சனி, 13 பிப்ரவரி, 2021

சலக்கிரீடை ( ஜலக்ரீடை) என்பது

 "ஜலக்கிரீடை" எனற்பால சொல்லை அறிந்துகொள்வோம்.

முந்தையக் காலங்களில் ஓரிடத்திலிருந்து பிறிதோரிடம் செல்கையில் இடையில் ஆறு குறுக்கிடும். உடைகளைக் கழற்றிக் கரையில் வைத்துவிட்டு, குளிக்க விரும்புகிறவர்,  ஆற்றில் இறங்கிக் குளிப்பார்.  சவர்க்காரம் இல்லாத அக்காலத்தில்  நல்ல கரைமணலையோ கிடைக்கும் இலைதழைகளையோ கசக்கி உடலில் தேய்த்துக்கொண்டு குளித்துமுடித்துவிட்டு அப்பால் செல்வர். ஒரு திருகுகோலைத் தொட்டுத் திருப்பியவுடன் நீர் வரும்படியான நகர்வாழ்நர் துய்க்கும் வசதிகளில்  திளைத்தல் அக்காலங்களில் இல்லை.

ஓடும் நீருக்கு அல்லது ஜலத்துக்கு இடையில் நின்றுகொண்டு குளிப்பதால் இது "ஜலம்+  கு + இரு + இடை"  >  ஜலக்கிரீடை  என்ற சொல் பிறந்தது.

ஜலம் -   நீர்.

கு  -   சேர்விடம் (அல்லது நீரில் தோய்தலைக்) குறிக்க  "கு" இடைநிலையாய் வந்தது.  ஜலம் + கு > ஜலத்துக்கு என்று அத்துச்சாரியை வரவில்லை.  அது இங்கு தேவையுமில்லை  கு என்பது வேற்றுமை உருபாகவும் வரும்.

ஜலத்துக்கு இடையில் நின்று அவன் குளிக்கின்றான்.  அதுதான் இரு இடை > இரீடை > (கு) இரு இடை > கிரீடை.

இரு என்பதில் திரிந்த கிரு என்பதைத் தனியாக்கி விளக்குவது ஒரு தந்திரம்.

இரு என்பதன் முந்துவடிவம்  இடு என்பது. இட்ட இடத்தில் உள்ளதாதல் இரு. இத்திரிபில் நுண்பொருள் மாற்றம் உள்ளது.  ட - ர பெரிதும் காண்புறும் திரிபே.

சலசல என்று ஓடுவதால் சலம் (ஜலம்) என்ற பெயருண்மை முன் ஓர் இடுகையில் விளக்கம் பெற்றது.  ஆங்குக் காண்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்பு.

நோயினின்று காத்துக்கொள்க.

முகக் கவசம் அணிக.



கருத்துகள் இல்லை: