புதன், 18 செப்டம்பர், 2019

அல்லியும் தாமரையும்

இந்த இரு மலர்கள் பற்றிச் சிந்திப்போம்.

தாமரை என்பது  தாழ  (கீழே)  உள்ளதை மருவி நிற்கும் மலர் என்று பொருள்படும்.

தாழ இருப்பது தண்ணீர்.

இதன் அமைப்பு:

தாழ் + மரு + ஐ   >  தா + மரு + ஐ =   தாமரை.

இதுபோல் ழகர ஒற்று இழந்த வேறு சில:

தாவணி   (  தா +  அணி )     தாழ் > தா.   கடைக்குறை.
தாக்கோல்.  1


இனி  அல்லி என்பது தண்ணீரை விட்டுவிட்ட சொல்.  அல் என்பது இரவு.
இரவில் மலர்வது  என்ற பொருளில் "அல்லி"  எனப்பட்டது.2



அடிக்குறிப்புகள்:


1.  நாதாங்கி.  -  கதவும் கதவுச் சட்டமும்  ஆகிய முழு அமைப்பில் ஒன்றிலிருந்து  நாக்கைப் போல்  ஓரத்தில் நீட்டப்பெற்று மற்றொன்றில் சென்று பற்றி அமர்வது. நாவும் அதன் தாங்கியும்.

2 இரவி என்ற சொல்லும் இரவு  இருள் என்ற கருத்துக்களை  அடிப்படையாகக் கொண்டு எழுந்த சொல்லே.  இர் =  இருள்.  இரவு. என்பவற்றின் அடிச்சொல்.  அவித்தலாவது  விலக்குதல்.  இது  சூரியனைக் குறித்தது.

கருத்துகள் இல்லை: