திங்கள், 22 ஜனவரி, 2024

ஈசன் (மாரீசன்)

மாரீசன் என்ற இராமயணப் பெயர் நினைவுக்கு வந்தது.

அதைத் தேடினேம்.    ( ஏம், ஓம் என  இரண்டும் வரலாம். ஏம் என்பது முன்னிலையாரை உளப்படுத்தாமல் சொல்லும் திறனுடையது).(  தேடினோம் என்று எழுதுவது தான் இப்போது பலரும் அறிந்து கடைப்பிடிப்பது ஆகும் ). 1,*

https://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_6492.html

இனி ஈசன் என்னும் சொல்லுக்கு இன்னொரு முடிபு கூறுவோம்:

ஈதல் -   தன் நிலையின் ஒப்புமை இல்லாதவருக்கு இயன்றது உதவுதலாம்.

இறைவற்கு இணை யாருமிலர். அவரே யாவர்க்கும் ஈந்து காப்பவர்.

ஈ+து+அன் > ஈ+ சு+அன்> ஈசன்.

உகரம் கெட்டது.

தகர வருக்கம் சகர வருக்கமாகும்

எ-டு: தனி > சனி

அத்தி > அச்சி  பாப்பாத்தி, செட்டிச்சி வண்ணாத்தி, ஆய்ச்சி

அத்தன் அச்சன் அத்தி அச்சி.


 இடுகைகளில் காண்க 

த் இடைநிலை ச் எனவாயிற்று.

தி > சி

இறைவர் ஈஷ்வர் திரிபுக்கு இது மற்றொரு முடிபு கூறியவாறு.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

குறிப்புகள்:

*நன்னூல் 140 (விகுதிகள்.)

அன் ஆன் அள் ஆள் அர் ஆர் ப மார்
அ ஆ கு டு து று என் ஏன் அல் அன்
அம் ஆம் எம் ஏம் ஓம் ஒடு உம் ஊர்
க ட த ற ஐ ஆய் இ மின் இர் ஈர்
ஈயர் கயவும் என்பவும் பிறவும்
வினையின் விகுதி பெயரினும் சிலவே 

கருத்துகள் இல்லை: