வியாழன், 19 செப்டம்பர், 2019

சூரியகாந்திப் பூ.

சூரியன்  ஒளிவீசும் பக்கமாகத் திரும்பிக்கொள்ளும் பூவே சூரிய காந்திப்பூ. இதற்குப் பெயர் அமைந்த விதம்:

இப்பெயரில் சூரியன் என்பதற்கு விளக்கம் தேவையில்லை. வேண்டுவோர் வாசிக்க:

https://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_29.html


காந்தி  எனற்பாலது  காண்+தி என்பதன்  திரிபு.

சூரியனைக் காணத் திரும்பும் மலர்.

காண்தி   >  காந்தி.

இவ்வாறு  வருவது  காண்டி என வருதல் வழக்கம் எனினும்,  இது மெலிக்கும்வழி மெலித்தல் என்னும் கவிதை  நெறியைப் பின்பற்றிக் காந்தி என்றானது.  காண்டி என்பது வல்லெழுத்துப் பயில்கிறது.

காந்துதல் என்பது  சூடேற்றுதல்.  காந்து >  காந்தி  எனினுமாகும்.






கருத்துகள் இல்லை: