திங்கள், 31 ஆகஸ்ட், 2020

மோகம் என்ற தமிழ்ச்சொல்.

 

சொல்: மோகம் (மோகத்தைக் கொன்றுவிடு!)

 

 பழைய நூல்களில் மோப்பு என்ற சொல் கிடைக்கிறது.  இச்சொல்லில் பு என்பது விகுதியாதலின் மோ என்பதே பகுதி என்று தமிழாசிரியர்கள் கருதியுள்ளமைக்கு  ஆதாரம் உள்ளது.  மோகம் என்ற சொல்லுக்கும் மோ என்பதே பகுதியாகும்,  மோப்பாகினேன் என்றால் மோகம் கொண்டேன்,  காதல் கொண்டேன் என்று பொருள்.

காதல்வயப்பட்டுத் திரியும் பெண்ணுக்கு "மோப்பி"  என்றும் சொல்வர். இஃது கைப்பெண்களுக்குப் பயன்படுத்தப்படும்  சொல்லாகும்.  இச்சொல்லும் தொடர்புடையதே  ஆகும்.

மோகம்:   இது தமிழ்ச்சொல்லென்று அறிந்து மகிழ்வீர்.  வகையில் இது திரிசொல் ஆகும். வாசனைபிடித்தல் என்னும் பொருளினின்று திரிந்து காதல் என்ற பொருளுக்குச் சென்றுவிட்டபடியால் திரிசொல் ஆவது இது.

 

மோகனம் என்பது இராகத்தின் பெயராகவும் இருக்கிறது.  மோகன் மோகனா என்ற பெயருள்ளவர்களும் பலருள்ளனர்.   மோகனம் என்ற பெயருள்ளவர்கூட சிங்கப்பூர் வானொலியில் பணியாற்றியுள்ளார். மோகம் என்ற சொல்லும் பேச்சு வழக்கில் உள்ள சொல்;  மற்றும் பாடல்களில் எதிர்கொள்வதுதான்.

விலங்குகள் மோப்பம் பிடித்தே பாலியல் அணுக்கம் கொள்கின்றன.
யாரும் போய்த் தெரிவிக்காமலே உணர்ந்து நெருங்குகின்றன. ஆகையால்
மோகம் என்ற சொல் மோத்தல் என்ற மோ விலிருந்து பிறந்தது.

மோ+கு+ அம் =  மோகம்.  இங்கு கு என்பது சொல்லாக்க  இடைநிலை.  மோப்பம் என்பதில் மோ+பு+அம் ‍= மோப்பம் என்று பு இடைநிலை ஆனது போல.  இதில் பு இடைநிலை என்னாமல் "விகுதி"   ',இன்னொரு 'விகுதி " என்றும் சொல்லலாம்.

மோகித்தல் என்பதில்  இகரம் இறுதியில் நின்று வினையானது. மோ +கு+ இ = மோகி.   இடை  நின்ற கு=  க் +உ.  .  இதிலுள்ள உகரம்  கெட்டது .  மோ +க் +இ = மோகி .ஆயிற்று.

மோகப் பற்று :  இது பின் மோகபத்  ஆனது.


மோகினி என்பது மோயினி என்றும் திரியும்.

 இந்தியத் துணைக்கண்ட முழுதும் ஒருகாலத்தில் தமிழ் வழங்கியதென்பதே

உண்மை. இமையத்திலும் ஏறிக் கொடிநாட்டியவன் தமிழன். இமயவரம்பன் என்ற

பட்டம் ஒன்றும் விளையாட்டுக்காக இலக்கியத்தில் வரவில்லை. 

தமிழ் சுமேரியாவிலும் வழங்கியதே! பொய்யா?

அறிக மகிழ்க. 

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

வண்டியின்மேல் ஏறிய வண்டி

ஒரு வண்டி இன்னொரு வண்டியின்மேல் அமர்ந்திருக்கும்

ஓர் இயல்பற்ற நிகழ்வு (விபத்து ) இங்குக் காணலாம்:


 http://theindependent.sg/cte-tunnel-chain-collision-porsche-ends-up-under-mazda/

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

விரைவுச்சொற்கள்: சடு, சடுதி, சங்காலம் - பிறவும்

 நாம் சொல்லாய்வில் தெரிந்துகொள்வதற்குப் பல சொற்கள்

 உள்ளன.  அவற்றை ஆர அமர ஒவ்வொன்றாக அறிந்து

கொள்வதே உரிய நன்முறை ஆகும்.


இன்று சங்காலம் என்ற சொல்லைத் தெரிந்துகொள்வோம்.

இச்சொல்லின் பொருள் "விரைவு"  என்பது ஆகும்.  இதே

பொருளுடைய இன்னொரு சொல்: சீக்கிரம் என்பது.

இதை விளக்கியதாக ஞாபகம். நீங்கள் தேடிப்பாருங்கள்.


சங்காலம் என்பதில் சடு என்ற உள்ளுறுப்புச் சொல்லும்

காலம் என்ற அவ்வாறான சொல்லும் உள்ளன.  சடு 

என்பது சட்டு என்பதன் இடைக்குறை.  "கடைக்குப் 

போய்ச் சட்டென்று ( சட்டுன்னு) வந்துவிடு. வழியில் வேடிக்கை 

பார்த்துக்கொண்டிராதே" என்று வீட்டில் அம்மா சொல்வதைக் 

கேட்டிருப்பீர்கள்.


சடு என்பது தி விகுதி பெற்று சடுதி என்றும் வரும். அது

திரிந்து "சடிதி" என்ற வடிவிலும் காணப்படும்.  விரைவாக

விளையாடப்படும்  ஆட்டம் "சடுகுடு" எனப்பட்டது. சட்டென்று

குடுகுடுவென்று ஓடிவிளையாடுவார்கள்.  அது " சடுகுடு"


சடு என்ற இடைக்குறைச் சொல்,  சடுதியாகி ஜல்தியும்

ஆகும். எல்லாம் விரைவுதான். சடு என்பது ஜல் என்றுதிரிய,

தி என்ற விகுதிமட்டும் திரியாமல் திடமாக நின்றது.

பெரும்பாலும் அப்படித்தான். " ஒம்னிபஸ்" என்பதில்

"பஸ்" போல - இலத்தீனின் ஒரு விகுதி!!


சடு, சட்டு, சடுதி என்பவெல்லாம் ஒலிக்குறிப்பில்

தோன்றிய சொற்கள்.


காலத்தில் சட்டென்று செய்வதைக் குறிப்பதே

சங்காலம்.   சடு + காலம் என்று புணர்த்தின் சடுங்காலம்

என்று மெலிந்து உருவாகும். இதில் வல்லின டு என்ற

எழுத்தைக் குறைக்க, சடுங்காலம் சங்காலம்

ஆகிவிடும். இதில் காலம் என்பது நெடுநேரத்தைக்

குறிக்கும் சொல், சடு என்பதால் குறுகிய காலத்தைக்

குறிக்கலானது. ஆனால் வேகமாக நடக்கும் கால்களை

உடையானைச் சடுங்காலன் என்றனர். இங்குள்ள

காலன் என்ற சொல், காலத்தைக் குறிக்கும் என்பதினும்

கால்களைக் குறித்தது என்பதே பொருத்தம்.


டுகரம் மறைந்த இன்னொரு சொல்: பீடுமன்,  பீமன், வீமன்

எனக்காண்க. பீடுமன் - பீடுடைய மன்னன்.  பின்னர்

பீஷ்மன் என்று திரிந்து இனிமை பெற்றது. பீமன் ஒரு

தொன்மகாலப் பாத்திரம்.


அறிக மகிழ்க.


குறிப்பு:

1    சடு என்பது இருபிறப்பி.  அடு> சடு எனினுமாம்.

அடுத்தடுத்து இடையீடின்றி நிகழ்தலே

விரைவு. சட் என்பது ஒலிக்குறிப்பும் ஆனது.

2    டுகரம் மறைந்த இன்னொரு சொல்:  கெடு+ து

>  கேது.  முதலெழுத்து கெ  நீண்டு கே ஆனது.

டு மறைந்தது.  கேது என்றானது. ஒரு நிழற்கோள்

இதுவாம். இதுவும் இராகுவும் எதிர்ச்சுற்று 

விளைப்பன. இராகுவும் இருட்கோள். இர் - இருள்

என்பதன் அடிச்சொல்.  இரு+ ஆகு= இராகு, முதற்

குறைந்து ராகு ஆனது. அரங்கன் - ரங்கன் போல்.

நிரம்ப என்பதும் ரொம்ப ஆகும். அறுக்கும்

ரம்பமும் அறு+ அம் + பு+ அம் > றம்பம், பின்

திருத்தப்பெற்று ரம்பம் என்று வழங்குவதாகும்.

இயற்சொல், திரிசொல் என்று தொல்காப்பிய

முனிவர் ஒன்றை முதலில் சொன்னாலும் மற்றதே

மிகுதி என்று தெரிகிறது. வருகிறாயா என்பதை

வர்ரியா. வாரியா என்று பேசுகிறவன் தமிழன்.

இவன் கெடுக்காத சொற்கள் உலகில் குறைவு.

மெய்ப்பு: பின்









 

சகடம்

இனி, சகடம் என்ற சொல்லை ஆய்வு செய்வோம். சகடம் என்ற சொல்லை ஆய்வு செய்ய முயல்கையில், இது ச+ கடம் என்றவாறு, புரியாத புதிர்ச்சொல்லாகத் தெரியலாம். சகடம் என்பது மிக்கப் பழமையான சொல் என்று எம் ஆய்வு சொல்கிறது. அது ஏனென்று இவ் வெழுத்தளிப்பின் முடிவில் நல்லபடியாகப் புரிந்துவிடும்.
 பழங்காலத்தில், உருளைகள், வளையங்கள், ரோதைகள், எல்லாம் கண்டிபிடிக்கப்படாத காலப்பகுதி இருந்தது. அது எப்போது என்று மனிதவளர்ச்சி நூலார் கண்டிபிடிக்க, அவர்களிடம் நாம் விட்டுவிடுவோம். இங்கு முன் குறித்த சொற்கள் எவ்வாறு அமைந்தவை என்பதும் கேட்டு மகிழற்குரியதே ஆகும். 

அதையும் இவ்விடுகையில் கண்டு மகிழ்வுறுங்கள்: https://sivamaalaa.blogspot.com/2020/02/blog-post_4.html. 

 சக்கரம் கண்டுபிடிக்குமுன் வண்டிகள் அல்லது ஊர்திகள் சறுக்கியே கொண்டுசெல்லப்பட்டன. பண்டங்களை ஓரிடத்தினின்று இன்னோர் இடத்துக்குக் கொண்டுசெல்ல உயரத்திலிருந்து தாழ்ந்து செல்லும் நிலப்பகுதிகளே பெரிதும் பயன்பட்டன. ஆற்று ஓட்டமுள்ள இடங்களும் பயன்பட்டன. இவைபோலும் தலங்கள் இல்லாதவிடத்து, யானை, குதிரை, மாடு முதலியவையும் ஆட்களும் தேவையாயிற்று. 

இவற்றுள் சறுக்கலான நிலங்களில் இருந்தவர்கள், சறுக்கி வேண்டிய இடத்தருகில் சென்றனர். சறுக்கு + அருகில் என்ற கருத்துகளே சறுக்கு + அரு + அம் என நின்று, சறுக்கரம் ஆயிற்று.பின் நாளடைவில் இடைக்குறைந்து சக்கரம் ஆனது. சகடம் என்பதும் அவ்வாறு அமைந்த சொல்லே. சறுக்கு + அடு என்ற இரு சொற்கள் இதற்குப் பயன் தருவ(ன)வாயின.  

சறுக்கி அடுப்பது. சறுக்கு + அடம் > சறுக்கடம், இடைக்குறைந்து சகடம் ஆனது. ஊர்தி அமைப்புகளில் வளையத்தைக் கண்டுபிடித்தவனே பெரிய அறிவியலான் ஆவான். அவனை நாம் மறக்காமல் இருக்கவேண்டும். பனியில் சறுக்குவதுபோல் அவ்வளவு எளிதாகத் தரைகளில் சறுக்கமுடிவதில்லை. அந்தக் கடினமே வளைந்த உருளையை அமைக்க அவனுக்குச் சிந்தனை அறிவை வழங்கியதென்பதை மறவாதீர். சறுக்கும் பனிப்பாறைகளிடை உலவியவனாய் அவன் இருந்திருப்பின் உருளை அமைக்க உந்து ஆற்றல் ஏதும் விரைந்து விளைந்திருக்காது என்று அறிக.


 PROOF READ   20062021 

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

நோய்த்தடை பின்பற்றவில்லையோ

எழுபத்தே ழாயிரம் நோய்த்தொற்று மாண்டோர் 
ஒருபத்து நூறாகும் இன்றே ---- ஒருவருமே 
பின்பற்ற வில்லையோ பீதிக்கோ வித்திதன் 
வன்பற்று வாராமு  றை.




 எழுபத்து ஏழாயிரம் நோய்த்தொற்று --- 
 ( இது கொரனா நோய் தொற்றியோர் எண்ணிக்கை ) 

 ஒரு பத்து நூறாகும் - ஓரிலக்கம் பேர் மாண்டு விட்டனர்  

ஒரு என்பது அசை. இன்றே - இது 28.08.2020 வெளிவந்த கணக்கு 

 பின்பற்ற வில்லையோ - இது அச்சத்துக்கு உரியதாய் 
உள்ளது. தடுப்பு முறைகளைக் கடைப்பிடிக்க
வில்லையோ, அதனால் நோய்த் தொற்று 
மிகுந்துவிட்டதோ என்பது. 

 பீதி - அச்சுறுத்தும். 

 கோவித்து - கோவிட் என்னும் கொரனா

 வன் பற்று = வலிமையாகப் பற்றிக்கொள்ளுதல்.

 format error cannot be rectified.

புதன், 26 ஆகஸ்ட், 2020

அசித்தல் - அயில்தல் ( உண்ணுதல் ) தொடர்பு,

 பாயசம் என்'ற சொல்லில் அசம் என்ற இறுதி முன்

இடுகையில் விளக்கம் கண்டது. அசம் அசித்தல்

என்ற வினையினின்'று விளைந்ததென்றும் 

அறிவுறுத்தப்பெற்றது.


இன்று அசித்தல் என்ற சொல் தோன்றிய விதம்

காண்போம்.


அயில்தல் என்பது உண்ணுதல் என்று பொருள்தரும்

பண்டைத் தமிழ்ச் சொல்  அயில்தல் என்பது ஒரு

சுட்டடி வினைச்சொல்.


அயில்தல் என்பதில் அயில் அயி என்று 

கடைக்குறைந்தது.  கடைக்குறைதல் என்றால்

சொல்லின் கடைசி எழுத்து - கெடுதல் அல்லது

விழுதல்.    அவ்வாறு குறைந்து  அயி என்று

நின்ற இப்பழஞ் சொல்,   அசி என்று திரிபுற்று

தல் என்ற் தொழிற்பெயர் விகுதி ஏற்று,  

அசித்தல் ஆயிற்று. ஒரு வினைச்சொல், 

கடைக்குறைந்து, திரிந்து பின் தல் விகுதி

ஏற்று மறுபடியும் வினையாதலுக்கு  நீங்கள்

ஓர் உதாரணம் தேடுங்கள்.  ஒருமாதம்

எடுத்துக்கொள்ளுங்கள்.


கிட்டியவுடன் பின்னூட்டம் இடவும்.


அயில்தல் என்ற வினைக்கு வாக்கியங்கள்:

பால் அயிலுற்ற பின்னர் அவன் நன்கு 

உறங்கினான்.ஒரு பருக்கை பாக்கியின்றி

 சோறு முமுதும்  அயின்றுவிட்டான்.


அயில் >  அயி  ( இது கடைக்குறை).

அயி > அசி   ( இது ய- ச வகைத் திரிபு)

இன்னோர் எடுத்துக்காட்டு:  வாயில் > வாசல்.

யகரம் சகரம் ஆனதுடன், ஆங்கு இகரம் அகரம்

ஆகவும் ஆயிற்று.  யி - ச இது இருமடித் திரிபு.


அயி என்பதுடன் அம் சேர, அது  அசிம் என்று

வருதல் தமிழியல்பு அன்று.  இகரம் கெட்டே அம்

ஏறுமென்பதறிக.


அயிலுதல் -  அயில் என்ற வினை அமைந்த

விதத்தை வேறொரு  சமையத்தில் காண்போம்.


மெய்ப்பு பின்




வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

பாயசம்

 பாயசம் என்பது ஓர் இனிப்புக்கஞ்சி போன்றது. இது

பெரும்பாலும் பாசிப்பயறு வேகவைத்து, தேங்காய்ப்பால்

சர்க்கரை,  சவையரிசி (ஜவ்வரிசி)  என்பன சேர்த்துக்

காய்ச்சப்படுவது.   இப்போது வேறு பொருள்கள் 

சேர்த்தும் காய்ச்சப்படுவதுண்டு. எ-டு: பால்பாயசம்.


பாயசம் என்ற சொல்லில் இரண்டு உறுப்புகள்

உள்ளன. அவை:  1. பயறு  ( பாசிப்பயறு அல்லது

பாசிப்பருப்பு. பச்சைப்பயறு என்போரும் உள்ளனர்.)

2. அசித்தல்(உண்ணுதல் ) >  அசி+ அம் = .  


பயறு + அச + அம் >   பய + அச + அம் = பாயசம்.


பயறு என்பதில் றுகரம் கெட்டது அல்லது 

வெட்டுண்டது. பய என்பதன் மூலமும் பை > பைம்மை,

என்பதே. பொருள் பச்சை.[ இதற்கு இளமை என்ற

பொருளும் உள்ளது. எடுத்துக்காட்டு: பையன்.

பாயி என்ற மலாய்ச்சொல், பாய் என்ற ஆங்கிலச்

சொல்,  பயல் என்ற தமிழ்ச்சொல் - எல்லாம்

ஆய்வு செய்யுங்கள். இப்போது இவற்றைத்

 தவிர்ப்போம்.]

பயறு என்பதன் சொல்லமைப்புப்பொருள் - 

பச்சையானது, முளைக்காதது (at the time) 

 என்பதுதான். பாசிப்பயறு முளைக்க

வைக்கலாம்.

 

பய + அச + அம் = பாயசம் என்பதில் முதனிலை

நீண்டது.  பய + இ = பாசி என்பதிலும் 

அங்ஙனமே நீண்டு, ய - ச என்றபடி திரிந்தது.

இளமைக்காலத்திலே பயிர்போல் வளர்வது

தான் பாசம். பச்சையான அன்பு.  முதிர்ச்சியில்

நிலைக்குமா என்பது ஐயத்துக்குரியது. சில

உடன்பிறப்புகளிடை நிலைக்கும். சிலர் சண்டை

போட்டுக்கொண்டு எதிரிகளாய்விடுவர்.

அதனால்தான் பாசமலர் என்றனர்.  மலர்

காய்வதும் உதிர்வதும் உலக இயற்கை.


முதன்முதல் பாயசம் காய்ச்சிய மக்கள்

பெரிதும் பச்சைப்பயற்றையே பயன்படுத்தினர்

என்பது இவ்வாய்விலிருந்து தெரிகிறது. பிற்பாடு

பால்பாயசம், அரிப்பாயசம், கோதுமைப்பாயசம்,

மாவிழைப்பாயசம்( சேமியாப்பாயசம்)  என்று

பொருளுக்கும் திறனுக்கும் ஏற்ப சமையல்கலை

முன்னேற்றம் கண்டது.  கண்டபோதும் பாயசம்

என்ற பெயர் நிலைத்தது.


சீலை என்பது சீரை என்பதில் நின்று திரிந்தது.

சீரை என்றால் மரப்பட்டை. மனிதன் காட்டானாக

இருந்தகாலத்தில் மரப்பட்டைக் கோவணம் 

அணிந்தான். பின் துணி நெய்யக் கற்றுக்கொண்ட

போதும் சீலை என்ற சொல்லையே பயன்படுத்தி,

பின் சேலை ஆக்கிக்கொண்டான்.  அதுபோல

பிற பல.

அறிக மகிழ்க.


 

 




பிரார்த்தனை எஸ்.பி பாலாவுக்கு

இந்தியத் திரைவான் விந்தையாய்ப் போற்றிய பாடகர் / செந்தமிழ் முதலாய்ச் சீர்சான்ற பன்மொழி இசைவானில்/ எந்தவோர் வயதினர் ஆயினும் தம்வயம் ஈர்த்தவர்/8888888888 இந்தநாள் இனிப்பல ஆண்டுகள் வாழ்ந்திடப் பிரார்த்தனை 888888888888888888888888888888888888888888888888888888888888888 This poem which was posted under an earlier post does not appear in some devices, e.g. Win7. For the benefit of those devices affected, it is reposted here. Sorry for the inconvenience. For some unknown reason or cause, Tamil fonts ( direct from the font editor software ) do not work for this post. So, this information is posted in English. The poem above was cut-pasted. Thus Tamil fonts in pasted portions were not affected. 888888888888888888888888888888888888888888888888888888888888888 Formatting is lost in this post

எஸ்.பி. பாலாவுடன் நம் ஐயப்ப சாமிகள் ( பாடுகின்றனர்)



இந்தியத் திரைவான் விந்தையாய்ப் போற்றிய பாடகர்
செந்தமிழ் முதலாய்ச் சீர்சான்ற பன்மொழி இசைவானில் 
எந்தவோர் வயதினர் ஆயினும் தம்வயம் ஈர்த்தவர் 
இந்தநாள் இனிப்பல ஆண்டுகள் வாழ்ந்திடப் பிரார்த்தனை

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

அம்பும் அஸ்திரமும்.

 அம்பு அஸ்திரம் என்ற இருசொற்களையும் ஒப்பாய்வு

செய்தல்  தக்கது  ஆகும்.


அம்பு என்பது ஒரு சுட்டடிச் சொல். அ : இவன் 

( இங்கிருப்போன்) (அம்பு) அவனிடம் போகுமாறு,    (அ - அவன்பால்)

இடைவெளியில் பறந்து செல்லுமாறு அனுப்பப்படுவதே

அம்பு.   இதில் உள்ள பகுதி அல்லது முதனிலை "அ"

என்பதே.  பு என்பது ஒரு விகுதி. விகுதிக்கும் பொருள்

கூறவேண்டின்,  புகுவது, புகுத்தப்படுவது என்று விளக்கம்

செய்யலாம். எவ்வாறெனினும் அது ஒரு சுட்டடிச் சொல்

என்பது தெளிவு


அஸ்திரம் என்ற சொல்லும் அம்பு என்ற பொருளை

உடைய சொல்லே .  அப்பால் செல்லுமாறு இங்கிருந்து

ஏவப்படுவது அஸ்திரம்.  இதில் ஓர் ஐயமும் இல்லை

அ ( அங்கு செல்லுமாறு )  இங்கிருந்து ( இ)  திறமாக

ஏவப்படும் ஓர் ஆயுதம் அம்பு.   அ + இ + திறம் >

அயித்திறம் என்று வரும்.  இதில்,  யிகரத்துக்கு ஸ்

என்னும் மெய்யையும், திறம் என்பதற்கு திரம் என்ற

மாற்றுருவையும் இட்டால், அது அஸ்திரமாகிவிடு-

கின்றது.  திறம் பொதிந்த ஒரு செயலுக்கு வரும்

விகுதி திரம் என்று வருவது மிகுதியாம் என்பதுணர்க.


எடுத்துக்காட்டுகள்:

ஆ என்ற சினக்குறிப்புடன் எழுந்து எதிர்நிற்றலை

ஆ + திறம் >  ஆத்திரம் என்றதுபோலும் அமைப்பே

இதுவாகும். பாத்திரம் என்ற சொல்லையும் ஆய்வு

செய்யலாம்.   பர > பார் > பா  ( சற்று பரவலாக, 

அல்லது பரப்பளவு உள்ளதாகத் திரித்து அமைக்கப்

படும் ஓர் ஏனம்  அல்லது சிறுகொள்கலம் - பாத்திரம்

ஆகும். பரந்த வாயுடன் உட்குழிந்த கொள்கலம் என்க.

திரித்தல் என்பது செய்தல் என்றும் பொருளாம். 

திரி + அம் = திரம்  ஆகவே,  செய்யப்படும் எப்பொருட்கும்

இவ்விகுதி பொருந்தும்,  எச்செயலுக்கும் பொருந்தும்

என்று உணரவேண்டும்.  திரி, திரம் மற்றும் திறம் என்பன

ஒரு மூலத்தவை.


அ + இ + திரம் > அயித்திரம் பின் அஸ்திரம் ஆயிற்று. 

அப்பால் செல்லுமாறு இங்கிருந்து என்று கருத்து

மாறி அமைந்தது ஏன் என்று நினைக்கலாம். இது

தொடங்குநிலை பின் வைத்து அமைந்த சொல். இதற்கு

இன்னோர் எ-டு:  வாயில் என்பது. இல்லின் வாய்  என்பது

முறைமாற்றாய் அமைந்தது போலுமே இதுவாகும்.


எடுத்துக்காட்டு:  அனுப்புதல்.

அனுப்பினான் என்று பொருள்படும் "அயிச்சு" என்ற

மலையாளச் சொல்லும் அங்கிருந்து  முன்னிலையில் 

(இங்கு)  வந்தது  என்னும் கருத்து 

 அமைந்ததே.   ஆனால் இச்சுட்டடிச் சொல்லில்

தொடக்கம் சேர்வு ஆகியவை   நிரலாக

அமைந்துள்ளது.  அனுப்பு என்பது  அங்கிருந்து , (அ),

உ ( முன் என்னும் பொருள்)   முன்வருமாறு செய்வது

குறிக்கும்.   அ> அன்,    உ (முன்),  பு  - விகுதி.  ஆக,

அனுப்பு ஆயிற்று.  இங்கு பு என்பது வினையாக்கம்

குறிக்கும் விகுதியாயிற்று. அவண் உய்ப்பது என்று

சுருங்கக் கூறுக. இதுபின் இங்கிருந்து அங்கு 

செல்வதையும் குறித்தது ஒரு பொருள்விரி ஆகும்.

முன்னிடத்ததான ஒன்று அங்கு செல்வதென்னும்

பொருள்விரி.  இச்சொல் இருபாற் செலவையும்

பொதுவாய்க் குறிக்குமென்றும் வாதிடல் இயலும்.

 ஆதிகாலத்தில் அன் - அண், இன் > இண் என்ப

வெல்லாம் ஒன்றுக்கொன்று ஈடாக

வழங்கிய   தன்மையையே மொழிவளர்நிலை 

காட்டுகின்றது.


 அம்பு  அஸ்திரம் என்ற சொற்கள், கருத்தில் ஓர்

அமைப்பினவாய சொற்கள் என்பது முடிபு.

அங்கு சென்றது என்பது பொருள்.  இங்கிருந்து

என்ற கருத்து அம்பு என்னும் சொல்லில்

தொக்கு.   அஸ்திரம் என்ற சொல்லில்

அக்கருத்து உள்ளுறைந்து  அயலொலியால்

மறைக்கப்பட்டுள்ளது.


அஸ்திரம் என்ற சொல்லில் வரும் ஸ் என்ற

அயல் ஒலியை விலக்க, அங்கு தோன்றும் சொல்

தமிழ் எழுத்தொடு புணர்ந்த சொல்லாகிவிடும்.

இதுவே "வடவெழுத் தொரீஇ  எழுத்தொடு புணர்ந்த"

என்ற தொல்காப்பிய நூற்பாவின் கருத்து.

அவ்வாறே ஆயினமை ஈண்டு காட்டப்பெற்றது.


தட்டச்சுப் பிறழ்வுகள் சரிசெய்யப்படும்.


ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

பின்னணிப் பாடகர் எஸ். பி. பாலா

 இவர் இன்னும் மருத்துவமனையில் இருப்பதாகவே

நம்பத்தகுந்த செய்திகள் வாயிலாக அறிகிறோம்.

அவருடைய உடல்நிலை தேறிவருகிறது என்பதே

நாமறிந்த உண்மை.


இதற்கு முரணான செய்திகளும் பரப்பப் படுகின்றன.

இவற்றில் உண்மை இல்லை என்று நாம் நம்புவோம்.


பொய்ச் செய்திகளைப் பரப்பி அவற்றால் என்ன

கிடைக்கிறது என்று தெரியவில்லை.


பாலா மிகவும் நல்லவர் என்பதே நம் கருத்து

ஆகும். எமக்குத் தெரிந்த  ஓர் ஐயப்ப சாமி

நன்றாகப் பாடுவார். பாலா சிங்கப்பூர் வந்த

போது அவரிடம் சென்று பாடிக் காட்டினார்.

பாலாவும் மிகவும் மகிழ்ந்து நம் சாமிக்குப்

பாராட்டுக்களைத் தெரிவித்து ஊக்கப்படுத்தினார். 

"உங்கள் முயற்சிகளைத் தொடரவேண்டும்"

என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார் பாலா

அவர்கள். நம் சாமி அதனை அன்புடன்

நினைவு கூர்ந்து எம்மிடமும் பகிர்ந்துகொண்

டுள்ளார்.

பாலா அவர்கள் உடல்நிலை தேறி அவர்தம்

இசைத்தொண்டினைத் தொடர்தல் வேண்டும்

என்பதே இறைவனை நோக்கிய நம் இறைஞ்சுதல்

ஆகும்.


மேற்குறித்த நம் பூசை அன்பர்  ( ஐயப்ப சாமி )\

இசைஞானி  திரு  இளையராஜாவுடன் எடுத்துக்

கொண்ட படம் இதோ:: ( சொடுக்கவும் )


https://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_88.html


பாலா அவர்கள் நலம்பெற்றுத் திரும்ப 

இளையராஜா அவர்களும் வேண்டிக்கொண்டுள்ளார்.

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

 மந்திரத்தால் மாங்காய் வீழ்ந்திடுமா?  என்பது 

சிலருக்குப் பெரிய கேள்வியாகத் தெரியலாம்.  

யாரோ ஒரு பாடலாசிரியர் இப்படி எழுதினார்:

" மந்திரத்தால் எந்த நாளும்

மாங்க்காயும் வீழ்வதில்லை;

தந்திரமும் தோற்பதில்லை

தாரணி மேலே"

இதுவே பாட்டின் பகுதி. ஒரு பாடல் மிக்க அழகுடன்

 மிளிர்ந்தாலும் அதன் பொருள் அனைத்தையும்  யாம் 

ஏற்பதில்லை. யாம் முழுப்பொருளையும் பேதப்படாமல் 

ஏற்றுக்கொண்ட சில பாடல்கள்  உள்ளன.  யாம்    ஒரு 

பகுதியையே ஏற்றுக்கொண்டு மறு பகுதியை 

ஏற்றுக்கொள்ளாத பாடல்கள் சில உள்ளன. யாம் 

முழுமையாக ஏற்றுக்கொண்டு, அப்பொருளழகில் 

தோய்ந்துவிட்ட சில பாடல்களும் உள்ளன. 

யாம் பொருளை ஏற்காதபோதும், அப்பாடலின் எதுகை 

மோனை சந்தம் என்ற பல வெளியழகுகளில் நின்று 

மயங்கிய பாடல்களும் உள்ளன.  எம் சொந்தக் கருத்துகளை

 வெளியிடாமல் ஒரு பாடலுக்குப் பொருள் கூறியதும் 

உண்டு.  பாடலின் பொருள் யாது என்பதுதான் அதில் விடயம். 

நம் சொந்தக் கருத்து யாது என்பது அதில் எழவில்லை.

 எம் சொந்தக் கருத்தை அப்பாடல் சொல்லவில்லையே 

என்று அப்பாடலை யாம் வெறுப்பதில்லை. எம் சொந்தக் 

கருத்தை அந்தப் பாடல் சொல்கிறதே என்று அதனைக் 

கொண்டாடுவதுமில்லை. எமக்கு ஒத்துப்போகும் கருத்து 

அதில் உள்ளது. அந்தப்பாடலைப் கேட்குமுன்  யாமும் 

அந்தக் கருத்தையே கொண்டிருந்ததால் அப்பாடல் எமக்கு 

அறிவுறுத்திய புதிய கருத்து ஒன்றுமில்லை. 

ஆனால் பிறன் ஒருவற்கு அது பயன்பாடு உள்ளதாகலாம்.  

அதை யாம் மறுப்பதற்கில்லை. அது அவனுக்குப் 

பயன்படுகிறதா இல்லையா என்பதை அவன் தான் 

தீர்மானிக்க வேண்டும்.


இப்போது தந்திரமும் தோற்பதில்லை என்ற பாடலின்

 பகுதிப் பொருளைப் பார்க்கலாம்.  தந்திரம் செய்து 

அது தோற்றுப்போன பல நிகழ்வுகள் உலகில் உள்ளன. 


ஒரு பெரிய மரக்குதிரைக்குள் படைவீரர்கள் பலர் 

ஒளிந்துகொண்டு போய் ஒரு பகைநாட்டினுள்

புகுந்தபின் அந்த நாட்டைத் தாக்குதலுக் குள்ளாக்கி 

அங்குள்ள படைஞரைத் தோற்கடித்து வெற்றிகொண்ட 

தந்திர நடவடிக்கையில் "தந்திரம்" பலித்தது.  ஆகவே 

தந்திரம் தோற்கவில்லை என்று கூறலாம்.  ஆனால் 

தந்திரங்கள் எப்போதாவது வெற்றி பெறலாம்.

பிற நிகழ்வுகளில் தோற்றுவிடலாம். எப்போதும் 

வெற்றி என்று எதிர்பார்க்கமுடியுமோ?


இப்போது இன்னொரு நிகழ்வினைக் காண்போம். ஒருவர்

மருத்துவரிடம்  நோய் விடுப்பைப் பெறுவதற்காக ஒரு 

தந்திரம் செய்தார். வாயை வெந்நீரால் கொப்பளித்து 

விட்டுக் கொஞ்சம் நேரத்துக்குள்ளாகவே உடல் வெப்பம்

 அறியுமிடத்தில் சென்று வெப்பமானியை வாய்க்குள் 

வைத்துக்கொண்டார்.  அந்த வெப்பமானி அவருக்குக்

காய்ச்சல் இருப்பதாகக்  காட்டியது.அங்கிருந்த தாதி

 அதைப் பதிவு செய்துகொண்டு அவரை மருத்துவரிடம் 

அனுப்பினார். மருத்துவர் அதைப் பார்த்துவிட்டு,

 "காய்ச்சல் அதிகமாக இருக்கிறதே" என்றார்.

 உடனே மருத்துவர் அவரிடம் இருந்த வெப்பமானியை 

எடுத்து இந்தப் போலி நோயாளியின் வாய்க்குள் வைத்து 

வெப்பத்தை அளக்கவே அது உடல் வெப்பத்தைக் குறைத்துக் 

காட்டியது.  காய்ச்சல் ஒன்றும் இல்லை என்று சொல்லிய 

மருத்துவர், அவருக்கு வேலையிலிருந்து விடுப்பு

எதுவும் அளிக்காமற்போகவே,  போலி நோயாளியின் தந்திரம்

தோற்றது. இதை வைத்துப்பார்த்தால், தந்திரமும் 

தோற்பதில்லை என்ற கருத்தை ஏற்கமுடியவில்லை.

தந்திரமும் தோற்பதில்லை என்ற வாக்கியத்தில் 

மும் -  உம் என்பதற்கு ஏதும் பொருள் உள்ளதா?  

எந்த நாளும் மாங்காய் வீழ்வதில்லை, என்பதற்கு 

எப்போதும் வீழ்வதில்லை, ஆனால் எப்போதாவது

வீழ்வதுண்டு என்று பொருள் கொள்ளலாம். 

அப்படிச் சொன்னால் திறமுடையோர் மந்திரம் 

சொன்னால் அது பலிப்பதுண்டு என்று கூறி 

மந்திரத்தின் திறத்தை நிலைநாட்டிவிடலாம், சிலர் 

ஏற்காவிடினும்.  அதே " எந்தநாளும்" என்ற தொடரை, 

தோற்பதில்லை என்பதற்கும் வருவித்துரைத்து,

  " எந்த நாளும் தோற்பதில்லை, ஏதாவதொருநாள் 

தோற்பதுண்டு, எப்போதாவது வெல்வதுண்டு

என்று முடிவு கட்டிவிடலாம். அப்படியானால்

 பாடல் வரிகள் நிலைநாட்டிய கருத்து இங்குமில்லை, 

அங்குமில்ல்லை  என்று ஆகிவிடுகிறது. இவ்வாறு 

கூறவே, பாவலரின்  கருத்துக்கும் அவரெழுதிய 

நடப்பு நிலைக்கும் சுற்றுச்சார்புக்கும்,    

இவ்வுரைகள்பொருந்துமா என்பது இன்னொரு 

கேள்வியாய்த் தனித்து  நிற்கும்.


இனி, மந்திரம் என்பதென்ன?  அதன் சொல்லமைப்புப்

பொருள் யாது,  தந்திரம் என்பதென்ன, அதன் சொற்

பொருள், அமைப்பில் யாது, பயன்பாட்டில் யாது? என்று

விளக்கி, மந்திரமென்பதும் தந்திரமென்பதும் 

உண்மையில் யாது யாது என்று விளக்கி, பொருளைத்

 திறமுடையோர் திசைமாற்றிவிட்டுவிடலாம். நேரம் கிட்டினால் 

இதையும் வாதிட்டு நாம் ஒருநாள் மகிழலாம்.

நன்றி.


மெய்ப்பு பின்னர். 

எழுத்தில் திருத்தங்கள் வேண்டின்

சுட்டிக்காட்டினால் நன்றி.

இவை பின் கவனிக்கப்படும்.

உங்கள் கருத்துகளைப்

பின்னூட்டமிடவும்.


This post has been hacked, apparently after posting.

original restored

Some websites experienced downtime in

Singapore.

Edited again: 17.8.2020





வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

தவமும் ஜெபமும்

  ஜெபமென்பதும் தவமென்பதும் அழகான தமிழ்ச்சொற்கள்.

இவற்றை இப்போது காண்போம்.


தொடக்கத்தில் சிலர் தவம் செய்யத்தொடங்கிய காலத்து, 

அதற்கு உடனே ஒரு பெயர் ஏற்பட்டுவிடவில்லை. 

இல்லறத்தார் அதைக் கண்டு,   அதில் ஈடுபட்டவர்கள்

(இந்தத் தவஞ்செய்வோர்) குடும்ப வாழ்க்கை மற்றும்

இன்னல்களிலிருந்து  தப்பி ஓடப் பார்க்கிறார்கள்

என்றுதான் நினைத்தனர். அதனால் ஒப்பாமையை

உணர்த்த  வீட்டு வாழ்வே சிறந்தது என்றனர்.  

இதன் எண்ணச் சுவடுகள் பிற்காலங்களிலும்

 இலக்கியங்களில் காணப்பெற்றன. அதிர்வுகளை

உண்டாக்கின. ஒரு புதுக்கொள்கை தோன்றியவுடனே 

அதற்குப் பெயர் ஏற்பட்டுவிடுவதில்லை. பெயர்கள் 

நாளடைவில்தான் ஏற்படுகின்றன. திரைப்படங்களைக் 

குறிக்க என்னென்ன பெயர்கள் வழங்கின? இதை 

இப்போது விவரிக்கவில்லை. நீங்களே சிந்தித்துக்

கொள்ளுங்கள். நேரம் கிட்டினால். எப்போதாவது 

எழுதுவேம்.


இன்னல்கள், சிக்கல்கள், உலகியல் தொந்தரவுகள் 

முதலியவற்றினின்றும் தப்பித்துக்கொள்வதே தவம். 

தவமென்றால் என்ன என்பதை மிக்கச் சிறப்பாக 

விளக்கிய வரையறவுகள் எல்லாம் வெகுநாட்களின்

பின்னர் அறிஞர் ஆய்ந்து எழுதியவை.  கேட்கவும்

படிக்கவும் அவை இனியவையாக இருக்கும் என்பதில்

ஐயமெதுவும் இல்லை.  ஆனால் முதன்முதலாய் இதைக்

கண்டவர்களுக்குத் தோன்றிய எண்ணம், இவர்கள்

தப்பி ஓடுகிறார்கள் என்பதே அன்றி வேறில்லை. ஆகவே

தப்புதல் என்ற சொல்லினின்று தவம் என்ற சொல் 

தோன்றியது.


(சில தப்பியோடியவர்களைப் பிடித்து உதைத்துக்

கட்டாயக் கல்யாணம் செய்துவைத்த நிகழ்வுகளும்

நடைபெற்றிருக்கலாம். இவற்றை யாம் தேடிச்

கண்டுபிடிக்கச் செல்லவில்லை. நாம் கற்பனைகளுக்

குள்ளும் செல்லாமல் விடுப்போம்.)


தப்புதல், இது இடைக்குறைந்து  தபுதல் ஆனது.பின்

தபுதல் >  தபு+ அம் > தபம் > தவம் ( பகர வகரத் திரிபு ).

என அமைந்தது.


தப்புதல் தாவுதல் எல்லாம் தொடர்புடைய சொற்கள்.

ஒருவன் தாவும்போது இடையில் உள்ள பல தடைகள்

இடையூறுகளை இடறாமல் தப்பித்துத்தான் விடுகிறான்.

இதைப் பின் விளக்குவோம்.


தாவு > தாவு + அம் > தவம் ( முதனிலை குறுகிய தொழிற்

பெயர் ).  சா வு > சவம் என்பதுபோலுமே இது. இவ்வாறு

கூறினும் ஏற்கலாம்:   சா(தல்) > சா + அம் > சாவம் (வகர

உடம்படுமெய்) > சவம் (முதனிலை குறைந்தது ).


இனிச் செத்துதலிலிருந்து செபம் வந்ததை அறிவோம்.

செத்துதலாவது ஒத்திருத்தல்.  புல்லைச் செத்தி 

அழகுபடுத்துகிறவன்,  அவற்றின் நீட்டம் 

ஒத்திருக்கும்படி வெட்டுகிறான். அப்போது திடல் 

அழகாகிறது.


இதன் அடிச்சொல் செ என்பதுதான்.  செத்துதல் என்பதில்

து என்பது வினையாக்க விகுதி.


புத்தகங்களை அச்சிடுவோர் அவற்றை அழகாக வெட்டிச்

செப்பம் செய்கிறார்கள்.  அவை ஒத்திருக்கும்படி கட்டி

வெட்டி ஒட்டி வேண்டியன செய்வதே செப்பம். ( படியொப்

புமை)  . ஒருவன் செபம் செய்யும்போது அவன் ஒத்த 

வாக்கியங்களைச் சொல்லி வழிபடுகிறான். அதாவது

இன்று சொன்னதையே  நாளையும் அதற்கடுத்த 

நாட்களிலும் ஓதுவான்.   அதுவும் செப்பம்தான்;  

அவன் வாயினின்று வருவன நல்ல செப்பம் செய்த 

வாக்கியங்கள்.


செப்பம் > செபம் .  செப்பம் செய்த வாக்கியங்களைத் 

திருப்பித் திருப்பிச் சொல்லி வழிபடுதல். செபம் பின் 

ஜெபம் ஆனது.  உயர்த்தி என்பது ஒஸ்தி ஆனது

போல. தமிழில் "வடவொலிகள்" இல்லாத பல சொற்கள்

ஏனைத் திராவிட அல்லது தமிழின மொழிகளில் 

அவ்வொலிகளை அடைந்தன. எடுத்துக்காட்டுகள் 

பின்னொருநாள் காண்போம். ஒன்று கூறினேம். தமிழிலே 

உயர்த்தி (  உயர்ச்சி )என்பது ஒஸ்தி ஆனது அன்றோ?


இன்னும் கொஞ்சம் சிந்தியுங்கள். செப்புதல்  என்பது 

ஒன்றைச் செப்பமுறச் சொல்லுதல்.  செ என்பது செம்மை 

குறிக்கும் அடிச்சொல்.  செப்பு என்பதில் பு என்பது 

வினையாக்க விகுதி. செப்பு இடைக்குறைந்தால் செபு 

ஆகும்.  செபு+ அம் = செபம். இப்போது செப்புவதையே 

நாளையும் பின்னும் செப்புவது என்று வரையறவு செய்க .  

அப்போது உண்மை புரியும்.


ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் விளக்கினும் அது 

அதுவேதான்.


அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்.

இப்போது இவ்விடுகை சிறிது செப்பம்

செய்யப்பெற்றுள்ளது. அது வாக்கிய

அமைப்பு, தட்டச்சுப் பிறழ்வு தொடர்பானது.

இடுகையின் உள்ளுறைவு மாற்றம்

செய்யப்படவில்லை.





 




புதன், 12 ஆகஸ்ட், 2020

கேடகம் - சேடகம் (கேடயம்)

  இங்கு நாம் வெளியிட்டுள்ள இடுகைகள்  பெரும்பாலும்

ஒவ்வொன்றாகச் சிந்தித்து எழுதப்பட்டவை. இது

சிந்தித்தல் என்ற சொல்லுக்கு இங்கு கூறியுள்ள 

பொருளுக்குப் பொருத்தமானவை. ஒவ்வோர் இடுகையும்

சிறிதாய் இருப்பதுபோலவே சிந்தனையும் சிறிது சிறிதாய்

வெளிப்பட்டவைதாம். இவற்றை ஒரு நூலாய் 

வெளியிடுவதாயின் முறையாக வரிசைப்படுத்தி 

இயைத்துத் தொகுத்து வெளியிடுதல் வேண்டும். இது

நிற்க, இப்போது கேடயம் என்ற சொல்லைப் பார்ப்போம்.


இச்சொல் ஓர் இடுகையில் விளக்கப்பட்டது. அதனையும்

வாசித்துக் கொள்ளுங்கள்: சொடுக்குக:

https://sivamaalaa.blogspot.com/2018/04/blog-post_54.html


மேற்கண்ட இடுகைக்கு முன்னும் இது விளக்கப்பட்ட

துண்டு.  அஃது இவ்வலைப்பூவில் இப்போது இல்லை.


கேடயம், கேடகம் என்ற வடிவங்களில் இருக்கும் 

இச்சொல்,  உள்வரும்  அம்பினைக் கெடுத்தல் 

அல்லது தடுத்தல் என்ற பொருள் உள்ளதுதான்.

கோட்டை மதில்களின்மேல் சுற்றுச் சுவருடன்

அமைக்கப்பட்ட "கூடுகளுக்குள்" வீரர்கள் 

இருந்துகொள்வதால், அம்புகளிலிருந்து இவர்கள்

தங்களைக் காப்பற்றிக்கொள்வர். அகம்நோக்கி

வரும் அம்புகள் சுவரினால் கெடுக்கப்படும் , 

அதாவது  தடுப்புறும்.  அகம்வருவது கெடுக்கப்

பட்டது. இது ஒரு முறைமாற்றுப் புனைவு. இவ்வாறு

அமைந்த சொற்கள் பல உள்ளன. எடுத்துக்காட்டுக்கு

ஒன்று:   வாயில் என்ற சொல். இல்லத்தின் வாய்

என்பதைத்தான் வாயில் > வாசல் என்று புனைந்துள்

ளனர்.  அதாவது முறைமாற்றியுள்ளனர்.


இனிக் கேடகம் என்ற கேடயம், வேறு வடிவங்களையும்

அடைதல் உண்டு. ககரம் சகரமாகவும் (ககர வருக்கம்

ஏற்புடைய சகர வருக்கமாகவும் )  திரியுமாதலால்,

இவ்விதிக்கொப்ப இது சேடகம் என்றும் திரியும்.

இது கேதாரகெளளம்  என்பதில் சேதாரம் எனற்பாலது

கேதாரம்* என்று திரிந்தாற்போலுமே ஆகும். மேலும்

சேரலம் என்பது கேரளம் என்று இயல்வதும் காண்க.


. பழைய இடுகைகள் சில இவற்றை விளக்கியுள்ளன.அறிக


மெய்ப்பு: பின்னர்.



செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

உயர்ந்த உள்ளம் இவருக்கு.

 உலகுக்  குதவுவதே உண்மை அரசியலாம்

பலகற்  றுயர்ந்த பண்பும் அவரிடத்தே.

யாரும் புகழும் பாரிலுயர் பண்பாளர்.

மருத்துவர் இவரை மதித்துப் போற்றுவீர்!



https://www.ndtv.com/india-news/doctor-turned-politician-zr-thiamsanga-in-mizoram-helps-woman-deliver-baby-2277818?browserpush=true



ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

அனவரதம் - எப்பொழுதும், இடையீடின்றி.

 அனவரதம் பிறந்த விதத்தை சுருங்கச்சொல்லி 

விளங்கவைக்க  முற்படுதல் நன்று. நம் தமிழ் 

மக்கட்கும் நோய்நுண்ணுயிர்ப் பரவலால் 

வாசிக்கக் கிட்டும்நேரம் குன்றிவிட்டது.


அனவரதம் என்றால் அனைத்து நாளிலும் 

வருவது.


அனை -  அன.

வரு (வது)  -  வரப்பெறுவது:    வர.

து  -   ஒன்றன்பால் விகுதி, இங்கு  வருபொருள் குறித்தது.

இதனைச் சொல்லாக்க இடைநிலை எனினுமாம்.

அம் -  அமைதல் குறிக்கும் விகுதி.


அன + வர + து + அம் : >   அனவரதம்.


அம்மை என் மனத்துள் அனவரதமும் பொருந்தி நிற்கின்றாள்

என்ற வாக்கியத்தில் இச்சொல்லின் பயன்பாடு காண்க.


இச்சொல் அமைந்த காலத்தில் புதிய சொல். இன்று இது

பழைய சொல்லே.  நன்கு திரித்து அமைக்கப்பட்டுள்ளது.

அறிக மகிழ்க.



குறிப்பு:

( இது பெயர்களிலும் வருவதுண்டு. எ-டு:

அனவரத விநாயகம்.)


விநாயகம் :  வி+ நாயகம்; மற்றும் வினை+ஆயகம்.

ஐகாரம் குன்றி வினாயகம் ஆம்.

வி நாயக என்பதில் வி என்பது விழுமிய என்று 

பொருளாம்.  வி முன்னொட்டு என்பாருமுளர்.

சனி, 8 ஆகஸ்ட், 2020

சிங்கப்பூருக்குத் தேசிய தின வாழ்த்துக்கள்

எந்தநாள் என்றாலும் இதற்கீடாய் நில்லாதே

இனிமை  எலாம்தரும் தேசிய தினமே---நாம்

இருக்கின்ற இந்நாடு நம்பூ வனமே. 


சொந்தநாள் என்றினிச் சொல்வதற்   குண்டென்றால்

சோர்வகல் சுனைநீர் சுரந்தஇந் நாளே----- வளம்

சுருங்காப் பெருங்கலி சூழ்வதிந்   நாளே.


சார்பின்மை வீடுண்டு சோர்வின்மை உண்டதனால்

மார்புண்டு வீறுண்டே மாண்பும்  உள்ளிலே----நல்ல

மதியுண்டு நிதியுண்டு மகிழ்வும் இல்லிலே.


தொழிலுண்டு எழிலுண்டு தொட்டதில் பொன்னுண்டு

தோன்றிடும் எண்ணமெலாம் ஊன்று திண்ணமே---- இனங்கள்

துவண்டிடாத் தூண்கள் நாலு  நிற்கும் வண்ணமே


சிங்கை என்னும் மங்கை தனைப் போற்றிப் பாடியே

சீருடன் வாழ்கவென்று பாடி  யாடுவொம்

கைகள்கொட்டி இங்குமங்கும் கூடி  யாடுவோம்.


சிங்கைக்குத் தேசிய தின வாழ்த்துகள்.


பொருள்:

சுனை -  நீர் சுரக்குமிடம்.

பெருங்கலி - பெரு மகிழ்ச்சி.

கலி - துள்ளுதல்.

சார்பின்மை - யாரையும் நத்தி வாழாமல்

தானே பொருள்தேடி வாழ்தல்.

சார்பின்மை வீடு - சொந்த வீடு.

மார்பு உள்ளிலே - நெஞ்சில்.

இல்லிலே - வீட்டிலே

ஊன்று - நிலை(த்தல்)

நாலு - நான்கு இனங்கள்




மனம் தேறச் சில நாட்கள்

 வெள்ளத்தால் தம்முயிர் போயினோர் வானூர்தி

பள்ளத்தில் வீழ்ந்துடைய மாண்டோராம்  ----  விள்ளரிய

நோய்நுண்மி தன்னால் மடிந்தோர் எனக்கரைந்து

வாய்விட்டு வாரிபோல் கண்ணீரில் ----  தோய்வுறினும்

வாரார்  அவர்நல்லோர் வாழ்கவே  இவ்வுலகம்

தேறும்சின் னாளில் உளம்.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

பெய்ரூட் வெடிவிபத்து

பெயிருட்டில் பல்லோரைக் கொன்றுவிட்ட வெடிவிபத்து
பெருந்துயரம் நிகழ்ந்துளது உறுந்துயரே சொலத்தரமோ?
மைஇருட்டில் செவிகிழியும் ஒலியுடனே கிலிபரவி
வையகமோர் துயர்க்கடலென் றையமற உணர்த்தியதே
நையுறவே சிதைந்தவுடல் நாற்புறமும் பறந்துவிழ
நாசமிதோ நயமொழிந்த இடர்நடப்போ  இனியறிவோம்.
செய்யஒன்றும் அறிகிலராய் பெய்விழிநீர் பெருகுமக்கள்
கையறவின் மீட்சியுற ஐயனடி பணிகுவமே.

பொருள்

சொல – சொல்ல

மை இருட்டு - காரிருள்

கிலி - அச்சம்

ஐயமற – சந்தேகமில்லாமல்

நையுற – உருவழிய

சிதைந்த – அடையாளமின்றி மாறிவிட்ட

நாசமிதோ - சதி வேலையோ

இடர் நடப்போ - வெறும் விபத்தோ

பெய்விழி நீர் - கண்ணீர் விட்ட

( விழி நீர் பெய் என்று மாற்றுக)

பெய் - கண்ணீர் மழை எனல்பொருட்டு.

பெருகு மக்கள் - உதவுவோர் தேடிக்

கண்டுபிடிக்கக் கண்டுபிடிக்கத் தொகை மிகுதல்

ஆகும் மக்கள்

கையறவு - மரண சோகம்

ஐயன் - இறைவன்.



மெய்ப்பு பின்

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

மன இணைப்பும் பாலங்கள் இணைப்பும்

The Tamil font editor here is not working. This is posted from another device. We cannot edit this at the moment. But you may read. Pl write your suggestions if any in the comments column. Inconvenience if any is regretted. Most edit tools are missing. Software error. Pakrodai VeNbA. 


இருநா டுகளிடை ஈரிணைப்புப் பாலம்; 
ஒருபா லவர்தாண்டிச் செல்ல === இருபாலும் 
தொற்றுவரும் அச்சத்தால் முற்றுதடை உள்ளதே 
எற்றென்று மக்கள் இரங்குவர் === வெற்றிடை
இந்நகரத் தாரை இடுக்கி முடக்கம்போல் 
பன்னாள் துயரம் படச்செய்து === இந்நாளில் 
வாட்டுதல் மாறி வருநாள் வளமாமோ 
நீட்டுவதோ துன்பம் நினை! 

 அரும்பொருள்

ஈரிணைப்பு - இரு இணைப்புகள்; 
ஒருபாலவர் தாண்டி - ஒருபக்கம் உள்ளவர் இன்னொரு பக்கம் போக; 
இரு பாலும் - இரண்டு பக்கமும்;
தொற்று - மகுடமுகித் தொற்று corona virus infection 
எற்றென்று - ஐயோ இது என்னவென்று; 
வெற்றிடை - இருபாலார்க்கும் இடையே ஒரு 
தொடர்பில்லா நிலை; 
முற்றுதடை - முழுத்தடை ( வினைத்தொகை )
இடுக்கி - “பிளாயர்" போலும் இருபக்கமும் 
நெருக்கும் ஒரு கருவி; 
முடக்கம் - மிண்ட இயலாத நிலை; 
பேச்சுவழக்கில்: "முண்டுவது" என்பர்.
ability to move oneself or one's limbs and body.( colloq. meaning).
வருநாள் - எதிர்காலம்; 
வளமாமோ - நலம் பெறுமோ 
நீட்டுவதோ - நெடிதாக்குவதோ. 
நினை - எண்ணிப்பாருங்கள். 


 News item in point: Click to read: http://theindependent.sg/dont-block-us-from-passing-through-requests-citizen-in-response-to-johor-baru-spore-border-controls/ 

 ( All formattings in this post are lost. Cannot restore )
சிறிது மாற்றம் (தட்டச்சுப் பிறழ்வுத் திருத்தம் )
செய்யப்பட்டுள்ளது. 1.26 பிற்பகல் 05082020

Thii (தீ ) and Day : சொற்கள் ஏன் திரிகின்றன?

சொற்கள் திரிபு அடைதல்:

ஒரு மொழியின் சொல் இன்னொரு மொழிக்குத் தாவுமாயின் அது திரிந்து வழங்குவதே பெரும்பான்மை. திரிபு இன்றி வருமாயின் இவ்விரு மொழிக்காரரும் நாவசைவுகளில் ஓர் இயைபு அல்லது ஒத்தியல்வு உடையவர்கள் என்று நாம் எண்ணிக்கொள்ளலாம். தமிழ்ப்பெயர்களை நாவினால் ஒலிக்க நம் மலாய் மக்கள் சீனர்களை விடத்  திறனுடையவர்களாக இருக்கிறார்கள். இதைப்போலவே சீனச்சொற்களைப் பலுக்கச் சில தமிழர்கள் தாளம்போட வேண்டியிருக்கிறதன்றோ? கருநாடக இசையை நன்றாகப் பயின்று கீர்த்தனைகளை ஒரு மலேசியச் சீனர் தாளத்துடனுடன் சுரங்களுடனும் பாடுகிறார். இவர் புட்டபர்த்தியிலுள்ள சத்யசாயி மண்டபத்துக்கும், போய் கச்சேரி செய்துள்ளார். இவ்வாறு தேர்ச்சி பெற்றவர்கள் ஒரு விதிவிலக்கு என்று சொல்வதில் தவறில்லை. இது ஒரு சிறுபான்மை நிகழ்வாகும்.

சில தமிழ்ச் சொற்கள் ஐ என்ற எழுத்தைக்கொண்டு முடியுமானால் பிறமொழியினர் அதை ஏகாரம் கொண்டு முடிப்பதே இயல்பு.  தோசை ( ஐ) எனற்பாலது  தோசே (ஏ) என்றே பிறரால் முடிக்கப்படும்..  ஐ - ஏ திரிபைக் 
கவனித்துக்கொண்டு எத்தனை சொற்களில் இவ்வாறு திரிகிறது என்று ஆராய்வேண்டும். அவ்வாறாயின் மலை என்பது மலே என்று திரியவேண்டுமே!  ஆமாம். Malay என்றே திரிந்து நம் முன்னே ஒரு சொல்லே
இருக்கின்றதே. இனி மாப்பிள்ளை என்பதை மாப்ளே என்றுதான்  பிறரால் சொல்லநேரும். உலகில் வகுப்பறையில் மட்டும் கற்று வெளிவருவோன் 
செய்யும் ஆய்வு பெரும்பாலும்  புண்ணியமற்றது! அகண்ட கலந்துறவாடல் இருந்தாலே இயலும். மூளையின் இயக்கமும் ஒருங்கிணையவேண்டும். இல்லையென்றால் அறிந்து ஒன்றை வெளியிடுதல் இயலாததாகிவிடும்.
சின்னையா என்பதை சின்-னா-யா என்பானாகில் மொழியிடை ஐகாரம் ஆகாரம் ஆகிவிட்டது. கீதை என்று தமிழன் சொல்வானாகில்  கீதா, கீத்தா,கீட்டா என்றுதான் பிறன் முயல்வான்.

ஐகாரம்  ஏகாரமாதலும்  சில சொற்களில் ஆகாரமாதலும் கண்டோம்.   இனி ஈகாரம் (ஈ) ஏகாரமாதல் காண்போம்.

ஈ > ஏ திரிபு:

தீ என்பது நெருப்பு என்று பொருள்தரும் ஒரு தமிழ்ச் சொல்.  இதிலிருந்தே  நாள் என்று பொருள்படும் ஆங்கிலச் சொல் வந்தது  ஆசிரியர் ஒருவர் ஆய்ந்துவெளியிட் டிருந்தார். தீ எரியும்போது வெளிச்சம் கிட்டுகிறது.  நாள் அல்லது பகலில் சூரிய வெளிச்சம் உள்ளது. ஆதலால் தீ என்பதிலிருந்து டே என்ற நாள்'குறிக்கும் சொல் வந்திருத்தல் பொருத்தம்தான்.

ஆனால் டே என்ற ஆங்கிலச்சொல் பண்டை ஆங்கில மொழியில் (Old English)(OE) "டேக்" என்று இருந்தது. பண்டை செர்மானிய  ( Old Germanic ) மீட்டுருவாக்கத்தில் அது "டேகஸ்" என்றிருந்தது.பழைய ஃப்ரீசிய  (Frisian )  மொழியில் அது  "தி" /  " தெய்" என்று இருந்தது.  இந்தக் கட்டத்தில்தான் அது  தீ என்ற தமிழுடன் பொருந்துவதாகின்றது. ஆனால் மேலை ஆய்வாளர்களுக்கு இதில் வரும் தீ அல்லது "தி" /  " தெய்"    எங்கிருந்து தோன்றியதென்று முடிவாகக் கண்டு  பிடிக்க இயலாமல்  அதை " obscure"   என்று விட்டுவிட்டனர்.ஆகவே இந்தோ ஐர்ப்ப்பிய மூல மீட்டுருவாக்கத்தில்டேக் என்பதில் உள்ள் டே என்பதை விட்டு,  இறுதி"ஏக்" என்பதுதான்  (  ட் + ஏக் ) மூலமாக இருக்கலாம் என்றுஊகித்து முடித்தனர். அவர்களுக்குத் தீ என்றதமிழ்ச்சொல் உலகில்  இருப்பது தெரியவில்லை.தெரியாதது தொல்லைதான். என்ன செய்வது.

சொற்களை ஆய்வதென்பதும் எளிதானதன்று. தீ என்பதிலிருந்து டே வந்ததென்று சொன்ன தமிழா- சிரியர் எப்படி அதை நிலைநாட்டியிருந்தார் என்பது இப்போது எனக்கு மறதியாகிவிட்டது. ஆனால் அவர்  முடிவை யான் மறக்கவில்லை. I do not have his book. I read it in a library.ஆனால் இந்தோ ஐரோப்பிய மீட்டுருவாக்கத்தில் (Proto IE) "தியா" என்றால் எரிதல்,  அதாவது நெருப்பு எரிதல்.
தமிழிலும் அது எரிதல்தான். எரிந்தால் வெளிச்சம். வெளிச்சம் என்பதே பகல். பகல்தான் டே.  தீ தான்  தியா ஆகி உலவியது.  ஆகவே இது ஈ-  ஆ திரிபு. தீ என்பதில் உள்ள ஈகார ஈறு திரியாமல் ஆகாரம் வந்திணைந்த எழுத்துப்பேறாயினும் அமைக.

Have a nice day. Take care.


தட்டச்சு மெய்ப்பு பின்னர்.

சனி, 1 ஆகஸ்ட், 2020

இரத்தம் - "ரெட்" (ஆங்கிலம்)

இதில் இரு சொற்களை ஒப்பாய்வு செய்வோம்.

ஆங்கிலத்திலுள்ள சிவப்பு என்று பொருள்படும் "ரெட்
என்னும் சொல், பலரும் அறிந்ததே.

இரத்தம் என்ற சொல்லில் உள்ள இகரத்தையும்
 இறுதிநிலையில் அமைந்த "தம்" என்பதையும் 
எடுத்துவிட்டால் நடுவிலிருப்பது "ரத்"  (ரெட்) என்பதே.

இந்தோ ஐரோப்பிய மூலமொழி எனப்படும் 
புனைவாக்கத்தில் இதை ஏறத்தாழ "ரெத்" என்றே 
கண்டுபிடித்திருக்கிறார்கள்.ஆங்கிலத்துக்கு அது 
ஸ்காட் மொழியிலிருந்து வந்தது என்பர். 
ஸ்காட் மொழிக்கு அது ஸ்காண்டிநேவிய வட்டாரத்தி
லிருந்து வந்திருக்கவேண்டுமென்று தெரிகிறது. 
அவ்வட்டாரத்தில் ரெயனிர் ரோவன் என்று பலவாறு 
திரிந்து வழங்கியுள்ளதாம்.

இலத்தீனில் அது "ருப்ரம்" என்னும் அழகான வடிவமாய் 
உள்ளது. சிவப்புக் கல்லுக்கு "ரூபி" என்று நாமறிந்ததே.
 இலத்தீனிலே அது  "ரூஃபூஸ்",   "ரூபர்"  " ரூபிகுண்டஸ்" 
என்றெல்லாம் வேற்றுமைப்படும். ரகர வருக்கம் 
முன்னிலையில் இருந்தபடி இருக்க, வால்கள் - விகுதிகளில்
மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழில்போல சமஸ்
கிருதத்திலும் இலத்தீனிலும் வேற்றுமைகள் வரும்: 
தமிழில், மேசை, மேசையை, மேசையோடு, மேசைக்கு 
என்றெல்லாம் உருபுகள் வருவதுகாண்க. வேற்றுமை 
இல்லாத (இவ்வாறு சொல்லிறுதி மாறியமையாத) 
மொழிகள் பல உலகில் உள்ளன. அது நிற்க.  ஆங்கிலத்தில்
இது உள்ளதென்றாலும் மெத்தக் குறைவு.  எடுத்துக்காட்டு:  
ஹி >  ஹிம் என்பது காணலாம். எழுவாய், பயனிலை 
என்ற  எந்நிலையிலும் மலாய் முதலிய 
மொழிகளில் சொல்லிறுதி மாற்றமென்பது இலது.

இரத்தம் என்பதன் மூலம் அரத்தம் என்பதே. இதை 
மொழிநூலார் கூறியுள்ளனர்.  அர் என்பதே சிவப்பு என்று 
பொருள்படும் அடிச்சொல். அர்+ அத்து + அம் = அரத்தம்.  
அத்து என்பது அது என்ற சொல்லின் தகர இரட்டிப்பு
வடிவம். இங்கு சொல்லாக்க இடைநிலையாய் வருவது.  
கணித்தல் குறிக்கும் கணிதம் என்ற சொல்லில் இது 
என்பது இடைநிலையாய் வந்தது போலுமே இஃது 
என்றறிக.  கணி + இது + அம் = கணிதம். ஓர் இகரம்
கெட்டது. துகரத்தில் உகரமும் கெட்டது. அரத்தம் 
என்பதிலோர் உகரம் கெட்டது.   அர் + அத் +
 (த்+உ) +அம் > அர் அத் த் அம் >  அரத்தம் எனவறிக.

அர் என்ற அடிச்சொல் வந்த மற்ற சொற்கள்:   
அர் அன் > அரன்; அர் அத்து ஐ > அரத்தை. என்று 
கூறுவர்.  அரன் : சிவன் குறிக்கும் சொல்.


அர் ஆனாலும் இர் ஆனாலும் ஒன்று  தலையிழந்து
ரூ ஆகி, பின் வெவ்வேறு இறுதிநிலைகளை 
ஆங்காங்கு வேண்டியவாறு திரித்துக்கொண்டு 
சொற்கள் பல்கியுள்ளமை இதனால் அறியலாகும்.
 இதில் இ-ஐரோ.  மூலமொழி மீட்டுருவில்
தகர ஒற்று கண்டிணைபுற் றிருப்பது சிறப்பே 
என்றுமுடிக்க.

அரத்தம் இரத்தம் என்ற வடிவங்களில் நடுவாகிய
ரத் என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகட்கும் ஏகி 
 ஆங்கு இடம்கண்டிருப்பது நாம் 
மகிழ்வதற்குரியதாகும்.

மெய்ப்பு - பின்.





மது உண்பவர் உண்ணட்டும்.

நச்சுநீர் உட்கொண்டு நம்மனோர் மாய்வரென்றால்
இச்சை   மதுவுண்ணல் ஏன்தடுப்பீர்----  சொச்சமின்றி
உண்ணட்டும் தீயமது  உள்ளவரை வாழ்கஏதும்
பண்ணின் பயனர் அவர்.

நச்சுநீர் -  நோய் நுண்மிகளை ஒழிக்கும் நீர்க்கலவை
நம்மனோர் - நம் மக்கள்.
மாய்வரென்றால்  - (சிலர் மாண்டுவிட்டனர் என்பது
தகவல்  ).

இச்சை - விருப்பம்.
ஏன் தடுப்பீர் - தடுக்கத் தேவை இல்லை என்பது.

சொச்சம் இன்றி  --  கோப்பையில் உள்ள மது
எல்லாவற்றையும்.

தீயமது - கெடுதல் என்று அறிஞர் சொல்லும் மது.

உள்ளவரை வாழ்க  -  மது உண்டலால் ஆயுள்
குறையுமென்றால், குறைந்த வரை வாழட்டும்;

ஏதும் பண்ணின் ( பண்ணட்டும்) - அது மது உண்போருக்கு
உரிமை ஆகட்டும் என்றபடி.

பயனர் அவர் -  அதைப் பயன்படுத்துவோர் அவர்களே.
அதனால் வரும் உடற்கேட்டையும் விளைவுகள்
பிறவற்றையும் அவர்களே அடையட்டும் என்றவாறு.

பிறர் எப்படி வாழவேண்டும் என்பதை அவர்களேதாம்
தீர்மானிக்க வேண்டும்.  நாம் தீர்மானித்து வெற்றி
காணுதல் இயலாதது.

மது அருந்துவதால் குடும்பச்சண்டைகள் வரலாம்.
மதுவைத்  தடைசெய்தால் கள்ளச்சாராயம் அதன்
இடத்தை மேற்கொள்கிறது. பிறகு அதைத் தடுக்க
இயலாது. சில நிகழ்வுகளையே பிடிக்கமுடியும்.
பல நல்லபடி நடந்தேறி, கள்ளத்தனம் உடையார்
காசு ஈட்டுவர்.

உலகத்தைக் கட்டுப்படுத்தி வெற்றிகாண்பவன்
 எவனும் இன்னும் பிறக்கவில்லை.  மதுவுண்ணல்
என்பது ஒரு நாய்வால்.

மெய்ப்பு பின்

News references:


You may have better or different views. Pl feel free to comment.

யாம் கூறுவது ஏற்புடையதன்று எனின் தங்களின்
கருத்துகளைப் பதிவு செய்யலாம். பின்னூட்டம் இடுங்கள்.
எம் கருத்தே சிறந்தது என்று யாம் கூறவில்லை.