செவ்வாய், 10 டிசம்பர், 2019

குரைப்பவர் குரைக்கட்டும் புதைப்பவர் புதைக்கட்டும்

உகத்தினின்று சுகத்தினைப் பெற்றோம்
ஓர்ந்துணர்ந்  துரைத்திட்டேம் யாம்! ---- கண்டார்
அகத்தினில் ஆத்திரம்  புறத்தினில் குதித்தனர்
அழித்தனர் எம்மிடுகையை.

அழிப்பதன் முன்பலர் ஆயிரம் வாசித்தார்
அதனை அறிந்துவிட்டார்.---- அது
குழிப்புதையல் அன்று கோல வெளிப்பாடு
குரைக்கட்டும் கவலை இல்லை.

கருத்துகள் இல்லை: