சனி, 27 பிப்ரவரி, 2021

ஜகதாம்பாவும் பரத்துவாசரும்.

 அத்து என்ற சாரியை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்.  

பெரும்பாலும்  அம் என்ற இறுதிபெற்ற சொற்கள் வருமொழிச் சொற்களுடன் புணர்கையில்  அத்துச் சாரியை வரும்.  இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக   மடம்+ சாமியார் =  மடத்துச் சாமியார் என்று அத்துச் சாரியை வரும்.  அதுபோலவே இடம்+ பெரியவர்  என்று புணர்த்தின் இடத்துப் பெரியவர் என்று வரும்.  இதில் கவனிக்கவேண்டியது இன்னொன்று.   அத்துச் சாரியை இல்லாவிட்டால்  " மடச் சாமியார்" என்றும்  இடப்பெரியவர் என்றும் வந்து  வேறு பொருண்மை காட்டும் சொற்றொடர்களாக மாறிவிடக் கூடும்.  மடத்துச் சாமியார் என்பது மடச் சாமியார் என்று வரின் அறிவில்லாத சாமியார் என்று வேற்றுப்பொருள் விரவுதல் கூடும்.  இடப் பெரியவர் என்பது ஐயமிடப் பெரியவர் என்று பொருடருதலும் கூடும்.  ஆதலின் அத்துச் சாரியைக்கு பொருள்விளங்க நிற்குமாற்றலும் உண்டு என்று தெரிகிறது.

ஆயின் அத்து எனற்பாலது,  அது என்ற சொல் இரட்டித்துப் பிறந்த சொல்லே என்று அறிக.



ஜகதாம்பாள் என்ற பெயரின் பொருள் உலகின் அன்னை என்பதுதான். ஜக +அம்பாள் என்ற இரு சொற் புணர்வில், ஓர் அது என்ற சுட்டுப்பெயர் இடைப்புகுந்து, ஜக + அது + அம்பாள் என்று தோன்றி, பின்னர் அகரம் ( அது என்பதன் முதலெழுத்து) மறைந்து, தகரம் இரட்டித்து, ஜகத்து அம்பாள் ஆகி, உலகின் அன்னை என்று பொருள் பயந்து, ஜகத்தம்பாள் என்பது ஜகதாம்பாள் என்று தகர ஒற்றுக் கெட்டும் தகர உயிர்மெய் தாகாரம் ஆகி நீண்டும் இனிமை தோன்ற அமைந்துள்ளது. ஜகத்தம்பாள் எனின் நாவிற்கு ஓர் தடையுணர்வு தோன்றியவதனால் ஜகதாம்பாள் என்று இனிது அமைதல் காண்க. இஃது உண்மைநெறி விளக்கமே அன்றிப் பிறநூலார் அமைப்புரை அன்று என்று அறிக. மாற்று விளக்கம் வந்துழி நோக்கக் கடவது.




அது இது உது என்பன யாண்டும் விரவியுள்ளமையும் தமிழ் மொழியின் பரந்த பயன்பாட்டு எல்லையை ஆய்வார்முன் நிறுத்தவல்லது.



பரத்துவாசர் என்ற சொல்லிலும் அது வந்துள்ளது. பரம் என்ற அம் ஈறுபெற்ற சொல்லானது, அத்துச் சாரியை தமிழ் முறைப்படி பெற்றாலும் அயற்செலவில் பரத்துவாஜ் என்று மாறியபோது அத்து என்பது த் என்று குறுகி நின்றதே அன்றி அதன் தாக்கம் முற்றும் நீங்கிற்றில்லை என்று உணரவேண்டும். தகர சகரப் போலி: ( பதி >) வதி > வசி > வசி+ அம் = வாசம்> வாசர் எனற்பாலது முதனிலை நீண்டு விகுதி பெறல். பரத்து என்பது பரத் ஆனது. பரத்துவாசர் எனில் பரந்த மண்டலங்களில் வாழ்பவர் என்று தமிழில் பொருள்படும். பரத்து என்பது பரத் என்று நின்றமைபோலும் ஜகத்து என்பது ஜகத் என்று குறுகி மிளிரும்.

சொற்களின் அயல் உலாவில் பொருள் சற்றே திரிதலும் ஒலித்திரிபுகள் போலுமே அமைந்திடும்.

மாவிலிட்ட கருப்பஞ்ச்சாறு போலுமே தமிழினிமை யாண்டும் பரவிற்று காண்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்பு.

முகக் கவசம் அணிந்து

இடைத்தொலைவு கடைப்பிடித்து

நோய் வருமிடர் தவிர்த்து

நலமே வாழ்வீர்.




குறிப்புகள்

அத்து ( உத்து ) என்பதும் சொல்லிறுதியிலும் வரும். அப்படி வந்த ஒரு சொல்தான் ரத்து என்ற தலையிழந்த சொல். இது இறு + அத்து என்பதிற் பிறந்தது. இறத்து > இரத்து > ரத்து. இதை விளக்கிய இடுகை இங்குக் காண்க.

https://sivamaalaa.blogspot.com/2017/09/blog-post_8.html

இதை அத்து என்று இணைத்துச் சொல்லாமல் அ+ து என்று பிரித்து, அ - சொல்லாக்க இடைநிலை, து விகுதி என்று கூறினும் அதுவே. ஒன்றைப் பல்லாற்றானும் விளக்குதல் கூடும்.


 


வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

அடி உதையினால் அணைந்து விட்ட ஒரு தாய்

இந்தச் செய்திகள் ஆங்கிலத்தில் உள்ளன.  கூகிள் மொழிபெயர்ப்பு பயன்படுத்திக் கொள்ளலாம். 


The woman and her 58-year-old mother are accused of killing Ms Piang Ngaih Don, a 24-year-old mother (maid) of a young child.  சொடுக்கவும்.


https://theindependent.sg/policemans-wife-starved-and-tortured-myanmar-maid-to-death/


https://traffic.popin.cc/redirect/discovery?url=https%3A%2F%2Ftheindependent.sg%2Fpolicemans-wife-starved-and-tortured-myanmar-maid-to-death%2F


https://theindependent.sg/film-producer-says-myanmar-maid-called-her-family-wanting-to-go-home-two-weeks-before-she-died/


ஒரு பணிப்பெண் வேலைக்கு உதவவில்லை என்றால் அப்பெண்ணை

அவள் பிறந்த ஊருக்கு அனுப்பிவிடுவதே சரி.

நம் இரங்கல்.



செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

மனிதன் கடவுளாவது!

 

கடவுள் படைத்தபல காண்பனபின் இல்லை

மனிதன் அமைத்தவையும் மங்கும் அழியும்

மனிதன் புனைந்தது மண்ணாகா தோங்கின்

மனிதன்தான் சாமியென் பான்.


கடவுள் படைத்த  பல  -   இறைவன் உண்டாக்கிய 

பல பொருட்கள்;

காண்பன  -    உலகில் உள்ளன;

பின் இல்லை -   பிற்பாடு அழிந்துவிடுகின்றன;


மனிதன் அமைத்தவை -   மாந்தன் உருவாக்கிய

பொருட்கள்;

மங்கும் அழியும் =  மாற்றம் அடைவதும் இல்லாமல்

ஆவதும் நிகழும்.


மனிதன்  புனைந்தது -  மனிதன் உருவாக்கிய ஒன்று;

மண்ணாகாது ஓங்கின்  -  அழிவில்லாது இவ்வுலகில்

இருந்துவிடின்;

மனிதன் தான் =   மாந்தன் தானே.

சாமி என்பான் -   நான் தான் கடவுள் என்று கூறிவுடுவான்.

கடவுளை விட நான் மிக்க வலியவன் என்ற முடிவிற்கு

வந்துவிடுவான்  என்றவாறு.





திங்கள், 22 பிப்ரவரி, 2021

களம் என்னும் சொல்.

 ஒரு கொல்லன் இருப்பு ஆயுதங்களைச் செய்பொழுதில் எரியிட்டு அடித்துத் தட்டி நிமிர்த்தி  வளைத்து இன்னும் பலவும் செய்து அவை உருப்பெற்ற பின்போ தாய் தன் பெற்ற குழந்தையைத் தடவுதல்போல் தடவி  அவ்வாயுதங்கள் அடைந்த உருவினை காதலிப்பதுபோலும் மனநிலையை அடைந்த பின்புதான் அவற்றை மக்கட்குப் பயன்படுத்தத் தருகிறான். எவ்வாறு புழங்கினால் நெடுநாள் உழைக்கும் என்று நமக்குச் சொல்லியபடியேதான் அவற்றுள் ஒவ்வொன்றையும்  விற்பான். ஓர்  ஆயுதத்தை உருவாக்கியவனுக்குத்தான் அதனருமை தெரியும்.   அவனைப்போலவே சிந்திக்கும் அருந்திறலை நாம் அடைந்துவிட்டால் நமக்கும் அதன்  அருமை ஒருவாறு புரியத்தக்கதாய் இருக்கும்.

இலாவகம்  -   விள்ளுதல்

நாம் எம்மொழியைப் பேசினாலும் அம்மொழியில் நாம் காணும் சொற்களை  அவற்றை முயன்று ஆக்கியோரின் வருத்தம் எதையும் நாம் உணராமலே நாம் வெகு இலாவகமாகப் பயன்படுத்துகிறோம். இலாவகம் என்றால் அவ்வுணர்ச்சியாகிய வேதனை ஏதும் இலா - இல்லாத,  அகம் - மனநிலையினராய்,  நாம் எடுத்துப் பேசிக் களைந்துவிடுகிறோம்.  அப்புறம் அடுத்த சொல்லைத் தேடாமலே அது தானே வந்துற உணராப் பிடிகொண்டு  வாய்க்குள் இட்டு ஒலியூட்டி வெளியிடுகிறோம். இதை உணர்த்துவதற்காகவோ விள்ளுதல் என்ற சொல் புழக்கத்திற்கு வந்துற்றது.

வார்த்தை

சொல்லுக்கு வார்த்தை என்பது இன்னொரு பெயர். இதைத் தமிழின் மூலம் பொருளுரைத்தால்,  வாயினின்று புறப்படுதலின் வாய்த்தை >  வார்த்தை என்றாகும்.   வாய் - அடிச்சொல்.  தை என்பது விகுதி.  இரும்பு உற்பத்தித் தொழிலாளி ஆயுதங்கள் சிலவற்றை வார்த்து எடுப்பதுபோலும் வார்த்தை என்னும் சொல்லும் வார்த்து எடுக்கப்படுகிறது. இவ் வொப்புமையாக்கத்தின் வழி,  வார்த்தல் : வார் + தை =  வார்த்தை  என்றும் வந்து சொல்லென்று பொருள் எழும்.  அடிச்சொல், விகுதி, ஏனை உறுப்புகள் அனைத்தையும் நோக்குவான் பொருளை உணர்ந்தகாலை,  சொல்லினின்று பொருள் எழுகின்றது.  ஒலி எழப் பொருள் எழுகின்றது.  ஆதலின் " கிளம்புதல்" என்பதிலிருந்து அதற்குக் "கிளவி" என்பது இன்னொரு பெயராயிற்று.  கிளம்பு - வினைச்சொல்.  கிள - எழுந்திடுதல்.   கிள+ இ =  கிளவி.  கிளம்பு என்பதில் கிள  (>கிளத்தல் )  என்பதே அடிச்சொல்..  ஒலி, பொருள் என இவை எழுந்திடுதல் உடையவை. வார்த்தலின் வார்த்தை;   நாவினின்று எழுந்திடுதலின் கிளவி   இவ்வாறு இச்சொற்களைப் பொருள் உணர்க.  வாய் , வார் என்று இருவகையிலும் வாய்த்தை > வார்த்தை என்று உணரவகை உண்டாதலின் இச்சொல் ஓர் இரு பிறப்பி ஆகும்.

போர்க்களம் என்ற சொல்லிலும் நெற்களம் என்ற சொல்லிலும் களம் என்பது காண்கின்றோம்.  களம் என்பது ஒரு வேலை அல்லது நிகழ்வுக்காகக் குறித்த இடன். அவ்விடம் அடையாளங்கள் பொருத்தி அமைக்கப்பட்டும் இருக்கலாம்.  அல்லது நினைப்பில் மட்டும் அறியப்பட்ட ( அடையாள) இடமாகவும் இருக்கலாம்.  இது " எல்லை" வகுக்கப்பட்ட இடம். எல்லையானது  இடத்திலோ அல்லது அவ்விடத்தின் நினைப்பிலோ "கட்டப்பட்டது".  அதனால் கள் என்ற சொல்லினின்று உருவானது களம் ஆகும்.

கள் >  கள்+து  > கட்டு > கட்டுதல்..

கள் >  கள் + சி > கட்சி. ( சில கொள்கைகளால், வரையறையால். கட்டுப்பாட்டு விதிகளால் ஒன்றுபட்ட கூட்டம் ).

கள் > களம்.  ஒரு நிகழ்வு நடைபெற ஒதுக்கிய இடம்.

முற்காலப் போர்க்களங்கள், போருக்காக ஒதுக்கிய இடங்கள்.  எடுத்துக்காட்டு:  தலையாலங்கானம்.

வீடு என்பதும் இல்லற வாழ்விற்கு ஒதுக்கப் பட்ட இடம். அல்லது களம். அங்கு தலைவியாய் இருப்பவள் களத்திரம்.  (களத்து இரு அம்).

சகக் களத்தி  சக்களத்தி ஆனதால்.   களம் என்ற சொல்லின் பயன்பாட்டினைக் கண்டுகொள்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு: பின்.



 


வியாழன், 18 பிப்ரவரி, 2021

குணம் குணித்தல்

 குணமென்ற சொல்லை இன்று அறிந்துகொள்வோம்.

மனித உடலுக்குள்ள வாசல்களில்  கண், காது, மூக்கு, வாய் ஆகியவை உட்புகவுக்கான உறுப்புகள்.  கண் வழியாகக் காட்சியும் ( ஒளி ), காதின் வழியாக  ஒலியும்,  மூக்கின்வழிக் காற்றும் வாயின்வழி உணவும் உடலுக்குள் புகுவன ஆகின்றன. தோலும் ஓர் உறுப்புதான். அதன்மூலம் உற்றறிகிறோம். 

உள் என்ற மூலத்திலிருந்து,  பக்கம் குறிக்கும் உள் என்பதும் மற்றும் உண் என்ற சொல்லும் வருகின்றன.  ளகர  ஒற்று இறுதிச் சொல் ணகர ஒற்றிறுதியாக மாறும்,  பொருள் திரிதலும் ஏற்படும்.    எ-டு:  ஆள் -  ஆண்.  பள் -  பண். உள்-உண் என்பதும் அது போல்வதே  ஆகும்.  

கண் என்ற சொல்,  உள் >  உண் > குண்>  என்று வந்தது. எனவே, உள் வரப்பெறுவது  குண் என்பதறிக.  குண் என்பதிலிருந்து குணம் என்ற சொல் வந்துற்றது.

"திண்ணம் பன்றியொடும்

சேர்ந்த கன்று கெடும்"

என்று பண்டை மக்கள் எண்ணினர்.  தந்தை, தாய் ஆகியோரின் குணங்களும் கருவிலிருக்கும் காலத்திலிருந்தே குழந்தை உள்வாங்கிக் கொண்டது என்றும் சொல்வதுண்டு. குழந்தையின் வளர்ச்சியில் அது தக்க காலத்தில் வெளிவரும் என்பர்.

"குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி"  என்று தொடங்கும் குறளில் "குன்றேறி" என்ற அதனால்,  நல்ல குணமென்பது ஒரு மலை,  ஒருவன் தானே முயன்று ஏறுதற்குரியது , அடைவதற்குரியது என்று நாயனார் கருதியமை தெளிவாகின்றது.

குணம் என்பது இவ்வாறு அடையப்பெறுவது ஆயினும்  அது பிறரால் அறிந்து கணிக்கப் பெறுவதும் ஆகும். ஒருவன் உள்வாங்கிக்கொண்டது எவ்வளவு, அது உள்ளமைந்தபின் வெளிப்படுவது குணம். அதைப் பிறர் அறிந்துகொள்வர் அல்லது குணிப்பர்.    குணித்தல் எனற்பாலது பின் கணித்தல் ஆயிற்று..

உகரச் சொற்கள் அகரமாதலும் மொழியிற் காணப்பெறுவதே. இதுபோலும் திரிபுகளை இங்குப் பழைய இடுகைகளில் காண்க.

குண் என்பது கண் எனத்  திரிந்து  விழி என்று பொருள்கொண்டது. கணக்கு முதலியவை மிகுந்த கவனத்துடன் பார்க்கப்படுவது.  இதிலிருந்து கண் > கணித்தல் என்ற சொல் பிறந்தது.

கண் > கண்+ அ + கு = கணக்கு

கண் >  கணி > கணி+ இது+ அம் = கணிதம்.

அது இது என்பன சொல்லாக்க இடைநிலைகளாக வரும்.  பரு+ அது + அம் என்பதில் அது என்ற இடைநிலை வந்தது.  புனிதம் என்பதிலும்  இது என்பது சொல்லாக்கத்தில் இடைநிலையாய் வந்தது. புனிதம் என்பது நீரால் நன் கு கழுவப்பெற்றது என்ற பொருளைத் தரும்  இதன் அடிச்சொல்: "புன்" என்பது.

புல்லுதல் -  பொருந்துதல்.

புல் என்பது புன் என்று திரியும்.  இது லகர 0னகரப் போலி.

புன் > புனல்.  பொருள் நீர்.  நீரென்பது எதிலும் பொருந்தும் தன்மை கொண்டது.  எதையும் ஈரமாக்கிவிடும்.. திரளும் தன்மையும் உள்ளது.  திரள்:  அடிச்சொல்  - திர.  திர- திரை;  திர+ அம் > திரவம்.  வகர உடம்படுமெய்.

புன் > புனல்  ( நீர்)

புன் >  புன் + இது + அம் >  புனிதம். ( புனிதம் எதற்கும் பொருந்தும் குணம். யாரும் ஏற்கத் தக்க குணம். புனலால் கழுவித் தூய்மை செய்தால் புனிதமாம் ).

ஒன்றுடன் ஒன்று இணைவதே திரட்சியும் ஆகும்.

ஆதலின்.  இது அது என்பன இடைநிலைகளாய் வந்து சொல்லமைதல் கண்டுகொள்க.

இகரம் உகரம் இரண்டும் சொல்லாக்கத்தில் வினையாக்க விகுதிகளாய் வரும்.

எடுத்துக்காட்டு:

குண் > குணித்தல்.  இங்கு இகரம் வந்தது.  (குணி,  கணி )

பொறு,  வறு,  இறு ( முடிதல்) இவற்றுள் உகரம் இறுதியாய் வந்தது.

பொல்  > பொறு.  (பொருந்துதல்  அடிப்படைக் கருத்து).

வல் > வறு   (தீயிட்டு வன்மை செய்தல்)

இல் > இறு.  ( இல்லையாவது).

இருத்து,   பொருத்து,  அழுத்து என்பதிலும் உகர இறுதி வினையாக்கம் உளது.

இவையும் இன்ன பிறவும்  உகர இறுதி வினையாக்கம்.

இதுகாறும் உரைத்தவற்றால்,  கணித்தல் குணித்தல் என்பவற்றை  உணர்ந்து, கூறிய பிறவும் அறிக மகிழ்க.

மெய்ப்பு - பின்னர்.






புதன், 17 பிப்ரவரி, 2021

பல திற விளக்கம் - சொல்லாக்கத்தில்

 பச்சைக் கிழங்கைப் பிடுங்கித் தின்றுகொண்டு,  விலங்குகட்கு அஞ்சிக்கொண்டு மரத்தின்மேல் வீடுகட்டிக்கொண்டு ஏறத்தாழ இலைகளால் தழைகளால் தன்னை மூடிக்கொண்டு குளிரிலிருந்து அல்லது வெம்மையிலிருந்து விடுபட வழியில்லையோ என்று வாடியவனே மனிதன். அன்று அவனைக் கண்டு அப்பால் மறைந்துவிட்ட அவனின் கடவுள் இப்போது வந்து கண்டாலும், வியப்பில் ஆழ்ந்து மலைத்து நிற்பார் என்பதில் ஐயமொன்றில்லை.  அன்று அவனிடம் இருந்த சொற்கள்,   அ, இ, உ,  பின்னும் சொல்வோமானால்  எ, ஏ,   ஓ எனச்  சில இருக்கலாம்.

அதனால்தான்  உ  - உள்ளது என்று தமிழிலும்  ஊ -  இருக்கிறது என்று சீனமொழியிலும் அடிச்சொற்கள் பொருளொற்றுமை உடையவாய் உள்ளன.

அதனால்தான்,  அடா  ( அங்கிருக்கிறது) என்ற அகரச் சுட்டில் மலாய் மொழியில் உள்ளது.   அட் ஆ >  அடா.  அதே காரணத்தால் ஆங்கிலத்தில் அட்  என்பது இடத்திலிருப்பது குறிக்கிறது.

உலக மொழிகளை ஆராய்ந்து எத்தனை சுட்டடிச் சொற்கள் கிடைக்கின்றன என்று நீங்கள் ஏன் ஆய்வு செய்யக்கூடாது.  செய்து நீங்கள் சொந்தமாக வைத்துக்கொள்ளலாம்;  அல்லது எங்காவது வெளியிடலாம். ஆனால் பிறருக்கு உரைப்பதால் தெளிவு மேம்படலாம் ஆயினும் உங்களுக்கு அதனால் பயன் குறைவுதான். பிறன் போற்றினும் போற்றாவிடினும் நீங்கள் இருந்தபடி இருப்பீர்கள். மாற்றமெதுவும் இல்லை.

விள் என்பது ஓர் அடிச்சொல்.  அதிலமைந்த வினைச்சொல்தான் விள்ளுதல் என்பது. இது சொல்லால் வெளியிடுதலைக் குறிக்கும்.   விள் திரிந்து வெள் > வெளி ஆனது.   விள் திரிந்து விண் ஆதனது.  இதுவும் ஆள் திரிந்து ஆண் என்று ஆனது போலுமே.   விள் திரிந்து அய் இணைந்து விளை ஆனது.  ஒரு விதை முளைப்பது  விள் ( தரையிலிருந்து வெளிவருதல் ). அப்புறம் அது செடியாய் மேலெழுவது ஐ.    இது அருமையான பழைய விகுதி.  அதே மேலெழுதற் கருத்து இன்றும்  ஐ - ஐயன் - ஐயர் என்ற பல சொற்களில் உள்ளன. அந்தக் காலத்தில் மனிதன் தனிமையை வெறுத்தான்.  அங்கிருப்பவர் இங்கு வந்து நம்முடன் நின்றால், நமக்கும் உதவிதான்.  கரடி வந்துவிட்டால்  அவருடன் சேர்ந்து நாமும் கரடியை எதிர்க்க வலிமையில் மேம்பட்டுவிடுவோம்.   அதுதான் ஒற்றுமை:  அது ஐ+ இ + கு + இ + அம்  :  அங்கிருப்பவர் இங்கு வந்துவிட்டார்,  இங்கு அமைந்தது ( நம் வலிமை)  என ஐக்கியம் உண்டாகிவிடுகிறது.  கழிபல் ஊழிகள் சென்றொழிந்திட்ட காலையும் நம் தமிழ் அடிச்சொற்கள்  இன்றும் கதிர்வரவு போல இலங்குகின்றன.   

இவ்வடிச்சொற்களால் ஒரே சொல்லை பல்வேறு வழிகளில் பொருளுரைக்கும் வழி தமிழ் மொழிக்கு உரித்தாகிறது.  பிறமொழிகளிலும் மூலம் காணுதல் கூடும்.  ஆனால் ஒட்டிக்கொண்டிருக்கும் தோல்போலும் ஒலிகளை விலக்கிவிட வேண்டும்.  எடுத்துக்காட்டு:  ஹியர் (ஆங்கிலம்).   இ = இங்கு.  அர்  - ஒலி உள்ளது குறிக்கக்கூடும்.  அருகில்  என்பதிலும் அர் உள்ளது.  இ என்பது ஹி என்று வீங்கி நிற்கிறது. என்றாலும் முயன்று பொருள்கூற இயலும் என்றே கூறவேண்டும்.

இனி விளை என்பதில் து விகுதி இணைத்தால் விளைத்து ஆகிவிடும்.  து என்பது பெரிதும் "எச்ச விகுதி" யானாலும்  ( தோலை உரித்து என்பதில் உரித்து போல ,  ஆனால் விழுது என்னும் பொருட்பெயர் அல்லது சினைப்பெயரில் து போல ) அதில் ளை என்பதை விலக்கி இடைக்குறையாக்கினால் வித்து ஆகிவிடும்.  ஒன்று பெயரெச்சம், மற்றது  பெயர்ச்சொல். (பொருட்பெயர்).  இவை பயன்பாட்டுக் குறிப்பெயர்கள்.  வேறொன்றுமில்லை.  விளைத்தல் போலும் அறிவும் கல்வியும்.  ஆகவே ஒப்புமையாக்கம்.  விளைத்து > வித்து > வித்துவம் > வித்துவன் > வித்துவான் எல்லாம் விளக்கம் அடைகின்றன.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர் 


திங்கள், 15 பிப்ரவரி, 2021

உயர்வு குறிக்கும் ஐ விகுதியும் ஐயன் (கடவுள்) - சொல்லும்

 ஐ என்பது தமிழில் பண்டுதொட்டு வழங்கிவருகின்ற ஓர் ஓரெழுத்துச் சொல். தமிழில் சிறு சொற்கள் பலவுள்ளன.  நீ, நான், காண், செல் என்பவெல்லாம்  உருவிற் சிறியவை என்றே சொல்லலாம்.. இத்தகைய சிறியனவற்றுள் மிகக் கூடுதலாக எழுத்துக்கள் உள்ளவை, மூன்றில் முடிபவை என்று வைத்துக்கொள்ளலாம்.

ஐ என்பதன் பண்டைப் பொருள் உயர்வு, மேன்மை முதலியன எனல் சரி. இதனுடன் அன் என்னும் ஆண்பால் விகுதி சேர்ந்து ஐயன் என்ற சொல் அமைந்தது. ஐயன் என்பது  மேன்மை பெறு மனிதனையும் குறிக்கும். கடவுளையும் குறிக்கும்.. எதிரில் வரும் மனிதனை மரியாதையுடன் குறிப்பது தமிழர் பண்பாட்டுக் கடைப்பிடிப்பு ஆகும்.

வந்தனை.  கண்டனை.  சென்றனை , நீ  -   இவற்றுள் வந்த ஐ உயர்வு குறிப்பது ஆகும்.  ஆனால் இற்றை நிலையில் இவ்வுயர்வுக் கருத்து மறைந்துவிட்டது. அது முன்னரே போய்விட்டது என்றுதான் திருத்திக்கொள்ளவேண்டும்.  மரியாதைக் குறிப்பு அறவே ஒழிந்துவிட்டபடியால், எப்படி அதைச் சேர்ப்பது என்று கவலை கொண்ட மக்கள்,  அதற்குப் பதில் ஈர் என்ற சொல்லைச் சேர்த்தனர்.  அது:

வந்தீர், கண்டீர், சென்றீர் என்றாயிற்று. ஏனை இவையொத்த வடிவங்களும் இவற்றுள் அடங்கும்.   இந்த ஈர் என்பதில் ஆடிக்கொண்டிருந்த மரியாதை அல்லது பணிவு,  சிறிது காலத்தில் மறையவே, அப்புறம் "கள் " விகுதியைச் சேர்த்தனர்..  அது அப்புறம் -----

வந்தீர்கள்,  கண்டீர்கள், சென்றீர்கள் 

என்று முற்றுக்களாய்    அமைந்துவிட்டன என்றல்  காண்க.

இதற்குமுன் கள் என்னும் விகுதி   அஃறிணைப் பொருட்களுக்கே வழங்கிவந்தது.  அது பன்மை விகுதியாய் இருந்தது.   அதன் திணைக் குழப்பத்தை மறந்துவிட்டு,  உயர்திணை அஃறிணை என எல்லாவற்றுக்கும் பொதுவிகுதியாய் அது புகுந்து புதுமலர்ச்சி கண்டது.

சங்க இலக்கியங்களில் இவை அருகியே பயன்பாடு கண்டன.  வள்ளுவனாரிலும்  அஃது குறைவே. "பூரியர்கள் ஆழும் அளறு"  என்புழி  (என்று முடியும் குறளிற்)  காண்க.  அதனால் யாம் எழுதும்போது பெரும்பாலும் கள் விகுதியை விலக்கியே எழுதுவேம்.  எடுத்துக்காட்டாக,   ஆசிரியர்கள் என்று எழுதாமல்,  ஆசிரியன்மார் என்றுதான் எழுதுவோம்.  மாரைக்கிளவி செவிக்கினிது.

இந்த விகுதிகள் பேச்சில் மரியாதையை வளர்த்தது குறைவே ஆகும்.  பணிவுக் குறைவாகப் பேசுவோர்,  பேசிக்கொண்டுதான் திரிவர்.

பழங்காலத்தில்  அள் என்ற ஒரு சொல் இருந்தது.  அது அடிச்சொல்.  அதில் இகரம் இறுதியில் சேர்ந்து, அளி என்று ஆனது.  அளி - அளித்தல்.  அன்பினால் பிறருக்குக் கொடுத்தல்.  அள்  அன்பு குறித்தமையினால்,  வந்தனள், சென்றனள், கண்டனள் என்பவை வந்து, சென்று, கண்டு என்பவற்றுடன், அன்பு கலந்த குறிப்புகளாயின. தமிழன் விலங்குகளையும் நீர்வாழ்வனவற்றையும் அன்புகொண்டே கருதினான்.  மீன்+கு+அள்,  பறவை+கு+ அள் என்பவை  மீன்கள்,  பறவைகள் ஆகி,  பன்மை விகுதிகள் ஆயின. மொழியில் இவை போலும் சொல்லொட்டுக்கள் பிற்காலத்தவை. மலையாளம் இன்னும் சில மொழிகளில் எச்ச வினைகளே நின்று செயல் முற்றுப்பெற்றதையும்  உணர்த்தும்.  அவன் வந்நு ( அவன் வந்தான்) என்பது காண்க. ஒருமை பன்மை, இல்லாத மொழிகள் பல.  " இரு பெண்கள் வந்தார்கள் "  என்பதில்,  இரு என்பது பன்மையைக் காட்டுகிறது.  அப்புறம் பெண்கள் என்று ஏன் இன்னொரு முறை பனமையைக் காட்டுதல் வேண்டும் என்பர். அப்பால் வந்தார்கள் என்பதில் வேறு பன்மை. ஒரு தடவை பன்மை சொல்லி வாக்கியம் முடிவதற்குள் அதை மறந்துவிடுவார்களா என்ன?

இப்போது ஐ விகுதிக்குத் திரும்புவோம்.  வந்தனை, சென்றனை என்பவெல்லாம் தம்மில் வரும் ஐ விகுதிகளால் உயர்வு குறித்தன என்பது  உணர்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு - பின்,

முகக் கவசம் அணியுங்கள்

இடைத்தொலைவு கடைப்பிடியுங்கள்

நோயைத் தடுத்துக்கொள்ளுங்கள்.

நலமுடன் வாழ்க.



சனி, 13 பிப்ரவரி, 2021

சலக்கிரீடை ( ஜலக்ரீடை) என்பது

 "ஜலக்கிரீடை" எனற்பால சொல்லை அறிந்துகொள்வோம்.

முந்தையக் காலங்களில் ஓரிடத்திலிருந்து பிறிதோரிடம் செல்கையில் இடையில் ஆறு குறுக்கிடும். உடைகளைக் கழற்றிக் கரையில் வைத்துவிட்டு, குளிக்க விரும்புகிறவர்,  ஆற்றில் இறங்கிக் குளிப்பார்.  சவர்க்காரம் இல்லாத அக்காலத்தில்  நல்ல கரைமணலையோ கிடைக்கும் இலைதழைகளையோ கசக்கி உடலில் தேய்த்துக்கொண்டு குளித்துமுடித்துவிட்டு அப்பால் செல்வர். ஒரு திருகுகோலைத் தொட்டுத் திருப்பியவுடன் நீர் வரும்படியான நகர்வாழ்நர் துய்க்கும் வசதிகளில்  திளைத்தல் அக்காலங்களில் இல்லை.

ஓடும் நீருக்கு அல்லது ஜலத்துக்கு இடையில் நின்றுகொண்டு குளிப்பதால் இது "ஜலம்+  கு + இரு + இடை"  >  ஜலக்கிரீடை  என்ற சொல் பிறந்தது.

ஜலம் -   நீர்.

கு  -   சேர்விடம் (அல்லது நீரில் தோய்தலைக்) குறிக்க  "கு" இடைநிலையாய் வந்தது.  ஜலம் + கு > ஜலத்துக்கு என்று அத்துச்சாரியை வரவில்லை.  அது இங்கு தேவையுமில்லை  கு என்பது வேற்றுமை உருபாகவும் வரும்.

ஜலத்துக்கு இடையில் நின்று அவன் குளிக்கின்றான்.  அதுதான் இரு இடை > இரீடை > (கு) இரு இடை > கிரீடை.

இரு என்பதில் திரிந்த கிரு என்பதைத் தனியாக்கி விளக்குவது ஒரு தந்திரம்.

இரு என்பதன் முந்துவடிவம்  இடு என்பது. இட்ட இடத்தில் உள்ளதாதல் இரு. இத்திரிபில் நுண்பொருள் மாற்றம் உள்ளது.  ட - ர பெரிதும் காண்புறும் திரிபே.

சலசல என்று ஓடுவதால் சலம் (ஜலம்) என்ற பெயருண்மை முன் ஓர் இடுகையில் விளக்கம் பெற்றது.  ஆங்குக் காண்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்பு.

நோயினின்று காத்துக்கொள்க.

முகக் கவசம் அணிக.



வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

நெடும்பாதையில் சென்று

கொடும்பாறைகளை வென்று

சுடும் கூர்கற்களில் நின்று

கடுமுள்ளைக் கால்மெத்தைஎன்று

நடுக்காட்டினையும் நண்ணி

நம் ஐயப்பனையே எண்ணி,

இறைப்பற்று யோகமே பண்ணி,

விண்ணருள் தவமேற்கொண்டார்

கண்ணெனக் காணும் நம் ஐயப்பசாமிகள்.

அவர்கள் மெய்யருள் சிறக்கவே..




செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

கழிப்பிடத்துக்கு வரும் சில வேறுபெயர்கள்.

 இன்று கப்புரை என்ற சொல்லைக் கவனித்தறிவோம்.

இந்தக் கப்புரை என்ற சொல்லை,  "சலக் கப்புரை" என்ற தொடரிலிருந்து கொண்டுவருகின்றோம். இதைப் பிட்டு எடுத்துப் பார்த்தால் இது ஓர் அழகிய சொல்லாகவே தோற்றமளிகிறது..  ஆனால் இச்சொல் இருப்பதாக நிகண்டுகளிலும் அகரவரிசைகளிலும் காண இயலவில்லை.. யாம் அறியாது எங்காவது வழக்கில் இருக்கலாம் என்றாலும்,  இங்கு இல்லை என்றே கொண்டு, அடுத்த கட்டத்தினுள் நுழையலாம்.

கப்புரை என்ற சொல் இல்லை என்றால் அப்புறம்  சலக்  கப்புரை என்று பிரித்து எழுதுவது வழுவாகிவிடும்.  ஆகவே, இனி   " சலக்கப் புரை" என்று வைத்துக்கொண்டு அதன் பொருளை அறிய முற்படுவோம்.

சலம் என்ற சொல்லில் ஒன்றும் இடக்கு ஏற்படவில்லை.  அதற்கு "நீர் " என்ற பொருள் உள்ளது.  அது  ஜலம் என்றும் வழங்குகிறது.  இது நீர் சலசல என்று ஓடுவதால் " சலம் " என்று பெயர் பெற்றதாக மறைமலையடிகள் கூறியுள்ளார்.  எனவே  சலசல, ஜலஜல எல்லாம் ஒலிக்குறிப்புகளே.   இயற்கையில் நாம் கேட்கும் ஒலிகளை மொழிப்பாகுபாட்டினுள் இருத்த வேண்டியதில்லை.  அவை பொதுவொலிகள். காகா என்று காக்கை கத்துவதுபோலுமே ஆகும். இதைக் காக்கா அம் (காகம் ) (க் இடைக்குறை);  காக்கா  ஐ (காக்கை) எனினும் ஒன்றே. அம் விகுதி அமைதல் குறிக்கும் விகுதி.   ஐ விகுதி உயர்வு என்று பொருள்பட்டுப் பின் வெறும் இறுதியாய் நின்றதொன்றாகும். உண்டனம்,  உண்டனை ( யாம் உண்டனம், நீ உண்டனை) என வினைமுற்றுக்களிலும் வரும்  விகுதிகளே இவை.    இவை உண்மையில் பல்பயன் காண்பன.

சலக்கம் என்பது கழிப்பிடத்துக்கு இன்னொரு பெயர்.   காலையில் சலக் கடன் களை நிறைவேற்றிக்கொள்வதற்கான இடம்.  இது சலக்கடம்  என்று அமைந்த சொல். கடம் என்பதும் கடன் என்பதும் மகர 0னகர ஒற்றுப் போலி.  அறம் - அறன், திறம் - திறன் என்பது போல.  இந்தச் சலக்கடம் என்ற சொல், சலக்கம் என்று திரிந்துள்ளது.   டகரம் கெட்டு, சலக்கம் ஆகி,  கழிப்பிடம் குறித்தது.  சலத்தைக் கடத்துமிடம் என்று கொண்டு,  சலக்கடம் > சலக்கம் எனினுமது.

கட என்பதற்குப் பதில் கழ (கழற்று, கழட்டு) என்று இட்டு நோக்குவானும் காண்பது அதுவேயாகும்.  பாழை - பாடை  என்று திரிபுண்மையால், வேறுபடுதல் இலது.

கப்புரை என்பதை கழிப்புரை என்று கண்டு, கப்புரை என்று முடிபு கொளுத்துதலும் அஃதே.  ழிகரம் இடைக்குறை.  பண்டுபோல் காணுமது.

புரை என்றல் இடம் என்று பொருள்தருவதே.  கழிப்புரை என்ற கூட்டுச்சொல் காணப்படவில்லை எனினும், அதனை இல்லை என்று கொள்ளுதல் இயலாது. கழி என்றொரு சொல்லும்  புரை ( இடம் ) என்ற சொல்லும் தமிழில் உண்மையின் எனக்காண்க.

சலக்கம்,  சலக்கப்புரை என்பன கழிப்பிடத்து வேறு பெயர்கள்.

இனி இது வாக்கியமாதலும் உரியது.  சலக்கு -  சலம் கழிப்பதற்கு,  அப் புரை - அந்த இடம் என்று  வாக்கியமாகி, " சலக்கப்புரை" என அமைதலுமாம்.  சலக்கு என்பது சலத்துக்கு என்று அம் விகுதி இழந்தபின் அத்துச்சாரியை மிக்கு நின்று வருதல் மகிழ்தரும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்பு.

கவசம் அணிந்து

இடைத்தொலைவு கடைப்பிடிக்க.


குறிப்பு:

புரை -   இடம்,  துவாரம்.






ழகர ளகர மயக்கம்.

 அடினும் ..... என்று ஒரு வாக்கியத்தைத் தொடங்கினால் முதல் வந்த சொல்லே புரியாததாய் உள்ளதே என்று சிலர் தன் மனநிறைவின்மையை அறிவிக்கக் கூடும். அடுதல் என்பதொரு வினைச்சொல். அதாவது செய்வதனைக் குறிக்கும் சொல். ஆனால் அடுத்தல் என்ற சொல் ஒருவேளை புரிந்துகொள்ளத் தக்கதாய் இருக்கும் என்று நாம் நினைக்கலாம்.

வினைச்சொற்களை ஆற்றலுடன் வாக்கியத்தில் வைத்துப் பேசுவதில் தமிழ்ப் பேசுவோர் கைவந்த திறனுடையவர்கள் என்று சொல்ல எனக்கு வரவில்லை. சீனர் மலாய்க்காரர் முதலானோர் அவர்கள் மொழியின் வினைச்சொற்களை மிக்க ஆற்றலுடன் பயன்படுத்துவதாகத் தெரிகிறது. நான் நினைப்பது தவறாக இருந்தால் அதற்காக மகிழ்ச்சி அடையுங்கள். நீங்கள் வினைச்சொற்களைக் கையாள்வதில் திறனுடன் விளங்கவேண்டும் என்பதே எனது அவா ஆகும்.

அடினும் என்பதை விடுத்து அடுப்பு என்று சொன்னால் பலருக்கும் புரிந்துவிடும். தினமும் சாப்பாட்டுக்கு உதவுவதால் அது பலருமறிந்து பயன்படுத்தும் சொல்லாய் உள்ளது.  "அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது" என்பது நாம் இளமை நாட்களில் படித்த நூலில் உள்ள வாக்கியம்தான்.  அழகிய தமிழ் வாக்கியம்.  செய்யுள்.  வெற்றிவேற்கை என்னும் நூலின் உடமை அது. உங்களின் உடமையும் தான்.

அடினும் சுடினும் என்ற இரண்டும் ஒரு பொருளன.  வடிவ ஒற்றுமையுடன் வருகின்றன.  அடு என்ற வினைச்சொல்லில் பு என்னும் தொழிற்பெயர் விகுதி இணைந்து அடுப்பு என்ற சொல் வருகின்றது.  சுட்டு அடுக்கி உண்ணத் தருவர் அடையினை.  இதுவும்   அடு - அடுதல் -  அடு+ ஐ என்று விகுதி பெற்று, அடை என்று அமைந்தது. மாவினை மிக்க அடர்த்தியாய் அழுத்திச் செய்யப்பபெறுவது   -  என்று விளக்கினும் ஏற்கலாம்.  அடு>  அடர்;  அடு + ஐ = அடை என்று வருதலும் உடைத்து.

அடுக்களை என்ற சொல் சமையலறையைக் குறிப்பது.  களை என்பது வேலையைச் செய்யுமிடத்தைக் குறிக்கிறது.  களம் > களை.  அன்றிக் களை என்பது வேலைகளைச் செய்வதையும் அதனால் களைத்துப்போவதையும் குறிக்கும் சொல்.  பெண்டிர் அடுக்களையில் களைத்துப் போய் அமுது படைக்கின்றனர். களம் என்பது அம் விகுதியில் முடிந்த சொல். அதே அடிச்சொல் ஐ விகுதியில் முடிந்ததே (அடுக்)களை ஆகும்.  களம், களை என்பன அமைக்கப்பட்ட இடம் எனப்பொருள் படும்.  அடிச்சொல்: கள் > கள்+து > கட்டு( கட்டிய இடம்).  கள்> களை என்பது அதே சொல்லினின்று அமைதல் காண்க.

இனி, யாம் எடுத்துக்கொண்ட சொல்லுக்கு வருவோம்.  அது அட்டளித்தல் என்பது.  அட்டு -  சமைத்ததை,  அளித்தல் - உண்போருக்குத் தருதலாம். இச்சொல் நாளடைவில் அட்டழித்தல் என்று மாறிவிட்டது.  ஆனால் பொருள் மாறவில்லை.  ளகர ழகர மயக்கத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாகிவிட்டது.  இந்தச் சொல்லில் வரும் அழித்தலுக்கு அளித்தல் என்பதே பொருள்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

நோய் வராது காத்துக்கொள்க. 



 அளைதல் என்பது சென்று  பொருந்துதல் என்று பொருள்தருவதால் சமைத்தற்குச் சென்று ஆவன செய்யும் அறை என்ற பொருளுக்கு அடுக்க்  


ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

சின்னநாய் அழகுக்கு ஒப்பில்லை


 நிலைப்பே   ழைக் கீழ்   ஒளிந்துகொண் டாலும்

கலைப்பாங்  கினில்தோய்  கவர்கண் களுடன்

எத்துணை அழகினைக்  காட்டி  விட்டாய்!

இத்தரை தன்னில் ஒப்பினி யுளதோ?

படம்:  உதவியவர்   திருமதி ரோஷினி பிரகாஷ்

பாடல்: சிவமாலா.

சனி, 6 பிப்ரவரி, 2021

பூமனைத் தொண்டு.

 இந்தக் கவிதை,  அங்குச் சுட்டப்பெற்ற பூமனைக் காட்சிகளை முன்வைத்துப் பாடப்பட்டது.   அக்காட்சிகளை நீங்கள் இவ்விடுகையில் கண்டு உவகை கொள்க.  சொடுக்கவும்:

https://sivamaalaa.blogspot.com/2021/02/the-beauty-of-nature.html


பூமனைத் தொண்டு.


இயற்கை விளைத்த இன்பூக் கவின்தனை

செயற்கை மனைக்குள் செவ்வனே வைத்தல்

முயற்கொம் பன்றது முடிந்தது முற்றும்

அயற்கண் ஆனதை அழகினைக் காண்க.


வணமலர்க் காட்சி வருக காண்கென

உணத்தேன் உன்னும் ஈக்களை வரச்செய்

மணப்பூங் காவினை மனைக்குள் அமைத்தனர்.

கணம்கடன் மறவா இயற்கைக் காவலர்


கண்களை வருடி மனத்தினை மகிழ்த்தி

பண்பொடு மலர்போல் மணத்தொடு வாழ்கென

விண்கொடை ஒப்பதோர் விழுமிய செய்தி

தண்பெறத் தருவதிப் பூமனைத் தொண்டே.


அரும்பொருள்:


பூமனை - மலர்கள் வளர்க்கும் ஒரு கூடம்.

கவின் - அழகு.

முயற்கொம்பு - இயலாதது.

அயற்கண் - அடுத்த ஒரு தேயம். அல்லது நாடு

வணமலர் - வண்ணமலர் ( தொகுத்தல் விகாரம்)

உணத் தேன் - உண்ணுவதற்குத் தேன் தொகுத்தல் விகாரம்)


உன்னும் - நினைக்கும்

கடன் - கடமை

இயற்கைக் காவலர்

விண்கொடை - மழைபோலும் குளிர்ந்த கொடை

தண்பெற - குளிர்ச்சி பெற


வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

பவுத்திரம் என்ற சொல். ஃபிஸ்டுலா

 குடல் ஆசனவாய்ப் பகுதிகளில் ஒரு சீழ்வடி குழாய் தோன்றி வலியுடன் கூடிய நோய் பவுத்திரம் என்று சொல்லப்படுகிறது.  இச்சொல் உருவானது எப்படி என்று அறிந்துகொள்வோம்.  ஆங்கிலத்தில் ஃபிஸ்டுலா என்பர்.

இது மூலநோயுடன்  ஒருங்கு உரைபெறும் நோய் ஆகும்.

பெரும்பாலும் அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தப்படுவது இது.

இது உண்டான இடத்திலிருந்து  சதை தோல்களினூடு ஒரு குழாய் ஏற்பட்டுச் சீழ் (சலம் )  வடியு.ம்.  நோய்நுண்மிகளால் ஏற்படுவதென்பர். குழாய் தோன்றிய இடத்தினின்று வடிவாசல் வரை  அது நெட்டில் பரவுவது போல் உணர்வர்.  இது:

பரவு + திரம் >  பரவுத்திரம் >  பவுத்திரம் ஆயிற்று.

திரிதல் :  மாறுதல், கெடுதல்.   திரி + அம் = திரம்.  இது திறம் என்ற சொல்லின் திரிபாகவும் கருதப்படும்.

பர > பரவு > பாவு  என்பன தொடர்புடைய திரிபுகள்.

பவு என்பது இடைக்குறை. வல்லெழுத்துக்கள் மட்டுமின்றிப் பிறவும் இடைக்குறை அடையும் என்றறிக.  முன் இடுகைகளில் பல இடைக்குறைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.  அவற்றை வாசித்துப் பட்டியலிட்டுக்கொள்க.

அரக்கர் என்பதன் அடிச்சொல் அர் > அர.

அர + கு =  அரக்கு >  அரக்கர்.

அர + வு =  அரவு .   அரவு+ உண் + அர் >  (அரவுணர்)

அரவுணர் > அவுணர்:   இது அரக்கர் என்னும் பொருளுடைத்தே.

அரவு -  அவு  ( இது முதலிரு - முதல்மூ  வெழுத்துக்கள் திரிபு).

பரவு -  பவு  ( இதுவுமன்ன).  ஒப்பு நோக்கிடுக.

"செங்களம் படக்கொன்று  அவுணர்த் தேய்த்த" என்று  வரும்  சங்க இலக்கியத்தொடர் உன்னுக.

அரவு என்பதற்குப் பாம்பு என்றும் பொருள் உள்ளபடியால் அரவு + உண் என்பதற்கு பாம்பு உண்டோர் என்றும் பொருள் கொள்ளலாம்.  இதை நீங்கள் ஆய்வு செய்து தெரிவிக்கவும்..    ஆ+ உண்+ அர்  என்பது குறுகி அவுணர் என்று வருதலும் உரியது இச்சொல்.  ஆ: மாடு.  அவ்வாறாயின் சாவு > சவம் என்னும் திரிபு வழிப்படும்.  திரிபுகளை மட்டும் உன்னுகிறோம். வரலாற்றைப் பிறர் அறிந்துரைப்பாராக.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்.  

நோயை அணுகாதீர்.





The beauty of Nature. இயற்கை அழகு








உதவியவர்கள்:  திரு திருமதி : பிரகாஷ் ,  ரோஷினி பிரகாஷ்

 இயற்கை அழகு

இப்படங்களைப் புகழுமுகத்தான் ஒரு கவிதை உங்கட்கு.-- படித்து மகிழ்க.

கவிதைக்குச் செல்லச் சொடுக்குக;

https://sivamaalaa.blogspot.com/2021/02/blog-post_6.html

 


 

புதன், 3 பிப்ரவரி, 2021

ஒலி செய்து தொடங்கும் வழக்கம். - சொல் : ஆரம்பம்.

 மனிதர்களிடையே பலவித ஒலிக்கருவிகள் பயன்பாட்டில் உள்ளன. ஆரம்பம் என்ற சொல் முதன்முதலாய்ப் புனையப்பட்டு வழக்கிற்கு வந்த காலத்தில் எந்த எந்த ஒலிக்கருவிகள் இருந்தன  என்றோர் ஆய்வுக் கட்டுரை வரையும் முகத்தான் "பண்டைத் தமிழர் ஒலிக்கருவிகள் " என்று ஒரு தலைப்பைப் போட்டுக்கொண்டு ஆய்வு செய்யலாம்.  ஆர்வமுள்ளவர்கள் இதை ஆய்வு செய்வார்களாக.  இன்று நாம் சொல்லிற் பொருந்திய பொருளை உணர்த்தச் சில சொல்லி முடிக்கும் நோக்குடையோம்.

ஆரம்பம் என்றாலே "ஓலி" என்றுதான் பொருள்.  ஒலிசெய்து ஒன்றைத் தொடங்கினால் அத்தொடக்கத்துக்கும் "ஒலி" என்ற அடிப்படைப் பொருள்தரும் ஆரம்பம் என்ற சொல்லே பயன்படும் தகுதியை இன்று மொழியில் அடைந்துள்ளது.

ஆரம்பம் என்பதற்கு உள்ள பொருள்கள் ஆவன:

ஒலி

தொடக்கம்

கொலை

பாயிரம்

பெருமை

முயற்சி.

மேலெழுந்த வாரியாக நோக்குமிடத்து இவை ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற பொருள்களாய்த் தோன்றும்.  அப்படித் தோன்றுவது சரிதானா என்று சற்று பார்ப்போமே!

இப்போது செய்வது போலவே பழங்காலத்திலும் ஓர் ஒலியைச் செய்து சில காரியங்களைத் தொடங்கினார்கள். பெரும்பாலும் பெருந்திரளாகக் கூட்டமுள்ள நிகழ்ச்சிகளில் ஓர் ஊதுகருவியோ  அல்லது அடி தோற்கருவியோ பயன்படுத்தப்படும். அப்பால் நிகழ்ச்சி தொடங்கிவிட்டது என்று கூடியுள்ளோர் தெரிந்துகொள்வார்கள்.

பயன்படுத்துவது அடித்தொலி செய் கருவியாயின்,  "அம், பம், அம், பம்" என்று அடிப்பார்கள். படைவீரர்கள் அணிவகுத்து நடப்பதற்கு இவ்வொலி இன்றியமையாதது.  எந்தக் காலை எப்போது எடுத்துவைத்து எப்படிச் செல்வது என்பதற்கு இவ்வொலி துணைசெய்வது.

ஆர்தல் என்றாலே ஒலிசெய்தல் என்று பொருள்.  அவ்வொலி எத்தகைய ஒலி என்பதை அடுத்த ஈரசைகளும்  தெரிவிக்கின்றன. ... படைவீரர்தம் நடை தொடங்கிற்று  என்பதற்கு  ஒலி நல்ல அறிவிப்பு ஆகும்.

ஆர் + அம் + பம்.

மற்ற நாடுகள் போலவே  தமிழ்நாட்டிலும் சுற்றுப் புறங்களிலும் படைநடை பழகுதல் இருந்திருக்கவேண்டும் என்பது நல்லபடி தெரிகிறது.

ஒவ்வொரு மொழியிலும் ஒலிக்குறிப்பில் தோன்றி அமைந்த சொற்கள் உள்ளன.  காக்கை என்ற தமிழ்ச்சொல்லும் குரோ என்ற ஆங்கிலச்சொல்லும் இவ்வாறு தோன்றியன என்பது நீங்கள் அறிந்தது.  ஆரம்பம் என்பதும் ஒலிக்குறிப்பு அல்லது ஒலிக்குறிப்பும் ஓர் இயற்   சொல்லும் கலந்த  கலவைச் சொல் என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள். அது தெளிவு. முழு ஒலியாதிய சொல்லா கலவையா என்பது முதன்மையன்று.  நேரமிருக்கையில் கூர்ந்து உணர்ந்துகொள்ளுங்கள். யாம் வேண்டுமென்றே இதற்குள் செல்லவில்லை.

எப்போதாவது உங்களுடன் அதை நோக்குவேம்.

அம் பம் அம் பம் என்று அந்தக் காலத்தில் நடைபழகினர் என்று தெரிகிறது. இப்போது இடம் வலம் என்பதற்குரிய ஆங்கிச் சொற்கள் பழக்கத்தில் உள்ளன. ஏக்தோ ஏக்தோ என்றுமிருக்கலாம். இது நாட்டுக்கு நாடு வேறுபடும்.

இவ்வாறு ஒலியுடன் நடப்பதை மக்கள் கருதினர்.  அதனால் அதற்குப் பெருமை என்னும் பொருளும்  மற்றும் தொடக்கம் என்பது ஒரு முயற்சி ஆதலின் இச்சொல்லுக்கு முயற்சி என்ற பொருளும் பெறுபொருள் ஆயின.  பாயிரம் என்பது நூலின் தொடக்கத்தில் வைக்கப்படுவதால்  அது பாயிரத்தையும் குறித்தது.

அம்பினால் அறுக்கப்பட்டு இறத்தலும் கொலையே.  அறு + அம்பு + அம் > ஆறு + அம்பு + அம் >  ஆறம்பம் என்றிருந்திருக்கவேண்டிய சொல்,  ஆரம்பத்தில் வந்து சேர்ந்துகொண்டது.  அறு (வினைச்சொல்).   ஆறு  - முதனிலை திரிந்த தொழிற்பெயர். நதி குறிக்கும் ஆறு என்பதும் நீர் அறுத்துக்கொண்டு செல்வதால் ஏற்பட்ட சொல்லே.  ஆறு என்பது ஆர் என்று பிறழ்வாகி,  அம்பு என்ற கொலைக்கருவியை உள்ளடக்கி அம் விகுதி பெற்று,   கொலை என்ற பொருளில் வந்துள்ளது.  இப்பொருளில் இது பழநூல்களில் இருந்தாலும் இப்போது வழக்கில் இல்லை. சில சொற்கள் ரகர றகர வேறுபாடிழந்து வழங்கும்.  அத்தகைய சொற்களை இலக்கண் நூல்களில் காண்க.


மற்றவை பின் விளக்குவோம்.

மெய்ப்பு பின்னர்.

நோய்க்கு இடந்தராதீர்கள்.






திங்கள், 1 பிப்ரவரி, 2021

பொருளிழந்த பிற்கால விகுதிகள்.

 சொல்லைப் பார்த்தவுடன் அச்சொல் அவ்வாறு அமைந்ததன் காரணம்  உடனே புரிவதில்லை.  இதைத் தொல்காப்பியனாரே  அவர்தம் நூலில் கூறியுள்ளார்.  நாம் இதுவரை கண்ட  பல சொற்களையும் இடுகைகளில் விளக்கியவாற்றால் இதனை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இங்கு கூறப்பட்ட பெரும்பாலானவை வெறுமனே பகுதி விகுதி அல்லது முதல்நிலை இறுதிநிலை என்ற அவ்வளவில் அறியவைக்கக் கூடியவையாய் இருக்கவில்லை.  சில சொற்களே தேவைப்பட்ட ஞான்று, விகுதிகளே வேண்டியவா யிருந்திருக்க வாய்ப்பில்லை.  அதற்கப்புறம் இன்னும் சொற்கள் தேவைப்பட்ட ஞான்று விகுதிகள் தேவைப்பட்டன. சொல்லை மிகுத்துக் காட்டிச் சொற்கள் அமைந்தன.  மிகுதி - விகுதி என்று அமைந்த இது,  சொற்கள் இன்னொரு சிறுசொல்லைப் பெற்று நீண்டு அமைந்த நிலையைக் காட்டியது.  இச்சொல்லில் அமைப்பும் முதனிலைத் திரிபுடன்  அமைந்தது.  இதுபோலும் திரிபுக்கு இன்னோர் உதாரணம் , மிஞ்சுதல் - விஞ்சுதல் என்பது.

மேலும் மிகுதியாய்ச் சொற்கள்  தேவைப்பட்ட போது,   விகுதியுடன் இடைநிலையும் தேவையானது.  எ-டு: பருவதம்:  பரு(த்தல்) + அது + அம் > பருவதம்.(பொருள்: மலை).  அது - இடைநிலை.  அம் - விகுதி.   அதற்கப்பால் மேலும் தந்திரங்கள் பலவற்றைக் கைக்கொண்டனர்.   திறம் என்பதைத் திரம் என்று மாற்றிக்கொண்டு சில சொற்களைப்  புனைந்தனர்.  அப்பால், இடைக்குறை கடைக்குறை முதலியவற்றைக் கையாண்டனர்.  சொல்செய் வழிகள் அனந்தம் அனந்தம் ....

இடைமிகையும் இதிற் பங்காற்றியுள்ளது:  எ-டு:  குறு > குன்று.  ( இடையில் ஒரு 0னகர ஒற்று மிக்கு வந்தது).

[அனந்தம் என்றால் முடிவேதும் இல்லா நிலை. இது அமைந்த விதம் முன் இடுகைகளில் விளக்கப்பட்டுள்ளது. ]

அன்று   அந்தி  https://sivamaalaa.blogspot.com/2017/04/blog-post_3.html

அந்தி :   https://sivamaalaa.blogspot.com/2017/10/blog-post_70.html ]

எதையும் சூழ்ந்து ( அதாவது ஆலோசித்து) திறம்படச் செயல்புரிந்து பயன்பாட்டுப் பொருள்களை விளைவிப்பவர்களே  சூத்திரர்கள்.  இச்சொல் சூழ்திறத்தார் >  சூழ்திறர் > சூத்திரர்  என்று அமைந்ததென்பதை முன்பு வெளியிட்டுள்ளோம். ழகர ஒற்று மறையும். எடுத்துக்காட்டு:  வாழ்த்தியம் > வாத்தியம். ழகர ஒற்று மறைந்தது.  இதனை ஆசிரியர் பிறர் காட்டியுள்ளனர்.  வாய்த்தியார் (வாய்ப்பாடம் சொல்பவர்)  என்பதும் வாத்தியார் ஆவது.

றகரம்  ரகரமாகும்.  சூத்திறம் > சூத்திரம். தந்திறம் > தந்திரம் 

என்பதும் காண்க. வந்து பற்றும் வறுமையைத் தரித்து அதை விலக்கு வழிகண்டு திறம்பெறவேண்டும்.  வறுமையை வெற்றிகொள் திறம் அதுவாம்.  ஆகவே தரி+ திறம் >  தரித்திரம் ஆயிற்று. இவ்வாறு வறுமையின் வாய்ப்பட்டார், "நல்கூர்ந்தார்". அவர்களுக்கு விரைந்து நல்வழி வரவேண்டும் என்னும் ஆன்றோர் அவரை " நல் கூர்ந்தார்"  ( நன்மையை நோக்கி நடப்பவர்கள் ) என்று இடக்கர் அடக்கலாகக் கூறினர்.  அவர்களை(வறியோர்)ப் பழித்தல் ஆகாது.

பேச்சு வழக்கில் தரித்திரியம் என்பர். அவர்கள் தரித்தது ---  திரிந்துவிடுகிறது என்னும் பொருளில். 

முற்காலத்தில் விகுதிகட்கு. பொருள் இருந்திருக்கும் என்பர். இருந்தது என்று நம் சொல்லாய்வு தெளிவிக்கிறது.  எடுத்துக்காட்டு: திறம் என்னும் விகுதி.  அது திரமான பின் பொருள் மறைந்து,  வெறும் விகுதியாய் வழங்கிற்று.  திறன் குறிக்கும் பொருண்மை சிறிதும் காணப்படாமல்,  வெறும் விகுதி ஆயிற்று. எடுத்துக்காட்டு:  மூத்திரம்.  (மூள் திரம் > மூத்திரம்).  வயிற்றில் மூள்வது .( மூள்வது:  உண்டாவது )  என்பது பொருள்.  இஃது உடலினியற்கையால் விளைவதனால்,  திறவெளிப்பாடு ஒன்றுமில்லை. ஆதலின் விகுதி அல்லது இறுதிநிலை ஈந்த பொருண்மை யாதுமிலது.

திரம் ( மூத்திரம் என்பதில்)  விகுதி அன்று,  திரள்வது குறிப்பது எனினும் அமையும்.  அடிச்சொல் தொடர்பினால். மூண்டு திரண்டு வருவது எனின், திறம் - திரம் திரிபு விகுதியின் வேறுபடல் அறிக. விகுதிப்பொருள் இழக்கப்பட்டது.

மூளுதல் என்னும் சொற்பொருள் அறிக:

முல் -  முன் (லகர னகரத் திரிபு)

முல் > மூல் > மூலை : சுவர்கள்  தொடங்கிடம்.

முல் > மூல் > மூலிகை: நோயறுக்கும் முன்மை விளைவேர்.

முல் > மூல் > மூலம்:  தொடக்கம், தொடங்கிடம், தொடங்குநூல்.

முல் > மூல் > மூள் > மூளுதல்: சிலபல ஆற்றல்கள் கூட்டியைவால் ஒன்று புதிது

தொடங்குதல்.

"முன்செய்த தீவினையால் இங்ஙனே வந்து மூண்டதுவே". - பட்டினத்தடிகள்.

முல் > முள்:  செடியிற்றோன்றும் குத்தும் கடுங்கூர்ப் பொருள்.

முல் > முள் > முளை > முளைத்தல் >  செடி கொடி மரம் முதலிய மண்ணினின்று

மேல்வருதல். புதிது தோன்றுதல்.

( So defined for you to comprehend the basic meaning of the root word  "mul" முல்  )

(You may discover for yourself other connected words from "mul")

நேரம் கிட்டினால் மேலும் சில எடுத்துக்காட்டுகளைப் பின்  பார்க்கலாம்.

அறிக மகிழ்க.

நோயினின்று காத்துக்கொள்ளுங்கள்.


மெய்ப்பு  பின்னர்.

{இதிற் சில சொற்கள் அழிந்துவிட்டன.

தேடித் திருத்துவோம்.}

பொருள் முற்றும் சிதையவில்லை.

புரியத்தக்க நிலையில் உள்ளது.


குறிப்புகள்

( உது + ஆர்(தல்) + அண் + அம்)  -  உதாரணம்.

தரித்திரம் தரித்திரியம் வேறுபாடு:

ஓருவன் வேலையிழந்து வறுமையின் வாய்ப்பட்ட போது

அவன் தரித்திரம் அடைந்தான் என்க.  அவன் மேலும் 

வறியவனாய் பிச்சைக்காரன் ஆய்விட்டால் அது

தரித்திரியம்.  திறம் (திரம்) , திரிதல் (< திரியம்).

தரித்ததில் இன்னும் மீள் திறம் உண்டா முற்றும் 

திரிந்து அழிந்ததா என்பதுதான் கருதும் வேறுபாடு.

சிற்றூரார் சொல்வது  "~~திரியம்."

சூழ்திறத்தார்:   சூழ்திறம்.  இது சூழ்திறம் என்று வரின்

வினைத்தொகை;  பின் சூத்திறம் ஆயின்  ழ் இடைக்குறை.

பின் சூத்திரம் எனின், திரிசொல்  சூ என்பது கடைக்குறை.

சூ என்பது முதனிலைத் தொழிற்பெயர்.  திறம் திரமாய் ஆனது

திரிசொல். திரிசொல்லில் பகுதி போல்வது தெரியினும் அதனை

ஆசிரியர் அவ்வாறு கொள்வதில்லை.

செந்தமிழ் இயற்கை மாறிய நிலைதான் காரணம்.