சனி, 28 டிசம்பர், 2019

விபுலாந்த அடிகள். பேராசிரியர்.

விபுலானந்த அடிகள் சிறந்த தமிழறிஞர்.
(1892 - 1947)
அவர் மேற்கொண்ட இது துறவுப் பெயர்.  இதுவும் சிறந்த பெயரே.இங்குக் கூறிய சொல்லாய்வு இடுகைகளைப் படித்துவரும் நேயர்களுக்கு இப்பெயர் எப்படி அமைந்தது என்று தெரிந்திருக்க வேண்டுமே!

இப்போது அதைக் கூறுவோம்.


விழுமிய புலம்  =  சிறந்த நாடு.  விழுமிய புலம் என்பது செந்தமிழ், தனித்தமிழுமாம்.

இதைச் சுருக்கி  விழுபுலம் எனல்.

அப்போதும் இது ஒருசொன்னீர்மைப் பட்டுவிடவில்லை.

விழு , புலம் என்றிரு சொற்கள் உள்ளன.  இன்னும் இது ு  சொற்றொடர்தான்.

விழுபுலம் >  விபுலம்.  இப்போது ஒரு சொல்லாய் விட்டது.  இங்கு ழுகரம் தொக்கு நின்று இடைக் குறை ஆனது.

ஆனந்தம் என்ற சொல்லை ஆய்ந்தால் அது:

ஆ+ நன்று + அம்  என்பவற்றை உள்ளடக்கியது என்று அறியலாம்.

நன்று என்பது நல்+ து >  நன்+து  என்பதுதான்.

நல்+து என்பது நன்று என்றுமட்டும்தான் தமிழில் வருமோ? இல்லையே.  நல்+து = நற்று  என்றுகூட வருவதற்குச் சந்தி இலக்கணம் இடம்தரும். நாம் இன்று  நற்று என்ற சொல்லை மறந்தோம். அவ்வளவுதான்.

நன் து என்பது  நந்து அல்லது நன்-து என்றும் வரலாம்.  முந்து பிந்து என்ற சொற்கள் அப்படி அமைந்தன.  சிந்து என்பதும் அதுபோல.   சின்= சிறிய.  து விகுதி.  சில் > சின் ( ந்  ).  சந்தித் திரிபிலும் அல்லாத திரிபிலும்  ல் -ந் ஆகும்.

நன்று -  நற்று போல சிற்று  என்றும் ஒரு சொல் உள்ளது.  சில்+ து = சிற்று.

எனவே  ஆனந்தம் என்பது  ஆ + நல்(நன்) + து +அம்  அன்றி வேறில்லை.
ஆக அல்லது இறுதியான அல்லது மிக்க நன்றான மகிழ்வுநிலை. நன்மை அல்லது நன்றில் உண்டாவது மகிழ்வு.  உறுபொருள்: நன்மை. அதிற் பெறுபொருளே மகிழ்வு.

விபுலானந்தர் என்பவர் விழுமிய மண்ணில் ஆனந்தமாக இருப்பவர்
என்பது  பொருள்.

நாமும்  ஆ+நன்+து+அம் காண்கிறோம்.

குறிப்பு

உறுபொருள் -  original or etymological meaning
பெறுபொருள்-  derived  meaning



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எழுதும்போதே இடுகைகள் மறைந்து மீளாமற் போவதால் தட்டச்சுப் பிழைகள் இருந்தாலும் பரவாயில்லை, வெளியிட்ட பின் திருத்தலாம் என்றே வெளியிடவேண்டியுள்ளது. பிழைபொறுத்து நலம் நண்ணுவீராக.  எமக்குக் கரைச்சலுக்குக் குறைச்சல் இல்லை என்றாலும் தளர்ச்சி ஒன்றுமில்லை.

திருத்தம் வேண்டின் பின்.

 

 


கருத்துகள் இல்லை: