சனி, 1 ஆகஸ்ட், 2020

மது உண்பவர் உண்ணட்டும்.

நச்சுநீர் உட்கொண்டு நம்மனோர் மாய்வரென்றால்
இச்சை   மதுவுண்ணல் ஏன்தடுப்பீர்----  சொச்சமின்றி
உண்ணட்டும் தீயமது  உள்ளவரை வாழ்கஏதும்
பண்ணின் பயனர் அவர்.

நச்சுநீர் -  நோய் நுண்மிகளை ஒழிக்கும் நீர்க்கலவை
நம்மனோர் - நம் மக்கள்.
மாய்வரென்றால்  - (சிலர் மாண்டுவிட்டனர் என்பது
தகவல்  ).

இச்சை - விருப்பம்.
ஏன் தடுப்பீர் - தடுக்கத் தேவை இல்லை என்பது.

சொச்சம் இன்றி  --  கோப்பையில் உள்ள மது
எல்லாவற்றையும்.

தீயமது - கெடுதல் என்று அறிஞர் சொல்லும் மது.

உள்ளவரை வாழ்க  -  மது உண்டலால் ஆயுள்
குறையுமென்றால், குறைந்த வரை வாழட்டும்;

ஏதும் பண்ணின் ( பண்ணட்டும்) - அது மது உண்போருக்கு
உரிமை ஆகட்டும் என்றபடி.

பயனர் அவர் -  அதைப் பயன்படுத்துவோர் அவர்களே.
அதனால் வரும் உடற்கேட்டையும் விளைவுகள்
பிறவற்றையும் அவர்களே அடையட்டும் என்றவாறு.

பிறர் எப்படி வாழவேண்டும் என்பதை அவர்களேதாம்
தீர்மானிக்க வேண்டும்.  நாம் தீர்மானித்து வெற்றி
காணுதல் இயலாதது.

மது அருந்துவதால் குடும்பச்சண்டைகள் வரலாம்.
மதுவைத்  தடைசெய்தால் கள்ளச்சாராயம் அதன்
இடத்தை மேற்கொள்கிறது. பிறகு அதைத் தடுக்க
இயலாது. சில நிகழ்வுகளையே பிடிக்கமுடியும்.
பல நல்லபடி நடந்தேறி, கள்ளத்தனம் உடையார்
காசு ஈட்டுவர்.

உலகத்தைக் கட்டுப்படுத்தி வெற்றிகாண்பவன்
 எவனும் இன்னும் பிறக்கவில்லை.  மதுவுண்ணல்
என்பது ஒரு நாய்வால்.

மெய்ப்பு பின்

News references:


You may have better or different views. Pl feel free to comment.

யாம் கூறுவது ஏற்புடையதன்று எனின் தங்களின்
கருத்துகளைப் பதிவு செய்யலாம். பின்னூட்டம் இடுங்கள்.
எம் கருத்தே சிறந்தது என்று யாம் கூறவில்லை.

கருத்துகள் இல்லை: