சனி, 8 ஆகஸ்ட், 2020

சிங்கப்பூருக்குத் தேசிய தின வாழ்த்துக்கள்

எந்தநாள் என்றாலும் இதற்கீடாய் நில்லாதே

இனிமை  எலாம்தரும் தேசிய தினமே---நாம்

இருக்கின்ற இந்நாடு நம்பூ வனமே. 


சொந்தநாள் என்றினிச் சொல்வதற்   குண்டென்றால்

சோர்வகல் சுனைநீர் சுரந்தஇந் நாளே----- வளம்

சுருங்காப் பெருங்கலி சூழ்வதிந்   நாளே.


சார்பின்மை வீடுண்டு சோர்வின்மை உண்டதனால்

மார்புண்டு வீறுண்டே மாண்பும்  உள்ளிலே----நல்ல

மதியுண்டு நிதியுண்டு மகிழ்வும் இல்லிலே.


தொழிலுண்டு எழிலுண்டு தொட்டதில் பொன்னுண்டு

தோன்றிடும் எண்ணமெலாம் ஊன்று திண்ணமே---- இனங்கள்

துவண்டிடாத் தூண்கள் நாலு  நிற்கும் வண்ணமே


சிங்கை என்னும் மங்கை தனைப் போற்றிப் பாடியே

சீருடன் வாழ்கவென்று பாடி  யாடுவொம்

கைகள்கொட்டி இங்குமங்கும் கூடி  யாடுவோம்.


சிங்கைக்குத் தேசிய தின வாழ்த்துகள்.


பொருள்:

சுனை -  நீர் சுரக்குமிடம்.

பெருங்கலி - பெரு மகிழ்ச்சி.

கலி - துள்ளுதல்.

சார்பின்மை - யாரையும் நத்தி வாழாமல்

தானே பொருள்தேடி வாழ்தல்.

சார்பின்மை வீடு - சொந்த வீடு.

மார்பு உள்ளிலே - நெஞ்சில்.

இல்லிலே - வீட்டிலே

ஊன்று - நிலை(த்தல்)

நாலு - நான்கு இனங்கள்




கருத்துகள் இல்லை: