம் என்கிறோம்.

வரிக்குவரி, வாக்கியத்துக்கு வாக்கியம் பொருள் முரண்பாட்ட நிலையில் வருவதுதான் குதர்க்கப் பேச்சு.

இச்சொல் எப்படி அமைந்தது?

தர்க்கம் ( தருக்கம்) என்பதிலிருந்து குதர்க்கம் வருகிறது. இதற்குரிய வினைச்சொல்: தருதல்.

இங்குத்  தருதலாவது மற்றொன்று தருதல் அல்லது  " முரண் தருதல். '

குறு + தருக்கம் > கு + தர்க்கம்.> குதர்க்கம்

*போல* அமைந்த இன்னொரு சொல்:

பொருள்களை வரவழைப்பது வருத்தகம் எனப்பட்டது   வருத்து+அகம்> வருத்தகம்>>வர்த்தகம் இது வரத்து என்று ம் திரியும்  ( வருந்து> வருத்து பிறவினை வேறு,.)

வரவு>வரத்து ரு >ர திரிபு அறிக.

வரு> வர> வரன் (மாப்பிள்ளை)

வரு  :  இதில் இடைநிலை முன் உகரம் கெடும்

அகரம்:  இடைநிலை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்



ஞாயிறு, 28 ஜனவரி, 2024

ரிஷி/ மகா ரிஷி

  "இருள் தீர் " என்ற இரு சொற் புணர்விலிருந்து ரிஷி என்பதை அறிவோம். ரிஷி என்பது இரிசி என்றும் வழங்கும். பெரும்பாலும் எழுதப் படிக்கத் தெரியாத பாட்டிகளிடம்தான் இதைக் கேட்டுச் சுவைக்கலாம். இப்போது பலர் போய்விட்டனர். " அவன் கெட்ட இரிசி" என்பர்.

ரிஷிகளில் சிலர் ஆத்திரத்தில் சாபம் இடுவர். இதுபோல் செய்தால் பலித்துத் துன்பம் விளையும் என்பதால் அச்சம் அக்காலை நிலவிற்று. கெட்ட இருசிகளிடம் கெடு சொல் பெறாமை வேண்டும் என்பர். கெட்டவர் நல்லவர் என்றில்லாமல் யாரிடமும் சாபம் பெறாமல் வாழவேண்டும். சாவு+ அம் > சாவம் > சாபம் என்பதறிக.  செத்துப்போ என்று  வசை பெறுதல். சாவுக்குக் குறைந்த துன்பங்களையும் இது உள்ளடக் கும்.

கண்திட்டி அல்லது கண்ணூறு என்பதும் பாதிப்பை விளைவிக்கும். நபி நாயகத்துக்கே கண்பட்டது என்று எம் மலாய் நண்பர்  கூறுவார் . இதில் பகுத்தறிவு பார்த்துக் கேடுற வேண்டாம். இங்கு கேடு என்றது  நோய்   நொடிகள், திரவியக் குறைவு, எனப் பல.

பகுத்தறிவு என்பதன் எல்லைக்கு உட்படாத பல உண்டு. 

இருள் என்று கூறப் பட்டவற்றுள் இருவினைகள் உள்ளன. இவை இரண்டும் தொடர்பு  படாத ஆன்ம நலமே இருள் தீர்வு ஆகும். இருள்தீர் > இருடி > இருஷி > ரிஷி  ஆயிற்று.

ரிஷி என்ற சொல்லை  எடுத்து ஷி என்ற ஒலியை விலக்கி ( எழுத்தை ஒருவி, அல்லது தொல்காப்பியர் கூறியது போல் "ஒரீஇ" )  டி என்பதை இட்டால், ரிடி ஆகிவிடும் . ரி என்பது திரிபு ஆதலின் ரு என்பதை இட்டால் இருடி ஆகும். இருடி என்பது இருடீர் என்பதன் திரிபு. தமிழில் இதை "இருடீரிகள்" அல்லது ' இருள் தீர்ந்தோர்' என்றே வாக்கியத்திலிட  முடியும். அடைச்சொல்லிலிருந்தும் பெயர்ச்சொல் (அமைத்தல் அன்று)கொள்ளுதல் பிறமொழிகட்கு இயல்பு. கேட்டால் விளக்குவோம்.

பிள்ளை இல்லாதவர்கள் நரகுக்கே  செல்ல முடியும் என்ற கொள்கை இருந்தது. பிள்ளை அல்லது சீடர் உள்ள முனிவரே மக-ரிஷி. பெரியவரும் ஆவார்.இதன் சொல்லமைப்புப் பொருள்:  பிள்ளைகளை உடையவர் என்பது. பிள்ளை இல்லலாதவர்  தத்து எடுத்துக்கொளவது போன்றதுதான் சீடர் களை ஏற்றுக்கொள்வது. ஆதலின்  இவர் மணமிலியாய் வாழ வாய்ப்பு ஏற்பட்டது.  மக என்ற சொல்லும் பெருமைப் பொருளில் வழங்கத் தலைப்பட்டது  மக என்பது தமிழில் மா என்று திரிந்து பெருமை ப்  பொருள் தந்தது. சமஸ்கிருதமும் மஹா என்று திரிந்து அப்பொருளே தந்தது.

இன்று மணம் புரிந்தும் துறவியாய் இருக்கலாம். பரம அம்சருக்குத் துணைவி சாரதாதேவி என்பது நீங்கள்  அறிந்ததே.  பிற்காலத்துத்தான் இதன் பொருள் மாறிற்று.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.


.

சனி, 27 ஜனவரி, 2024

வராதவர்

 அழைத்து வந்தவர் அருகில் இருக்கவும்

பிழைத்த தன்மையால்  வாரா   தார்தமை

நுழைத்து     நுழைத்துப் பேசிடப் புகுதலோ

தழைத்தல் உற்றுற வாக்கிடக் கூடுமோ



அழைத்த பத்துப் பேரில் ஒன்பதின்மர் வந்துவிட்டனர். ஒருவர் வரவில்லை. வராதாவருக்குப் பல காரணஙகள் இருக்கலாம் . அவர்   வராமையை ப்   பொ து முறையில் பேசி ஆய்வு செய்யக் கூடாது.  அது ஒன்பது பேருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும். பின்னர் தனிப்பட்ட முறையில் அறிந்து மகிழ்க


அழைத்து - அழைப்பிதழ் கொடுத்துக் கூப்பிட்டு, 

வந்தவர் அருகில் இருக்கவும் - அதை ஏற்றுக்கொண்டு    வந்து   அவர்கள் அமர்ந்திருக்கையில்,

பிழைத்த தன்மையால்  வாரா   தார்தமை - பிசகு ஏறியதன் காரணியினால். அழைப்புக்கு வராதவர் எவரையும்,

நுழைத்து     நுழைத்துப் பேசிடப் புகுதலோ--- மற்ற நிகழ்ச்சிகளுக்கிடையில் இந்த வராமை நிகழ்வினைப் புகுத்திப் புகுத்தி  உரையாடத் தொடங்குவதானது,

தழைத்தல் உற்றுற வாக்கிடக் கூடுமோ----  வராதவர் மன இணக்கம் முறிந்ததால் வரவில்லை என்றால் இப்படிக் கேட்பதால்  மீண்டும் உறவு தழைத்து எழுந்துவிடுமோ  என்றவாறு. அது காரணம் என்றாலும் அதுவன்று காரணம் என்றாலும் இப்படிக் கேட்பதனால் நிலைமை சீர்பட்டுவிடாது என்பது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


வியாழன், 25 ஜனவரி, 2024

டம்பம் என்பது.

டம்பம் என்னும்  சொல்  ஒரு தலைக்குறைச் சொல்.

தலைக்குறை என்பது சொல்லின் முன்பகுதி மறைந்த சொல்.

ஆடம்பரம் > டம்பரம் > டம்பம்.

இதில் இடைவரும் ரகரமும் மறைந்துள்ளது

இவ்வாறு இயலும் சொல்லை இருமடித் திரிபுச்  சொல் என்பர்.

தலைக்குறைக்கு உதாரணம்,

கமலம் > மலம். ஆனால் மலம் என்று இன்னொரு சொல் இருப்பதால் முதற் குறைக் கமலம் என்பர்.   பொருள் மாறுபாடு இல்லாமல் இருக்கவேண்டும்.

அரங்கன் > ரங்கன். தலைக்குறை.

இது விதிக்கு மாறுபட்டது, தமிழ் மரபு இக்குறையை ஏலாமையின். இகரமிணைப்பர்.

தலைக்குறை - முதற்குறை.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.





.

புதன், 24 ஜனவரி, 2024

ஆடம்பரம்- சொல்

 ஆடம்பரம்:  எவ்வாறு அமைகிறது?

  இதில் "பரம் "   என்னும் இறுதியை முதலில்  எடுத்துக் கொள்க.

இது ஒரு பரந்த  வெளியைக் குறிக்கிறது.

பர+அம் > பரம்.

அடுத்து நிற்பது "அம்". 

அம் என்றால் அழகு.

" அம்பரம்" என்ற இணைப்பு "வானம்" என்ற பொருளது.

ஆடம்பரம் எனில்   ஆடு அம்பரம்,  வானத்தில்  ஆடு , அம்பரத்தில் ஆடு.

ஆடம்பரமாய் நடக்கிறான். (வாக்கியம்)

ஆடம்பரமாய் என்பது உண்மையில் ஓர் உவமைத் தொடர். "போல்" என்று உவமைச் சொல் இன்மையால், பொருண்மை  வழுவினதாய்த் தெரியலாம். "வானத்தில் ஆடினவனாய் இருக்கிறான்" என்றால் பொருந்துவதாகும். உருவகமாகக் கொள்ளலாம்.

இது இல்பொருள் உவமையைச் சேரந்தது.

இன்னொரு வகையில் :

அம்பரம் என்பது அம்பம் ஆகிறது.

இடுதல் என்பதை முன்னொட்டி;

இடு+ அம்பம் > இடம்பம் > டம்பம்

ஆகவே டம்பமாய்ப் பேசுவதென்றால், " வானிலிட்டதுபோல் பேசுவது என்று பொருள்.

இது இடு+ அப்பி>. இடப்பி>டப்பி >டப்பா> dabba.

போன்ற அமைபு.

 அறிக மகிழ்க.

மெய்ப்பு பின் 




சிங்கை மக்கள் பக்தி

 இறைப்பற்றை ஒரு முறைப்பற்றாய்ப் பின்பற்றிக் கொண்டாடும் உலக மக்களில் சிங்கப்பூர் மக்களுக்கு ஓர் உயர்ந்த இடம் எப்போதும் உண்டு என்பதே எம் துணிபு ஆகும்.  அதனைக் காட்சிப்படுத்தும் வண்ணமாக இந்தப் படங்கள் அமைந்துவிட்டன.  கண்டு மகிழுங்கள்.





படங்கள்:
கருஜி

திங்கள், 22 ஜனவரி, 2024

இராமர் எப்படி......?

 இராமர் எப்படித் தியாகி, எப்படித் தெய்வம் என்று வினவலாம்

இராமர் ஓர் அரசர்.  பட்டத்துக்கும் பதவிக்கும்  இடையூறு வரும் நிலையில் போட்டியாளனைப் பிடித்துச் சிறையில் போடாமலும்  தந்தைக்கு எதிர்வினை எதுவும் ஆற்றாமலும் பொறுமையுடனும் வனவாழ்வே தனவாழ்வென்று போய்விட்டார். தியாகமும் தந்தை சொல்லுக்கு மதிப்பளித்தலும் துன்பம் கண்டு துவளா நெஞ்சுரமும் அவருக்கு. .அடி எடுத்து வைத்ததுமே மனித நிலையைக் கடந்துவிடுகிறார். எல்லாம் எனக்கே என்று எதுவும் சொல்லவில்லை .அவருக்கு எதுவும் வேண்டும் என்று ஓலமிட வில்லை. அவர் வேண்டுதல் வேண்டாமை இல்லார். இறைப்பண்பின் வெளிபாடு இது. வள்ளுவனும் பாடிய பண்பு.

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.

இப்படியே வால்மிகியையோ கம்பனையோ படித்து அறிந்து கொள்ளுங்கள்.

Sumangalip Pujai kuzhuvinar


 இந்தப் படத்தில் தோன்றுகின்றவர்கள் சுமஙகலிப் பூசைகளைக் கோவிலில் நடத்தினார்கள்.

வசூலில் வந்த பணத்தையும் பயப்பற்று டன் பூசைக்கே பயன்படுத்தினார்கள்.

வசூல் பணம் வரவில்லை என்று சொல்லி அடகுக்கடையில் நகையை வைத்து  ஈடு செய்யும் நெருக்கடிகளை ஏற்படுத்தாமலும்  பிறழாமலும் இருந்த காரணத்தால் இவர்களுக்கு நாம் கடமைப் பட்டிருக்கிறோம்.

தலைமை தாங்குகிறவர்களுக்குப் பிறழச்சிகளால் பல துன்பங்களும் நோயும் கூட ஏற்பட்டு விடும்.

இறைப்பற்றும் தொண்டுள்ளமும் வாழ்க.

எல்லாப்புகழும் அம்மனுக்கே.

இராம நாமம் ஒங்குக.


ஈசன் (மாரீசன்)

மாரீசன் என்ற இராமயணப் பெயர் நினைவுக்கு வந்தது.

அதைத் தேடினேம்.    ( ஏம், ஓம் என  இரண்டும் வரலாம். ஏம் என்பது முன்னிலையாரை உளப்படுத்தாமல் சொல்லும் திறனுடையது).(  தேடினோம் என்று எழுதுவது தான் இப்போது பலரும் அறிந்து கடைப்பிடிப்பது ஆகும் ). 1,*

https://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_6492.html

இனி ஈசன் என்னும் சொல்லுக்கு இன்னொரு முடிபு கூறுவோம்:

ஈதல் -   தன் நிலையின் ஒப்புமை இல்லாதவருக்கு இயன்றது உதவுதலாம்.

இறைவற்கு இணை யாருமிலர். அவரே யாவர்க்கும் ஈந்து காப்பவர்.

ஈ+து+அன் > ஈ+ சு+அன்> ஈசன்.

உகரம் கெட்டது.

தகர வருக்கம் சகர வருக்கமாகும்

எ-டு: தனி > சனி

அத்தி > அச்சி  பாப்பாத்தி, செட்டிச்சி வண்ணாத்தி, ஆய்ச்சி

அத்தன் அச்சன் அத்தி அச்சி.


 இடுகைகளில் காண்க 

த் இடைநிலை ச் எனவாயிற்று.

தி > சி

இறைவர் ஈஷ்வர் திரிபுக்கு இது மற்றொரு முடிபு கூறியவாறு.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

குறிப்புகள்:

*நன்னூல் 140 (விகுதிகள்.)

அன் ஆன் அள் ஆள் அர் ஆர் ப மார்
அ ஆ கு டு து று என் ஏன் அல் அன்
அம் ஆம் எம் ஏம் ஓம் ஒடு உம் ஊர்
க ட த ற ஐ ஆய் இ மின் இர் ஈர்
ஈயர் கயவும் என்பவும் பிறவும்
வினையின் விகுதி பெயரினும் சிலவே 

சனி, 20 ஜனவரி, 2024

தெய்வமாகிய இராமபிரான்

இராமன் அரசனாய் இருந்து தெய்வநிலை எய்தியவர். நிறத்தில் கறுப்பர்.  தமிழ்நாட்டினோடு தொடர்புடையவர். அவரைப் போற்றும் வரிகள் இவை: 

எப்படி அவர் தெய்வம் என்பதை இவ்வரிகள் விளக்குபவை: இவர் அவரும் அவர் இவரும் ஆவார்,  காரணம் இராமர் எங்கும் உள்ளவர். எனவே அவர், இவர் என்று இரண்டும் அவரைக் குறிக்கும்.


இராமன்என்ற,  நாடாண்ட தியாகச் செம்மல்

அரண்காட்டில் வனவாசத்  தடங்கி வாழ்ந்தார்

இராஇருளாம் இவற்றில்இர அடிச்சொல்  தன்னில்

இருந்தஇருள் நிறத்தைத்தான்  அறிந்தீர் அல்லீர்

பொருமனத்து வெள்ளையனா  ரியனே  என்றான்

போக்கற்றான் பொய்யினையே ஏற்றுக் கொண்டீர்

இராமனைநீர் பராவுதலை ஒழித்தீர் உண்மை

இவர்கறுப்பர் உறவாளர் தமிழர்க் காமே.


வையகத்து வாழ்வாங்கு வாழ்ந்தார் தெய்வம்

வள்ளுவர்சொல் அமுதாகும் தள்ளப் போமோ?

தெய்வமான அரசரொரு  பொய்யாச்  செல்வம் 

தேயமெலாம் மேவிடுதே  ஒப்பிச்  செல்வீர்

தொய்வதொரு வழுவாகும் கனியிற் கொய்யா,

துலையற்ற  தொல்சிறப்பின் தோன்றல் இன்னார்

வையவெழும் நாவினுக்கும்  தொய்யும் தேகம்

வெய்யபகல் காய்புழுவாய் வேண்டீர் யாரும்.


தமிழ்நாட்டின் அண்டையிலே அரசு செய்தார்

தமிழ்நாட்டின் உறவாளர் என்ப  தாலே

அமிழ்த்திடுதல்  ஆகாதே அவரை நாமும்

அறந்தாங்கி அவர்பாதம் வழியில் தாங்க

இமிழ்முந்நீர் இராமேசு  வரமே சென்றார்

இதுசான்றாய் ஒளிசெய்ய, வதையொன் றில்லை

தமிழீழம் பின்னாளில் அமைந்த தண்டைத் 

தமிழர்க்கே  புலத்தொடர்பு தந்த  வாறே.


அவர்தரித்தார்  மானிடனாய்  அவத ரித்தார்

அவர்சிறந்த ஒண்மனிதர் பின்தெய்  வம்தான்

அவர்நாமம்  நாவிலெனின் அருள்செய் கின்றார்

அலையுமிடம் எங்கெனினும் காவல் ஆவார்

சுவர்ப்படத்தில் நம்தாத்தா பாட்டி எல்லாம்

சொருகிக்கொண் டனரேமேல் சொர்க்கம் தன்னில்,

இவர்கள்போல் அவரும்மோர்  தேவன் தானே.

அவர்கடவுள் எனிலடுத்த படிமேல்  அன்னார்.


இராமநாமம் வாழ்க



வெள்ளி, 19 ஜனவரி, 2024

கழுகு ஜடாயு திரிபு

 கழுகு >

 சடுகு.> சடுயு> சடயு>சடாயு.

க ச  திரிபுகள் மற்றும் ழ > ட

சேரல் > சேரலம்   > கேரளம்

பாழை > பாடை  ழ >ட 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்


 

பரதன் சொல்.

 பரதன் என்பவன்  இராமகாதையில் வரும் ஒரு பாத்திரப் படைப்பு.  உண்மையாகவே அப்படி ஒருவன் இருந்தானா என்றால், பலர் இருந்திருக்கலாம். அதை அறிந்து தெளிதற்கு நமக்கும்  வாய்ப்பு, வசதி, மதிநுட்பம் காட்சி என எல்லாம் இருக்க வேண்டுமே. பரதன் அருகிலிருந்தும் அவனை அறிந்துகொள்ள முடியாதவர் இராமகாதையிலேகூட  நெளிந்துகொண்டு இருந்திருக்கலாம். தேடிப் பாருங்கள். விழிப்பக் காட்சி தராதவை வியன்படப் பலவாம்.

பரந்த உள்ளம் -   பர. ( பரத்தல்)

து  இடைநிலை 

அன் ஆண்பால். விகுதி

விகுதி என்பது சொல்லை மிகுதிப்படுத்தும் சிறு துண்டுச்சொல்.

து என்பதில் உகரம் கெடும்  த் அன் என்பவற்றோடு  இணையும்

இது வால்மிகியார் புனைந்த தமிழ்ப் பெயர்.

அறிக மகி,ழ்க

மெய்ப்பு பின்னர்





சத்துருக்கன் - சொல்.

 சத்துருக்கன் என்ற இராமரின் இளவல்

சற்றே உருக்கமான குணங்கள் உடையவன்.

எனவே இப்பெயர் தமிழ் மூலம் உடையதே ஆகும்.

சற்று - சத்து.

இதுபோல் திரிபு:-

சிற்றம்பலம் - சித்தம்பரம்  இடைக்குறைந்து சிதம்பரம்

லகரம் - ரகரம் ஆனது.

இன்னொரு திரிபு

சிற்றப்பன் > சித்தப்பா.

(பற்றி) > பத்தி. 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்


வியாழன், 18 ஜனவரி, 2024

வோயேஜ் (ஆங்). சொல்

 பயணம் என்று பொருள் தரும் "வோயேஜ்" - சொல்லைக் 'கண்கொள்வோம்'

வாய் என்ற தமிழ்ச்சொல்லுக்கு இடம் என்ற பொருள் உண்டு என்று சொல்லியிருந்தோம்.  நல்லபடியாகப் போய் வாருங்கள் என்பதை போன் வாயேஜ் அல்லது பான் வாயேஜ் என்பார்கள்.

பொன்னே  நல்லது." பொன்னேபோல் போய் வருக" என்றால் நன்றாக இல்லையா. பொன் எப்போதும் பாதுகாப்பாகவே போகும். வரும். திருடன் கொண்டுபோனாலும் பாதுகாப்பாகவே கொண்டுபோவான். பரம யோக்கியன்  கொண்டுபோனாலும்  பாதுகாப்பாகவே இடம் பெயர்வான். பாதுகாப்பு ஏற்படுவது பொருளின்  தன்மையினால். போனஸாக இருந்தாலும் போனாவாக இருந்தாலும் மூலமானது பொன்னே. பி-க்கு B போட்டால்  இது மறைந்துவிடாது. இந்தோ ஐரோப்பிய மொழிகளில் ஒன்றுக்கு மற்றது மாற்றீடாக வரும்.

இடத்திலிருந்து ஏகுவது,  அதாவது ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்குப் போவது  வாய் ஏகுதல்.  \

வாய் ஏகு >  வாயேகு >  வாயேஜு,  அதாவது இடம்பெயர்தல்,  பயணம் போதல்.

வழி என்று பொருள்தரும் via,  வாய் என்ற சொல்லே.

சென்னைப் பல்கலையின் ஒரு வரலாற்றுப் பேராசிரியர் செய்த ஆய்வின்படி,  தமிழ்நாட்டிலிருந்து பண்டிதர்கள் சென்று உரோமப் பேரரசின் தொடக்ககாலத்தில் இலத்தீன் மொழியைச் சீரமைத்து விரிவுபடுத்த உதவினர் என்று அறியப்படுகின்றது.  இதை ஆய்வறிஞர் மயிலை வேங்கடசாமியும் தம் நூலில் பதிவிட்டுள்ளார்.  எம் பழைய இடுகை ஒன்றிலும் இதைக் குறிப்பிட்டுள்ளோம். தமிழ் சமஸ்கிருத ( சங்கதச்) சொற்கள் அப்போது அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டன என்பது அறிக.

ஒரு சிறிய மாகாணத்தில் மட்டுமே இருந்த பழைய இலத்தீன்  புதுப்பிக்கப்பட்டு உரோமப் பேரரசுப் பயன்பாட்டுக்கு  ஆட்சி மற்றும் அலுவல் மொழியாய் விரிவு படுத்தப்படுகையில்,  மொழிவளம் பெருக்க, பல சொற்களை ஏற்றுக்கொண்டனர்.  பின் அவை மற்ற ஏனை இந்தோ ஐரோப்பிய மொழிகளிலும் இடம்பெற்றன என்பதை அறிக. ஆங்கிலோ செக்சன் மொழியும் இவ்வாறே செழிப்புற்று வல்லரசு மொழியாயிற்று. தமிழரசு நடைபெற்ற காலை பல யவனர்களும் தமிழ் வழங்கிய நாடுகளின் அரசுகளில் பணிபுரிந்தனர்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்


புதன், 17 ஜனவரி, 2024

வாசுகி பெண் பெயர்

 வாசுகி என்பது பெண்ணின் பெயராய் தமிழில் வழங்கி வருகிறது. இந்தப் பெயர் எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கு விளக்கங்கள் பற்பல உள்ளன. இவற்றில்  ஒன்றாவது நீங்கள் உகப்பதாய் இருக்கலாம். அவ்வாறாயின் இருக்கட்டும். எமது ஆய்வின்படி இங்கு ஒன்றினை யாம் வெளியிடுகின்றோம்..

வாசுகி என்ற பெயரில் வள்ளுவருக்கு மனைவி இருந்தாள்  என்ப. இதை யாம் இங்கு தொடவில்லை. வாசுகி என்ற சொல்லை ஆய்வதன்றி வேறு குறிக்கோள் யாதுமிலது.

இந்தச் சொல்லில் வாய் என்பதும்  உகம் என்பதுமாகிய இரு உள்ளுறை சொற்கள் உள்ளன.

வாய் எனில் பல், நாக்கு முதலியவை அடங்கிய உறுப்பு. இதற்கு இடம் என்ற பொருளும் உள்ளது.   தோற்றுவாய் என்ற சொல்லில் வாய் என்பது இடம் என்ற பொருளைக் கொண்டுள்ளது.

உகம் என வேறு சொற்களும் உள்ளன.  அவை: உகம் = யுகம்;  உகம் - உலகம்; பூமி;  உகம் - பாட்டு;  இவை இங்கு கருதப்படவில்லை.

உகத்தல் வினையில் உக என்பது விரும்பு   எனும்  பொருளது. உகி என்பது விரும்பும் ஒருவரைக் குறிக்க வழங்குதற்குரியது. உக+ அம் > உகம்,  உகம்+ இ > உகி.  அம் கெட்டது.

வாய்+ உகி > வாயுகி> வாசுகி ஆகிறது.

யகர சகர வருக்கத் திரிபு.  யு>சு

ஒப்பு நோக்க,  எ-டு: வாயில் - வாசல். 

பேச விரும்புகிற பெண் என்பது பொருளாய்க் கொள்ளலாம். வாழ்ந்த இடத்தை விரும்பிய பெண் என்பதும்  ஏற்புடைத்தே ஆகும்.

பெண்ணின் பேச்சில் சுவை காண்போரும் உளர். ஆதலின் இப்பொருளும் ஏற்றதுதான்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


செவ்வாய், 16 ஜனவரி, 2024

அனுகூலம் சொல்.

 இன்று "அனுகூலம்" என்ற சொல்லை நோக்குவோம்.

கூலம் என்பது உணவுப் பொருள்களில் தானியங்களைக் குறிக்கும்.  தானியம் என்பது, அரசனுக்குத் திறையாகச் செலுத்தினது போகத் தனக்குரியவையாகக் குடியானவன் ஒருவன் சேமித்து வைத்திருக்கும் நெல், கம்பு, சோளம் , வரகு என இன்னபிறவுமாகும். தான்+ இயம்.  தான் முயன்று தனக்கென "இயற்றுவித் திருப்பவை" என்பது பொருள்.  " தனக்கு இயன்றவை" என்றும் வரையறுக்கலாம். கூலம் எனில் சேர்த்து வைத்தவை என்பது சொற்பொருள். நாளடைவில் இதன் பொருள் கூலங்கள் எனப் பொதுப் பொருள் பயந்தது. (அரிசி, கம்பு,  சோளம், என இன்னும் உள்ளவற்றைக் குறிக்க வழங்குதல் )

அனுகூலம் எனின், யாது?  வீட்டில் வேறு உணவுப் பொருட்கள் இல்லாவிடினும் கூலம் இருக்குமாயின் அவற்றை அணுகிப் பசியைத் தீர்த்துக் கொள்ளலாம். பசிக்கு அணுகத் தக்கது கூலம் என்பதே  சொற்  பொருளாகும். இதிலிருந்து "உதவுவது  இது " என்பது பெறுபொருளாயினவாறு கண்டுகொள்க.

பெறுபொருள்-- derived meaning.

அன் என்பதும் அண் என்பதும் சொல்லாக்கத்தில் மாற்றீடுகள். அன்பு என்பதில் அணுக்கம் இருப்பதை அறிக.

அன்பு என்ற இடுகைப் பதிவில் விரிவு அறிக.

https://sivamaalaa.blogspot.com/2018/09/blog-post_95.html

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர் 

திங்கள், 15 ஜனவரி, 2024

பொங்கல் வாழ்த்து

1.

தங்கள் குடும்பத்தில் தாய்பிள்ளை தங்களுடன் 

பொங்கும் வளம்பெறுக இன்று.

2.

உண்கநற் பொங்கல் உளமெலாம்  பூரிக்கப்

பெண்கள்பிள்-   ளைகள் உடன்.

3.

இனிக்கும் அதுவெனினும் உண்கவே பொங்கல்;

கனிக்கோநல்  வாழைப்  பழம்.

4.  

வெல்லா  தினிப்புநீர் பொங்கலின் ஞாலத்துச்

சொல்லார்ந்த ஆசிதன் னால் .

5

தானாக உண்டலும் தீதேஇன்  பொங்கலே 

மேனாளில் இன்பம் பகிர்


6

இன்றின்பம் விட்டால் இனி இருப்பீர் ஓராண்டுக்(கு)

இன்றேயும்  உண்டல் நலம்


7

பொங்கலில்  நல்வாழ்த்துப் பெற்றார் உலகத்தார்

தங்கஉள் ளத்தில்வாழ் வார்


பொங்கல் வாழ்த்து: பொருளுரை.

 1 

தங்கள் குடும்பத்தில்  -  உங்களுடைய குடும்பத்தில்   ,   தாய்பிள்ளை - உள்ளவர் கள்,  தங்களுடன்-  உங்களுடன் , பொங்கும் வளம்பெறுக இன்று - இந்நாளில் நிரம்பி வழியும் வளத்தை அடைவார்களாக. 

2. 

உண்கநற் பொங்கல் உளமெலாம்  பூரிக்கப் 

பெண்கள்பிள்-ளைகள் உடன்

இந்த நல்ல  பொங்கலை பெண்கள் பிள்ளகளோடு உள்ள

மகிழ்வுடன் நீர் உண்பீராக.

3  

இனிக்கும் அதுவெனினும் உண்கவே பொங்கல்;  

_அது இனிக்கும் என்றாலும் உணணுங்கள்,  

கனிக்கோநல்  வாழைப் பழம்-  கனி விழைந்தால், நல்ல வாழைப்பழம் உள்ளது,  உணணுவீராக.

வெல்லா தினிப்புநீர் பொங்கலின் ஞாலத்துச் 

சொல்லார்ந்த ஆசிதன் னால் .

நல்ல வாழ்த்துதலைப்  பெற்று விட்டீராயின்,  இனிப்பு நீர் நோயும் அதற்கு அடங்கிவிடும்.

5.

தானாக உண்டலும் தீதேஇன்  பொங்கலே 

மேனாளில் இன்பம் பகிர்

 "
பொங்கலை ஒருவராக உண்டிடுதல் கூடாது.  

பொங்கலைத் தானாக உண்ணாமல் இருப்போருடன் பகிர்ந்துண்க. காரணம் பின்னாளில் அது இன்பம் தரும் சூழ்நிலைகள் உருவாகும்.

இங்கு "இன்பொங்கலே பகிர், மேனாளில் இன்பம்" என்று இயைத்துக் கொள்க.


இன்றின்பம் விட்டால் இனி இருப்பீர் ஓராண்டுக்(கு)

இன்றேயும்  உண்டல் நலம்

 இன்று விட்டுவிட்டால் இன்னும் ஓராண்டுக்குக் காத்திருக்க வேண்டுமாதலால்
இன்றே பொங்கலை உண்டுவிடுதல் நலம்.




பொங்கலில்  நல்வாழ்த்துப் பெற்றார் உலகத்தார்

தங்கஉள் ளத்தில்வாழ் வார்


பொங்கலன்று வாழ்த்துகளை நல்லபடி பெறுவீரானால். உலகத்தாராகிய நீங்கள் பொன்னான உள்ளத்துடன் வாழ்வீர்கள்.

என்றபடி.

உண்+தல் > உண்டல் : உண்ணுதல்

தங்கம்+ உள்ளம் --- தங்க உள்ளம் : பொன்னால் ஆன உள்ளம்.

அன்பர் தங்குதலுக்குரிய உள்ளம் என்றாலும் ஏற்க.

[இந்த இடுகையில் குழப்பம் விளைந்தது. இப்போது சரிசெய்யப்பட்டுள்ளது.]

வருந்துகிறோம்.


மெய்ப்பு பின்னர்.








சனி, 13 ஜனவரி, 2024

அச்சாரம் - சொல்.

 உங்களுடன் வணிகத் தொடர்பும்* வரத்தக உறவும்** வைத்துக் கொள்ள விரும்பும் ஒருவன், தொடக்க அணுகுதலுக்குப் பின் வேண்டாமென்று நகர்ந்து விடலாம்; அல்லது ஒரு சிறு தொகையைச் செலுத்தி அவ்வணிகத்தைத் தொடரலாம். ஓர் ஒப்பந்தம் தொடங்கி விட்டதா என்பது சட்ட ஆய்வுக்கு உட்பட்டது.

*தொடர்பு என்பதை ஒருமுறையே நிகழும் ஒன்றுகூடலையும் **உறவு என்பதை பல உடன்படிக்கைகளில் ஈடுபடும் நெடிய  செயல்தொகுப்புகளையும் சுட்டுமாறு இங்கு எழுதியுள்ளோம்.

மேற்கூறிய இந்தச்   சிறு தொகையை நம் தமிழில் அச்சாரம் என்போம்.

அடுத்துச் சேர்வது அல்லது சார்வது என்பதுதான் அச்சாரம். சேர்><சார். இச்சொற்கள் ஒரு பொருளன.

அடுச்சாரம் என்பதில் டுகரம் வீழந்தது.  வல்லின எழுத்து களைவுண்டது. இதற்கான காட்டுக்கள் முன் இடுகைகளில் காண்க.

நம் முன்னோர் ஒப்பந்தச் சட்ட நுணுக்கங்களை அறிந்திருந்தனர் என்பதையே இது காட்டுகிறது.

அச்சாரம் என்பது உடன்பாடு நிகழ்ந்துள்ளது என்பதற்கான சான்று  (evidence) ஆகும்.  உடன்பாடு என்பது இரு சாராரிடமும் ஏற்பட்டுள்ள சட்டவியல் உறவுமுறையை உணர்த்தும் ஓர் மனவொருமையைக் குறிக்கும். கொடுக்கப்படும் அச்சாரம் இதைக் காட்டும்.  அச்சாரம் என்பதை அடுத்துத் தொடர்தல் என்று பொருள்விரித்தல் ஏற்புடைத்தாகும். இதனால் அடு+ சாரம் என்பது பொருட்பொதிவுள்ள சொல்லாகிறது.  அடு என்பது முதனிலைத் தொழிற்பெயர் ஆகும்.  அதாவது விகுதி ஏலாமல் பெயராவது. சார்+அம் என்பது சார்தல் என்று பொருள்தரும் அம் விகுதித் தொழிற்பெயர்.  டுகர மறைவு இடைக்குறை ஆகும். தமிழர் என்போர் இறப்பிலும் பாடித் தன் இரங்கலை உணர்த்தும் பண்பாட்டினர்.  இன்று நாணம் காரணமாக யாரும் ஒப்பாரி வைப்பதில்லை. சொற்களை நீட்டுதலும் குறுக்குதலும் பாவலர்க்குத் தொல்காப்பியமுனிவர் வழங்கிய உரிமம் ஆகும்.  இஃது அவர்கள் அமைத்த சொற்களிலும் காணக்கிடக்கின்றதென்க. 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

குறிப்பு:

அச்சாரம்  ( இன்னொரு முடிபு)  https://sivamaalaa.blogspot.com/2014/07/blog-post_3224.html பார்க்க.  ( also  அச்சகாரம்).

(ஆக, இது  ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் விளக்கப்படலாம்).




வெள்ளி, 12 ஜனவரி, 2024

சீத்தா என்னும் புலிவகை -- சொல்

 இந்த வகைப்  புலிகட்குத் தமிழில் சிறுத்தை என்று பெயர்.

சிறு -  சிறிய வகை.

சிறு + தை (விகுதி)  -   சிறுத்தை.

இச்சொல்லில்,  று என்பது வல்லின எழுத்து.  பெரும்பாலும் தமிழ் மூலச்சொற்கள் வேறு மொழிக்குப் போனால், வல்லின எழுத்து மறையும்.  கட்டுமரம் > கட்டமாரான் என்பது போலும் சொற்கள் இதற்கு விதிவிலக்கு.  வல்லின எழுத்து மறையவில்லை.

சிறுத்தை >  சி (று) [ த் ]  ஐ

சிறுத்தை >  சி (றுத்) தை

சி > சீ.  நெடிலாகிவிட்டது.

தை >  தா.  

ஐகாரத்தில் முடியும் எழுத்துக்களை அயலார்  ஆ என்று நீட்டி முடிப்பர்.  எடுத்துக்காட்டு:

சின்னையா >  சீ-நா-யா

சிறுத்தை என்பது சீ(த்)தா என்ற புலிப்பெயருக்கு மூலம்.

றுகரம் மறைந்த இன்னொரு பழஞ்சொல்:

சிறுசு  >  சிசு.  ( குழந்தை ).  இங்கு று என்ற வல்லின எழுத்து மறைந்தது.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

வியாழன், 11 ஜனவரி, 2024

சாதனை - சொல்

 சாதனை என்பதென்ன என்பதைக் கண்டறிவோம். எந்த மனிதனையும் அண்டாமல், எப்பொருளையும் கையாளாமல் காற்றை இழுத்து மூச்சு விட்டுக்கொண்டு முனிவர்போல் அமர்ந்துவிட்டால் அதுவே ஒரு சாதனை என்று கருதலாமேயன்றி அதிலிருந்து இன்னொரு  சாதனை  தோன்றிவிட முடியாது . ஒரு செய்கை சாதனையா அன்றா என்பது ஒரு கருதுகோள்தான். இன்னொரு சாதனைக்கு இன்னொரு செயல்பாடு அடித்தளமாகிறது. அல்லது ஆகாமலும் போகலாம். முனிவர் அடுத்து மணலைக் கயிறாய்த் திரித்தால் அந்தச் சாதனை மேலோங்கி மூச்சுச் சாதனையை உங்கள் கவனத்திலிருந்து கீழே பணித்து விடும். மூச்சுச் சாதனை நீங்கள் மாத்திரம் அறிந்த தாகிவிடுதலும் கூடும்.

இவற்றிலிருந்து  சாதனை என்பது ஒன்றன் சார்பில் எழும் ஒன்று என்பதே உண்மை. சாதனை வேறு, அதனுடன் ஒட்டி வரும் விளம்பரம் வேறு. பின்னது இல்லாத போதும் சாதனை சாதனைதான்.

சாதனை  என்ற மதிப்பீடு சார்ந்து எழுவ தொன்றாதலின் அதற்குரிய வினைச் சொல் சார் என்பதே. 

சாதனை அறிவிப்பு  என்பதன் உள்ளுறுப்புகள்:

1  செய்கை

2 சாதனை என்ற மதிப்பீடு

3 அது பற்றிய செய்திப் பரவல் அல்லது விளம்பரம். இது பின்வரவு.

 சார்+ து + அன் + ஐ -  இங்கு ' து மற்றும் அன்' என்பன இடைநிலைகள். ஐ - விகுதி யாகும். ரகர ஒற்று   வீழ்ந்தது.(கெட்டது).

மதிப்பீட்டுக்குச் செயல்களில் முன்னவற்றின் ஒப்பீடும் வேண்டும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


செவ்வாய், 9 ஜனவரி, 2024

குயின் (ஆங்கிலம்) சொல்

 "Queen" என்ற ஆங்கிலச் சொல்மூலம் இந்தோ ஐரோப்பிய மூல மொழியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஐரோப்பிய மொழிகளிலும் இதன் திரிபுகள் எனப் படும் வடிவங்கள் காணப்படுகின்றன.

ஆங்கிலோ செக்சன் மக்கள் வருகைக்குமுன் வேறு சொல் இருந்திருக்கக் கூடும்.

கோ என்பது அரசன் என்று பொருள்படும் தமிழ்ச் சொல். "அரசனின் " என்பதைக் "கோவின்"  என்று கூறலாம். யகர உடம்படுமெய் இட்டால் கோயின் என்று இ து மாறத் தக்கது ஆகும்.

ஆகவே அரசி அரசனுடையவள் என்பது இதன் பொருள் ஆகிறது.

குயின் என்பதன் மூலச் சொல்  "பெண்"  என்றே பொருள் தருவதாகச் சொல்லப்படும். இதைவிடக் "கோயின்" என்பது இன்றைய ஆங்கிலச் சொல்லுக்கு மிக்க அணிமைத்தாகவும் பொருள் பொதிந்தாகவும் உள்ள படியால், இந்தோ ஐரோப்பியமும் தமிழிலிருந்தே இதைப் பெற்றிருக்க வேண்டுமென்பது உள்ளங்கை நெல்லிக்கனி யாகின்றது. தமிழுடன் மொழித்தொடர்பை ஐரோப்பியர் வரும்பாதவர்கள் ஆவர். ஆகவே நழுவவே விரும்புவர். ஆனால் முந்தைய ஆங்கிலர் நன்னூல் முதலியன கற்று வியந்து வாயடைத்து நின்றனர். தங்கள் மொழிகளிற் பெயர்த்தும் கொண்டனர்.  அவர்களின் இலக்கண அறிவு மலையுச்சியும் தொட்டது!


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்




ஞாயிறு, 7 ஜனவரி, 2024

நிஜம் - சொல்

 இது இரு வகையில் வந்திருக்கலாம்.

நில்>நிற்சம்>நிசம் >நிஜம்.

விகுதிகள்: சு + அம்.

எது "நிற்குமோ"  அது உண்மை.

உண்மை அல்லாதது நில்லாது.

நிறுவியது உண்மை.

நிறு > நிஜ் > நிஜம் 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்




தியாகி சொல்

 கணவரை இழந்து வாடிக்கொண்டிருக்கும் மனைவி, அக்கணவரின் எரியும் சிதைக்குள் புகுந்து தானு மெரிந்து சாம்பலாவது "தீயாகுதல்". இக்கருத்திலிருந்து:

தீயாகு + அம் > தீயாகம் > தியாகம்.

சொன்முதல் நெடில் குறுகியும் பெயரமையும். பிறவாறும் வரும்.

எ-டு:

சாவு> சவம் ( பிணம்)

தோண்டு+ ஐ > தொண்டை. 

வினைச்சொல்:  வா -  வந்தான். வருக.

எனப் பலவாகும்.

 கணவனாகிய அரசன் தோற்று  இறந்தபின் அரசி வாழ விரும்பாமையால் இது நிகழும் . பின்னர் இதன் பொருள் விரிந்தது.

தியாகம்> தியாகி.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்


சனி, 6 ஜனவரி, 2024

மாமூல் சொல்

 இனி மாமூல் என்ற சொல்லைக் காண்போம்.

இஃது ஒரு பேச்சு வழக்குப் புனைவுச் சொல் ஆகும்.  (பகவொட்டு       )

மா - மாறுபடாத, 

மூல் -  மூலத்தொகை. (முன் தீர்மானித்தது)

 இது பின் பிற  அண்டை மொழிகட்கும் பரவிற்று. இஃது உருது என்பது ஓர் ஏய்ப்புரை.


( எமன்: இதையும் அறிவோம்)

எம்மிலிருந்தே எம்மைக் கொல்வது,  ஒரு தேவனாக உருவகிக்கப்பட்டது). 

எம் + அன்

அன் -அணிமை, அணுக்கம் குறிக்கும்

அன்பு  - மனத்தின் அணுக்கம் ( அன்+பு)

அன், அண் பொருள் ஒன்றே.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.







 

வெள்ளி, 5 ஜனவரி, 2024

உக்கிரம், உத்கடம், உத்தண்டம் ஒப்பீடு.

தலைப்பில் கண்ட மூன்று சொற்களையும் ஒப்பீடு செய்து தமிழைச் சற்று விரித்து நுகர்வோம்.

உக்கிரம் என்பதனை முன் இடுகையில் ஓரளவு அலசியுள்ளோம். உக்கிரம் ( உக்கிரப் பெருவழுதி என்ற பெயரிலும் வரும் சொல்)  என்பதன் எல்லாப் பொருண்மைச் சாயல்களையும் அவ்விடுகையில் அலசிவிட வில்லை. சுருங்க இவண் குறிக்கலாம். (குறிக்கவில்லை)

உக்கிரம்,  இடுகை:- https://sivamaalaa.blogspot.com/2024/01/blog-post_3.html 

உத்தண்டம் என்பது  உக்கிரம் என்றே பொருள்படும்  இதனை உது + தண்டம் எனப் பிரித்து,  முன் சென்று தண்டித்தல் ( ஆய்ந்து பார்த்து முடிவு செய்யாமல் நடத்துவதுபோன்ற தோற்றம் தருதல் ) எனலாம். உத்தண்டம் செய்வோன்  முன் கூட்டியே அறிந்தவனாய் இருத்தலும் கூடும்).  உத்தண்டம் என்பதால் தகரம் இரட்டித்தது என்பதறியலாம்.

உத்தண்டத்தைத் தாஷ்டிதம் என்றும் கூறுவர்.  தாட்டுப் பூட்டென்று தாவினான் என்ற வழக்கிலிருந்து தாட்டு> தாட்டு+ இது + அம் > தாட்டிதம்>  தாஷ்டிதம் எனக் காண்க. பேச்சுவழக்குத் திரிபு.  தாண்டு> தாட்டு  (வலித்தல்).  பூட்டு(தல்), நிறுத்துதல்.

உது  அண்டு  அம் என்பன சேர்ந்தாலும் உத்தண்டம் என்றாகும்.  தகரம்  இரட்டித்தது. இவ்வாறு காணின்,  உக்கிரத்தன்மை சற்றுக்குறைந்த நிலையைக் காட்டலாம். இருந்தாலும் எதிர்கொள்ளற் கருத்தே.  அண்டுதல் - அடுத்துச் செல்லுதல். அண்டு அடு என்பன ஒருபொருளன.

உது + கடம் >  உதுகடம், உதுகடமாக என்று வரும்.  முன் நிற்கும் எல்லைகள் கடந்து எகிறுதல். இதுவும் மிகுதியாய் என்று  பொருள்படும் சொல்.  கடம்  <கட+ அம் .  ஓர் அகரம் கெட்டது,  இது உத்கடம் என்று மாறிற்று.  உதுகடம் என்பது வழக்கிறந்தது.

எனவே இவை பொதுவாய் மிகுதிப்பொருளன ஆகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

மெய்ப்பு    05012023   2209  



புதன், 3 ஜனவரி, 2024

உக்கிரம் - சொல் ( "உக்கிரப் பெருவழுதி ")

 உக்கிரம் என்ற சொல் தமிழில் வழங்கி வருகிற சொல். ஆனால் உலக வழக்கில் இல்லை அல்லது குறைவே. சங்க இலக்கியத்தில் "உக்கிரப் பெருவழுதி"  என்பது போலும் பெயர்களைக் காண்கி றோம்.  நாம் உலக வழக்கு என்பது அன்றாடப் பயன்பாட்டினை.

எப்படி அமைந்தது இச்சொல் என்பதை அறிந்துகொண்டு பின்னர் சொல்லமைப்புப் பொருளைக் கண்டறிவோம்.

உக்கிரம் என்பது  பல்பொருள் ஒருசொல். பல பொருள் எனினும் , அவற்றுள் மிகுந்த சீற்றத்துடன் ஒன்றைச் செய்வது. அதாவது போரிடுவது போலும் செய்கையில் ஈடுபடும்போது தொய்வு சிறிதுமின்றிச் செயல்படுவது   என்பதும் ஒரு பொருளாகும். பாய்ச்சல், எதிரியை விரைந்து பணிவித்தல் முதலிய செய்கைகளும் இவற்றுள் அடங்கும்.

இஃது ஒரு சுட்டடிச் சொல்.  இதில் உகரம் இருக்கிறது.  உ  என்பது முன்னிருப்பது என்று பொருள்படும்.  அவன், இவன் மற்றும் உவன் என்பவற்றில் உவன் என்பது மொழியில் இன்னும் இருந்தாலும் பல புதிய வெளியீட்டு அகராதிகளில் இல்லை. உக்கிரத்துக்கு ஒப்பானது கனல் என்று கூறப்படும்.  "கனல் தெறிக்க" என்பார்கள்.  அதுபோன்ற நடப்புதான் உக்கிரம்.

உக்கிரம் என்ற சொல்லை இரு பகுதிகளாக்குவோம்.  உக்கு + இரம்.

உ+ கிரம் என்பது பிறழ்பிரிப்பு.

இரு+ அம் > இரம். (இரு - இருத்தல்).

உகரத்துக்கு அடுத்து நிற்பது  "கு"  என்ற சொல்தான்.  இது வேற்றுமை உருபாகவும் வரும்.   மதுரை +கு,  சென்னை+ கு  என்று காண்க.  உக்கிரம் என்ற சொல்லில் உருபாக வராமல்  சொல்லினுள் ஓர் அடைவாக வந்துள்ளது. சொல்லின் உள்ளுறைவாக வுள்ளது.  முன் இணைந்திருப்பது என்பதுதான் உக்கு என்பதன் பொருள்.

அடுத்துள்ளது இரம் என்பது. கிரம் என்பது இரம் என்பதிலிருந்து பிறழ்பிரிப்பால் வந்தது காண்க. இரு+அம் என்பதே இரம் என்றாம். ருகரத்தில் பின் நின்ற உகரம், கெட்டு ( மறைந்து)  ர் மெய்யானது அகரத்துடன் இணைந்து இம்மில் முடிந்தது.

இவற்றினின்று ஒரு மனிதற்குச் சீற்றத்துடன் கூடிய செயல் திறனும் விரைவும் முன்னணியில் வைத்தற்குரிய நடவடிக்கை  என்று பண்டை மக்கள் கருதியது தெளிவாகிறது.  அரசருக்கு இத்தகைய செயற்பாடு பெருமை அளித்தது. அதனால் உக்கிரம் கொண்ட அரசனைப் போற்றிப் பாடினர். இப்போது காவல்துறைஞனாய் இருந்தாலும் மக்களைப் பணிவன்புட.ன் கவனித்தல் வேண்டும் என்பதே போதிக்கப் படுகிறது. ஒருவேளை உக்கிரமாகச் செயல்படுவது படைஞர்கட்குப் பொருத்தமான செயல்பாடு ஆகலாம். சொல் உலக வழக்கிலிருந்து பின் சென்றமைக்கு வழக்குக்கான சூழ்நிலைகள் மாறியமைந்தமை ஒரு காரணமாகும். வெளிநாடு சென்று போரிடும் வீரர்கள் உள்ளடங்கிய காலை உக்கிரம் முதலிய குணங்களைக் காட்சிப் படுத்தும் வாய்ப்பை இழந்து அண்டையிலுள்ளோருடன் கலாய்க்கவே இயலுமன்றிப்  பிறவகை வாய்ப்புகள் இலராவர்.

 பிற பின்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.



திங்கள், 1 ஜனவரி, 2024

சளி நோய்ப் பரவல்

 இலவசமாய் வந்தசளி நோய்த்தொற்றும்  இந்நாளில் 

குலவசமாய் ஆகாமல் இலவசமாய்ச் செலவேண்டும்;

சிலர்வசமாய் இதுமாறிச் சேர்த்தபணம் செலவாகிப்

பலர்வசமாய்ப் பரவுவதும் பாவமிகை பராபரமே!

பொருள்

சளி நோய் இலவசமாகததான் கிடைக்கிறது. மற்ற இலவசங்களை வீசி எறிவதுபோல் இதை வீசமுடியாமல் திணறிக் கொண்டிருக்கிறோம். ஒரு குல முழுமையும்  நோய் வசப்படுத்திக் கொள்கிறது!! மருத்துவர்களுக்கு நலல வருமானம்! நமக்குச் செலவும் முயற்சியும் வீண் அலைச்சலும். பரவி மற்றவர்களையும்  peeடித்துக்*  கொள்கிறது 

 இறைவா!  ஏன் இந்தச் சோதனை 

என்பது இப்பாடல்.

*பீ  டி த்துக்

software error.  To read as*பீ  டி த்துக்

பாவமிகை -  பாவத்தின் மிகுதி.   அதாவது இரங்கத்தக்க நிலை.


விஜயகாந்த் அவர்கள் மறைவு

 மீண்டும் வந்திடுமோ மகுடமுகி (கோவிட்டு)

தாண்டும் பொன்யுகமே எனமிகவும் ஏமாற்றம்!

ஆண்டில் சீர்வெற்றிக் காந்தவரும்

சென்றுவிட

யாண்டும்  துயர்பெருக யாமே வருந்துகிறோம்.

அரும்பொருள்

வெற்றிக் காந்த் (விஜய காந்த்) என்னும் அரசியல் தலைவர் மறைவிற்கு வருந்துகிறோம் .கோவிட்19 மறுபடியும் வராத அந்த பொற்காலம், இனி வருமோ? நோய்வராது  என்னும் பொற்காலம் வராதுபோனது பெரிய ஏமாற்றம் -- இது பாட்டின் பொருள்.