வியாழன், 27 ஆகஸ்ட், 2020

நோய்த்தடை பின்பற்றவில்லையோ

எழுபத்தே ழாயிரம் நோய்த்தொற்று மாண்டோர் 
ஒருபத்து நூறாகும் இன்றே ---- ஒருவருமே 
பின்பற்ற வில்லையோ பீதிக்கோ வித்திதன் 
வன்பற்று வாராமு  றை.




 எழுபத்து ஏழாயிரம் நோய்த்தொற்று --- 
 ( இது கொரனா நோய் தொற்றியோர் எண்ணிக்கை ) 

 ஒரு பத்து நூறாகும் - ஓரிலக்கம் பேர் மாண்டு விட்டனர்  

ஒரு என்பது அசை. இன்றே - இது 28.08.2020 வெளிவந்த கணக்கு 

 பின்பற்ற வில்லையோ - இது அச்சத்துக்கு உரியதாய் 
உள்ளது. தடுப்பு முறைகளைக் கடைப்பிடிக்க
வில்லையோ, அதனால் நோய்த் தொற்று 
மிகுந்துவிட்டதோ என்பது. 

 பீதி - அச்சுறுத்தும். 

 கோவித்து - கோவிட் என்னும் கொரனா

 வன் பற்று = வலிமையாகப் பற்றிக்கொள்ளுதல்.

 format error cannot be rectified.

கருத்துகள் இல்லை: