ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

பின்னணிப் பாடகர் எஸ். பி. பாலா

 இவர் இன்னும் மருத்துவமனையில் இருப்பதாகவே

நம்பத்தகுந்த செய்திகள் வாயிலாக அறிகிறோம்.

அவருடைய உடல்நிலை தேறிவருகிறது என்பதே

நாமறிந்த உண்மை.


இதற்கு முரணான செய்திகளும் பரப்பப் படுகின்றன.

இவற்றில் உண்மை இல்லை என்று நாம் நம்புவோம்.


பொய்ச் செய்திகளைப் பரப்பி அவற்றால் என்ன

கிடைக்கிறது என்று தெரியவில்லை.


பாலா மிகவும் நல்லவர் என்பதே நம் கருத்து

ஆகும். எமக்குத் தெரிந்த  ஓர் ஐயப்ப சாமி

நன்றாகப் பாடுவார். பாலா சிங்கப்பூர் வந்த

போது அவரிடம் சென்று பாடிக் காட்டினார்.

பாலாவும் மிகவும் மகிழ்ந்து நம் சாமிக்குப்

பாராட்டுக்களைத் தெரிவித்து ஊக்கப்படுத்தினார். 

"உங்கள் முயற்சிகளைத் தொடரவேண்டும்"

என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார் பாலா

அவர்கள். நம் சாமி அதனை அன்புடன்

நினைவு கூர்ந்து எம்மிடமும் பகிர்ந்துகொண்

டுள்ளார்.

பாலா அவர்கள் உடல்நிலை தேறி அவர்தம்

இசைத்தொண்டினைத் தொடர்தல் வேண்டும்

என்பதே இறைவனை நோக்கிய நம் இறைஞ்சுதல்

ஆகும்.


மேற்குறித்த நம் பூசை அன்பர்  ( ஐயப்ப சாமி )\

இசைஞானி  திரு  இளையராஜாவுடன் எடுத்துக்

கொண்ட படம் இதோ:: ( சொடுக்கவும் )


https://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_88.html


பாலா அவர்கள் நலம்பெற்றுத் திரும்ப 

இளையராஜா அவர்களும் வேண்டிக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: