ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

அனவரதம் - எப்பொழுதும், இடையீடின்றி.

 அனவரதம் பிறந்த விதத்தை சுருங்கச்சொல்லி 

விளங்கவைக்க  முற்படுதல் நன்று. நம் தமிழ் 

மக்கட்கும் நோய்நுண்ணுயிர்ப் பரவலால் 

வாசிக்கக் கிட்டும்நேரம் குன்றிவிட்டது.


அனவரதம் என்றால் அனைத்து நாளிலும் 

வருவது.


அனை -  அன.

வரு (வது)  -  வரப்பெறுவது:    வர.

து  -   ஒன்றன்பால் விகுதி, இங்கு  வருபொருள் குறித்தது.

இதனைச் சொல்லாக்க இடைநிலை எனினுமாம்.

அம் -  அமைதல் குறிக்கும் விகுதி.


அன + வர + து + அம் : >   அனவரதம்.


அம்மை என் மனத்துள் அனவரதமும் பொருந்தி நிற்கின்றாள்

என்ற வாக்கியத்தில் இச்சொல்லின் பயன்பாடு காண்க.


இச்சொல் அமைந்த காலத்தில் புதிய சொல். இன்று இது

பழைய சொல்லே.  நன்கு திரித்து அமைக்கப்பட்டுள்ளது.

அறிக மகிழ்க.



குறிப்பு:

( இது பெயர்களிலும் வருவதுண்டு. எ-டு:

அனவரத விநாயகம்.)


விநாயகம் :  வி+ நாயகம்; மற்றும் வினை+ஆயகம்.

ஐகாரம் குன்றி வினாயகம் ஆம்.

வி நாயக என்பதில் வி என்பது விழுமிய என்று 

பொருளாம்.  வி முன்னொட்டு என்பாருமுளர்.

கருத்துகள் இல்லை: