சனி, 7 டிசம்பர், 2019

அரங்கசாமி > ரங்கசாமி

ஆற்றிடைக்குறை நிலத்துண்டில் சீராக அமர்ந்திருப்பவர் அரங்கனார் என்னும்
மாவிண் மன்னவராகிய  ( ஐந்திலொன்றாகிய) முன்னவர்.  அவர் அமர்ந்திருப்பதே அரங்கம்.

அரங்கு  >  அரங்கன் > ரங்கன்.

ரங்கன் > ரங்கசாமி.

சீர் அரங்கம் > சீரரங்கம் > சீரங்கம்.  இரு  ரகரங்களில் ஒன்று வீழ்ந்தது.  திரிபுச்சொல்.


தமிழறிஞர் கி ஆ பெ விசுவநாதமும் இது ( அரங்கு அரங்கசாமி என்பது)  கூறியுள்ளார்.

விண் விசும்பு எனவும்   படும்.
ஐந்து   என்பது :  நிலம் தீ நீர் வளி விசும்பு.  ஆக ஐந்து. ( தொல்.)

விண்ணு > விஷ்ணு.
விசு (தமிழ் )  > விஷ்.
சீரங்கம் > ஸ்ரீ ரங்கம்.  மெருகூட்டுச் சொல்.


விசுவம்  என்பது விசும்பையும் (விண்ணையும்) உள்ளடக்கிய உலக விரிவு.
விசும்பு விசுவம் என்பன ஓரடியின.   விஸ்வம் என்பது மெருகூட்டு.


குறிப்பு: -  இவ்விடுகை பழம்பதிவின் சாரம்.          
இக்கருத்து 2014-5 வாக்கில் இடுகைசெய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை: