திங்கள், 30 செப்டம்பர், 2019

உந்தியும் சூரியகாந்தியும்.

உந்தி என்ற பதம் கொப்பூழ் என்று பொருள்படும்.  சூரியகாந்தி என்பது ஒரு மலர் என்பது நீங்கள் அறிந்ததே. இரண்டிற்கும் ஏதும் பொருள் தொடர்பு
இருப்பதாக யாரும் கூறார்.

சூரிய காந்தி என்ற சொல்லை விளக்கிய இடுகையில் காந்தி என சொல் காண்+தி என்று அமைவுற்றது என்று காட்டினோம். ஆனால் இதற்கு எடுத்துகாட்டு ஏதும் தரவில்லை.

இப்போது ஒன்று காட்டுவோம்.

குழந்தை கருவில் உள்ளபோது அது தன் உணவைத் தாயிடமிருந்தே கொப்பூழ் மூலம் பெறுகிறது. கொப்புழ் தொப்பூழ் எனவும்படும்.

குழந்தை உண்பது கொப்பூழால் ஆதலின் அது  உண்+தி =  உந்தி எனபட்டது. இங்கு கவனிக்கவேண்டியது  ண்+தி  = ந்தி என்பதே.

உணவு குறிக்க வருவது : உண்+தி= உண்டி. அதே சொல்லும்  விகுதியும் இருவேறு விளைவுகளை உண்டாக்குவது இயல்பேயாகும்.

அறிவீர் மகிழ்வீர்.

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

பரிகாசம்

பரிகாசம் என்பதைப் பேச்சில் பரியாசம் என்பதுண்டு.

இச்சொல்லில் இரு துண்டுகள் உள. இவற்றை வினையாகக் காட்டினால் வருமாறு :

பரிதல்.
காய்தல்.

இவற்றை  உவத்தல் (பரிதல் )  , வெறுத்தல் (காய்தல்) என்று வேறு பதங்களால் தெளிவிக்கலாம்.

காய்தல் என்ற சொல்  அம் விகுதி பெற்றுக்  காயம் என்றாகி  ய - ச திரிபு விதிப்படி காசம் என்றாகும்.

பரிகாசமாவது பரிந்து காய்தல். அல்லது (இவ்விரண்டனுள்) ஒன்றைச் செய்வதுபோல்இன்னொன்றைச் செய்தல்.

பரிதலும் காய்தலும் தமிழ்.

இதுதான் சுருக்க விளக்கம்..

வியாழன், 26 செப்டம்பர், 2019

நாகர் என்போர் யார்

நாகர் என்று இன்று குறிப்பிடப் படுவோர் யாரென்று நாம் அறிந்துள்ளோமா
என்று திட்டவட்டமாய்க் கூறுவதற்கில்லை.

இற்றைக்கு நாகாலந்து  என்னும் மாநிலத்தில் உள்ளோரே நாகர்கள் என்று கூறுதல் ஒரு நல்ல பதில்தான்.

ஆனால் மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார் இவர்கள் கடலில் இருந்த ஒரு மலையில் வாழ்ந்தவர்களாகக் குறிக்கிறார்.

இம்மலை நாகாலாந்திலுள்ள மலையாகத் தெரியவில்லை.  ஆகவே அந்த நாகரும் இந்த நாகாலாந்து நாகரும் ஓரே வகை என்று கூறுவதற்கில்லை. சிலர்  நக்கசாரணர் நாகருள் ஓர் உட்பிரிவினர் என்பர். இதிலும்  தெளிவில்லை.

நக்கசாரணர் நாகர் எனல் உம்மைத் தொகையாகவும்  இருக்கலாம்.

நக்கசாரணர் என்பதற்கு எம் விளக்கம் இது.  வாசித்துக்கொள்ளுங்கள்.

இவர்கள் உடலில் நல்ல நிறமுடையோராய் இருந்தனர்.   ஆதலால்   " நக்க சாரணர் "  எனப்பட்டனர்.  நகுதல் :  ஒளி வீசுதல்.  Gregarious people with good skin colour என்பதே நக்க சாரணர் என்பதற்குச் சரியான மொழிபெயர்ப்பு.  ஒளிவீசும் நட்சத்திரங்கள் உண்மையில் நக்கத்திரங்களே.  இருளில் நகுவன அவை.  புகு >  புக்க; நகு > நக்க; தகு > தக்க; பகு > பக்க.

22.5.2019.  இடுகை.


இனி   நாகர் என்ற சொல்லைப் பார்ப்போம்:


நகுதல்:   ஓளிவீசுதல்.

நகு+ அர் =  நாகர்.   ஒளி வீசும் நிறத்தினர்.

இது முதனிலை நீண்டு பெயரானது.

நகு  >  நக்க.   பெயரெச்சம்.   ( ஒளிவீசுகின்ற )

நக்கசாரணர்.


இவற்றை அடுத்து வேறு கோணத்தில் பார்ப்போம்.  மீ ண்டும் சந்திப்போம்.


செவ்வாய், 24 செப்டம்பர், 2019

சிலாகித்தல் என்றால் என்ன?

இன்று சிலாகித்தல் என்ற சொல்லெழுந்த வகையை  அறிந்துகொள்வோம். இஃது இன்னும் வழக்கில் உள்ள சொல்லாம்.

அறிதற்கு எளிமையானதே இது.

இதனைச் "சில  ஆகுதல்" என்ற தொடர்கொண்டு  அறிக.

இந்தச் சொல்லiைப் படைத்தவர்,   ஆகுதல்  என்ற செந்தமிழ் வடிவினைக்
கையிலெடுத்து  ஆகி என்று வினை எச்சமாக்குகிறார்.

அப்புறம்  அதில்  -தல் என்னும் தொழிற்பெயர் விகுதியை  இணைக்கிறார்.

இணைக்க  "ஆகித்தல்"  என்ற வடிவம் கைவரப்பெறுகிறார்.

இது  "ஓது" என்ற சொல்லை  "ஓதி"  என்று எச்சமாக்கி அப்புறம்  -தல் விகுதி இணைத்து ஓதித்தல் என்று தொழிற் பெயர் ஆக்கியது போலுமே. இதை  "ஆமோதித்தல்" என்பதில் வர அறிந்து மகிழ்வீர்.

அந்தக் காலத்தில் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்துப் புலவோர் இது கண்டு மகிழார் எனினும்  புதுமை விழைவார் யாதுதான் செய்வது.  கூடுதலான எதிர்ப்பு வரின் பிறமொழி என்று மழுப்பிட வேண்டியதே.


எச்சத்தினின்று வினைபுனைதல் பாலி முதலிய பிற மொழிகளிற் காணக் கிடைப்பதே.

சில வழிகளில் புகழ்தல்   என்பது சிலாகித்தல் என்பதான புதுப்புனைவுக்குப்  பொருள்  ஆயிற்று.  புகழே ஆக்கம்.  மற்றென்ன உண்டு மானிடற்கு?  இசைபட வாழ்தலே ஊதியமென்றார் வள்ளுவனார்.  சிலாகித்தலுமது.


ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

தடைக்குப் பின் எழும்

எழுதலாம் என்றெம்  இறகிகைக் கொண்டால்
பழுதிலார் நண்பர் பலர்வர நிற்கும்
பொழுது  தொலையுமால் பூத்தன நீங்கா
எழுதரும் பின்நின் றது.



அது என்றது எழுதும் முயற்சியை.
இறகி :  பேனா.
ஆல்  -  ஆனால்
பூத்தன -   கருத்துகள்.

வியாழன், 19 செப்டம்பர், 2019

சூரியகாந்திப் பூ.

சூரியன்  ஒளிவீசும் பக்கமாகத் திரும்பிக்கொள்ளும் பூவே சூரிய காந்திப்பூ. இதற்குப் பெயர் அமைந்த விதம்:

இப்பெயரில் சூரியன் என்பதற்கு விளக்கம் தேவையில்லை. வேண்டுவோர் வாசிக்க:

https://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_29.html


காந்தி  எனற்பாலது  காண்+தி என்பதன்  திரிபு.

சூரியனைக் காணத் திரும்பும் மலர்.

காண்தி   >  காந்தி.

இவ்வாறு  வருவது  காண்டி என வருதல் வழக்கம் எனினும்,  இது மெலிக்கும்வழி மெலித்தல் என்னும் கவிதை  நெறியைப் பின்பற்றிக் காந்தி என்றானது.  காண்டி என்பது வல்லெழுத்துப் பயில்கிறது.

காந்துதல் என்பது  சூடேற்றுதல்.  காந்து >  காந்தி  எனினுமாகும்.






புதன், 18 செப்டம்பர், 2019

அல்லியும் தாமரையும்

இந்த இரு மலர்கள் பற்றிச் சிந்திப்போம்.

தாமரை என்பது  தாழ  (கீழே)  உள்ளதை மருவி நிற்கும் மலர் என்று பொருள்படும்.

தாழ இருப்பது தண்ணீர்.

இதன் அமைப்பு:

தாழ் + மரு + ஐ   >  தா + மரு + ஐ =   தாமரை.

இதுபோல் ழகர ஒற்று இழந்த வேறு சில:

தாவணி   (  தா +  அணி )     தாழ் > தா.   கடைக்குறை.
தாக்கோல்.  1


இனி  அல்லி என்பது தண்ணீரை விட்டுவிட்ட சொல்.  அல் என்பது இரவு.
இரவில் மலர்வது  என்ற பொருளில் "அல்லி"  எனப்பட்டது.2



அடிக்குறிப்புகள்:


1.  நாதாங்கி.  -  கதவும் கதவுச் சட்டமும்  ஆகிய முழு அமைப்பில் ஒன்றிலிருந்து  நாக்கைப் போல்  ஓரத்தில் நீட்டப்பெற்று மற்றொன்றில் சென்று பற்றி அமர்வது. நாவும் அதன் தாங்கியும்.

2 இரவி என்ற சொல்லும் இரவு  இருள் என்ற கருத்துக்களை  அடிப்படையாகக் கொண்டு எழுந்த சொல்லே.  இர் =  இருள்.  இரவு. என்பவற்றின் அடிச்சொல்.  அவித்தலாவது  விலக்குதல்.  இது  சூரியனைக் குறித்தது.

செவ்வாய், 17 செப்டம்பர், 2019

வார்த்தை

எந்தச் சொல்லாய்வாளனும் இந்தச் சொல் இந்த அடிச்சொல்லிலிருந்துதான் வந்தது எனலாம்.  இதற்கு மாறுபாடாகப் பிற நிபுணர்களால் வெளியிடப் படும் கருத்துகளையும் சற்றே கவனித்துக்கொள்ள வேண்டும்.   அதுவே முறை. யாம் பிறவட்டுக் கருத்துகளை  விளக்குவதில்லை எனிலும் அவற்றையும் அறிந்த பின்னரே ஈண்டு வரைகிறோம்.

நிபுணர் -   ( நிற்பு + உணர் ).   >> நிற்புணர் >   நிபுணர்.

நிபுணர் என்பது  றகர ஒற்று மறைந்த ஒரு கூட்டுச்சொல்.

நிபுணராவார் நிலை  (  நிற்பு  :  நில் + பு) )  உணர் - உணர்ந்தவர்.

இதுபோல் அமைந்த இன்னொரு  சொல்:  விபுலம்.

விழு புலம் >   விபுலம்.

இங்கு ழுகரம் மறைவு.  இது மிக உயர்ந்த இடம்  அல்லது தன்மையைக் குறிப்பது.

எ-டு:  விபுலாநந்த அடிகள்.

எல்லாத் திரிபுகளையும் நீங்கிடச் செய்யின் இவ்வாறு காண்க.

விழு புல ஆ(க) நன் து  (அ)  அடிகள்.

ஆ எனற்பாலது  ஆதல்/  ஆக்கம் குறிக்கும் ஒரு முன்னொட்டு.

காயம்  = வானம். ( தொல்காப்பியச் சொல்)

காயம்  >  காயம்.

நல் >  நன்.  (  லகர  0னகரத்  திரிபு.  இறுதி ஒற்று )

நன் + து  >   நந்து.    (  நல் + து = நன்று  என்பது செந்தமிழ் வடிவம்).

ஆ + நந்து + அம்  =  னந்தம். அல்லது  ஆநந்தம்.

சொற்கள் வார்த்து எடுக்கப்படுகின்றன என்ற கருத்தும்  ஒப்புதற் குரியதே.

வினைச்சொல்:  வார்த்தல்.

வார்+ தை ( விகுதி)  >  வார்த்தை.

இலக்கணத்தாலும் இலக்கியத்தாலும்  வழக்காறுகளாலும் வார்த்து எடுக்கப்படுவது.

மற்றொரு முடிபு:

வாய் >  வாய்த்தை > வார்த்தை.  (திரிபு).


எனவே இருபிறப்பி என்று முடிக்க.

வாய்  >  வார்

இதில்:

வாய்  (  நீட்சிக் கருத்து )    எ-டு:  வாய்க்கால்,  கால்வாய்.
வார்  இதுவுமது.  (  நீட்சி).  தோல்வார்,  இடைவார்.

நுண்மாண் நுழைபுலத்தால்  அறிக.

புலன் :  அறிதலுமாம்.    எ-டு:  நுழைபுலம்,  நுழைபுலன்.

மீண்டும் காண்போம்.


மேலும் வாசிக்க:

https://sivamaalaa.blogspot.com/2018/03/aoo-aoaauu-vaarthai.html





வெள்ளி, 13 செப்டம்பர், 2019

அந்தோ என்ற சொல்.

இன்று  அந்தோ என்ற சொல்லை ஆய்வு செய்வோம் வருக.

அந்தோ என்பது தமிழில் பயின்று வழங்கும்  சொல்லாகும். இந்தப் படல் வரிகளைப் பாருங்கள்.

"அந்தோ என் ஆவியெல்லாம்
கொள்ளை கொண்டாரே
ஆறுமுக வடிவேலன் சிவபாலன்"

இன்னொரு பாடல்:

"சொப்பன வாழ்வில் மகிழ்ந்து ---  சுப்ரமண்ய
சுவாமி  உனைமறந்தார்  ------ அந்தோ!"

அந்தோ என்பதற்கு  ஐயோ  எனபதாகப் பொருள்  கூறுவதுண்டு.

ஐயோ அந்தோ அம்மோ அக்கோ அண்ணோ என்பவெல்லாம் மனம் மிக இரங்கி ஒலியெழுப்ப்புதலே.

In English "Alas"  is of the same kind of exclamation. Another:  OMG!

அம்  என்பது  அம்மா என்பதன்  முன் பகுதி.

தோ என்ற  விளிவடிவின் எழுவாய் வடிவம்  பழைய "தை"  என்பதாகும்.

இந்தச் சொல்லுக்கு  தந்தை என்பது பொருள்.

தம் + தை  =  தந்தை.
எம்+ தை =   எந்தை.
நும் + தை=   நுந்தை.

தம் + அப்பன் =  தமப்பன்  திரிபு:  தகப்பன்.
தம் +  ஆய்=  தாய். 

தந்தை  >  தந்தாய்!
தந்தை  >  தந்தோ.

தம். எம்.  நும்  இவற்றை விலக்கி உணர்க.

தை > தா!    இது விளிவடிவம்.

தை >  தோ!   இது ஓகாரம் வந்த விளி.


அம்+ தோ =  அந்தோ:   அம்மையே அப்பனே என்று இருவரையும் விளித்தவாறு.

அன் +  தோ  =  அந்தோ எனினுமாம்.    அன் என்பது அன்னை என்பதன் பகுதி.

தமிழ்தான். அறிக.
 

வியாழன், 12 செப்டம்பர், 2019

செவ்வாய், 10 செப்டம்பர், 2019

சகஜம் சகசம் என்பவை.

சகசம் என்ற சொல் உலவழக்கில் பெருவரவிற்று என்பதை அறிவீர்களே.  இயற்கையில் நடப்பவையும் இயற்கையாய் நடப்பவையும் சகசமானவையாய் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.   நிலநடுக்கமென்பது  இயற்கையாய் இயற்கையில் நடப்பினும்  அது சகசம் அல்லது சகஜம் அன்று.

அடுத்து அடுத்து நடப்பதாயின் சகஜம் அல்லது சகசம் ஆய்விடும்.  ஆகவே எது சகசம் என்பதைத்  தீர்மானிப்பத்ற்குக்  கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்வீர்.

இவற்றுள் மூழ்கிவிடாமல் சொல்லைக் கவனிப்போம்.

வீட்டில் அம்மா சமையல் செய்வது சகசம்.


அகம் >  சகம். 

முன் இடுகைகளில்  விளக்கிய விதி இது.

அடு  - இதுவும் அஜு  என மாற்றக் கூடியதே.

இது எப்படி என்றால்  கடை > கட  .> கஜ எனற்பாலதை ஒத்ததே.

சக  +  அஜு  + அம் =  சகஜம்.
.
சக  + அச +   அம். =  சகசம்.
 
அடு -  அசு  -  அம்

>   (சக)  அச  அம்.

அதுவே  அது. வேற்றுமை யாது.?

ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

சாகசச் சொல் அமைந்த விதம்

சாகசம் என்பது  அருமையாய் அமைந்த சொல்.

உலகில் திறனுடையோர் பலவிதச்  சாகசங்கள் செய்து புகழுறுவது உங்களுக்குத்  தெரியும்.  ஆகவே சாகசம் என்பது யாது என்று விளக்கவேண்டா என்பது சரிதான்.  இருப்பினும்  தெரியாத  ஒரு சிலருக்காக ஓரிரண்டு கூறுவோம்.

காண்போர் இது துணிகரமான செய்கை என்பது;   அல்லது இது வெறும் பாசாங்கு என்பது. இது காண உண்மையே போன்றது ,  கண்டேன் வியந்தேன்  என்று போற்றுவது. இது செய்வோனைச் சாகசன் என்பது.

இத்தகு செயலை  ஸாகஸம் என்றும் எழுதுவர்,  வடமொழி  என்பர்.

சாவதுபோலப் பாசாங்கு பண்ணி  (பசப்பி) காண்போரை அசத்தினால் அதுவே
சாகசம்.   அது சொல்லிலே இருக்கிறது.

சா  ( சாகு)    ஒரு வினைச்சொல்.
அசத்து   (  அச)  இன்னொரு வினைச்சொல்.

சாவது  (  சாகுவது) போல்  நடித்து அசத்திவிடுவது.

சாகு என்பதில்  கு என்பது  சாரியை.
அச என்பது  அசத்து என்பதன்  அடிச்சொல்.

சாகு +  அச +  அம்   =  சாகசம்.

நாளடைவில்  சாகசங்கள்  பெருக  சொற்பொருளும் விரிதல்  இயற்கை.

மோடி சிவன் விரைவில் வெற்றி.

சந்திரனில் தண்திரளின் தென் துரு வத்தில்
சடுதியிலே பதிவுகொளும் நெடுநோக் கத்தில்
உந்துபடை சீறியெழச் சென்று சேர்ந்தும்
ஓரிருகல் தொலைவுக்குள் ஒலிய லைகள்
முந்திவிலக் குண்டதனால் குந்த கம்தான்
மூண்டதெனி னும்வெற்றி நீக்க முண்டோ
வந்துநகை செய்திடுமே விரைவில் வண்ண
வாகைதனை மோடிசிவன் சூடு வாரே.

அரும்பொருள்

ண்ிரள் :   ிர்ந்ங்கிய ஒளியை வுகிற 
(நிலு.) 
ென் ுருவம்:  இு நிலின் ென் ுருவம்
ி :  விரைவு.
ிவு :  இறங்கி உலிடை வெற்றி பெறல்.
ெடு நோக்கம் -  ொலைவில் உள்ளக்
ைக் குறிவத்ல்.

ந்து பை -  எறிபை வான் கம் மிய
ல்  -  மைல் ொலைவு.

ஒலி அலைகள் :   ரேடியோ அலைகள்.  

ந்தி விலக்குண்ட -  மங்கூட்டியே  அறந்
அல்லுண்டிக்கப்பட்டுப் போன.

ந்தம்  =   கெடல்.

ெற்றி நீக்கம்  -  ோல்வி.
ிரிப்பு.   

ாகை =  வெற்றி மால

ோடி:   இந்தியப் பிரர்.

ிவன்  :  இந்தியிண்விக் கத் ைவர், 

புதன், 4 செப்டம்பர், 2019

கைவலி ( வெண்பா)

கணுக்கையின் நோவால் பணிக்கின்று தாழ்வே
தணிக்கவும்  யாதுசெய அந்தோ--துணிக்கொன்று
வந்தபயன் கண்டீர் வலித்துயான் கட்டினேன்
நொந்தநிலை மாற்றிற் றது.

16.8.2019

கையில் வந்த வலிக்கு   ஒரு துணி  கட்டியதில்  வலி  குறைந்தது.
துணிக்கும் ஒரு நல்ல பயன்  ஆயிற்று. இந்தப் பாட்டு
அதைப்பற்றியது.

அரும்பொருள்:

நோவு -   துன்பம்,
தாழ்வே  -  மந்த நிலைதான்.
தணிக்க -  வேதனை குறைக்க
அ ந்தோ  -  ஐயோ.
வலித்து  -  இழுத்து  இறுக்கமாக.
நொந்த  -  துன்புற்ற,

செவ்வாய், 3 செப்டம்பர், 2019

கடினத்தில் எளிமை

கடுமையை. உடையதாய் இருந்த மரத்திலிருந்து உருவான தாள்  சிறப்பாய் அமைந்துவிட்டது.

அதுதான் கடுதாசி.

கடுமையைக் குறிப்பது  கடு என்னும் முதனிலை..

தா என்பது உண்மையில் தாள் என்ற சொல்லின் கடைக்குறை.

தாள்  என்பது நெற்பயிர்களில் உள்ள தாள்.. அதுபோலும் பிற தாள்களையும் குறிக்கும்.  எடுத்துக்காட்டு:   வெங்காயத் தாள்.  பூண்டுத் தாள். பிற்காலத்தில்
காகிதத் தாளையும் குறித்தது.  "பேபிரஸ்"  என்னும்  இலை குறித்த சொல்லே பின் பேப்பர் என்ற ஆங்க்கிலச்சொல்லுக்கும் அடியாய் அமைந்தது,

எனவே  கடுதாசிக்குள்  தாவரத் தாள் புகுந்ததில் வியத்தற்கு ஒன்றுமில்லை.

கடு + தாள் + சி.>  கடு + தா(ள்) + சி.

ளகர ஒற்று மறைந்து சொல் தடை ஒலி ஏதுமின்றி ஒழுகுவதுபோல் அமைந்தது  ஒரு திரிந்துசிறத்தலே  ஆகும்.

சி என்பது விகுதி.   இதைச் சிறப்புக்கு அடையாளமாகக் கொள்ளுதலில் தவறில்லை.  சொல் அமைத்த ஒருவரோ  புழங்கிய   ஊர்மக்களோ  இவ்வாறு
ஒலித்தடையை விலக்கிக் குறித்த பொருளின் உயர்வை உணர்த்தி  யிருக்கலாம்..  கடுதாளி என்பதே கடுதாசி எனல் ஒருபுறம் இருக்க.


 திருத்தம் பின்,  (தட்டச்சு)

ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

விருந்தாளியும் விருந்தாடியும்.

விருந்தாளி  என்ற சொல்  விருந்தாடி என்றும் உலக வழக்கில் வரும்.  உலக வழக்கு எனல் செய்யுள் வழக்கு அல்லாதது.

இங்கு  யாம் சுட்டிக்காட்ட விரும்பியது  ளகர டகரத் திரிபுகள்.

ஒன்றை ஆளுதல் அதை  நிறுவி நடத்துதலே ஆகும். எனவே  விருந்தாளுதல்  விருந்து ஏற்பாடு செய்து  அதில் பிறர்  பங்கு பெறச்  செய்தல்.  பங்கு பற்றியோர் விருந்தாளிகள்  ஆவர்.

ஆள்  என்பதை  இவ்வாறு உரைக்காமல் நபர் என்று கொள்ளுதலும்  கூடும்.

எவ்வாறாயினும் ஆளி  என்பது  ஆடி என்று திரிகிறது.

இவற்றைக் கவனியுங்கள்.

மள்  >   மாள். ( வினைச்சொல் )  பொருள்:  இறந்துபோ,  உயிர் குறைபடல் ஆகு,
மள்  >   (  மடு  ) >  மடி.   இறந்துபோ,
இன்னொரு காட்டு:  விள் >  விடி.
மள்  >  ( மளி  )  மளிகை   :    உயிரற்ற  விலைப்பொருட்கள்.
மள்குதல்  -  குறைதல்   மள் > மழு>   மழுங்குதல்.
மள் >  மர்
மள்  >   மர்  >  மரி  >   ,மரித்தல்  :  இறத்தல்.
மள் >  மர் >  மரணித்தல்.
மர்  >  மரி  >   மரணம்.
மர் >  மார் >  மாரகம்.

பின்னொருகால் விளக்குவோம்.