திங்கள், 22 ஜனவரி, 2024

இராமர் எப்படி......?

 இராமர் எப்படித் தியாகி, எப்படித் தெய்வம் என்று வினவலாம்

இராமர் ஓர் அரசர்.  பட்டத்துக்கும் பதவிக்கும்  இடையூறு வரும் நிலையில் போட்டியாளனைப் பிடித்துச் சிறையில் போடாமலும்  தந்தைக்கு எதிர்வினை எதுவும் ஆற்றாமலும் பொறுமையுடனும் வனவாழ்வே தனவாழ்வென்று போய்விட்டார். தியாகமும் தந்தை சொல்லுக்கு மதிப்பளித்தலும் துன்பம் கண்டு துவளா நெஞ்சுரமும் அவருக்கு. .அடி எடுத்து வைத்ததுமே மனித நிலையைக் கடந்துவிடுகிறார். எல்லாம் எனக்கே என்று எதுவும் சொல்லவில்லை .அவருக்கு எதுவும் வேண்டும் என்று ஓலமிட வில்லை. அவர் வேண்டுதல் வேண்டாமை இல்லார். இறைப்பண்பின் வெளிபாடு இது. வள்ளுவனும் பாடிய பண்பு.

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.

இப்படியே வால்மிகியையோ கம்பனையோ படித்து அறிந்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை: