திங்கள், 30 டிசம்பர், 2019

இருபது இருபதே வந்திடுவாய்!

ஆண்டுகளில் இந்த இருப திருபதோ

அருமை பொருந்தியே மலர்ந்திடுக!

தாண்டிப்   பிறந்திடத் துன்பங்களை---ஒரு

தண்மை சுரந்திட  வேண்டிடுவோம்.

ஒன்றுபட்  டுயர்வதே    அறிவுடைமை  ----  அதற்கு
அடிப்படை ஆவதே  அன்புடைமை;
 சென்றபன்  னாட்களைப்  பின்பற்றிப் பிரியாமல்
சேர்ந்திருப் போம் அன்பாய் வாழ்ந்திருப்போம்.

அமைதி  நாடுவோம்  போர்வெறி   சாடுவோம்
அகிலத்தின் ஒற்றுமை தேடிடுவோம்
நமது வாழ்வுக்கு நன்மை நாம்கண்டு
நாடொறும் பீடுறக் கூடிடுவோம்.

அன்பர்கள் யாவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துகள்
ஆட்படும் அனைத்திலும் வெற்றியே உங்கட்கு
தண்மடி  நிறைவுறப் பொன்முடி கைவர
வண்விடி வெள்ளியு திக்கட்டுமே.

This post was hacked
இது சரி செய்யப்பட்டுள்ளது 

புத்தாண்டே வருக test repeat

ஆண்டுகளில் இந்த. இருப திருபதோ

அருமை பொருந்தியே மலர்ந்திடுக!

தாண்டிப்   பிறந்திடத் துன்பங்களை---ஒரு

தண்மை சுரந்திட  வேண்டிடுவோம்.

ஒன்றுபட்  டுயர்வதே    அறிவுடைமை  ----  அதற்கு
அடிப்படை ஆவதே  அன்புடைமை;
 சென்றபன்னாட்களைப்  பின்பற்றிப் பிரியாமல்
சேர்ந்திருப் போம் அன்பாய் வாழ்ந்திருப்போம்.

அமைதி  நாடுவோம்  போர்வெறி   சாடு வோ ம்
அகிலத்தின் ஒற்றுமை தேடிடுவோம்
நமது வாழ்வுக்கு நன்மை நாம்கண்டு
நாடொறும் பீடுறக் கூடிடுவோம்.

அன்பர்கள் யாவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

ஆட்படும் அனைத்திலும் வெற்றியே உங்கட்கு
தண்மடி  நிறைவுறப் பொன்முடி கைவர
 வண்விடி வெள்ளியு திக்கட்டுமே.

புத்தாண்டில் எமக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக
கள்ளமென்பொருளை அனுப்பிச் சில [பிழைகளைப் 
புகுத்திய கெட்டிக்காரர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.  
திருத்தினாலும் பிழை  மீண்டும் தன்னை நிலைநாட்டிக்
கொள்வதுதான் இதில் சிறப்பு ஆகும்.
போர்வெறி சாடுவோம் என்பதைப்  போர்வெறி நாடுவோம்
என்று மாற்றியது என்னே திறமை  அடடா.......

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

வெளியிடாத சிறு கவிதை

முன் எழுதி வெளியிடாத ஒரு கவிதையை இப்போது பதிவு செய்கிறேன்.  படிதது  மகிழுங்கள்.


கலகம் செய்யும் மனப்பாங்கு
கல்லெடுத் தெறியும் குள்ளமனம்
உலகம் வியந்த சுதந்திரத்தை
ஒதுக்கி வீசுதற்  கொப்பாகும்.

நிலவும் வேற்றுமை  எதுவேனும்
 கலந்து நின்று   முடிவெடுத்தே
அல்லன மாற்றி நல்லனவே
ஆக்கும் நெறியே அடைந்திடுவீர்





சனி, 28 டிசம்பர், 2019

விபுலாந்த அடிகள். பேராசிரியர்.

விபுலானந்த அடிகள் சிறந்த தமிழறிஞர்.
(1892 - 1947)
அவர் மேற்கொண்ட இது துறவுப் பெயர்.  இதுவும் சிறந்த பெயரே.இங்குக் கூறிய சொல்லாய்வு இடுகைகளைப் படித்துவரும் நேயர்களுக்கு இப்பெயர் எப்படி அமைந்தது என்று தெரிந்திருக்க வேண்டுமே!

இப்போது அதைக் கூறுவோம்.


விழுமிய புலம்  =  சிறந்த நாடு.  விழுமிய புலம் என்பது செந்தமிழ், தனித்தமிழுமாம்.

இதைச் சுருக்கி  விழுபுலம் எனல்.

அப்போதும் இது ஒருசொன்னீர்மைப் பட்டுவிடவில்லை.

விழு , புலம் என்றிரு சொற்கள் உள்ளன.  இன்னும் இது ு  சொற்றொடர்தான்.

விழுபுலம் >  விபுலம்.  இப்போது ஒரு சொல்லாய் விட்டது.  இங்கு ழுகரம் தொக்கு நின்று இடைக் குறை ஆனது.

ஆனந்தம் என்ற சொல்லை ஆய்ந்தால் அது:

ஆ+ நன்று + அம்  என்பவற்றை உள்ளடக்கியது என்று அறியலாம்.

நன்று என்பது நல்+ து >  நன்+து  என்பதுதான்.

நல்+து என்பது நன்று என்றுமட்டும்தான் தமிழில் வருமோ? இல்லையே.  நல்+து = நற்று  என்றுகூட வருவதற்குச் சந்தி இலக்கணம் இடம்தரும். நாம் இன்று  நற்று என்ற சொல்லை மறந்தோம். அவ்வளவுதான்.

நன் து என்பது  நந்து அல்லது நன்-து என்றும் வரலாம்.  முந்து பிந்து என்ற சொற்கள் அப்படி அமைந்தன.  சிந்து என்பதும் அதுபோல.   சின்= சிறிய.  து விகுதி.  சில் > சின் ( ந்  ).  சந்தித் திரிபிலும் அல்லாத திரிபிலும்  ல் -ந் ஆகும்.

நன்று -  நற்று போல சிற்று  என்றும் ஒரு சொல் உள்ளது.  சில்+ து = சிற்று.

எனவே  ஆனந்தம் என்பது  ஆ + நல்(நன்) + து +அம்  அன்றி வேறில்லை.
ஆக அல்லது இறுதியான அல்லது மிக்க நன்றான மகிழ்வுநிலை. நன்மை அல்லது நன்றில் உண்டாவது மகிழ்வு.  உறுபொருள்: நன்மை. அதிற் பெறுபொருளே மகிழ்வு.

விபுலானந்தர் என்பவர் விழுமிய மண்ணில் ஆனந்தமாக இருப்பவர்
என்பது  பொருள்.

நாமும்  ஆ+நன்+து+அம் காண்கிறோம்.

குறிப்பு

உறுபொருள் -  original or etymological meaning
பெறுபொருள்-  derived  meaning



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எழுதும்போதே இடுகைகள் மறைந்து மீளாமற் போவதால் தட்டச்சுப் பிழைகள் இருந்தாலும் பரவாயில்லை, வெளியிட்ட பின் திருத்தலாம் என்றே வெளியிடவேண்டியுள்ளது. பிழைபொறுத்து நலம் நண்ணுவீராக.  எமக்குக் கரைச்சலுக்குக் குறைச்சல் இல்லை என்றாலும் தளர்ச்சி ஒன்றுமில்லை.

திருத்தம் வேண்டின் பின்.

 

 


செவ்வாய், 24 டிசம்பர், 2019

இரத்து > ரத்து இன்னும் சில விளக்கம்.

ரத்து அல்லது இரத்து என்பதை அறிவோம்.

இறுதல் என்றால் முடிதல்.  இதிலிருந்து தோன்றிய எச்ச வினைகள்  :  இற்று :  இது வினை எச்சம்.  இற்றுப் போயிற்று என்பர்.  பெரும்பாலும் இரும்புப் பொருள் பற்றிப் பேசுகையில் இச்சொல் பயன்படும். (  சட்டியில் தூர் இற்றுப் போய்விட்டது என்பது காண்க.)   இற்ற என்பது பெயரெச்சம்.  மூவசைகளால் இற்ற இறுதியடி என்பது காண்க.  பெயரெச்சம் பெயரைத் தழுவி நிற்பது. வினையெச்சம் வினையைத் தழுவி நிற்பது.

இறு என்ற வினைச்சொல் தி  விகுதி பெற்று இறுதி என்ற சொல்லைப் பிறப்பிக்கிறது.   சவ  ஊர்வலம் இறுதி ஊர்வலம் எனப்படும்.   மாநிலங்கள் அவையில் இறுதிக் கூட்டம் என்பது காண்க.

ரத்து என்பது து என்னும் விகுதி பெற்ற தொழிற்பெயர்.  வினைச்சொல்லினின்று உண்டாகும் பெயர் தொழிற்பெயர் எனப்படும்.  தொழில் என்றது இங்கு வினைச்சொல்லை.

இறு+ து >  (  இறு+ த் + து )  >   இரத்து  > ரத்து.

இச்சொல் திரிபு அடைந்துள்ளது.  விகுதி வந்து புணர, ஒரு தகர ஒற்று (த்) தோன்றியது.  பகுதியின் ஈற்றில் நின்ற றுகரம் றகரமாக மாறிப் பின் ரகரமாகத் திரிந்துள்ளது.  இரவு என்பது ராவு என்று தலையிழந்து முதல் நீண்டு பேச்சு வழக்கில் வருவது போல, இரத்து என்பது தலையிழந்து நல்ல வேளையாக முதலெழுத்து நீளாமல் ரத்து என்று நின்றுவிட்டது.

இதைப் பாருங்கள்:

இரக்கமுள்ள ஆய்  (  அதாவது அம்மன் ) :  இரக்க ஆய் >  இரக்க ஆயி > ராக்காயி.  தலையிழந்து முதல் நீண்டுவிட்டது.  இரக்கமுள்ள அம்மா > இரக்க அம்மா > ராக்கம்மா.

இரவில் வந்து கடிக்கும் ஒரு சிறுவகைக் கொசு இராக்கடிச்சி > இராக்கச்சி > இராக்காச்சி.  நடுவில் வந்த டி என்னும் வல்லெழுத்து மறைவு. கச்சி காச்சி ஆனாலும் கா(ய்)ச்சுவதற்கு ஒன்றுமில்லை.  ராக்காச்சி என்பது தலையிழந்த சொல்.

கேடு > கே > கேது  (   இராசிநாதன் பெயர் அல்லது கிரகத்தின் பெயர்).
பீடுமன்(னன்)  > பீமன் > வீமன்.

கேடுது >  கேது
பீடுமன் > பீமன் என்றும் காட்டலாம்.

வல்லெழுத்து மறைவு கண்டீர்.

இரக்கம் என்பது ரட்சம் என்று மாறும்.  பக்கி என்பது பட்சி என்று மாறும்.

ரட்ச ரட்ச ஜெகன்மாதா......

அருட்பெரும் உலக அம்மை.

இரக்கம் > ரக்கம் > ரட்சம் > ரட்சித்தல்.

ரட்சகர் ஏசு என்ப.

எனவே

இறத்து > இரத்து > ரத்து.

இறு என்பது இர என்று மாறுதல்போல்  வரு + து > வரத்து (போக்குவரத்து )  என்றும் திரிதல் காண்க.

சின்னாளில் மறுபார்வை


எழுந்திரு > எழுந்திரி மற்றும் இரு இரி திரிபுகள்

எழு என்பது அழகான செந்தமிழ்ச் சொல். இதிலிருந்து எழும்பு என்ற வினைச்சொல் பிறந்தது.  ஒரு வினைச்சொல்லிலிருந்து இன்னொரு வினைச்சொல் தோன்றியுள்ளது இதிலிருந்து அறியலாம்.  பு என்ற விகுதியும் வினைச்சொல்லாக்கத்திற்கு உதவுவதை இது தெளிவிக்கிறது .  எழும்பு என்பது சில தமிழ்க்குடிகளிடை "ஒழும்பு"  என்று வழங்குகிறது.  எகர ஒகரத் திரிபு முன்  அறியப்பட்டதே எனினும்  எழும்பு என்பதே பெரிதும் தமிழ்ப் பேச்சினரிடையே பெருவரவினதாகும்.

இந்தப் பாடல் வரியைப் பாருங்கள்:

"அலைகடல் சேரும் வான்போல எழும்பும்
நாமே பார்மேல் ஈடிலா காதலர்"

என்பது காண்ணதாசன் சொல்லழகு. (  எதுகை மோனை அழகை விடுத்துக் கருத்தழகு ஒன்றையே கொண்டு இவ்வரி செல்கிறது.  எழும்பு என்ற சொல் இங்கு கவின் சேர்க்கிறது.  மண்டி என்ற சொல்லைப் பாரதி பயன்படுத்திய பாங்கு போன்றது இது. " ( .......வட மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு.....)."

படுக்கையிலிருந்து எழுவதையும் எழும்பு என்பர்.  பு விகுதி இன்றி எழு என்று மட்டுமே இதைக் குறிக்கலாம்.  எ-டு:  எழு - விழி - நட"  என்ற தொடர் காண்க. ( "விழி - எழு - நட"  என்பதுமது.

எழு என்பதிலிருந்து எழுந்திரு என்ற கூட்டுச்சொல் அமைந்து,  அது பின் எழுந்திரி என்று மாறிவிட்டதுடன், மேலும் எந்திரி என்றும் திரிந்தது.  இங்கு திரிபுகள்:  இரு என்ற ஈற்றுச்சொல் இரி என்று மாறியது.  அஃதேயன்றி  ழுகரம் மறைந்து இடைக்குறையுமானது. எழுத்துத் தமிழை நோக்கப் பேச்சில் வரும் திரிபுகள் மிகுதியே ஆகும்.

ழுகரம் மறைந்து மேலும் திரிபுகளால் தாக்குண்ட இன்னொரு சொல்லை இங்குக் காண்பதும் விளக்கத்திற்கு உதவும்.

ஒரு வாதத்தில் ஒருவன் சரிவு அடையுமாறு இழுத்தல் சர்ச்சை ஆகும். இது சரி ( சரிவு ),  இழு ( இழுத்தல் ), விகுதி ( சை ) முதலியன வந்த சொல்லாக்கம்.

சரி + இழு + சை >  சரி + இ + சை > ச(ர் இ) ( இ )  சை > சர்ச்சை.

ரிகரத்தின் ஈற்றில் நின்ற இகரம் வீழ,  சரி என்பது சர் ஆனது.
வருத்தகம் என்பதில் ருகரத்தின் உகரம் வீழ்ந்து வர்--  ஆனது போலுமிது.
(வருத்தகம் >  வர்த்தகம்).  வருத்துதல் > பொருள் வரச் செய்தல். வரு> வருத்து என்பது வரத்து என்று திரிந்து வருந்து - வருத்து என்ற பிறவினையுடன் வேறுபடும்.   எ-டு:  நீர்வரத்து,  போக்குவரத்து.  வரு என்பதே பகுதி.

இழுச்சை என்பதிலும் ழு முன்பே ஒழியப் பின் இகரமும் மறைந்தது.

மனம் இடுதலைக் குறிக்கும் இடுச்சை என்பது இச்சை ஆனது காண்க.  ழு, டு என்பன மறைதல் இயல்பு.

வழுக்கணை என்பது  வக்கணை ஆனதும் காண்க. (  அணைப்பதும் அணைத்து வழுக்கிச் செல்லும் பேச்சு)

வக்கணைப் பேச்சுக் காரி  பெரிய வாய்வீச்சுக் காரி என்பதுண்டு.


இரு என்பது இரி எனச்  சேரலர் பேச்சில் வரும்.

இன்னும் திரி என்று முடியும் பதங்கள் பல உண்டு எனினும் இத்துடன் முடிப்போம். நீங்கள் ஓய்வு பெற்றபின் தொடரலாம்.

தட்டச்சுப் பிழைகள் பின் திருத்தம் பெறும்.

,






வெள்ளி, 20 டிசம்பர், 2019

பல்வேறு சொற்புனைவுகள். இவற்றுள் "இரு(2)" எப்படி வந்தது?

இருக்கிறான் இருந்தாள் முதலிய முற்றுக்களில் முன்நிற்கும் இரு என்னும் வினை இன்று இடம் குறிக்கும் உருபாகவும்  இல்லம் குறிக்கும் சொல்லாகவும் உள்ள "இல்" என்பதினின்று வந்தது என்பதே முடிபு  ஆகும்.

இல் >  இரு.  (வினைச்சொல் : இருத்தல்).

இடமென்ற சொல்லும் இடு என்பது மிகுந்தானதே  ஆகும்.   இடு + அம் = இடம் என்பதறிக.  இஃது அம் என்னும் விகுதியேயன்றி ஐ என்னும் விகுதியும்  (<மிகுதியும்) பெறும். இடு + ஐ = இடை. அப்போது  இரு இடங்கட்கு இடைப்பட்டது -  நடுவிலது -  என்றொரு சிறப்புப் பொருளையும் உணர்த்தவல்லது. தமிழின் ஏனை  இனமொழிகளில் (திராவிட மொழிகளில் ) இஃது இடம் என்றே பொதுப்பொருள் கொண்டிலங்கு மென்பதும்  அறிக.

இடைபடுதல் ("மூக்கை நுழைத்தல்" என்பது அணியியல் வழக்கு) என்ற வினைச்சொல்லும் உளது.  இடைப்படுதல் என்பது இடையே  வந்திருத்தல் என்பதுபோல் பேச்சில் வருதல் அறியலாம்.

இடு > இரு என்பவற்றின் அணுக்கமும் உணர்க. மடி > மரி என்பது  போலவே இத்திரிபுமாம்.

ஒன்றினோடு இன்னொன்று (வந்து) இருக்குமாயின் அது ஒன்றிற்கு அடுத்த
"  இரு "  அல்லது இரண்டு ஆகும்.  இருத்தல் என்ற வினையடியாகவே இரண்டிற்கும் எண்ணுப்பெயர் வந்துள்ளது காணலாம். ஒன்றை அண்டி இருப்பதே இரு+ அண்டு =  இரண்டு ஆகும்.  அண்டி இரு ( ஒன்றை அண்டி இரு) என்பது முறைமாற்றிச் சொல் அமைந்துள்ளது.  இவ்வாறு  சொல் அமைத்தல் பிற்காலத்தில் பல சொற்களில் பின்பற்றப்பட்டுள்ள முறையாகும்.  தொல்காப்பியனார் காலத்திலே " தாரம் தப்புதல்"  ( மனைவியை இழத்தல் ) என்பது " தப்பு + தாரம் "  > தபுதாரம் என்று குறிக்கப்பட்டது.  ( தப்பு > தபு  என்பது தொகுத்தல் அல்லது இடைக்குறை).   அவிழ்க்கும் இரு கைகளை உடைய பெண்டிரின் சட்டை,  இரு+ அவிழ் + கை >  இரவிக்கை ( ழகர ஒற்று இடைக்குறை)  ஆனது காண்க.  நிறுவாகத்தைக் காக்கும் இல்லமானது  :  கா + இல் >  இல்+ (ஆ) + கா = இலாகா ஆனது திறமையே. பலராலும் உணர்ந்திட முடியாத மறைவுப்புனைவு ஆகுமிது.  { இல்லம் ஆகும் காப்பதற்கு > இல்  ஆ கா}

ஆசு பட இருக்குமிடம்  :   இரு+ ஆசு + இ = இராசி.   இதுவும் முறைமாற்றுப் புனைவே. கிரகம் -  கிருகம் என்பது  இரு+ அகம் >  இரகம் > கிரகம் அன்றி வேறில்லை.  இரகம் என்பது சிரகம் என்று மாறிப் பின் சி என்பது  "கி" ஆகி,     கிரகமானது என்று விளக்கினும் அதுவே.  இராசிநாதன் இருக்கும் இடமே இரு அகம் > கிரு அகம் > கிரகம்.  (  இறகு > சிறகு ).(சேரல் > கேரளம்)

ஆசி என்பது நன்மை நடக்குமாறு  பற்றுக்கோட்டினை வழங்குவதே.  ஆசீர்  என்பது சீராகுக என்பதன் முறைமாற்றுப் புனைவு.  இதன் ரகர ஒற்று மறைந்து ஆசி ஆனது.  ஒரு  முண்டு ( துண்டு, துண்டுத்துணி)  தலையினை ஆசுபடப் பற்றி நிற்க,  அது முண்டாசு ஆகும்.  ஆசீர்வாதம் என்பதில் வாதம் என்பது வாதநோயைக்  குறிக்காது.  வருக தமக்கு ஆகும் சீர் என்பது வாக்கியம். இது  ஆ + சீர் + வா + தம் ஆனது.  வா = வருக; தம் = தமக்கு;  ஆ  =  ஆகும் ;  சீர் = நன்மை.

ஆகும் சீர் :  ஆசீர்,  இது ஆகு + ஊழ் =  ஆகூழ் என்ற பழம்புனைவு போன்றது.  ஆகுபெயர் என்பது இலக்கணக் குறியீடு.

வட்டமாகவோ நான்மூலையாகவோ மாவால் உருச் செய்து அதை சுடுகல்லில் ஒட்டி எடுப்பது:  உரு+ ஒட்டி =  உரொட்டி >  ரொட்டி. இது வேறுவழியிலும் விளக்குறலாம் ஆகையால் இருபிறப்பி ஆகும்.  வகர உடம்படு மெய் சொல்புனைவில் வேண்டியதில்லை.  சொல்லுருவில் துய்யது உரு+து மொழி,  அரபு கலந்தமையின். து விகுதி எனினும் ஒக்கும். படைவீடுகளில் பேசப்பட்டது என்பது கதை.  தெற்குக் கணத்தில் வழங்கிய மொழி தெற்காணம் = தெக்காணம், > தக்காணம் > தக்காணி.

பல்வேறு சொல்லாக்க முறைகளை அறிந்தோம்.

எழுத்துப் பிசகுகள் பின் திருத்தம்பெறும்

செவ்வாய், 17 டிசம்பர், 2019

இலத்தீனில் தமிழ்ச்சொற்கள்

வாழ், வாழ்வு  என்ற சொல்லுடன் விவோஸ்  (வைவோஸ்)  என்ற இலத்தீன் மொழிச்சொல்லுக்கு உள்ள தொடர்பு முன்பு   ஈங்கு விளக்கப்பட்டது உண்டு.

இலத்தீனில் பல தமிழ்ச் சொற்கள் உள. எவ்வாறு தமிழ் இலத்தீனில் புகுந்தது என்பதை ஆய்வாளர்கள் கூறக்கேட்டுணர்க.

அதுபற்றியும் முன் யாம் எழுதியதுண்டு.

இப்போது இன்னொரு  சொல்லை அறிந்துகொள்வோம்.

விழி என்ற சொல்லும் விஸுஸ்  என்று இலத்தீனில் வரும்.

பாழை என்பது பாடை என்றும் திரிதற்கொப்ப விஸுஸ் என்பது விடரே என்றும் திரியும்.  இதிலிருந்துதான் விடியோ என்ற சொல் ( காணொளியைக் குறிப்பது)  வந்துள்ளது.  ஆதலால் தமிழ் "விழி"  (காண் - காணுதல்)  என்பதே வீடியோ என்ற புதுமைப்பொருளுக்குப் பெயரிட வழி செய்துள்ளது என்பதை அறிதலும் மகிழ்வுறுத்துவதே ஆகும்.

வாய் என்ற தமிழ்ச்சொல் வழி என்றும் பொருள்தரும். இது "வயா" என்று இலத்தீனில் புகுந்து பொருள்மாறாது அந்த வழியையே குறிக்கும்.

வேளாண்மை விளைச்சலில் தொடர்புடையோரே காராளர்.  காக்கும்கை காராளர் கை என்று ஒரு பழைய வெண்பா முடியும்.  இந்தக் கரு   (கார்)  என்ற பகுதி கிரிஷி என்ற சொல்லினுள் உள்ளது.  திடல் என்றோ வயல் என்றோ பொருளறியப்படும்  எகர் என்பதிலிருந்து "ஆக்ரிகல்சர்" என்ற சொல் பிறந்ததாய்க் கொள்ளப்படினும்  ஆக்ரி (agri) என்பதில் ஆ என்பதை விலக்க, மீதமுள்ள கிரி  (-gri)  என்பது கிரிஷி என்ற சொல்லில் இருப்பது காணலாம். தமிழிலும் ஆ-  என்பது  ஆகாயம் என்பதில் முன்னொட்டாய் ( prefix )உள்ளது. மூலச்சொல்  காயம் என்பதே.  சூரியன் நிலவு முதலிய காயும் இடம்.   ஆ என்ற முன்னொட்டு  ஆதல் குறிப்பது.  ஆ என்பது வினைத்தொகையிலும் வரும். எடுத்துக்காட்டு:  ஆபயன்.  ( பயனுடையது ஆவது).  (  ஆ என்பதை  மாடு என்று பொருள்கொண்டு,  ஆபயன் எனில் பால், தயிர் வெண்ணெய் என்று  கொண்டாரும் உளர்.

ஆகிரி(agri) என்பதில் ஆ முன்னொட்டு என,  கிரி என்பது வேளாண்மைப் பொருளதாகிறது.

அறிவீர் மகிழ்வீர்.


எழுத்துப்பிழைகள் பின் திருத்தம்பெறும்.

புதன், 11 டிசம்பர், 2019

முன் கவிதை நினைவுகள்

சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் வாழ்ந்து மறைந்த இனுக்கா (என்னும் பெயரிய )  கரடி நினைப்பு வந்துவிட்டது.  பாவம் இந்தத் துருவக் கரடி. இது வெள்ளை நிறப் பனிப்புலக் கரடியாகும். யாமெழுதிய அகவற் பா முன்னர் வெளியிடப்பட்டிருந்தது.   அந்தப் பா சென்று முடிந்தது இவ்வாறுதான்:

என்றினிக் காண்போம் இனுக்காக் கரடியே
மென் துணை புரந்தாய் நீயே
நன்றினி நினைத்துப் புலம்புவ தன்றியே

அந்த விலங்கியல் தோட்டத்தில் நட்பார்ந்த மென்மைசேர் துணையாய் அஃது இருந்ததை " மென் துணை புரந்தாய் நீயே " என்ற வரி நினைவுபடுத்தியது.

பனிவளர் மலைப்பகுதி பற்றியும் ஒரு கவிதை எழுதியிருந்தேன். அது:

"கட்டிப் பனிமலைகள்
காணும் இடமெங்கிலும்
ஒட்டிச் செலவியலா
ஒப்பில்  குளிர்வதைப்பே" 

அங்கு ஒரு நரி கிடந்தது:

பனியிற் சுருண்டபடி
படுத்திருக்கும் நரிதான்
தனிமைத் துயர் அறியா
தலைமை விலங்கினமோ

என்று வருணித்திருந்தேன்.

தனித் துயரும் தனிமைத் துயரும் தீர்க்கும் மருந்து தமிழ்க் கவிதைதான்.
கவலையைத் தீர்ப்பதும் கனித்தமிழ் கவியே.

செவ்வாய், 10 டிசம்பர், 2019

குரைப்பவர் குரைக்கட்டும் புதைப்பவர் புதைக்கட்டும்

உகத்தினின்று சுகத்தினைப் பெற்றோம்
ஓர்ந்துணர்ந்  துரைத்திட்டேம் யாம்! ---- கண்டார்
அகத்தினில் ஆத்திரம்  புறத்தினில் குதித்தனர்
அழித்தனர் எம்மிடுகையை.

அழிப்பதன் முன்பலர் ஆயிரம் வாசித்தார்
அதனை அறிந்துவிட்டார்.---- அது
குழிப்புதையல் அன்று கோல வெளிப்பாடு
குரைக்கட்டும் கவலை இல்லை.

திங்கள், 9 டிசம்பர், 2019

சீனாவின் முதல் அரசர் நம் தமிழர்!

சீனாவில் தமிழ்க் கல்வெட்டு பற்றி முன் எழுதியதுண்டு.

ஆனால் முதலில் சீனாவில் அரசு நிறுவியவர்கள் நம்மவரே ஆவர்.

The first two civilizations of ancient China were founded by Dravidian and Manding speaking people who had formerly lived in Africa (Winters,1985,1986). As a result the substratum languages in many  languages spoken in the Pacific are of Manding and Dravidian origin (Winters, 2013).

The Xia Dynasty is considered the first dynasty of the sandai(three Dynasties) of ancient China :Xia,Shang and Zhou. There are many references to the Xia people.

இவ்வாறு ஆராய்ச்சி செல்கிறது.  இது பிறர் ஆய்வு.

ஆப்ரிக்கா கண்டம் குமரிக் கண்டத்துக்கு அருகிலிருந்த கண்டம்தான்.

தமிழுக்கு அங்கும் தென் கிழக்கு ஆசியாவிலும் மொழித்தொடர்பு மிகுதி.

கிமர்  --   குமரி.

அரசு என்ற சொல் இலத்தீன் மொழியிலும் "ரெக்ஸ்"  (Rex) என்று இடம்பிடித்திருந்தாலும் அது தமிழ்தான்.அரசு பின் ராஜ்   (raj) -என்று திரிந்தது.

அரசு >  ராசு  >  ராஜ்  > ரெக்ஸ்
ராஜ் > ரெஜினா   regina  ( அரசி)
ராஜ் > ராய் > ராய  > ரோய்  rai raya roy .

Raya :  Big,  grand in Malay


இவ்வாறு திரிபுகள் பல.

வாசிக்க:

https://sivamaalaa.blogspot.com/2018/12/blog-post_12.html

சாமி என்பதற்கு இன்னொரு பொருள்.

சாமி என்ற சொல்லை முன் சிலமுறை விளக்கியதுண்டு.  அதிலொன்றை இங்குக் காணலாம்.

https://sivamaalaa.blogspot.com/2019/02/blog-post.html


இதுவேயன்றி  இன்னொரு பொருளும் அறியக்கிடக்கின்றது.


சாய்தல் /.  சாய்த்தல் :  இது பேச்சு வழக்கில் இன்னுமுள்ள சொல்.  இது சாயாது என்றால் நடைபெறாது என்பது பொருள்.  " எப்படி முயன்றாலும் சாய்க்க முடியாது என்றால்  "  முடிக்க இயலாது என்பதுதான்.   ஜம்பம் சாயாது என்பதுமுண்டு.

சாய் > சாய்த்தியம் > சாத்தியம் என்பது இயல்வது குறிக்கும்.

வாய்ப்பாடம் சொல்பவர் என்னும் பொருளிய வாய்த்தியார் என்பது வாத்தியார் என்று வந்தமை காண்க.  உப அத்தியாயி என்ற உபாத்தியாயி (  இலக்கணம் சொல்லிக்கொடுப்பவர் ) என்னும் சொல் வேறு. பலருக்கு இதிற் குழப்பம்.

இனி சாமி என்பதன் இன்னொரு பொருள்.

சாய் > சாய்மி  > சாமி :   வேண்டுதல்களைச் சாத்தியமாக்கும் தேவன் என்ற பொருளும்  காணலாம்.

சாய்  >  சாம் > சாமி எனினும் அது. பழநூல்களில் இது சாம் என்று காணப்படுகிறது.

சாய் > சா(யு)ம் இ > சாமி என்று பழங்குடியினரிடை வழங்கின எளிதான சொல் இது.  சாயுங்காலம் > சாய்ங்காலம் என்று யகர ஒற்று மறையாமலும் வரும்.

சில ஒலிகள் மறைதலுக்கும் வேறுசில வெளிப்பட்டு வருதலுக்கும் மனிதனின் நாவுதான் காரணம். ஒரு மொழி பேசுவாரிடை இவ்வாறு நிகழ்ந்தால் அம்மொழிக்குரியது என்ற முத்திரை ஏற்படுகிறது.  மொழி காரணமன்று. இந்த மொழி என்பது நாம் வைத்த பெயர்தான்.

இங்கு சில சொற்கள் தரப்பட்டுள்ளன.  வாசித்து மகிழ்க.

ஞாயிறு, 8 டிசம்பர், 2019

பகிரங்கம் என்னும் சொல்

இங்கிருப்பதை அங்கு போய்ச் சொல்வது,  என்றால் உமக்குத் தெரிந்ததைப் பிறருடன் பகிர்ந்து கொள்கிறீர் என்றுதான் அர்த்தம். இக்கருத்தினின்று
பகிரங்கம் என்ற சொல் புனைவுற்றது.

பகிர்தல்,
அங்கு
அம் விகுதி அமைப்பும் குறித்தது.

பகிரங்கம்   -   பகிர் + அங்கு + அம்.

மிக்க எளிமையாய் அமைந்த சொல்.

அறிந்து மகிழ்க.

சொல்லியல் நெறிமுறைகள்: கழுதைச் சொல்

கழுதை என்ற சொல் ஓர் ஒலிக்குறிப்புச் சொல் ஆகும்.

கழுதை காழ் காழ் என்றுதான் கத்துவதாகச் சொல்வர்.  ஆனால் கழுதைஎன்றசொல்லில் கழு என்பது பகுதியாகவும் தை என்பது விகுதியாகவும் உள்ளன. ஆகவே அது "கழு கழு" என்று கத்துவதாகச் சொல்லலாம் என்றால் பொருத்தமாகத் தோன்றவில்லை.

கத்துமொலி  காழ் என்பதுதான். சொல்லமைப்பில் காழ் என்பது குறுக்கப்பட்டு, கழு என்று அமைத்துள்ளனர். அதுவே சரியென்றும் சொல்லவேண்டும்.

இனி, கழு+ தை என்று பகுதியையும் விகுதியையும் புணர்க்கும் போது, கழுத்தை என்று வலிமிக்கு வராமல் கழுதை என்று மெலிந்தே (அதாவது தகர ஒற்று இரட்டிக்காமல்)   சொல்லில் வருகிறது.  இதே வலிமிகாமையை விழுது, பழுது,  முதலிய வேறு சொற்களின் அமைப்பிலும் காணமுடிகின்றது.

சொல்லமைப்பில் புணரியல் ( சந்தி) இலக்கண விதிகள் பின்பற்றப்படுவதில்லை. நிலைமொழியும் வருமொழியும் புணர்வது வேறு.  அடிச்சொல்லும் விகுதியும் இணைவது வேறு.  விகுதி  வருமொழி அன்று.

மேலும் ஒரே பகுதி விகுதி, இருவேறு விதமாக இணைந்து ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களைப் பிறப்பிக்கலாம். எடுத்துக்காட்டு:

அறு + அம் = அறம்.
அறு + அம் =  அற்றம்.

குறு + அம் =  குறம்.  ( குறி சொல்லுதல்)
குறு + அம் = குற்றம் (  குற்றச்செயல்.)  (  சிறுமைசேர் செயல்).

குறு = குன்று.  சிறிய மலை.
குறு = சிறு(  மை )

அறிவீர் மகிழ்வீர்

தட்டச்சுப் பிழைகள் -   திருத்தம் பின்.


சனி, 7 டிசம்பர், 2019

ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ (ஆடகம்)

ஆட்சி செய்தல் என்பதைக் கருதுகையில் இது மனிதனை மட்டுமின்றி ஏனைப் பொருள்களையும் ஆளும் பொருளாகவும் ஆளப்படும் பொருளாகவும் உட்படுத்தும்.  நக்கத்திரங்களும் மனிதனை ஆட்சிபுரிவதாகச் சோதிட நூல்கள் கூறும்.  நக்கத்திரம் சொரிகின்ற அல்லது சோர்கின்ற கதிர்கள் நம்மை வந்தடைந்து நம் நடவடிக்கைகளை  ஆதிக்கம் புரிவதனால், சோதிடக் கலைக்கு அப்பெயர் வந்தெய்தியது.

சோர் + து + இடு + அம் =  சோர்திடம் > சோதிடம் ஆயிற்று. அல்லது
சோர்+ திடம் > சோதிடம் எனினுமது.

சோரும் அல்லது சொரியும் கதிரலைகள் நம்மேல் இடப்படுவன, நம்மை ஆள்வன.

மேகநீர் இடைந்து தளர்ந்து உருகி மழையாகச் சோர்ந்து சொரிகிறது...!!!

குளிர்க்கட்டி சோர்ந்து நீரைச் சொரிகிறது.

சொரி <> சோர்.

சேர் > சோர் > சார்.

இவை நிற்க.

இப்போது ஆடகம் என்ற யாம் கருதிய சொற்கு வருவோம்.  இதை ஆள்+தகம் என்று பிரிக்கலாம்.   தகமென்பது தகு+ அம் = தகம். மற்றும் தக+ அம் = தகம்.

தக, தகத்தக என்பது ஒளிவீச்சுக் குறிப்பு.  பொன்னும் தங்கமும் ஒளிவீசுவன.

தகத்தக என ஒளிவீசி நம்மை ஆட்சிசெய்வது,  எனவே:  ஆள் + தக+ அம்.

இது "ஆடகம்"  என்றாகும்.

ஆடகமாவது பொன்.  இது பொன்னில் ஒரு வகை என்ப.

ஆடகம் என்பது ஆடுமிடம் என்றும் பொருள்தரும்.  இது ஆடு+ அகம்  எனப் பிரிப்புறும்.  கூத்தாட்டு அவைக்குழாம் எனினுமது.

ஆக இருபொருளது இச்சொல்.

சிலப்பதிகாரத்திலும் சைவத்திருமுறையிலும் ஆடகப் பொன் பற்றிய குறிப்புகள் உள.

"ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ
அன்றுமின்றும் என்றுமே என் ஆவியடி நீ"

(கண்ணதாசன் வரிகள் .)

அறிவீர் மகிழ்வீர்.


தட்டச்சுப் பிழைகள் திருத்தம்  - பின்.




அரங்கசாமி > ரங்கசாமி

ஆற்றிடைக்குறை நிலத்துண்டில் சீராக அமர்ந்திருப்பவர் அரங்கனார் என்னும்
மாவிண் மன்னவராகிய  ( ஐந்திலொன்றாகிய) முன்னவர்.  அவர் அமர்ந்திருப்பதே அரங்கம்.

அரங்கு  >  அரங்கன் > ரங்கன்.

ரங்கன் > ரங்கசாமி.

சீர் அரங்கம் > சீரரங்கம் > சீரங்கம்.  இரு  ரகரங்களில் ஒன்று வீழ்ந்தது.  திரிபுச்சொல்.


தமிழறிஞர் கி ஆ பெ விசுவநாதமும் இது ( அரங்கு அரங்கசாமி என்பது)  கூறியுள்ளார்.

விண் விசும்பு எனவும்   படும்.
ஐந்து   என்பது :  நிலம் தீ நீர் வளி விசும்பு.  ஆக ஐந்து. ( தொல்.)

விண்ணு > விஷ்ணு.
விசு (தமிழ் )  > விஷ்.
சீரங்கம் > ஸ்ரீ ரங்கம்.  மெருகூட்டுச் சொல்.


விசுவம்  என்பது விசும்பையும் (விண்ணையும்) உள்ளடக்கிய உலக விரிவு.
விசும்பு விசுவம் என்பன ஓரடியின.   விஸ்வம் என்பது மெருகூட்டு.


குறிப்பு: -  இவ்விடுகை பழம்பதிவின் சாரம்.          
இக்கருத்து 2014-5 வாக்கில் இடுகைசெய்யப்பட்டது.

ரோமம்

ரோமம் என்ற சொல்லை ஆய்வுசெய்வோம்.

பண்டைத் தமிழர் மயிர் என்று சொல்லப்படும் முடிக்கு உற்றறியும் திறம் இருப்பதாக நம்பினர்.

அதனால் ரோமம் ( றோமம் ) என்ற சொல்லை உண்டாக்கினர். உற்றறியும் உணர்வுக்கு உரிய " உறு"  என்பதையும் அதைக் காப்பது என்னும் பொருளில் "ஓம்"  (ஓம்புதல் ) என்பதையும் இணைத்து அம் விகுதி கொடுத்தனர்.

உறு + ஓம் + அம் -=  உறோமம் என்ற சொல் அமைவுற்றது.

ஆற்றிடையில் அமைந்த நிலத்துண்டும் அரங்கு என்ற பெயரைப் பெற்றதும் ஆங்கு அமர்ந்த தேவன் அரங்கனாகிப் பின் அகரம் தொலைந்து ரங்கன் ஆனதும் போல்  பல சொற்கள் தலையெழுத்திழந்து உலவின.

 சொற்றிரிபு காத்தலும் அரிதே.

உறோமம் என்பதும் தவறாக றோமம் ஆகி, முன் வடிவு உணராமையின் ரோமம் என்று தவறாகத் திருத்தப்பெற்றது.

இவ்வலைப்பூவில் காணக்கிட்டாதெனினும் இது யாம் முன் கூறியிருந்ததே ஆகும்.

உரோமம் என்ற திரிசொல்லும் அழகுடன் அமைவுற்றதே என்றறிக.

ரோம் என்பது பகுதியாகக் கொண்டு அமைப்பை அறிய முற்படின் அஃது இருளிற் பொருளைத் தேடியதுபோலவே இறும்.

அறிவீர் மகிழ்வீர்.


தட்டச்சுப்  பிழைகள் தோன்றின் பின் திருத்தம் பெறும்
வே






புதன், 4 டிசம்பர், 2019

சுவர் என்ற சொல்லின் தோற்றம்.

தமிழ் மொழியில் உள்ள மூலவடிச் சொற்களில் " சுல் " என்பதும் ஒன்றாகும்.

சுல் என்பதே து என்னும் வினையாக்க விகுதியைப் பெற்று  சுல்+து = சுற்று என்ற வினைச்சொல் பிறக்க வழிசெய்தது.

சுவர் என்ற   சொல்லும் இம்மூலத்தினின்றே தோன்றியதாகும்.

சுவர் என்பதை "  சு + அர் " என்று பகுத்தால் இடையில் நிற்கும் வ் என்ற மெய் உடம்படு மெய் என்பது துலங்கும்.  அர் என்பதோவெனின்  அரு> அருகு > அருகுதல்  என்பதிற் காணும் நெருங்கி நிற்றல்,  இடைவெளியைக் குறைத்தல் என்னும் பொருளிய அடிச்சொல் என்பது புரிந்துகொள்ளலாம். இன்றும் அருகில் என்ற சொல்லில் இத்தொலைவின்மைக் கருத்து பளிச்சிடுகின்றது அறியலாம்.  அர் என்பது மூலமாக, ஈற்று உகரம் (அர்+ உ)  "  நெருங்கி முன் (நிற்றல்)  என்ற பொருளை வருவிக்கிறது.  உ(  சுட்டு ) : முன்.

சுவர் என்பது கூரையுடன் நெருங்கி அதை மேலணைத்தவாறு சுற்றி நிற்கிறது. இவ்வளவையும் இப்பகுப்பாய்வே தெரிவிக்கிறது.  இடர்ப்பாடு ஒன்றில்லா இனிமை இதுவாம்.

சுல்  > சு  (கடைக்குறை).

அர் என்பதிற் பொருள் காணாமல் வெறும் விகுதி என்று மட்டும் கொண்டால்,
சுவர் என்பது வீட்டைச் சுற்றி நிற்பது என்று மட்டுமே பொருள் கொண்டதாக ஏற்படும்.

சுவரில் ஒட்டிய கீரைக் குழம்பைச் "சுவத்துக் கீரை" என்றனர்.  ( பண்டித வி. சேகரம் பிள்ளை (1938). புதிய உலகம் மாத இதழ்). கோழிக்கறியை எதிர்பார்த்துச் சாப்பிட உட்கார்ந்த கணவன், கீரைக்குழம்புதான் தட்டிலுண்டு என்றறிந்து கோபம் கொண்டு,   வைத்த அக்குழம்பினைத் தூக்கிச் சுவரில் அடித்தானாம். வேறொன்றும் இல்லை என்று மனைவி கூற, "சுவத்துக்கீரையை வழித்துப் போடடி சுரணை கெட்ட பொண்டாட்டி" என்று வைதானாம்.  சுவத்தில் என்பது பேச்சு வழக்கு.

சுவர் என்பதே இப்போது கிட்டும் சொல்லாகும்.  இது சுவறு என்றிருந்தாலே பேச்சில் சுவத்தில் என்று வரவேண்டும். சுவறு என்பதை மீட்டுருவாக்கம் செய்தால்  " சுற்றி அடைக்கப்பட்டது"   (சு + அறு ) என்ற பொருள் கிட்டும். அறுக்கப்பட்டது அறை எனல்போலவே  வெளிச்சுற்றாக எழுப்பப்பட்டதுமாகும்.   எனல் ஒக்குமாறு,  சுவறு என்ற மற்றொரு வடிவம் மொழியில் இருந்து அஃது இறந்திருக்கலாம். இவ்வாறு கொள்வதிற் கடினம் ஒன்றுமில்லை காண்க.

பழையன கழிதலென்பது வழக்கமான நிகழ்வே.

தட்டச்சுப்பிழைகள் பின் திருத்தப்பெறும்.