வெள்ளி, 5 ஜனவரி, 2024

உக்கிரம், உத்கடம், உத்தண்டம் ஒப்பீடு.

தலைப்பில் கண்ட மூன்று சொற்களையும் ஒப்பீடு செய்து தமிழைச் சற்று விரித்து நுகர்வோம்.

உக்கிரம் என்பதனை முன் இடுகையில் ஓரளவு அலசியுள்ளோம். உக்கிரம் ( உக்கிரப் பெருவழுதி என்ற பெயரிலும் வரும் சொல்)  என்பதன் எல்லாப் பொருண்மைச் சாயல்களையும் அவ்விடுகையில் அலசிவிட வில்லை. சுருங்க இவண் குறிக்கலாம். (குறிக்கவில்லை)

உக்கிரம்,  இடுகை:- https://sivamaalaa.blogspot.com/2024/01/blog-post_3.html 

உத்தண்டம் என்பது  உக்கிரம் என்றே பொருள்படும்  இதனை உது + தண்டம் எனப் பிரித்து,  முன் சென்று தண்டித்தல் ( ஆய்ந்து பார்த்து முடிவு செய்யாமல் நடத்துவதுபோன்ற தோற்றம் தருதல் ) எனலாம். உத்தண்டம் செய்வோன்  முன் கூட்டியே அறிந்தவனாய் இருத்தலும் கூடும்).  உத்தண்டம் என்பதால் தகரம் இரட்டித்தது என்பதறியலாம்.

உத்தண்டத்தைத் தாஷ்டிதம் என்றும் கூறுவர்.  தாட்டுப் பூட்டென்று தாவினான் என்ற வழக்கிலிருந்து தாட்டு> தாட்டு+ இது + அம் > தாட்டிதம்>  தாஷ்டிதம் எனக் காண்க. பேச்சுவழக்குத் திரிபு.  தாண்டு> தாட்டு  (வலித்தல்).  பூட்டு(தல்), நிறுத்துதல்.

உது  அண்டு  அம் என்பன சேர்ந்தாலும் உத்தண்டம் என்றாகும்.  தகரம்  இரட்டித்தது. இவ்வாறு காணின்,  உக்கிரத்தன்மை சற்றுக்குறைந்த நிலையைக் காட்டலாம். இருந்தாலும் எதிர்கொள்ளற் கருத்தே.  அண்டுதல் - அடுத்துச் செல்லுதல். அண்டு அடு என்பன ஒருபொருளன.

உது + கடம் >  உதுகடம், உதுகடமாக என்று வரும்.  முன் நிற்கும் எல்லைகள் கடந்து எகிறுதல். இதுவும் மிகுதியாய் என்று  பொருள்படும் சொல்.  கடம்  <கட+ அம் .  ஓர் அகரம் கெட்டது,  இது உத்கடம் என்று மாறிற்று.  உதுகடம் என்பது வழக்கிறந்தது.

எனவே இவை பொதுவாய் மிகுதிப்பொருளன ஆகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

மெய்ப்பு    05012023   2209  



கருத்துகள் இல்லை: